Thursday, August 12, 2010

உலகக் கிண்ணப் போட்டியை நடத்தமுட்டி மோதும் நாடுகள்

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி உவுசலாவின் ஓசையுடன் சிறப்பாக நடைபெற்றது. அடுத்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு லம்பா நடனத்துடன் பிரேஸிலில் நடைபெற உள்ளது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது பிரேஸில் நாட்டின் பாரம்பரிய நடனமான லம்பா ரசிகர்களின் கண்களுக்கு பெரு விருந்தாக அமையும். தென் ஆபிரிக்காவின் உவுசலா ஓசை
காதைப்பிளந்தது. பிரேசிலின் லம்பா நடனம் உதைபந்தாட்ட ரசிகர்களின் ஒட்டு மொத்த பார்வையையும் தன்பால் ஈர்க்க உள்ளது.
2018 ஆம் ஆண்டும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகியன உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த முன் வந்துள்ளன.
உதைபந்தாட்ட ரசிகர்கள் மிக அதிகமாக உள்ள கண்டம் ஐரோப்பா. ஐரோப்பாக் கண்டத்தின் எந்த நாட்டில் உலகக்கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்றாலும் ரசிகர்கள் வெற்றி பெறச் செய்து விடுவார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டச் சம்பியனான ஸ்பெயின், இரண்டாவது இடம் பிடித்த நெதர்லாந்து ஆகியன 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த மிக ஆர்வமாக உள்ளன.
ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன கூட்டாக 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளன. ஜப்பானும், தென்கொரியாவும் இணைந்து 2000 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியை வெற்றிகரமாக நடத்தின. மீண்டும் ஒரு வாய்ப்புக்காக அவைகள் காத்திருக்கின்றன. உதைபந்தாட்டப் போட்டியை ரசிப்பவர்களின் தொகை ஜப்பானில் அதிகரித்துள்ளது. ஒசாகா உதைபந்தாட்ட மைதானத்தின் 83000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கக் கூடிய வசதி உள்ளது.
பிஃபாவில் அங்கம் வகிக்கும் 208 நாடுகளில் இருந்து 6000 சிறுவர்களை ஜப்பானுக்கு அழைத்து உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. 34 வசதியுடனான நேரடி ஒளிபரப்புச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருப்பதால் உதைபந்தாட்டப் போட்டியை தம்மால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது அவுஸ்திரேலியா.2018 ஆம் ஆண்டும், 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பித்த நாடுகளுக்கு பிஃபா குழு விஜயம் செய்து வருகிறது.
மைதானங்கள், தங்குமிட வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவற்றை பீஃபா குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் டிசம்பர் 2 ஆம் திகதி சூரிச்சில் நடைபெறும் வைபவத்தில் 2018, 2022 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடுகள் அறிவிக்கப்படும்.
2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பிக்க சீனா தயாராகி விட்டது.
2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆசியநாடுகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சீனாவின் ஆசை நிராசையாகிவிடும்.

ரமணி
மெட்ரோநியூஸ்



4 comments:

Prapa said...

நாங்களும் கஷ்டபட்டு ஏதாவது மொக்கை போட்டுட்டு இருக்கமுல்ல, அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ஒரு பிடிப்பு இருக்கும், இல்லன்ன பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வில்லை என்பதற்காக இந்த அப்பாவி பிள்ளை பதிவுகளை இடாமல் போயிடுவான், ஏன் இந்த பாவம் உங்களுக்கு ,, வாங்க உடனே வந்து பாருங்க என்னாத்த கிழிக்கிறான் எண்டு.

Prapa said...

நாங்களும் கஷ்டபட்டு ஏதாவது மொக்கை போட்டுட்டு இருக்கமுல்ல, அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ஒரு பிடிப்பு இருக்கும், இல்லன்ன பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வில்லை என்பதற்காக இந்த அப்பாவி பிள்ளை பதிவுகளை இடாமல் போயிடுவான், ஏன் இந்த பாவம் உங்களுக்கு ,, வாங்க உடனே வந்து பாருங்க என்னாத்த கிழிக்கிறான் எண்டு.

வர்மா said...

பிரபா said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வர்மா said...


ALLINONE INDIA said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி