Thursday, September 11, 2014

நான் ரசித்த பாடல்


நான்  ரசித்த‌  பாடல்


படம்; பாரதி கண்ணம்மா
பாடல்;பூங்காற்றே.....
பாடியவர்;கே.ஜே.ஜேசுதாஸ்
இசை;தேவா



காதலர்கள் இறந்து போகலாம் காதல் என்றும் இறந்து போவதில்லை.பூமி சுற்றும் வரை, சூரிய சந்திரன் காயும் வரை காதல் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். சாதி, மதம்,பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள் காதலர்களின் உடலைத்தான் பிரிப்பார்கள். ஆனால், அவர்களின் காதலை பிரிக்க முடியாது. அழிக்கவும் முடியாது.

பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு.. 
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு 
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது 
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது 

சாதி,ம்,ம் இவை எவையும் நிஜக்காதலுக்குத்தெரியாது.விழியில் விழுந்து இதம் புகுந்து இரு ம் இணைவதே காதல்.இங்கே ஏழைக்காதன்தன்காதலிக்கு பூங்காற்றுமூலமாகத்தூது விடுகிறான். சாதி,தம்பார்க்காமல் இணந்தகாதர்கள் மாண்டுபோய்விட்டர். அதற்குச்சாட்சி ல்லறைகள். ஆனாலும், காதல் வாழ்ந்துகொண்டேஇருக்கிறது. மனச்சாட்சி  இல்லாதனிதர்களின் த்தியில் என்மீது காதல் கொண்டு ங்கித் விக்கிறாயே நீ ங்கினால் நான் தாங்குவேனோ?


வேரும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய் 
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய் 
விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய் 
வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய் 
அறியாமல் பிழை செய்தாய் 
மணலாலே சிலை செய்தாய் 
அடி பாரதி கண்ணம்மா 
மனம் கலங்குவதேனம்மா
(பூங்காற்றே.....


ஏழை எனக்கும் உனக்கும் ஒத்துப்போகுமா? அப்படி நாம் சேர்ந்தாலும் மூடனிதர்கள் ம்மைச்சேரவிடுவார்களா? சாமியே இல்லாதஆலத்தில் விளக்கேற்றினாய்.எப்படியம்மா சாமி ம்  ரும்.பூங்கொடியே நீ சிலையை உருவாக்கி ம் கேட்கநினைக்கிறாய். நீ ணலால் அல்லவா சிலை செய்யநினைக்கிறாய்.



வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம் 
வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம் 
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் 
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம் 
இளம் பூவே வருந்தாதே 
உலகம்தான் திருந்தாதே 
அடி பாரதி கண்ணம்மா 
நீ பாரத பெண்ணம்மா....
இது பாழ் பட்ட மண்ணம்மா

(பூங்காற்றே.....)


இந்த ஜென்மத்தில் எமக்கு காதல் வேண்டாம்  .அடுத்தஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், உன் மீது உள்ள நிஜமான காதலால் சொல்கிறேன். அடுத்த ஜென்மத்தில் நீயும் நானும் காதலித்து
அன்பால் வென்று ஒன்று சேர்ந்து வாழ்வோம். அப்போது எமது உண்மைக்காதலை உலகுக்கு உணர்துவோம். இப்போது எமக்கு காதல் வேண்டாம்.


இந்த உலகம் திருந்தாது கண்மணியே. நீ பாரதி கண்ட புதுமைப்பெண்.

ஞா.கவிதா,நெல்லியடி


மெட்ரோ நியூஸ் 04/08/2004

7 comments:

  1. இசை;ஏ.ஆர்.ரஹ்மான்..........????????????????????????????????????

    music is Deva

    ReplyDelete
  2. இந்தப் படத்துக்கு இசை தேவா அன்பரே.

    http://en.wikipedia.org/wiki/Bharathi_Kannamma

    ReplyDelete
  3. sami naan ,PNA Prasanna



    தவறைச்சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.பிழையைத் திருத்திவிட்டேன்

    ReplyDelete
  4. sami naan ,PNA Prasanna



    தவறைச்சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.பிழையைத் திருத்திவிட்டேன்

    ReplyDelete
  5. sami naan ,PNA Prasanna



    தவறைச்சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.பிழையைத் திருத்திவிட்டேன்

    ReplyDelete
  6. sami naan ,PNA Prasanna



    தவறைச்சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.பிழையைத் திருத்திவிட்டேன்

    ReplyDelete
  7. sami naan ,PNA Prasanna



    தவறைச்சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.பிழையைத் திருத்திவிட்டேன்

    ReplyDelete

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்