Friday, March 29, 2019

பரபரப்பான ஆட்டத்தில் நோபோல் சர்ச்சையுடன் மும்பை வென்றது


மும்பை இந்தியன், ரோயல் சலஞ்ச் பெங்களூர் ஆகியவற்றிக்கிடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரபான போட்டியில் ஆறு ஓட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்திய அணித்தலைவர் கோஹ்லி, துணைத்தலைவர் ஆகிய இருவரும்  முதல் வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தினர். சென்னையிடம் தோல்வியடைந்த பெங்களூரும், டெல்லியிடம் தோல்வியடைந்த மும்பையும் ஐபிஎல்லின் ஏழாவது போட்டியில் சந்தித்தன.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணித் தலைவர் கோஹ்லி பந்துவீசைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை எடு விக்கெற்களை இழந்து 187 ஆட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்படுத்தாடிய பெங்களூர் 20 ஓவர்களிலில் ஐந்து விக்கெற்களை இழந்து ஆறு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எதிரணி நிர்ணயிக்கும் கடினமான இலக்கை விரட்டி அடிக்கும் டிவில்லியஸ் களத்தில் இருந்தும் பெங்களூர்  தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. 15    போட்டிகளை விரட்டி பெங்களூருக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டிவில்லியஸ் ஆட்டமிழக்காமல் நின்றபோது  முதன் முதலாக பெங்களூர் தோல்வியடைந்தது.

பென் கட்டிங், ரஷீத் கலாம் ஆகியோர் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஆலோசகராக கடமியாற்றிய லசித் மலிங்க, பாயங் மார்க்கண்டே ஆகியோர்   சேர்க்கப்பட்டனர். காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அடம் மைல்னேக்குப் பதிலாக மேற்கு இந்திய வீரர் அசாரி ஜோசப் இணைந்துள்ளார்.

 மும்பை அணி வீரர்கள் டிகொக்,ரோஹித் சர்மா ஜோடி ஆட்டத்தை ஆரம்பித்தது. இருவரும் இணைந்து 54 ஓட்டங்கள் எடுத்தபோது டிகொக் ஆட்டமிழந்தார். ரோஹித்துடன் சூரியகுமார் யாதவ் இணைந்தார். கடந்த போட்டியில் ஏமாற்றிய சூரியகுமார் யாதவ்,  நிதானமாக விளையாடினார்.48 ஓட்டங்களுடன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

சூரியகுமார் யாதவுடன் இணைந்த யுவராஜ் சிங், சாகலை அச்சுறுத்தினார்.  முதல் இரண்டு ஓவர்களில் 12 ஓட்டங்களை சாகல் கொடுத்தார். எட்டு பந்துகளில்  ஐந்து ஓட்டங்களை யுவராஜ் எடுத்திருந்தபோது 12 ஆவது ஒவரை சாகல் வீசினார்.  அதனை எதிர்கொண்ட யுவராஜ் சிங் முதல் பந்தில்  சிக்ஸர் அடித்தார்.  இரண்டாவது பந்தும் சிக்ஸரானது. ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது. மூன்றாவது பந்தும் சிக்ஸருக்குப் பறந்தது. பெங்களூர் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நான்காவது பந்தும் சிக்ஸரை நோக்கி உயர்ந்தது. முகமட் சிராஜ் அதனைப் பிடிக்க மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பெங்களூர் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 12 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்த யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார்.

பொலட் ஐந்து  ஓட்டங்களிலும் குருணால் பண்டையாஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கியவர்கள் ஒற்றை எண்ணில் ஆட்டமிழக்க ஹட்ரிக் பண்டையா ஆட்டமிழக்காமல்14 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பைஎட்டு விக்கெற்களை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்தது.  38 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெற்களை  வீத்தினார்.
பெங்களூர் வெற்றி பெறுவதற்கு 188 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது பார்த்திவ் பட்டேல், மொயின் அலி ஜோடி களம் இறங்கியது. மொயின் அலி 13 ஓட்டங்களில் வெளியேறினார். பட்டேல்,கோஹ்லி ஜோடி 40 ஓட்டங்கள் எடுத்தது. கோஹ்லியுடன்  டிவில்லியஸ் இணைந்தார்.46 ஓட்டங்கள் எடுத்த ஹோஹ்லி,  பண்டையாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹெட்மெயர் ஐந்து ஓட்டங்களுடனும். கிராண்டஹோமன் இரண்டு ஓட்டங்களுடனும் பும்ராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

42 பந்துகளில் 75 ஓட்டங்கள் என்ற நிலையில் விக்கெற்கள் வீழ்ந்தாலும்கவலைப்படாமல் டிவில்லியஸ் வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினார்.  11 பந்துகளில் ஏழு ஓட்டங்கள் மட்டுமே எடுத்த டிவில்லியஸ்  அதிரடி காட்டத்தொடங்கினார். 29 ஆவது அரைச்சதத்தை அடித்தார் டிவில்லியஸ்.  கடைசி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 17 அடிக்கவேண்டும். மலிங்க பந்து வீசினார். முதல் பந்தில் துபே ஆறு ஓட்டங்கள்  அடித்தார். அடுத்த ஐந்து பந்துகளிலும் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. 41 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவில்லியஸ் நான்கு பவுண்டரி ஆறு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 70ஓட்டங்கள் எடுத்தார்.
 ஆறு ஓட்டங்களினால் மும்பை வெற்றி பெற்றது. கடைசிப் பந்து நோபோல் என்பது போட்டி முடிந்தபின்னர்தான் தெரியவந்தது. இது பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் அரங்கில் பொலட் 2500 ஓட்டங்கள் அடித்தார். மும்பை அணிக்காக 2500 ஓட்டங்கள் அடித்த இரண்டாவது வீரர் பொலட்  முதலிடத்தில் ரோஹித் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் கோஹ்லி ,5000 ஓட்டங்களைக்  கடந்தார். முதலிடத்தில் ரெய்னா   இருக்கிறார்.

Thursday, March 28, 2019

விதி வலியது அஸ்வின் விதி வலியது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைற் றைடேர்ஸ் ஆகியவற்றுக்கிடையே கொல்கத்தா ஈடன் காடன் மைஅதானத்தில் நடைபெற்ற ஆறாவது போட்டியில் கொல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.ஹைதராபாத்துடனான போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தாவும், ராஜஸ்தானை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற பஞ்சாப்பும் இரண்டாவது  வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்கின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணித்தலைவர்  அஸ்வின் கார்த்திக்பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 218 ஓட்டங்கள் எடுத்தது. 219 எனும் இமாலய  வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தானுடனான போட்டியில் எச்சரிக்கை செய்யாமல் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்த அஸ்வின் விதிப்படி என்றார். அதேபோன்ற இன்னொரு விதி.  ரஸல் ஆட்டமிழக்கவில்லை என்றதால் பஞ்சாப் தோல்விடடைந்தது. 30 யார் சுற்று வட்டத்தினுள் நான்கு வீரர்கள் நிற்க வேண்டும்  என்பதுவிதி. ரஸல் ஆட்டமிழந்தப்[ஓது ந்ங்கே மூன்ரு வீரர்கள் தான் நின்றார்கள். அது நோபோல் என அறிவிக்கப்பட்டு ரஸலின் ஆட்டமிழப்பு வாபஸ் பெறப்பட்டது.

கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை வீசிய அறிமுக வீரர் வருண் சக்கரவர்த்தி மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்தார். முதல் பந்தில் லின் ஒரு ஓட்டம் எடுத்தார். வருன் சக்கரவர்த்தியின் மிகுதி ஐந்து பந்துகளிலும் 6.2.4.6.6 என 24 ஓட்டங்களை நரைன் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரில் 25 ஓட்டங்கள் கொடுத்த மோசமான பதிவை வருன் சக்கரவர்த்தி ஏற்படுத்தினார். முதல் ஓவரில் 25 ஓட்டங்களைக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி அடுத்த இரண்டு ஓவர்களிலும் 10 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெற்றை வீழ்த்தினார்.

 நரேனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். நரேன் அதிக நேரம் நீடிக்கவில்லை 3.3 ஆவது ஓவரில்  ஆட்டமிழந்தார். 9 பந்துகளில் ஒரு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்தார். உத்தப்பாவுடன் ரானா இணைந்தார். இந்த ஜோடி 120 ஓட்டங்கள் எடுத்தது. 34 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த ரானா ஆட்டமிழந்தார்.

உத்தப்பா, ரஸல் ஜோடி பஞ்சாப்புக்கு அதிர்ச்சி கொடுத்தது. 14.3 ஆவது ஓவரில் மூன்று விக்கெற்களை இழந்த டெல்லி 146  ஓட்டங்கள் எடுத்தது. மூன்று ஓட்டங்கள் எடுத்த ரஸல் ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். விதியை மீறியதால் அது நோபோல் என அறிவிக்கப்பட்டு ரஸல் தொடர்ந்து ஆட அனுமதிக்கப்பட்டார். பஞ்சாப் வீரர்களின் பந்துகளை ரஸல் சிதறடித்தார். 17 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த ரஸல் ஆட்டமிழந்தபோது டெல்லி அணி 213 ஓட்டங்கள் எடுத்தது.  20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்த டெல்லி 218 ஓட்டங்கள் எடுத்தது.

214 எனும்   இமாலய இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் நான்கு விக்கெற்களை இழந்து 190 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.  ராகுல் ஒரு ஓட்டத்துடனும் ,கைல்ஸ் 20, சப்ரஸ்கான் 13  ஓட்ட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். மாயங் அகர்வால், டேவிட் மில்லர்  ஜோடி 74 ஓட்டங்கள் எடுத்தது. 34 பந்துகளைச்  சந்தித்த மயங் அகர்வால் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல்59 ஓட்டங்கள் எடுத்தார். ரஸல் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 



Wednesday, March 27, 2019

நிதானமாக விளையாடி இரண்டாவது வெற்றியைப் பெற்றது சென்னை


டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற  ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் ஆறு விக்கெற் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற  சென்னையும், மும்பையுடனான முதல் போட்டியில் வெற்றி பெற்ற டெல்லியும் தமது இரண்டாவது வெற்றிக்காகப் போராடின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.

 பிரித்விஷா, ஷிகர் தவான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். 4.1 ஓவர் வரை விளையாடிய இவர்கள் இருவரும் 36 ஓட்டங்கள் எடுத்தனர். தீபக் சகாரின் பந்தை வட்சனிடம் பிடிகொடுத்த பிரித்விஷா 24 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி43 ஓட்டங்கள் எடுத்தது.இம்ரான் தாகீரின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ஓட்டங்கள் எடுத்தார்.தவானுடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் தனது அதிரடி மூலம் வெற்றியைத் தேடிக்கொடுத்த ரிஷாப் பண்டின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த ஜோடி 41 ஓட்டங்கள் எடுத்தபோது பிராவோவால் பிரிக்கப்பட்டது.

பிராவோவின் பந்தை ரிஷாப்பண்ட் தூக்கி அடித்தபோது நீண்ட தூரம் ஓடி அற்புதமாக அதனை சர்துல் தாகூர் பிடித்தார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பண்ட்,இரண்டு சிக்ஸர்கள்,ஒரு பவுண்டரி அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்துக் களம் இறங்கிய இங்ரம் இரண்டு ஓட்டங்களும் கீமோ  பவுல் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.  டெல்லியின் விக்கெற்கள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் தவான் பொறுப்புடன் ஆடி 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்த டெல்லி 147 ஓட்டங்கள் எடுத்தது.
 33 ஓட்டங்களைக் கொடுத்த பிராவோ மூன்று விக்கெற்களை வீழ்த்தினார்.திபக் சாகர் ,ஜடேஜா,இம்ரான் தாகிர் ஆகிடோர் தலா இரு விக்கெற்றை வீழ்த்தினர்.

  வட்சன், ராயுடு ஆகியோர் சென்னை அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். ஐந்து ஓட்டங்களில் ராயுடு ஆட்டமிழந்தார்.  வட்சன் ரெய்னா ஜோடி அச்சுறுத்தியது. இஷாந்த்,ரபாடா,அமித் மிஸ்ரா ஆகியோரின் பந்துகளை இருவரும் விரட்டி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த ஜோடி 52  ஓட்டங்கள் எடுத்தபோது மிஸ்ராவின் பந்தை ரிஷாப் பண்டிடம் பிடி கொடுத்து வட்சன் ஆட்டமிழந்தார். 26 பந்துகளைச் சந்தித்த வட்சன் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்ஸார் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார்.
ரெய்னாவுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். இருவரும் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ரெய்னா, கேதார் ஜோடி 25 ஓட்டங்கள் எடுத்தபோது ரெய்னா ஆட்டமிழந்தார். 16 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரெய்னா, 4 பவுண்டரிகள்  ஒரு சிக்ஸர் அடங்கலாக 30 ஓட்டங்கள் அடித்தார்.

ரெய்னா வெளியேற டோனி உள்ளே சென்றார். விரைவாக வெற்றியைக் கொண்டாடலாம் என எதிர்பார்த்த ரசிகர்களை டோனியும் கேதாரும் சோதித்தனர். ஏழு ஓவர்களில் மெதுவாகத் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் மட்டுமே இருவரும் அடித்தனர். சிக்ஸர், பவுண்டரியை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 14 ஆவது ஓவரில் கேதார் அடித்த பந்தை தவான் பிடிக்கவில்லை. இந்தப்போட்டியில்  தவான் தவறவிட்ட இரண்டாவது கச் இதுவாகும்.

17  ஆவது ஒவரில் ரபாடா வீசிய முதல் ஐந்து பந்துகளிலும்  டோனியால் ஓட்டம் எதுவும் எடுக்கமுடியவில்லை. கடசி பந்தில் ஒரு ஓட்டம் அடித்தா டோனி.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றி பெறுவதற்கு 11 ஓட்டங்கள்  தேவை. அமித் மிஸ்ரா வீசிய 19 ஆவது ஒவரில் இரண்டாவ்து,மூன்றாவது, நான்காவ்து பந்துகளில் தலா ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. கடசிப் பந்தில் டோனி சிக்ஸர் அடித்து பதற்றத்தைக் குறைத்தார்.

ஐந்து ரபாடா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை அடித்த கேதார் ரிஷாப் பண்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். நாலாவது பந்தை பிராவோ பவுண்டரிக்கு அனுப்ப 150 ஓட்டங்கள் எடுத்த சென்னை ஆறு விக்கெற்களால்  வெற்றி பெற்றது. வட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கடைசி ஓவர் வரை இழுத்தடித்து, பார்வையாளர்களை பதற்றப்படுத்தி  வெற்றி பெறுவது  சென்னையின் எழுதப்படாதவிதி. ஐபிஎல் தொடரில் இதுவரை 44  போட்டிகளை  விரட்டி வெற்றி பெற்றது சென்னை. அவற்றில் 24 போட்டிகளில் 20 ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. டெல்லியில் அமித் மிஸ்ரா 50 ஆவது விக்கெற்றைக் கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றில் ஒருமைதானத்தில் 50 விக்கெற்களை வீழ்த்திய முதல்வீரர் அமித் மிஸ்ரா.

அஸ்வினின் சதியால் வென்றது பஞ்சாப்


கிங்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான்  ரோயல்ஸ் ஆகியவற்றுக்கிடையே ஜெய்பூரில் நடைபெற்ற நான்காவது ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரை அஸ்வின் சதிசெய்து ரன் அவுட் ஆக்கியதால்  ராஜஸ்தான் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணித்தலைவர் பஞ்சாப்பை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்தது. 185 எனும் ஓட்ட எண்ணிக்கையை எதிர்கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் 20ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ராகுல் நான்கு ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்டு வந்த மாயங் அகர்வால் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெற்ரில் இணைந்த கைல்ஸ்,சப்ரஸ்கான் ஜோடி ஏழு ஓவர்களில் 84 ஓட்டங்கள் எடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. புயலாக விளையாடிய கைல்ஸ், பென் ஸ்ரோக்கின் பந்தை ராகுல் திரிபாதியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 47 பந்துகளைச் சந்தித்த கைல்ஸ் எட்டு பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கலாக 79 ஓட்டங்கள் அடித்தார்.
கைல்ஸின் பணியை சப்ரஸ்கான் செய்தார்.  ஆட்டநேர முடிவில் 29 பந்துகளுக்கு முகம் கொடுத்த சப்ரஸ்கான் ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன்  46 ஆட்டங்கள் எடுத்தார்.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய ராஜஸ்தானுக்கு ரஹானே, ஜோஸ் படலர் ஜோடி நல்லதொரு அடித்தளத்தை இட்டது. 8.1 ஓஒவரில் 22 ஓட்டங்கள் எடுத்த ராஹானேயை அஸ்வின் வெளியேற்றினார். பட்லருடன் சஞ்சு சாம்சன் இணைந்தார். ஜோஸ் பட்லரின் அதிரடியால் பஞ்சாப் தோல்வி யடைந்து விடும் நிலை ஏற்பட்டது. 12.5 ஆவது ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து 108 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அந்த மோசமான செயலை அஸ்வின் அரங்கேற்றினார். பட்லரைஆடமிழக்கச்செய்ய முடியாத விரக்தியில் மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் வெளியேற்றினார்.

மன்கட் முறயில் ஆட்டமிழக்கச் செய்ய முன்னர், எதிரணி வீரருக்கு எச்சரிக்கைவிட வேண்டும். எச்சரிக்கை எதுவும் விடாமல் பட்லரை அஸ்வின் அவுட்டாக்கியது விளையாட்டின் மகத்துவத்தை இல்லாமல் செய்து விட்டது. 43 பந்துகளில் பத்து பவுண்டரி இரண்டு சிக்ஸருடன் 69 ஓட்டங்கள் எடுத்த ஜோஸ் பட்லர் விரக்தியுடன் வெளியேறினார்.

அநியாயமான முறையில் பட்லர் ஆட்டமிழந்ததும் ராஜஸ்தானின் தோல்வி உறுதியாகியது. 19.2 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்த ராஜஸ்தான் 170 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்ட நாயகன் விருது கைல்ஸுக்கு வழங்கப்பட்டது.  

ஐபிஎல்லை அசிங்கப்படுத்திய அஸ்வின்


இந்திய கிரிக்கெற் போட்டிகளின் பிரதான பந்துவீச்சாளராக விளங்கிய அஸ்வின் மோசடியான முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச்செய்து விளையாட்டின் மாண்பை குழி தோண்டி புதைத்துள்ளார். அஸ்வினின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி  184 ஆட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ்  12 ஆவது ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து 108  ஓட்டங்கள் எடுத்தது. ஜோஸ் பட்லரை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியதால் தோல்வியடைந்து விடுவோமோ எனப் பயந்த அஸ்வின் 13.5 ஆவது ஓவரில் எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் மன்கட் முறையில் அவரை ஆட்டமிழகச் செய்தார்.

பந்து வீச்சாளர் பந்தை வீசுமுன்னர் அவருக்கு அருகே நிற்கும் துடுப்பாட்ட வீரர்  கிரீஸை விட்டு வெளியேறினால் அவரை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச்செய்வதே மன்கட் அவுட் எனப்படும். இந்த விதியை கிறிக்கெற் உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாதான். 1947 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் சகல துறை வீரரான பில் பிரவுணை எச்சரிக்கை செய்தபின் இந்திய பந்து வீச்சாளரான மன்கட் என்பவர் ஆட்டமிழக்கச்செய்தார். ரன் அவுட் ஆனால் அந்த பந்து கணக்கில் எடுக்கப்படமாட்டாது. ரன் அவுட் இல்லை என்றால்  கணக்கில் சேர்க்கப்படும்.

இதில் இன்னொரு விசித்திரம் என்னவென்றால் அஸ்வினும் ஜோஸ் பட்லரும் இதற்கு முன்னர் இலங்கையில் மன்கட் சர்ச்சியில் சிக்கினார்கள்.  2011 ஆம் ஆண்டு இலங்கை வீரர் திரிமானேயை மன்கட் முறையில் அஸ்வின் ஆட்டமிழக்கச்செய்தார். இன்றைய இந்திய கப்டனான சேவக் மூத்த வீரர்களுடன் கலந்து பேசி அந்த ஆட்டமிழப்பை வாபஸ் வாங்கி திரிமானேயயை விளையாட அனுமதித்தார். எதிரணிக்க் கப்டன் இந்த முடிவை மாற்றலாம். கப்டனான அஸ்வின் முடிவெடுத்தபடியால் எதுவும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இலங்கை வீரர் சுசித்ர செனநாயக்கவினால் மன்கட் முறையில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.

Tuesday, March 26, 2019

முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கெப்பிட்டல்


ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் டெல்லி டேர் டெவில் எனும் பெயருடன் விளையாடிய டெல்லி அணி இந்த ஆண்டு  டெல்லி கெப்பிட்டல் எனும் புதிய பெயருடன் கலம் இறங்கி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை இந்தியன், டெல்லி கெப்பிட்டல் ஆகியவற்றுக்கிடையே மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் டெல்லி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது. 214 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது. இந்த சீசனில் முதல் 200 ஓட்டங்களை டெல்லி பதிவு செய்தது.

டெல்லி, மும்பை ஆகிய இரண்டு அணிகளும் க்டந்த 11 வருடங்களில் நடந்த முதல் போட்டியில் நான்கு முறை வெற்றி பெற்றது. ரிக்கி பொண்டிங்கின் பயிற்சியும் கங்குலியின் ஆலோசனையும் முதல் போட்டியில் டெல்லிக்கு ஐந்தாவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. டெல்லி அணியில் இங்ரம்,கோமோ பெளல் ஆகியோருடன் நீண்ட இடைவெளியின் பின்னர் இஷாந்த் சர்மா இணைக்கப்பட்டார். மும்பை அணியில் காஷ்மீர் வீரர் ரஷீக் கலாம் எனும்  இளம் வீரர் அறிமுகமானார். மும்பை முன்னர் அறிமுகப்படுத்திய பும்ரா, ஹர்த்கிக் பாண்டையா, க்ருணாஸ் பண்டையா ஆகியோர் இந்திய அணியில்  முக்கிய வீரர்களாக இருக்கின்றனர்.
 ப்ரித்விஷாவும், தவானும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கலாகக் களமிறங்கினர். அறிமுக வீரரான ரஷீக் கலாம் முதல் ஓவரை வீசினார். முதல் பந்து நோபோலானது. ஆனாலும் முதலாவது ஓவரில் ஆறு ஓட்டங்கள் மட்டும் அடிக்கப்பட்டது. ஸ்ரேயஸ் ஐயர் 16 ஒட்டங்களுடன் வெளியேற இங்ரம் களம் புகுந்தார். மூன்றாவது இணைப்பாட்டத்தில் தவான், இங்ரம் ஜோடி 83 ஓட்டங்கள் அடித்தது. 32 பந்துகளுக்கு முகம் கொடுத்த இங்ரம் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தவானுடன் ரிஷாப் பண்ட் இணைந்தார்.  12.3 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்ததுடெல்லி. தவான் பண்ட ஜோடி ஓட்ட எண்ணிக்கையைஉயர்த்தும் என எதிர் பார்க்கப்பட்டபோது 43 ஓட்டங்கலில் தவான் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த கீமோபோலும் அக்சர் படேலும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.

விக்கெற்க ஒரு பக்கத்தில் வீழ்ந்துகொண்டிருக்க ரிஷாப் பண்ட்  ருத்ரதாண்டவமாடினார். தன்னை எதிர்நோக்கி வந்த பந்துகள் அனைத்தையும் விரட்டினார்.18 பந்துகளில் அரசி சதம் அடித்தார் பண்ட். டெல்லி அணி கடசி ஆறு  ஓவர்களில் 99 ஓட்டங்கள் அடித்தது.27 பந்துகளைச் சந்தித்த ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்காது ஏழு பவுண்டர், ஏழு சிக்ஸர்களுடன் 78 ஓட்டங்கள் அடித்தார். 20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்த டெல்லி 213 ஓட்டங்கள் எடுத்தது.

  214 என்ற  இமாலய இலக்குடன் களம் இறங்கிய மும்பை 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 176 ஓட்டங்கள் எடுத்து 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ரோகித்சர்மா, குயின் டிகாக் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்தனர். ரோகித் 27,சூரியகுமார்2, டிகாக்27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முன்னொரு காலத்தில் அதிரடிகாட்டிய பொலாட்டும் மும்பைக்கு புது முகமான யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். ஆரம்பத்திலிருந்தே பொலாட் அதிரடிகாட்டினார். பொறுமையாக விளையாடிய யுவராஜ் சிங்கும் அதிரடியில் இறங்கினார். மூன்று ஓவர்களில் 40 ஓட்டங்கள் எடுத்து டில்லியை பதறவிட்டனர்.
கீமோ பெளல் இந்த ஜோடியைப் பிரித்தார். கீமோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்த பொலாட், 13 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். ஐந்தாவது விக்கெற்றில் இவர்கள் இருவரும் 50 ஓட்டங்கள் எடுத்தனர். 15 பந்துகளை எதிர்கொணட குருனால் பண்டையா 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 35 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங், ஐந்து பவுண்டர்,மூன்று சிக்ஸர் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். நான்கு வருடங்களுக்குப் பின்னர் 31 போட்டிகளில் அசை சதம் கடந்தார் யுவராஜ் சிங். அதன் பின்னர் வந்த வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க 19.2 ஓவரில் மும்பையின் தோல்வி உறுதியாகியது.

டெல்லியிடம் தொடர்ந்து மூன்றாவது முறையாக மும்பை தோல்வியடைந்தது. இஷாந் சர்மா, ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது ரிஷாப் பண்டுக்கு வழங்கப்பட்டது.

Monday, March 25, 2019

ஹைதராபாத்தை விரட்டி வென்றது கொல்கட்டா


ஐபிஎல் தொடரின் இரண்டாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கட்டா நைற் ரைடர்ஸ் ஆகியவறுக்கிடையே போட்டி கொல்கட்டா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் மூன்று விக்கெற்களை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தது. கடினமான இலக்கை விரட்டிய கொல்கட்டாவுக்கு  நான்கு விக்கெற்களை இழந்து 183 ஓட்டங்கள் அடித்து  ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. கடைசி மூன்று ஓவர்களில் ரசல்ஸ், சுப்பமன் ஜோடி அதிரடியாக விளையாடி ஹைதராபாத்திடம் இருந்து வெற்றியைப் பறித்தார்கள். கடைசி 11 பந்துகளில் 39 ஓட்டங்கள்  அடித்த ரசல்ஸ் ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கட்டா கப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பந்தைச் சேதப்படுத்தியதால் விளையாடத் தடை விதிக்கப்பட்ட டேவிட் வானர் ஹைதராபாத்துக்காக களம் இறங்கினார். ஹைதராபாத் அணித் தலைவ்ர் கேன் வில்லியம்சன் காயமடைந்ததால் புவனேஸ்வர் குமார் தலைமையேற்றார்.


  ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக களம் இறங்கிய வானர், பேர்ஸ்டோவ் ஜோடி நம்பிக்கையளித்தது.  118 ஓட்டங்கள் எடுத்தபோது 39 ஓட்டங்களில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். வானருடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். தடை தாண்டிவந்த வானர் 53 பந்துகளில் மூன்று சிக்ஸர், ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய யூசுப் பதான் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.விஜய் சங்கர் ஆட்டமிழக்காது 25 பந்துகளில் 40 ஓட்டங்கள் அடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். மணீஸ் பாண்டே ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்த ஹைதராபாத் 181 ஓட்டங்கள் எடுத்தது. ரசல் இரண்டு விக்கெற்களையும் பியூஸ் சாவ்ல ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

182 என்ற கடினமான இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொல்கட்டா ஆரம்பத்தில் தடுமாறியது. ஆரம்ப்த் துடுப்பாட்ட வீரரான கிறிஸ்லின் ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார்.  ஆரம்பத்தில் தடுமாறிய நிதுஷ் ரானா, ரொபின் உத்தப்பா ஜோடி பின்னர் அதிரடி காட்டியது. இவர்கள் இருவரும் 80 ஓட்டங்கள் எடுத்தபோது உத்தப்பா 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் இரண்டு ஓட்டங்களுடன் வெளியேறினார். ரானாவுடன் ரசல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய ராணா 47 பந்துகலில் மூன்று சிக்ஸர் எட்டு பவுண்டரி அடங்கலாக 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

15.3 ஓவர்களில்  4 விக்கெற்களை இழந்து 118 ஓட்டங்கள் எடுத்தபோது களம் இறங்கிய ரசல், சுப்மன் ஜோடி ஹைதராபாத்தின் வெற்றிக் கனவைத் தகர்த்தது.  கடைசி மூன்று ஓவகளில் முறையே  19.21.14 ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்கள். ரசல் சந்தித்த 11 பந்துகளி, முறையே 6,6,4,1,4,6,4,0,6,1 ஓட்டங்கள் அடித்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரசல் நான்கு சிக்ஸர் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்கள் அடித்தார். ஷுப்மன்கில் 18 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்ட  நாயகன் விருது ரசலுக்ல்கு வழங்கப்பட்டது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியடைந்த் ஹைதராபாத் இம்முறை முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது.



Sunday, March 24, 2019

சென்னை சுழலில் சிக்கிய பெங்களூர்


டோனியா,கோலியா - ரெய்னாவா,கோலியா சென்னையா,பெங்களூரா போன்ற எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற போட்டியில் டோனியும் ரெய்னாவும் வெறி பெற்றனர்.   சென்னை சுப்பர் கிங்ஸ், ரோயல் சலஞ்ச் பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே சென்னையில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் ஏழு விக்கெற்றால் சென்னை வெற்றி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி, களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்டாடிய பெங்களூர் 17.1ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து 70 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.

 பெரிதும் எதிர்பார்கப்பட்ட கோலி, ஆறு ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் இல்லாத ஹர்பஜன்னின் பந்தை அடித்த இந்திய அணித்தலைவர் அணிக்குள் வருவதும் போவதுமாக உள்ள ஜடேஜாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மொயின் அலி, டிவிலியஸ் ஆகிய இருவரும் தலா ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய ஹெட்மெயர் ஓட்டம் எதுவும் எடுக்கது ஹர்பஜனின் பந்தை தட்டி விட்டு ஓட முற்படுகையில் மின்னலைப் போல் பாய்ந்து தடுத்த ரெய்னா பந்தை டோனியிடம் கொடுத்டு ரன் அவுட் ஆக்கினார்.


சென்னைக்கு சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் எட்டு ஓவர்களில் முக்கியமான நாகு விட்கெற்களை இழந்து 39 ஓட்டங்கள் எடுத்தது. செனையின் மூன்ரு சுழல் பந்து வீரர்களும் எட்டு விக்கெற்களை  வீழ்த்துனர்.  ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பர்த்தீப் பட்டேல், பிராவோ வீசிய முதல் பந்தை கேதார் ஜாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  பட்டேல் அதிக பட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.  ஏனைய அனைவரும்  ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். பட்டேல் கோலி ஜோடி  அதிக பட்சமாக 16 ஓட்டங்கள் எடுத்தது.

நான்கு ஓவர்கள் பந்துவீசிய ஹர்பஜன் 20  ஆடங்களைக்கொடுத்து மூன்று விக்கெற்களை வீழ்த்தினார். நான்கு ஓவர்க வீசிய இம்ரான் தாஹிர் ஒன்பது ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெற்களை வீழ்த்தினார். ஜடேஜா இரண்டு விக்கெற்களைக் கைப்பற்றினார்.

71 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்குடன் களம் இறங்கிய சென்னை 17.4 ஓவர்களில்  மூன்று விக்கெற்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.  மூன்றாவது ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்காத வட்சன் ஆட்டமிழந்தார். இரண்டாஅது விக்கெற்றில் ஜோடி சேர்ந்த  ரெய்னா, ராயுடு ஜோடி 32 ஓட்டங்கள் எடுத்தது.21 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்த ரெய்னா ஆட்டமிழந்தார்.15 ஓட்டங்கள் அடித்தபோது ஐபிஎல் 117 போட்டியில்  ஒரு செஞ்சரி 35 அரை செஞ்சரி  அடங்கலாக 5000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற முத்திரையை ரெய்னா பதித்தார்.  164 போட்டிகளில் 4954 ஓட்டங்கள் அடித்த கோலி இரண்டாவதி இடத்திலும் 173 போட்டிகளில் 4493 ஓட்டங்கள் அடித்த ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


ராயுடு  28 ஓட்டங்கள் அடித்தார்.  கேதார் ஜாதவ் ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களையும் ஜடேஜா ஆட்டமிழக்காது ஆறு ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.


Friday, March 22, 2019

விசுவாசிகளைக் கைவிட்ட பன்னீர்ச்செல்வம்.


ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துனுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் ஓ. பன்னீர்ச்செல்வம், தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். சசிகலா,தினகரன்,எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களின் அதிகாரப்போக்கைப் பிடிக்காதவர்கள் பன்னீர்ச்செல்வத்தின்  பின்னால் அணிதிரண்டனர். ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய பலம் அவர்களுக்கு இல்லை. என்றாலும் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை தொண்டர்கள் விரும்பவிலை. நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்  தனது மகன் ரவீந்திரநாத்துக்கு பன்னீர்ச்செல்வம் சீற்  வாங்கிக் கொடுத்ததால் அவரை நம்பிச்சென்ற 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.

ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 37 தொகுதிகளில் வெற்ரி பெற்றது. பாரதீயஜனதாக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியிலும்  வெற்றி பெற்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் வசமே தற்போது உள்ளன. தமிழகம் புதுவை உட்பட 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆறு எம்பிக்களுக்கு  மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்புக் கொடுத்துள்ளது. அந்த ஆறுபேரும் எடப்பாடியின் ஆதரவாளர்கள். பன்னீர்ச்செல்வத்தின் விசுவாசிகளான 10 எம்பிக்களில் ஒருவருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எடப்பாடியின் கை ஓங்கி, கையறு நிலையில் பன்னீர் இருப்பதை இது  உணர்த்துகிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்க  முயற்சிக்காத பன்னீர்ச்செல்வம் தனது மகன் போட்டியிடுவதற்கு அனுமதி வாங்கிக் கொடுத்ததை அவருடன் இருப்பவர்கள்  ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஓ.பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தபோது பிரிந்தவர்கள் இணைந்துவிட்டார்கள் மனங்கள் இன்னமும் இணையவில்லை என பன்னீரின் ஆதரவாளரான ராஜ்யசபா உறுப்பினர்  மைத்திரேயன் தெரிவித்தார். அது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஸ்டாலின்,கனிமொழி,அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னிறுத்தப்பட்டதால் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தைப் பொறுக்க முடியாத பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார். துணை முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லபாவின் மகன் ராஜ் சத்தியன் ஆகியோர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை தமது வாரிசுகளைக் களம் இறக்க முடியாமல் மெளனமாக இருந்த தலைவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அதிருப்பியுற்ற முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். யாதவ இன வாக்குகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்றத் தேதலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமையால் முன்னாள் சட்ட சபை உறுப்பினர் மார்க்கண்டேயன் விழாத்திகுளம் சட்ட சபை இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். 18 சட்டசபை இடைத்தேர்தலைக் குரிவைத்டு காய் நகர்த்தும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு ஸ்டாலினின் தலைமையில் தமிழகத் தலைவர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிப்பதற்கு தினகரன் சத்தமில்லாமல் காய் நகர்த்துகின்றார். தினகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கலை அரசன், ஸ்டாலினின் முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியலை ஆரம்பித்த கலை அரசன்  மீண்டும் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ளார்.
எதிர்பார்புகள் நிறைவேறாமையால் கட்சிமாறும் படலம் ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் நெருங்கும்போது இன்னும் சிலர் கட்சிமாற வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் சிலகட்சிகளில்  பாரிய மாற்றங்கள் ஏற்பாடும்.

சூரன் ஏ.ரவிவர்மா.

Wednesday, March 20, 2019

தேர்தலுக்கு முன்பே தோற்றுப்போன கூட்டணி


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்ததாகப் பெருமைப்பட்ட தலைவர்கள் இப்போது சிறுமைப்பட்டு நிற்கிறார்கள். ஜெயலலிதாவின் பிரதான எதிரியான ராமதாஸுக்கு ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்தது. தேர்தல் நாள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே  பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு எம்பி பதவி உறுதியானது. பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து  கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்த விஜயகாந்துக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர்  புயூஸ் கோயல், தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள் உட்பட பலர் வியஜகாந்தின்  வீட்டிற்குச் சென்றும் அங்கிருந்த யாரும் பிடிகொடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கதவைச் சாத்தியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடன் சரணடைய வேண்டிய நிலைக்கு விஜயகாந்தின் கட்சியான தேசிய முற்போக்கு  திராவிடக் கழகம் தள்ளப்பட்டது. ராமதாஸுக்குக் கொடுக்கபப்ட்ட ஏழு தொகுதிகளைப் பெற ஒற்றைகாலில் நின்ற தேசிய முற்போக்கு திராவிடக்  கழகம் நான்கு தொகுதிகளுடன் அடங்கியது.

பரம எதிரிகளான ராமதாஸும் வியஜகாந்தும் ஒற்றுமையாக தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வியஜகாந்தின் வீட்டுக்குச் சென்ற ராமதாஸ் பழைய பகையை மறந்ததாக சிரித்துக்கொண்டு சொன்னார்.  அந்தக் காட்சியப் பார்த்தவர்களும் சிரித்தார்கள். அரசியல் பதவி மோகத்தால் ராமதாஸ் மிகவும் கீழா இறங்கிச் சென்றுவிட்டார்.

புதிய தமிழகம்,புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என் ஆர். காங்கிரஸ் ஆகியவற்ருக்கு தலா ஒருதொகுதியைக் ஒடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகுதியான 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கும் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியும் கலந்துகொள்ளவில்லை. தாம் எதிர்பார்த்த  எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமையால் அக்கட்சிகள் அந்தக் கூட்டத்தைப் பகிஷ்கரித்ததாகத் தெரியவருகிறது. தமக்கு வெற்ரி வாய்ப்பு உள்ள தொகுதிகளை ஒதுக்காமையால் கூட்டணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தலைவர்கள், கையைக் குலுக்கி போஸ் கொடுத்தார்கள். ஆனால் அவை எல்லாம் நடிப்பு என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பகிஷ்கரிப்புச் செய்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக மேடையேறிப் பிரசாரம் செய்வார்களா என்ற கேள்வி மேலெழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு  முன்னரே தலிவர்கள் ஆளுக்கொருபக்கம் திரும்பி இருப்பதை தொண்டர்கள் எப்படி நோக்குவார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் மீது பிரேமலதாவும் சுதீஷும் கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் முழு மனதுடன் பணி செய்ய மாட்டார்கள்.  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வேலையை அவர்கள் குறைத்துவிட்டார்கள்.

ஊழல்மிகுந்த மாநிலம் தமிழகம் என மோடியின் நிழலான அமித் ஷா சான்றிதழ் வழங்கினார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழலைப் பட்டியலிட்டு தமிழக ஆளுநரிடம் கையளித்தது பாட்டாளி மக்கள் கட்சி, சட்டசபையில் துணிச்சலுடன் ஜெயலலிதாவை எதிர்ட்துக் கேள்வி கேட்டவர் கப்டன் என பிரேமலதா ஞாபகப் படுத்தியுள்ளார். விஜயகாந்துக்கும் ராமதாஸுக்கும் இடையிலான பகை என்றைக்கும் மாறாதது. இவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு தலைவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது போல நடிக்கிறார்கள். அந்தக் கட்சிகளின் எதிர்காலம் தொண்டர்களின் கையில் இருக்கிறது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

Friday, March 8, 2019

தலைமை இல்லாது கூட்டணியை குழப்பும் தேமுதிக



கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் அரசியல் சாணக்கியர்களையே தடுமாறச்செய்தவர் விஜயகாந்த். ரசிகர் மன்றங்களை அரசியல் அலுவலகங்களாக்கி கருப்பு எம்ஜிஆர் அன்ர பெயருடன் தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனவில் கம்பீரநடைபோட்டவர். மக்களுடனும் கடவுளுடனும் கூட்டணி என்ற விஜயகாந்தின் சத்தியப்பிரமாணத்தில் மயங்கியவர்கள் அவருக்கு வாக்களித்தனர். கருணாநித்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடான அரசியல் தலைவராகவே சிலர் விஜயகாந்தைப் பார்த்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வீழ்த்துவேன் என கங்கணம் கட்டி அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள் அந்தக் கட்சிகளிடன் சரணடைந்ததுதான் வரலாறு. என்வழி தனிவழி என்ற ரஜினியின் சினிமா வசனத்தை நிஜத்தில் நடை முறைப்படுத்தியவர் விஜயகாந்த். கருணாநிதியின் வெற்ரி தோல்வியையும் ஜெயலலிதாவின் வெற்றி தோல்வியையும் ஒரு காலத்தின் வைகோவும் ராமதாஸும் தீர்மனித்தனர். அந்த இடத்தை விஜயகாந்த் பிடித்ததால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கடுப்பாகினர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் விஜயகாந்தின் பக்கம் சென்றதால் விஜயகாந்தை தனது கட்சிக் கூட்டணியில் இணைத்தார் ஜெயலலிதா. அன்று சரிந்த விஜயகாந்தின் செல்வாக்கு இன்று படுபாதாளத்தில் விழுந்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிகளின் கூட்டணிப்பேரம் முடிந்து விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளை வைத்துக்கொண்டு தன்னுடன் இணைந்த கட்சிகளுக்கு 20 தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது. விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவதென்று முடிவெடுக்க முடியாமல் விஜயகாந்தின் கட்சி தடுமாறுகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை குன்றியதால்  அவருடைய மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சுதீஷும்  கூட்டணிப்பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்துகின்றனர். அமெரிக்கவின் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய  விஜயகாந்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ரஜினி, ஸ்டாலின், சரத்குமார் ஆகியோ சென்று பார்வையிட்டனர். உடல் நலம், பற்றி விசாரிக்கச்சென்றவர்கள் அங்கு அரசியலும் பேசி இருப்பார்கள். எவரும் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. விஜயகாந்தின் அரசியல் எதிரியான ராமதாஸின் கட்சிக்கு கொடுத்த தொகுதிகளுக்கு  குறையாமல் தமக்கும்  தரவேண்டும் என சுதீஷ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 10 சத வீதமாக இருந்த விஜயகாந்தின் வாக்கு வங்கி இரண்டு சதவீதமாக இருப்பதனால் ராமதாஸுக்குக் கொடுத்த ஏழு தொகுதிகளைக் கொடுக்க அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மறுக்கிறது.

மத்திய அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களும் சுமார் 20 நாட்களாக பிரேமலதாவுடனும் சுதீஷுடனும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. தமது மதிப்பை உயர்த்துவதற்காக ஸ்டாலின் வந்து அரசியல் பேசினார்  என ஒரு குண்டை பிரேமலதா தூக்கிப் போட்டார். அதற்கும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மசியவில்லை. பிரதமர் மோடி, தமிழகத்தில் பங்குபற்றும் அரச வைபவத்தில் வைபவத்தில்  கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற வேண்டும் என பாரதீய ஜனதாத் தலைவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் விரும்பினார்கள்.  மாலையில் மோடியின் கூட்டம். அன்று நண்பகல் ஹோட்டல் ஒன்றில் மத்திய அமைச்ச்ர் பியூஸ் கோயலுடன் சுதீஸ் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அன்று முடிவு எட்டப்படும் என அனைவரும் காத்திருந்தபோது துரை முருகனின் பேட்டி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.

 பாரதீயஜனதா அமைச்சருடன் சுதீஷ் பேச்சு வார்த்தை நடத்திய அதே  நேரத்தில், வியஜகாந்தின் கட்சிப் பிரமுகர்களான அழகாபுரத்து முருகேசனும் முன்னாள் பொருளாளர் இளங்கோவனும் துரை முருகனைச்  சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகக்  கூட்டணியில் இடம் கேட்டார்கள். தனது கட்சியின் மதிப்பை சுதீஷ் உயர்த்திப் பேசிக்கொண்டிருகும்போது பத்திரிகையாளர் முன்பாக சுதீஷின் இரட்டை வேடத்தை துரை முருகன் வெளிப்படுத்தினார்.  மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வியஜகாந்தின் படம் அகற்றப்பட்டு தமிழிசையின் படம் காட்சிப்படுத்தப்பட்டது.

விஜயகாந்தின் வருகைக்காகக் காத்திருந்த ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டார்.  இதனைத் தெரிந்துகொண்டும் வியஜகாந்தின் கட்சிப் பிரமுகர்கள் துரை முருகனைச் சந்தித்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. பேரம் படியாத்ததால் அணி மாறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றது. விஜயகாந்தின் கட்சியினர் இரண்டு அணிகளுடனும் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தினர். அகிக தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க் வேண்டும் என்பதே அவர்களது முடிவு. அதனாலேயே இரண்டு பக்கமும் பேசி தமது மதிப்பை உயர்த்த முயன்றனர்.
இரண்டு பக்கமும் போக்குக் காட்டியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் தொகுதிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இருக்கிறது. கூட்டணியா தனித்துப் போட்டியா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்ல என பிரேமலதாவும் சுதீஷும் தெரிவித்துள்ளனர். அரசியல் அரங்கில் அவமானப் பட்டு நிற்பதால் பிரேமலதாவும் சுதீஷும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன்  தலைவர்களையும் மோசமாக விமர்சிக்கின்றனர்.

தமிழக சட்ட சபையிலும் பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் விஜயகாந்த், பேசியவையும் அவர்  காட்டிய சைகைகளும் இன்றும் சாட்சியாக இருக்கின்றன. கூட்டணிக்காக காலில் விழுகிறார்கள் என  விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சொன்னதை அரசியல் தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லை.  தமது தரப்பு விளக்கத்தைத் தெரிவிப்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுதீஷும் பிரேமலதாவும் வெளிப்படுத்திய ஆவேசமும் பதைபதைப்பும் பத்திரிகையளர்களை வெறுப்பேற்றியுள்ளது.

இத்தனை களேபரங்களுக்குப் பின்னரும் விஜயகாந்தின் வருகைக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனிக் கதவை அகலத்திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது.

சூரன்.ஏ.ரவிவர்மா.