Sunday, March 8, 2009

மஹேல‌ வின் தலைமை மாறுமா

லாகூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலால் அணித்தலைவர் மஹேலவின் விருப்பம் ஒன்று நிறைவேற முடியாமல் தடுக்கப்பட்டு விட்டது.
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியின் பின்னர் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக மஹேல அறிவித்திருந்தார். இந்திய அணியுடனான தோல்வியின் பின்னர் 2020 போட்டியின் தலைமை டில்ஷானின் கைகளுக்குச் சென்றது. அதன் பின்னர் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக மஹேல அறிவித்தார்.
இலங்கை அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றவர் என்ற பெருமையுடன் தனது தலைமைப் பத
வியை கைவிட மஹேல விரும்பினார். முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. அணித்தலைவர் மஹேல இரட்டைச் சதமடித்து தனது அணியை வலுவூட்டினார். முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் தலைவர் யூனுஸ்கான் 313 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 644 ஓட்டங்கள் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டை இழந்து 765 ஓட்டங்களை எடுத்ததால் முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இரண்டாவது டெஸ்ட்டின் வெற்றி பெற்று வெற்றி நாயகன் என்ற பெயருடன் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேறலாம் என்று மஹேல ஜயவர்தன எதிர்பார்த்திருந்தவேளையில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதனை தவிடுபொடியாக்கிவிட்டது.
மஹேலவின் தலைமைப் பதவி முடிந்து விட்டதா? தொடருகிறதா என்பது இன்னமும் தௌண்ளளிவாகவில்லை. இலங்கை அணியின் அடுத்த சுற்றுப்போட்டிவரை மஹேல தலைவராக இருப்பார் என்றே கிரிக்கெட் உலகம் எதிர்பார்க்கிறது.
வானதி

மெட்ரோநியூஸ்
06 03 2009

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்