Tuesday, May 25, 2010

திரைக்குவராதசங்கதி 21


நாடகங்களில் நடித்துக் கொண்டேதிரைப்படத்தில் நடிப்பதற்கான முயற்சியை தொடர்ந்தார் விஜயகுமார். ஏ.பி.நாகராஜன் கந்தன் கருணை என்ற படத்தைத்தயாரிக்கப் போவதாக அறிவித்தா
ர். நடிகர் திலகம் வீரபாகு என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க அழகான இளைஞனை ஏ.பி. நாகராஜன்தேடிக் கொண்டிருந்தார். இதனை அறிந்தவிஜயகுமார், ஈ.வி. சகாதேவனின்மூலம் ஏ.பி. நாகராஜனிடம் அறிமுகமானா
ர்.விஜயகுமாரை ஏற இறங்க பார்த்துவிட்டு மறுநாள் சாரதா ஸ்ரூடியோவில்மேக்அப் டெஸ்ட்டுக்கு வரும்படி கூறிஅனுப்பினார் ஏ.பி. நாகராஜன்.விஜயகுமாரின் உண்மையான பெயர் பஞ்சாட்சரம். சினிமாவுக்காக தனது பெயரை சிவகுமார் என்று மாற்றினார். சாரதா ஸ்ரூடி
யோவுக்கு விஜயகுமார் போனபோது அங்கே நடிகர் திலகத்தின் ஆஸ்தானமேக்அப் கலைஞ
ரான ரெங்கசாமிமேக்அப் போட்டுக் கொண்டிருந்தார்.அருகில் நடிகர் அசோகன் நின்று ஆலோ
சனை வழங்கினார். நடிகர் திலகத்தின்சிபார்சில் முருகனாக மேக்அப் போட்டுக்கொண்டிருக்கும் இளைஞனின்பெயர் சிவகுமார்.சிவகுமாருக்கு மேக்அப் முடிந்ததும்விஜயகுமாரை அழைத்தார்கள். விஜயகுமாரின் நெஞ்சில் அடர்த்தியான மயிர்இருந்தது. பிளேட் ஒன்றைக் கொடுத்துநெஞ்சில் உள்ள மயிரை வழிக்கும்படிகூறினார்கள். சரியாக மழிக்கத் தெரியாததால்ஆங்காங்கே பிளேட் தன் கூர்மையைக் காட்டியதால் நெஞ்சில் இருந்துஇரத்தம் வடிந்தது. அவசர அவசரமாகவிஜயகுமாருக்கு மேக்அப் போட்டார்கள். மேக்அப் முடிந்ததும் விஜயகுமாரை
ரப் பார்த்த ஈ.வி. சகாதேவன் அதிர்ச்சியடைந்தார். ஏன் இப்படி அரையும் குறையுமாக மேக்அப்
போட்டீர்கள் என்று ரெங்கசாமியிடம்கேட்டார். தனக்கு நேரம் போய்விட்டதுஎன்று ரெங்கசாமி கூறினார்ஸ்ரூடியோவில் இருந்து கொம்பனி காரில் ஏ.பி. நாகராஜனிடம் அழைத்துச்சென்றார்கள். அங்கு புகைப் படங்கள்எடுத்து விட்டு அவர்களை அனுப்பிவிட்டார்கள். விஜயகுமாரின் உறவினர்
ஒருவர் இரா. நெடுஞ்செழியனைச் சந்திப்பதற்காகச் சென்ற போது விஜயகுமாரையும் அழைத்துச் சென்றார். அங்கிருந்து கலைஞரைச் சந்திக்கச் சென்றார்கள். விஜயகுமாரை கலைஞரிடம் அறி
முகப்படுத்தி விட்டு பையன் படத்தில்நடிக்க முயற்சி செய்கிறான். ஏ.பி. நாகராஜனின் படத்தில் நடிப்பதற்கு மேக்அப்டெஸ்ட் முடிந்து விட்டது என்று விஜயகுமாரின் உறவினர் கூறினார்.
விஜயகுமாரின் நிஜப் பெயர்பஞ்சாட்சரம் சிவகுமார் என்ற பெயரில்சினிமா வாய்ப்புத் தேடினார். ஆகையால் தன்னுடைய பெயர் சிவகுமார் எனகலைஞரிடம் கூறினார். உடனே கலை
ஞர் தொலைபேசி மூலம் ஏ. பி. நாகராஜனுடன் தொடர்பு கொண்டு சிவகுமார்நம்ம பையன் என்று சிபார்சு செய்தார்.கந்தன் கருணை படத்தில் முருகனாகசிவகுமார் தெரிவு செய்யப்பட்டார்.
தனக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்காததையிட்டு விஜயகுமார் மனம் வருந்தவில்லை.சினிமா வாய்ப்பு கிடைக்காதுஎன்ற எண்ணத்தில் ஊருக்குத் திரும்பினார். விஜயகுமார் மகன் திருந்தி
விட்டான். சினிமா ஆசையத்துறந்து விட்டான் என்றுநினைத்த தகப்பன் விஜயகுமாருக்கு திருமணம் செய்துவைத்தார். திருமண பந்தத்தில்இணைந்த விஜயகுமாரின்சினிமா ஆசையை பிள்ளையோ பிள்ளை என்ற படம்மீண்டும் தூண்டியது.கலைஞரின் மகனான மு.க.முத்து, விஜயகுமாரின் நண்பர். தனது நண்பனின்படம் பரபரப்பாக ஓடியதால் படத்தில்நடிக்க
வேண்டும் என்ற ஆசை விஜயகுமாரின்மனதில் மீண்டும் துளிர்விட்டது.தகப்பனிடம் அனுமதி கேட்டார் விஜயகுமார். தகப்பன் முதலில் மறுத்தார். ஒருவருடம் முயற்சி செய்கிறேன். சான்ஸ்
கிடைக்கவில்லை என்றால் திரும்ப வந்துவிடுவேன். சினிமா ஆசையை மறந்துவிடுவேன் என்று கூறினார் விஜயகுமார்.செலவுக்கு 20 ஆயிரம் ரூபா பணமும்கொடுத்து மகனை வழி அனுப்பினார்
விஜயகுமாரின் தகப்பன். சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல் மீண்டு
ம் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்தார்விஜயகுமார்.நாடகம் நடிக்க சந்தர்ப்பம்கிடைத்ததே தவிர சினிமா வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியவில்லை.11 மாதங்கள் கடந்து விட்டன. இன்னும்ஒரு மாதத்தில் சினிமா கனவுக்குமுழுக்கு போட்டுவிட்டு ஊருக்குச்செல்ல வேண்டும் என்றுவிஜயகுமார் முடிவெடுத்தார்.
ரமணி

மித்திரன்வாரமலர்

07/10/07

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்