Sunday, September 25, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 5

சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு துருவங்களுக்கிடையில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த முத்துராமன் நடித்த மறுபிறவி அவருக்கு கெட்டபெயரை வாங்கிக் கொடுத்தது. வயது வந்தவர்கள் பார்க்கும் படம் என்ற ஏ முத்திரையுடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களின்கோபத்தையும் பத்திரிகைகளின் வெறுப்பையும் ச‌ம்பாதித்தது. இப்படத்தில் தாராளமான கவர்ச்சிக் காட்டிய மஞ்"ளாவுக்கு கவர்ச்சி படங்கள் வந்து குவிந்தன.
கல்லூரிப் @பராசிரியர் முத்துராமனுக்கு அவரிடம் படிக்கும் மாணவி மஞ்சுளா, பேராசிரியர் முத்துராமனை காதலிக்கிறார். முதலில் மறுப்புத் தெரிவிக்கும் முத்துராமன் பின்னர் மஞ்சுளாவை திருமணம் செய்ய முடிவுசெய்கிறார். காதலித்தவனை திருமணம் செய்து முதலிரவு கனவுடன் காத்திருந்த மஞ்சுளாவை முத்துராமன் நெருங்கவில்லை. இதற்கான காரணத்தைதேடிய போது தன் தாயின் உருவத்தை ஒத்த மஞ்சுளாவைத் தாரமாக நினைத்துப்பார்க்க முடியவில்லை என்கிறார் முத்துராமன். முத்துராமனின் தாயாகவும் தாரமாகவும் இரட்டை வேடத்தில் கலக்கினார் மஞ்சுளா.
கண்ணியமான பேராசிரியர் முத்துராமனும் அடக்கமான மாணவி மஞ்சுளாவும் குடும்பத்தில் ஒன்றிணைய முடியாது தவிக்கின்றனர். அவர்களின் உணர்ச்சிப்போராட்டங்கள் ச‌ற்று வெளிப்படையாகத் திரையில் மின்னின. நல்ல கருத்துள்ள படங்கள் வெளியாகி வெற்றிவாகை சூக்கொண்டிருந்த வேளையில் வெளியான மறுபிறவி ரசிகர்களின் மனதை கவராததால்தோல்விபடமானது.
தமிழ்த்திரை உலகில் முன்னணிக் கதாநாயகர்களை இயக்கி வெற்றிக்கண்ட டி.ஆர்.ராமண்ணா இப்படத்தை இயக்கினார். வித்தியாச‌மான கதைக்கரு என்பனால் இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். டி.ஆர்.ராமண்ணா. புனர்ஜென்மம் என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பாக வெற்றிபெற்ற கதையையேயே தமிழில் மறுபிறவி என்ற பெயரில் வெளியிட்டார்கள். மது, ஷீலா இணைந்து நடித்த இப்படம் மலையாளத்தில் படைத்தசாதனையை தமிழில்செய்யவில்லை.
மஞ்சுளாவின் தகப்பனாக அசோகனும் தாயாக சுகுமாரியும் நடித்தனர். திருமண வயதையடைந்த மஞ்சுளாவுக்கு அவர்கள் மாப்பிள்ளை தேடியபோது தான் காதலித்த பேராசிரியரை திருமணம் முடித்தார் மஞ்சுளா. மகளின் திருமண வாழ்வு ச‌ந்தோதாஷமாக இல்லாததை அறிந்த அசோகனும் சுகுமாரியும் காரணத்தைத் தேடுகிறார்கள். முத்துராமனின் இயலாமைக்கு காரணம் என்ன என்று தேடிய போதுதான் தாயின் உருவத்தை ஒத்த தாரத்துடன் உறவு கொள்ள முடியாத நிலையை வெளிப்படுத்துகிறார் முத்துராமன்.
உளவியல் ரீதியான இப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக டாக்டர் கோவூரின் உதவியை நாடுகிறார் அசோகன். டாக்டர்கோவூரின் உளவியல் சிகிச் சையினால் உருவம் ஒரேமாதிரி இருந்தாலும் தாயும் தாரமும் வேறு என்ற உணமையை உணர்கிறார் முத்துராமன். அதன் பின் அவர்களின் தாம்பத்தியம் தினமும் முதலிரவாக மாறுகிறது.
1973 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் முத்துராமன், மஞ்சுளா, அசோகன், சுகுமாரி, தேங்காய் சீனிவாச‌ன் , ம னோரமா அகியோர் நடித்தனர். டி.ஆர்.பாப்பாவின் இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. டி.ஆர்.பாலுவின் வச‌னம் படத்துக்குச் சிறப்புச் சேர்த்தது.
ரசிகர்களின் மதிப்பை பெற்ற முதபுதராமன் மறுபிறவியில் நடித்ததை பத்திரிகைகள் கடுமையாக சாடியதால் பத்திரிகையாளர்கள் மாநாட்டைக் கூட்டி தனது வருத்தத்தை தெரிவித்தார் முத்துராமன்.
மித்திரன்25/09/11

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்