Tuesday, November 7, 2023

பரபரப்பான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

  உலகக் கிண்ணைத் தொடரின் 38-வது போட்டியில் இலங்கையை எதிராக விளையாடிய பங்களாதேஷ் 3 விக்கெற்களால்  வெற்றி பெற்றது.  பங்களாதேஷ் ஆறு தோல்விகளுக்குப் பின்னர் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பைத் தக்கவஈத்துள்ளது. 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற  பங்களா தேஷ்  பந்து வீச்சைத் தேர்வு செய்தது.   முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை  இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ஓட்டங்கள் எடுத்தது,  . அசலங்கா 108  ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார். 

280 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை  விரட்டிய பங்கள்:ஆதேஷ் 41.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ஓட்டங் கள் எடுத்து வெற்றி பெற்றது

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்றும் ஷகிப் அல் ஹசன் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். இருவரும் 169 ஓட்டங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷகிப், 65 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 101 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தா ஷாண்டோ.    ஷகிப் அல் ஹசன், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த தொடரில் விளையாடிய முதல் போட்டியில் ஆப்கன் அணிக்கு எதிராக  பங்களாதேஷ்  வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்தது.

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்