Tuesday, July 15, 2025

முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை

 பட்டாளம் புடைசூழ,பொலிஸார் சல்யூட் அடித்து பாதுகாப்புக் கொடுக்க  கெத்தாகப் பவனி வந்த  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன‌வைக் காணவில்லை என பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். அவரது தொலைபேசி இயங்கவில்லை எனவும்  தகவல் சொல்லியுள்ளனர்.

இலங்கைப் பொலிஸ், புலனாய்வுத் துறை ஆகியவற்றில் நிலை இப்போது தெளிவாகி விட்டது.

புலஸ்தினி,செவ்வந்தி  வரிசையில் ராஜிதவும் காணாமல் போயுள்ளார்.உயர் பொலிஸ் அதிகாரியையும்  இலங்கைப் பொலிஸ்  கொஞ்ச நாட்களாகத் தேடித்திரிந்தது. அவர் கூலாக நீதிம்ன்றத்தில் சரணடைந்தார்.

மிக அண்மையில்மீநீன்பிடி அமைச்சராக  இருந்து அதிகாரம் செய்தவர் ராஜித சேனாரத்ன.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் நடந்த சர்ச்சைக்குரிய மணல் அகழ்வுத் திட்டத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன  விரைவில் கைது செய்யப்படுவார் என செய்திகள் கசிந்தன. அப்போது  மெத்தனமாக இருந்த பொலிஸார் ராஜிதவைக் கோட்டை விட்ட பின்னர் அவரைத் தேடுகின்றனர்.

கிரிந்த  மீன் பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு சட்டவிதிகள் வற்றையும் உரிய முறையில் பின்பற்றாமல் வடகொரிய நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் அனுமதி வழங்கியதால் அரசாங்கத்துக்கு 26.3 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்படுள்ளதாக ராஜிதவின்   மீது குற்றம் சுமந்தப்பட்டது.

விசாரணைக்கு வருமாரும், வாக்குமூலம் வழங்குமாரில் இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு பலமுறை ராஜிதவுக்கு அழைப்பு விடுத்தது.

அந்த அழைப்புகளுக்கு உரிய முறையில் ராஜித பதிலளிக்காமையினால், இன்று நீதிமனறம் அவரை தேடப்படும்  குற்றவாளி  என நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு  அழைப்பு விடுத்தபோதெல்லாம் அவர்  வெளிநாட்டில் இருப்பதாக ராஜிதவின்  வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இலஞ்ச ஆணைகுழு முன்னிலையில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்கு ரஜித சேனாரத்த கொடுத்த  மருத்துவச் சான்றிதழ்களை  ஏற்க முடியாது என ஆணைக்குழு நிராகரித்தது.

ராஜிதவைக் கைது செய்யும் அதிகாரம் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு உள்ளது.

ஆனால்,இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு  நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தவும்,  நீதிமன்றத்தித் தவறாக வ‌ழிநடத்தவும் ராஜித முயற்சிப்பதாக இலஞ்ச ஆணைக்குழு

நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

  

  

5 பந்துகளில் 5 விக்கெற்கள்


 

 அயர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்முறை போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அயர்லாந்து ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் பெற்றார்.

 2024 ஆம் ஆண்டு உள்நாட்டு டி20 போட்டியில் ஈகிள்ஸ் மகளிர் அணிக்கு எதிராக ஸிம்பாப்வே யு-19 அணிக்காக தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஸிம்பாப்வேயின் பெண் கிரிக்கெட் வீராங்கனை கெலிஸ் நத்லோவ் தான் இதுபோன்ற சாதனையை முதன்முதலில் பதிவு செய்தார்.

அயர்லாந்தில் நடந்த இன்டர்-மாகாண ரி20 டிராபியின் போது, நார்த்-வெஸ்ட் வாரியர்ஸுக்கு எதிராக முன்ஸ்டர் ரெட்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் கேம்பர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

வாரியர்ஸ் அணி 87  ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து 88  ஓட்டங்கள்  எடுத்து 189 ஓட்டங்கள் இலக்கை துரத்தியதால், வேகப்பந்து வீச்சாளர் இரண்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

12வது ஓவரின் ஐந்தாவது பந்தில், ஜாரெட் வில்சனை வீழ்த்தி அடுத்த பந்தில் கிரஹாம் ஹூனை அவுட் செய்தார். அடுத்த ஓவரில், ஆண்டி மெக்பிரைன், ராபி மில்லர், ஜோஷ் வில்சன் ஆகியோரை வீழ்த்தி ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

ரி20 போட்டிகளில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை   ஆறு பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியுள்ளனர். 

 

Monday, July 14, 2025

களத்தில் இறங்கிய அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்ட பாரதீய ஜனதா

தமிழக சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தி ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற்க் கழகமு, எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரப்புரையை ஆரம்பித்து விட்டன.

முதலமைச்சர் ஸ்டாலின்  மக்கள்   குறையைக் கேட்பதற்கு வீதியில் இறங்கிவிட்டார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் வைத்திய சாலைகளுக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டைந்து  முதல்வன் பாணியில் உடடியாத் தீரவுகாண்கிறார்.  தப்பு செய்தவர்களை வேலையில் இருந்து தூக்குகிறார். அறநிலயத்துறை அமைச்சர்  கோயில்களில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்கிறார்.  தேனீர்க் கடையில் வேலை செய்த சிறுமியைப் பாடசாலையில் அனுமதித்து   செவலை ஏற்கிறார் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். இவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 

தமிழகத்தின் எதிர்க் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில்  "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்"  எனும் தொனிப் பொருளில் தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி.

தமிழக பாரதீய ஜனதக் கட்சியின் தலைவர் பதவியுல் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட‌தன  பின்னர் எடப்பாடியார் சுறுசுறுசுறுப்படைந்துள்ளார். திமுகவின் மீதும் ஸ்டாலினின்  மீதும் தினமும்  ஒரு குற்றச் சாட்டை முனவைத்து ஊடக வெளைச்சத்தைத் தன்மீது  பரவ விட்டுள்ளார்.

 கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர். கோயில் உண்டியலில் போடும் பணத்தை வைத்து கோயிலை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏன் அரசுப் பணத்தில் கல்லூரி கட்டினால் ஆகாதா? நாங்கள் ஆட்சியில் அனைத்து கல்லூரிகளையும் அரசு பணத்தில் கட்டினோம். அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதை ஒரு சதிச் செயலாக பார்க்கிறோம். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அந்தக் கல்வி அரசுப் பணத்தில் கொடுக்க வேண்டும்  என்று எடப்பாடி திமுகவின் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

 ஸ்டாலின் ஆட்சியை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சிம்ப்ளி வேஸ்ட், ஸ்டாலின் ஆட்சியை  எடப்பாடி சபதம் செய்தார்.

அதிமுகவை மீட்க முடியாத பழனிசாமி தமிழகத்தை மீட்போம் என பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுள்ளதுள்ளார்.

இதுவரை பாஜகவுக்கு டப்பிங் குரல் கொடுத்த அவர் இப்போது ஒரிஜினல் குரலையே கொடுக்க ஆரம்பித்து விட்டார். அறநிலைத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு பிரிவு இருக்கிறது.

தமிழ்நாடு என்று சொல்லத் தயங்குகின்ற கூட்டத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். அதனால் தான் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பயணம் செய்கிறார். அதிமுகவை மீட்க முடியாத அவர். எப்படி தமிழகத்தை மீட்பார். எடப்பாடி பழனிச்சாமி இடம்  இருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விட்டது. செய்த குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

கோயில் காசில் ஸ்டாலின் பாடசாலை கட்டுகிறார் என்ற  எடப்பாடியின் குற்றாச் சாட்டை தமிழ் நட்டில் உள்ள  கல்வியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தம்து விவாதத்துக்கு பாரதியாரைத் துணைக்கழைத்துள்ளனர்.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியாரின் கவி வரிகளை கெட்டியாகப் பிடித்து அறிஞர்கள் எடப்பாடியை  நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கின்றனர்.

என்ன கொடுமை சரவணா பாடசாலை கட்டுவது  ஒரு குற்றமா என மீம்ஸ்கள் பறக்கின்றன.

திராவிட மொடல் ஆட்சி என்ற சொற்தொடர் இந்தியாவையே திரும்பிப் பர்க்க அவைத்தது.

திராவிட மொடல் ஆட்சிக்குப் பதிலாக ஆன்மீக அரசிய என்ற சொற்பதத்தை அண்ணாமலை பிரயோகிக்கத் தொடங்கி விட்டார்.

தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்; சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் பயணிப்பேன்,'' என, பா.ஜ., 

கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா  நடந்தது. இதில், சமூக சேவகர்கள், 13 பேருக்கு விருதுகள் வழங்கி  கெள‌ரவிக்கப்பட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செல்வாக்குடன் தமிழகத்தில் பாரதீய ஜனதா கால் பதித்துள்ளது.

இந்த நிலையில்  அண்ணாமலையின்  கூற்று அதிமுகவுக்கு சவாலாக அமைந்துள்ளது.

ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையேயான தகராரு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

இருவரும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்துகின்றனர்.

அன்புமணி தனது பெயரைப் பாவிக்கக் கூடாது   விரும்பினால் இனிஷியலைப் போடலாம் என ராமதாஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு விரைவில் முடிந்துவிடும் என்று பாமகவினர் கூறி வரும் நிலையில், இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் மாறி மாறி கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அன்புமணியின் ஆதரவாளர்களை  ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்களை அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்ற ராமர் வனவாசம் சென்றார்.  ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். இந்த ஐந்து வயது குழந்தை தான் மூன்று வருடங்களுக்கு முன்னர் அன்புமணியை பாமக தலைவர் ஆக்கினேன்

தேர்தலை நோக்கி அரசியக் கட்சிகள் வியூகம அமைக்கையில் பாமக மட்டும் குடும்பப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது.

ரமணி 13/7/25 

பிரட்மனின் சாதனைகளை நெருங்கும் கில் 100 வருட சாதனை தகர்க்கப்படுமா?

 

 கிறிக்கெற் உலகின் பிதாமகன் டொன்  பிரட்மன்.அவுஸ்திரேலியரான  பிடரட்மனின் 100 வருட சாதனைகளை   இந்திய அணிக் கப்டனான சுப்மன் கில் உடைக்கும்  வாய்ப்பு உருவாகி உள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா  விளையாட உள்ளது. 6 இன்னிங்ச்களில் விளையாட உள்ள கில் பிரட்மன், கோலி, கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை  முறியடித்து புதிய அவரலாறு படைப்பார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிரான  முதல் இரண்டு போட்டிகளில்  விளையாடிய சுப்மன் கில் 585 ஓட்டங்கள் அடித்து மிரட்டி உள்ளர். இரண்டாவது போட்டியில்  முதல் இன்னிங்சில்  இரட்டைச் சதமும்  இரண்டாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் அடித்து பல சாதனைகளைத் தகர்த்துள்ளார். 

  டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  இருக்கிறது. 1936 / 37 ஆண்டு ஆஷஸ் தொடரில் பிரட்மன் 810 ஓட்டங்கள் அடித்தார். அதனை முறியடிக்க  கில்லுக்கு  225 ஓட்டங்கள்  மட்டுமே தேவை.  அந்தத் தொரரில் பிரட்மன்  முதன்  முதலாக கப்டனாக களம்  இறங்கினார், சுப்மன் கில்லும் முதன் முதலாக இந்திய  கப்டனாக  களத்தில்  நிற்கிறார்.

 ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் பிரட்மன்  மூன்று சதங்கள் அடித்தார். சுப்மன் கில்  மூன்று சதங்களை அடித்து சமப்படுத்தி உள்ளார்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பிரட்மன் 974 ஓட்டங்கள் அடித்தார். 330  ஓட்டங்கள் அடித்தால் கில்  பிரட்மனை  முந்திவிடுவார். அப்போது முதல் இரண்டு போட்டிகளில் பிரட்மன் 394 ஓட்டங்கள் அடித்தார். இரண்டு டெஸ்கலில் கில் 585  ஓட்டங்கள் அடித்துள்ளார்.

 அதி  வேகமாக 11  இன்னிங்ஸ்களில் 1000  ஓட்டங்கள்   அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  உள்ளது. 415 ஓட்டங்கள் அடித்தால் அந்தப் பெருமையும்  கில்லிடம் சென்று விடும்.

 ஒரு டெஸ்ட்  தொடரில் ஐந்து சதங்கள் அடித்த சாதனைக்குச் சொந்தக்காரர் மேற்கு இந்தியத் தீவுகளின் வீரரான வால்கோட்.  1955ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு  எதிராக அந்த சாதனை நிலை நாட்டப்பட்டது.

மூன்று சதங்களுடன்  இருக்கும்  கில் அந்தச் சாதனையையும் உடைத் தெறியலாம்.

1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக  பிரட்மன் நான்கு சதங்கள் அடித்தார்.

  ஒரு தொடரில் அதிக  ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற சாதனை கவாஸ்கர் வசம் இருக்கிறது. அவர் 732 ஓட்டங்கள் அடித்தார். 144 ஓட்டங்கள் அடித்தால்  அந்த சாதனையும்  கில்லின் வசம் வந்து விடும்.

18 ஓட்டங்கள் மட்டும்  கில் அடித்தால்  இங்கிலாந்தில் ஒரு தொடரில்  அதிக  ஓட்டங்கள் அடித்த ட்ராவிட்டின் சாதனையை   முறியடிப்பார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஜெய்ஷ்வால் அதிக  ஓட்டங்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறார். அவர் 712 ஓட்டங்கள் அடித்தார். 127 ஓட்டங்கள் அடித்தால் கில்  முந்திவிடுவார்.

இந்தியாவின்  முன்னாள் கப்டன்  கோலி அடித்த 655 ஓட்டங்கள்  என்ற சாதனையைக் கடக்க  இந்தியக் கப்டன்   கில்லுக்கு 91  ஓட்டங்கள் மட்டுமே தேவை.

அதிர்ஷ்டக் காற்று கில் லின்  பக்கம் வீசுகிறது.

 


Friday, July 11, 2025

பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்?

 அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.நிரந்தர  நண்பனும் இல்லை என்ற புதிய கலாசாரத்தை  வெளிப்படுத்தியவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   மறைந்த‌  ஜெயலலிதா.

இந்த வசனத்தை கொஞ்சம் மாற்றிபார்த்தால் பாகிஸ்தானுக்கு கனகச்சிதமாகப் பிரதமரும்   இல்லை என்பதே பாகிஸ்தானின் அரசியல் வரலாறாகும்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும்  பிரதமர்  பாகிஸ்தானின் முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யவில்லை. இராணுவப் புரட்சியின் மூலம் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள்.

இன்றைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்காலம் முடிவதற்கிடையில் அவரை தூக்கி எறிய சதித் திட்டம் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பாகிஸ்தானின் 23 ஆவது பிரதமராக கடந்த 2024 ஆம் ஆண்டு  பெப்ரவரியில் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.  இவர் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் சகோதரராவார்.

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம்  பெற்றது.  சுமார் அரை நூற்றாணடாக அந்த நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரைத் தூக்கி எறிந்து விட்டு இராணுவ ஆட்சியை அரங்கேற்றிய பெருமை ஜெனரல் அயூப் கானையே சாரும்.

1958  ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்த்த அன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் அயூப்கான் 1959 ஆம் ஆண்டுதன்னைப்  ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தார். அவரின் வழிவந்த இராணுவத் தளபதிகளும் அதனையே பின்  பற்றினார்கள். யகியாக்கான், முஹம்மது ஷியாகுல் ஹக், பர்வீஸ் முதாரப் என இப்பட்டியல்நீள்கிறது.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி  ஜெனரல் அசிம்  முனீர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை  அகற்றி விட்டு அவர் ஜனாதிபடியாகப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. 

இந்தியாவுடன்  முரண்படுவது, மல்லுக் கட்டுவது எனபனவே பாகிஸ்தான் அரசியல்வாதிகளின்  பிரதான வேலைத் திட்டமாகும்.


இந்தியாவில் கட்டவிழ்து விடப்படும் பயங்கரவாத்த் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தியாவில் லக்நோவில்  சுற்றுலாததலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருபதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் வழக்கம்  போல்கையை விரித்தது.  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லியது.

 இந்தியா இதனை ஏற்கவில்லை. ஒப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாத முகாம்களை  விமானத் தாக்குதல் மூலம் அழித்ததாக இந்தியா கூறியது

 இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக  பாகிஸ்தான் மார் தட்டியது. நான்கு நாட்களில் யுத்தம்  முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாதிகளின்  முகாம்கள் அழிக்கப்படதையும், தலைவர்கள், தளபதிகள், குடும்பங்கள்  கொல்லப்பட்டதையும் பாகிஸ்தான்  ஒப்புக் கொண்டது.

ஒப்பரேஷன் சிந்தூர் முடிந்த சில நாட்களின்  பின்னர்   ஜெனரல் அசீம் முனீர்  பீல்ட் மார்ஷலாக பதவி  உயர்வு பெற்றார். 

 பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் தனியாக அமெரிக்காவுக்குச் சென்ரு  ட்ரம்பைச் சந்தித்தார். அப்போதே இது பற்றிய யூகங்கள்  வெளிவரத்தொடங்கின. அதிகாரிகள், ஆலோசகர்கள் யாரும் இல்லாமல் வாஷிங்டனுக்குச் சென்ற அசீம் முனீர் ட்ரம்புடன் என்ன பேசினார் என்ற தகவல் இது வரை வெளிவரவில்லை. ஆனால் ஏதோ ஒரு மாற்றம் வரப்போவதை அரசியல் வல்லுநர்கள்  தெரிவித்தனர்.

ஜனாதிபதி சர்தாரியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டதாக பாகிஸ்தானின் பத்திரிகையாளர் எஜாஸ் சயீத் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

லக்ஷர் இ தொய்பாக் கட்சித்தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்  இ முகமது தலைவர் மசூத் அசார்  ஆகியோர் கவலைக்குரிய நபர்கள் எனத் தெரிவித்த சர்தாரி அவர்களை நாடுகடத்த விரும்புவதாகத் தெரிவித்ததை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை. இதனால் அவர் மிது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

1977 ஆம் ஆண்டு மக்களா தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பூட்டோவை  இராணுவ பலத்தால்  தூக்கி எறிந்து விட்டு அட்சி அதிகாரத்தைக் கைப்பற்ரினார் ஜெனரல் ஜியாகுல் கான். அந்தச் சம்பவம் நடைபெற்று 48 வருடங்கள் நிறைவடையும் வேளை மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப்   போவதாக செய்தி  பரவி உள்ளது.

1999 ஆம் ஆண்டி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் இராணுவத் தள‌பதி பர்வேஸ் முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றினார். 2008 ஆம் ஆண்டு வரை முஷாரப்   ஆட்சி செய்தார்.அப்போது  இதே சர்தாரிதான் ஜனாதிபதிப் பதவியில் இருஃதார்.

2008 ஆம் ஆண்டு சர்தாரியை ஜனாதிபதியாக்கிய  பாகிஸ்தான்  இராணுவம்  27 வருடங்களின்  பின்னர் அதே சர்தாரியை  ஜனாதிபதிப் பதவியில் இருந்து அகற்ற கங்கணம் கட்டியுள்ளது. 

Wednesday, July 9, 2025

உலக வல்லரசை உலுக்கிய வெள்ளம்


      அமெரிக்காவின்  மாநிலமான டெக்டாஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 104 பேர் பலியானார்கள்.கெர்  கவுண்டியில் 28 குழந்தைகள் உட்பட 84 உடல்கள்  மீட்கப்பட்டதாக கெர்  கவுண்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 இன்னும் பலரைக் காணவில்லை. அவர்கள்  உயிருடன்  இருப்பார்கள் என்பதர்கான  உத்தரவாதம் எதுவும் இல்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிறிய கார்கள் முதல் கனரக வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. அழகாகக் காட்சியளித்த நிழல் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி  எறியப்பட்டன.

மழை  பெய்யும், புயல் வரும் என எச்சரிக்கை விடுக்கப்படுவது வழமையானதே. ஆனால், மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. புயலைத் தடுக்கும் சக்தி, அல்லது திசை மாற்றும் வல்லமை இல்லை. இயற்கையின்  பேரிடர்களை எதிர்வு கூறலாம். அவற்றை  இல்லாமல் செய்யமுடியாது.

மத்திய கெர்கண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் 25 சென்ரி மீற்றர் மழை பெய்தது.  பல மாதங்கள்  பெய்ய வேண்டிய மழை ஒரே இரவு கொட்டித் தீர்த்தது.

பெய்யாப் பெருமழையால் ஆறு கரை புரண்டு ஓடியது.  ஆற்றைங்கையில் இருந்த கிறிஸ்தவ கோடைகால முகாமில் தங்கி இருந்த சிறுவர்களும்,  பெரியவர்களும்  அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

டெக்டாஸ் மாநிலத்தில் உள்ள  கெர் கவுண்டி, டிராவிஸ் கவுண்டி, பர்னெட் கவுண்டி ஆகிய பகுதிகள்  பெருமளவில் பாதிக்கப்பட்டன.

மழை வெள்ள எச்சரிக்கை   முன் கூட்டியே விடுக்கப்பட்டது.  சில இடங்களில்  தொலை தொடர்பு வசதிகள்  இல்லாமையால் உரிய  இடங்களுக்கு எச்சரிக்கை போய்ச் சேரவில்லை

காம்ப் மிஸ்டிக் போன்ர முகாம்களில் இருந்த மக்கள் வெளியேறுவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

வெள்ள எச்சரிக்கை கிடைத்து மக்கள் வெளி யேறுவதற்கிடையில் வெள்ளம் சூழ்ந்து விட்டது.

டெக்டாஸ் ஹில்  கவுண்டியின்  நிலப்பரப்பும் நீர்வழிப்பாதைகளும் திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் இடமாக அடையாளம் காண்ப்பட்டுள்ளது.

வாரத்தின் தொடக்கத்தில் ஆறு அங்குல மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டதாகவும், ஆனால்,  10 அங்குல மழை பெய்ததால் நிலமை கைமீறிப் போனதாகவும் டெக்சாஸ் அவசர மேலாண்மைப் பிரிவின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார்.

 சமூக ஊடக்க்ன்களில் பகிரப்படும் வீடியோக்கல் அழிவுகளின் உச்சத்தை வெளிப்படுத்துகின்றன. குவாடலூப் ஆற்று  வெள்ளப்பெருக்கால் கரை புரண்டு ஓடியதால் சிலமணி நேரங்கள்  மீட்புப்பணி இடை நிறுத்தப்படது.

அப்பகுதியைல் பெய்யும்  மழைகாரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ள்து.

டெக்டாச் மாநிலத்தின் பாறை உள்ள நிலபரப்பு.அங்கு  நிறைந்துள்ள களிமன் நிலப் பரப்பும் வெள்ளப்பஎருக்குக்குக் கரணமாகும். களிமண்தரை நீரை  உறிஞ்சாது நீர் ஓட்டத்தைத் தூண்டும் தன்மை உடையது.குவாடலூப்   உட்பட அருகில் உள்ள  நதிகளில் கடந்த 100 ஆண்டுகலில் ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஒரு முறை  வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை   5-10 அங்குல மழை பெய்தது.

1.82 அடியாக  இருந்த நீர் மட்டம் சடுதியாக 34.29 அடியாக உயர்ந்தது.

ட்ரம்பின் நிர்வாகம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பட்ஜெட், நிர்வாக ஊழியர் குறைப்பு  என்பன வற்றின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மழை தொடர்ந்து பெய்யும்  என எதிர்பார்க்ப்படுவதால் இன்னொரு வெள்ளப் பெருக்கு  ஏற்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டெக்டாஸ் வெள்ள அழிவு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்ப்பும்

என அறியபடுகிறது.டெக்டாசின் நிலை மோசமாகுவதாக அங்கிருக்கும் தகவல்கள்   தெரிவிக்கின்றன. 

Monday, July 7, 2025

புதிய தலைமுறையுடன் களம் இறங்கும் விஜய்

 

தமிழக அரசியலில் விஜயி  பெயர் பரபரப்பாக அடிப்டுகிறது. நடிகரான விஜய் தன்னை முழுமையான்ம அரசியல் வாதியாக மாற்ற்றிவிட்டார். முதல்வரே, ஸ்டாலினே பதிஒல் சொல் என  ஆவேசமாகப் பேசி கைதட்டல் வாங்கிகிறார்.

பனையீரில் நேற்று நடந்த அவரது கட்சியின் செயற்குழு மாநாடு விஜய்க்கு அரசியல் அங்கீகாரமளித்தது. தமிழகத்தின் முதல் வேட்பாளர் விஜய் என்ற தீர்மானம் நிறவேற்றப்பட்டது. இதனால் ரசிகர்களான கட்சித் தொண்டர்கள்  மகிழ்ச்சியடந்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்ட்னியின் முதலமைச்சர் வேட்பாள‌ர் ஸ்டாலின் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிக தொகுதிகள்  ஒதுக்கப்பட வேண்டும்,  துணை முதலமைச்சர், அமைச்சரவையின்  பங்கு போன்ற உட்பூசல்கள்  இருந்தாலும் கூட்டணி  பலமாக  உள்ளது. பாரதீய ஜனதாவுக்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சிந்தனை  கூட்டனியைப் பலமாக்கி உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி. எடப்பாடி முதலமைச்சர் என அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அமித்ஷாவின் கணக்கு வேறு விதமாக  உள்ளது. தமிழகத்தில் கூட்டனி ஆட்சி. அமைச்சரவையில்  பாரதீயஜனதா இருக்கும் என்கிறார் அமித்ஷா.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இதனை  மறுக்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கு தமிழக மக்கள்  ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  அடுத்த முதலம்மைச்சர்  எடப்பாடி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அடித்துச் சொல்கிறார்கள்.  கூட்டனியின்  முதல்வர் என அமித்ஷா எந்த இடத்திலும் சொல்லவில்லை.

இப்படியான சிக்கல் இருக்கையில் தமிழக மக்கள்  இந்தக் கூட்டணிக்கு வாக்களிபார்களா என்பது கேள்விக்குறி.

இள வயது ரசிகர்களை நம்பி அரசியல் களத்தில்  குதித்த விஜய் தமிழக அரசியலைப் புரட்டிப் போடப்போவதாக சபதம் எடுத்துள்ளார்.தமிழக அரசிலயையும் சினிமாவையும்  பிரிக்க முடியாது. தமிழக அரசியலுடன் பின்னிப் பிணைந்தது சினிமா. அண்ணா, கலைஞர், சிவாஜி,எம்ஜிஆர், எஸ் எஸ் ஆர், கலைவாணர், எம் ஆர் ராதா, கண்ணதாசன், ஜெயலலிதா போன்றவர்கள் நாடகம், சினிமா ஆகிய  கலைகளில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.  நாடகம், சினிமா ஆகியவற்றின்  மூலம் அரசியல் பாடத்தை மக்களுக்குப் புகட்டி வெற்றி பெற்றவர்கள்.

இவர்களுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்குள் நுழைந்தார்கள் யாரும் வெற்றி பெறவில்லை.