Friday, June 20, 2025

இஸ்ரேலின் வான் பாதுகாப்பை சிதைத்த ஈரானின் அரக்கன்

 இஸ்ரேல், ஈரான் போரினால் உலக நடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தது.

  ஈரானின்  கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிக் குறை வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

  இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் , ஜெருசலேம்  ஆகிய நகரங்கள்   ஈரானின் தாக்குதலால்  சிதைந்தன.இஸ்ரேலின் தாக்குதலை ஈரானால் சமாலிக்க் முடியாது என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால் ஈரானின் பதில்தாக்குதல் இஸ்ரேலை அதிரச் செய்தது.

பலம் வாய்ந்த  இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறை ஈரானால் தாக்குதல் நடத்த முடியாது என்றே போர் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸின் தாக்குதலால்  இஸ்ரேலின் வான் பாதுகாப்பு  இரண்டு மாதங்களுக்கு முன்னர்  சிதைத்தது. அதிலிருந்து பாடம் கற்ற இஸ்ரேல் எச்சரிக்கையானது. ஈரானின் ஏவுகளைகளைத்தடுக்க இஸ்ரேலால் முடியவில்லை.

இரானின் அரக்கன் என வர்ணிக்கப்படும் ஹைபர் சுப்பர் சொனிக் ஏவுகளைகள்  இஸ்ரேலின் முக்கிய நகரங்களைச் சிதைத்தன.

     ஹைபர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலிம் மீது  ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்தது.

  இஸ்ரேலுக்கு எதிரான மோதலில்  ஹைபர் சுப்பர்சொனிக்  முதன் முதலில்  பயன்படுத்தப்பட்டது.

 2023 ஆண்டு உலகத்துக்கு  வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு    ஈரானின்  தலைவர் அயதுல்லா அலி கொமேனி தான்  பெயரிட்டார்.

IRGC-யால் உருவாக்கப்பட்டு ஜூன் 2023 இல் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட ஃபட்டா-1, ஒரு நடுத்தர தூர ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

ஈரான்-இஸ்ரேல் போரில் பயன்படுத்தப்பட்ட ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன? 

 ஃபட்டா-1 ஏவுகணை என்றால் என்ன?

IRGC படி, இந்த தாக்குதல் ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-இன் 11வது அலையின் ஒரு பகுதியாகும். ஃபட்டா-1 ஏவுகணை இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் இதை "இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஏவுகணை  மணிக்கு சுமார் 15,000 கிலோ மீற்றர் செல்லும் திறன் கொண்டது.

இது 350-450 கிலோ எடையுள்ள  வெடிமருந்திஅச் சுமந்து செல்லும்.

 இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ரொக்கெற்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

ஆனால், ஈரான் அனுப்பிய  ஹைபர்சோனிக்  ஏவுகளைகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல்  இஸ்ரேலைச் சீரளித்தன.  ஈரானின் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதங்களின் நவீன அரக்கனான சுப்பர்சோனிக் ஏவுகணைகள்   மூலம் உகரைனின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

சண்ண்டையை நிறுத்தும்படியும்சரணடையும் படியும்   ஈரானிடம் ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் சொல்லைக் கேட்ட முடியாது என கொமேனி  பதிலளித்தார்.

கொமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப்  போர்  செய்வார் என அமெரிக்க ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

  வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் ட்ரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்தித்து உரையாடினார்.

  ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில்   இணைவதற்கு  ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக   மூத்த உளவுத்துறை அதிகாரி ,பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துளனர்.சமூக ஊடகங்கள் இதனை விவாதிக்கின்றன.

  ஈரானுக்கு எதிரான  போரில் அமெரிக்கா ஜனாதிபதி   ட்ரம்ப்   இணையும்  வாய்ப்புள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக  செய்தி வெளியாகி உள்ளது. .

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த  ட்ரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.

ரஷ்யாவும்,  வட கொரியாவும்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  போர் செய்தால் நிலமை மேலும் விபரீதமாகும்.

ஈரானின் ஆயுதப் பலம் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக  உள்ளது.

ஈரானுக்கு அருகில் அமெரிக்க இராணுவத் தளங்கள்  உள்ளன.  இந்தப் போர்  இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை   

Wednesday, June 18, 2025

வீழ்ச்சியடைகிறது இலங்கையின் பொருளாதாரம்

இஸ்ரேல் ஈரான்  போர்  உலகில்  பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  யுத்தம் வெடித்த அடுத்த நொடியே  எண்ணெய்  விலை எகிறியது. அதன் தாக்கம்  இலங்கையில் இன்னமும் ஏற்படவில்லை , இது எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியாது . தனது பாதுகாப்புக்காக  ஈரான்  மீது தாக்குதல் நடத்தியதாக  இஸ்ரேல் கூறுகிறது.

 ஈரானின் அணு ஆயுத  உலைகள், விஞ்ஞானிகள்,  தளபதிகள் இஸ்ரேலின்  இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இஸ்ரேல் தாக்கியதால் ஈரான் கையைக்  கட்டிக்கொண்டு இருக்கவில்லை.  ஈரானின் பதில்தாக்குதலால்   இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் பற்றி எரிகின்றன இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம்  இறங்கி உள்ளது.  ஈரானுக்கு ட்ரம்ப்  எச்ச்சரிக்க விடுத்துள்ளார்.

ரஷ்யா,சீனா, அரபு நாடுகள்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   ஈரான், இஸ்ரேல் யுத்தத்தால் வல்லரசுகள்  இரண்டாகி உள்ளன.

  மோதல் அதிகரித்தால் எரிபொருள் விநியோகம், தேயிலை ஏற்றுமதி ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான துறைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எரிபொருள், தேயிலை துறைகளில் உடனடி தாக்கம் ஏற்படவில்லை.  நாளடைவில் பாதிப்பு அதிகமாகலாம்

 இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 20,000 இலங்கையர்களின் பாதுகாப்பு , தெஹ்ரானில் வசிக்கும் சுமார் 50 பேரின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய்,தங்கத்தின் விலை உயர்ந்தது

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியாகும் நாடுகளில் ஈரான் முக்கியமானது.  இந்த நிலை தொடர்ந்தால்  கிழக்கு ஆசியாவில் தேயிலை ஏற்றுமதி  வீழ்ச்சியடையும் அபாயம்  உள்ளது. .

சுமார் 20,000 இலங்கைத் தொழிலாளர்கள் இஸ்ரேலில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் , ஹைஃபா ஆகிய நகரங்களில்  வசிபதாக  இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


 விவசாயம். பராமரிப்பாளர்,  கட்டுமானத் துறை, ஹோட்டல்கள்  உணவகங்கள் தொழிற்சாலை ஆகியவற்ரில் இங்கையர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

 மோதல் தீவிரமானதால் இலங்கைகுத் திரும்பும்  கோரிக்கையை எவரும் விடுக்கவில்லை,  இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள 10 இலங்கையர்கள் அபுதாபியில் சிக்கி உள்ளனர் அவர்களுக்கு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள  இலங்கைத் தூதரகம் உதவி செய்கிறது. 

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லத்தயாரான 600 இலங்கை யரின்  பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் தற்போது மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். கட்டார் , சவுதி அரேபியா, குவைத் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  ஆகியவை அனைத்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 80 சதவீதத்திர் உள்ளனர்.

  கடந்த 20 ஆண்டுகளில், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் நமது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையில் சராசரியாக 80 சதவீதத்தை செலுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 6.5 பில்லியன் டொலரை எட்டியது. இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கில் வேலை செய்கிறார்கள்.   2025 ஏப்ரலில் 646.10 மில்லியன் அமெரிக்க டொலராக  இருந்த இலங்கையின் பண அனுப்பீடுகள் மே மாதத்தில் 641.70 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

. இந்த முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்க முடியாது. மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே அவை நமது நாட்டிற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்புதலில் அதிக சதவீதத்தை வழங்குகின்றன. எனவே, அதன் அந்நியச் செலாவணியின் இந்த முக்கிய ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது இலங்கையின்  கட்டாயமாகும்.

  

ஒட்டுக்குழுவுடன் ஒட்டிஉறவாடும் சந்தர்ப்பவாத அரசியல்


  கொள்கை,கோட்பாடு என்ற அரசியல் மலினப்பட்டு சந்தர்ப்பவாத அரசியல்தலைதூக்கி உள்ளது.

எது நடக்கக்கூடாதொ அதுவெல்லாம் நடது முடிந்துவிட்டது.தேர்தல் காலத்தில் மேடை போட்டி பேசிய      பேச்சுகள்,அடிய ஆட்டங்கள்,சாபங்கள், சபதங்கள் எல்லாம் பொசுக்கென்று போய்விட்டது.இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை ஏமாற்றி விட்டன.  பரம்பரை பரம்பரையாக வாக்களித்தவர்களை  இன்றைய தலைவர்கள் எனச் சொல்பவர்கள் நட்டாற்றில் விட்டுவிட்டனர்.

 10 கட்சிகள், 15 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட்ட போதும்,  தனக்குப் பிடித்தமான சின்னத்துக்கு அல்லது வேட்பாளருக்கு புள்ளடியிட்டவர்கள் ஏமாந்து போயுள்ளனர்.

வேட்பாளர் அல்லது  சின்னம் சரியாக  இருக்கும் என நம்பித்தான் வாக்க்காளர் புள்ளடியிடுவார்.  அந்தப் புள்ளடி, அரசியல் சதுரங்கத்தில் பிழையாகிவிட்டது.

வீட்டுக்கும், சைக்கிளுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்    சங்குக்கு வாக்களித்தார்கள்.

வீட்டை விட்டு வெளியிலை வந்து தனிகுடித்தனம் செய்யும் சங்குக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் சைக்கிளுக்கு வாக்களித்தார்கள். இவர்களுக்கு வீட்டையும்  பிடிக்காது.

 இப்ப சைக்கிளும்,சங்கும் சேர்ந்து விட்டன.

இவர்களை நம்பி வாக்களித்தவர்கள்   நடுத்தெருவில்.

இவர்கள் பதவி ஆசனத்தில் பரம அரசியல் எதிரியான வீணை வீட்டுக்குள்ளை போட்டுது.

முன்னாள் முதலமைச்சர்,  முன்னாள் மேயர் [மான்]   இரண்டு பேரும் வீட்டுக்கை தஞ்சமடைசிருக்கினம்.

சைக்கிளும்,சங்கும்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருகினமாம். 

வாக்களித்த மக்களுக்குத் தெரியாமல் அதென்ன  புரிந்துணர்வு. பதவிக்காகவே புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது மக்களுக்கு நன்றாகப் புரிகிறது.

யாழ்ப்பாண மாநகரசபையை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் தமிழ் அரசுக் கட்சி வென்றுள்ளது.டக்ளஸைத் தேடி  வீடு போனதுதான்  இங்கு  பேசு பொருளாகி உள்ளது. தமிழ்க் கட்சிகள் எவையுடனும் டக்ளஸ்,கருணா,  பிள்ளையான் ஆகியோர் இணைய மாட்டார்கள் என்ற கோட்பாடு தவிடுபொடியாகி  உள்ளது.

வவுனியாவில்    நிலைமை வ்வேறு விதமாக  உள்ளது.அங்கு அங்குக்கும், தபால் பெட்டிக்கும் பதவியைக் கொடுப்பதற்காக வீடும், சைக்கிளும் கைகோர்த்துள்ளன.

 மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சி ஹக்கீமுடன்  இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹக்கீம் துரோகம் செய்துவிட்டதாக பதியுதீன்  புலம்புகிறார்.தமிழ், முஸ்லீம்  பிரிவினைக்கு அங்கு  தூபமிடப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது இலங்கை பூராவும்  இந்த நிலை தான்  உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று இறுமாப்புடன்  இருந்த என்பிபி   உள்ளுராட்சித் தேர்தலில் சறுக்கியது.

ஆட்சியில் இருகும்  மக்கள் ஐக்கிய சக்தியை விட அதிக  உள்ளூராட்சி சபைகளில் எதிர்க் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வென்று மிரட்டியுள்ளன. சுயேட்சைக் குழுக்களுடனும், சிறிய கட்சிகளுடனும் அனுரவின் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சில இடங்களில் டீல் ஓகேயானது.

கொழும்பை அனுரவின் அரசு கைப்பற்றியது. வேறு சில இடங்களில் நம்பியவர்கள் காலை வாரியதால் ஆட்சி அமைக்கம் உடியாத நிலை உள்ளது. 

மக்கள் ஐக்கிய சக்தி 151 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றது.சில சபைகளில்  எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியதால் அட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

கண்டி மாவட்டத்தில் உள்ள கடுகண்ணாவை நகர சபையில் என்பிபி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லை. அங்கு சாதிர்யமாகக் காய் நகர்த்திய  சஜித்  ,அனுரவைத் தோறக்டித்தார். 

குருநாகல் மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டி பிரதேச சபையிலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது.   தேசிய மக்கள் சக்தி 21 இடங்களை வென்றது, ஆனால் மற்ற கட்சிகளும்,, குழுக்களும்  25 இடங்களீல்  வெற்றி பெற்றன.

  தேசிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இரண்டும் கவுன்சில் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தின. . ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்   வெற்றி பெற்றார்.

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வெள்ளிக்கிழமைஇரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அங்கு NPP க்கு 17 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு மொத்தம் 21 இடங்களும் இருந்தன.   சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ச‌ர்வஜன பலய உறுப்பினரின்    பெயர் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்ற காரணத்திற்காக வாக்கெடுப்பு  முன்னர் சபையில் அவர்  இருந்து வெளியேற்றப்பட்டர். இரகசிய  வாக்கெடுப்பில் என்பிபி வெற்றி  பெற்றது.

 கொழும்பிலும், மதவாச்சியிலும் நடைபெற்ற இரகசிய வாக்களிப்பில்  முறைகெடு நடந்ததாக எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன.

ஜனநாயகத் தேர்தல் முறையை அரசியல் தலைவர்கள் கேலிக்கூத்தாக்கி விட்டனர்.  

குப்பை அள்ளவும், லைற்றுப் போடவும், றோட்டுத் திருத்தவும்  இந்தக் கூத்து

ஒரு விரல் புரட்சி வரும் வரை காதிருப்போம்

   

Tuesday, June 17, 2025

தமிழக அரசியலில் குழம்பிய கூட்டணிக் கணக்குகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல்  சூடு பிடித்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலினும், இழந்த ஆட்சியைப் பிடிக்க எடப்பாடியும் வியூகம் வகுக்கின்றனர்.

மெகா கூட்டணி என்ற கோஷம் மட்டுமே எடப்பாடியின் தரப்பில் இருந்து வெளிவருகிறது. ஆனால், எடப்பாடியுடன் கூட்டணி சேர இப்போதைக்கு யாரும் தயாராக இல்லை.

எடப்பாடியின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி என அமித்ஷா சொல்லியுள்ளார்.  ஆனால், அண்ணாமலையின் வாக்கு மூலம் வேறு வகையாக இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை.பாஜக ஆட்சிதான் என அண்ணாமலை திருவாய் மலர்ந்தருளுகிறார். தமிழக முதல்வர் கனவில் எடப்பாடி மிதக்கிறார். எடப்பாடியை எப்படி அடக்குவது என அமித்ஷா கணக்குப் போடுகிறார்.

பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியில் குடும்பச் சண்டை நடைபெறுகிறது. அப்பாவும், மகனும் எட்ட்டிக்குப் போட்டியாக  அறிக்கை விடுகிறார்கள். இருவரும்  ஒற்றூமையாக  இருந்த போதே பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.  குடும்பப் பிரச்சனையால் கட்சி  பிளவுபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி எனபதுபோல்  பிரேமலதா ஒரு கணக்குச் சொல்கிறார். 36 தொகுதிகள்  வேண்டுமாம் ஒரு தொகுதி குறைந்தாலும்  ஒப்புக் கொள்ள மாட்டாராம். ஆனாலும்  கடந்தகாலத்தைப் போல இரண்டு பெரிய கட்சிகளுடனும்  பேரம் பேசுகிறார் பிரேமலதா.

எடப்பாடி   ஏமாற்றி விட்டார் என குற்றம் சுமத்திய  பிரேமலதா  இப்போதைக்கு இறங்கி வருவார் போலத் தெரியாது. எடபாடிக்கும் சுதீஷுக்கும் இடையிலான  பேச்சு வார்த்தையில்  சுமுகமான முடிவு எட்டப்பட்டது. 2026 ஆம் ஆண்டு  ராஜ்யசபா  எம்பி பதவி தரப்படும் என எடப்பாடி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால் அவசரப்பட வேண்டாம் என சிலர் பிரேமலதாவுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எடப்பாடியுடன் இருந்த வாசன் பாரதீய ஜனதாவின் பக்கம் சென்றுவிட்டார்.ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரும் பாரதீய ஜனதாவின்  பக்கம் பலமாக  இருக்கின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு, தினகரனுக்கும் மக்களிடம் செல்வாக்கு  இருக்கிறது. சசிகலாவின் நிலைதான் கேள்விக்குறியாக  இருக்கிறது.

இவர்கள் எல்லோரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கையில் விஜய் சுறுசுறுப்பாக   இயங்குகிறார்.

விஜயுடன் எந்தக் கட்சியும்  இணையவில்லை. ஆனால், மற்றைய  கட்சிகளின்  பிரமுகர்கள் விஜயுடன் கைகோர்த்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயின் கட்சியில்  இணைகிறார்கள்.

ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள் ஆர்.ராஜலட்சுமி,   டாக்டர் ஏ.ஸ்ரீதரன், திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

 ராஜலட்சுமி, சென்னை மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர். இவர் அதிமுக.,வில் இருந்து விலகி பாஜக.,விற்கு சென்று, பிறகு மீண்டும் அதிமுக.,வில் இணைந்தவர். அதே போல் டேவிட் செல்வன் என்பவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர்.

வழக்கமாக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் பெரிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.,க்கள், புதிதாக துவங்கப்பட்ட விஜய் கட்சியில் இருந்துள்ளதை  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜயுடன்  பிரேமலதா  இணையலாம் என்ற‌ ஊகங்கள் வெளியாகின்றன.

பிரேமலதாவிடம் ஊடகவியலாளர்கள்         கேட்ட போது, விஜய் எங்க வீட்டுப் பிள்ளை தான். அரசியல் கூட்டணி நிலைப்பாடு குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன்  கூட்டணி சேர பிரேமலதா விரும்புகிறார். தான் எதிர்பார்க்கு தொகுதிகளை  ஒதுக்க மறுத்தால் தனித்துப்  போட்டியிடப் போவதாகவும் பிரேமலதா சொல்லியுள்ளார்.

தனித்துப் போட்டியிட்டால்  பிரேமலதவால் வெற்றி பெற முடியாது. ஆனால், இன்னொரு கட்சியின் வெற்ரி வாய்ப்பைத் தவிடு பொடியாக்க முடியும்.

ஸ்டாலினுடன்  இருக்கும் திருமாவளவனும், கொம்யூனிஸ்ட்டுகளும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. காங்கிரஸும்  சில வேளை அதிக தொகுதிகளைக் கேட்கும் நிலை ஏற்படலாம்.

தமிழகத்தில் எப்படியும் தாமரையை மலரவைக்க பாரதீய ஜனதா முயற்சி   செய்கிறது. கடந்த வாரம் அமித்ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தார்.

தேர்தலைக் குறிவைத்து முருகன் மாநாட்டை நடத்த பாரதீய ஜனதா திட்டமிட்டுளது. முருக பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கோடு முருகன் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பழனியை தொடர்ந்து   மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 22ம் தேகதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பகல் பகல் 3 மணி துவங்கி, இரவு 8 மணி வரை மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த பிரம்மாண்ட ஆன்மிக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் ஜூன் 10ம் திக‌தி முதல் அறுபடை முருகன் கோவில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அறுபடை முருகனின் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வேல், பக்தர்களின் தரிசனத்திற்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு அம்சமாக கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருமித்த குரலில் பாராயணம் செய்ய உள்ளனர். பிரபலமானவர்களின் ஆன்மிக உரைகள், கலை நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிற்கே உரிய நாட்டுப்புற கலைகளில் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எங்கு இருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றிலுமே் எல்இடி திரைகள் அமைக்கப்பட உள்ளன. மாநாட்டு வளாகத்தில் ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

 கடைசியில்  முருகனிடன் சரணடைந்தது  பாரதீய ஜனதாக் கட்சி. 

ரமணி

15/6/25

 

அமெரிக்காவில் கிளப் உலகக்கிண்ணப் போட்டி

உலக  உதைபந்தாட்டத்தில்  தரவரிசையில்  முன்னணியில் உள்ள 32 அணிகள் பங்கேற்கும் பீபாகிளப் உலகக்  கிண்ணபபோட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது.   மியாமியில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில்  ஜூன் 14 ஆம் திகதி கிளப் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகிறது.

டேவிட் பெக்காமின் இணை உரிமையாளரும் லியோனல் மெஸ்ஸியின் தலைவருமான மேஜர் லீக் கால்பந்து அணியான இன்டர் மியாமி, மியாமி கார்டன்ஸில் ஆப்பிரிக்க சம்பியன் அல் அஹ்லிக்கு எதிராக  முதல் போட்டியில் விளையாடுகிறது.

ஆப்பிரிக்கா: 4  அணிகள்.

ஆசியா: 4   அணிகள்.

ஐரோப்பா: 12 அணிகள்.

வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன்: 4 கான்காகாஃப் அணிகள்

ஓசியானியா: 1  அணி.  .

தென் அமெரிக்கா: 6  அணிகள்

குழு A: பால்மீராஸ், எஃப்சி போர்டோ, அல் அஹ்லி, இன்டர் மியாமி

குழு B: பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், அட்லெடிகோ மாட்ரிட், போடாபோகோ, சியாட்டில் சவுண்டர்ஸ்

குழு C: பேயர்ன் முனிச், ஆக்லாந்து நகரம், போகா ஜூனியர்ஸ், பென்ஃபிகா

குழு D: ஃபிளமெங்கோ, எஸ்பரன்ஸ் ஸ்போர்டிவ் டி துனிசி, செல்சியா, கிளப் லியோன்

குழு E: ரிவர் பிளேட், உராவா ரெட் டயமண்ட்ஸ், மோன்டெர்ரி, இன்டர் மிலன்

குழு F: ஃப்ளூமினென்ஸ், போருசியா டார்ட்மண்ட்,உல்சன்,

          மாமெலோடி  சன் டோன்ஸ்

குழு G: மான்செஸ்டர் சிட்டி, வைடாட், அல் ஐன், ஜுவென்டஸ்

குழு எச்: ரியல் மாட்ரிட், அல் ஹிலால், பச்சுகா, சால்ஸ்பர்க்

ஜஸ் 

  கிளப் உலகக்  கிண்ணப் போட்டிகான  தனது அணியை இன்டர் மியாமி புதன்கிழமை அறிவித்தது, அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அணியை வழிநடத்த உள்ளார். 

இன்டர் மியாமி ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை அணி

கோல்கீப்பர்கள்: டிரேக் காலன் டெர், ரோக்கோ ரியோஸ் நோவோ, ஆஸ்கார் உஸ்டாரி, வில்லியம் யார்ப்ரோ

டிஃபெண்டர்கள்: ஜோர்டி ஆல்பா, நோவா ஆலன், டோமஸ் அவிலெஸ், இஸ்ரேல் போட்ரைட், மாக்சிமிலியானோ ஃபால்கான், இயன் ஃப்ரே, கோன்சாலோ லுஜான், டைலர் ஹால், டேவிட் மார்டினெஸ், ரியான் மாலுமி, மார்செலோ வெய்காண்ட்

மிட்ஃபீல்டர்கள்: யானிக் பிரைட், செர்ஜியோ புஸ்கெட்ஸ், பெஞ்சமின் கிரெமாச்சி, சாண்டியாகோ மோரல்ஸ், ஃபெடரிகோ ரெடோண்டோ, பால்டாசர் ரோட்ரிக்ஸ், டேவிட் ரூயிஸ், டெலஸ்கோ செகோவியா

முன்கள வீரர்கள்: லியோ அபோன்சோ, தடியோ அலெண்டே, லியோனல் மெஸ்ஸி, ஆலன் ஒபாண்டோ, ஃபாஃபா பிகால்ட், லூயிஸ் சுரேஸ் 

ரமணி

15/6/25

சிலி உதைபந்தாட்ட பயிற்சியாளர் இராஜினாமா

 உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில்  பொலிவியாவிடம் 2-0 என்ற   கோல் கணக்கில் சிலி அணி தோல்வியடைந்ததை அடுத்து, தலைமை பயிற்சியாளர் ரிக்கார்டோ கரேகா இராஜினாமா செய்தார்.  இந்தத் தோல்வியின்  மூலம்  2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை சிலி இழந்தது..

  தென் அமெரிக்க தகுதிப் போட்டியில் சிலி அணி 10வது தோல்வியை சந்தித்தது. 10 நாடுகள் கொண்ட  குழுவில் சிலி அணி கடைசி இடத்தில் உள்ளது.  பிளேஆஃப்  வாய்ப்பையும் இழந்தது.

  2024 ஆம் அண்டு  ஜனவரியில் ரிக்கார்டோ கரேகா பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்றார்.அவருடைய தலைமையில்  13 போட்டிகளில் விளையாடிய சிலி  ஒரே ஒரு போட்டியில் மட்டும்  வெற்றி பெற்றது.

2015 , 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோபா அமெரிக்கா பட்டங்களை வென்ற சிலி, 2018,2022 ஆம் ஆண்டுகளில்  உலகக்கிண்ணப் ஓட்டியில் விளையாடத் தகுதி  பெறாத சிலி   தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்  கிண்ணப் போட்டியைத்  தவற விடுகிறது.

Monday, June 16, 2025

உலகக்கிண்ணப் போட்டிக்குத் தயாரான அமெரிக்க நகரங்கள்

 உலகக் கிண்ண  உதைபந்தாட்டப் போட்டி நடை பெறுவதற்கு முன்னதாக  அமெரிக்காவின் 11 போட்டிகளை நடத்தும் நகரங்களின் பிரதிநிதிகள், இந்தப் போட்டி கலாசார சமத்துவம் , உள்கட்டமைப்பு முதல் இளைஞர் விளையாட்டு அணுகல் வரை நீண்டகால சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள பேலி சென்டர் ஃபார் மீடியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு குழுவில், கலாசார உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல், இளைஞர் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொது உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை ஹோஸ்ட் நகர அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.

மிகவும் விரிவான முயற்சிகளில் ஒன்று சியாட்டிலின் சீன அமெரிக்க கலை மரபு திட்டம் ஆகும், இது நகரத்தின் சீனாடவுன்-சர்வதேச மாவட்டத்தில் சீன அமெரிக்கர்களின் வரலாற்று பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட 250,000 அமெரிக்க டொலர் நகர நிதியுதவி திட்டமாகும்.

மற்ற நகரங்களும் இதேபோன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட அணுகுமுறைகளை எடுத்து வருகின்றன. லொஸ் ஏஞ்சல்ஸ் சமூக இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது; மியாமி கலாசார ரீதியாக மூழ்கடிக்கும் ரசிகர் விழாவை நடத்துகிறது; கன்சாஸ் நகரம் ஒரு புதிய பிராந்திய போக்குவரத்து மாதிரியை முன்னோட்டமாக உருவாக்குகிறது; டல்லாஸ் இளைஞர் கால்பந்து உள்கட்டமைப்பு , ஊடக திறனில் முதலீடு செய்கிறது.

போட்டியின் போட்டி கட்டமைப்பை  பீபா  மேற்பார்வையிடும் அதே வேளையில், அமெரிக்க நகரங்கள் நிகழ்வை உள்ளடக்கியதாகவும் உள்ளூர் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துகின்றன. இலவச பொதுப் பார்வை மண்டலங்கள், அடிமட்ட கூட்டாண்மைகள் , பிராந்திய பிராண்டிங் முயற்சிகள் ஆகியவை உலகக் கோப்பையை நீண்டகால குடிமை நலனுக்கான தளமாகப் பயன்படுத்துவதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.

2026 போட்டி அமெரிக்கா, கனடா ,  மெக்சிகோ  ஆகிய மூன்று நாடுகளில்  16 நகரங்களில் நடைபெறும், இறுதிப் போட்டி உட்பட 60 போட்டிகளை அமெரிக்கா நடத்துகிறது. 

கருவுறுதல் நடைமுறைகளுக்கு உட்படும் வீராங்கனைகளுக்கு சிறப்பு சலுகை


 கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைக்கு உட்படுத்த விரும்பும்  வீராங்கனைகள் விளையாட்டிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட தரவரிசையுடன் போட்டி நடவடிக்கைகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று பெண்கள் டென்னிஸ் நிர்வாகக் குழு ( WTA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பெண் விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்ப இலக்குகள் , தொழில் லட்சியங்களை சமநிலைப்படுத்துவதை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய விதி, WTA முதல் முறையாக வீரர்களுக்கு 12 மாதங்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை வழங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு வருகிறது.

"புதிய விதியின்படி,  வீராங்கனைகள்  தொழில்முறை டென்னிஸிலிருந்து முட்டை அல்லது கருவை உறைய வைப்பது போன்ற கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நேரத்தை ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட தரவரிசையுடன் பாதுகாப்பாக போட்டிக்குத் திரும்பலாம்" என்று ந்டா   அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"தகுதியுள்ளவ‌ர்கள் சிறப்பு நுழைவு தரவரிசை (SER) பெறுவார்கள், இது அவர்களின் போட்டிக்கு வெளியே உள்ள காலம் தொடங்குவதற்கு எட்டு வாரங்களுக்கு முந்தைய WTA தரவரிசையின் 12 வார சராசரியின் அடிப்படையில் மூன்று போட்டிகளில் நுழையப் பயன்படுத்தப்படலாம்." 

2017 யுஎஸ் ஓபன் சம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், முட்டை உறைபனியை ஒரு பாதுகாக்கப்பட்ட தரவரிசை நடவடிக்கையாக அங்கீகரிக்க வேண்டும் என்று முன்னர்  கோரிக்கை  விடுத்திருந்தார். புதன்கிழமை அறிவிப்பை "புதிய" நடவடிக்கை என்றும் அழைத்தார்.

சவூதி பொது முதலீட்டு நிதியத்தால் வழங்கப்படும் WTA மகப்பேறு நிதியத்தின் மூலம்,  வீராங்கனைகள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு,கருவுறுதல் பாதுகாப்பு மானியங்களைப் பெறுவார்கள் என்றும் WTA தெரிவித்துள்ளது.  

Friday, June 13, 2025

இலங்கை யுத்தத்தில் போர்க்குற்றம் ஆரம்பமானது விசாரணை


 விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இங்கிலாந்து கூலிப்படையினர் போர் புரிந்ததாக குற்றம் சுமத்தி  அவர்கள்  மீது  போர்க்குறா விசாரணை நடைபெறுவதை இங்கிலாந்து  உறுதிப்ப்டுத்தியுள்ளது.

 புலிகளுக்கு எதிரான  இறுதிக் கட்ட யுத்தத்தில்     ஆயுதம், ஆலோசனை என்ற போர்வையில் உலக நாடுகள் பல  இலங்கைக்கு ஆதரவளித்தன.  

புலிகளுகு எதிரான யுத்தத்தில்  வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் மிக அதிகமாகப்பாதிக்கப்பட்டனர். தரை,விமானம், கடல் வழித்தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நிராயுதபாணிகளாக பலர் பலியாகினர். சிலர் காயங்களுடனும் ஆறாத வடுக்களுடனும் இன்று நடைப்பிணமாக வாழ்கின்றனர்.

புலிகளுக்கு எதிரான  போரில் இலங்கை இராணுவத்துடன்  இணைந்து  இங்கிலாந்தின்  முன்னாள் சிறப்பு விமானப் படையினரும், கூலிப்படையினரும்  போர் புரிந்ததாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

 அந்தக் குற்றச் சாட்டைப் புறந்தள்ளாமல் தீவிர விசாரணை நடைபெறுவதாக இங்கிலாந்து அரசாங்கம்  உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ் காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனின்  கேள்விக்கு பதிலளித்த  வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின்  வெஸ்ட் இதனை உறுதிப் படுத்தினார்.

இலங்கையில் நடந்த மோதலின்  போது  போர்க்குற்றங்கள் நடந்ததாகக் கூறபடும் குற்றச்சாட்டை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம். வெளியுறவு,காமன் வெல்த்,  மேம்பாட்டு அலுவலகம் என்பன விராசணைகளுக்கு உதவின.ஆனாலும்  கூடுதல் தகவல் கிடைக்கவில்லை என கேத்தரின்  வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கூலிப்படையினர் 1980 களில்  இலங்கையில் செயல்படத் தொடங்கினார்கள். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது பற்றிய விசாரணைக்ள ஆரம்பமாகின.

 கீனி  மீனி என்ற கூலிப்படை நிறுவனம் 1980 களில் செயற்பட்டது. சிறப்பு விமானப்படை அதிகரியான மேயர் டேவிட் வாக்கர் அதனுசன்  இணைந்து செயலாற்றினார்.அந்தக் கூலிப்படை நிறுவனத்தின் மீது  போர்க்குற்ற விசாரணை நடைபெறுகிறது. STF எனப்படும் இலங்கையின் இராணுவத்துடன்  இணைந்து  இங்கிலாந்தின் கூலிப்படை நிறுவனம் செயற்பட்டது.

இலங்கையின் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு  கூலிப்படை நிறுவனமும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

 இலங்கையில் மனித  உரிமைகளை  நலைநாட்டுவதற்கு இங்கிலாந்து     உறுதியக இருப்பதாக வெளியுறவு அமைச்சர்  வெஸ்ட் கூறினார்.

மனித      உரிமைகளி மீறிய நான்கு இலங்கையருக்கு இங்கிலாந்து தடை விதித்ததை அவர் ஞாபகப்படுத்தினார். 

இலங்கையில் போர்க்குற்றம் செய்ததாகக் கூறப்படும்  கீனி மீனி சர்வீஸ்பற்றிய ஆவனங்களை வெளியிடத்தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலண்டனில் நடைபெற்ற தீர்ப்பாய விசாரணையின்  பின்னர் அந்த ஆவணங்கள்  பகிரங்கப்படுத்தப்பட்டன.

அந்த ஈரகசிய ஆவணங்கள்  2025 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பகிரங்கப்படுத்தப்பட்டன. சுமார் 30 வருடங்களாக ஆவணங்கள் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

அந்த ஆவணங்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முந்தியவை. அன்றைய பிரதமர்  மார்க்கிரட் தட்சரின்  இலங்கை விஜயத்தின் காலம் அது.  1980 அம் ஆண்டு  கீனி மீனி என்ற கூலிப்படை நிறுவனம்  இலங்கை அரசுடன்  ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்தின் முன்னாள் சிறப்பு விமானபப்டையினர் கீனி மீனியில் பணியாற்ரினார்கள்.

அவர்கள்  இலங்கைப் படையினருக்கு பயிற்சியளித்தனர். போர்  நடவடிக்கையில்  உதவினர்.  கீனி மீனி  உறுப்பினர் ஹெலிகொப்டர் விமானியாகச் செயற்பட்டார். ஹெலிக்கொப்டரில் இருந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டுகளுக்கு கூலிப் படையினர்  பதிலலிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற மனித  உரிமை மீறல்களுக்கு இங்கிலாந்து கூலிப்படையினரும்  காரணமாகினர்.  அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கிரட் தட்சரும் இதனை நன்கு அறிந்திருந்தார். கொழும்புக்கு பிரிட்டனின்  இராணுவ             உதவி பற்றியும் தாட்சருக்கு விளக்கப்பட்டது.

 இலங்கையில் கிளர்ச்சிய அடக்குவதற்கு இங்கிலாந்து செய்த  உதவி போதுமானதல்ல்ல என அன்றைஇய பிரதமர் தட்சர் கூறியதாக அவரது  உயர் வெழ்ளியுறவுக்கொள்கை ஆலோசகர் சார்லஸ் பவர்வ் எலியிட்ட குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான விசாரனைகளை 2020 ஆம் ஆண்டு  பெரு நகர காவல்துறை  விசாரணை செய்கிறது.

பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதிய  புத்தகம்  போர்க்குற்ற விசாரனையைத் தூண்டியது.

1980 களில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கு இங்கிலாந்து பொறுப்பேற்ற முடியுமா என்ற  ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

 கூலிப்படை மீதான  போர்க்குற்ற விசாரணைஅது மிக பரியதொரு அதிர்ச்சிய ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம்  இல்லை.

  

பிரெஞ்சு ஓபனில் NO 1 ஐ வீழ்த்திய NO 2

 பிரான்சின் பாரிஸில் உள்ள ரோலண்ட் கரோஸில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்   மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இரண்டாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவை 6-7 (5), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற சபலென்கா, 5-4 என்ற முன்னிலைக்குப் பிறகு தனது சர்வீஸில் முதல் செட்டை வெல்ல ஒரு சிறந்த வாய்ப்பைப் பெற்றார், ஆனால் காஃப் விடாமுயற்சியுடன் டை-பிரேக்கரை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டை-பிரேக்கரின் ஆரம்பத்தில் காஃப் ஆதிக்கம் செலுத்திய போதிலும், சபலென்கா மீண்டும் வந்து முதல் செட்டை 7-6 (5) என்ற கணக்கில் வென்றார்..

2023 அமெரிக்க ஓபன் சாம்பியனான காஃப் விரைவாக மீண்டு இரண்டாவது செட்டை 6-2 என வென்ற பிறகு, 21 வயதான அமெரிக்க வீரர் இறுதி செட்டில் வலுவாக நுழைந்து 6-4 என வெற்றியை உறுதி செய்தார்.