Saturday, February 28, 2015

வெற்றிக்கான போட்டி

உலகக்கிண்ண முதல் சுற்றில் இன்று மோதும் இங்கிலாந்து இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இன்றைய போட்டி மிக முக்கியமானதாகும். இன்றைய போட்டியின் வெற்றிதான் காலிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கும்

பலம் மிக்க அவுஸ்திரேலியா நியூஸிலாந்து ஆகியவற்ருடனான போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து ஸ்கொட்லாந்தை வென்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.

பலமான நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் ஆகியவற்றை வென்று நான்கு புள்ளிகளுடன் உள்ளது இலங்கை

இங்கிலாந்தும் இலங்கையும் பலமான நாடுகளிடம் தோல்வியடைந்தன. இன்றைய‌ போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த‌ போட்டிகளில் நெருக்க‌டி இன்றி விளையாட‌லாம்.    இன்றைய வெற்றி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றை வெல்வதற்குரிய தற் துணிவைக்கொடுக்கும்.போட்டிக‌ளிலும் க‌ட்டாய‌மாக‌ வெற்றி பெற‌ வேண்டுஇய‌ இக்க‌ட்டான‌ நிலையில் உள்ள‌து இங்கிலாந்து.



இல‌ங்கையும் இன்றைய‌ போட்டியில் க‌ண்டிப்பாக‌ வெற்றி பெற‌ வேண்டும் இன்று தோல்விய‌டைந்தால் அவுள்திரேலியாவுட‌னான‌ போட்டி மிகுந்த‌ நெருக்க‌டியைக்கொடுக்கும். ஸ்கொட்லாந்தை மிக‌ இல‌குவாக‌ இல‌ங்கை வீழ்த்திவிடும் கால் இறுதி வாய்ப்பை உறுதிப்ப‌டுத்தும்  போட்டியில் இங்கிலாந்தும் இல‌ங்கையும் ச‌ந்திக்கின்ற‌ன‌.

Thursday, February 26, 2015

பரபரப்பான போட்டி

 உலகக்கிண்ண போட்டியைஇணைந்து நடத்தும் நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதும் நாளைய போட்டி பாரபரப்பு மிகுந்ததாக இருக்கும். உலகக்கிண்ணத்தைக் குறி வைத்துள்ள இரண்டு நாடுகளும் முதல் சுற்றில் சந்திக்கின்றன.

இலங்கை,இங்கிலாந்து ஆகிய பலமான நாடுகளையும் பலம் குறைந்த ஸ்கொட்லாந்தையும் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தி லுள்ளது நியூஸிலாந்து. இங்கிலாந்துடனான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. மழை காரணமாக பங்களாதேஷுடனான போட்டி கைவிடப்பட்டது. புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 துடுப்பாட்டம் பந்து வீச்சு ஆகியவற்றில் ஆக்ரோசம் நிறைந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டியின் முடிவை முன்கூட்டியே கணிக்க இயலாது.  நியூஸிலாந்து வெற்றி பெற்றால் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் இலங்கையை பிந்தள்ளி  இரண்டாவது இடத்துக்கு முன்னேறும்  தோல்வியைக்காணாத இரண்டு நாடுகளில் ஒன்று இன்று தோல்வியடையும்.

பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா ஆகியவற்றுடனான      போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தி லிருக்கும் இந்தியா வெற்றி பெறும் நம்பிக்கையில்    ஐக்கிய அரபுஎமிரேட்ஸை சந்திக்கிறது.சிம்பாப்வே அயர்லாந்து ஆகியவற்றிடம் தோல்வியடைந்த  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்நம்பிக்கை இன்றி 
 களம் இறங்க உள்ளது.ஓட்ட எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இந்தியாவுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

முன்னேறுவதற்கான போராட்டம்

மேற்கு இந்தியத்தீவுகளும் தென்.ஆபிரிக்காவும் நாளை பலப்பரீட்சையில் இறங்க உள்ளன. அயர்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்தியத்தீவுகள் பாகிஸ்தானையும் சிம்பாப்வேவையும் வென்று நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவிடம் தோல்வியடைந்து சொம்பாப்வேயை வென்று இரண்டு புள்ளிகளுடன் தென் ஆபிரிக்கா நான்காவது இடத்தில் உள்ளது.நாளய போட்டியில் வெற்றிபெற்றால் மேற்கு இந்தியத்தீவுகள் முதலிடத்துக்கு முன்னேறும் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்தைப்பிடிக்கும் ஓட்ட விகிதம் அதிகமானால் இரண்டாவது இடத்தைப்பிடிக்கலாம். ஓட்டவிகிதம் மைனஸில் இருப்பதால் இரன்டாவது இடம் சாத்தியமில்லை.

மேற்கு இந்தியத்தீவுகளின் அதிரடி மற்றைய நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவுடனான போட்டி மேற்கு இந்தியத்தீவுகளுக்கு கடுமையானதாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை அது ஊதித்தள்ளி விடும் 

வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் தென் ஆபிரிக்கா உள்ளது.  இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற  அயர்லாந்தை கடக்க வேண்டிய து முக்கியமானது. அடுத்து அச்சுறுத்தும் அயர்லாந்தைதும் பதுங்கும் பாகிஸ்தானையும் சந்திக்க வேண்டும் பதுங்கும் பாகிஸ்தான் பாய்ந்து விட்டால் ஆபத்துதான்.ஐக்கிய அரபு எமிரேட்ஸை வெல்வதற்கு எந்ததிட்டமும் தேவை இல்லை.


Wednesday, February 25, 2015

வெற்றியைநோக்கிய பயணம்

பங்களாதேஷ் இலங்கை ஆகியவற்றுக்கிடையே நாளை நடைபெறும் போட்டி இரண்டு நாடுகளுக்கும் மிக முக்கியமானது.  பங்களாதேஷ்  மூன்று புள்ளைகளுடன் மூன்றாவது இடத்திலும் இரண்டு புள்ளிகளுடன் இலங்கை நான்காவது இடத்திலும் உள்ளன.மூன்றாவது இடத்தி லிருந்தால்தான் பாதுகாப்பு இல்லைய்ர்ர்ல் இங்கிலாந்து இடையில் புகுந்து விடும் ஆபத்து உள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கை மிகவும் கஷ்டப்பட்டு ஆப்கானிஷ்தானை வென்றது. மழைகாரணமாக அவுஸ்திரேலியாவுடனான போட்டி கைவிடப்பட்டதால் வர்ணபகவானின் அருளால் பங்களாதேஷுக்கு  ஒரு புள்ளி கிடைத்தது. இலங்கையை வென்றுவிட்டால் அடுத்து இங்கிலாந்துடனும் நியூஸிலாந்துடனும் பங்களாதேஷ் மல்லுக்கட்ட வேண்டும் . ஸ்கொட்லாந்தை வீழ்த்தும் நம்பிக்கை பங்களாதேஷிடம் உள்ளது.

இலங்கையின் நிலை மிக சிக்கலாக உள்ளது. பங்களாதேஷை வென்றாலும் இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் அச்சுறுத்தலாக உள்ளன.    அடுத்தபோட்டிகள் எல்லாமே சவாலானதுதான்.  நியூஸிலாந்துடனும் அவுஸ்திராலியாவுடனும் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இலங்கையுடனான போட்டி இங்கிலாந்துக்கு சவாலான தாக இருக்கும் பங்களாதேஷையும் ஆப்கானிஸ்தானையும் வென்றுவிடலாம் என இங்கிலாந்து நம்பிக்கொண்டிருக்கிறது.
 ஆப்கானிஸ்தானுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் எதிரான இன்னொருபோட்டி முக்கியத்துவம் அற்ற போட்டியாகும்.  உலக்ககிண்ணப்போட்டியில்   வெற்றிபெற்ற அணி என்ற பெருமை    வெற்றி பெறும்    நாட்டுக்கு கிடைக்கும்


Saturday, February 21, 2015

அதிர்ச்சியான உலகக்கிண்ணப்போட்டி

  
அவுஸ்திரேலியா ,நியூஸிலந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெற்போட்டி அதிர்ச்சியான முடிவுகளைத்தந்துள்ளன.பலம் வாய்ந்த வையாகக்கருதப்பட்ட இங்கிலாந்தும் பாகிஸதானும் விளையாடிய இரண்டுபோட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசிக்குத்தள்ள‌ப்பட்டுள்ளன.துச்சமாகக்கருதப்பட்ட ஸிம்பாப்வே தென்.ஆபிரிக்காவை ஆட்டம் காட்டி மேற்கு.இந்தியத்தீவுகளை வீழ்த்தியது.


உலகக்கிண்ணகிரிக்கெற்டின் முதல்சுற்றில் 42போட்டிகள் எஅடபெறும்.எஆன்கு காலிறுதிகள்.இரன்டுஅரைஇறுதிகள்முடிந்ததும்இறுதிப்போட்டிநடைபெறும் நியூஸிலாந்து,அவுஸ்திரேலியா,பங்களாதேஷ்,இலங்கை,ஆப்கானிஸ்தான்,ஸ்கொட்லாந்து,இங்கிலாந்து ஆகியன ஏ பிரிவிலும் இந்தியா,மேற்கு.இந்தியத்தீவுகள்,தென்.ஆபிசிக்கா,அயர்லாந்து,ஸிம்பாப்வே,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,பாகிஸ‌தான் ஆகிய‌ன‌ பீ பிரிவிலும் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.

நியூஸிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் ஆர‌ம்ப‌போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. நியூஸிலாந்தை எதிர்த்து இல‌ங்கையும் அவுஸ்திரெரெலியாவை எதிர்த்து இங்கிலாந்தும் ஆர‌ம்ப‌ப்போட்டிக‌ளில் விளையாடின‌. நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற‌ன‌. ஏ பிரிவில் நியூஸிலாந்து மூன்று போட்டிக‌ளில்விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிக‌ளுட‌ன் முத‌ல் இட்த்தில் உள்ள‌து. அவுஸ்திரேலியாவும் ப‌ங்க‌ளாதேஷும் த‌லா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற‌ன‌.இஅர‌ண்டு ந்ந்டுக‌ளுக்கும் இடையேயான‌ பொட்டி ம‌ழைகார‌ண‌மாக‌ கைவிட‌ப்ப‌ட்ட‌த‌னால் இர‌ன்டு நாடுக‌ளுக்கும் த‌லா ஒரு புள்ளி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.  த‌லா மூன்று புள்ளிக‌ளுட‌ன் அவுஸ்திரேயாவும் ப‌ங்களாதேஷும் முறையே இர‌ண்டாம் மூன்றாம் இட‌ங்க‌ளில் உள்ள‌ன‌.இல‌ங்கை,ஆப்கானிஸ்தான்,ஸ்கொட்லாந்து ஆகிய‌ன‌ த‌லா ஒரு போட்டியில் விளையாடி  தோல்விய‌டைந்து புள்ளிபெறாதுள்ள‌ன‌. இர‌ண்டு போட்டிக‌ளிலும் தோல்விய‌டை‌ந்த‌ இங்கிலாந்து க‌டைசி இட‌த்தில் உள்ள‌து.

ஆப்கானிஸ்தானையும் ஸ்கொட்லாந்தையும் இங்கிலாந்து வீழ்த்திவிடும் ஆனாலும் கால் இறுதிக்கு போவது மிக‌வும் க‌டின‌மான‌தாக‌ இருக்கும்.இல‌ங்கை அல்ல‌து ப‌ங்களாதேஷை வீழ்த்தினால்தான் கால் இறுதியில் விளை‌யாட‌ சில‌ வேளை ச‌ந்த‌ர்ப்ப‌ம்  கிடைக்கும்.

இல‌ங்கை த‌ன்து வெற்றிக்க‌ண‌க‌கி இன்ன‌மும் ஆர‌ம்பிக்க‌வில்லை. ப‌ங்க‌ளாதேஷுக்கு ஒரு புள்ளி கிடைத்த‌து சாத‌க‌மா பாத‌க‌மா தெரியாது.   இந்தியாமேற்கு.இந்திய‌த்தீவுக‌ள்,தென்.ஆபிரிக்கா,அய‌ர்லாந்து,ஸிம்பாவ்வே, ஐக்கிய‌ அர‌பு எமிரேட்ஸ், பாகிஸ்தான் பீ பிரிவில் வ‌ரிசையாக‌ உள்ள‌ன‌.இந்தியா,தென்.ஆபிரிக்கா, அய‌ர்லாந்து,சிம்பாவ்வே,ஆகிய‌ன‌ த‌லா ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ள‌ன‌. மேற்கு.இந்திய‌த்தீவுக‌ள்  ஒரு வெற்றியுட‌னும் ஒரு தோல்வியுட‌னும் உள்ள‌து ஐக்கிய அர‌புஎமிரேட்ஸ் ஒருபோட்டியில் விளையாடி தோல்விய‌டைந்துள்ள‌து.  பாகிஸ்தான் இர‌ன்டு போட்டிக‌ளிலும் தோல்விய‌டைந்து க‌டைசி இட‌த்தில் உள்ள‌து.

இந்தியா,மேற்கு.இந்திய‌த்தீவுக‌ள்,தென்,ஆபிரிக்கா, அய‌ர்லாந்து,சிம்பாப்வே,ஆகியன‌ த‌லா இர‌ண்டு புள்ளிகளுட‌ன் முத‌ல் ஐந்து இட‌ங்க‌ளில் உள்ள‌ன‌.பாகிஸ்தானின் நிலை மிக‌ மோச‌மாக‌ உள்ள‌து.ஐக்கிய‌ அர‌பு ர்மிரேட்ஸைத்த‌விர‌ ஏனைய‌ அனைத்து மிக‌வும் ப‌ல‌மான‌ நிலையில் உள்ள‌ன‌.தென் ஆபிரிக்காவை ஆடிப்ப‌டைத்த‌ சிம்பாவ்வேயும் மேற்கு இந்தியாவைத்தோற்க‌டித்த‌ அய‌ர்லாந்து என்ன‌ செய்ய‌ப்போகின்ற‌ன‌ என‌த்தெரியாது.


உல‌க‌க்கிண்ன‌ப்போட்டிக‌ளில் இந்தியாவை பாகிஸ்தானும் நியூஸிலாந்தை இங்கிலாந்து வீழ்த்திய‌தில்லை என்ற‌ வ‌ர‌லாறு நிரூப‌ண‌மமாகியுள்ள‌து. இல‌ங்கையை நியூஸிலாந்து வீழ்த்திய‌தில்லை என்ற‌ வ‌ர‌லாறு மாற்ற‌ப்ப‌ட்ட‌து. தென் ஆபிரிக்காவை இந்தியா வென்ற‌‌தில்லை என‌றா வ‌ர‌லாற்றுக்கு இன்று முடிவு கிடைக்கும்.

Monday, February 9, 2015

மங்கிய நட்சத்திரங்கள்

தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது.
 தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முறையற்ற பந்து வீச்சு என்ற குற்றச்சாட்டு திறமையான வீரர்களை முடக்கியது. நம்பிக்கைதரும் நட்சத்திர வீரர்களாக மின்னிய வீரர்கள் மதிப்பிழந்து செல்லாக்காசாகி விட்டனர். உலகக்கிண்ன சம்பியனான இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்காளிகளான ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங் ஆகிய மூவரும் அணியில் தமக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என நம்பி ஏமாந்துபோனார்கள்.
டுவென்டி 20, ஒருநாள் போட்டி ஆகிய இரண்டிலும் அசத்திய யுவராஜ் சிங், நொந்து போயுள்ளார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் 362 ஓட்டங்கள் அடித்து 15 விக்கெட்களை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை பெற்றவர் யுவராஜ் சிங். அடுத்த உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. சகலதுறை வீரரான யுவராஜ் ஓரம் கட்டப்பட்டார். டுவென்டி 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி அவரின் வாழ்க்கையை திசை திருப்பியது. இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை யுவராஜ் சிங்கின் விளையாட்டு தகர்த்தது. விளயாடக்கூடிய உடல் தகுதி அன்று அவருக்கு இருக்கவில்லை. ஆனாலும் களமிறக்கப்பட்டு பலிக்காடாவாக்கப்பட்டார். இந்தியா உலகக் கிண்னத்தை பெற கம்பீரின் விளையாட்டும் ஒரு காரணம். ஷேவாக்கும் சச்சினும் ஆட்டமிழந்ததும் இந்தியாவின் தோல்வி உறுதி என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தோல்வி முகத்தைச் சகிக்க முடியாத இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு படுத்து விட்டார்கள். கம்பீரின் எழுச்சி இலங்கை வீரர்களைத் திணறடித்தது. உலகக் கிண்ணத்தை வென்ற ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன் சிங், சஹீர்கான், நெஹ்ரா ஆகியோர் அணியில் இல்லை. சச்சின் ஓய்வுபெற்றுவிட்டார். ஸ்ரீநாத் ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியுள்ளார். டோனி, கோஹ்லி, ரெய்னா, அஸ்வின் ஆகிய நால்வர் மட்டும் அணியில் உள்ளனர். ஏனையவர்கள் புதியவர்கள். மேற்கிந்தியத் தீவுகளின் ஆதிக்கம் 1970களில் மிக அதிகமாக இருந்தது. அந்த அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவதென்பது மிகக்கடினமானது





 1975-79 களில் உலகக்கிண்ண சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளின் கிரிக்கெட் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. 1983ஆம் ஆண்டு அரையிறுதிவரை முன்னேறியது. டுவென்டி 20 முன்னாள் சம்பியன் என்ற சொற்பபெருமையுடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தயாரான மேற்கிந்தியத்தீவுகளின் நட்சத்திர வீரர்களான டுவைன் பிராவோ, பொலார்ட் ஆகிய இருவரும் உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்ட பழிவாங்கலாகவே கருதப்படுகிறது. இந்தியத்தொடரை பாதியில் கைவிட்டு நாடு திரும்பிய குற்றச்சாட்டு பிராவோ மீது சுமத்தப்பட்டது. சகலதுறை ஆட்டக்காரனான பொலார்ட், பிராவோ ஆகியோர் இல்லாதது மேற்கிந்தியத்தீவுகளுக்கு பெரும் இழப்புத்தான். முறை தவறி பந்து வீசியதாக குற்றம் சுமத்தப்பட்ட சுனில் நரேன், உலகக்கிண்ன அணியில் இருந்து வெளியேறிவிட்டார். மேற்கிந்தியத்தீவுகளின் விக்கெட் வேட்டைக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து படுதோல்வியடைந்ததனால் தலைமைப்பதவியில் இருந்துக் தூக்கப்பட்ட அலெஸ்டர் குக், உலகக்கிண்ன அணியில் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் கிண்ணப்போட்டியில் தோல்வியடைந்ததனால் பீற்றர்ஸனின் தலைமைப்பதவி பறிக்கப்பட்டது. நிர்வாகத்துடன் முரண்பட்ட பீற்றர்ஸன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை நிர்வாகத்தின் மீது சுமத்தினார். என்றாலும் உலகக்கிண்ன அணியில் இடம் கிடைக்கும் என நம்பி ஏமாந்துபோனார். காயத்தால் அவதிப்படும் உமர்குல் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை. சொஹிப் மாலிக் கம்ரன் அக்மல் ஆகியோரையும் பாகிஸ்தான் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை. தென்.ஆபிரிக்காவின் ரயன் டுமினி, பங்களாதேஷ் வீரர் ருபெல் ஹசைன், இலங்கையின் அஜந்த மென்டிஸ், அவுஸ்திரேலிய வீரர் ரியான் ஹரிஸ், நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷிம் ஆகியோரும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர்

Saturday, February 7, 2015

திரைப்பட பாடல்களில் தொழில்நுட்பம்

தமிழ்த்திரைப்படங்களில் பிரிக்கமுடியாத அங்கமாக பாடல்கள் விளங்குகின்றன. இராகத்துடன் பாடும் திறன் உள்ளவர்கள் மட்டுமே ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடித்தார்கள். நாடகமேடை அனுபவம் சிலருக்கு கைகொடுத்தது. 30 சங்கீதம் உள்ள படம் என்று விளம்பரம் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

கர்நாடக சங்கீதம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பக்திப்பாடல்கள் திரை படப்பாடல்களாக அக்கால ரசிகர்களை கவர்ந்தன. காலமாற்றத்தால் சங்கப்பாடல்கள், இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் எல்லாம் திரைப்படப்பாடல்களின் வரிகளாயின. கவர்ச்சிக்காக கபரே டான்ஸ் பாடல்கள், ஆங்கிலச்சொற்கள் பாடல்களுக்குள் புகுத்தப்பட்டன. இவற்றுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

தமிழ்த்திரைப்படப்பாடல்களில் இலக்கியத்தரம் உள்ளதா? என்ற பட்டிமன்றம் ஒருகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் ஒரு சில கவிஞர்கள் இலக்கியத்தரத்துடன் எழுதுகிறார்கள். நவீன தொழில்நுட்ப சொற்களை திரைப்படப்பாடல்களில் உலவவிடுவதில் மதன் கார்க்கி முன்னிலை வகிக்கிறார்.

இயந்திர மனிதனுக்கு காதல் வந்தால் எவ்வாறு இருக்கும் என்ற வித்தியாசமான சங்கரின் கற்பனைக்குஇரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோஎன்று தனது வரிகள் மூலம் உயிரோட்டம் வழங்கியவர் தான் பாடலாசிரியர் மதன்கார்க்கி.

வைரமுத்துவின் புதல்வர் தான் மதன்காரக்;கி. 34 வயதுடைய இவர் 2001 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிணி பொறியியல் பட்டம்பெற்று பின்பு அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தில் மேல் பட்டப்படிப்பை முடித்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார்.


கடந்த 2009 ஆம் ஆண்டு திரைப்படப் பாடல்களுக்கு வரிகள் எழுத ஆரம்பித்தார் மதன்கார்க்கி. இன்று வரை சுமார் 150 பாடல்கள் எழுதியுள்ளார். இயக்குனர் சங்கரின் எந்திரன் திரைப்படத்திற்கு 2010 ஆம் ஆண்டு இவர் எழுதிய பாடலானஇரும்பிலே ஓர் இருதயம் முளைத்ததோபாடல் உலகெங்கும் மதன் கார்க்கியின் புகழை எடுத்துச்சென்றது. வைரமுத்துவின்   புதல்வனும் பாடல்கள் எழுத ஆரம்பித்து விட்டாரா? என்று பேசும் அளவிற்கு மதன்கார்க்கி பிரசித்தி பெற்றார். இருந்தும் தனது பாடல்களில் தந்தையின் சாயல் இல்லாமல் தனக்கென்று ஒரு தனி வழியினை வகுத்து அதிலே தனது வரிகளை படரவிடுகிறார் மதன்கார்க்கி.
வைரமுத்துவின் பாடல் வரிகளில் இலக்கியப் பண்புகள் அதிக ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. இவரின் புதல்வரின் பாடல் வரிகளில் நவீன உலகை ஆக்கிரமிக்கும் மென்பொருள்  வன்பொருட்களின் செயற்பாட்டு பண்புகள் காணப்படுகின்றது.

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்கள் இவ்வாறு மென்பொருள், வன்பொருட்களின் பண்புகள் நிறைந்ததாக காணப்படுகின்றது. இருதரப்புக் காதல், ஒரு தரப்புக் காதல், காதல் வசப்பட்ட இதயத்தின் வெளிப்பாடு ஆகியவற்றிற்கு மிகவும் தத்ரூபமாக தனது பொறியியல் அறிவை பயன்படுத்தி பாடல் வரிகளை தொடுத்துத்தருகிறார்; மதன்கார்க்கி.

மதன்கார்க்கி எழுதிய சில பாடல்கள் பற்றி இங்கே விபரிப்பது பொருத்தமானதாக இருக்கும். துப்பாக்கி திரைப்படத்தில் இளைய தளபதி விஐய்க்குகூகுள் கூகுள்; பண்ணிபார்த்தேன்”, “அந்தாட்டிக்கா வெண்பனியிலேஎன்ற இரண்டு பாடல்களை எழுதினார் மதன்கார்க்கி. இதில் முதலாவது பாடல் காதலர்களின் வெளிப்பாடாகவும் இரண்டாவது பாடல் காதல் வசப்பட்ட  இராணுவ வீரனின் வெளிப்பாடகவும் அமைந்திருக்கிறது.



கூகுள் கூகுள்; பண்ணிப்பார்த்தேன்பாடலில் இணையத்தள மென்பொருட்களின் பெயர்களை பட்டியலிட்டார்  மதன்கார்க்கி. ‘கூகுள் கூகுள்பண்ணிப் பார்த்தேன் உலகத்தில, இவன் போல ஒரு கிறுக்கனும் பிறந்ததில்லை, யாகூ யாகூ பண்ணிப் பாத்தும் இவனப் போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை, நான் டேட்டிங் கேட்டா வோச்ச பாத்து ஓகே சொன்னானே!, சொப்பிங் கேட்டா ஈபை டொட் கொம்; கூட்டிப் போனானே!, மூவி கேட்டா யூ-டியூப் போட்டு பாப்கோன் தந்தானே!” என்று மிக அழகாக வரிகளை புனைத்திருப்பார்.

இதன் இண்டாவது பாடலானஅந்தாட்டிக்கா வெண்பனியிலேஎன்ற பாடலின் ஒரு இடத்தில்அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா? அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா?” என்று அந்த இராணுவ வீரனின் காதலினை வன்பொருட்கள் மூலம் அழகு படுத்தியிருப்பார்.

இது போன்றுநண்பன்திரைப்படத்தில் எழுதியஅஸ்க் லஸ்கா ஏமோ ஏமோஎன்று தொடங்கும் பாடல் 14 மொழிகளில் காதலை சொல்லும் பாடலாக அமைந்தது. இதில் ஒரு இடத்தில்வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளைஎன்று எழுதி தனது பாணியினை வெளிப்படுத்தியிருப்பார்.

கோஎன்ற திரைப்படத்தில் ஒரு இளைஞனுக்கு முதலில் மலர்ந்த காதலின் வெளிப்பாடாக அமைந்த பாடலானஎன்னமோ ஏதோஎன்று ஆரம்பிக்கும் பாடலின் முழு வரிகளும்   புகைப்படக் கருவியினையும் கலைஞனையும் மனதில் நினைத்து எழுதியதாக பொது நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார் மதன்கார்க்கி. இதில்நிழலை திருடும் மழலை நானோ?” என்ற வரி ஒரு எடுத்துக்காட்டாகும்.

அண்மையில் வெளிவந்த கத்தி திரைப்படத்தில் மதன்கார்க்கி எழுதிய பாடலுக்கு பின்னர் தம்மை தாமே புகைப்படம் எடுக்கும் முறை தற்போது உலகளவில் பிரசித்தம் அடைய வைத்த பாடல் தான்செல்ஃபி புள்ளபாடல். இதில் மதன்கார்க்கி சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்ரகிராம் ஆகிய மென்பொருட்களின் பெயர்களையும், எடுக்கப்பட்ட புகைப்படங்களினை திருத்தம் செய்ய பயன்படுத்தப்படும் போட்டோசொப் என்ற மென்பொருளையும் அழகாக பயன்படுத்தியிருப்பார்

விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படமான தமிழுக்கு எண் 1 அழுத்தவும் என்ற திரைப்படத்திற்கு பாடல் ஒன்றை எழுதிய மதன்கார்க்கி அதில் வன்பொருட்களின் தொழிற்பாட்டை மனிதனின் செயற்பாட்டுடன் தொடர்புபடுத்தி மிக நேர்த்தியாக வரிகளை வரிசைபடுத்தியிருப்பார். அவ்வரிகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். “அலைவரிசை மாற்றவே தொலை இயக்கி அழுத்தவும்! தலை எழுத்தை மாற்றவே உன் மூளையை நீ அழுத்தவும்!” என்ற வரியில் தொலைக்காட்சி பெட்டியின்றிமோட்என்ற வன்பொருளை பயன்படுத்தியிருகிறார்.

வேகத்தை எடுக்க முடுக்கியை அழுத்து! நியாயத்தை உரைக்க சொற்களை அழுத்து!” இவ்விடத்தில் வாகனத்தின்அக்ஸ்லேட்டர்என்ற வன்பொருளை பயன்படுத்தியுள்ளார். “கதவுகள் திறக்க அழைப்பொலி அழுத்து! கனவுகள் திறக்க உறக்கத்தை அழுத்து!” என்ற வரியினூடாககோலிங்பெல்என்ற வன்பொருளை பயன்படுத்தியுள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்பவே விசைப்பலகை அழுத்தவும்! பெருஞ்செய்தி எழுதவே உன் ஆயுளை நீ அழுத்தவும்!” இவ்விடத்தில்கீபோட்என்ற வன்பொருளை பயன்படுத்தியுள்ள மதன்கார்க்கி இதே பாடலில்பணம் உடனே வேண்டுமா? தானியங்கி வங்கி சென்று உன் இரகசியத்தை அழுத்தவும்! காதல் செலுத்த வேண்டுமா? தானியங்கி இதழ்களின் மேலே முத்தத்தை அழுத்தவும்!” என்ற வரியில் .ரி.எம் இயந்திரத்தை உபயோகித்து உள்ளார் மதன்கார்க்கி.

இவ்வாறு மதன்கார்க்கி தான் கற்ற பொறியியல் கற்கை நெறியினை தனது பாடல் வரிகளில் மிக அழகாக பயன்படுத்தி தற்கால சந்ததியினரை கவரும் வகையில் சிறந்த நயப்புடன் பாடல் வரிகளினை வழங்கி வருகின்றார்.
-    சொர்ணகுமார் சொரூபன்