Thursday, March 31, 2011

இறுதிப்போட்டியில் இலங்கை


இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கிடையே கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதலõவது அரையிறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியில் லூக் உட்கா நீக்கப்பட்டு மக்கே நியூஸிலாந்து அணி திணறலுடன் ஆட்டத்தை ஆரம்பித்தது. குப்திவ், மக்குலம் ஜோடி 43 பந்துகளைச் சந்தித்து 32 ஓட்டங்கள் எடுத்தது. ஹேரத் பத்தில் சிக்ஸர் அடித்து மிரட்டிய பிரன்டன் மக்குலம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஹேரத்தின் பந்தில் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த மக்குலம் அடுத்து களமிறங்கிய பிரஸிரைடர் நிதõனமாக விளையாட்டை ஆரம்பித்தார். முரளியின் சுழலில் சிக்கிய ரைடர் சங்கக்காரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த ரைடர், குப்தில் ஜோடி 68 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தது. மலிங்கவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத குப்தில் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 21.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கிய ரோஸ் டெய்லர், ஸ்டைரிஸ் ஜோடி சற்று தெம்பு கொடுத்தது. இவர்கள் இருவரும் 108 பந்துகளுக்கு முகம் கொடுத்து 77 ஓட்டங்கள் எடுத்தனர். டெய்லர் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸ் 22 ஓட்டங்கள் எடுத்தார். சிக்ஸர் அடித்து நம்பிக்கையூட்டிய நதன் மக்கலம் ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அரைச் சதம் கடந்த ஸ்டிரைஸ் முரளியின் சுழலில் சிக்கி 57 ஓட் டங்களுடன் ஆட்டமிழந்ததும் நியூஸிலாந்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். மலிங்க, மென்டிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளி 2 விக்கெட்டுகளையும் ஹேரத் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 218 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இல ங்கை 47.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டில்ஷான், தரங்க ஜோடி நம்பிக்கையுடன் களமிறங்கியது. கெலத்தியன் பந்து வீச்சில் 30 ஓட்டங்களுடன் தரங்க ஆட்டமிழந்தார். 45 பந்துகளுக்கு முகம் கொடு த்த இவர்கள் 40 ஓட்டங்கள் எடுத்தனர். டில்ஷான், சங்கக்கார ஜோடி நம்பிக்கையளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடியது. இவர்களின் பொறுப்பான ஆட்டத்தினால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்க 73 ஓட்டங்களில் டில்ஷான் ஆட்டமிழந்தார். 154 பந்துகளுக்கு முகம் கொடுத்து 120 ஓட்டங்கள் எடுத்தனர். பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கிய மஹேல ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். சாமர சில்வா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 23 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. 42.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது இலங்கை. ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சமர வீர, மென்டிஸ் ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார். 34 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் 35 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீர ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களும், மத்தியுஸ் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார். இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீரராக முரளிதரன் கடைசியாக தன் மண்ணில் விளையாடிய இப்போட்டியில் கடைசிப் பந்தில் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார். காலியில் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியிலும் கடைசிப் பந்தில் விக்கெட்டை வீழ்த்தினார். 1996 ஆம் ஆண்டு சம்பியனான இலங்கை 2007 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 1975, 79, 92, 99 ஆம் ஆண்டுகளில் அரையிறுதியில் தோல்வியடைந்த நியூஸிலாந்து இம்முறையும் தோல்வியடைந்து வெளியேறியது. ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Tuesday, March 29, 2011

வைகோவை கைவிட்ட ஜெயலலிதாதேர்தலை புறக்கணித்த வைகோ


தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடு மனக் கசப்புகளுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இணைந்துவிட்டார் என்றதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். விஜயகாந்துக்கு 41 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த ஜெயலலிதா இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு குறைந்த தொகுதிகளைக் கொடுத்தார். மிகுந்த போராட்டத்தின் பின் இடதுசாரிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. தமிழக அரசியலில் புதிதாகக் களமிறங்கி தேர்தலில் நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற்ற சரத்குமாருக்கு செங்கம்பளம் விரித்த ஜெயலலிதா வைகோ என்ற பலம் வாய்ந்த மனிதரைக் கண்டு கொள்ளவேயில்லை. வைகோவுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் போட்டியில் தொகுதிகளை அறிவித்தார் ஜெயலலிதா. இடதுசாரிகள் வெற்றி பெற்ற நாடுகளிலும் விஜயகாந்துக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளிலும் ஜெயலலிதா கண் வைத்ததனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் ஒருதலைப்பட்சமான முடிவினால் மூன்றாவது அணி உருவாகும் நிலை ஏற்பட்டது. விஜயகாந்த், இடதுசாரிகள் இணைந்து மூன்றாவது அணி உருவானால் தனது கனவு பொய்த்து விடும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா அவர்கள் கேட்ட தொகுதிகளைக் கொடுக்க முன் வந்தõர். மூன்றாவது அணி என்ற மிரட்டல் ஜெயலலிதாவைப் பணிய வைத்தது. கூட்டணிக் கட்சிகள் கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுத்த ஜெயலலிதா வைகோவை கூட்டணியில் இணைப்பதற்கு அதிக அக்கறை காட்டவில்லை. 30 தொகுதிகளை எதிர்பார்த்த வைகோவுக்கு எட்டு தொகுதிகளையே ஜெயலலிதா ஒதுக்கினார். கூட்டணிக் கட்சியில் இருந்து வைகோ வெளியேற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கொடுத்த சந்தர்ப்பமாகவே கருத வேண்டி உள்ளது. கூட்டணியில் வைகோ நீடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியிருந்தால் வைகோவுக்குரிய கௌரவத்தை வழங்கி இருக்க வேண்டும். வைகோவின் வெளியேற்றம் ஜெயலலிதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடித்தது. 60 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் மிரட்டியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சர்களின் இராஜினாமாவரை சென்ற இப்பிரச்சினைக்கு கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் முடிவு கட்டினார் கருணாநிதி. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து மீளப் பெற்ற தொகுதிகளை காங்கிரஸுக்கு வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் வைகோ தம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்களே தவிர அவரைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. வைகோவுக்காகச் சில தொகுதிகளைத் தியாகம் செய்ய கூட்டணித் தலைவர்கள் முன்வரவில்லை. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடை மொழியுடன் ஜெயலலிதா வலம் வந்தபோதும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்பட்டவர் வைகோதான். அவ்வப்போது அதை அரசியல் இருப்பை வெளிக்காட்டுவதற்காகவே ஜெயலலிதா போராட்டம் நடத்தினார். தமிழக அரசு தவறு செய்த போதெல்லாம் களத்தில் இறங்கிப் போராடினார் வைகோ. வைகோவின் போராட்டம் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சி ஒன்று இருப்பதை வெளிக்காட்டியது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆறு தொகுதிகளில் தான் வைகோவின் கட்சி வெற்றி பெற்றது. அதில் மூவர் அணி மாறி விட்டார்கள். ஆனால் 30 தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு வைகோ உதவி செய்தார். தன் கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக கடுமையாகப் பிரசாரம் செய்த அதேவேளை, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரசாரம் செய்தார் வைகோ. ஜெயலலிதா நம்பிக்கைத் துரோகம் செய்ததால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று வைகோ முடிவு செய்துள்ளார். கட்சியின் முடிவு என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டாலும் வைகோவின் விருப்பத்தையே செயற்குழு அங்கீகரித்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கட்சியின் செயற் குழு மூலம் நடைமுறைப்படுத்துவது வழமை. தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு ஜெயலலிதாவுக்கு எதிரான முடிவாகவே கருதப்பட வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் வெற்றிக் கனவுக்கு வைகோ தடை போட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பிரசாரம் பலம் குறைந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்களைத் திரட்டும் வல்லமை வைகோவுக்கு உண்டு. இடதுசாரித் தலைவர்களும் விஜயகாந்தும் தமது கட்சி வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபடுவார்களே தவிர அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரின் வெற்றிக்காக கூடிய கவனம் செலுத்தி பிரசாரம் செய்ய மாட்டார்கள். தொகுதி ஒதுக்கீட்டின் போதே ஒருவரை ஒருவர் மிரட்டி விரும்பிய தொகுதிகளைப் பெற்றவர்கள் கூட்டணிக் கட்சியின் வெற்றிக்காக முழு வீச்சில் உழைப்பார்கள் என்பது சந்தேகமே. திராவிட முன்னேற்றக் கழகத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பொதுக் கொள்கையுடனேயே ஜெயலலிதாவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தனது வெற்றியைப் பற்றியே கண்ணும் கருத்துமாக உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் இதே கொள்கையுடன் அரசியல் நடத்தும் வைகோவைக் கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதாவால் வைகோ அவமானப்படுத்தப்பட்டதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். தேர்தலைப் புறக்கணித்துள்ளதாகவே வைகோ கூறியுள்ளார். தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று அவர் கூறவில்லை. ஜெயலலிதாவையும் அவரது கூட்டணித் தலைவர்களையும் தோற்கடிப்பதன் மூலம் வைகோவின் புண்பட்ட மனதை ஆறுதல்படுத்தலாம் என்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் வாதிகளின் பொதுக் கொள்கையை முறியடித்துள்ளார் வைகோ. ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட வைகோ வேறு கட்சியுடன் இணைந்தோ அல்லது தனியாகப் போட்டியிடுவார் என்றோ பலரும் எதிர்பார்த்தனர். தேர்தலைப் புறக்கணிக்கும் வைகோவின் முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகோ தனியாகக் களமிறங்கினால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினதும் வெற்றியின் விகிதத்தைக் குறைக்க முடியுமே தவிர வைகோவால் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற முடியாத ஒரு காரியத்துக்காக முயற்சி செய்து வேறு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபட வைகோ விரும்பவில்லை. வைகோவின் தற்போதைய முடிவு ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துள்ளது. வர்மாவீரகேசரிவாரவெளியீடு27/03/11

Monday, March 28, 2011

வெளியேறியது இங்கிலாந்துசாதித்தது இலங்கை


இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் 10 விக்கட்டுகளினால் வெற்றி பெற்ற இலங்கை அரையிறுதியில் விளையாடத் தெரிவாகியுள்ளது. முதல் சுற்றில் தட்டுத் தடுமாறி காலிறுதியில் நுழைந்த இங்கிலாந்து, இலங்கையின் போராட்டத்துக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாது வீழ்ந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை எடுத்தது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணி அதிக ஓட்டங்கள் குவித்தால் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி தோல்வியடைவது வழமை. இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத இங்கிலாந்து குறைந்த ஓட்டங்களையே பெற முடிந்தது. அணித் தலைவர் ஸ்ட்ரோஸ் பெல் ஜோடியின் எதிர்பார்ப்பை டில்ஷான் முறியடித்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் டில்ஷான், ஆரம்ப பந்துவீச்சாளராகக் களத்தில் புகுந்து ஸ்ட்ரோட்ஸை ஐந்து ஓட்டங்களுடன் வெளியேற்றினார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்ட்ரோஸ் ஐந்து ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து அணியின் முதல் ஜோடி 48 பந்துகளைச் சந்தித்து 29 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. பெல்லுடன் ஜோடி ஜொணதன்ட்ரொட் ஸ்ட்ரோஸ் இணைந்தபோது 25 ஓட்டங்கள் எடுத்த பெல் மத்தியூஸின் பந்தில் சாமர சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஜொனதன் ட்ரொட், ரவி போபரா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து ஓட்டங்களைக் குவிக்க முனைந்தது. முரளிதரனின் பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்த ரவி போபரா ஆட்டமிழந்தார். ஜொனதன் ட்ரொட்டுடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையூட்டினர். 97 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் 91 ஓட்டங்களை வேகமாகக் குவித்தன. 55 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்த மோர்கன் மாலிங்கவின் பந்தை மத்தியூஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களம் புகுந்த வீரர்கள் சோபிக்கவில்லை. தனி ஆளாகப் போராடிய ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்த இங்கிலாந்து 229 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து வீரர்கள் பௌண்ட்டரிகள் அடிப்பதற்குத் திணறினர். ஒரு சிக்ஸர் கூட அவர்களால் அடிக்க முடியவில்லை. 230 என்ற வெற்றி இலக்குடன் களம் புகுந்த இலங்கை, விக்கட் இழப்பின்றி 231 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 39.3 ஓவர்களில் இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்து 36 ஆவது ஓவரில் டில்ஷான் பௌண்டரி அடித்து 10 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த உலகக் கிண்ணப் போட்டியில் டில்ஷான் அடித்த இரண்டாவது சதம் இது. மறுபுறத்தில் தரங்க சதமடிக்க இரண்டு ஓடடங்கள் தேவைப்பட்டது. வெற்றி பெற மூன்று ஓட்டங்கள் தேவை. இந்த நிலையில் பௌண்டரி அடித்த தரங்க சதத்துடன் வெற்றி இலக்கை எட்டினார். மோர்கன் 13, 33, 34 ஓட்டங்களில் இருந்தபோது அவரை ஆட்டமிழக்கும் வாய்ப்பை இலங்கை வீரர்கள் கோட்டைவிட்டனர். எல்.பி.டபிள்யூ. ஆட்டமிழப்பில் நடுவரின் கருணையால் தப்பிப் பிøழத்த மோர்கன் அரைச்சதம் அடித்தார். டில்ஷான் 102 ஓட்டங்களும் தரங்க 108 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

ரமணி

சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Sunday, March 27, 2011

ஆஸியின் வெற்றிப்பயணத்தை முடித்தது இந்தியா



இந்திய அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதியில் விளையாடத் தகுதிப்பெற்றது. 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலிய இந்தப் போட்டியில் காலிறுதியுடன் வெளியேறியது. யூசுப் பதான் நீக்கப்பட்டு ஷேவக் . விளையாடினார். அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு டேவிட் ஹசி விளையாடினார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 260 ஓட்டங்கள் எடுத்தது. ஷேன் வொட்சன், பிரட் ஹடின் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். அஹமதாபாத் மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமானதால் முதல் ஓவரை அஸ்வின் வீசினார். முதலாவது ஓவரில் அஸ்வின் மூன்று ஓட்டங்களைக் கொடுத்தார். சகீர்கான் வீசிய இரண்டாவது ஒவரில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் இல்லாது அவுஸ்திரேலியா ஆட்டத்தை ஆரம்பித்தது. அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக விளையாடினர். அஸ்வினின் பந்தில் ஸ்வீப் அடிக்க முயன்ற வொட்சன் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொண்டிங் களத்தில் புகுந்ததும் மறுமுனையில் நின்ற ஹெடின் அதிரடியை ஆரம்பித்தார். முனாப் பட்டேலின் ஒரு ஓவரில் மூன்று பௌண்டரிகள், யுவராஜின் ஒரு ஓவரில் இரண்டு பௌண்டரிகள் அடித்து இந்திய வீரர்களை திக்குமுக்காட வைத்தார் ஹடின். யுவராஜின் சுழலில் சிக்கிய ஹடின் 54 ஓட்டங்களில் ரெய்னாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மைக்கல் கிளார்க் யுவராஜின் பந்தை எதிர்கொண்டு சகீர்கானிடம் பிடி கொடுத்து எட்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சகீர் கானின் பந்தில் மைக்கல் ஹசி மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் 33.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா 150 ஓட்டங்கள் எடுத்தது. வைட் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டேவிட் ஹசி களம் புகுந்ததும் பொண்டிங் அதிரடிக்கு மாறினார். யுவராஜின் ஒரு ஓவரில் ஒரு சிக்சர், பௌண்டரி அடித்தார். 44 48 ஆவது ஓவர்களை பவர்பிளே எடுத்த அவுஸ்திரேலியா 44 ஓட்டங்கள் எடுத்தது. பொண்டிங் தனது 40 ஆவது சதத்தை அடித்தார். 113 பந்துகளைச் சந்தித்த பொண்டிங் ஒரு சிக்சர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக சதமடித்தார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் அடித்த முதலாவது சதம் இதுவாகும். பொண்டிங் ஹடின் ஜோடி 44 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தனர். அஸ்வினின் பந்தை ரிவஸ்ஸ்வீப் செய்ய முயன்ற பொண்டிங் 104 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டேவிட் ஹஸி ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களும் ஜோன்சன் ஆட்டமிழக்காது ஆறு ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலிய 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை எடுத்தது. அஸ்வின், சகீர்கான், யுவராஜ் சிங் ஆகியேர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்ததினர். 261 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 47.4 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 261 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷெவாக், சச்சின் ஜோடி அவசரப்படாது நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தது. ஷெவாக் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் ஷெவாக் ஜோடி 44 ஓட்டங்கள் எடுத்தது. ஷெவாக் வெளியேறியதும் கம்பீர் களம் புகுந்தார். அரைச் சதம் அடித்த டெண்டுல்கர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி களம் புகுந்தார். கோஹ்லி வாண வேடிக்கை காட்டுவார் என்று இரசிகர்கள் எதிர்பார்த்திருந்தவேளை 24 ஓட்டங்களுடன் கோஹ்லி வெளியேறினார். நான்காவது விக்கட்டில் இணைந்த யுவராஜ், கம்பீர் ஜோடி நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடியது. ரன் அவுட் கண்டத்தில் இருந்து ஒருமுறை தப்பிய கம்பீர் யுவராஜின் எச்சரிக்கையையும் மீறி ஓட்டம் எடுக்க முனைந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அணித் தலைவர் டோனி பிரட் லீயின் பந்தில் கிளார்க்கிடம் பிடிகொடுத்து ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார். 37.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்த இந்தியா 187 ஓட்டங்கள் எடுத்தது. ஆறாவது விக்கட்டில் இணைந்த யுவராஜ் ரெய்னா ஜோடி அதிரடியில் 64 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து பிரட் லீயின் ஓவரில் யுவராஜ் இரண்டு பௌண்டரிகள், ரெய்னா ஒரு பௌண்டரிகள் உட்பட 15 ஓட்டங்கள் அடிக்க பதற்றம் தணிந்தது. அடுத்து ஸ்டெயினின் ஓவரில் 13 ஓட்டங்கள் கிடைக்க இந்தியாவின் நெருக்கடிதணிந்தது. யுவராஜ் அரைச்சதம் அடித்ததும் இந்திய ரசிகர்கள் உற்சாகமானார்கள். பிரட் லீயின் பந்தில் ரெய்னா சிக்ஸர் அடிக்க இந்திய ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் மிதந்தனர். பௌண்டரி அடித்து இந்திய அணியை அரை இறுதிக்கு கொண்டு சென்றார் யுவராஜ் சிங். யுவராஜ் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் ரெய்னா ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது முறையாக ஆட்டநாயகனாகவும் விருதைப் பெற்றார் யுவராஜ். ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Thursday, March 24, 2011

போராடாமல் வீழ்ந்ததுமேற்கிந்தியத் தீவுகள்

பாகிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மிக இலகுவாக 10 விக்கெட்டால் வெற்றி பெற்றது.
பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் தட்டுத்தடுமாறி காலிறுதியில் நுழைந்த மேற்கிந்தியத் தீவுகள் போராடாமலே படுதோல்வியடைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்கள் எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் எட்வர்ட் நிறுத்தப்பட்டு கிறிஸ் கெயில், சந்திரபோல், கெமர் ரோச் ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.
பாகிஸ்தான் அணியில் ரெஹ்மான் நீக்கப்பட்டு சயிட் அஜ்மல் சேர்க்கப்பட்டார்.
சந்திரபோல் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்கள் எடுத்தார். சர்வான் 24 ஓட்டங்களும் கெமர் ரோச் 16 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
அப்ரிடி நான்கு விக்கெட்களையும் மொஹமட் ஹபீஸ், சயிட் அஜ்மல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் உமர்குல், அப்துல் ரஸாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
113 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. கம்ரன் அக்மல் 47 ஓட்டங்களும் மொஹமட் ஹபிஸ் 61 ஓட்டங்களும் எடுத்தனர். மொஹமட் ஹபிஸ் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது
குறைந்தபட்ச ஓட்டம்
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக 112 ஓட்டங்களுக்கு சுருண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கிண்ண அரங்கில் தனது மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
முன்னதாக கென்யா (93 ஓட்டங்கள், 1996), அவுஸ்திரேலியா (110 ஓட்டங்கள், 1999) அணிகளுக்கு எதிராகக் குறைந்த எண்ணிக்கையை பெற்றது. இது சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 9ஆவது குறைந்தபட்ச ஓட்டமாகும்.
கடந்த 2004இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 54 ஓட்டங்களுக்கு சுருண்டதே மேற்கிந்தியத் தீவுகளின் மோசமான ஓட்டங்களாகும். ஐந்து முறை 100 ஓட்டங்களுக்கும் குறைவாக சுருண்டது.
ஏழாவது முறை
நேற்று மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி உலகக் கிண்ண அரங்கில் ஏழாவது முறையாக (1979, 83, 87, 92, 96, 99, 2011) காலிறுதிக்கு முன்னேறியது. இதில் கடந்த 1979, 83, 87இல் அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கடந்த 1992இல் முதன் முதலில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின் 1996இல் காலிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி 1999ல் இறுதியாட்டம்வரை முன்னேறியது. கடந்த 1975, 2003, 2007ல் நடந்த தொடர்களில் முதல் சுற்றோடு வெளியேறியது.
முதன் முறை
மேற்கிந்தியத் தீவுகள் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி உலகக் கிண்ண அரங்கில் முதன் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக யு.ஏ.இ. (1996), நியூசிலாந்து (1999) அணிகளுக்கு எதிராக தலா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தான் அணி மூன்றாவது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக நியூஸிலாந்து (1986), பங்களாதேஷ் (2008) ஆகியவற்றுக்கு எதிராக 10 விக்கெட்களில் வெற்றி பெற்றது.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Tuesday, March 22, 2011

குழம்பிய கூட்டணிகலங்கிய தொண்டர்கள்

தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை பலத்த இழுபறியின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருவரை ஒருவர் மிரட்டலுடன் ஆரம்பமானது. இரண்டு கட்சித் தலைவர்களும் பத்திரிகைகளுக்கு முன்னால் சிரித்தபடி நிற்கிறார்களே தவிர இரு கட்சித் தலைவர்களின் மனதிலும் சந்தேõஷம் இல்லை. கட்சித் தலைவர்களே முட்டி மோதிக் கொண்டிருக்கையில் தேர்தலின் வெற்றிக்காகத் தொண்டர்கள் முழு மூச்சுடன் ஒற்றுமையாகச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்ட சபைத் தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 15 தொகுதிகள் அதிகமாகக் கிடைத்துள்ளது. தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டதால் சில தொகுதிகள் இல்லாமல் போய் விட்டன. சில தொகுதிகள் இரண்டு தொகுதிகளாகி விட்டன. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகள். புதிய தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலை உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. அந்த 63 தொகுதிகளிலும் தமது ஆதரவாளர்களை நிறுத்துவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முட்டி மோதுகிறார்கள். தமிழகக் காங்கிரஸ் கட்சியே ஒரு கூட்டணி போல் உள்ளது. வாசன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, சிதம்பரம் ÷காஷ்டி, இளங்கோவன் ÷காஷ்டி என்று பல கோஷ்டிகள் உள்ளன. இத்தனை கோஷ்டி போதாதென்று இளைஞர் காங்கிரஸ் கோஷ்டி இப்போது உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் இளைஞர் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இத்தனை காலமாகப் போராடியவர்களை முன்னிலைப்படுத்தாது இளைஞர் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது. மூத்த தலைவர்களுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இளங்கோவன், மணிசங்கர அய்யர் போன்ற பிரபலமானவர்களே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தனர். தொகுதியின் செல்வாக்குப் பெற்றவர்களே தோல்வியடைந்த நிலையில் மக்களின் அபிமானம் பெறாத இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் வெற்றி பெறுவார்களா என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.
சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையும் ராகுல் காந்தியின் மூலம் விடுக்கப்படலாம். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகி மத்திய மத்திரியாகி விடுவார்கள் என்ற அச்சம் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியைத் தூக்கி எறிய வேண்டும். கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொதுக் கொள்கையுடன் ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், இடதுசாரித் தலைவர்கள் ஆகியோர் செயற்படுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறும் போது நாமும் சேர்ந்து ஏற வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் ஆட்சியில் பங்கு அதிக தொகுதிகள் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இளங்கோவன் போன்றவர்களினால் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒதுக்குவதில் முக்கிய பங்கு வகித்த தங்கபாலு மீது பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதிக தொகுதிகள் கிடைத்தும் திருப்தி இல்லாத நிலையே காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளது.
மக்களுடனும் கடவுளுடனும் கூட்டணி என்று மேடைதோறும் முழங்கிய விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததாகக் கூறியுள்ளார். உண்மையிலேயே அவர் கூட்டணி சேர்ந்தது கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக அல்ல. தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. இரட்டை இலையின் நிழலில் ஒதுங்கியுள்ளார் விஜயகாந்த். ஆறு சதவீத வாக்கும் இரண்டு சட்ட சபை உறுப்பினர்களும் இருந்தால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். விஜயகாந்த் மட்டும்தான் சட்ட சபை உறுப்பினராக உள்ளார். தனித்துப் போட்டியிட்டால் மீண்டும் விஜயகாந்த் மட்டும்தான் வெற்றி பெறுவார். 10 சதவீத வாக்கு உள்ள விஜயகாந்தின் கட்சிக்கு இன்னொரு சட்ட சபை உறுப்பினர் வெற்றி பெற வேண்டுமானால் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதைக் காலம் கடந்து உணர்ந்துள்ளார் விஜயகாந்த்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற கோஷத்துடன் அரசியலில் குதிக்கும் விஜகாந்துக்கு அரசியல் என்றால் என்னவென்று அனுபவப்பட்ட பின்னர்தான் புரிந்தது. கூட்டணி இல்லாது தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளார் விஜயகாந்த். விஜயகாந்துக்கு 41 தொகுதிகளை அள்ளி வழங்கியுள்ளார் ஜெயலலிதா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்ட சபைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுத்தவர் விஜயகாந்த். கூட்டணிக் கட்சியின் ஆதரவு இன்றி விஜயகாந்தால் வெற்றி பெற முடியாது. கூட்டணிப் பலத்தில் எத்தனை தொகுதிகளில் விஜயகாந்த்தின் கட்சி வெற்றி பெறுகிறது என்பதில்தான் விஜயகாந்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி இளைப்பாறிய சரத்குமாரின் கட்சிக்கு ஜெயலலிதா இரண்டு தொகுதிகள் ஒதுக்கியுள்ளார். இது சரத்குமாருக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரமல்ல. சரத்குமாரின் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை விஜயகாந்த்தைப் போல் காலம் தாழ்த்தி அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளார் சரத்குமார். கடைசி நேரத்தில் கூட்டணியில் சரத்குமாருக்கு இடம் கிடைத்தது. கார்த்திக்கின் நிலை பரிதாபகரமாக உள்ளது. தமிழகத்தின் செல்வாக்குமிக்க சமூகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். தமிழகத்தின் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக்குக்கு ஜெயலலிதா ஒரு தொகுதியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் ஜெயலலிதா கைவிட்டதனால் என்ன செய்வதென்று தெரியாது தடுமாறுகிறார் கார்த்திக். காங்கிரஸும் விஜயகாந்தும் தம்மை வளர்ப்பதற்காகவே கூட்டணி சேர்ந்துள்ளனர். கருணாநிதியும், ஜெயலலிதாவும் இதனைத் தெளிவாகப் புரிந்துள்ளனர்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு20/03/11

Monday, March 21, 2011

யுவராஜ் சதம்: இந்தியா வெற்றி

இந்தியா மே.இந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 80 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்தியா, மே. இந்தியத் தீவு ஆகிய இரண்டு அணிகளும் கால் இறுதிக்குத் தெரிவான நிலையில் குழு பியில் இரண்டாம் இடத்தினைத் தக்கவைத்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. மே.இந்தியத்தீவுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்திய அணியில் செவாக் ,நெஹ்ரா விளையாடவில்லை. அஸ்வின், ரெய்னா ஆகியோர் களமிறங்கினர். மே.இந்தியத்தீவு அணியில் கிறிஸ் கெயில், கெமர் ரோச் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
எட்வர்ட்ஸ், ரவிராம்போல் ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். ரவிராம் போல் அசத்தலான பந்து வீச்சை இந்திய வீரர்களைத் தடுமாற வைத்தது. இரண்டு ஒட்டங்கள் எடுத்தபோது ரவிராம்போலின் பந்தை எதிர் கொண்ட டெண்டுல்கர் தோமஸிடம் பிடிகொடுத்தார். மே. இந்திய வீரர்கள் ஆர்ப்பரிக்க நடுவர் சைகை காட்டாமல் நின்ற போது டெண்டுல்கர் வெளியேறினார். கம்பீர் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹோக்லி, யுவராஜ் ஜோடி 122 ஓட்டங்கள் சேர்த்தது. கோஹ்லி கை கொடுக்க யுவராஜ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
ரம்÷பாலின் பந்தில் 59 ஓட்டங்கள் எடுத்து கோஹ்லி ஆட்டமிழந்தார். டோனி 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்
தõர். ரெய்னா நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். உலகக் கிண்ண அரங்கில் யுவராஜ் முதலாவது சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் இது 13 ஆவது சதமாகும். 123 பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ் இரண்டு சிக்சர் 10 பவுண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களில் யுவராஜ் வெளியேறியதும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. கடைசி 7.4 ஓவர்களில் 50 ஓட்டங்கள் எடுத்த இந்தியா ஏழு விக்கட்டுக்களைப் பறி கொடுத்தது.
ரவி ரம்போல் 5 விக்கெட்டுகளை யும், ரஸல் இரண்டு விக்கெட்டுகளை யும், சமி,பிஹு ஆகியோர் தலா ஒரு விக்கெட் டையும் வீழ்த்தினர்.
269 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இந்தியதீவுகள் 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஒட்டங்களை எடுத்தது.
ஸ்மித், எட்வர்ட் ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கினர். அஸ்வினின் பந்தில் எட்வர்ட் 17 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். பிராவோ 22 ஓட்டங்களில் வெளியேறினார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய ஸ்மித் 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சர்வான் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த மே.இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர்.
மே.இந்தியதீவுகள் மூன்று 30.3 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையுடன் இருந்த வேளையில் ஸ்மித் 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் மே. இந்தியத் தீவுகளின் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.
சஹீர்கான் மூன்று, அஸ்வின், யுவராஜ் ஆகியோர் தலா இரண்டு ஹர்பஜயன், ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்குதடை போட்டது பாகிஸ்தான்

அவுஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கொழும்பில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவின் 12 வருட சாதனைக்கு முடிவு கட்டியது.
பாகிஸ்தான் அணியில்அக்தர் இடம்பெறவில்லை. சயித் அஜ்மல் நீக்கப்பட்டு உமர் அக்கல் சேர்க்கப்பட்டார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது.
1992ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியா பெற்ற குறைந்த எண்ணிக்கை இதுவாகும். 1999ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியா சகல விக்கெட்டுகளையும் இழந்திருப்பது இப்போதுதான்.
சுழல் பந்து வீச்சாளர்களும், வேகப் பந்து வீச்சாளர்களும் மாறி மாறிப் பந்து வீசினார்கள். வடசன்ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹடின், பொன்டிங் ஜோடி சற்று நேரம் நின்று பிடித்தது. பொன்டிங் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹடின் அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார். மைக்கல்கிளாக் 34 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஆறு பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமர்குல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
177 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்து நான்கு விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
பிரட்லியின்வேகத்தில்பாகிஸ்தானின் இரண்டு விக்கெட்கள் வீழ்ந்ததனால் பாகிஸ்தானின் வெற்றிப் பயணத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டது. அஷாத் ஷபிக், யூனுஸ்கான் ஜோடி நிதானமாக விளையாடியது. 23ஆவது ஓவரில் பிரட்லியும் பந்தைக் கொடுக்க பொன்டிங் 4ஆவது பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து யூனுஸ்கானும் ஐந்தாவது பந்தில் ஓட்டமெதுவும் எடுக்காது மிஸ்பாஉல் ஹக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த உமர் அக்மல் தடுத்து ஆட ஹட்ரிக் வாய்ப்பு நழுவியது. ஆசாக் தௌபிக் அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் எடுத்தார்.
உமர் அக்மல்,ரசாக் ஜோடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தது. ஆட்டநாயகன் விருதை உமர் அக்மல் தட்டிச்சென்றார்.
உலகக் கிண்ண அரங்கில் தொடர்ந்து 34 வெற்றிகளைப் பெற்ற அவுஸ்திரேலியா பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.
1996ஆம் ஆண்டு பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா இப்போது பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. உலகக் கிண்ண அரங்கில் தொடர்ந்து 27 போட்டிகளில் வெற்றி பெற்ற பொன்டிங் முதன் முதலில் தோல்வியடைந்தார். உலகக் கிண்ண வரலாற்றில் பொன்டிங் முதன் முதலாக தோல்வியைச் சந்தித்தார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Sunday, March 20, 2011

ஜப்பானை சீரழித்த சுனாமி



இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்காவினால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஜப்பானை சுனாமி என்ற அரக்கன் சூறையாடியுள்ளான். நிலநடுக்கம், சுனாமி என்பன ஜப்பான் மக்களுக்குப் புதியன அல்ல. நிலநடுக்கத்தால் ஜப்பான் அடிக்கடி பாதிக்கப்படுவதனால் நிலநடுக்கத்தில் இருந்து எப்படி பாதுகாப்பாகத் தப்புவது என்பது பாடசாலைக் கல்வியிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தில் உலகுக்கு முன்மாதிரியாகத் திகழும் ஜப்பானில், வானுயர்ந்த கட்டடங்கள் உள்ளதென்றாலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையிலேயே ஜப்பானின் வானுயர்ந்த கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆழிப்பேரலைக்கு சுனாமி என்ற பெயரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது ஜப்பான்தான். அடிக்கடி சிறிய சுனாமி ஜப்பானின் கடற்கரையோரங்களைத் தாக்கி அழிக்கும். கடந்த 11 ஆம் திகதி கடலில் இருந்து கிளம்பிய சுனாமி புகுஷிமா, மியாதி, ஜலேட் ஆகிய மாகாணங்களை நிர்மூலமாக்கியது.
யுரேஷியன், பசுபிக், வட அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய கண்டத்திட்டுக்கள் ஒன்றிணையும் மேற்குப்பகுதியில் ஜப்பான் உள்ளது. இதன் காரணமாக கண்டங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது அல்லது மோதும்போது ஏற்படும் நிலநடுக்கம் ஜப்பானைப் பாதிக்கும்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டதாலும், சுனாமியிலிருந்து தப்புவதற்கான முன்னேற்பாடுகள் பற்றி மக்கள் தெரிந்திருந்ததாலும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. 7.5 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டால் பாதிக்கப்படாதவகையிலேயே கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 11 ஆம் திகதி 8.9 ரிச்டர் நிலநடுக்கம் கடலில் ஏற்பட்டதால் உண்டான சுனாமி ஜப்பானின் மூன்று மாகாணங்களை அடையாளம் தெரியாது மாற்றி விட்டது.
மியாகி மாகாணத்தில் உள்ள மினாமி கன்றிக் என்ற கிராமத்தில் வசித்த 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டால் தானாகவே இயக்கத்தை நிறுத்தும் புல்லட் ரயிலையும் காணவில்லை. சுனாமி கொண்டுவந்திருந்த குப்பைகள் ஆங்காங்கே படிந்திருப்பதால் அவற்றை அப்புறப்படுத்தும் வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பசுபிக் திட்டு, வட அமெரிக்காவில் கண்டத்திட்டின் மீது மோதியதால் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் மற்றும் நிலநடுக்க ஆய்வாளர் பால் ஏத்ல் தெரிவித்தார். இந்த மோதல் காரணமாக ஜப்பானை எட்டு அடி நகர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பூகம்பத்தின் காரணமாக பூமியின் அச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் மூன்றில் ஒரு பங்கு மின் காந்தத்தை அணுமின் உலைகள்தான் வழங்குகின்றன. ஜப்பானில் சுமார் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன. அகனவா அணு உலைக்கூடத்தில் உள்ள மூன்று அணுமின் உலைகள் நிலநடுக்கத்தின் காரணமாக தாமாகவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. 11 மின் நிலையங்கள் நிலநடுக்க அனர்த்தம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. நான்கு அணுமின் உலைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அணுமின் உலைகள் வெடித்ததனால் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சின் தாக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் அணுக்கதிர் வீச்சைத் தாங்கும் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் அணு உலை வெடித்ததனால் தனது அணு உலைகள் பற்றி மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. இயற்கையின் எந்தவிதமான பாதிப்பையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜப்பானின் அணுமின் உலைகள் வெடித்ததனால் அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளும் அச்சத்தில் உள்ளன.
ஜப்பானில் உள்ள தமது நாட்டவரை உடனடியாக வெளியேறுமாறு வெளிநாடுகள் அறிவித்துள்ளன. ஜப்பானுக்குச் செல்லவேண்டாம் என்று பல நாடுகள் தமது நாட்டுப்பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. மீட்புப் பணியை மிகவேகமாக ஜப்பான் முடுக்கிவிட்டுள்ளது.
அணுக்கதிர் வீச்சு இரண்டொரு நாட்களில் முடிந்துவிடும் விடயமல்ல. அதன் பாதிப்பு எதிர்வரும் காலங்களின் தான் வெளியே தெரிய ஆரம்பிக்கும். புற்றுநோய் பாதிப்பு எலும்பு மச்சையில் தாக்கம் உட்பட பல நோய்கள் தோன்றும் அபாயம் உள்ளது. அணுக்கதிர் வீச்சினால் மனித உடலில் மரபணு மாற்றம் ஏற்படும். கருவில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படும். கதிர் வீச்சில் உள்ள அயோடின் மூலகத்தை விரைவில் ஏற்றுக்கொள்ளும் பசு, எருமை என்பவற்றின் பால் அதனை அப்படியே திருப்பித்தரும். ரஷ்யாவின் செர்னோபிலில் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சின் போது இப்படி நடந்துள்ளது.
எதற்கும் தளராத ஜப்பான் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பிவிடுவார்கள். அழிந்து விட்ட நகரங்களை மீளக்கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கை ஜப்பானிய மக்களிடம் உள்ளது.
ரமணி.
சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Friday, March 18, 2011

கனடாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா கனடா ஆகியவற்றுக்கிடையே பெங்களூரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய ஏழு விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து, ஸிம்பாப்வே, கென்யா ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றது. இலங்கை, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே மழை காரணமாகக் கைவிடப்பட்ட இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இலங்கை, ஸிம்பாப்வே, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் கனடா தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானை 184 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது. கனடாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டவேளை அணித் தலைவர் அப்ரிடி பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. கென்யாவுடனான போட்டியில் ஐந்து விக்கட்டுகளினால் வெற்றி பெற்ற கனடா ஆறுதலடைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா முதலில் துடுப்பெடுத்தாடி 45.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.
கனடாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹிரால் பட்டேல் அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். பிரட் லீயின் முதலாவது ஓவரில் மூன்று பௌண்டரிகள் அடித்தார். டெய்டின் பந்தில் இமாலய சிக்ஸர் அடித்தார். 14 ஓட்டங்கள் எடுத்த டேவிட்சன் பிரட்லீயின் பந்தில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய படேல், ஜான்சன், பிரட்லீ ஆகியோரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸர் அடித்தார். படேலின் அனல் பறந்த ஆட்டத்துக்கு வொட்சன் முடிவு கட்டினார். 45 பந்துகளில் மூன்று சிக்ஸர் ஐந்து பௌண்டரி அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்த பட்டேல் வொட்சனின் பந்தை ஜோன்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
கனடாவின் அணித் தலைவர் பகாய் 39, சர்காரி 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஏனையோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பிரட் லீ நான்கு விக்கட்டுகளையும் டெய்ட், திரெஜா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் ஜோன்சன், வொட்சன் ஆகியேர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
212 என்ற சுலப வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய 34.5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 212 ஓட்டங்கள் எடுத்து ஏழு விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
வொட்சன், ஹெடின் ஜோடி இணைந்து பௌண்டரி சிக்சர் அடித்து வெற்றிக்கு அத்திவாரமிட்டனர். சீமாவின் ஓவரில் மூன்று பௌண்டரி அடித்தார் ஹெடின். டேவிட்சன் பந்தில் 104 மீற்றருக்கு இமாலய சிக்ஸர் அடித்தார் வொட்சன். இந்தத் தொடரில் மிக நீண்ட தூரத்துக்கு அடிக்கப்பட்ட சிக்ஸராக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிரால் பட்டேல் வீசிய 28 ஆவது ஓவரில் மூன்று பௌண்டரி ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் வொட்சன்.
188 ஓட்டங்கள் அடித்த போது முதலாவது விக்கட்டை இழந்தது அவுஸ்திரேலியா. 84 பந்துகளில் இரண்டு சிக்ஸர் 11 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்கள் எடுத்த ஹடின் ஆட்டமிழந்தார்.
கிளார்க் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களையும் வைட் நான்கு ஓட்டங்களையும் எடுத்தனர். 34.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா 212 ஓட்டங்கள் எடுத்தது. ஏழு விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
90 பந்துகளில் நான்கு சிக்சர் ஒன்பது பௌண்டரி அடங்கலாக 94 ஓட்டங்கள் எடுத்த வொட்சன் ஆட்டநாயகனாக தெரிவுசெய்ப்பட்டார்.செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Thursday, March 17, 2011

அயர்லாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா அயர்லாந்து அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்கா 131 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்க அணியில் காயம் காரணமாக டி விலியர்ஸ் நீக்கப்பட்டு கொலின் இங்ராம் சேர்க்கப்பட்டார். அயர்லாந்து வீரர் அன்ரூ போத்தா நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் ஜோன்ஸ்டன் களமிறங்கினார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து களத்தடுப்பைத் தேர்வு செய் தது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் னாபிரிக்கா 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுக்களை இழந்து 272 ஓட்டங்கள் எடுத்தது.
அம்லா, ஸ்மித் ஜோடியின் ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. அம்லா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய வான் 41 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலிஸ் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். 20.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 95 ஓட்டங்கள் எடுத்தது. பிளஸிஸ் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஆறாவது விக்கட்டில் இணைந்த டுமினி, இங்ரம் ஜோடி பொறுப்புடன் விளையாடி தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 46 ஓட்டங்கள் எடுத்த இங்ராம், ஜோன்ஸ்டனின் பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டுமினி 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
50 ஓவர்களில் ஏழு விக்கட்டுக்களை இழந்த தென்னாபிரிக்கா 272 ஓட்டங்கள் எடுத்தது. 273 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து 33.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்கள் எடுத்தது.
தென்னாபிரிக்காவின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத அயர்லாந்து வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆட்ட நாயகனாக டுமினி தெரிவு செய்யப்பட்டார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Tuesday, March 15, 2011

பணிந்தது தி.மு.க.தணிந்தது பிரச்சினை


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தொகுதி பேரம் பற்றிய இழுபறி இரண்டு பகுதியிலும் மனக் கசப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தீர்மானித்திருந்தது. தவிர ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்திடம் கோரிக்கை விடுத்தது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறித்த தமிழக ஆட்சியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. ஆகையினால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை முதலிலேயே மறுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் தான் கொடுக்கலாம் என்று கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்தார். 63 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அடம்பிடித்தது. 63 தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதிக்குக் குறைந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் விடாப்பிடியாகக் கூறியது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளைக் கொடுக்க விரும்பாத திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இருந்து விலகுவதாக அறிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வதற்காக டில்லியை நோக்கிப் படையெடுத்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் பின்னர் காங்கிரஸ் கட்சி கேட்ட 63 தொகுதிகளைக் கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே உட்பூசல் நீண்ட காலமாகவே உள்ளது. பிரச்சினை 63 தொகுதிகள் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் பல பிரச்சினைகள் உள்ளன. ஸ்பெக்ரம் ஊழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. சட்டப்படி தான் எல்லாம் நடந்தது என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறுகிறது.
ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அடுத்து கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் செய்திகள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. போபஸ் ஊழல் வழக்கில் இருந்து சிலர் விடுவிக்கப்பட்டது போன்று ஸ்பெக்ரம் வழக்கில் இருந்து ராசாவும் வேறு சிலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
ஸ்பெக்ரம் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர்பை கைவிட்டு காங்கிரஸை நிரபராதியாகக் காட்ட வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள சிலர் விரும்புகிறார்கள். தமிழகத்தில் திராவிடக் கழகங்களின் உதவி இன்றி காங்கிரஸ் வெற்றி பெற முடியாது. ஆகையால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு உள்ளது.
காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கியுள்ளது. ஆட்சியில் பங்கு பற்றி தேர்தலுக்குப் பின்னர் முடிவு செய்யலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறியதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இழப்புகளுடனும் மனக் கசப்புகளுடனும் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கியதால் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தலா ஒரு தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் திரும்பப் பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் 121, காங்கிரஸ் 63, பாட்டாளி மக்கள் கட்சி 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 10, இந்திய முஸ்லிம் லீக் 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1, தொகுதிகளில் போட்டியிடப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்ட சபையில் அறுதிப் பெரும்பான்மை மூலம் ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 121 தொகுதிகளில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகம் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். 118 தொகுதிகளை விட குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழக மக்களுக்கு வாரி வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் அடுத்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்தும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை வைத்திருந்தார். தேர்தலுக்õன வேட்பு மனுத் தாக்கல் செய்ய முன்பே கருணாநிதியின் கனவை காங்கிரஸ் தவிடு பொடியாக்கியது. குறைந்த தொகுதியில் போட்டியிட வேண்டிய ஒப்பந்தத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தள்ளியுள்ளது காங்கிரஸ் கட்சி.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்கடியைத் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை. ஆகையால் தேர்தலின்போது காங்கிரஸின் வெற்றிக்காக திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1980ஆம் ஆண்டு 112 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. அதன்பின் மிகக் குறைந்த தொகுதிகளில் இப்போது போட்டியிடுகிறது.
"கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி' என்று மேடைதோறும் முழங்கி வந்த விஜயகாந்த், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். கடந்த தேர்தல் காலங்களில் எலியும் பூனையும் போல் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்த்த ஜெயலலிதாவும் விஜயகாந்தும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தனர்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டதனால் மிக அதிகம் பாதிக்கப்பட்டவர் ஜெயலலிதாதான்.
சில தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஜெயலலிதாவைப் பிடிக்காதவர்களும் எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் சிலரே விஜயகாந்தை ஆதரித்தனர். விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைந்ததால் விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவித்த எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
வர்மாவீரகேசரிவாரவெளியீடு13/03/11

தொடர் வெற்றியில் ஆஸி.

அவுஸ்திரேலியா, கென்யா அணிகளுக்கிடையே பெங்களூரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 60 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 324 ஓட்டங்கள் எடுத்தது.
ஷேன் வொட்சன், பிராட்டுடின் ஜோடி 38 ஓட்டங்களில் பிரிக்கப்பட்டது. வொட்சன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொண்டிங் 36, கம்ரூன் இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஹெடின் 65 ஓட்டங்கள் எடுத்தார்.
ஐந்தாவது விக்கட்டில் இணைந்த மைக்கல் கிளõர்க், மைக் ஹசி ஜோடி 114 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலியாவில் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.
இம்முறை நடைபெறும் உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் முதன் முதலாகக் களமிறங்கிய மைக் ஹசி 34 ஆவது அரைச் சதம் கடந்து அசத்தினார். மைக் ஹசி 54 ஓட்டங்கள் எடுத்தார்.
மைக்கல் கிளார்க் 93 ஓட்டங்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 324 ஓட்டங்கள் எடுத்தது.
325 என்ற பிரமாண்டமான இலக்குடன் களமிறங்கிய கென்யா 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 264 ஓட்டங்கள் எடுக்க 60ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
கென்யாவை இலகுவாக வீழ்த்திவிடலாம் என்றஎண்ணத்துடன் களமிறங்கிய அவஸ்திரேலியா, கென்யாவைக் கட்டுப்படுத்த சிரமப்பட்டது.
கென்யாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் மிஸ்ரா, கொலின்ஸ் ஒபுயா நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினர்.
மிஸ்ரா ஒருநாள் அரங்கில் ஆறாவது அரைச் சதமடித்தார்.
72 ஓட்டங்கள் எடுத்திருந்தவேளை இவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
கென்யா 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 264 ஓட்டங்கள் எடுத்து 60 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இறுதிவரை போராடிய கொலின் ஒபுயா ஆட்டமிழக்கõது 98 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Friday, March 11, 2011

தடுமாறி வென்றது இந்தியா

இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கிடையே டெல்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ், அயர்லாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி சமநிலையில் முடிந்தது.
இங்கிலாந்து, மே. இந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்தது நெதர்லாந்து. நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் பட்டேலுக்கு ஓய்வளிக்கப்பட்டு நெஹ்ரா அணியில் இடம்பிடித்தார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது.
நெதர்லாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான எரிக் ஸிவர்க்கின்ஸ் கிரவெஸ்ஸி ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு இருவரும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். சவ்லா இந்த ஜோடியைப் பிரித்தார். எரிக் ஸிவர்க் கின்ஸ்கி 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். நெதர்லாந்து வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது ஆட்டமிழந்தனர். 38.1 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்த நெதர்லாந்து 127 ஓட்டங்கள் எடுத்தது. அணித் தலைவர் பீட்டர் பொரன், முடாசர் புகாரி இணை நின்று நிதானமாக விளையாடி நெதர்லாந்தின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து 189 ஓட்டங்கள் எடுத்தது.
சகிர்கான் மூன்று விக்கெட்டுகளையும், சவ்லா, யுவராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
190 என்ற இலகுவான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்தியா ஐந்து விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷேவாக் சச்சின் ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் ஷேவாக். அவர் ஆட்டமிழந்ததும் யூசுப் பதான் களம் புகுந்தார். யூசுப்பின் அதிரடி இந்திய அணியின் வெற்றியை இலகுபடுத்தும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். சச்சின் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரசிகர்கள் நம்பிக்கை வைத்த யூசுப்பதான் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் மூவரையும் நெதர்லாந்து வீரர் சீலர் வெளியேற்றினார். கோக்லி 12, கம்பீர் 28 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் நிலை குலைந்தனர். யுவராஜ் சிங், டோனி இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். யுவராஜ் சிங் அரைச் சதம் அடிப்பதற்காக டோனி ஒரு ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. கிருகர் பந்தை பவுண்டரிக்கு அடித்த யுவராஜ் அரைச் சதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.
யுவராஜ் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்கள் எடுத்தார். டோனி ஆட்டமிழக்காது 19 ஓட்டங்கள் எடுத்தார். 36.3 ஓவர்கள் பந்து வீசிய நெதர்லாந்து வீரர்கள் நான்கு உதிரிகளை மட்டும் விட்டுக் கொடுத்தனர். யுவராஜ் சிங் 48 ஆவது அரைச்சதம் அடித்தார்.
269 ஒருநாள் போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் அரங்கில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 14 ஆவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் யுவராஜ் சிங். ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதியில் விளையாடி தகுதி பெற்ற முதலாவது அணியாக இந்தியா தெரிவானது
.ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Wednesday, March 9, 2011

நியூஸிலாந்து அபார வெற்றி

நியூஸிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பல்லேகலயில் நடைபெற்ற உலகக் கிண்ண ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து 110 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
கென்யாவுக்கு எதிராக 312 ஓட்டங்கள் அடித்து 205 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது பாகிஸ்தான். இலங்கைக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. கனடாவுக்கு எதிராக 184 ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் 138 ஓட்டங்களால் கனடாவைச் சுருட்டி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
கென்யாவையும் சிம்பாப்வேயையும் தலா 10 விக்கெட்களினால் வீழ்த்திய நியூஸிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட்களினால் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது நியூஸிலாந்து.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்கள் எடுத்தது.
நியூஸிலாந்து அணியில் ஜெசி ரைடர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஜேக்கப் ஓரம் விளையாடினார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சயித் அஜ்மல் ஆகியோர் நீக்கப்பட்டு சொஹிப் அக்தர், அப்துர் ரெஹ்மான் ஆகியோர் இடம்பிடித்தனர்.
அக்தர் வீசிய முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து தனது கணக்கை ஆரம்பித்த பிரைண்டன் மெக்லம் அடுத்த பந்தை சொஹிப் அக்தரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
குப்தில் ரொஸ் டெய்லர் ஜோடி பொறுப்பாக விளையாடியது. டெய்லர் ஓட்டம் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழக்கும் வாய்ப்பை அக்மல் தவறவிட்டதால் அதன் பின் அவர் ஆடிய விஸ்வரூப விளையாட்டு நியூஸிலாந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
கண்டத்தில் இருந்து தப்பிய டெய்லர் முதலில் அடக்கி வாசித்தார். பின்னர் அவர் ஆடிய ருத்ர தாண்டவம் பாகிஸ்தான் அணிக்கு தோல்வியை ஏற்படுத்தியது.
அரைச் சதம் கடந்த குப்தில் 57 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். முதலாவது விக்கெட்டை எட்டு ஓட்டங்களில் இழந்த நியூஸிலாந்து தனது இரண்டாவது விக்கெட்டை 55 ஓட்டங்களில் இழந்தது. பிராங்ளின் ஒரு ஓட்டத்துடனும் ஸ்டைரிஸ் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 41.6 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது.
71 பந்தில் அரைச் சதம் கடந்த டெய்லர் அதன் பின் அதிரடியில் இறங்கினார். டெய்லர் மெக்லம் ஜோடி 24 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தது. நதன் மெக்லம் 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
நதன் மெக்லம் வெளியேறியதும் ஜேகப் ஓரம் களம் புகுந்தார். இவர்கள் இருவரும் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்தனர். 27 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்து நியூஸிலாந்து ரசிகர்களை குஷிப் படுத்தியது. 9 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார் ஓரம். இதேநேரம், 17 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார் டெய்லர்.
அக்தர் வீசிய 47 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர் இரண்டு பவுண்டரி உட்பட 28 ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய டெய்லர் 117 பந்துகளில் நான்கு சிக்ஸர், ஆறு பவுண்டரி அடங்கலாக சதமடித்தார். இது அவரது, ஒருநாள் போட்டியில் நான்காவது சதமாகும்.
அப்துர் ரெஹ்மான் வீசிய 50 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் அடித்த ஓரம், 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
50 ஓவர்களில் நியூஸிலாந்து ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்கள் எடுத்தது. டெய்லர் ஆட்டமிழக்காது 131 ஓட்டங்கள் எடுத்தார். ஏழு சிக்ஸர், எட்டு பவுண்டரிகள் இவற்றுள் அடங்கும். மில்ஸ் ஆட்டமிழக்காது ஏழு ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி ஆறு ஓவர்களில் நியூஸிலாந்து 114 ஓட்டங்கள் எடுத்தது.
46 ஆவது ஓவரில் ஆறு விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்த நியூஸிலாந்து 50 ஆவது ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது.
கடைசி நான்கு ஓவர்களில் 92 ஓட்டங்கள் எடுத்தனர் நியூஸிலாந்து வீரர்கள். அக்தரின் ஒரு ஓவரில் 28 ஓட்டங்களையும் ரசாக்கின் ஒரு ஓவரில் 30 ஓட்டங்களையும் அடித்தனர்.
303 என்ற பிரமாண்டமான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 41.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. சௌதியின் வேகம் பாகிஸ்தான் வீரர்களைத் தடுமாறச் செய்தது.
பாகிஸ்தான் அணியின் ஆறு விக்கெட்டுகள் 66 ஓட்டங்களில் வீழ்ந்தன. உமர் அக்மல் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
போராடிய அப்துர் ரஸாக் 62 ஓட்டங்கள் எடுத்தார். இவர் ஒரு நாள் போட்டியில் 5000 ஓட்டங்களைக் கடந்தார். உமர் குல் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையவர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை டெய்லர் பெற்றார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Tuesday, March 8, 2011

பெரிய கட்சிகளின் பிடிவாதத்தால்சிறிய கட்சிகளுக்குக் கொண்டாட்டம்

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் திகதி நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சிறிய கட்சிகளுடன் தொகுதியில் பங்கீடு நடத்திவிட்டன. அதிக தொகுதிகள் கேட்டு பெரிய கட்சிகள் முரண்டு பிடிப்பதனால் சிறிய கட்சிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
எந்தக் கூட்டணியில் சேர்வதென்று தெரியாது தடுமாறியது பாட்டாளி மக்கள் கட்சி அதிக தொகுதி அன்பு மணிக்கு ராஜ்ய சபை பதவி தருபவர்களுடன் தான் கூட்டணி என்பதே பாட்டாளிக் கட்சியின் எழுதப்படாத கொள்கை. அதிக தொகுதி கேட்டு காங்கிரஸ் முரண்பட்டு நிற்கையில் ராமதாஸ் எதிர்பார்க்காத நேரத்தில் 31 தொகுதிகளை வாரி வழங்கி தனது தாராள மனதை வெளிப்படுத்தினார் தமிழக முதல்வர் கருணாநிதி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் டாக்டர் ராமதாஸை இணைப்பதற்கு பலர் திரை மறைவில் முயற்சி செய்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனப்படுத்த நினைத்தவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைக்கத் துடித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு இவ்வளவு தான் என்று எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடினர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தாமிழக சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட கருணாநிதி ராமதாஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை முதலில் முடித்தார். ராமதாஸின் இலட்சியக் கனவில் ஒன்றான அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியின் வரவால் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருதுகிறது.
தமிழக முதல்வர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் திருமாவளவன் அணிமாறப் போகிறார் என்று பரபரப்பாகச் செய்தி வெளியானது. எல்லோரையும் போலவே திருமாவளவனும் அதிக தொகுதிகளை எதிர்பார்த்தார். திடுதிப்பென திருமாவளவனுக்கு 10 தொகுதிகளைக் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி. வன்னியரின் வாக்கு வங்கியான ராமதாஸும் தலித்துக்களின் வாக்கு வங்கியான திருமாவளவனும் தமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
ராமதாஸும் திருமாவளவனும் ஒரேகூட்டணியில் நின்று தேர்தலைச்சந்திக்கவில்லை. இருவரும் ஒரே அணியில் இருப்பது பலமானதாகவே கருதப்படுகிறது. இதேவேளை இருவரும் ஒரு அணியில் இருப்பதால் வன்முறை ஏற்பட வாய்ப்பில்லை.
நான்கு கட்சிகளுக்கு 52 தொகுதிகளைக் கொடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். இன்னும் சில சிறிய கட்சிகளுடன் திராவிட முன்னேற்றக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மீண்டும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார் முதல்வர் கருணாநிதி.
ஐந்து சிறிய கட்சிகளுக்கு எட்டுத் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்துள்ளார். ஜெயலலிதா. டாக்டர் கிருஷ்ணசாமியின் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இரண்டு தொகுதிகள் காணாதது என்று அடம்பிடிக்கிறார் கிருஷ்ணசாமி. இரண்டு தொகுதிக்கு மேல் கொடுப்பதற்கு ஜெயலலிதா தயாராக இல்லை.
வைகோவும் இடதுசõரிகளும் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளனர். அவர்களும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். பெரிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை ஜெயலலிதா இன்னமும் ஆரம்பிக்கவில்லை. கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அதிக தொகுதிகளையே வைகோவும் இடதுசாரிகளும் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் அதிக தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், இடதுசாரிக் கட்சிகளும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி விடும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.
நடிகர் விஜயின் தகப்பன் சந்திரசேகர், ஜெயலலிதாவை மூன்று முறைசந்தித்துவிட்டார். இப்பேச்சுவார்த்தைப் பற்றிய விபரம் வெளியே கசியவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் விஜயின் இயக்கத் தொண்டர்கள் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
விஜயின் தகப்பன் சந்தரசேகரனும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. விஜயின் வரவு தனக்கு பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ஜெயலலிதா. காவலன் படம் வெளியிடுவதற்கு தமிழக அரசு முட்டுக் கட்டைப் போட்டது குற்றம்சாட்டிய விஜய் தமிழக அரசுக்கு எதிராகத் தனது பலத்தைச் காட்ட நாகை கூடிய கூட்டத்தில் முக்கியமான முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நாகை கூட்டத்தில் எதுவும் அறிவிக்காத விஜய் தமிழக சட்ட சபைத் தேர்தலில் தமிழக அரசுக்கு எதிராக விஜய் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்திய மத்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாக சாடிவரும் சீமான் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் காங்கிர கட்சியை எதிர்த்து பிரசõரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். சீமானின் அறிவிப்பு ஜெயலலிதாவுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்கு பயிற்றப்பட்ட பேச்சாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் உள்ளனர். இரண்டு கழகங்களிலும் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளனர். சினிமா நடிக, நடிகைகள் பிரசாரத்தில் இறங்குவார்கள். சினிமா கலைஞர்களைப் பார்ப்பதற்கு மக்கள் கூடுவார்கள். சினிமா கலைஞர்களின் பிரசாரத்தால் எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
தமிழக சட்ட சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ரஜினியின் பெயர் பரபரப்பாக அடிபடும். தேர்தல் சமயத்தில் அவர் பிரசாரம் செய்யாவிட்டாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குரல் கொடுத்தாலே போதும் மக்களிடம் அது சென்றடைந்து விடும் என்று அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். தன் மீது அரசியல் செல்வாக்குப் படிவதை விரும்பாத ரஜினி தமிழக சட்ட சபைத் தேர்தலின்போது வெளிநாடு சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழக அரசு நடத்தும் விழாக்களிலும் பங்குபற்றுவதைத் தவிர்த்து வருகிறார்.
தமிழக சட்ட சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. பெரிய கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டின் பின்னர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06/03/11

யுவராஜ் சாதனை : இந்தியா வெற்றி

அயர்லாந்து, இந்திய அணிகளுக்கிடையே நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் யுவராஜின் பந்து வீச்சு துடுப்பாட்டத்தினால் இந்தியா 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
பங்களாதேஷûடனான போட்டியில் தோல்வியடைந்த அயர்லாந்து, இங்கிலாந்துடனான போட்டியில் வெற்றி பெற்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 327 ஓட்டங்கள் அடித்துவிட்டு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு எதிராக 329 ஓட்டங்கள் அடித்து மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற அயர்லாந்து பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.
பங்களாதேஷûடனான போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துடனான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்ததனால் கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா களமிறங்கியது.
இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அயர்லாந்து அணியில் கேரி வில்சன் நீக்கப்பட்டு அன்ரூ வை சேர்க்கப்பட்டார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார். பகல் இரவு போட்டியின்போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்வதே வழமை. டோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்தது.
முதலாவது ஓவரில் சகிர்கானின் வேகத்தில் ஸ்டர்லிங் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நான்கு ஓட்டங்கள் எடுத்த ஜொய்ஸ் ஆட்டமிழந்தார். போட்டர் பீல்ட், நீல் ஓ பிரையன் ஜோடி சிறப்பாக விளையாடி யது. 46 ஓட்டங்கள் எடுத்த பிரயன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 26.5 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது யுவராஜ் பந்து வீசினார். யுவராஜின் சுழலில் அயர்லாந்து விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன.
யுவராஜின் சுழலில் அன்ரூ வைட் (5), கெவின் ஓபிரையன் (9) ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களுக்குத் தொல்லை கொடுத்த அணித் தலைவர் போல்டர் பீல்ட் 75 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது யுவராஜின் பந்தை ஹர்பஜனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய மூனி ஐந்து ஓட்டங்களிலும் கியூசெக் 24 ஓட்டங்களிலும் யுவராஜின் வலையில் வீழ்ந்தனர்.
47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து 207 ஓட்டங்கள் எடுத்தது. 10 ஓவர்கள் பந்து வீசிய யுவராஜ் சிங் 31 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். சகிர்கான் மூன்று விக்கெட்களையும் முனாப் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 208 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 46 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷேவாக்கும் சச்சினும் பவுண்டரிகளுடன் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தனர். ஜோன்ஸ்டனின் பந்தில் ஷேவாக் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ந்தனர். ஜோன்ஸ்டன் தனது சிக்கன் நடனத்தின் மூலம் அயர்லாந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
டெண்டுல்கருடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். 10 ஓட்டங்கள் எடுத்த கம்பீரையும் ஜோன்ஸ்டன் ஆட்டமிழக்கச் செய்தார்.
சச்சினுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இந்திய அணியை காப்பாற்றுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் 38 ஓட்டங்களில் எல் பீ டபிள்யூ முறையில் சச்சின் ஆட்டமிழந்தார். கோஹ்லி 34 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யுவராஜுடன் டோனி இணைந்தார். 41ஆவது ஓவரில் 34 ஓட்டங்கள் எடுத்த டோனி ஆட்டம் இழக்க இந்திய ரசிகர்கள் பதற்றமடைந்தனர். 40.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி.
அடுத்து களமிறங்கிய யூசுப்பதான் இர ண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கையூட்டினார். மறுமுனையில் ஒரு நாள் போட்டியில் 47ஆவது அரைச் சதத்தைக் கடந்தார் யுவராஜ் சிங்.
46 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களும் யூசுப் பதான் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தெரிவு செய்யப்பட்டார். உலகக் கிண் ணப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 50 ஓட்டங்கள் எடுத்த முதலாவது வீரர் என்ற சாதனை வீரராக யுவராஜ் திகழ்கிறார். இதேவேளை உலகக் கிண்ண வரலாற்றில் 31 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் புதிய
சாதனையைச் செய்துள்ளார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Sunday, March 6, 2011

காங்கிரஸின் நிபந்தனையால்தடைப்பட்ட பேச்சுவார்த்தை


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் இருக்கும் போது அவசர அவசரமாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு 37 தொகுதிகளை வாரி வழங்கி காங்கிரஸை மட்டுமல்லாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழகத் தேர்தல் கூட்டணிக்கு கருணாநிதியே தலைமை வகிப்பார். சோனியாவும், கருணாநிதியும் தொலைபேசியில் உரையாடி தொகுதிகள் பற்றிய உடன்பாட்டை முடித்த பின்னரே தமிழக காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்வது வழமை. இந்த முறை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள ஐவர் கொண்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தொகுதி உடன்பாடு பற்றிய காங்கிரஸ் கட்சியின் நிபந்தனைகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. தொகுதிப் பங்கீட்டின் போதே ஆட்சியில் பங்கு என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. ஆட்சியில் பங்கு கொடுப்பதற்குத் திரõவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. திராவிடக் கட்சிகளின் தயவிலேதான் காங்கிரஸ் கட்சி தமிழகத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. தனித்துப் போட்டியிட்டால். காங்கிரஸ் கட்சியினால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாது.
கூட்டணி இல்லாது எல்லாக் கட்சிகளும் தனித்து போட்டியிடும் சூழல் தமிழகத்தில் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் வெற்றி பெறலாம் என்பது காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும். தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா முழங்குகிறார். ராகுல் காந்தியின் குரலாகவே யுவராஜ் செயற்படுகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அதிக தொகுதிகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்த்தது போல் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவியது. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கு பலமுறை முயற்சி செய்தது.
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இணைப்பதற்கு முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறியதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸும் தயாராக இல்லை. தனக்கு ஏற்பட்ட அவமானங்களை ஒரு பொருட்டாக மதிக்காத பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அதிக தொகுதிகளுக்கு ஆப்பு வைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக தொகுதிகளை வாரி வழங்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த சட்ட சபைத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் அதில் 18 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக தொகுதிகளை வழங்கியதால் காங்கிரஸை மட்டுமல்லாது ஜெயலலிதாவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
ஜெயலலிதாவுடன் இரண்டறக் கலந்திருக்கும் வைகோ அதிக தொகுதிகளைக் கேட்டு வருகிறார். வைகோவுக்கு அதிக தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை. வைகோவின் ஆதரவினால் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்ற களம் ஒன்று இருந்தது. இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை இன்றி வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளார் வைகோ. வைகோவின் நெருக்கமான அரசியல் தலைவர்களில் பலர் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சங்கமமாகியுள்ளனர். வைகோவின் தற்போதைய பலம் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். ஆகையினால் அதிக தொகுதிகள் ஒதுக்க மாட்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு முதல்வர் கருணாநிதி கொடுத்த தொகுதி தொகையை ஒப்பிட்டு தனக்கும் அதிக தொகுதி வேண்டும் என்று வைகோ கேட்க வேண்டும் என்பதே கருணாநிதியின் எதிர்பார்ப்பு.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் இணையாக வளர்ந்து வருகிறார் விஜயகாந்த். விஜயகாந்தின் கட்சித் தலைவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியை விட பலம் வாய்ந்த தனக்கு அதிக தொகுதி தேவை என்று விஜயகாந்த், ஜெயலலிதாவிடம் கோர வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தால் சில வேளை பாட்டாளி மக்கள் கட்சி அந்தப் பக்கம் பாயக் கூடும். அப்போது 31 தொகுதிகளை விட குறைந்த தொகுதிகளைக் காங்கிரஸ் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற மறைமுக எச்சரிக்கையை விட்டுள்ளார் கருணாநிதி.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் பெரிய கட்சிகளுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. விஜயகாந்துக்காக ஜெயலலிதாவும் காங்கிரஸும் கதவைத் திறந்து வைத்துள்ளன. விஜயகாந்த் முடிவை அறிவித்த பின்னரே கூட்டணிக் கட்சிகள் பற்றிய உண்மை நிலைவரம் அம்பலமாகும். பெரும் எதிர்பார்ப்புடன் மீனவர்களுக்காக நாகபட்டினத்தில் விஜயகாந்த் நடத்திய கூட்டம் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை. ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் விஜயின் பின்னால் அணி திரண்டனர். அரசியல் பற்றிய முக்கிய முடிவை விஜய் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியது.
தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதும் தாக்கப்படும் போதும் முதல்வர் கருணாநிதி அறிக்கை விடுவதும் பிரதமருக்கும் கடிதம் எழுதுவதும் வழமையானது. பிரதமருக்கும் முதல்வருக்கும் தந்தி அனுப்பும் படி கூறினார் விஜய். இதனை அவர் அறிக்கையாகவே வெளியிட்டிருக்கலாம். விஜயின் அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து விட்டனர்.
விஜயின் பின்னால் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த ரசிகர்களால் உடனடியாக எந்தவிதமான அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. விஜய் ரசிகர்கள் பல கட்சிகளில் உள்ளனர். அவர்களைத் தனது பக்கம் திருப்புவதற்குரிய வேலைத் திட்டத்தை விஜய் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக விஜய் பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. விஜயின் தகப்பன் மூன்று முறை ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்.
அரசியல் சினிமா என்ற இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாகச் சவாரி செய்யும் கருணாநிதிக்கு எதிராக, பலமான அரசியல் கூட்டணியையும் விஜயகாந்த், விஜய் போன்ற சினிமா பிரபலங்களையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் ஜெயலலிதா.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 28/02/11

அசத்தியது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையே பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான உலகக் கிண்ணப் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
இந்தியா வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் 49 ஆவது ஓவரில் அடிக்கப்பட்ட இரண்டு சிக்ஸர்களும் 50 ஆவது ஓவரில் அடிக்கப்பட்ட ஒரு சிக்ஸரும் இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்கள் எடுத்தது.
ஷேவாக்கும் சச்சினும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் புகுந்தனர். அன்டர்ஸன் வீசிய முதலாவது ஓவரில் மூன்று முறை ஷேவாக் தப்பிப் பிழைத்தார் என்றாலும் அவர் தனது அதிரடியைத் தொடர்ந்தார்.
ஷேவாக் சச்சின் ஜோடி 46 ஓட்டங்கள் எடுத்தது. பிரெஸ்னனின் பந்தை பிரையரிடம் பிடிகொடுத்து ஷேவாக் ஆட்டமிழந்தார். 26 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஆறு சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார்.
சச்சின், கம்பீர் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. இவர்கள் இருவரும் இணைந்து 134 ஓட்டங்களை எடுத்தனர்.
அதிரடியாக 22 ஆவது அரைச் சதத்தை அடித்த கம்பீர் ஸ்வான் பந்தில் ஆட்டமிழந்தார். 61 பந்துகளுக்கு முகம் கொடுத்த கம்பீர் ஐந்து பௌண்டரிகள் அடங்லாக 51 ஓட்டங்கள் அடித்தார்.
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் அரங்கில் 47 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் பெற்ற ஐந்தாவது சதமாகும். 103 பந்துகளுக்கு முகம் கொடுத்த சச்சின் நான்கு சிக்ஸர், எட்டு பௌண்டரிகளுடன் சதமடித்தார்.
சச்சின், யுவராஜ் ஜோடி 56 ஓட்டங்களை எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் 120 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 115 பந்துகளுக்கு முகம் கொடுத்த சச்சின் ஐந்து சிக்ஸர், பத்து பௌண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்கள் எடுத்தார்.
யுவராஜ் சிங் 58 ஓட்டங்களிலும் டோனி 31 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 14 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கங்களுடன் நடையைக்கட்ட 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.
இந்தியாவின் நான்காவது விக்கட்டும் ஐந்தாவது விக்கட்டும் 305 ஓட்டங்களில் வீழ்ந்தன. அடுத்து வந்த ஆறு வீரர்களும் 33 ஓட்டங்களையே அடித்தனர்.
10 ஓவர்கள் பந்துவீசிய பிரஸ்னன் 48 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார். ஒரு ஓவரை ஓட்டமற்ற ஓவராக வீசினார்.
339 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 338 ஓட்டங்கள் எடுத்து போட்டியை சமநிலையில் முடித்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஸ்ட்ராஸ் பீட்டர்ஸன் ஆகியோர் சிறந்த அடித்தளத்தை இட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து 68 ஓட்டங்கள் எடுத்தனர். முனாப் பட்டேல் இவர்களைப் பிரித்தார். 22 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்ஸன் ஆட்டமிழந்தார். டிராட் அதிக நேரம் நீடிக்கவில்லை. 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 16.4 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 111 ஓட்டங்கள் எடுத்தபோது ஸ்ட் ரான்ஸுடன் ஜோடி சேர்ந்தார் பெல். இவர்கள் இருவரையும் பிரிப்பதற்கு இந்தியப் பந்து வீச்சாளர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாயின.
மூன்றாவது விக்கட்டில் இவர்கள் இருவரும் இணைந்து 26 ஓவர்களில் 170 ஓட்டங்கள் எடுத்தனர்.
69 ஓட்டங்களில் பெல் ஆட்டமிழந்தார். ஸ்ட்ராஸ் ஆறாவது சதத்தை அடித்தார். 99 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்ட்ராஸ் 13 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்ட்ராஸ் 158 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். கொலிங்வூட் 1, பிளாயர் 8, யாட் 13 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
கடைசி இரண்டு ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சவ்லாவின் பந்து வீச்சில் ஸ்வான், பிரிஸ்ரன் ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் அடிக்க இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமானார்கள். 49 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பிரிஸ்ரன் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
கடைசி ஓவரில் வெற்றி பெற 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முனாப் பட்டேல் பந்து வீசினார். முதலாவது பந்தில் ஒரு ஓட்டம், இரண்டாது பந்தில் இரண்டு ஓட்டங்கள், மூன்றாவது பந்தில் அஜ்மல் ஷாஸாத் அபாரமான சிக்ஸர் அடிக்க இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமானார்கள். இரண்டு பந்தில் நான்கு ஓட்டங்கள் என்ற நிலையில் பந்தை எதிர்கொண்ட ஸ்வான் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரே ஒரு ஓட்டத்தை மட்டும் இங்கிலாந்து எடுத்தது. பிரமாண்டமான இலக்கை விரட்டியும் வெல்ல முடியாது சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து ஆட்டநாயகனாக ஸ்ட்ராஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

பரபரப்பான ஆட்டதில் வென்றது பாகிஸ்தான்



பாகிஸ்தான் இலங்கை ஆகியவற்றுக்கிடையே ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்தது.
இரு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றிக் காக களமிறங்கின. இலங்கை கனடாவுக்கு எதிராக 332 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் கென்யாவுக்கு எதிராக 317 ஓட்டங்கள் எடுத்தது. முதலாவது போட்டியில் துடுப்பாட்டத்தில் தமது பலத்தை நிரூபித்த இரு அணிகளும் மோதிய இப்போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின.
பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் சாமர கபுகெதர, மெண்டிஸ் நீக்கப்பட்டு சாமர சில்வா, ரங்கன ஹேரத் ஆகியோர் விளையாடினர். முதுகு வலியால் அவதிப்பட்ட மலிங்க குணமடையாததால் அணியில் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமது ஷெசாத், பெரேராவின் பந்தை சங்கக்காரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தõர். குலசேகரவின் பந்தில் அடுத்தடுத்து சிக்ஸர் பவுண்டேரி அடித்து ஆடிய முஹம்மது ஹபீஸ் 32 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். கம்ரன் அக்மல் சிறிது நேரம் மிரட்டி விட்டு 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20.2 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்தி ருந்த போது யூனுஸ்கானுடன் மிஷ்பா உல் ஹக் இணைந்தார். அனுபவ வீரர்க ளான இவர்கள் இணைந்து பொறுப்பாக விளையாடினர்.
ஒருநாள் அரங்கில் 41 ஆவது அரைச் சதமடித்த யூனுஸ்கான் ஹேரத்தின் பந் தை மஹேலவிடம் பிடிகொடுத்து 72 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பவர் பிளே யில் வீசிய முரளியின் பந்தில் பாகிஸ்தான் வீரர் அதிக ஓட்டங்களை அடிக்கவில்லை.
10 ஓட்டங்கள் எடுத்த உமர் அக்மல் முரளியின் பந்தில் ஆட்டமிழந்தார். அப்ரிடி 16, அப்துல் ரஸாக் மூன்று ஓட்டங்கள் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்த போதும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்களில் பாகிஸ்தான் ஏழு விக்öகட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்தது.
பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் மத்தியூஸ், முரளி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 278 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 50 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்தது 266 ஓட்டங்கள் எடுத்து 11 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தரங்க, டில்ஷான் ஆகியோர் நல்ல முறையில் விளையாடினர். இருவரும் இணைந்து 14.2 ஓவர்களில் 76 ஓட்டங்கள் எடுத்தனர். தரங்க 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டில்ஷான் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மஹேல இரண்டு ஓட்டங்களுடனும் சமரவீர ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் சங்கக்கார, சமரவீர ஜோடி சிறிது நேரம் நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. 45 ஓட்டங்கள் எடுத்த சங்கக்கார, அப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கையின் ஆதிக்கம் ஆட்டம் கண்டது.
18 ஓட்டங்கள் எடுத்த மத்தியூஸையும் அப்ரிடி வெளியேற்ற இலங்கையின் உற்சாகம் களை இழந்தது. எட்டு ஓட்டங்களை எடுத்த பெரேரா அக்மலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் போராடிய சாமர சில்வா 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இலங்கைக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இரண்டு விக்கட்டுகள் கைவசம் இருந்தன. உமர்குல் வீசிய முதல் பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் ஹேரத் ஒரு ஓட்டம் எடுத்தார். மூன்றாவது பந்தில் குலசேகர பௌண்டரி அடித்தார். நான்காவது பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் குலசேகர ஆட்டமிழந்தார். ஆறாவது பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது.
50 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 266 ஓட்டங்கள் எடுத்த இலங்கை 11 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
அப்ரிடி நான்கு விக்கட்டுகளை அக்தர் 2 விக்கட்டுகளையும் உமர்குல், மொஹமட் ஹபிஸ், அப்துல் ரஹ்மான் ஆகி யோர் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார். இலங்கை வீரர்கள் 9 உதிரிகளையும் பாகிஸ்தான் வீரர்கள் 29 உதிரிகளையும் விட்டுக் கொடுத்தனர்.
பெட் பறந்தது
42 ஓவது ஓவரில் அப்ரிடி வீசிய பந்தை அடிக்க முற்பட்டார் சாமர சில்வா. அப்போது அவரது கையில் இருந்து நழுவிய பெட் ஸ்கொயா லெக் திசையில் நின்ற நடுவர் ஹார்பரை நோக்கி பறந்தது. சாதுர்யமாக விலகியதால் காயமின்றி தப்பினார்.
முரளிதரன் 2 ஆவது இடம்
பாகிஸ்தான் வீரர் உமர்குல்லின் விக்கட்டை கைப்பற்றிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், உலகக் கிண்ண போட்டிகளில் அதிக விக்öகட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறினார். இவர் 33 போட்டியில் 56 விக்கட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முன்னாள் பாகிஸ்தான் தலைவர் வசிம்அக்ரம் (55 விக்கட்) 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் முன்னாள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் (71 விக்கட்) நீடிக்கிறார்.
தொடரும் ஆதிக்கம்
உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றிநடை தொடர்கிறது. ஏழாவது முறையாக இலங்கையை வீழ்த்தியது. முன்னதாக கடந்த 1975, 83, 87, 92 இல் நடந்த உலகக் கிண்ணத் தொடர்களில் பாகிஸ்தான் அணி இலங்கையை ஆறு முறை வீழ்த்தியது.
அப்ரிடி 300
இலங்கை அணிக்கு எதிராக சுழலில் அசத்திய பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி, ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் தனது 300 ஆவது விக்கட்டை பதிவு செய்தார்.
இதுவரை 314 போட்டியில் பங்கேற்று 301 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 300 விக்கட்டுக்கு மேல் கைப்பற்றிய 3 ஆவது பாகிஸ்தான் வீரர் மற்றும் 11 ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
குழப்பத்தை ஏற்படுத்திய ரன்அவுட்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டபோது 14 ஆவது ஓவரில் முஹம்மட் ஹபீஸ், முரளிதரன் வீசிய பந்தை ஸ்வீப் செய்து ஷார்ட் பைன் லெக்கில் திருப்பினார். ஆனால் பீல்டர் கைக்கு சென்றதால் அவர் ரன் எடுக்க முயற்சிக்கவில்லை. அதே சமயம் எதிர்முனையில் நின்ற கம்ரன் அக்மல், முஹம்மது ஹபீஸ் பக்கம் வேகமாக ஓடி வந்துவிட்டார்.
ஆனால் ஹபீசும் ஒரு அடி கூட நகரவில்லை. இருவரும் ஒரே முனையில் நின்றனர். இதையடுத்து விக்கட் காப்பாளர் சங்கக்கார தன் கைக்கு வந்த பந்தை துடுப்பாட்ட வீரர் இல்லாது இருந்த எதிர்முனையில் இருந்த பந்து வீச்சாளரான முரளிதரனை நோக்கி வீசினார். ஆனால் பந்து முரளியின் கைக்கு எட்டவில்லை.
இதனை கவனித்த முஹம்மது ஹபீஸ் ஓரிரு அடி தூரம் ஓட முயற்சித்து விட்டு, மீண்டும் தனது கிரீசை நோக்கியே திரும்பினார். இதற்குள் இலங்கை வீரர்கள் எதிர்முனையில் ரன்அவுட் செய்தனர். ஆனால் எந்த துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதனால் நடுவர்கள் ஆலோசனைக்குப் பிறகு சில அடி தூரம் கிரீசை விட்டு நகர்ந்த ஹபீஸ் ஆட்டமிழந்தார் என்று அறிவித்தனர்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

கெமர்ரோச் ஹட்ரிக் ; கெய்ல்ஸ் , போலார்ட் அதிரடி

மேற்கு இந்தியத் தீவுகள், நெதர்லாந்து ஆகியவற்றுக்கிடையே டில்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 215 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்மித், கெய்ல்ஸ் இணைந்து 16.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஸ்மித் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களம் புகுந்த டெரன்பிராவோ, கெய்ல்ஸுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 68 ஓட்டங்கள் எடுத்தனர். ஒருநாள் அரங்கில் 43 ஆவது அரைச் சதமடித்த கெய்ல்ஸ் 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 110 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் இரண்டு சிக்ஸர், ஏழு பவுண்டரிகளும் 80 ஓட்டங்கள் எடுத்தார். டெரன் பிராவோ 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
நான்காவது விக்கெட்டில் இணைந்த சர்வான், போலார்ட் ஜோடி 65 ஓட்டங்கள் எடுத்த போது சர்வான் 49 ஆட்டமிழந்தார். சமீ 6 சந்ரபோல் நான்கு ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய போலார்ட் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் நான்கு சிக்ஸர், ஐந்து பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார்.
50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை மே.இந்தியத் தீவுகள் பெற் றது. சீலார் மூன்று விக்கெட்டுகளையும் புகாரி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
331 என்ற பிரமாண்டமான இலக்குடன் களம் புகுந்த நெதர் லாந்து அணி கெமர் ரோச்சின் பந்து வீச்சில் நிலைகுலைந்த 31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்கள் எடுத்து 215 ஓட்டங்களில் தோல்வியடைந்தது. கெர்வெஸ்ஸி 4, பெரஸ்ஸி 0, இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்து மிரட்டிய டஸ்காட்டே 7, கயிடெரண்ட் 1 போன்றோர் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஏழாவது விக்கெட்டில் இணைந்த டொம் கூப்பர், புகாரி ஜோடி போராடியது. டொம் கூப்பர் ஒரு நாள் அரங்கில் 6 ஆவது அரைச் சதம் அடித்தார். புகாரி 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மூன்று வீரர்களையும் கெமர்ரோச் ஆட்டமிழக்கச் செய்து ஹட்ரிக் சாதனை புரிந்தார். சீலார் ஒரு ஓட்டத்துடனும் லூட்ஸ், வெஸ்டிஜர் ஆகியோர் ஓட்டமெதுவும் எடுக்காமலும் கெமர் ரோச்சின் பந்து வீச்சில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.
31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து 115 ஓட்டங்கள் எடுத்து 215 ஓட்டங்களால் ஆட்டமிழந்தது. பென் ஒரு விக்கெட்டுக் களையும், சமி ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர். 8.3 ஓவர்களில் 27 ஓட்டங்களைக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய கெமர் ரோச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்