Showing posts with label உலகக்கிண்ணம்2011. Show all posts
Showing posts with label உலகக்கிண்ணம்2011. Show all posts

Wednesday, June 22, 2011

வெற்றியை எதிர்வுகூறத் தயாராகிறது ஒக்டோபஸ்




ஜேர்மனியில் நடக்க இருக்கும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் ஆருடம் கூறுவதற்காக 8 ஒக்டோபஸ்கள் தெரிவு செய்யப்பட்டு பல பயிற்சிகளும் நடைபெறுகின்றன.
கடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் வெற்றியாளரைச் சரியாக ஆருடம் செய்த போல் என அழைக்கப்பட்ட ஒக்டோபஸ் மரணமானதைத் தொடர்ந்து இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறுகிறார் ஜேர்மனியைச் சேர்ந்த பிரிட்டா அன்லொவ்.
ஜேர்மனியில் நாளை மறுதினம் போட்டி ஆரம்பமாகிறது. போட்டி நடக்கும் மைதானங்களில் ஒரே விதமான இயந்திரங்கள் வைக்கப்படும். ஜேர்மனியில் பங்கு பற்றும் ஒவ்வொரு போட்டியிலும் காலை 11 மணிக்கு இவை பேர்லின் ஹனேவர் கொசிக்ஸ்வின்னர், கொன்ய்ரன்ஸ், மூனிச், ஸ்மேயர், ரிமென்டோவர், போலின் சொந்த ஊரான ஓபர் சுனி ஆகிய இடங்களில் களமிறக்கப்படும்.
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் கடந்த போட்டியின் 3 ஆவது ஜேர்மனி விளையாடிய எட்டு போட்டிகளிலும் முடிவை போல் ஆருடம் காட்டியது. அதே விதிமுறை இம்முறையும் பின்பற்றப்படும் எனத் தெரிகிறது.
பிரிட்டனில் பிறந்த அந்த ஒக்டோபஸ் இன் சாகசங்கள் உலகெங்கும் பிரபல்யமானது. இதன் மூலம் பல பந்தயக் காரர்கள் நட்ட பணத்தை சம்பாதித்துள்ளார்கள். இப் பிராணியை போல் உலக கோப்பை இறுதி போட்டியில் நெதர்லாந்தை ஸ்பெயின் வெற்றி கொள்ளும் என்றும் ஆருடம் கூறியது.

மகளிருக்கான உலகக் கிண்ண உதைபந்தாட்ட நுழைவுச் சீட்டுகள் விற்பனை





ஜேர்மனியில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் பெண்களுக்கான உலகக் கிண்ண போட்டிக்கு ஆறு இலட்சத்து 70 ஆயிரம் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இப் போட்டிகளுக்கான பொது விற்பனைக்கென ஒதுக்கப்பட்டுள்ள 900,000 நுழைவுச் சீட்டுகளில் 75 வீதத்தை உள்ளடக்கியதாகவே இத்தொகை அமைந்துள்ளதாக உள்ளூர் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்டெபி ஜோன்ஸ், ஜேர்மன் பராபோட்டிங்கிலுள்ள உதைபந்தாட்டக் கழகத் தலைமையகத்தில் தெரிவித்தார்.
முப்பத்திரண்டு ஆட்டங்களில் முப்பது ஆட்டங்களுக்கென ஆகக் குறைந்தது 10,000 நுழைவுச்சீட்டுகள்விற்றுத் தீர்க்கப்பட்டுள்ள அதேவேளை, ஜேர்மனியில் முதன் முதலாக நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளுக்கான ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதன் அடையாளமாக பதினைந்து போட்டிகள் தலா 20,000 ரசிகர்கள் மத்தியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ஜோன்ஸ் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மனியில் நடைபெறவுள்ள பெண்களுக்கான உலகக் கிண்ண உதைபந் தாட்டப் போட்டிகள் வெற்றிகரமானவையாகத் திகழப்போவதனை இத்தகைய ரசிகர்களின் நல்லாதரவு பறைசாற்றுகிறதெனவும் விளையாட்டரங்குகளின் மொத்த கொள்ளளவின் 80 வீதமான இருக்கைகளை இதன் மூலம் எம்மால் நிரப்பிக் கொள்ள முடியுமெனவும் ஜேர்மனியில் கொள்வனவு செய்யப்படும் நுழைவுச் சீட்டுகளுக்கு மேலதிகமாக தன்சானியா, பொலிவியா, பிஜி மற்றும் லெபனான் உள்ளிட்ட ஏனைய ஐம்பது நாடுகளிலிருந்தும் நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவுக் கட்டளைகள் வந்து குவிந்துள்ளதாகவும் கூறினார். மேலும் ஜேர்மனியில் உள்ள ஜப்பான், பிரேசில் மற்றும் அமெரிக்க வெளிநாட்டு குழுக்கள் மூலம் அந்தந்த நாடுகளின் பார்வையாளர்கள் சார்பான விண்ணப்பங்களை ஏற்பாட்டுக்குழுவின் நுழைவுச் சீட்டு நிலையம் கையாண்டு வருவதாகவும் கடந்த வாரம் ஜப்பானில் முடிவடைந்த தங்கள் நல்வரவுச் சுற்றுலா மூலம் இச்சுற்றுப் போட்டிகளுக்கான சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாகவும் பல்வகை கலாசாரப் பின்னணியைக் கொண்ட ரசிகர்கள் கூட்டம் இச்சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க தமக்கு வலு சேர்க்கும் ஒன்றாகத் திகழ்வதனை தாம் மனமுவந்து வரவேற்பதாகவும் ஜோன்ஸ் மேலும் தெரிவித்தார்.

மெட்ரோநியூஸ்