Showing posts with label சிலி. Show all posts
Showing posts with label சிலி. Show all posts

Tuesday, June 17, 2025

சிலி உதைபந்தாட்ட பயிற்சியாளர் இராஜினாமா

 உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில்  பொலிவியாவிடம் 2-0 என்ற   கோல் கணக்கில் சிலி அணி தோல்வியடைந்ததை அடுத்து, தலைமை பயிற்சியாளர் ரிக்கார்டோ கரேகா இராஜினாமா செய்தார்.  இந்தத் தோல்வியின்  மூலம்  2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை சிலி இழந்தது..

  தென் அமெரிக்க தகுதிப் போட்டியில் சிலி அணி 10வது தோல்வியை சந்தித்தது. 10 நாடுகள் கொண்ட  குழுவில் சிலி அணி கடைசி இடத்தில் உள்ளது.  பிளேஆஃப்  வாய்ப்பையும் இழந்தது.

  2024 ஆம் அண்டு  ஜனவரியில் ரிக்கார்டோ கரேகா பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்றார்.அவருடைய தலைமையில்  13 போட்டிகளில் விளையாடிய சிலி  ஒரே ஒரு போட்டியில் மட்டும்  வெற்றி பெற்றது.

2015 , 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோபா அமெரிக்கா பட்டங்களை வென்ற சிலி, 2018,2022 ஆம் ஆண்டுகளில்  உலகக்கிண்ணப் ஓட்டியில் விளையாடத் தகுதி  பெறாத சிலி   தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்  கிண்ணப் போட்டியைத்  தவற விடுகிறது.

Tuesday, May 17, 2022

ஈக்குவடார் அணியில் தகுதியற்ற வீரர்


  உலகக் கிண்ண‌ தகுதிச் சுற்று ஆட்டங்களில் தகுதியற்ற ஒரு வீரரை ஈக்குவடார் களமிறக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பீபா ஒழுங்குக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஈக்குவடோர் அணிக்காக உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய   பைரன் காஸ்டிலோ உண்மையில் கொலம்பியாவில் பிறந்தவர் என்றும் ஈக்வடோர் அதிகாரிகள் கூறுவதை விட மூன்று வயது மூத்தவர் என்றும்சிலி  உதைபந்தாட்ட  கூட்டமைப்பு   குற்றம் சாட்டுகிறது. எட்டு தகுதிகாண்  போட்டிகளில் காஸ்டிலோ விளையாடினார்.

  விசாரணையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈக்குவடோர் உதைபந்தாட்ட கூட்டமைப்பு  கூட்டமைப்பு,பெருவியன்  உதைபந்தாட்டச் சங்கம் ஆகியவை  பீபா ஒழுங்குமுறைக் குழுவிடம் தங்கள் நிலைப்பாட்டை சமர்ப்பித்தன‌.

ஏப்ரல் 2021 இல் ஈக்குவடோர் வடார் நீதிமன்றம், காஸ்டிலோ ஈக்வடோஒர் நாட்டவர்   என்றும், நவம்பர் 10, 1998 அன்று ஈக்வடோரில் பிறந்தவர் என்றும் தீர்ப்பளித்தது.

  காஸ்டிலோ ஜூலை 25, 1995 இல் கொலம்பியாவில் உள்ள டுமாக்கோவில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது.  காஸ்டிலோ மீதான   விசாரணையில் அவர் கொலம்பியனாக இருப்பதை உறுதிசெய்ததாகவும், சிவில் விசாரணையில் வீரர் வழங்கிய பிறப்புச் சான்றிதழானது மற்ற பதிவுகளுடன் முரண்படுவதாகவும், மோசடி செய்யக்கூடியதாகவும்   குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான  உலகக் கிண்ண குரூப் சுற்றுப் போட்டியில்  கட்டார், நெதர்லாந்து, ஆப்பிரிக்க ச‌ம்பியன் செனகல் ஆகிவற்றுருடன் ஈக்வடார் அணி  உள்ளது.