Showing posts with label திரைக்கு வராத சங்கதி. Show all posts
Showing posts with label திரைக்கு வராத சங்கதி. Show all posts

Tuesday, December 3, 2024

பத்திரிகைத் துறையில் சிறந்த ஆளுமை


 இலங்கையில் இன்று அச்சு ஊடகத் துறை பல்வேறு  சவால்களுக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்த கடும் பிரயத்தனப்பட்டு வருகையில் இத் துறையில் அவ்வப்போது பலர் கோலோச்சி வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  வாசகர்கள் மத்தியில் என்றுமே தங்களின் ஆளுமையால் சிறப்பான இடத்தை பலர் பிடித்துள்ளனர்.அவர்களில் ஒருவராகவே வடமராட்சி வதிரியின் மைந்தன் சூரன்.ஏ. ரவிவர்மா (ரமணி) தனது பணியை தொடர்கிறார்.    

1997 ஏப்பிரல் 6 ஆம் திகதி ‘தினக்குரல்’ பத்திரிகை கொழும்பில் ஆரம்பமான ஓரிரு தினங்களில் உதவி ஆசிரியராக இணைந்த இவர்  பல வருடங்களாக தினக்குரலில் சேவையாற்றி செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல், குறிப்பாக புதன் வசந்தம் பகுதியில் விளையாட்டு,சினிமா உட்பட பல்வேறு  கட்டுரைகளை எழுதி பத்திரிகையை பலப்படுத்தினார்.
இந்த நிலையில் இவரது  ஆற்றலால் ‘இடி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். அதனைத் தொடர்ந்து சுடரொளிப் பத்திரிகையிலும் அரிய சேவையாற்றினார். அதன் பின்னர் வீரகேசரியில் இணைந்து செய்தித் தொகுப்பு, கட்டுரை எழுதுதல்  ஆகியவற்றில் தனித்துவத்துடன் மிளிர்ந்தார். ‘மெற்றோ நியூஸ்’, ‘மித்திரன்’, ‘வீரகேசரி வார மலர்’ ஆகியவற்றில் பல கட்டுரைகளைத் திறம்பட எழுதினார்.
அங்கிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட பத்திரிகைத் துறையிலிருந்த ஆர்வம் காரணமாக பல பத்திரிகைகள், இணையத் தளங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் உட்பட வெவ்வேறு துறைகளிலும் பல சிறப்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். அரசியல், விளையாட்டு,சினிமா ஆகியவற்றில் இவர் கொண்டிருக்கும் மிகுந்த ஆர்வம் காரணமாக அத்துறைகளில் இவர் எழுதும் கட்டுரைகள் மிகக் கவனிப்பிற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியுள்ளது.தற்போது சினிமா தொடர்புடையதாக இவரது இந்நூல் வெளிவருகிறது.
மிகவும் நேர்மையான ஒரு பத்திரிகையாளரான இவர், பத்திரிகா தர்மத்திற்காக எப்போதும் பாடுபட்டவர். இப்பொழுதும் தனது வயது மூப்பினையும் பொருட்படுத்தாது இருபத்து நான்கு மணிநேரமும் பத்திரிகைத் துறையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தற்போது ‘தீம்புனல்’ மின் இதழின் பிரதம ஆசிரியராக இருக்கும் இவரால் வாசகர்களின் எண்ணங்களுக்கேற்ப பல்துறை இதழாக அது பரிமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

த.சிவகணேசன்
செய்தி ஆசிரியர்  
தினக்குரல் 

Friday, November 29, 2024

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி” – அணிந்துரை


 ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம்

சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர். வடமராட்சி மண்ணின் மைந்தன் அவரின் தொடர்பு இந்த இணைய உலகில் தான் கிடைத்தது.

ரவிவர்மாவின் எழுத்துகளை வலைப்பூக்கள் வழியாகப் படித்த போதும், “வடக்கே போகும் மெயில் என்ற அவரது சிறுகதைத் தொகுதியைப் படித்த போதும், என் பால்யகாலத்தில் ஊடகராக இயங்கிக் கொண்டு எழுத்தாளராகப் பரிணமித்த நெல்லை.க.பேரன் தான் நினைவுக்கு வந்தார்.

தான் கொண்ட களத்துக்கேற்ப எழுத்தைக் கொடுக்கும் பட்டறவு ரவிவர்மாவிடம் உண்டு. அதனால் தான் அவரின் பிரதேச வழக்கியல் சார்ந்த மொழி நடையோடு சிறுகதைகளை எழுதியவர், திரைக்கு வராத சங்கதி வழியாக ஒரு பொதுத்தமிழைக் கையாண்டிருக்கிறார். இதனால் ஈழத்தவருக்கு மட்டுமன்றி தமிழகத்தவரும் இலகுவில் இவரின் மொழி நடையோடு இயல்பான வாசிப்பனுபவத்தைப் பெற முடியும்.

ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும். சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது.

இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.

ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் குறித்த நூல்களை அந்த நிறுவனம்சார்ந்தவர்களாலேயே எழுதப்பட்டதைப் படித்த வகையில் சொல்கிறேன், “ஏவிஎம் படத்தலைப்பில் வாழும் நடிகர்கள் என்ற கட்டுரையைப் படித்த போது அந்த நூல்களில் கூட இடம்பெறாத செய்திகளும், அப்படியே இடம்பெற்ற செய்திகளையும் தகுந்த முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 

படக்கதைகள் உருமாறிய வரலாறுகளையும், படத் தலைப்புகள் தலைமுறை கடந்து பயன்படுத்தப்பட்ட பாங்கையும் இணைத்து கட்டுரைகள் கொடுத்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞர் மனசு வைத்தால் கூட நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தமுடியும் என்பதையும் ஒரு கட்டுரை சொல்லி வைக்கின்றது.

இலட்சிய நடிகருடன் ஜோடி சேர மறுத்த பானுமதி கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் பானுமதியின் கர்வமான தோற்றம் தான் தோன்றி மறையும், ஆனால் அதன் பின்னால் நெகிழ வைக்கும் பின்னணியைக் கொடுக்கிறார். சினிமாவில் கூட யதார்த்தம் பேணிய முன்னோர்கள் என்பதை அது உணர்த்துகிறது.

கவிஞர் முத்துலிங்கத்துக்காக எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிக் கொடுத்த பாட்டைப் பற்றி அவரே சுவைபடக் கூறினாலும் இங்கே அதைப் பற்றி எழுதும் ரவிவர்மா அதன் நீட்சியாக முத்துலிங்கம் குறித்த தகவல்களை இன்றைய சந்ததிக்கும் சொல்லி வைக்கிறார்.

தோல்வியை வெற்றியாக்கும் சூக்குமம் கைவரப்பெற்ற படைப்பாளிகளும் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவற்றை வெற்றிபெற்ற படங்களுக்குப் பின்னால் சொல்லியும் இருக்கிறார்கள். எழுத்தாளரும் தன்னுடைய கட்டுரைப் பதிவில் இத்தகு உதாரணங்களோடு எழுதிச் செல்கிறார்.

தமிழ்த் திரையுலகின் பழைய வரலாறுகளை மட்டுமன்றி கடந்த தசாப்தத்தில் புதிய அலையைப் படைத்த செல்வராகவன் குறித்த பின்னணியும் உண்டு. இன்று இசைஞானி இளையராஜா, கலைஞானி கமல்ஹாசன் என்ற பட்டங்களோடு அடையாளப்படுபவர்களின் ராசியை கலைஞர் வழங்கிய காலத்தால் அழியாத பட்டங்கள் வழிப் பதிவு செய்கிறார்.

இயக்குநர் பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி, தன் தந்தை திடீரென்று இறந்த போது கடன்காரர் தொல்லையால் குடும்பம் அவஸ்தைப்பட்ட சூழலில் தன் அண்ணனும், தானும் சேர்ந்து போய் அழுது கொண்டே எம்.ஜி.ஆரைச் சந்தித்து அவர் உதவிய வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.இங்கோ பந்துலுவோடு எம்.ஜி.ஆருக்கு இருந்த பந்தத்தைக் காட்டி நிற்கின்றார் ரவிவர்மா.

ஒரு காலத்தில் திரைப்பட நாயகிகள் தற்கொலை செய்து கொள்ளும் வரலாறு போய், இன்று சின்னத்திரைக் கலைஞர்கள் தற்கொலை செய்யும் அவலத்தையும் காட்டுகிறார்.

கண்ணகி சிலைக்கு மாதிரி உருவமாக அமைந்த நடிகை விஜயகுமாரி குறித்துப் பதிவு செய்யும் போது அவரின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் கொடுக்கிறார். 

நடிகர் விஜயகுமார் சினிமாவுக்கு வந்த கதையே ஒரு சினிமா ஆக்கக் கூடிய சுவாரஸ்யம் நிறைந்தது. அந்த சுவாரஸ்யம் ரவிவர்மாவில் எழுத்தில் மின்னுகிறது.  

சந்திரபாபு குறித்த கட்டுரையைப் படிக்கும் போது அதை நீட்டி முழு வரலாற்று நூலாக்கக் கூடிய பண்பு அமைந்திருக்கின்றது.

இன்று உறுதிப்படுத்தப்படாத பொய்ச் செய்திகளோடும், பரபரப்பு அறிக்கைகளோடும் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திரை இலக்கியத்தை மெய்த்தன்மை பொருந்திய வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுத்த ரவிவர்மாவுக்கு இந்த வேளை மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

Sunday, March 22, 2009

திரைக்கு வராத சங்கதி 5


முறைப்படி சங்கீதம் கற்காது தனது இசைஞானத்தாலும் குரல்வளத்தாலும் நாடக மேடையிலும் தமிழ் சினிமாவிலும் கோலோச்சியவர் வி.என்.சுந்தரம். தஞ்சாவூர் மாவட்ட விகலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஆலாஸ்ய சுந்தரம் நாடக மேடையில் புகழ் பெற்றபோது விளம்பரங்களில் பெயரை பெரிதாக எழுதுவதற்காக வி.என். சுந்தரம் ஆனார்.திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாதஸ்வர ஜாம்பவான்களின் இசை ஜாலங்களை சுருதி பிசகாது தனது ஏழு வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார் வி. என். சுந்தரம். தங்கள் நாதஸ்வரத்தில் இருந்து வெளியாகும் உருப்படிகளை சிறுவன் சுந்தரம் பாடுவதைக்கேட்ட நாதஸ்வர மேதைகள் ஆச்சரியப்பட்டார்கள்.வி.என். சுந்தரத்தின் திறமையைக் கேள்விப்பட்ட நடராஜ கான சபா என்ற சிறுவர் நாடக கொம்பனியின் முதலாளி சுந்தரம்பிள்ளை சுந்தரத்தை தனது நாடகக் கொம்பனியில் சேர்த்தார். மாமிசமும், சைவமும் ஒரே இடத்தில் சமைக்கப்படுவதை சுத்த சைவனான சுந்தரத்தினால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாக அங்கிருந்து விலகி மதுரை பாலவினோத சங்கீத கயா என்ற பாய்ஸ் கொம்பனியில் சேர்ந்தõர்.சிறந்த குரல் வளமும் எடுப்பான தோற்றமும் கொண்ட சுந்தரம் ராஜ பாட்டாக நடித்த பின்னாளில் இசைச்சித்தர் என்ற பட்டப் பெயருடன் பின்னணிப் பாடகராக சி.எஸ். ஜெயராமன் அவருக்கு ஜோடியாக பெண் வேடத்தில் நடித்தார்.
நாடகங்களில் மெய்மறந்து நடிகர்களின் மீது அபிமானம் கொண்டவர்களில் ஒருவரான கவிராயர் மதுரபாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தின் பரமரசிகரானார். சென்னையில் உள்ள இசைத்தட்டு நிறுவனம் இராமாயண நாடகத்தை இசைத்தட்டாக வெளியிடுவதற்கு ராமர் வேஷத்தில் பாட ஆள் தேவையென விளம்பரம் செய்தது. இதனை அறிந்த கவிராயர் மதுர பாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றார். ராமர் வேஷத்தில் வேறு ஒருவர் பாடி விட்டார். வி.என். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட நிறுவன முகாமையாளர் எம்.என். ஐயங்கார் சுந்தரத்தை அங்கேயே தங்கும்படியும் வாய்ப்பு வரும் போது பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். அய்யங்கார் கூறிய வாய்ப்பு மார்க்கண்டேயர் என்ற படத்தின் மூலம் வி.என். சுந்தரத்துக்குக்கிடைத்தது. மார்க்கண்டேயர் படத்தில் நடிப்பதற்காக 16 வயதுடைய ஒருவரைத் தேடினார்கள். இதனை அறிந்த பாஸ்கரதாஸ் வி.என்.சுந்தரத்தை அழைத்துச் சென்றார். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட இயக்குநர் முருகதாஸன், படப்பிடிப்பாளர் ராம்நாத்தும் திருப்தியடைந்தார்கள்.
1934 ஆம் ஆண்டு வி.என். சுந்தரம் நடித்த மார்க்கண்டேயர் என்ற படம் வெளியானது. அதன் பின்னர் பட்டினத்தார், சந்தரஹாசன், சுந்தரமூர்த்தி நாயனார், கண்ணப்ப நாயனார், சங்கராச்சாரியார், சுபத்ரா அர்ஜுன மணிமான், ராஜசூயம், தள அமராவதி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
பாடல்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வசனங்கள் புகழ் பெற்ற காலத்தில் வி.என். சுந்தரத்துக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போனது.
கதாநாயகனான வி.என். சுந்தரம் பின்னணிப் பாடகரானார். மணமகள்,தெனாலிராமன், கூண்டுக்கிளி, மாலையிட்ட மங்கை, ஒளவையார் ஆகிய படங்களில் பின்னணி பாடினார்.கல்யாணம் பண்ணிப்பார்,பிரம்மச்சாரி, தெனாலிராமன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய பாடங்களில் சிவாஜிக்காக பின்னணி பாடினார்.
1964 ஆம் ஆண்டு பாலையாவுக்காக பின்னணி பாட சந்தர்ப்பம் கிடைத்தது. மெட்டுப் படிக்காததால் பாமா விஜயம் படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடலில் வாயசைக்கும் நான்கு நடிகர்களுக்கும் ரி.எம். எஸ்.பின்னணி பாடினார்.திரை உலக வாழ்வு முடிந்ததும் நாடகங்களில் ரி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக பெண்வேடத்தில் நடித்தார்.
ரமணி
மித்திரன் 22/ 03 /2009

Thursday, March 19, 2009

திரைக்குவராதசங்கதி 4


இசை அமைப்பாளர்களில் அதிகமானோர் ஹார்மோனியக் கலைஞர்கள். இதற்கு விதிவிலக்கானவர் டி.ஆர்.பாப்பா, மிகப் பிரபல்யமான வயலின்கலைஞர்களில் டி.ஆர்.பாப்பாவும் ஒருவர்.டி.ஆர்.சிவசங்கரன் என்ற இயற்பெயர்கொண்டவர் டி. ஆர்.பாப்பா. அவரின் தகப்பன் ராதாகிருஷ்ணபிள்ளை ஒரு வயலின் கலைஞர். வருமானம்குறைவான காரணத்தினால் டி.ஆர்.பாப்பாவின்படிப்பு தடைப்பட்டது. சிறு வயதிலேயே தஞ்சைதிருவையாறு உற்சவத்திற்கு டி.ஆர். பாப்பா சென்றபோது அவரது தகப்பனின் நண்பரான வயலின்வித்துவானான கும்பகோணம் சிவனடிபிள்ளைடி.ஆர்.பாப்பாவைத் தன்னுடன் விடும்படி அவரின் தகப்பனாரிடம் கேட்டார். அவரின் வேண்டு
கோளின்படி டி.ஆர். பாப்பாவை வயலின் மேதைகும்பகோணம் சிவனடி வேலுப்பிள்ளையிடம் ஒப்படைத்தார் தகப்பன்.
சிவனடி வேலு சில படங்களுக்கு வயலின் வாசித்தபோது டி.ஆர். பாப்பாவும் அவருடன் செல்வார். 1938 ஆம் ஆண்டு குருகுல வாசத்தை முடித்துக்கொண்டு தனிக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார்டி.ஆர்.பாப்பா.சேலம் மார்டன் ஆட்ஸ் மனோன்மணி படத்தைத்தயாரித்த போது அப்படத்தின் இசையமைப்பில் வயலின் கலைஞராகப் பணியாற்றினார்டி.ஆர்.பாப்பா, அதன்பின்னர் ஜு பிடர் பிக்ஸசில் அலுவலகப்பையனாக எம்.எஸ். விஸ்வநாதன் வேலை செய்
தார். பிரதம இசையமைப்பாளர் இல்லாதபோதுசில பாடல்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பார். அவரின் இசையை அங்குள்ள சிலர்பெரிதாக எடுக்கவில்லை. அப்பொழுதே எம்.எஸ். விஸ்வநாதன் சிறந்த இசை அமைப்பாளராகவருவார் என டி.ஆர்.பாப்பா கணித்தார். அதனைஎம்.எஸ்.விஸ்வநாதன் தொலைக்காட்சிப் பேட்டிஒன்றில் தெரிவித்தார்.டி.ஆர்.பாப்பாவின் வயலின் இசையை விமர்சகர்கள் அங்கீகரித்தார்கள். கல்கியின் மகள்
ஆனந்தி, சதாசிவத்தின் மகள் ராதா ஆகியோரின்நாட்டியங்களின்போது டி.ஆர்.பாப்பா வயலின்வாசித்தார்.
சிட்டால் பிலிம்ஸ் அதிபர் ஜோஸப் தனியத்டி.ஆர்.பாப்பாவுக்கு சினிமாவில் இசையமைக்கசந்தர்ப்பம் கொடுத்தார். ஆத்ம காந்தி என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமா இசை அமைப்பாளரான டி.ஆர்.பாப்பா ஜோஸப் தனியத்தின் பலபடங்களுக்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்தார்.அவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா என்றால் அது மிகையாகாது.உங்கள் படத்தின் இசையமைப்பாளர் கதாநாயகன் யாரென்று ஜோஸப் தனியத்திடம் கேட்டால்கொஞ்சமும் தாமதிக்காது டி.ஆர். பாப்பா என்பார்புதிய கதாநாயகர் பலரை அறிமுகப்படுத்தியவர்களில்ஜோஸப் தனியத்தும் ஒருவர். அவர் அறிமுகப்படுத்தியவர்களில் அதி உச்சத்தில் இருந்தவர்களில்
தென்னக ஜேம்ஸ் பொண்ட் என அழைக்கப்படும் ஜெய்சங்கரும் ஒருவர்.அறிமுக கதாநாயகனுக்கு 1000 அல்லது 2000ஆயிரம் ரூபõ கொடுக்கும் ஜோஸப் தனியத் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவுக்கு 15 ஆயிரம்
ரூபா கொடுப்பார்.
அன்பு படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடியஎன்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்என்ற பாடல் ஒலிப்பதிவு நடைபெற்ற போது கதாநாயகனான நடிகர் திலகம் அங்கே வந்தார். நான்பியானோ வாசிக்கும் போது பாடல் ஆரம்பித்தால்நன்றாக இருக்கும் என்றார். அவரின் ஆலோசனைப்படி பியானோ இசையுடன் பாடல் ஆரம்பமாகியது.
ரமணி

Tuesday, March 17, 2009

திரைக்குவராதசங்கதி 3


நடிகர் திலகத்தில் கால் ஷீட்களை கவனித்துவந்தவர் அவரது தம்பி சண்முகம். படத்தைப் பற்றி யாராவது கதைக்க வந்தால் தம்பியைப் பாருங்க தப்பா என்று கூறிவிட்டுஇருந்து விடுவார். சகல காரியங்களையும்சண்முகம் முடித்து விட்டு படப்பிடிப்புக்குப்போகும் நாளை நடிகர் திலகத்திடம் கூறுவார்.நடிகர் திலகத்தின் ஆஸ்தான இயக்குனர்களில்ஒருவர் சி.வி. ராஜேந்திரன். சி.வி. ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கும்படங்கள் தோல்வியடைவது குறைவு. சண்முகமும், சி.வி. ராஜேந்திரனும் ஒருநாள்நடிகர் திலகத்திடம் சென்று ""இந்த நடிகரைப்பாருங்கள். உங்களுடைய அடுத்த படத்தில்அறிமுகமாகப் போகும் புதுமுகம் இவர்தான்'' என்றனர்.அந்தப் புதுமுக நடிகரைப் பார்த்த நடிகர்திலகம் ஆச்சரியப்பட்டார். அவர் நடிப்பாரா என்று சந்தேகப்பட்டார். ஆனால் அந்தநடிகரோ நடிப்பதற்கு தயாராக இருந்தõர்.
நடிகர் திலகத்துடன் அறிமுகமான அந்தநடிகர் வேறு யாருமல்ல அவர்தான் நடிகர்திலகத்தின் மகன் பிரபு. நடிகர் திலகமும்மூத்த மகன் ராம்குமாரும் இணைந்து அறுவடைஎன்றொரு படத்தில் நடித்தனர். படம்
வெற்றிபெறவில்லை. அத்துடன் நடிப்புக்குமுழுக்குப் போட்டு விட்டார் ராம்குமார்.இந்த நிலையில் இரண்டாவது மகனான பிரபு நடிக்க வந்ததை அறிந்த நடிகர் திலகம்கொஞ்சம் யோசித்தார். இறுதியில் பிரபு
நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.1982 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுதினத்தன்று நடிகர் திலகமும், பிரபுவும்இணைந்து நடித்த "சங்கிலி' வெளியானது.ஹிந்தியில் வெளியான "காளிச்சரன்' என்ற படத்தின் கதையே சங்கிலி.
பிரபு பொலிஸ் அதிகாரியாக வர வேண்டுமென்றே தகப்பன் விரும்பினார். விதிஅவரை நடிகனாக்கியது.சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்கசக்கரவர்த்தி ஆகிய படங்களில் தகப்பனும் மகனும் இணைந்து நடித்தனர். சின்னத்
தம்பி பிரபுவை உச்சாணிக் கொப்பில் ஏற்றியது.

இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல்
கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர்.
லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய
ரசு கண்ணதாசனின் வசனங்களைப்படித்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்வாய்விட்டுச் சிரித்தார். அரச படமான "ராஜா தேசிங்தில்' கலைவாணர்வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய வசனம்என்ன இருக்கும் என்று தயாரிப்பாளர்யோசித்தார்.கவியரசரின் இந்த அழகானதமிழ் வசனத்தை என்.டி. ராமராவ்பேசினால் அலங்கோலமாகிவிடும். எஸ். எஸ். ஆர். நடித்தால்சிறப்பாக இருக்கும் என்று கலைவாணர் கூறினார். தயாரிப்பாளர்எஸ். எஸ். ஆரை அழைத்து எம்.
எம். ஜி.ஆரின் படைத் தளபதியும், நண்பனுமான மகமத்கான் வேடத்தில் நடிக்க சம்மதமா எனக்கேட்டார். எம்.ஜி. ஆருடன்நடிக்க யாருக்குத்தான் விருப்பம்இருக்காது. எஸ். எஸ். ஆர். உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.எம்.ஜி. ஆருடன்நடிக்க பலரும் போட்டிபோடும் அதேவேளைபானுமதியுடன்இணைந்து நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பப்படமாட்டார். எம்.ஜி.ஆர்., பானுமதி, எஸ். எஸ். ஆர்., பத்மினி என இருக்கட்டும்என்று எம்.ஜி.ஆர் யோசனை கூறினார்.படப்பிடிப்புத் தளத்துக்குவந்த பானுமதிதனது ஜோடி எஸ்.எஸ்.ஆர். என அறிந்ததும் சத்தம் போட்டார்."ரங்கூன் ராதா' என்றபடம் வெளியாகி மிகப் பரபரப்பாகஓடிக்கொண்டிருந்த நேரமது. அதில் கதாநாயகனாக நடிகர் திலகம் நடித்தார். நடிகர்திலகத்தின் ஜோடியாக பானுமதி நடித்தார். பானுமதியின் மகனாக எஸ். எஸ்.ஆர். நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதிதயாரித்த அப்படம் பெரு வெற்றிபெற்றது."ரங்கூன்ராதா' படத்தில் எனக்கு மகனாகநடித்த எஸ். எஸ். ஆருக்கு ஜோடியாக நடிக்க முடியாதென பானுமதி மறுத்துவிட்டார்.
பானுமதியின் கோபத்தைப் பற்றி படஉலகம் நன்கு அறிந்திருந்தது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் அனைவரும்அவரை எதிர்த்து பேசத் தயங்குவார்கள்.எஸ். எஸ்.ஆருடன் ஜோடியாக நடிக்கமுடியாது என்று பானுமதி சத்தமாகப்
பேசினார். நிலைமையை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர். தயாரிப்பாளரிடம் சென்றுஎம்.ஜி.ஆரின் ஜோடியாக பானுமதி நடிக்கட்டும் என்றார். என்.எஸ்.கிருஷ்ணனுக்குஇப்பிரச்சினையைப் பற்றி தயாரிப்பாளர்அறிவித்தார். என். எஸ். கிருஷ்ணன் ஸ்டூடியோவுக்குச் சென்று எல்லோரையும்சமாதானம் செய்தார். அதன் பின்னர்படப்பிடிப்பு ஆரம்பமானது.கலைஞரின் "காஞ்சித் தலைவன்' படத்தில்எம்.ஜி.ஆரும் பானுமதியும் ஜோடிசேர்ந்தார்கள். எம். ஜி.ஆரின் தங்கையானவிஜயகுமாரியை காதலிக்கும் பாத்திரத்தில்எஸ். எஸ். ஆரை நடிக்க வைக்கவிரும்பியதால் எம்.ஜி. ஆரின் மூலம்தூதுவிட்டார் கலைஞர்."காஞ்சித் தலைவன்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் இடையில் இணைப்புப் பாலமாகஎஸ். எஸ். ஆர் செயற்பட்டார்.

ரமணி

Tuesday, February 17, 2009

ஏமாந்தகமல்


உலக நாயகன் என்று வர்ணிக்கப்படும் கமல்ஹாசனை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் ஏ.வி.எம்மின் "களத்தூர் கண்ணம்மா'. சிறுவனாக இருந்த கமல் நடிக்கும் ஆர்வத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அவருடைய மனதைக் கவர்ந்ததனால் "களத்தூர் கண்ணம்மா'வில் நடிக்கும் வாய்ப்பு கமலுக்குக் கிடைத்தது.
திரைப்படங்களை வாங்கி விநியோகித்த ஏ.வி.எம்.மின் பிள்ளைகளின் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தடை கூறாது அனுமதி வழங்கினார்.
பட்டுவும் கிட்டுவும் என்ற கதையைப் படித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நல்ல கதை. ஆனால் இப்போதைக்கு தன்னால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகஜவார் சீதாராமனுக்கு தெரிவித்தார். படம் தயாரிப்பதற்கு தகப்பன் அனுமதி வழங்கிய பின்னர் கதையைத் தேடி அலைந்த சரவணனும் சகோதரர்களும்ஜவார் சீதாராமன் எழுதிய நல்ல கதை ஒன்று தகப்பனிடம் இருப்பதை அறிந்த பிள்ளைகள் அந்தக் கதையை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அன்று மாலை கதையை வாங்கி மேலும் ஒரு கொம்பனிக்கு கொடுப்பதற்காகஜவார் சீதாராமனுக்கு ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரைச் சந்தித்தார். அப்போது அக்கதையை தனது பிள்ளைகள் எடுக்கப் போவதாகக் கூறினார்.
முதன்முதலாகத் தயாரிக்கப் போகும் படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அமரதீபம், உத்தம புத்திரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய டி.பிரகாஷ்ராவை இயக்குனராக நியமித்தார்கள்.
"யார் பையன்' என்ற படத்தில் பிரமாதமாக நடித்த டெய்ஸி ராணி என்ற பெண் குழந்தைக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்தார்கள். ஹிந்தியில் பெயரும் புகழும் பெற்ற டெய்ஸி ராணியின் நடிப்பு அவர்களை கவர்ந்ததனால் பணத்தைப் பற்றிக் கவலைப்படாது ஒப்பந்தம் செய்தார்கள்.
சிறுவனான கமலைக் கண்ட ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் ஒரு நிமிடத்தில் கமலின் திறமையை இனம் கண்டு கமலுக்கு மேக் அப் டெஸ்ட் செய்யும்படி கூறினார். இயக்குனர் பிரகõஷ்ராவ்,ஜெமினி, சாவித்திரி ஆகியோருக்கும் கமலை மிகவும் பிடித்து விட்டது.
ஏ.வி.எம். சரவணனுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றான் சிறுவன் கமல். அப்போது ""கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ'' என்ற பாடலின் ஷூட்டிங் நடைபெற்றது. கமல் முதன் முதலில் பார்த்த ஷூட்டிங் அது தான். ஏற்கனவே எடுக்கப்பட்ட அப்பாடலின் சில காட்சிகள் மீண்டும் அன்று படமாக்கப்பட்டன. மாங்காய் சீஸனில் அப்பாடல் காட்சி முதலில் படமாக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது மாமரத்தில் மாங்காய்கள் இல்லை. ஆகையினால் டூப் மாங்காய்களை தொங்க விட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாங்காயைக் கண்டதும் சிறுவன் கமலின் நாவில் எச்சில் ஊறியது. தனக்கு ஒரு மாங்காய் பிடுங்கித் தரும் படி ஜெமினி கணேசனிடம் கேட்டான். குறும்புக்கார ஜெமினி கணேசன் மாமரத்தில் ஏறி டூப் மாங்காயை பறித்துக் கொடுத்தார். மாங்காயைக் கடித்ததும் டூப் மாங்காய் என்றதனை எறிந்தான் சிறுவன் கமல்.
படப்பிடிப்பு நடந்த வீட்டை உண்மையான வீடு என்றே கமல் முதலில் நினைத்தார். அது செற் என்று தெரிந்ததும் ""ஐயையோ டூப் வீடு'' என்று சத்தமிட்டான் சிறுவன் கமல்.
சாவித்திரி உப்புமாவை ஊட்டி விடும் காட்சியில்தான் சிறுவன் கமல் முதன்முதல் நடித்தார். சாவித்திரி ஊட்டிய உப்புமாவை வாயில் அடக்கி வைத்திருந்துவிட்டு படப்பிடிப்பு முடிந்ததும் துப்பி விட்டு ""ஐயையோ டூப் உப்புமா'' என்றார்.
அது உண்மையான உப்புமாதான் என்பதை நிரூபிப்பதற்காக உதவி இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் சாப்பிட்டுக் காட்டினார். அதன் பின்னர்தான் அது உண்மையான உப்புமா என்ற உண்மை சிறுவன் கமலுக்குத் தெரிந்தது.
"களத்தூர் கண்ணம்மா' மிகவும் சிறப்பான படமானது. எட்டாயிரம் அடி எடுக்கப்பட்டபோது படத்தைப் போட்டும் பார்த்தார்கள். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாருக்கு திருப்தி இல்லை, சிறுவன் கமலின் நடிப்பில் உருவான ""அம்மாவும் நீயே அப்பாவும் நீயே'' பாடல் ஒன்றரை நிமிடங்கள் படமாக்கப்பட்டது. அக்காட்சியை இன்னும் அதிகமாக்கி மூன்று நிமிடங்களுக்குள் படமாக்குமாறு கூறினார். அதேபோன்று வேறு சில காட்சிகளையும் மீண்டும் படமாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இயக்குநர் பிரகாஷ்ராவுக்கும் மற்றவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை. பிரகாஷ்ராவ் புதிய வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்வதற்கு நாள் குறித்து விட்டார். களத்தூர் கண்ணம்மாவை மீண்டும் படமாக்கினால் அவருடைய கிரகப்பிரவேசம் தள்ளிப் போய்விடும். ஆகையால் அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அவரை தடுத்து நிறுத்த ஏ.வி.எம். விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக பீம்சிங்கை இயக்குனராக ஒப்பந்தம் செய்தது.
பிரகாஷ் ராவுக்கு தமிழ் சரியாகத் தெரியாததõல் ""அருகில் வந்தõள் உருகி நின்றாள்'' என்ற பாடலின் பல்லவியை கவிஞர் கண்ணதாசன் எழுதிக் கொடுத்தபோது அதன் அர்த்தம் புரியாததால் இன்னொரு பல்லவி எழுதுங்கள் என்றார். கவியரசு இன்னொன்று எழுதிக் கொடுத்தார். அதுவும் திருப்தி கொடுக்காததால் இன்னொன்று கேட்டார். கவிஞரும் எழுதிக்கொடுத்தார். பிரகாஷ் ராவைத் திருப்திப்படுத்துவதற்காக சளைக்காது 58 பல்லவிகளை கவியரசு எழுதிக் கொடுத்தார்.
களத்தூர் கண்ணம்மா தயாரான அதே சமயம் கடவுளின் குழந்தை என்ற படத்தை சின்ன அண்ணாமலை தயாரித்தார். கல்யாண்குமார், ஜமுனா ஆகியோர் நடித்த கடவுளின் குழந்தை, களத்தூர் கண்ணம்மா ஆகிய இரண்டு படங்களும் நோபொடீஸ் சைல்ட் என்ற ஆங்கிலப் படத்தின் மூலக் கதையில் இருந்து உருவானவை.
"கடவுளின் குழந்தை' வெளியானதன் பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியானால் படம் வெற்றி பெறாது என்று ஏ.வி.எம். சரவணனும் மற்றவர்களும் நினைத்தனர். பல காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் கூறினார்.
களத்தூர் கண்ணம்மா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கடவுளின் குழந்தை வெளியாகி சிறந்த படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.


கடவுளின் குழந்தைக்குப்பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இரண்டு படங்களும் ஒரே கதை என்று தெரியாத வகையில் படமாக்கப்பட்டிருந்தன. சிறுவன் கமலின் நடிப்பு சகலரையும் கவர்ந்தது.
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. அப்பாடலின் முதல் வரி அம்மையும் நீயே அப்பனும் நீயே என்றுதான் இருந்தது. ஏ.வி.எம். சரவணனின் மூத்த சகோதரியின் கணவரான அருண் வீரப்பன்தான் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே எளிமையாக உள்ளது என்று யோசனை கூறினார்.
கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் வசூலை முறியடித்து புகழையும் பெற்றது "களத்தூர் கண்ணம்மா'.

ரமணி
மித்திரன்
08 02/15 02 2009