Monday, October 26, 2015

இடம்மாறிய தமிழகசட்டசபை


இராமர் இருக்கும் இடம் அயோத்தி என்பதுபோல ஜெயலலிதா இருக்கும் இடம்தான் தமிழக அரசு இயந்திரம் இயங்கும் இடம் என்பது எழுதப்ப‌டாத விதியாக உள்ளது. ஒய்வெடுப்பதற்காக கொடநாடு பங்களாவுக்கு ஜெயலலிதா சென்றுள்ளார்.அங்கிருந்தபடியே தமிழக அரசு இயந்திரத்தை அவர் இயக்குவார்.தமிழக மக்கள் பலபிரச்சினைகளுக்கு முமம் கொடுக்கமுடியாது தடுமாறுகிறார்கள் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் உல்லாசமாக ஓய்வெடுக்கிறார் என எதிர்க்கட்சியின கூப்பாடுபோடுகின்றனர். ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் இருந்தபடியே தமிழக அரசை இயக்கும் அதேவேளை கழகத்தையும் கட்டுக்கோப்பாகப் பார்க்கிறார்.

அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் ப‌தினேழாவ‌து ஆண்டுவிழா கோத்த‌கிரிக்கு இட‌மாற்ற‌ம் பெற்றுள்ள‌து. ஜெய‌ல‌லிதா கொட‌நாட்டில் த‌ங்கி இருப்ப‌த‌னால் சென்னையில்  ந‌ட‌க்க‌ வேண்டிய‌ க‌ழ‌க‌த்தின் ஆண்டு விழா கோத்த‌கிரியில் மிக‌ மிக‌ எளிமையாக‌ ந‌டை பெற்ற‌து. எந்த‌வித‌மான‌ ப‌க‌ட்டும் இல்லாம‌ல் ஐந்து நிமிட‌ங்க‌ளில் ஆண்டுவிழா முடிவ‌டைந்த‌து. ஆனால் ஜெய‌ல‌லிதாவுக்கு பிர‌மாண்ட‌மான‌ வ‌ர‌வேற்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து. திரும்பும் இட‌மெல்லாம் அவ‌ரை வாழ்த்தி ப‌ன‌ர்க‌ள் க‌ட்ட‌வுட்டுக்க‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.கூடைகூடையாக‌ பூக்க‌ள் தூவி ஜெய‌ல‌லிதா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆண்டுவிழாவா ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழாவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. கழகத்தைப்பற்றிய அறிவிப்பு வாழ்த்து எவையுமே அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை.

அண்ணா திராவிட‌  முன்னேற்ற‌க் க‌ழ‌க  ஆண்டுவிழாவுக்கு முந்தைய நாள்வழக்கம்போல் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. தமிழக மக்களின் மகிழ்ச்சிதான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும்வளமான வாழ்வும்தான்நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்’ என கடிதத்தில் உருகியிருக்கிறார் ஜெயலலிதா. சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்றிட இன்றே பணிகளைத் தொடங்க வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

த‌மிழ‌க‌ அமைச்ச‌ர்க‌ள்ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்கள்நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்கள்,மாவட்ட நிர்வாகிகள்  ஆகியோர் கொட‌நாட்டில் குவிந்தார்க‌ள். ஜெய‌ல‌லிதாவின் க‌டைக்க‌ண் பார்வை ப‌ட‌வேண்டும் என்ப‌தே இவ‌ர்க‌ள‌து முக்கிய‌ நோக்க‌ம். போக்குவ‌ர‌த்து நெருக்க‌டியில் கோத்த‌கிரி திண‌றிய‌து.ப‌ய‌ண‌ப்பாதை மாற்ற‌ப்ப‌ட்ட‌த‌னால் பொது ம‌க்க‌ள் சிர‌ம‌ப்ப‌ட்டார்க‌ள்.


த‌மிழ‌க‌ முத‌ல‌மைச்ச‌ராக‌ப் ப‌த‌வி ஏற்ற‌பின்ன‌ர் ஜெய‌ல‌லிதா ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் எழுதிவிட்டார்.பிர‌த‌ம‌ர் மோடியின் விலாச‌த்துக்கு  அவர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌தென‌த்தெரியாது. க‌ருணாநிதி முத‌ல‌மைச்ச‌ராக‌ இருந்த‌போது  அன்றைய‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்குக்கு ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் எழுதினார். அவற்றுக்கும் என்ன‌ந‌ட‌ந்ததென  இன்றுவ‌ரை தெரியாது. இந்திய‌ மீன‌வ‌ர்க‌ள் மீது இல‌ங்கைக் க‌ட‌ற்ப‌டை ந்ட‌த்திய‌ தாக்குத‌ல் ப‌ற்றி க‌ருணாநிதி அன்று ப‌ல‌க‌டித‌ங்க‌ளை பிர‌த‌ம‌ரின் விலாச‌த்துக்கு அனுப்பினார். அன்று க‌ருணாநிதியைக் கேலிசெய்த‌ ஜெய‌ல‌லிதா இன்றைய‌ பிர‌த‌ம‌ருக்கு க‌டித‌ங்க‌ள் எழுதுகிறார்.
தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசுவதற்கு பிரதமரைச் ச்ந்தித்துப்பேச அண்ணா திராவிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் விண்ணப்பம் கொடுத்து ஒரு வாரமாகியும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வரவில்லை.  வழமையாக ஓரிரு நாட்களில் பதிலளிக்கப்படுவது வழமை.
இதனால் அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகத்தை மத்திய அரசு உதாசீனம் செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு விஜயம் செய்த பிரதமர் சம்பிரதாயங்களை மீறி ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்தார். பிரதமரை சந்திக்க ஜெயலலிதாவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியவில்லை.மத்திய அரசின் அரசியல் சதுரங்கத்தில் இதுவும் ஒன்று

கொட‌நாட்டில் ஜெய‌ல‌லிதா ஒருமாத‌ம்த‌ங்கி  இருப்பார் என‌றுதெரிவிக்க‌ப்ப‌டுகிற‌து.ஒருமாத‌ நிக‌ழ்ச்சிநிர‌ல் அனைத்தும் கொட‌நாட்டைச்சுற்றியே ந‌டைபெறும். சும்மா இருக்கும் எதிர்க்க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி கிடைத்து விட்ட‌து. த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் வ‌ழ்மையாக‌ ந‌டைபெறும் ச‌ம்ப‌வ‌ம்தான் இது.இவ‌ற்றுக்கெல்லாம் ஜெய‌ல‌லிதா அசைந்து கொடுக்க‌ மாட்டார். அவ‌ர் கொட‌நாட்டில் இருந்த‌ப‌டியே தான் நினைத்த‌தை ந‌ட‌த்துவார்.

அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் கழ‌க ஆண்டு விழாவில் ஜெய‌ல‌லிதா ஏதாவ‌து முக்கிய‌ அறிவிப்பை வெளியிடுவார் என‌ நினைத்திருந்த தொண்ட‌ர்க‌ள் ஏமாந்துவிட்ட‌ன‌ர். அவ‌ர‌து உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ப‌த‌னால்தான் ஆண்டு விழாவில் பேச‌வில்லை என‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

சென்னையில் இருந்த‌போதுகூட‌ ஜெய‌ல‌லிதா  வெளியில் ந‌ட‌மாட‌வில்லை. முக்கிய‌ நிக‌ழ்ச்சிக‌ளை  அலுவ‌ல‌கத்தில் அ‌ல்ல‌து வீட்டில் இருந்த‌ப‌டி ஆர‌ம்பித்து வைத்தார். அப்போதே அவ‌ருடைய‌ உட‌ல்நிலை ப‌ற்றி  அர‌ச‌ல்புர‌ச‌லாக‌ செய்திக‌ள் வெளியாகின‌.இதெல்லாம் எதிர்க்க‌ட்சிக‌ளுக்குக் கிடைத்த அவல்,‌ இத‌னால் தொண்ட‌ர்க‌ள் சோர்வ‌டைய‌ மாட்டார்க‌ள்.

ந‌ம‌க்கு நாம் என்ற‌ ஸ்டாலினின் ந‌டைப்ப‌ய‌ண‌ம் தொண்ட‌ர்க‌ளை உற்சாக‌ப்ப‌டுத்தி உள்ள‌து. உட‌ல்நிலை கார‌ன‌மாக‌  க‌ருணாநிதி வெளியூர் போக‌ முடியாத‌ நிலையில் ஸ்டாலின் க‌ள‌த்தில் இற‌ங்கிய‌து அவ‌ர் மீது ந‌ம்பிக்கையை உருவாக்கி உள்ளது. ஸ்டாலினின் ந‌டைப்ப‌ய‌ன‌ம் ம‌‌க்க‌ளுட‌னான‌ ச‌ந்திப்பு என்ப‌ன‌ அவ‌ர்மீதான் எதிர்பார்ப்பை ஏற்ப‌டுத்தி உள்ள‌ன.


ஸ்டாலினுட‌ன் செல்பி எடுக்க‌ முற்ப‌ட்ட‌ ஒருவ‌ர் அவ‌ரால் தாக்க‌ப்ப‌ட்ட‌ வீடியோ வைர‌சாக‌ ப‌ர‌விய‌து. மெட்ரோர‌யில்ப‌ய‌ண‌த்தின் போது ஸ்டாலினால் ஒருவ‌ர் தாக்க‌ப்ப‌ட்டார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஸ்டாலினை நெருங்கிய‌ ஒருவ‌ர் தாக்க‌ப்ப‌ட்டார். இப்போது மூன்றாவ‌து முறையாக‌ ஸ்டாலின் மீது குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து.செல்பி எடுக்க‌ முற்ப‌ட்ட‌போது ஸ்டாலினால் தாக்க‌ப்ப‌ட்ட‌தாக‌க் கூற‌ப்ப‌டுப‌வ‌ர் ஸ்டாலினுட‌ன் இணைந்து எடுத்த‌ செல்பி ம‌றுநாள் ஊட‌க‌ங்க‌ளில் முக்கிய‌ இட‌த்தைப்பிடித்த‌து. முன்னைய‌ தாகுத‌ல்க‌ளின் போது அப்ப‌டி எதுவும் ந‌ட‌க்க‌வில்லை என‌ ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது ஒருப‌டி முன்னேறி  த‌ன்னால் தாக்க‌ப்ப‌ட்ட‌தாக‌க்கூறிய‌வ‌ரையே அழைத்து செல்பி எடுத்து மற்ற‌வ‌ர்க‌ளுக்கு அதிர்ச்சிய‌ளித்துள்ளார்.

ஸ்டாலினின் நடைப்ப‌ய‌ணத்தை திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தில் உள்ள‌‌ சில‌ர் ர‌சிக்க‌வில்லை. அழ‌கிரி மீண்டும் வ‌ருவார் என‌ நினைப்ப‌வ‌ர்க‌ள்  ஸ்டாலினின் வ‌ள‌ர்ச்சியை விரும்ப‌வில்லை. நடைப்ப‌ய‌ண‌த்தால் ம‌க்க‌ளின் ம‌ன‌தைக் க‌வ‌ர்ந்த‌ வைகோவும்  ஸ்டாலின்மீது சீறிவிழுந்துள்ளார்.வைகோவின் ந‌டைப்ப‌ய‌ண‌ம் ம‌க்க‌ளைத் திரும்பிப்பார்க்க‌ வைத்த‌து உண‌மைதான். தேர்த‌லில் வெற்றி பெறுவ‌தற்கு  அவ‌ர‌து ந‌டைப்ப‌ய‌ண‌ம் உத‌வ‌வில்லை.  ஸ்டாலினின் நிலையும் அப்ப‌டித்தான் இருக்கும் என‌ அவ‌ர் சாடியுள்ளார்.


க‌ருணாநிதியின் உட‌ல்நிலை பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். ச‌க்க‌ர‌ நாற்காலியில் இருந்த‌ப‌டி ச‌க‌ல‌ அலுவ‌ல்க‌ளையும் செய்து  முடிக்கிறார். ஜெய‌ல‌லிதாவின் உட‌ல்நிலை ப‌ற்றி அவ்வ‌ப்போது த‌க‌வ‌ல்க‌ள் வெளிவ‌ந்தாலும் உண்மை நிலைவ‌ர‌ம் எவ‌ருக்கும் தெரியாது.முத‌ல்வ‌ ர்ப‌த‌வியை பிடிக்கும் போட்டியில் இருக்கும் ஸ்டாலினின் உட‌ல்நிலை ந‌டுநிலையான‌ வாக்காள‌ர்க‌ளை க‌வ‌ரும். இது தேர்த‌ல் முடிவை மாற்றும் கார‌ணியாக‌வும் அமைய‌லாம்.

திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தில் இருந்து அழ‌கிரி  வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌நிலையின் ஸ்டாலினின் ந‌டைப்ப‌ய‌ன‌ம் அவ‌ர‌து ஆத‌ரவாள‌‌ர்க‌ளூக்கு  புதிய‌ உற்சாக‌த்தைக் கொடுத்துள்ள‌து.
வர்மா
தமிழ்த்தந்தி
25/10/15



Wednesday, October 21, 2015

தமிழ்த் திரை உலகின் முடிசூடாராணி

சிவாஜி,எம்.ஜி.ஆர்,எஸ்.எஸ்.ஆர் போன்ற் பிரபல நட்சத்திரங்கள் தமிழ்த் திரை உலகை தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தபோது தனது நகைச்சுவை நடிப்பினால் ரசிகர்களின் மனதில் முடிசூடாராணியாக வீற்றிருந்த நடிகை மனோரமாவின் பிரிவு ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. 12 வயதில் நாடகத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் புகுந்த மனோரமா 65 ஆன்டுகளாக சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தார்.

மனோரமாவின்வாழ்க்கை சோகம் மிகுந்தது அந்த சோகங்களை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு ரசிகர்களை சிரிக்க  வைப்பதையே  தனது  வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.கைக்குழந்தையுடன் வீதிக்கு விடப்பட்ட மனோரமாவின் தாயார் மிகுந்த கஷ்டங்களின் மத்தியில் அவரை வளர்த்தார். திருமணம் முடித்து நான்கு வருடங்களிலேயே விவாக ரத்து பெற்றுவிட்டார் மனோரமா. . பாடும் ஆற்றலும் நடிப்புத்திறமையும் கொண்ட மனோரமா எதிர்நீச்சல் போட்டு கின்னஸ் புத்தகத்தில் பெயரைப்பொறித்தார்.

தஞ்சையை பூர்வீகமாகக்கொண்ட காசிகிளார்க்குடையார் ராமாமிதம்மாள் தம்பதிகளுக்கு 1923 ஆம் ஆன்டு மேமாதம் 26 ஆம்திகதிகோபி சாந்தா பிறந்தார். வறுமைகாரணமாக் இராமநாதபுரம் காரைக்குடிக்கு பிழைப்புத்தேடி சென்றது இவரது குடும்பம்.காரக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூரில் குடியேறியதால் பள்ளத்தூர் பாப்பா என அழைத்தனர்.ராமாமிர்தம்மாளின் தங்கையை இரண்டாம் தாரமாக மணமுடித்த காசிகிளார்க்குடையார் மூத்த மனைவியையும் குழந்தையையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.வறுமை தொடர்ந்ததனால் பண்னையார் வீட்டில் சிறுவயதிலே வேலைக்கு சேர்ந்தார்.

கிராமத்தில் மேடையேற்றப்படும் நாடகங்களை அடிக்கடி பார்ப்பார். நடிக்கும் ஆசை இருந்ததால் வைரம் நாடக சபாவில் சேர்ந்தார். யார்மகன் என்னும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். அந்தமான் காதலி  எனும் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடிக்கும் நடிகரின் குரல் ஒத்து வராததனால் அந்த வேடத்தை மனோரமா ஏற்று நடித்தார்.அன்று அடித்த அதிர்ஷ்டக்காற்று மனோரமாவை புகழின் உச்சிக்கு இழுத்துச் சென்றது. நடன இயக்குனநர்  திருவவேங்கடம் ஆர்மோனியக்கலைஞ்ர் தியாகராஜன் ஆகிய இருவரும் கோபி சாந்தாவுக்கு மனோரமா எனப் பெயர் சூட்டினார்கள்.

இயக்கிநர் கே.எஸ் . பாலசந்தர் மனோரமாவின் நடிப்பைபார்த்து பாராட்டினார்.நடிகர் எஸ்.எஸ்.ஆர் தன‌து நாடக‌ சபாவில் நடிக்க மனோரமாவுக்கு அழைப்பு விடுத்தார். மணிமகுடம்,தென்பாண் டிவீரன்,புது வெள்ளம் ஆகிய நாடகங்களில் மனோரமாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.திரைஉலக  வல்லுநர்களின் பார்வை மனோரமாவின் மீது பட்டதனால் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இன்பவாழ்வு, ஊமையன் கோட்டை ஆகிய படங்கள் இடையில் கைவிடப்பட்டதனால் மன்முடைந்தார்.


கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை என்ற படத்தில் ந‌கைச்சுவை வேடத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். நகைச்சுவைப்பாத்திரத்தில் நடிக்க மனோரமா விரும்பவில்லை.கதாநாயகியாக நடித்தால் நான்கு ஐந்து வருடங்களில் காணாமல் போய்விடுவாய் என கண்ணனதாசன் கூறினார். கண்ணனதாசனின் அறிவுரரையின் படி நகைச்சுவைபாத்திரத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக நடித்தார். கண்னதாசனின் தீர்க்கதரிசனம்மிக்க வார்த்தையினால் என்றென்றைக்கும் ரசிகர்களின் மனதி மனோரமா வாழ்வார்.1958 ஆம் ஆன்டு சினிமாவில் அறிமுகமானர்ர் மனோரமா. தனது ஆசைக்காக 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அனாலும் நகைச்சுவை பாத்திம் தான் அவரை வாழ‌வைத்து.

சிவாஜி,எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்,ஜெய்சங்கர்,முத்துராமன்,ஏவி.எம்.ராஜன்,சிவகுமார்,பிரபு,சத்தியராஜ், கார்த்திக்,கமல்,ரஜினி,அஜித்,விஜய்,சூர்யா என மனோரமா இணைந்து நடித்த நடிகர்களின் பட்டியல் நீளமானது. சிவாஜி,முத்துராமன்,சிவகுமார் ஆகியோருடனும் அவர்களது மகன்களுடனும் நடித்த பெருமை மனோரமாவுக்குரியது.

ஐந்து தலைமுறை நடிகர்களுடன் ந‌டித்த மனோரமா ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே ஒரு நடிகை என்ற பெருமைக்குரியவர். வேலைக்காரி நாடகத்தில் அறிஞ‌ர் அண்ணாவுடனும் உதய‌சூரியன் நாடகத்தில் கலைஞ‌ர் கருணாநிதியுடனும் நடித்தார்.எம்.ஜிஆர்,என்.டி.ராமராவ்,ஜெயலலிதா ஆகியோருடன் சினிமாவில் நடித்தார்.  1000 திரைப்படங்களில் நடித்த நடிகை எனும் கின்னஸ் சாதனையும் மனோரமாவுக்குரியது.


என்.எஸ்.கிருஷ்ணன்,ம‌துரம் ஜோடி நகைச்சுவையில் கலக்கியநேரம் தமிழ் சினிமாவில் நுழைந்த மனோரமா அவர்களுக்கு ஈடாக தனது நடிப்பால் மிளிர்ந்தார்.நாகேஷ்,கருணாநிதி,சுருளிராஜ,சோ,தேங்காய் சீனிவாசன் சந்திரபாபு,கவுண்டமணி,சந்திரபாபு  போன்ற  நடிகர் களுடன் ஜோடியாக நடித்தார். 60 /70களில் நாகேஷ் மனோரமா ஜோடி இல்லாத படம் இல்லை.நாகேஷுடனான மனக்கசப்பின் பின்னர்  பிரிந்து விட்டார்.



கைச்சுவை அரசி மனோரமா 'ஆச்சி' என்று திரையுலகில் அன்போடு அழைக்கப்படுபவர். அவருக்கு ஆச்சி என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் இது...

'' நான் செட்டிநாட்டில் வளர்ந்தவள். 1962ஆம் ஆண்டு க.கி.சுப்பிரமணியத்தின் ' காப்பு கட்டி சத்திரம் ' என்ற நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகம் ரேடியோவில் 66 வாரங்கள் ஒளிபரப்பாகியது. அதில் நானும் நாகேசும் சேர்ந்து நடித்தோம். 

அந்த நாடகத்தில் 'பன்னர் பாக்கியம்' என்ற கேரக்டரில் இளநீர் விற்கும் பெண்ணாக நடித்தேன். செட்டிநாட்டு பாஷை பேசி அந்த நாடகத்தில் நான் நடித்ததை பார்த்த ஒரு மேக்அப் மேன் 'ஆச்சி ' என்று அழைத்தார். பின்னர் அனைவரும் ஆச்சி என்று அழைக்க அந்த பெயரே நிலைத்து விட்டது''

இவ்வாறு மனோராமா கூறியுள்ளார். 
 


கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருது, புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, மலேசிய அரசிடம் இருந்து டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது, கேரளா அரசின் கலா சாகர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர். விருது, ஜெயலலிதா விருது மற்றும் பல முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்தவர் ஆச்சி மனோரமா.

மனோரமா பொம்மலாட்டம் என்ற படத்திற்காக பாடிய வா வாத்தியாரே வூட்டாண்ட பாடலால் அவர் ஒரே நாளில் பிரபல மாகிவிட்டார்.  . திரைத்துறையில் அவர் நடிப்பை தவிர தனது குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
 ரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் எழுதிய போகாதே போகாதே என் கணவா என்ற பாடலை பாடினார் மனோரமா. அது தான் பெரிய திரையில் அவர் பாடிய முதல் பாடல்.

 

 பாண்டியராஜன், ஊர்வசி ஜோடியாக நடித்த படத்தில் ஹீரோவின் பாட்டியாக நடித்திருந்தார் மனோரமா. அந்த படத்தில் அவர் பாடிய டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பாடல் மிகவும் பிரபலம். 





சூரியகாந்திபடத்தில் பாடிய தெரியாதோநோக்கு பாடலைக்கேட்டதும் மனம் துள்ளத்தொடங்கி விடும்.

 


ரஜினிக்கு எதிராக அரசியலில் குரல்கொடுத்த‌து அவரது வாழ்க்கையில் ஒரு கறுப்பு சம்பவம். 1996 ஆம் ஆன்டு ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி அரசியலில் குரல் கொடுத்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் மேடையில் ரஜினியை கிழிகிழியென கிழித்தார் மனோரமா. அந்தச்சம்பவத்தி மனதில் வைக்காது மனோரமாவுக்கு தனது அண்ணாமலை படத்தில் நடிக்க சந்தர்ப்பம் வழ‌ங்கினார் ரஜினி.

நகைச்சுவையாலும் குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் என்ன்றென்றைக்கும் வீற்றிருப்பார் மனோரமா.

ரமணி.

தமித்தந்தி 18/10/15

  

Tuesday, October 20, 2015

வெளியேறும் தலைவர்கள் தனிமையில் வைகோ

திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுக்கு மாற்றான மூன்றாவது அணியை ஏற்படுத்த வேன்டும் என்ற தமிழக அரசியல் தலைவர்களின் ஆசை மீண்டும் நிராசையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் அரசியல் அநாதைகள் ஆக்குவோம் என்ற  வீறாப்புடன் பாரதீய ஜனதாக்கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற்த்தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்த தமிழக அரசியல் தலைவர்கள்,சூடுகண‌டபின்னும் தன்னிலை உணராது செயற்படுகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்  கழகம்   ,விடுதலைச்சிறுத்தைகள்,மனிதநேயக் கட்சிகொம்யூனிஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் கட்சி,காந்தீய மக்கள் இயக்கம் ஆகியன ஒன்று சேர்ந்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தின.இலங்கைப்பிரச்சினை,ஊழல்,மதுவிலக்கு ஆகியவற்றுக்காக ஒருமித்துக் குரல் கொடுத்த இக்கட்சிகள் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் என்ற  பெயரில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன.  அந்தபோராட்டங்கள் கொடுத்ததெம்பினால் மத்திய அரசுக்கு எதிராகவும் போராடின. மீதேன் எரிவாயுத் திட்டம்,காவிரி நதிநீர்பிரச்சினை,தனியார்மயமாக்கல் போன்றவற்  றை முன்னிலைப்படுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தின.


ஆறு கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன.விஜயகாந்த் ,வாசன் ஆகியோரையும் இந்த கூட்டு இயக்கத்தினுள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.திட்டமிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்கப்பட்டது.காந்தீய மக்கள் இயக்கம்காரணம் சொல்லாமல்  கூட்டு இயக்கத்தில் இருந்து வெளியேறியது.

மக்கள் நலன் காக்கும் இயக்கத்தை அரசியல் கூட்டணியாக மாற்ற வேண்டும் என வைகோ விரும்பினார். வைகோவின் விருப்பத்துக்கு மனித நேயக்கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாவிடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவள‌வன் ஆகியோர் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு கருணாநிதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் என திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறிய திருமாவளவன்ஜெயலலிதாவின் பக்கம் சாய்வார் என்ற சந்தேகம் இருந்தது.தமிழக அரசியல் நிலைவரத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்ட திருமாவளவன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதக சமிக்ஞை காட்டியுள்ளார்.

வெற்றி பெறும் கூட்டணியில் சேர வேண்டும் என்ற ஜவாஹிருல்லாவின் குரல் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் வைகோ எரிச்சலடைந்துள்ளார்.வைகோவின் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சி மாறியவேளையில் ஜவாஹிருல்லாவின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தில் இருந்து ஜவஹிருல்லாவின் கட்சி வெளியேறி விட்டது.

காந்தீய மக்கள் இயக்கம்மனிதநேயக்கட்சி ஆகியன வெளியேறிவிட்டன. விடுதலைச் சிறுத்தைகள் மதில் மேல் பூனையாக உள்ளது. கொம்யூனிஸ்ட் கட்சியும் மாக்சிஸ்ட் கட்சியும் வைகோவின் பின்னால் உள்ளன.கருணாநிதிய மிகக்கடுமையாகச் சாடிய இடது சாரிகள் ஜெயலலிதாவின் பின்னால் அணிவகுத்து நின்றனர். ஜெயலலிதா கைவிட்டதனால் போக்கிடமின்றி வைகோவின் கையை பற்றிபிடித்துள்ள‌னர்.இடது சாரிக்கட்சிகளின் தேர்தல் கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய குழுவிடம்  இருப்பதனால் இவர்கள் எப்போ வைகோவை கைவிடுவார்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது.

ஜெயலலிதாவுடன் இணைவதற்கு மனித நேயக்கட்சி விரும்புகிறது. கடந்த சட்ட மன்றத்தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேயக்கட்சி இரன்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது ராஜ்ய சபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் சாய்ந்தது.பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியது.மனித நேயக்கட்சியை ஜெயலலிதா புறக்கணித்தால் அக்கட்சி கருணாநிதியிடம் சரணடையும்.

சிறந்த  பேச்சாற்றல் உள்ள‌ வைகோ
அரசியலில் வெற்றி பெறக்கூடிய முடிவை எடுக்காமையினால்  வெற்றிகரமான தலைவராக் வலம்வர அவரால் முடியவில்லை. கட்சியின் தொடர் தோல்விகளால் பொறுமை இழந்த அவரது கட்சியின் இரண்டாம்  கட்டத்தலைவர்கள் வெளியேறுகின்றனர். வெற்றி பெற்றால் தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற உணமையை உணர்ந்தவர்கள் வெளியேறுகின்றனர். இரண்டாம் கட்டத்தலைவர்களின் வெளியேற்றம் வைகோவை எரிச்சலடைய வைத்துள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் என விஜயகாந்த் அடம் பிடிக்கிறார்.கருணாநிதியும் வைகோவும் விஜயக்காந்துக்கு வலை விரித்துள்ளனர். விஜய காந்தின் மனைவி திராவிட  முன்னேற்றக்கழகத்தை  மிக மோசமாக தாக்கிப்பேசுகிறார்.ஆகையினால் கருணாநிதியின் பக்கத்துக்கு விஜயகாந்த் செல்வதற்கு வாய்ப்பு இல்லை.விஜயகாந்த் வருவார் என வைகோ ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்.விஜயகாந்த்  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு செல்லக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். அவரின் விருப்பத்தை விஜயகாந்த் நிறைவேற்றுவார்  என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உள்ள‌து.

திரவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கூட்டணி,மக்கள் ந‌லன் காக்கும் கூட்டு இயக்கம் என நான்கு முனைப்போட்டி நடந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா,திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கிடையேதான் போட்டி இருக்கும் மற்றைய கட்சிகளால் வாக்குகளைப்பிரிக்க முடியுமே தவிர வெற்றி பெறுவது சிரமமான காரியம். திராவிட முன்னேற்றக் கழகம்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன் இர‌ண்டும் வைகோவை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுக்கும்.இந்த வியூகத்தில்  இருந்து வைகோவால் மீளமுடியாது. கடந்த நாடாளுமன்றத்தேர்தலிலும் இதுதான் நடந்தது.மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தில் முதலமைச்சர் வேட்பாளர்  யார் என்று கூட்டு இயக்கத்தில் உள்ள கட்சிகளுக்கே தெரியாது.முதலமைச்சர் வேட்பாள‌ரை அறிவிக்காத கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கத்தயங்குவார்கள்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் முதலமைச்சர் போட்டியில் முன்னணியில் நிற்கிறார்கள்.முதல்வராகும் ஆசையுடன் பாரதீய ஜனதாக்கட்சியின்  தயவை எதிர் பார்க்கிறார் விஜயகாந்த்.
வர்மா

தமிழ்தந்தி18/10/15



Friday, October 16, 2015

அரசியல் வலையில் நடிகர் சங்கம்



தமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் தொடர்கதையாகவே இருக்கும். அறிஞ்ர் அண்ணா, கலஞர் கருணாநிதி,நடிகவேள் எம்.ஆர்.ராட்க்ஹா,எம்.கே.ராதா போன்றவர்கள் நாடகங்களின் மூலம் தமது அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்தினார்கள்.சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோரின் சினிமாக கவர்ச்சியினால் அவர்களது ரசிகர்கள் அரசியலை நோக்கித்திரும்பினார்கள்.

 அரசியல் கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் அன்றைய நடிகர்கள் அரசியலையும் சினிமாவையும் வெவ்வேறாகக் கருதினார்கள்.அரசியலிலும் நடிப்பிலும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் நடிகர் சங்கத்தில் ஒன்றாக இருந்தார்கள்.இன்பதுன்பங்களில் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர். ஆனால்இன்றைய நடிகர்கள் நடிகர் சங்கத்தில் தமது அரசியலைப் புகுத்திவிட்டனர்.

த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தேர்த‌லைவிட‌ இந்திய‌ நாடாளும‌ன்ற‌த்தேர்த‌லைவிட‌ ப‌ர‌ப‌ர‌ப்பாகி உள்ள‌து ந‌டிக‌ர் ச‌ங்க‌த் தேர்த‌ல்.நாளை ந‌ட‌ர் பெற‌ உள்ள‌ ந‌டிக‌ர் ச‌ங்க‌த்தேர்த‌லினால் சில‌ குடும்ப‌ங்க‌ள் இர‌ண்டாகி உள்ள‌ன‌. த‌யாரிப்பாள‌ர்க‌ள்,வினிடோக‌ஸ்த‌ர்க‌ள்இய‌க்குந‌ர்க‌ள் இர‌ண்டாகி விட்ட‌ன‌ர்.ந‌டிக‌ர்,ச‌ங்க‌ த‌லைவர் ‌ ச‌ர‌த்குமார்  செய‌லாள‌ர் ‌ ராதார‌வி ஆகியோரின் ந‌ட‌வ‌டிக்கையினால் வெறுப்ப‌டைந்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்களை நீக்க‌ வேண்டும் என‌  குர‌ல் கொடுத்த‌ன‌ர்.விஷாலின் குர‌ல் ஓங்கி ஒலித்த‌த‌னால் அந்த‌ அணிக்கு விஷால் அணி என‌ பெய‌ர் சூட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. கார்த்தி,க‌ருணஸ் போன்ற‌ இள‌ம் ந‌டிக‌ர்க‌ளும் நாச‌ர்,சிவ‌குமார்சத்தியராஜ்  மூத்த‌ ந‌டிக‌ர்க‌ளும் ச‌ர‌த்குமார் ராதார‌வி ஆகியோருக்கு எதிராக‌ போர்க்கொடி தூக்கி உள்ள‌‌ன‌ர்.


 எஸ்.எஸ்.வாசன்,கே.பி.சுந்தராம்பாள் எம்.ஆர்.ரதா ஆகியோரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் சங்கம் சிவாஜி தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்துக்கென  கட்டடம் கட்டப்பட்டது.எம்.ஜிஆர். முதல்வரானபோதும் நடிகர்சங்கத்துக்கு உதவிபுரிந்தார். விஜயகாந்த்  தலைவரானபோது பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார். தமிழ்,தெலுங்கு,மலையாள நடிகர்கள் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது.தெலுங்கு ,மலையாள நடிகர்கள் தமக்கென நடிகர் சங்கங்களை ஆரம்பித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து விலகினார்கள்.

சரத்குமார் தலைவராகவும்ராதாரவி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர் நடிகர் சங்கம்  பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கியது.15 வருடங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள நடிகர் சங்கத்தில்  ஊழல் நடைபெற்றது. நாட்டாமையின் தீர்ப்புகள் விமர்சனம் செய்யப்பட்டன. சில தீர்ப்புகளை மாற்றும்படி விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. நியாய‌ங்க‌ள் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டாமையினால் ந‌டிக‌ர் ச‌ங்க‌த்தேர்த‌ல் சூடுபிடித்துள்ள‌து.

தேர்த‌ல் பிர‌சார‌ம் அன‌ல் ப‌ற‌க்கிற‌து.ராதார‌வி,ராதிகா,சிம்பு ஆகியோரின் பேச்சுக‌ள் முக‌ம் சுழிக்க‌ வைக்கின்ற‌ன‌. விஷாலை விஷால் ரெட்டி என‌ விழித்து அவ‌ர் த‌மிழ‌ர‌ல்லை என்ப‌தை ராதிகா  ப‌றை சாற்றுகிறார். அவ‌ரின் தாய் சிங்க‌ள‌ப்பெண்ம‌ணி என்ப‌தை வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விட்டார்.ராதா ர‌வி ஒருப‌டி மேலேபோய் த‌ங்க‌ளை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளை நாய்க‌ள்,ப‌ர‌தேசி நாய்க‌ள் என்கிறார்.சிம்பு சினிமா வ‌ச‌ன‌ம் போல் ஒருமையில்  வாடா போடா என‌ திட்டித்தீர்க்கிறார்.விஷாலுட‌ன் ந‌ய‌ன‌தாரா நெருக்க‌மான‌தால்தான் சிம்பு ச‌ர‌த்குமார் அணிக்கு  ஆத‌ர‌வு தெரிவிக்கிறார். ச‌ர‌த்குமாரின் ம‌க‌ள் மீதான‌ காத‌ல்தான் விஷால் அவரை எதிர்ப்ப‌தாக‌ சிம்பு குற்ற‌ம் சாட்டுகிறார்.
பிர‌ச்சினைக‌ளைப் பெரிதாக்காம‌ல் ஒற்றுமையாக‌ ந‌டிக‌ர் ச‌ங்க‌ தேர்த‌ல் நடைபெற‌ சில‌ர் எடுத்த‌ முய‌ற்சிக‌ளை விஷால் த‌ர‌ப்பு ஏற்றுக்கொள்ல‌வில்லை.க‌மல் த‌ன‌து ஆத‌ர‌வை விஷால் த‌ர‌ப்புக்கு வெளிப்ப‌டையாக‌த் தெரிவிரத்து விட்டார்.ர‌ஜினிக்குச் சொந்த‌மான‌ திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌த்தில் விஷால் த‌ர‌ப்பு கூட்ட‌ம் ந‌ட‌த்திய‌து. இத‌னால் ர‌ஜினியின் ஆத‌ர‌வு விஷால் த‌ர‌ப்புக்கு என்ற‌ க‌ருத்து உருவான‌து.ர‌ஜினியின் அதேதிரும‌ண‌ ம‌ண‌ட‌ப‌த்தில் த‌ன‌து கூட்ட‌த்தை ந‌ட‌த்தி அந்த‌ பிர‌சார‌த்தை ச‌ர‌த்குமார் முறிய‌டித்தார். ம‌தில் மேல் பூனையாக‌ உள்ள‌ ர‌ஜினி த‌ன‌து முடிவை இன்ன‌மும் அறிவிக்க‌வில்லை.


ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு த‌ன‌து ஆத‌ர‌வு என‌ விஜ‌ய‌காந்த் தெரிவித்துள்ளார்.ஜெய ய‌ல‌லிதா, ச‌ர‌த்குமார் ஆகிய‌ இருவ‌ருக்ககும் எதிர்ர‌ன் விஜ‌ய‌காந்த் யாருக்கு வாக்க‌ளிப்பார் என்ப‌து இர‌க‌சிய‌மான‌த‌ல்ல‌.
 
  நாசர் அணியில் நடிகை சோனியா, பிரேம் ஆகிய சின்னத்திரை நட்சத்திரங்களும், சரத்குமார் அணியில் ராதாரவி, ராம்கி, நிரோஷா, நளினி, பசி சத்யா, எஸ்.எஸ்.ஆர் கண்ணன், உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதில் சரத்குமார், நிரோஷா, ராம்கி, ராதாரவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நடிகை நளினி சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவராக இருக்கிறார். குயிலி, ஆர்த்தி, பாத்திமா பாபு, குண்டு கல்யாணம், ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் கட்சியினர் யாரும் போட்டியிடக்கூடாது என கட்சித்தலைமை அறிவித்து விட்டது. இதனையடுத்து இவர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதுவும் சரத்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தடை உத்தரவு ராதாரவிக்கு இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக விசுவாசியான அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் சங்கத்தேர்தலில் அரசியல் புகுந்துவிட்டது.
விஜய்,அஜித் ஆகிய இருவரும் தமத் ஆதரவை வெளிபடையாக  அறிவிக்கவில்லை. விஜயின் ஆதரவு சரத்குமாருக்குத்தான் என ஊகிக்கக்கூடியதாக‌ உள்ளது. விஜக்கும் சிவகுமா ர்குடும்பத்துக்கும் இடையேயான பகையும்  அவருக்கு எதிரான விஷாலின் போக்கும் இதற்கு காரண‌ம் என சொல்லப்படுகிறது. சங்கரின் படத்தில் விஜவுடன் இணந்து நடிக்க சூர்யா மறுத்துவிட்டார். அழகிய தமிழ் மகனுடன் போட்டி போட்ட வேல் வெற்றி பெற்றது. வேலாயுதத்துக்கு போட்டியாக வந்த ஏழாம் அறிவு பேசப்பட்டது.காவலன் வெளியானபோது கார்த்தியின் சிறுத்தை போட்டிக்கு வந்தது  புலி படத்துக்கு போட்டியா  பாயும் புலியை விஷால் முந்திக்கொண்டு வெளியிட்டார். விஜயை சந்திக்க விஷால் மறுத்துவிட்டார். இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்துப்பார்த்தால் விஜய்  சரத்குமாரையே  ஆதரிப்பார் என எண்ணத்தோன்றுகிறது.

நடிகர் சங்கத்தேதல் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. வேற்றி தோல்வி எப்படி இருந்தாலும் நடிகர் சங்கம் இரண்டாகப்போவது உறுதியாகிவிட்டது.


Saturday, October 10, 2015

திமுக புள்ளிகளை நெருங்குமா பொலிஸ்?

  கூடல் மாநகர்,மீனாட்சியின் ஆட்சி,சங்கம் வளர்த்த மதுரை என்ற சிறப்புகளுடன் பெருமை பெற்ற மதுரையை தனது  பிடிக்குள் வைத்திருந்தவர்  கருணாநிதியின் மகன் அழகிரி. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறிய‌போது த‌‌மிழ‌க‌த்தின் தென்ப‌குதியில் க‌ட்சியை வள‌‌ர்ப்ப‌த‌ற்காக‌ சென்னையில் இருந்து ம‌துரைக்கு ந‌க‌ர்ந்தார் அழ‌கிரி. க‌ருணாநிதி எதிர்பார்த்த‌துபோல் க‌ட்சியை வ‌ள‌ர்த்த‌ அழகிரி அவ‌ர் எதிர்பார்க்காத‌வ‌கையில் த‌ன்னையும் வ‌ள‌ர்த்துக்கொண்டார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் மதுரைக் கிளைபோலவே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. கழகத்லைமைக்கு கட்டுப்படாத அவரது செயற்பாடுகளால் இருதலைக்கொள்ளி எறும்பாக கருணாநிதி கலங்கினார்.  எல்லை மீறிய அழகிரி  தனது விசுவாசிகளுடன் இ ணைந்து கழகத்தை எதிர்த்தார். அழகிரியுன் கொட்டத்தை அடக்குவதற்காக அவரும் அவரது ஆதரவாளர்களும் சிலகாலம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அழ‌கிரி இல்லாம‌ல் ம‌துரையில் வெற்றிபெற‌முடியாது என்ப‌த‌னால்  அவ‌ருக்கு ம‌ன்னிப்பு வ‌‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

த‌மிழ‌க‌த்திலும் ம‌த்தியிலும் இருந்த‌ அர‌சிய‌ல் செல்வாக்கினால் அழ‌கிரியின் ஆட்சி ம‌துரையில் கொடிக‌ட்டிப்ப‌ற‌ந்த‌து.த‌மிழ‌க‌த்திலும் ம‌த்தியிலும் திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்தின் அர‌சிய‌ல் செல்வாக்கு ச‌ரிந்த‌த‌னால் அழ‌கிரியின் ஆட்ட‌ம் அட‌ங்கி விட்ட‌து. ஸ்டாலினுக்கும் அழ‌கிரிக்கும் இடையிலான‌ வாரிசுப்போராட்ட‌த்தின் உச்ச‌க்க‌ட்ட‌ மோத‌லால் க‌ட்சியில் இருந்து அழ‌கிரி தூக்கி வீச‌ப்ப‌ட்டார்.இந்த‌ நிலையில் பொட்டு சுரேஷின் கொலையின் சூத்திர‌தாரி என‌ பொலிஸாரால் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ அட்டாக் பாண்டி இர‌ண்ட‌ரை வ‌ருட‌ங்க‌ளின் பின்ன‌ர் கைது செய்ய‌ப‌ட்டுள்ளார்.


பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகிய‌ இரண்டுபேரும் அழ‌கிரியின் மிக‌த்தீவிர‌மான் விசுவாசிக‌ள்.அழ‌கிரி நினைத்த‌தை க‌ன‌க‌ச்சித‌மாக‌ செய்துமுடிக்கும் ஆற்ற‌ல் உள்ள‌‌வ‌ர்க‌ள்.அழ‌கிரியின் அர‌சிய‌ல் வ‌ள‌ர்ச்சியில் இவ‌ர்க‌ளின் ப‌ங்கு முக்கிய‌மான‌து. அழ‌கிரியின் அர‌சிய‌ல் அத்திபார‌ம் ஆட்ட‌ம் க‌ண்ட‌தும் ந‌க‌மும் ச‌தையும் போல‌ இருந்த‌ அட்டா‌க் பாண்டியும்,பொட்டு சுரேஷும் கீரியும் பாம்பும் போல் மாறின‌ர்.த‌மிழ‌க‌ ஆட்சி திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் கையை விட்டுப்போன‌தும் அர‌சிய‌ல் ரீதியாக‌ இருவ‌ரும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.


 குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட பொட்டுசுரேஷ் பிணையில் விடுதலையானதும் அழகிரியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்டு ஸ்டாலினுடன் இணைந்தார்.அழகிரியின் வலது கரம்தென் தமிழகத்தின் துணை முதல்வர் என ஜெயலலிதாவல் அடையாளம் காட்டப்பட்ட பொட்டுசுரேஷ் அவரை விட்டு வெளியேறியதும் மதுரையின் கழகத்தொண்டர்கள் கலங்கினர். பொட்டுசுரேஷும் அட்டாக்பாண்டியும் ஒரே அணியில் இருந்தாலும் அவர்களுக்கிடையில் யார் பெரியவன் என்ற போட்டியும் மறைமுகமாக இருந்தது. அட்டாக் பாண்டியின் கை ஓங்கியதும் பொட்டுசுரேஷ் தன‌து பாதையை  மாற்றினார்.

பாதை மாறிய பொட்டுசுரேஷ் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி  மர்மகும்பலால் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார்.அவரது உடலில் முப்பத்தி ஏழு வெட்டுக்காயங்கள் இருந்தன சம்பவ இடத்திலேயெ அவரது உயிர் பிரிந்தது.  பொட்டு சுரேஸ் கொல்லப்பட்ட ஜனவரி 31ம் தேதிக்கு மறுதினம் அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்களான கீரைத்துறையைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம்சந்தானம்ராஜா என்ற ஆசா முருகன்லிங்கம்சேகர்செந்தில்கார்த்திக் ஆகிய 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  ஆனால் போலிஸார். இன்னும் சிலரை தேடினார்கள். அவர்களின் அட்டாக் பாண்டி முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.

அட்டாக்பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டியும் நண்பர் பிரபுவும் சேலம்நீதிமன்றத்தில் சரணடைந்தனபொலிஸாரின்  கண் அட்டாக்பாண்டிமேல்தான் இருந்தது. தமிழக பொலிஸுக்கு தண்ணிகாட்டிய அட்டாக்பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டமன்றத்தேர்தலுக்காக கட்சிகள் தயாராகும்வேளையில் அட்டாக்பாண்டியின் கைதுக்கும் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.

அழகிரியின் பக்கத்தில் இருந்த பொட்டுசுரேஸ் ஸ்டாலினின் பக்கம் சென்றதை அழகிரியின் ஆட்கள் விரும்பவில்லை. அழகிரியின் மகன் துரைத‌யாநிதியும் ராமகிருஷ்ணனும் சென்னையில் பொட்டுசுரேஷை சந்தித்த தகவல் ஏற்கெனவே பொலிஸாருக்குத்தெரியும். இதுபற்றிய வாக்குமூலம் அப்போது பெறப்பட்டபோது மேலித்து  அழுத்தம் கார ணமாக விசாரனை கைவிடப்பட்டது. அந்த விசாணையை மீண்டும் தொட‌ங்க வேண்டும் என கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி தெரிவித்துள்ளார்.

பொட்டுசுரேஷ் கொல்லப்பட்ட அன்று தான் சென்னையில் இல்லை என அட்டாக் பாண்டி கூறி உள்ளார்.அட்டாக்பாண்டியை கொலைசெய்வதற்கு பொட்டுசுரேஷ் திட்டமிட்டதால்தான் தாம் அவரை கொன்றதாக சரண்டைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பொட்டுசுரேஷ் கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகையே காரண்ம் .ஆனால் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்ட பின்னணியில்   அரசியல் உளளது.

ஜெயலலிதா  முதல்வரானதும்  கருணாநிதிஸ்டாலின்அழகிரி ஆகியோரைக்  கைது செய்ய முயற்சிசெய்தார் போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. ஸ்டாலின் ஒருபடிமேலேபோய் கமிசனர் அலுவலகத்துக்குச் சென்று தன்னைக் கைது செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.  தனது அரசியல்  எதிரிகளை  ஏதாவ்து ஒரு வழக்கில் சிக்கவைக்க வேண்டும் என்பது ஜெயலலைதாவின் விருப்பம்.அந்த விருப்பத்தை நிறைவு செய்வதற்குரிய சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை.

அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டதும்  விசாரணை வளை யத்தில் ஸ்டாலின் என்று பரபரப்பன் செய்திகள் வெளியாகின் .அந்தசெய்திகள்  எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட ஸ்டாலின் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடர்கிறார்.மேலிடத்து அழுத்தத்தினால் கைவிடப்பட்ட விசாரணையை பொலிஸார் மீண்டும் கையில் எடுத்ததனால் அழகிரி கலக்கத்தில் உள்ளார். அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்ட பின்னர் பொட்டுசுரேஷின் கொலை பற்றிய மர்ம முடிச்சு அவிழ்வதற்கிடையில் உள்ளே போகப்போகும் திராவிட முன்னேற்றக் கழகப் புள்ளி யார் என்ற கேள்விக்கான் விடை கிடைத்துவிடும்.
வர்மா
தினத்தந்தி
11/10/15