Showing posts with label முருகன். Show all posts
Showing posts with label முருகன். Show all posts

Saturday, September 4, 2021

பாலியல் புகாரில் சிக்கிய தமிழக பா.ஜ. க தலைவர்கள்

லைமைப்  பதவியின்  போட்டியால் தமிழக பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்கள் மீது   பாலியல்  புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி  ஆசையால் ஒரு தலைவர் மீது  இன்னொரு தலைவர்  பகிரங்கமாகக்  குற்றம் சாட்டுகிறார். இவர்களின் அதிகாரப்  போட்டியால் பகடைக்  காயான சிலர்  கட்சியை  விட்டு  நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்  காலூன்ற  பாரதீய  ஜனதாக் கட்சி செய்த   முயற்சிகள் எவையும்  வெற்றியளிக்கவில்லை. தமிழிசை செளந்தர்ராஜன் தமிழக  பாரதீய  ஜனதாக் கட்சித் தலைவராக இருந்தபோது  தமிழகத்தில்  தாமரை  மலரும் என  சூழுரைத்தார். அவருடைய  தலைமையில் தாமரை  மலரவில்லை. அண்ணா  திராவிட முன்னேற்றக்  கழகத் தலைமையின்  பலபவீனத்தைப்  பயன்படுத்தி கடந்த  சட்டமன்றத் தேர்தலில்  பாரதீய ஜனதாக் கட்சி  உறுப்பினர்கள்  நால்வர்  வெற்றி   பெற்றனர். அந்த   வெற்ரிக்கு  அன்றைய  தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்  எல். முருகன் தான் என கருதிய மேலிடம் அவரை  அமைச்சராக்கியது. முருகன்  அமைச்சரானதும்,  தமிழக  பாரதீய  ஜனத்தாத்  தலைவராக  அண்ணாமலை  நியமிக்கப்பட்டார்.

  தமிழக பாஜக தலைவர்கள் மீதான பாலியல் புகார்கள்தான் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளன. பாரதீய  அனதாக் கட்சியில்  தமிழக தலைமைப் பீடமான கமலாலயத்தைச் சுற்றி அரசல் புரசலாக இருந்த பாலியல் புகார்கள் தற்போது வீடியோவாகவும் ஆடியோவாகவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழக  பாரதீய  ஜனதாக் கட்சியில்  மாநிலப்  பொதுச்  செயலாளரான கே.டி. ராகவன் பற்றிய  சர்ச்சைக்குரிய  வீடியோ  வெளியானதால் அவர்  னது  பதவியை  இராஜினாமாச் செய்தார். ராகவனை  ஒரங்கட்டுவதற்காக  தமிழக  பாரதீய  ஜனதாக் கட்சித்  தலைவர்  அண்ணாமலையின்  சதி என்ற  செய்தி  வெளியானது.

கே.டி.ராகவன் வீடியோ சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், அண்ணாமலை குறித்த ஒலிநாடாக்கள்  வெளியாகி இருப்பது தமிழக பாரதிய ஜனதாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது அண்ணாமலைக்கு எதிராகப் பின்னப்பட்ட சதி என முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்.

 ஹெச்.ராஜா, கே.டிராகவன்  போன்ற  மூத்த  தலைவர்கள்   இருக்கையில் முருகனும், அண்ணாமலையும்  முன்னிறுத்தப்பட்டார்கள். ஊழல்  இல்லாத  ஆட்சி  அமைக்கப்  போகிறோம் என  சத்தியப் பிரமாணம்  செய்த  பாரதீய  ஜனதாக்  கட்சி தமிழகத்தில்  காலூன்றுவதற்காக  அண்ணா  திராவிட   முன்னேற்றக் கழகத்தை கைப்பாவையாக்கியது. அண்ணா திராவிட   முன்னேற்றக்  கழகம் எதிர்  திராவிட  முன்னேற்றக்  கழகம்  என்ற  அரசியல்  இருப்பை  மாற்றி  திராவிட   முன்னேற்றக்  கழகத்துக்கு  போட்டியான  கட்சியாக  பாரதீய  ஜனதாக்  கட்சியை  வளர்ப்பதற்கு  மோடியும்,  அமித்ஷாவும்  முயற்சி   செய்த்கிறார்கள். அவர்கலின்  எதிர்  பார்ப்புக்கு  இடைஞ்சலாக  தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்கள் செயற்படுகிறார்கள்.

பெண்கள்  விவகாரத்தில்  பாரதீய ஜனதாக் கட்சி  நிர்வாகிகள் சிக்கிய  விவகாரம்  பற்றிய  புகார்கள்  டெல்லிவரை  சென்றுள்ளன. ஒருவரைப்  பற்றி   நூற்றுக்கும்  அதிகமான  புகார்கள் சென்றுள்ளன. இது  தொடர்பாக  விசாரித்த பாரதீய  ஜனதாக் கட்சி மேலிடப்  பொறுப்பாளர் சி.டி.ரவி எச்சரித்ததாக நாளிதழ்  ஒன்றில்  செய்தி  வெளியானது. தலைவர்கள் யாரும்  நட்சத்திர  ஹோட்டலில் ரூம் எடுத்து  தங்கக் கூடாது. பெண்களை  அழைத்து  கும்மாளம் அடிக்கக்கூடாது.  மீறினால்  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும் என ரவி  கடுமை காட்டியதாகவும்  பரபரபான செய்தி வெளியானது. கட்சிக்குள் நடைபெற்ற  இரகசிய  சம்பவங்கள்  பகிரங்கமாக  வெளியானதற்கு  கே.டி.ராகவன் காரணமாக இருக்கலாம் என சந்தேகம்  ஏற்பட்டது.

பாஜகவின் மூத்த தலைவர்களில்நேர்மையானவர்   என  பெயரெடுத்தவர்  வழக்கறிஞரான கேடி ராகவன், இவர் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். , தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவரும், பாஜக உறுப்பினருமான மதன் ரவிச்சந்திரன் என்பவர்,  தனது யூடியூப்  னலில் கேடி ராகவன் பற்றிய சர்ச்சைக்குரி்ய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், கே.டி ராகவன் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில்     பேசுவது போன்ற  வீடீயோகாட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சட்டையின்றி வீட்டில் கேடி ராகவன் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான்  வெளியிடப்பட்டதாகத்   தெரிவித்தார்.  அண்ணாமலை  அதனை  மறுத்துள்ளார்.   மதன்  கட்சியில்  இருந்து  வெளியேற்றப் பட்டுள்ளார்.

  மதன் இயக்கிய  "மதன் டயறி" எனும்  யூடியூப் தளம் முடக்கப்பட்டுளது. இவை எல்லாவற்றையும்  இவை எல்லாம் தற்செயலான  நிகழ்வுகளாகத் தெரியவில்லை. இவற்றின்  பின்னால் பலமான கைகள் இருகும் என்பதில் சந்தேகமில்லை.  மதன் ரவிச்சந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.   மதன் கூறுகையில், அண்ணாமலையை சந்தித்து, இப்படி ஒரு பாலியல் வீடியோ இருப்பதாகவும், எனவே பாஜக கட்சிக்குள் யாருக்கும் தெரியாமல், அதை விசாரணை நடத்த வேண்டும் என்று தான் வற்புறுத்தியதாகவும், ஆனால், அண்ணாமலைதான், இது நமது கட்சிக்கார பொண்ணு. இந்த பெண்ணுக்கு உடனே நீதி தேவை. எனவே வீடியோவை போட்டு விடுங்கள் என்று கூறினார் என்றும் மதன் குற்றம்சாட்டியுள்ளார்.   அப்படி  ஒரு வீடியோவை மதன்   தன்னிடம்  காட்டவில்லை  என்று அண்ணாமலை கூறியிருந்தார்

  மாவட்ட பாஜக தலைவர் ஒருவர் , மகளிர் அணித் தலைவராக இருந்த ஒரு பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் பறி்த்துக் கொண்டு, அவரைப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக செய்திகள் வெளியாகின.பாதிக்கப்பட்ட பெண்ணே, செய்தியாளர்களை சந்தித்து பேட்டிகளும் அளித்திருந்தார் அப்போது பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவில்லை என்றும் கலிவரதனைக் காப்பாற்ற முயல்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஊழல்,பாலியல்  துன்புறுத்தல்  என்பன  சில அரசியல்  கட்சிகளுக்குள் நடைபெறுவது   வெளிச்சத்துக்கு  வெளிவரத்  தொடங்கிவிட்டன. இந்த  நிலையில் ராகவனின்  பிரச்சினையை  பாரதீய  ஜனதாக்  கட்சி எப்படி சமாளிக்கப்போகிறது  அரசியல்  களம் எதிர்பார்த்து  காத்துக்கொண்டிருக்கிறது.

Monday, July 19, 2021

கொங்குநாடு கோஷம் தமிழகத்தை பிரிக்கும் முயற்சியா?


 தமிழகத்தில்  சூடு  பிடிக்கும் விவகாரமாக  கொங்குநாடு எனும் சொல்  மேலெழுந்துள்ளது. இந்தியப்  பிரதமரின் அமைச்சரவை விரிவாக்கம் ஜுன் மாதம் 8 ஆம்  திகதி நடந்தது.    மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கான அறிமுக விவரக் குறிப்பில்கொங்கு நாடுஎன்று இடம்பெற்றது. அதனை  மேற்கோள் காட்டி தமிழகப் பத்திரிகை  ஒன்று, "கொங்குநாடு" உருவாகப் போகிறது என கட்டுரை ஒன்றை  பிரசுரித்தது. அதன்  பின்னர்  கொங்குநாடு ஊடக விவாதமானது.

இந்திய  மத்திய  அரசு என்ற  சொற்பதமே  இதுவரை வழக்கத்தில் இருந்தது. தமிழக முதல்வராக ஸ்டாலின்  பதவி  ஏற்றதும்,மத்திய அரசு என்று  சொல்லாமல் ஒன்றிய  அரசு என்றார். ஒன்றிய  அரசு என்ற சொல் பாரதீய ஜனதா கட்சியை உசுப்பிவிட்டது.ஸ்டாலினுக்குப்  பதிலடி கொடுக்கக் காத்திருந்த  பாரதீய ஜனதாக் கட்சி, எல். முருகனின் பெயருக்கு முன்னால் கொங்குநாடு எனக்  குறிப்பிட்டு சீண்டியது.,ஒரத்தநாடு,வல்லநாடு,வருசநாடு, கொங்குநாடு   என்பன தமிழகத்தில்  பேச்சு வழக்கில்  உள்ளவை. கொங்குநாட்டை  கொங்கு  மண்டலம் எனவும் அழைப்பர்.

இந்திய மாநிலங்களில்  பலமுடன் உள்ள  கட்சிகளைப் பிரித்து ஆட்சியைப்  பிடித்த  பாரதீய  ஜனதாவால் தமிழகத்தில்  கால்  பதிக்க  முடியவில்லை. அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தமிழகத்தில்  ஆட்சியில் இருந்தபோது பாரதீய ஜனதாவின் கை ஓங்கி  இருந்தது. ஸ்டாலின்  முதல்வரானதும் எதிர்க் கட்சிகளின் கை ஒடுக்கப்பட்டது.

இந்தியாவில்  இருந்து  பிரிந்து செல்ல நடந்த  போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டன. மாநிலத்தைப்  பிரிக்க வேண்டும் என்ற  கோஷங்களும்  முளையிலேயே கிள்ளப்பட்டன. ஆனால், இந்திய  மத்திய  அரசே  இல்லாத  ஒரு  நாட்டை  உருவாக்கி  இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி  உள்ளது.

எம்.ஜி.ஆர்  காலத்தில் இருந்தே கொங்குமன்டலம்  அண்ணா திராவிட முன்னேற்றக்  ழகத்தின்  கோட்டை. தேர்தல்கலின் போது  கொங்குமன்டலம்தான் அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்குக்  கைகொடுத்தது. கே.பி. முனுசாமியைத் தவிர அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்கள் யாரும் இதனைப் பெரிதாக எடுக்கவில்லை. சின்னச்  சின்னப்  பிரச்சினைகளுக்கு டுவிட்டரில்  பதிலளிக்கும் எடப்பாடியும், பன்னீரும்  மெளனமாக இருக்கின்றனர்.

திராவிட  முன்னேற்றக் கழகத்துக்கு கொங்கு  மண்டலத்தில்  பலமான  தலைவர்கள்  யாரும்  இல்லை. அதற்காகவே கமலின் சகாவான  மகேந்திரனை கட்சியில்  சேர்த்துள்ளது. மகேந்திரனின்  செல்வாக்கினால் கொங்கு  மன்டலத்தில்  பலமாகக் கால் பதிக்கலாம் என  ஸ்டாலின்  நினைக்கிறார்.

கோவையில் அத்வானி  கலந்துகொண்ட  கூட்டத்தில்   நடைபெற்ற  குண்டு  வெடிப்பின்  பின்னர் பாரதீய  ஜனதாக் கட்சி அங்கு தனது பிரசாரத்தைத் தீவிரமாக்கியது. குண்டு  வெடிப்பின்  வருடாந்த  நினைவு நாளை நடத்தி தனது  இருப்பை பலப்  படுத்திஉள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், .பி.முருகானந்தம், கனகசபாபதி என பலருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியில் மிக்கிய   பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகவும், அண்ணாமலை மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொங்கு  மண்டலத்தை  வளைக்கும் அரசியலை பாரதீய  ஜனதா வலுப்  படுத்தத்  தொடங்கி  உள்ளது.

தமிழகத்தில்  இருந்து  கொங்குநாடு பிரிக்கப்பட்டு ஜூனியன் பிரதேசமாக மாற்றும் திட்டத்தை  பாரதீய  ஜனதாக் கட்சி கையில் எடுத்துள்ளது  என்ற  விவாதம் வலுப்  பெறுவதால் தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்கள் அதனை  மறுத்துரைக்கின்றனர்.

கொங்கு நாடுஎன்ற கோரிக்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஆனால், ‘திராவிடநாடு’, ‘ஒன்றிய அரசு’ , தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பிரிவினை உள்நோக்கத்துடன் பேசி வருபவர்களுக்கு பதிலடியாககொங்கு நாடுகோரிக்கை இருக்கும். கொங்கு நாடு, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு என்பதெல்லாம் இந்தியாவில் இருந்தவை. இல்லாத திராவிட நாடு என்பதை சொல்லிக் கொள்ளும்போது, ஏற்கெனவே இருந்தகொங்கு நாடுஎன்று சொல்வதில் தவறு இல்லை. அவர்கள்திராவிட நாடுஎன்று சொல்லும் வரை, நாங்கள்கொங்கு நாடுஎன்று சொல்லிக் கொண்டே இருப்போம்   என்று யாதவ மகாசபை தேசியத் தலைவரும், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா அல்லது உத்தரகாண்ட் மாநிலங்கள் போல இல்லாமல், தமிழ்நாட்டின் நவீன அரசியல் வரலாற்றில் தனி கொங்குநாடு பற்றி ஒருபோதும் கோரிக்கை அல்லது விவாதங்கள் இருந்ததில்லை. எனவே, விவாதத்தில் எந்த அரசியல் அல்லது சமூக பொருத்தங்களும் இல்லை. இருப்பினும், மத்திய அரசு என்பதை விட ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிற திமுகவின் உறுதியான நிலைப்பாடு.  மாநிலத்தை பிரிக்கும் எந்த நடவடிக்கையையும்  பாரதீய  ஜனதா மறுத்துள்ளது.

  கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள், அமைப்பு என யாரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை. போடோலாந்து, கூர்காலாந்து கேட்கிறார்கள் என்றால் அதில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் வாழ்கிறார்கள். அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் அப்படி ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. கொங்கு வேளாளர் ஒரு பகுதியினர் அங்கு இருக்கிறார்கள் என்றாலும் முக்குலத்தோர், ஒக்கலிகர், வன்னியர், நாடார் என எல்லோரும் கலந்த பகுதி. அதுமட்டுமல்ல, வட மாநிலத்தவர்களையும் உள்ளடக்கிய தொழில் நகரம்.

அரசியல்வாதிகள்  தம்  இஷ்டத்துக்கு கொங்குநாடு என  குறிப்பிட்டதை  ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன. கொங்குநாடுஎன்ற கருத்தை ஆதரிப்பதாக சில பாஜக சமூக ஊடக பயனர்களிடம் காணப்பட்டதை அடுத்து, மாநிலத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுவது குறித்து தமிழகத்தில் ஒரு விவாதம் நடைபெறுகிறது.

பாட்டாளி  மக்கள் கட்சியின்  நிறுவுனர் நன்னியர்  பகுதிய  தனியாகப்  பிரிக்க  வேண்டும் எனவும், நிறுவனர் ராமதாஸ், கொங்கு பகுதியா  தனியாகப்  பிரிக்க  வேண்டும் என ஈஸ்வரனும்  தொடர்ச்சியாகத்  தெரிவித்து  வருகின்றனர். தமிழக  முதல்வர்  திராவிடநாடு என்கிறார். இவற்றை  பாரதீய  ஜனதாவால்  சகிக்க  முடியவில்லை. பாநிலக்  கட்சிகலின்  துணை  இல்லாமல் பாரதீய ஜனதாவால் தமிழகத்தில்  வெற்றி  பெற முடியாது.

கொங்கு நாடு என்று எழுதிய எல்.முருகனே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய, மாநில அரசுகள் பேசவில்லை. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. எந்தவித சட்டதிட்டத்துக்கும், வரன்முறைக்கும் ஒத்துவராத கோரிக்கை. அதை பாரதீய  ஜனதா ஏற்றுக்கொள்ளாது. அரசியல் தெளிவில்லாதவர்கள் வேண்டுமானால் இது குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். மற்றபடி கொங்கு நாடு என்ற பேச்சு அர்த்தமற்றது என்பதே  பெரும்பாலானோரின்   கருத்து.