Showing posts with label . இந்தியா. Show all posts
Showing posts with label . இந்தியா. Show all posts

Saturday, June 20, 2020

மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு

ஒடிசாவின் மகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கு மாறியதை அடுத்து 11 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அந்த கோவில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

1933ஆம் ஆண்டு மகாநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கிராமங்கள் சில தண்ணீரில் மூழ்கிப்போனது, அப்போது இந்த கிராமங்களில் இருந்த பழமையான கோவில்களும் மூழ்கிப்போனது. கட்டாக் அருகே பத்மாவதி பகுதியில் உள்ள பைதேஸ்வர் கிராமத்தின் அருகே ஓடும் மகாநதி ஆற்றில் இந்த பாரம்பரியம் மிக்க கோவில் வெளிப்பட்டுள்ளது. நீரில் மூழ்கியிருந்த அந்த கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என பாரம்பரிய இடங்கள் குறித்த ஆவணமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை ஆய்வாளர்கள் குழுவினர் இதுபோன்று நீரில் மூழ்கிய பழங்கால பொக்கிஷங்களை தேடி தேடி ஆவணப்படுத்தி வருகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த கோவில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. . 

 இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளை (INTACH) திட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் திர், இந்த கோவிலைப் பற்றிய முக்கிய தகவல்களை கூறியுள்ளார். மஸ்தகாவின் கட்டுமான பாணியை கொண்டுள்ள இந்த கோயில் 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 16ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். வெள்ளத்தில் மூழ்கிய கோவில் பழங்காலத்தில் இந்தப் பகுதி சதாபதனா என அழைக்கப்பட்டதாகவும், வெள்ளத்தால் நதி அதன் பாதையை மாற்றிக் கொண்டதால் கிராமம் முழுவதும் நீரில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய இடங்கள் குறித்த ஆவணமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்தில் இதுவரை 65 கோயில்களை கண்டுபிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் உள்ள தெய்வங்கள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டன. மகாவிஷ்ணு கோவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது கோபிநாத் தேவ் கோயிலாகும். மகாவிஷ்ணுவை வணங்குபவர்கள் கட்டிய பாரம்பரியமிக்க இந்த கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் அவர்களிடம்தான் உள்ளது என கூறியுள்ளார். மகாநதி பாயும் கோவில் இந்த திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட 800 நினைவுச் சின்னங்கள் குறித்த அறிக்கைகள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதே போல் மகாநதி பாயும் 9 மாவட்டங்களிலும் பாரம்பரிய சின்னங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நினைவுச்சின்னங்களை மீட்டெடுக்கும் ஆய்வு பழங்கால நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் அழிந்து விட்டதாகவும், சில சின்னங்கள் சிதைந்த நிலையில் கிடைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளம், இயற்கை சீற்றங்களால் ஆற்றின் போக்கு மாறி அதில் நிறைய கோயில்கள் மூழ்கியிருக்கலாம் என்றும், பல்வேறு நதிகளில் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

  இதுபோல இந்த பகுதியில் 22 கோவில்கள் மூழ்கியிருக்கலாம் என கிராம மக்கள் நம்புகின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் மஸ்தகா மட்டும் வெளிப்பட்டது. அதே போல தற்போதும் இந்த கோவில் மஸ்தகா வெளிப்பட்டுள்ளது. நம் ஊரில் கோவில் கோபுரங்கள் போல மஸ்தகா 60 அடி உயரம் வரை கட்டப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, April 20, 2018

சன் ரைசர்ஸின் வெற்றியை முடித்து வைத்த கெய்ல்ஸின் சதம்


ஐபிஎல் சீசனில் மூன்று வெற்றிகளைப் பெற்று பெருமையுடன் இருந்த ஹைதராபாத் சன் ரைசர்ஸை மொகாலியில் சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் கெய்ல்ஸின் சதத்துடன்  வெற்றி பெற்றதுமுதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் மூன்று விக்கெற்களை இழந்து 193 ஓட்டங்கள் எடுத்தது. ஹைதராபாத் நான்கு விக்கெற்களை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்து 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கப்டன் அஸ்வின் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இந்த சீசனில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட முடிவு செய்த முதல் கப்டன் அஸ்வின்தான்.
கெய்ல்ஸும், கே.எல்.ராகுலும் தொடக்கத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாடினார்கள். புவனேஷ்வர் குமாரும், கிறிஸ் ஜோர்டானும் சிறப்பாக வீசி ஒரு 12 பந்துகளில் ஓட்டம் எதுவும் கொடுக்கவில்லை..
கெய்ல் 14  ஓட்டங்களில் இருந்த போது ரஷீத் வீசிய பந்தை   விக்கெட் கீப்பர் சஹா ஒரு    வாய்ப்பை விட்டார்
 . கே.எல்.ராகுல் புவனேஷ்வர் குமார் பந்தில் எல்.பி. என்று  நடுவர் அறிவித்தார். ஆனால் பந்து மட்டையில் லேசாகப் பட்டது தெரியவந்ததால் ரிவியூவில் பிழைத்தார்.
பஞ்சாப் 53 ஓட்டங்கள் எடுத்தபோது ரஷீத்கானின் சுழலில் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறஙிய மயங் அகர்வால் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். 11 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரண்டு விக்கெற்களை இழந்து 83 ஓட்டங்கள் எடுத்தது. 39 பந்துகளில் அரைச்சதம் அடித்த கெய்ல்ஸ் 19 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த ஆறாவது சதம் இதுவாகும். 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.


கெய்ல்ஸ் கருண் நாயர் ஜோடி  சிறப்பாக விளையாடியது. கருண் நாயர் 31 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஆட்டநேர முடிவில் 63 பந்துகளைச் சந்தித்த கெய்ல்ஸ் ஒரு பவுண்டரி 11 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் எடுத்தார்பிஞ்ச் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்கள் எடுத்தார். பஞ்சாப் மூன்று விக்கெற்களை இழந்து  193 ஓட்டங்கள் எடுத்தது.

கிங்ஸ் லெவன்  பஞ்சாப் 200 ஓட்டங்களைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பை  சன் ரைசர்ஸின் பந்து வீச்சாளர்கள் சிதறடித்தனர்.  7வது ஓவரில் ஹூடா 2ஓட்டங்களை மட்டும்  கொடுத்தார், 8வது ஓவரில் ரஷீத்தும்  2 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து  கொடுத்து ராகுல் (18) விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு 11 ஆவது  13வது ஓவர்களில் தலா நான்கு ஓட்டங்களே கொடுக்கப்பட்டது. புவனேஷ்வர் ஒரு ஓவரில் பவுண்டரியே கொடுக்காமல் 8 ஓட்டங்களையும் ஜோர்டான் கடைசியில் ஒரு ஓவரில் 6 ஓட்டங்களையும் கொடுத்து  கிங்ஸ் லெவன் அணியை 200 ஓட்டங்களை எடுக்க விடாமல் தடுத்தனர். சன் ரைசர்ஸ் அணியில் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெற்றை வீழ்த்தினார்இவருடைய பந்து வீச்சில் ஒரு பவுண்டரியும் 1 சிக்சரும் தான் அடிக்கப்பட்டது.. 10 பந்துகளில் ஓட்டம் எதுவும் கொடுக்கவில்லை.. ரஷீத் கான் 4 ஓவர்களில் அதிகப்படியான55  ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.


194 என்ற இலக்குடன்   களம் புகுந்த ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 15ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 57 ஓட்டங்களும், கப்டன் வில்லியம்சன் 54 ஓட்டங்களும் எடுத்தனர்.
  சன் ரைசர்ஸ் அணியில் ஷிகர் தவண் காயமடைந்து வெளியேறியது பெரிய சறுக்கலுக்கு இட்டுச் சென்றது, பாரிந்தர் ஸ்ரண் பந்து ஒன்று நல்ல லெந்த்தில் பிட்ச் ஆகி எழும்பியது தவண் கட் செய்ய முயன்றார் இடது முழங்கையில் சரியான அடி. வெளியேறினார்.
 கேன் வில்லியம்சன் (54), மணீஷ் பாண்டே (57) ஆகியோர் 3வது விக்கெட்டுக்காக 76 ஓட்டங்க்களைச் சேர்த்தாலும் தேவைப்படும் ஓட்ட விகிதத்துக்கு ஏற்ப அவர்கள் அடிக்க முடியவில்லைஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.