Showing posts with label டயானா. Show all posts
Showing posts with label டயானா. Show all posts

Monday, May 22, 2023

ஹரியையும் மனைவியையும் துரத்திய பப்பராசிகள்

 

      இங்கிலாந்து இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் பபப்ராசிகள் எனப்படும்  புகைப்படக்காரர்களாால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகன் சார்ள்ஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அரசப் பணிகளை கவனித்து வந்த மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் கடந்த 6-ம் திகதி முறைப்படி முடிசூடிக் கொண்டார். மன்னர் சார்ள்ஸைத்  தொடர்ந்து அவரது மனைவி கமீலாவும் இங்கிலாந்து ராணியாக முடி சூடிக் கொண்டார். இந்த  வைபவத்தில் லகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.மன்னர் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்ற இந்தக் கொண்டாட்டத்தில்  மன்னர் சார்ள்ஸின் மூத்த மகன் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டன், குழந்தைகளுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால் ஹரி மட்டும்  வைபவத்தில் கலந்துகொண்டார்.  அவருகு மூன்றாஅவ்து வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

  இளவரசர் ஹரிஅரண்மனையிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் அவருக்கும் அரசு பரம்பரைக்கும் இருக்கும் பந்தம் அறுந்துவிட்டது. இந்த நிலையில் சார்லஸின் முடிசூட்டு விழாவில் ஹரி மட்டும் பங்கேற்றார். ஆனால் அவருடைய மனைவி மேகன் உள்பட குழந்தைகள் யாரும் பங்கேற்ற அனுமதி இல்லை என கூறப்பட்டது. நியூயார்க் நகரில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரிக்கும்,, மனைவியும் நடிகையுமான மேகன் மார்க்கெல்லுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹரி, மேகன், மேகனின் தாயார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் 3 பேரும் ஒரே காரில் தங்களின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது இளவரசர் ஹரியையும் அவரது மனைவி மேகனையும் போட்டோ எடுக்க திரண்ட புகைப்படக்காரர்கள் அவர்களை 10 க்கும் மேற்பட்ட கார்களில் விரட்டியுள்ளனர். சுமார் இரண்டு  மணி நேரத்திற்கும் மேலாக புகைப்படக்காரர்கள் இளவரசர் ஹரி சென்ற காரை துரத்தியுள்ளனர். இந்த கார் சேஸில் பல விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நியூயார்க் நகர பொலிஸார் தெரிவித்தனர்.


1997 ஆம் ஆண்டு   பிரான்ஸில் இளவரசி டயானாவின் உயிரை பறித்த சம்பவத்தை நினைவுப்படுத்தியுள்ளது.   ஹரியின் தாயாரான      டயானா தனது பாதுகாவலர்களுடன் காரில் சென்ற போது அவரை புகைப்படம் எடுக்க     பப்பராசிகள்   துரத்தியதால் பரிஸில் அவரது கார் விபத்துக்குள்ளானது.   வேல்ஸ் இளவரசி டயானா அகால மரணமடைந்தார். டோடி ஃபயீத் என்ற எகிப்து திரைப்பட தயாரிப்பாளரும் இந்த விபத்தில் மரணமடைந்தார். டயானாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பிருந்ததாகவும் அவருடன் டயானா வெளியே செல்கிறார் என்றதும் அவரை படம்பிடித்த புகைப்படக்காரர்கள் முடிவு செய்தனர். இதற்காக எப்படியாவது துரத்தி அந்த நபரை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் இந்த முயற்சியில் போனது இரு உயிர்கள் பலியாகின   இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. டயானாவின் கார் விபத்தில் சிக்கிய போது அவர் உயிருடன் இருந்ததாகவும் அவரை காரில் இருந்து வெளியே தூக்கிய நபர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்ததாகவும் அப்போது 20 வினாடிகளில் அவருக்கு நினைவுத் திரும்பியதாவும் அவரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும்   தெரிவித்துள்ளனர்.டயானாவுக்கு நடைபெற்றதுபோல ஒரு   திகில் சம்பவம்  ஹரியின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.     

புகைப்படப்பிடிப்பாளர்களால் (பப்பராசிகளால் )துரத்தப்பட்ட  இளவரசர் ஹரிதம்பதியினர் பாரிய விபத்தொன்றில் சிக்கும் ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.நியூயோர்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹரி மேகன் தம்பதியினர் விருதுவழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் அவர்களை புகைப்படப்பிடிப்பாளர்கள் பின்தொடர்ந்து துரத்தியுள்ளனர்.தங்கள் வாகனம் இரண்டு மணிநேரம் துரத்தப்பட்டது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக வீதியில் காணப்பட்ட வாகனங்கள் பாதசாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தங்கள் வாகனம் மோதுப்படும் நிலை உருவானது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.விருது வழங்கும் நிகழ்வில் ஹரிதம்பதியினருடன் மேகனின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.அவர்கள் அந்த நிகழ்விலிருந்து வெளியேறுவதை புகைப்படங்கள் காண்பித்துள்ளன.இதன்பின்னர் ஆறிற்கும் மேற்பட்ட கார்கள் அவர்களின் வாகனத்தை துரத்தியுள்ளன கண்மூடித்தனமாக ஹரியின் வாகனத்தை அவர்கள் பின்தொடர்ந்துள்ளனர்ஆங்கில படப்பாணியில் ஹரியின் வாகனம் துரத்தப்பட்டுள்ளது- பப்பராசிகள் வாகனத்தை துரத்தியவாறு ஹரிதம்பதியினரை படம்பிடித்துள்ளனர்.


 

கார் துரத்தலின் போது நியூயார்க் நகரத்தின் வழியாக ஹரியும், மேகனும் பயணம் செய்தசென்ற டாக்ஸி சாரதி  சுக்சர்ன் சிங், அவர்களை பாப்பராசிகள் பின்தொடர்ந்ததாகக் கூறினார் - ஆனால் அது "பேரழிவை நெருங்கிவிட்டது" என்ற தம்பதியரின் மதிப்பீட்டை ஏற்கவில்லை.இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பாப்பராசி ஓட்டுநர், தம்பதியினருடன் தொடர முயற்சிப்பது "மிகவும் பதட்டமாக" இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

நியூயார்க்கில் நடந்த "துரத்தலின்" போது பாப்பராசி எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஏஜென்சியிடம் ஒப்படைக்குமாறு ஹரியும் மேகனும் கோரியுள்ளனர் - ஆனால் அது மறுக்கப்பட்டது.சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் பேக்கிரிட் ஏஜென்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர் -ஆனால் பேக்கிரிட்டின் வழக்கறிஞர்   பதிலுக்கு ஒரு வலுவான கடிதத்தை அனுப்பினார்

 : "அமெரிக்காவில்சொத்து அதன் உரிமையாளருக்குச் சொந்தமானது என்பது  உங்களுக்குத் தெரியும்: மூன்றாம் தரப்பினர் அதைத் தங்களுக்கு வழங்குமாறு கோர முடியாது, ஒருவேளை மன்னர்கள் கோரலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரச வாழ்க்கையை விட்டு வெளியேறினாலும் இளவரசர் ஹரியைத்    துரத்துவதை பப்பராசிகள் கைவிடவில்லை.

 

Monday, January 30, 2023

சாள்ஸின் முடி சூட்டுவிழா மே 6ஆம் திகதி நடைபெறும்


 பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா 2023 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த மாதம் 8 ஆம் திகதி காலமானார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்ல்ஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அரியணையில் அமர்வார். பிறகு,  மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு மன்னருக்கு புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்படும்.  பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாட்டு மக்களுக்கு மன்னர் உரையாற்றுவார்.

இதன் பிறகு அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும். 74 வயதாகும் 3 ஆம் சார்ல்ஸ் மன்னர் இங்கிலாந்து வரலாற்றில் முடிசூட்டிக் கொள்ளும் மிக வயதான மன்னர்.

திய மன்னரின் ஆட்சியில் முதல் நடவடிக்கை, பெயர் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுதான். சார்ல்ஸ், ஃபிலிப், ஆர்தர், ஜார்ஜ் என்ற தன்னுடைய நான்கு பெயர்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது.

பெயர் மாற்றத்தை எதிர்கொள்பவர் இவர் மட்டுமே அல்ல.

அரியணைக்கு வாரிசாக இருந்தாலும்கூட இளவரசர் வில்லியம் தானாகவே வேல்ஸ் இளவரசராக மாற மாட்டார். அந்தப் பட்டத்தை அவருக்கு அவரது தந்தை வழங்கவேண்டும்.

இருப்பினும், அவர் உடனடியாக தனது தந்தையின் மற்றொரு பட்டமான டியூக் ஆஃப் கார்ன்வாலை (கார்ன்வால் கோமகன்) பெற்றார். அவரது மனைவி கேத்தரின் கார்ன்வால் டச்சஸ் (கார்ன்வால் சீமாட்டி) என்று அழைக்கப்படுவார்.

சார்ல்ஸ் மனைவியின் பட்டம் ஆங்கிலத்தில் 'க்வீன் கன்சார்ட்' என்பது ஆகும். மன்னரின் மனைவியை குறிக்கும் சொல் இது.

 சில நாட்டு தலைவர்களின் பதவியேற்பு பாணியில், பிரிட்டிஷ் அரசர் தமது ஆட்சியின் தொடக்கத்தில் "சத்தியப்பிரமாணம்" எதுவும் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால் புதிய அரசர் ஒரு பிரகடனத்தை வெளியிடுவார். அது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமாகும். அதற்கு இணங்க அவர் ஸ்காட்லாந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுப்பார்.

பிறகு 'எக்காளம்' ஊதுபவர்களின் ஆரவார முழக்கத்துக்குப் பிறகு, சார்ல்ஸை புதிய அரசராக அறிவிக்கும் பொதுப் பிரகடனம் வெளியிடப்படும். இது செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள ஃப்ரைரி மாடத்துக்கு மேலே உள்ள பால்கனியில் இருந்து 'கார்ட்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ்' என்று அழைக்கப்படும் அதிகாரியால் செய்யப்படும்.

அவர் தமது அழைப்பில், "கடவுளே, அரசரைக் காப்பாற்று", என்று முழங்குவார். 1952க்குப் பிறகு முதல் முறையாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது, அதற்கு முன்பாக, இந்த அதிகாரி பிரார்த்தித்த கடவுளே அரசைக் காப்பாற்று என்ற வரிகள் தேசிய கீதத்தில் முதல் வரியாக இடம்பெறும்.

அப்போது ஹைட் பூங்கா, லண்டன் கோபுரம், கடற்படை கப்பல்கள் ஆகியவற்றில் இருந்தபடி துப்பாக்கி குண்டுகள் விண்ணை நோக்கி முழங்கப்படும். அதற்கு மத்தியில் சார்ல்ஸை அரசர் ஆக அறிவிக்கும் பிரகடனம் வாசிக்கப்படும்.

சார்ல்ஸ் முறைப்படி முடிசூட்டப்படும் போதுதான், அவர் அடுத்த தலைமைக்கான நிலையை எட்டும் உயரிய கட்டத்தை அடைகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால், சார்ல்ஸ் பதவியேற்ற உடனேயே முடிசூட்டு விழா நடக்க வாய்ப்பில்லை - ராணி எலிசபெத் 1952ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியணை ஏறினார், ஆனால் 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை அவர் முடிசூட்டப்படவில்லை.

கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் தான் முடிசூட்டு விழா நடைபெற்றது. வில்லியம் தான் அங்கு முடிசூட்டப்பட்ட முதல் மன்னர் ஆக விளங்கினார். அந்த வரிசையில் 40வது ஆக முடிசூட்டிக் கொள்பவர் சார்ல்ஸ்.

இது ஒரு ஆங்கிலிகன் மத சேவை வழங்கும் தலம். இது கேன்டர்பரி பேராயரால் மேற்கொள்ளப்படுகிறது. விழாவின் உச்சமாக, அவர் சார்ல்ஸின் தலையில் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை வைப்பார் - திடமான இந்த தங்க கிரீடம், 1661ஆம் ஆண்டு காலத்துக்குரியது. 

லண்டன் கோபுரத்தில் உள்ள மகுட நகைகளில் முக்கியமானதாகும். மேலும் முடிசூட்டும் தருணத்தில் அரசரால் மட்டுமே இது அணியப்படுகிறது (குறைந்தபட்சம் இது 2.23 கிலோ எடை கொண்டது).

அரச குடும்ப திருமணங்களைப் போல அல்லாமல், முடிசூட்டு விழா ஒரு அரசு விழாவாக நடக்கும். அதற்கு அரசாங்கம் பணம் செலுத்துகிறது. இறுதியில் விருந்தினர் பட்டியல் இறுதிப்படுத்தப்படுகிறது.

ஆரஞ்சு, ரோஜா, லவங்கப்பட்டை, கஸ்தூரி மற்றும் அம்பர்கிரிஸ் எண்ணெய்களைப் பயன்படுத்தி புதிய மன்னருக்கு அபிஷேகம் செய்யும் சடங்குகள் இருக்கும். அத்துடன் இசையும் பிரார்த்தனைகளும் இடம்பெறும்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னராக இருக்கும் முதல் பால்கனி தருணம், ஒரு மாபெரும் முடிசூட்டு ஊர்வலம், உலகளாவிய நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு கச்சேரி மற்றும் ஒரு நாள் தன்னார்வத் தொண்டு ஆகியவை மூன்று நாள் நிகழ்ச்சியின்  சியின் ஒரு பகுதியாக இருக்கும்.1953 ஆம் ஆண்டு ராணியின் சேவையை விட மூன்று மணி நேரம் நடந்ததை விட குறைவாக இருக்கும் என்று அரச ஆதாரங்களின் வழிகாட்டுதலைத் தவிர, சனிக்கிழமை முடிசூட்டு விழா எவ்வாறு நவீனமயமாக்கப்படும் அல்லது மாற்றப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் காரணமாக, பலர் எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களை ஒப்புக்கொள்வதற்கு நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட   வேண்டும் என்று பரிந்துரைகள் இருந்தன.ஆனால், தங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள், மக்கள் ஒரு மாபெரும் தேசிய நிகழ்வின் முழுக் காட்சியைக் காண விரும்புவதாகவும், இன்று பிரிட்டனின் சிறந்ததைக் காட்சிப்படுத்தவும், ஐக்கிய இராச்சியத்தின் பணக்கார மற்றும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டாடவும் விரும்புகிறார்கள் என்று அரச வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன.கேன்டர்பரி பேராயர் தலைமையில் சனிக்கிழமை காலை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராஜா மற்றும் ராணி துணைவரின் முடிசூட்டு விழா நடைபெறும்.

அரண்மனை இது "ஒரு புனிதமான மத சேவை, அதே போல் கொண்டாட்டம் மற்றும் ஆடம்பரத்திற்கான ஒரு சந்தர்ப்பம்" என்று கூறுகிறது, மேலும் அந்த நாளில் இரண்டு ஊர்வலங்களை உள்ளடக்கியது

"ராஜாவின் ஊர்வலம்" என்று அழைக்கப்படும் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சார்லஸும் கமிலாவும் ஊர்வலமாக அபேக்கு வருவார்கள். சேவைக்குப் பிறகு, "முடிசூட்டு ஊர்வலம்" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய சடங்கு ஊர்வலம், அவர்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்பி பால்கனியில் குடும்பத்துடன் சேர்வதைக் காண்பார்கள்

முடிசூட்டு ஊர்வலத்திலோ பல்கனியிலோ எந்த குடும்ப உறுப்பினர்கள் தோன்றுவார்கள் என்பதை அரண்மனை சரியாகக் கூறவில்லை.

இந்த முடிசூட்டு விழா இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் வரலாற்றில் ஒரு பெரிய மைல்கல் என்று கூறிய கலாச்சார செயலர் மிச்செல் டோனலன், "பாரம்பரியம் மற்றும் நவீனம், கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் கலவையை நமது நாட்டை சிறப்பிக்கும் வகையில் கொண்டாட வார இறுதி நிகழ்வுகள் மக்களை ஒன்றிணைக்கும்" என்றார். ".

செப்டம்பரில் ராணியின் இறுதிச் சடங்கைப் போலவே முடிசூட்டுக்கான ஏற்பாடுகளும் இராஜதந்திர ரீதியாக உணர்திறன் கொண்டதாக இருக்கும், உலகத் தலைவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து வருவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாரியும், மேகனும்  கலந்துகொள்வார்களா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது

Tuesday, February 15, 2022

பிரிட்டனின் ராணியாகிறார் கமீலா


 ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக  சாள்ஸ் பதவியேற்கும்போது, அவரது மனைவி கமீலா, ராணியாக இருக்க வேண்டும்,'' என, ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.'

குயின் கன்சார்ட்'பிரிட்டன் ராணியாக பொறுப்பேற்று  70 ஆண்டுகளை  எதிர் வரும் ஜூன் மாதம் நிறைவு செய்கிறார், 95 வயதாகும் ராணி எலிசபெத். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ராணி எலிசபெத் கூறியுள்ளதாவது:

இத்தனை ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு, ஒத்துழைப்புக்கு நன்றி; இதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.எனக்குப் பின், என் மகன் சார்ஸ், அரசராக பொறுப்பேற்கும்போதும், இந்த ஆதரவைத் தொடர வேண்டும்.

சாள்ஸ் அரசராக பொறுப்பேற்கும்போது, அவரதுமனைவி கமீலாவை ராணியாக ஏற்க வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற முழு தகுதிஉடையவர் அவர்.இவ்வாறு அவர் கூறினார். பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தின்படி ராணி ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது, அவரது கணவர்கள், 'பிரின்ஸ் கன்சார்ட்' எனப்படும் இளவரசராகவே கருதப்படுவர். ராஜாவாக கருதப்படமாட்டார்கள்.அதே நேரத்தில் அரசர் பொறுப்பை ஏற்கும்போது, அவரது மனைவி 'குயின் கன்சார்ட்' எனப்படும் ராணியாகவே கருதப்படுவர்.

வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales , இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. 1981 ஆம் ஆன்டுஜூலை மாதம் 29 ஆம் திகதி  திருமணம் நடைபெற்றது. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.

1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று விவாகரத்து இறுதி செய்யப்பட்டது. டயானாவிற்கு $ 23 மில்லியனுக்கும், ஆண்டிற்கு 600,000 டொலருக்கும் இடையில் குடியேற்ற விதிமுறைகளும் பதிவாகியுள்ளன. அவர் மற்றும் சார்லஸ் இருவரும் தங்கள் மகன்களின் வாழ்க்கையில் செயலில் இருக்க வேண்டும். கென்சிங்டன் அரண்மனையில் அவர் தொடர்ந்து வாழ்ந்தார், "இளவரசர் வேல்ஸின்" பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார், ஆனால் "ஹெர் ராயல் ஹைனெஸ்" இன் ஸ்டைலிங் அல்ல.  விவாகரத்திலேயே, அவருடன் பணிபுரிந்த பெரும்பாலான தொண்டு நிறுவனங்களும் தங்களை ஒரு சிலருக்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன: வீடற்ற தன்மை, எய்ட்ஸ், தொழுநோய், பாலே, குழந்தைகளுக்கான மருத்துவமனை, மற்றும் ஒரு புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் ஆகியவற்றில் டயானா தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

1996 ஆம் ஆண்டில், டயானா நிலக்கண்ணிகளை தடை செய்வதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் ராயல் குடும்பத்திற்கான விதிமுறைகளை விட நிலப்பிரதேச எதிர்ப்பு பிரச்சாரத்துடனான தனது ஈடுபாட்டிலும் அவர் பல நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில், டயானா 42 வயதான "டாட்" ஃபாய்டு (ஈமட் முகம்மது அல்-ஃபெயட்) உடன் காதலுடன் இணைந்தார். அவரது தந்தை, முகம்மது அல்-ஃபெயட், ஹரோட் துறையின் பல்பொருள் அங்காடி மற்றும் பாரிசில் உள்ள ரிட்ஸ் ஹோட்டல் ஆகியவற்றின் சொந்தக்காரர். தந்தை மற்றும் மகன் ஆகியோரும் ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஆகஸ்ட் 30, 1997 அன்று, டயானா மற்றும் ஃபாய்டு பாரிஸ் நகரில் ரிட்ஸ் ஹோட்டலை விட்டு வெளியேறினர், அல்-ஃபெயேடு குடும்பத்தினர் மற்றும் டோட்டின் மெய்க்காப்பாளர் ஆகியோருடன் காரில் இருந்தார். பப்பராசிகள்  பின் தொடர்ந்ததால் , பாரிஸில் ஒரு சுரங்கத்தில்  கார் மோதி விபத்துக்குள்ளானது. 1997 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 அன்று டயானா மரணமானார்.  உலகமே துயரத்தில் ஆழ்ந்தது.

  2005ல், சாள்ஸ், கமீலாவை திருமணம் செய்தார். கமீலாவுக்கும் இது இரண்டாவது திருமணம்.தற்போது குயின் கன்சார்ட்டாக கமீலா இருக்க வேண்டும் என, ராணி எலிசபெத் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக இருந்த குழப்பங்களுக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளது.

பிரிட்டன் மக்களிடையே நீண்ட நாட்களாகவே ஒரு குழப்பம் நிலவியது. கமீலா, சாள்ஸ் ஸிசின் முதல் மனைவி இல்லை. இருவருமே முதல் திருமணத்தை விவாகரத்து செய்து, மறுமணம் செய்தவர்கள். இதனால் சாள்ஸ்  அரசராக பொறுப்பேற்கும்போது, கமீலாவை, இளவரசி என அழைக்க வேண்டுமா அல்லது ராணி என அழைக்க வேண்டுமா என்ற சந்தேகம் இருந்தது. கமீலாவை ராணியாக பிரிட்டன் மக்கள் அங்கீகரிப்பரா என்ற குழப்பமும் இருந்தது.

பிரின்சஸ் கன்சார்ட் என, அதாவது இளவரசி என அழைக்கப்பட்டால், அவருக்கு அரச குடும்பத்துக்கான மரியாதை கிடைக்கும்; ஆனால் ராணி அந்தஸ்து கிடைக்காது. இந்த குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், தற்போது ராணி எலிசபெத்தே, கமீலாவுக்கு குயின் கன்சார்ட் எனப்படும் ராணிக்கான அந்தஸ்தை வழங்கி விட்டதால், இனி இதற்கு மறு பேச்சு இல்லை. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. பிரிட்டன் மக்களால் கமீலா, 'ராணி கமீலா' என, இனி அழைக்கப்படுவார். குயின் கன்சார்ட் என்றால், அரசரின் ஜோடி என, அர்த்தம்.