Monday, October 30, 2017

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

 
 சம்பியனான இந்தியா
  உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன்  தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.


நாணயச் சுழற்சியில்  ஜெயித்த நியூஸிலாந்து கப்டன் வில்லியம்சன், ‘இரவில் பனிப்பொழிவின் தாக்கத்தில் பந்து வீசுவது சிரமம்என்பதை கருத்தில் கொண்டு முதலில் பந்துவீசித் தேர்வு செய்தார்.

இதன்படி ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தவான் 7-வது ஓவரில் 14  ஓட்டங்களில் வெளியேறினார்.. அடுத்து கப்டன் விராட் கோஹ்லி களம் புகுந்தார்.

ரோகித் -கோஹ்லி ஜோடியினர், துடுப்பாட்டத்துக்கு  உகந்த வகையில் காணப்பட்ட ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி சரிவை தடுத்து நிறுத்தியதுடன் நேர்த்தியாக விளையாடி ஓட்டங்களை திரட்டினர். 18.4 ஓவர்களில் இந்தியா 100 ஓட்டங்களை தொட்டது. இந்த கூட்டணியை உடைக்க நியூஸிலாந்து கப்டன் எடுத்த முயற்சிக்கு அவ்வளவு எளிதில் பலன் கிடைக்கவில்லை. இருவரும் தவறுக்கு இடம் கொடுக்காமல், ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டனர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா தனது 15-வது சதத்தை நிறைவு செய்தார். 35.1 ஓவர்களில் இந்தியா 200 ஓட்டங்களை தாண்டியது.
 32 ஆவது சதம் அடித்த கோஹ்லி தொடர் நாயகன்.


 
டிரென்ட் பவுல்டின் ஒரு ஓவரில் இருவரும் சேர்ந்து 4 பவுண்டரிகளும், கிரான்ட்ஹோமின் ஓவரில் 3 பவுண்டரிகளும் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 360 ரன்களை நெருங்கும் போலவே தோன்றியது.

அணியின் எண்ணிக்கை 259  ஓட்டங்களாக உயர்ந்த போது ரோகித் சர்மா 147 ஓட்டங்களில் (138 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) அட்டம் இழந்தார்.. ரோகித்-கோஹ்லி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் (211 பந்து) எடுத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (8) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி நுழைந்தார்.

மறுமுனையில் கப்டனுக்குரிய பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அட்டகாசப்படுத்திய கப்டன் விராட் கோஹ்லி தனது 32-வது சதத்தை பூர்த்தி செய்தார். அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு (49 சதம்) அடுத்து கோஹ்லி இருக்கிறார்.

 
நடப்பு தொடரில் 2-வது முறையாக சதம் அடித்த  கோஹ்லி 113 ஓட்டங்களில் (106 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். டோனி தனது பங்குக்கு 25 ஓட்டங்களும் (17 பந்து, 3 பவுண்டரி), கேதர் ஜாதவ் 18 ஓட்டங்களும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.  


நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில்இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 85 ஓட்டங்கள் எடுத்தது. இருப்பினும் இந்த மைதானத்தில் இது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக 303ஓட்டங் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

பின்னர் மெகா இலக்கை நோக்கி நியூஸிலாந்து அணி தனது பதில் வேட்டையை தொடங்கியது. புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரிலேயே காலின் முன்ரோ சிக்சரும், 3 பவுண்டரியும் விளாசி, சரவெடிக்கு அடித்தளம் போட்டார். முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சை இந்த முறை நியூஸிலாந்து வீரர்கள் அடித்து விளையாடினர்.. இன்னொரு தொடக்க வீரர் கப்தில் 10 ஓட்டங்களில் பும்ராவின் பவுலிங்கில் வீழ்ந்தார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. காலின்முன்ரோ (75 ), கப்டன் கனே வில்லியம்சன் (64  ), ராஸ் டெய்லர் (39  ) ஆகியோர் அணிக்கு வலுவூட்டினர்.

மிடில் வரிசையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் டாம் லாதம் தூண்போல் நிலைகொண்டு, இந்திய பவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்தார். நியூஸிலாந்தின் ஸ்கோரும் துரிதமாக நகர்ந்தது. வெற்றி யார் பக்கம்? என்பது கணிக்க முடியாத சூழல் நிலவியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


 இந்த நிலையில் 48-வது ஓவரில் டாம் லாதம் (65  ரன்-அவுட் ஆனார். அதன் பிறகே இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை வீசிய புவனேஷ்வர்குமார் 10 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஆறுதல் தந்தார். இதையடுத்து 6 பந்தில் 15 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.
 15 சதம் அடித்த ரோகித்  ஆட்டநாயகன் 

உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கட்டுக்கோப்புடன் பந்து வீசினார். ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ஓட்டங்கள் மட்டுமே வழங்கினார்.   50 ஓவர்களில் நியூஸிசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 331 ஓட்டங்கள்  சேர்த்தது. இதன் மூலம் இந்தியா 6 ஓட்ட  வித்தியாசத்தில் திரில்வெற்றி பெற்றது.

இந்திய பீல்டர்கள் சில நல்ல ரன்-அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். அத்துடன் 16 வைடு உள்பட 20 ஓட்டங்களை  எக்ஸ்டிரா வகையில் வாரி வழங்கினர். இவற்றை மட்டும் கச்சிதமாக செய்திருந்தால் நியூசிலாந்து இந்த அளவுக்கு

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் நியூஸிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகவும், விராட் கோலி(2 சதத்துடன் 263 ஓட்டங்கள் ) தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி டெல்லியில் நடக்கிறது.



Monday, October 23, 2017

முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி


சதம் அடித்த லதாம்
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாம் லாதம், ரோஸ் டெய்லர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
  
நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற இந்திய அணிக் கப்டன் விராட்கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய  செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். 

4-வது ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய 2-வது பந்தை ஷிகர் தவான் திருப்பி விட்டு ஓட்டம் எடுக்க முனைந்தார்.ஆனால் பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் டாம் லாதம் கையில் அடைக்கலமானது. இதனால் ஷிகர் தவான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 9 ஓட்டங்கள்  எடுத்து நடையை கட்டினார். அந்த ஓவரை டிரென்ட் பவுல்ட் மெய்டனாக வீசி முடித்தார்.

அடுத்து கேப்டன் விராட்கோஹ்லி களம் இறங்கினார். 5-வது ஓவரில் டிம் சவுதி பந்து வீச்சில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில்  டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கேற்றைப் பறிகொடுத்தார். இதனை அடுத்து விராட்கோஹ்லியுடன் இணைந்த கேதர் ஜாதவ் 12 ஓட்டங்களில் மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் அவரிடமே சிக்கி  வெளியேறினார்.
சதத்தைத் த‌வறவிட்ட ரெய்லர்

  தினேஷ் கார்த்திக் 37 ஓட்டங்களுடனும்  டோனி 25 ஓட்டங்களுடனும்   ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, விராட்கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்தார்.  நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 111 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதத்தை எட்டினார். 200-வது ஒருநாள் போட்டியில் ஆடிய விராட்கோலி அடித்த 31-வது சதம் இதுவாகும். அடித்து ஆடிய ஹர்திக் பாண்ட்யா 16 ஓட்டங்கள் எடுத்தபோது  டிரென்ட் பவுல்ட் வீசிய பந்தை அடித்து ஆட, அது மேல்நோக்கி எழும்பி கனே வில்லியம்சன் கையில் சிக்கியது.

கடைசி ஓவரில் டிம் சவுதி வீசிய முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி அசத்திய விராட்கோஹ்லி அடுத்த பந்தை அடித்து ஆட அந்த பந்து பவுண்டரி எல்லையில் நின்ற டிரென்ட் பவுல்ட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோஹ்லி 125 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 121 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அதிரடியாக 15 பந்துகளில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்து கடைசி பந்தில் ஹென்றி நிகோல்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெற்ககளும்  டிம் சவுதி 3 விக்கெற்களும்  சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  281 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூஸிசிலாந்து அணி 80 ஓட்டங்களுக்குள்  3 விக்கெற்களை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 28 ஓட்டங்களிலும்  ப்டன் கனே வில்லியம்சன் 6 ஓட்டங்களிலும்  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 32 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு டாம் லாதம், ரோஸ் டெய்லருடன் இணைந்தார். இந்த இணை நங்கூரம் பாய்த்தது போல் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. டாம் லாதம் 95 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். அவர் அடித்த 4-வது சதம் இது. கடைசி ஓவரில் ரோஸ் டெய்லர் (95 ஓட்டங்கள்  100 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரோஸ் டெய்லர்-டாம் லாதம் ஜோடி 200 ஓட்டங்கள் சேர்த்தது.
 31 ஆவது சதம் அடித்த கோஹ்லி

49 ஓவர்களில் நியூஸிசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 284ஓட்டங்கள்  எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் 102 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 103 ஒட்ட்டங்களுடனும் , ஹென்றி நிகோல்ஸ் ஒரு பந்தில் 4 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். நியூஸிசிலாந்து வீரர் டாம் லாதம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இருஅணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புனேயில் வருகிற 25 ஆம் திகதி நடக்கிறது.


Saturday, October 21, 2017

கைநாட்டு



பூவரசடி என்ற அந்தக் கிராமத்தில் உள்ள அனைவரும் கறுத்தானின் வீட்டில் குழுமி இருந்தனர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பூவரசடியின் நல்ல காரியங்கள் அனைத்தும் கறுத்தானின் வீட்டில் தான் அறிமுகமாகின. கறுத்தானின் அயராத முயற்சியினால்தான் கிராமத்து மக்கள் அனைவரும் தலை நிமிந்து நிற்கின்றனர். பூவரசடியைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகளும் படங்களும் பிரசுரமாவதற்கு  கறுத்தானின் சிந்தனைதான் முக்கிய காரணம்.

சுமார் முப்பது குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தின் தலைவராக  கறுத்தானையே அனைவரும் கருதுகிறார்கள். பூவரச மரங்கள் சூழ இருப்பதால் அந்தக்கிராமத்தை பூவரசடி என அழைக்கிறார்கள். ஆனால்,ஒரு கிராமத்துக்குரிய அடிப்படை வசதிகள் எவையும் அங்கு இல்லை.அங்குள்ள மக்கள் அனைவரும் கூலி வேலை செய்கிறார்கள். அங்குள்ளவர்கள் சிறு வயதிலேயே கூலி வேலைக்குப் போவதால் கல்வியைப்பற்றிய  அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை. படிக்கவேண்டும் என்ற ஆர்வம், படிக்கவில்லை என்ற கவலை எதுவுமே அவர்களுக்கு இல்லை.

படித்தவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பையும் மரியாதையையும் கண்ட கறுத்தான் தனது மகனை கூலி வேலைக்கு விடாமல் அருகில் உள்ள கிராமத்துப்  பாடசாலைக்கு அனுப்பினார். தனது வயதுச் சிறுவர்கள் அனைவரும் கூலி வேலைக்குப்போக தான் மட்டும் படிக்கப்போவதை அவமானமாகக் கருதினான் கறுத்தானின் மகன் கந்தன். பாடசாலையில் அவனை யாரும் மனிதனாகக் கருதவில்லை. அவனுடைய  ஊரைப்  பற்றியும் அவனுடைய  சமூகத்தைப் பற்றியும் தரக் குறைவாகக் கதைத்தார்கள்.கறுத்தான் ,கந்தன் என்ற பெயர்களைக் கேவலப்படுத்தினார்கள்.ஆசிரியர்களும் கந்தன் மீது அக்கறை காட்டவில்லை.

பாடசாலை வாழ்க்கை நரகலோகம் போல இருந்தது பாடசாலைக்குச் செல்லும் போதும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வரும்போதும் அழுதழுது அவனது கண்கள் சிவந்திருக்கும். கந்தன்படும் துயரத்தைக்கண்டு தாயார் மனம் வெதும்பினார்  கந்தனைப் படிக்கவிட வேண்டாம். கூலி வேலைக்கு விடும்படி கணவன் கறுத்தானிடம் கெஞ்சினாள் அவளது கெஞ்சல்களுக்கு கறுத்தானின் மனம் இரங்கவில்லை. விருப்பம் இல்லாமல் பாடசாலைக்குச் செல்வதால் கந்தனால் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பரீட்சையில் கந்தன் எழுதிய விடைகள் தற்செயலாகச் சரியானதால் எல்லாப் படங்களிலும் பத்துகுக்குறைவான புள்ளிகள் எடுத்து வகுப்பில் கடைசிப்பிள்ளையானான்.

தன்னால்  படிக்க முடியவில்லை என்று கறுத்தான் கவலைப்படவில்லை. இரண்டாம் தவணையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.  பரீட்சையில் புள்ளிகள் அதிகமாகப் பெற்றான். மூன்றாம்  தவணையில் அதிசயம் நிகழ்ந்தது. பன்னிரண்டாம் பிள்ளையான கந்தன் வகுப்பேற்றம் செய்யப்பட்டான். கந்தனால் நம்பமுடியவில்லை. தான் எதிர்பார்த்தது நடந்து விட்டதென தகப்பன் கறுத்தான் சந்தோஷப்பட்டான்.புலமைப்பரிசில்  பரீட்சையில் கந்தன் சித்தியடைந்தபோது அவனுடைய படத்துடன் பூவரசடி கிராமத்தைப் பற்றிய செய்திகள்  ஊடகங்களில் இடம் பிடித்தன. சின்ன வயதிலேயே கந்தனின் உயர் நிலையை எண்ணி வியந்த பூவரசடிக் கிராமத்தில் உள்ளவர்கள் தமது பிள்ளைகளையும் கூலி வேலைக்கு அனுப்பாது பாடசாலைக்கு அனுப்பினார்கள். இப்போது பூவரசடி கிராமத்துச் சிறுவர்கள் யாருமே கூலி வேலைக்குச் செல்வதில்லை.

கந்தனைப் பார்த்து ஏளனம் செய்த மாணவர்களும் அலட்சியம் செய்த ஆசிரியர்களும் அவனுடைய திறமையைப் பார்த்து அதிசயித்தனர்.  கந்தனின் பல்கலைக் கழகப் பிரவேசம் அந்த ஊருக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுத்தது. கந்தனைத் தொடர்ந்து பூவரசடி கிராமச் சிறுவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சாதனை செய்தனர்.

கந்தனுக்கு வேலை கிடைத்ததால் பூவரசடிக் கிராமம் மகிழ்ச்சியில் திளைத்தது. கந்தனை வழி அனுப்புவதற்காக அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு கூடியிருக்கின்றனர். அழகான சற்று விலை உயர்ந்த பேனையை கந்தனிடம் கொடுத்த கறுத்தான், அந்தப் பேனையால் முதன் முதலில் கையெழுத்திட வேண்டும் எனக் கூறினான். கையெழுத்து வைக்கத் தெரியாத பரம்பரை என்ற அவப்பெயரை நீக்கிய  கந்தன் தகப்பனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தான்.

உயர் அதிகாரியின் முன்னால் அமர்ந்திருந்தான் கந்தன். அவன் கொடுத்த ஆவணங்களைப் பார்த்தபின் சில பத்திரங்களைக் கந்தனிடம் கொடுத்துத்தார். தகப்பன் கொடுத்த புதிய பேனையினால் படிவங்களை நிரப்பிய கந்தன், கையெழுத்திடும் போது கண்கலங்கினான். கந்தனைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த அந்த அதிகாரி அவனுக்கு வாழ்த்துத்  தெரிவித்து சில ஆலோசனைகளும்  கூறினார். கந்தனை அழைத்துச்சென்ற அந்த உயர் அதிகாரி அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படலம் முடிந்தபின்னர் கந்தனின் இருக்கையில் அவனை இருத்திவிட்டு அவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

அந்த அலுவலகத்துக்குப் புதியவரவான கந்தனுடன் அந்த அறையில் இருந்தவர்கள் கதைத்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்த ஒருவர்,
"சேர். நீங்கள் தானே புதிசா வந்தவர்" என கந்தனைப் பார்த்துக் கேட்டார். கந்தன் தலையாட்டினார்.

"சேர் .என்னுடை ஒருக்கா காட் ரூம் வரை வரமுடியுமா?" என கந்தனிடம் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பர்க்காது சென்றான். கந்தன் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.அலுவலக வாயிலுக்குச்அவர்  அங்குள்ள சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறு பெட்டியைக் காட்டி.

" சேர் இதுதான்  பிங்கர் பிரின்ற் மெஷின். நீங்கள் உள்ளுக்கு வரேக்கையும் வெளியிலை போகேக்கையும் உங்கடை பெருவிரலை இதிலை பதியவேணும். இதை வைச்சுத்தான் ரிஜிஸ்ரர் மாக் பண்ணுவினம். நேரம்  பிந்தினால் நோபே விழும்" எனக்கூறிக்கொண்டே அதில் இலக்கங்களை தெரிவுசெய்து கந்தனின் வலது கை பெருவிரலையும் இடது கை பெருவிரலையும் மூன்று முறை பதிந்தார். கையெழுத்தை விடப் பெறுமதியானது கைநாட்டுத்தான் என்பதை இலத்திரனியல் நிரூபித்துள்ளதை கந்தனால் உணர முடிந்தது.

கந்தன் தான் வேலை செய்யும்பகுதிக்குப் போகும்போது இடது கையால்  பொக்கறைத் தடவிப்பார்த்தார்.  கையெழுத்து வைப்பதற்காகத் தகப்பன் கொடுத்த பேனை முள்ளாகக் குத்தியது.
சூரன்.ஏ.ரவிவர்மா.



Thursday, October 19, 2017

ஹசன் அலி 5 விக்கெற்ட் இமாம் உல் ஹக் அறிமுக சதம்

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம்  3-வது ஆட்டம் அபுதாபியில் நடைபெற்ற போட்டோயில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை  முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் 208 ஓட்டங்களில் சகல விக்கெற்களையும் இழந்தது. கப்டன் தரங்கா அதிகபட்சமாக 61 ஓட்டங்கள் எடுத்தார். ஹசன் அலி 10 ஓவரில் 34 ஓட்டங்கள்  மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 42.3 ஓவர்களில் 3 விக்கெற்களை  இழந்து  209ஓட்டங்கள்  எடுத்து 7 விக்கெற்ட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் இமான்-உல்-ஹக் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அவர் 125 பந்தில் 100 ஓட்டங்கள்  (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இவர் முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக்கின் உறவினர் ஆவார்.



ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் சார்ஜாவில் இன்று நடக்கிறது. ஆட்டநாயகன் விருதை முதலாவது சதம் அடித்த  இமாம் உல் ஹக்  பெற்றுக்கொண்டார்.

Tuesday, October 17, 2017

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி


இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.   துபாயில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 83 ஓட்டங்களில்  வெற்றி பெற்றது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பக்கர் ஜமான் 11 ஓட்டங்களிலும், அஹமது ஷெசாத் 8  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து பாபர் அசாமும் முகமது ஹபீசும் களமிறங்கினர். ஹபீஸ் 8  ஓட்டங்களில் வெளியேறினார். அசாம் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில்  ஆட்டமிழந்தனர்.

சோயப் மாலிக் 11  ஓட்டங்களிலும் , சர்பராஸ் அகமது 5  ஓட்டங்களிலும், இமாத் வாசிம் 10  ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 27.3 ஓவர்களில் 101 ஒட்டங்களுக்கு 6 விக்கெட்களை  இழந்து தடுமாறியது. இதையடுத்து அசாமுடன், ஷபாத் கான் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். சிறப்பாக விளையாடிய அசாம் சதம் அடித்தார். அவர் 101 ஒட்ட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹசன் அலி 7  ஓட்டங்களிலும், ருமன் ரயிஸ் ஓட்டம்  ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷபாத் கான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52  ஓட்டங்களிலும் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணியின் லஹிரூ கமகே 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
  220 ஓட்டங்கள்  என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். பாகிஸ்தான் அணியினரின் பந்துவிச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிக்வெல்ல்லா (3), குசல் மெண்டிஸ் (10), லஹிரூ திரிமன்னே (12), தினேஷ் சந்திமல் (2), மிலிந்தா சிரிவர்தனா (3), திசாரா பெரேரா (7), அகிலா தனஞ்ஜெயா (1) ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 28.1 ஓவரில்  7 விக்கெட்களை இழந்து  93 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

இருப்பினும் இலங்கை அணி கப்டன் உபுல் தரங்கா நிலைத்துநின்று ஆடினார். அவருடன் ஜெஃப்ரி வண்டர்சே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். தரங்கா அரைசதம் அடித்தார். வண்டர்சே 55 பந்துகளில் 22 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சுரங்கா லக்மல் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுடாகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி 172 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது.

மறுபுறம், சிறப்பாக விளையாடிய தரங்கா சதம் அடித்தார். அவர் அணியை வெற்றி பெற செய்ய தனி ஆளாக போராடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சரியாக விளையாடாததால் இலங்கை அணி 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தரங்கா 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

52 ஓட்டங்கள் எடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தானின் ஷபாத் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கெதிரான ஐந்து  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.. இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி அபுதாபியில்  நாளைக்கு  நடக்க உள்ளது.



Monday, October 16, 2017

சாதனையுடன் வென்றது தென்.ஆபிரிக்கா



தென்ஆப்பிரிக்காவுக்குச்சென்றுள்ள பங்களதேஷ் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்  நடைபெறுகிறது.
முலாவது ஒரு நாள் போட்டி கிம்பெர்லியில் நேற்று முன்தினம் நடந்தது. புற்கள் இன்றி முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்படுத்தடிய  பங்களாதேஷ் 7 விக்கெட்டுக்கு 278 ஓட்டங்கள் எடுத்தது.. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்காளதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 5-வது சதத்தை பூர்த்தி செய்த முஷ்பிகுர் ரஹிம் 110 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் பங்களாதேஷ்  வீரர் என்ற சிறப்பை முஷ்பிகுர் ரஹிம் பெற்றார்.

அடுத்து களம் புகுந்த தென்ஆப்பிரிக்க வீரர்களான குயின்டான் டி காக்கும், அம்லாவும் பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான இவர்கள் வேட்டை நடத்தினர். எந்த சலனமும் இல்லாத இந்த ஆடுகளத்தில் பங்களாதேஷ் வீரர்களால்  வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த டி காக் 13-வது சதத்தையும், அம்லா 26-வது சதத்தையும் எட்டினர். ஏழுபேர் பந்து வீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 282 ஓட்டங்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 168 ஓட்டங்களுடனும்  (145 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்), அம்லா 110  ஓட்டங்களுடனும் (112 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.


தென்ஆப்பிரிக்கா புதிய சாதனை

 தென்ஆப்பிரிக்க வீரர்கள் டி காக்கும், அம்லாவும் முதல் விக்கெட்டுக்கு 282 ஓட்டங்கள் திரட்டி மலைக்க வைத்தனர். ஒரு விக்கெட்டுக்கு தென்ஆப்பிரிக்க ஜோடி எடுத்த அதிகபட்சம் இதுதான். இதற்கு முன்பு டுமினி-மில்லர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள்  (ஸிம்பாப்வேக்கு எதிராகஇ 2015-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
 தென்ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 7-வது நிகழ்வாகும். அதே சமயம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக விரட்டிபிடிக்கப்பட்ட (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான். அந்த வகையில் இது புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக (2016-ம் ஆண்டு) விக்கெட் இழப்பின்றி 256 ஓட்டங்கள்  எடுத்து வெற்றி கண்டதே சிறந்த சாதனையாக இருந்தது.
 பங்களாதேஷ் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 29 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார். முன்னதாக 17 ஓட்டங்கள் எடுத்த போது 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 5,012 ஓட்டங்களும், 224 விக்கெட்டுகளும் (178 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் ஓட்டங்கள் ,200 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை அல்-ஹசன் பெற்றார். ஏற்கனவே சனத் ஜெயசூர்யா (இலங்கை), அப்ரிடி, அப்துல் ரசாக் (இருவரும் பாகிஸ்தான்), ஜக் கலிஸ்  (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர்.
அம்லா - டி காக் ஜோடி 3664 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது. கிப்ஸ் - ஸ்மித் ஜோடி 3607 ஓட்டங்கள்  . கிப்ஸ் - கல்லீ்ஸ் ஜோடி 3166 ஓட்டங்கள்   . அம்லா - டி வில்லியர்ஸ் ஜோடி 2955 ஓட்டங்கள் , கிப்ஸ் - கிர்ஸ்டன் ஜோடி 2906 ஓட்டங்கள்  குவித்துள்ளது.