Showing posts with label கர்நாடகம். Show all posts
Showing posts with label கர்நாடகம். Show all posts

Wednesday, May 10, 2023

ஏட்டிக்குப் போட்டியான‌ வாக்குறுதிகளால் திண்டாடும் கர்நாடகம்


  சட்டசபைத் தேர்தலால்  கர்நாடகம் களைகட்டியுள்ளது. மாநிலத் தலைவர்களும், டில்லித் தலைவர்களும் சந்திக்குச் சந்தி, மூலைக்குச் மூலை வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24 ஆம் திக‌தியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் திக‌தி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் உள்ள கர்நாடகத்தைக் கைப்பற்றுவதற்கு  காங்கிரஸ் சபதம் செய்துள்ளது. கர்நாடகத்தை ஆட்சி செய்தபோது செய்த சாதனைகள் எவற்றையும்  பாரதீய ஜனதாக் கட்சி  பட்டியலிடவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியின்  தவறுகளை காங்கிரஸ் பட்டியலிடவில்லை இரண்டு தேசியக் கட்சிகளும் இலவச வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளன.

இலவசங்களுக்கு  பரம எதிரியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதாக் கட்சி இலவசங்களை   விதைத்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் ஆத் ஆத்மி இலவசங்களைக்  கொடுக்க வாக்குறுதியளித்தது. ஆம் ஆத்மியின்  இலவச வாக்குறுதியால் கலங்கிய பாரதீய ஜனதாக் கட்சி இலவச வாக்குருதியளித்து வெற்றி பெற்றது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக  "ஆக்ரெசர் Gஉஜரட் ஸன்கல்ப் Pஅட்ர 2022" என்ற பெயரில் பாரதீய ஜனதா தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது.

அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் ,  இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று   அறிவித்தது.

தமிழ்நாட்டு இலவசத் திட்டங்களை குஜராத்தில் பாரதீய ஜனதா அறிமுகப் படுத்தியது.

  இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாவை  வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கே  காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. Hஅர் Gகர் ளxமி Cஅம்பைக்ன் என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

குஜராத் வெற்றியால்  மகிழ்ச்சியடைந்த பாரதீய ஜனதாக் கட்சி கர்நாடகாவிலும்  இலவச வாக்குறுதியுடன்  களம்  இறங்கியுள்ளது. இமாசலப் பிரதேச  வெற்றி கொடுத்த  உந்துதலால்  காங்கிரஸ் கர்நாடகாவில் இலவச வாக்குறுதியுடன் கால் பதித்துள்ளது.

  காங்கிரஸ் பல்வேறு சமூக நீதி கொள்கைகளையும், மாநில உரிமை கொள்கைகளையும், பல்வேறு இலவசங்களையும்  கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அமுலான‌ பல திட்டங்களை   காங்கிரஸ் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது. நிலையில் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி போல் ஸ்டாலின் பாணியில் சில முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அங்கே வெளியிட்டுள்ளது.

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது.  பெண்  உரிமை, பெண்களுக்கான  முன்னுரிமை என்பனவற்றை காங்கிரஸ் வாக்குறுதிகளாகக் கொடுத்துள்ளது.

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக உயர்த்தும். எல்லா தகுதி வாய்ந்த ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். எல்லா பிரிவினருக்கும் ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 தமிழ்நாட்டில் இருப்பது போலவே தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. அதை கர்நாடகாவும் பின்பற்றி உள்ளது.

அதிலும் இதில் தமிழ்நாட்டை சித்தராமையா நேரடியாக எடுத்துக்காட்டி உள்ளார்.

சமீபத்தில் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு கர்நாடகாவில் எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில்தான் இந்த இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மாநில சுயாட்சி பற்றி பேசும் நிலையில், கர்நாடகாவிலும் காங்கிரஸ் இதை கையில் எடுத்துள்ளது. முக்கியமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வரி பங்கீட்டில் கர்நாடகாவிற்கு பெருவாரியான பங்கீட்டை திருப்பி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளது.

இது தமிழ்நாட்டில் திமுக வைத்து வரும் கோரிக்கை ஆகும். இதே விஷயத்தை அங்கே காங்கிரஸ் வாக்குறுதியாக கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் இருப்பது போலவே, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி அங்கே அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும். கர்நாடகாவின் Kஸ்ற்TC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி போன்றவை தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம் இதை அப்படியே காங்கிரஸ் கர்நாடகாவில் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரோல் மாடலாக திகழும் திட்டங்களை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதிகளாக அறிவித்து உள்ளது.

நந்தினி நிறுவனத்தின் பால் அரை லிட்டர் இலவசமாக ஏழைகளுக்கு வழங்கப்படும்,கர்நாடகாவில் உள்ள பழமையான கோவில்களை புணரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிற்ற‌டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம்,ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்,  5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழஙப்படுமென  பாரதீய ஜனதா  வாக்குறுதியளித்துள்ளது.

கர்நாடகத்தில் 20 தொகுதிகளின்  வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள்  உள்ளனர். காங்கிரஸுக்கு ஆதர‌வாக  திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை விட்டுள்ளது. திருமாவளவன், கமல் ஆகியோர்  தேர்தல் பரப்புரை செய்கின்றனர். கர்நாடகாவில்  முன்பு நடைபெற்ற  தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும், விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் பரப்புரையில்  கலந்துகொள்ளவில்லை.

எம்.ஜி.ஆர் கால‌த்திலும், ஜெயாலிதாவின்  காலத்திலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

கர்நாடகத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த எடப்பாடியின் ஆதர்வாளரும், பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரும் தமது வேட்புமனுவை   வாபஸ் பெற்றனர். பாரதீய ஜனதாக் கட்சி கேட்டுக்கொண்டதால்  வேட்புமனுவை  வாபஸ் பெற்றதாக எடப்பாடி  அறிவித்தார்.  வாபஸ் பெற்றதற்கான காரணம் எதனையும் பன்னீர்ச்செல்வம் தெரிவிக்கவில்லை.   பன்னீர்ச்செல்வத்தைன்  முடிவு இரகசியமானதல்ல.  யாருக்காக பன்னீரின் வேட்பாளர் வாபஸ் பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை.

கர்நாடகத் தேர்தல் களம் அண்ணாமலையின் அரசியலை நோட்டம் பார்க்கும்  இடமாகவும் உள்ளது.  கர்நாடக  தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான அண்ணாமலை,  கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக் கணிப்புகள்  காங்கிரஸுக்குச் சாதக‌மாக உள்ளது.

கர்நாடகத் தேர்தல் முடிவு  அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.

Sunday, October 31, 2021

மக்கள் மனதை கவர்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்


 

48 இலவச பள்ளிக்கூடங்கள் ,

 

26 ஆதரவற்றோர் இல்லங்கள் ,

 

16 முதியோர் இல்லங்கள் ,

 

 சுமார் 1800 மாணவ, மாணவியரின் கல்வி என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுடைய பயனுக்காகவும் வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார்.


கன்னட திரை உலகரசிகர்களின் மனதில் இடம் பிடித்த புனித் ராஜ்குமார் கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலமானதால் கன்னடா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.   சூப்பர் ஸ்டார் என கன்னட ரசிகர்களால் கொண்டாடப்படும் புனித் ராஜ்குமார் தனது வருமானத்தில் அதிக தொகையை சமூக சேவைக்காகச் செலவிட்டார். தனது  இரண்டு கண்களையும் தானம் செய்த புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பின்னரும் உகலத்தை காணும் பாக்கியம் பெற்றுள்ளார். 

நடிகர் புனித் ராஜ்குமார் காலையில்  உடற்பயிற்சி செய்யும்போது மயங்கியதால்   பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது உடல் நிலை மிகவும்  ஆபத்தான நிலையில்  இருந்ததால் தீவிர சிகிச்சையலிக்கப்பட்டது.  ஐசியூவில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்  மதியம் காலமானார். 

புனித் ராஜ்குமாரின் மரணத்தால் கர்நாடகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள் அவரது மரணம்  தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

நடிகர்கள் ராஜ்குமார், பர்வதம்மா தம்பதியருக்கு 5வது மகனாக சென்னையில் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். புனித் ராஜ்குமாருக்கு முதலில் லோகித் என பெயர் வைத்தனர்.   இவர் தான் வீட்டின் கடைக்குட்டி. 6 வயதாக இருக்கும் போது இவர்களின் குடும்பம் சென்னையில் இருந்து மைசூருக்கு சென்றது. ராகவேந்திர ராஜ்குமார், சிவ ராஜ்குமார் என இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், அதே போல லக்ஷ்மி, பூர்ணிமா  என இரண்டு சகோதரிகள் உள்ளனர். 

புனித் ராஜ்குமார் ,  6 வயதாக இருக்கும் போதே நடிகர்களான தந்தையுடனும், சகோதரர்களுடனும் சேர்ந்து சினிமா செட்களுக்கு செல்வார். புனித் ராஜ்குமார் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைப்படத்தில் தோன்றினார் என்பது பலருக்கும் தெரியாது. 1976 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமதா கனிகே' என்னும் திரைப்படத்தில் அவரது தந்தை ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஆனது.  6 வயதாக இருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத்  தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 10 வயதில் தேசிய விருதும், அடுத்தடுத்து இரண்டு மாநில விருதுகளையும் வென்றுள்ளார். 14 வயது முடிவதற்குள் 14 படங்களில் நடித்திருந்தார்.

ஷெர்லி எல் அரோராவின் 'என்ன அப்புறம் ராமன்?' நாவலை அடிப்படையாகக் கொண்டு என்.லட்சுமிநாராயண் இயக்கிய 'பேட்டடா ஹூவு' திரைப்படத்திற்காக புனித் ராஜ்குமார் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதைப் பெற்றார். அப்படத்தில் அப்பாவி ராமுவாக புனித் நடித்திருந்தார்.

புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல. இவர் பழம்பெரும் நடிகர் டாக்டர் ராஜ்குமாரைப் போலவே ஒரு நல்ல பாடகர். இவர் ஆறு வயதாக இருக்கும் போதே, பிரபல இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்த 1982ம் ஆண்டு  வெளியான பாக்யவந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற "பானா தாரியல்லி சூர்யா" என்ற தனது முதல் பாடலைப் பதிவு செய்தார்.


புனித் ராஜ்குமார் 1982-83 இல் வெளியான 'சாலிசுவ மொதகலு' திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக தனது முதல் கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

 2002ம் ஆண்டுஅப்புஎன்ற படத்தில் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் அவரை செல்லம்மாக அப்பு என்றே அழைக்கத்தொடங்கினர். பின்னர் தனது நடிப்பாற்றலால் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடித்தார்அவரின் மூத்த சகோதரர்களைக் காட்டிலும் அவரின் செல்வாக்கு  அதிகமாகியது. 

ஆனால் புனித், தன்னுடைய அப்பாவின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே கிட்டத்தட்ட 13 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 'பெட்டடா ஹுவு' என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரம் என்றால் ஐந்தாறு வயதில் நடிப்பர். ஆனால், புனித் ராஜ்குமாரோ ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே திரையில் வந்துவிட்டார்.


'அப்பு' என்ற படத்தில் நாயகனாக சான்டல்வுட்டுக்கு அறிமுகமானார். படம் பெரு வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக்தான் தமிழில் சிம்பு நடித்த 'தம்'.  நிறைய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்று நினைக்காமல் வருடத்திற்கு ஒரு படம், இரண்டு படம் என கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார், புனித்.

'அபி', 'வீர கன்னடிகா', 'மயூரா', 'ஆகாஷ்', 'அரசு', 'மிலானா', 'வம்சி', 'ராம்', 'ஜாக்கி', 'ஹுடுகரு', 'பவர்', 'ரணவிக்ரமா' என இவரது பல படங்கள் 100 நாள்களைத் தாண்டி திரையரங்குகளில் களைகட்டியிருக்கின்றன. மகேஷ்பாபு நடித்த 'ஒக்கடு' தமிழில் விஜய் நடிப்பில் 'கில்லி'யாக ப்ளாக்பஸ்டரானது. அதன் கன்னட ரீமேக்கான 'அஜய்'யில் நடித்தது புனித் ராஜ்குமார்தான்.

'நாடோடிகள்', 'போராளி', 'இவன் வேற மாதிரி', 'பூஜை' ஆகிய தமிழ் படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்திருக்கிறார். 'போராளி' படத்தின் கன்னட ரீமேக்கை சமுத்திரக்கனியே இயக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தமிழ்த் திரையுலகை கவனித்தும் தமிழ் இயக்குநர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும் வந்திருக்கிறார் புனித். இவரது அப்பா பெயரில் இவர் நடித்த 'ராஜ்குமாரா' என்ற படம் வசூலில் சாதனை செய்தது.

கடைசியாக 'யுவரத்னா' என்ற படத்தில் சாயிஷாவுடன் நடித்திருந்தார். 'புட்டபொம்மா' பாடலை போலவே இருக்கும் அந்தப் படத்தின் ஒரு பாடல் கொண்டாடப்பட்டது. சண்டை, நடனம் இரண்டிலும் புனித் கில்லாடி. தற்போது 'ஜேம்ஸ்', 'த்வித்வா' என இரண்டு படங்கள் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. 46 வயதேயான இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது கன்னட சினிமா உலகம் மட்டுமன்றி இந்தியா சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

  புனித் ராஜ்குமாரின் அண்ணணும், பிரபல கன்னட நடிகருமான சிவ ராஜ்குமாரின் பஜ்ரங்கி 2 படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா  அவர் மரணமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. இந்த விழாயில் யாஷ், புனித் ராஜ்குமார், சிவ ராஜ்குமார் உள்பட 3 பேரும் பங்கேற்றனர். இதில் மூன்று பேருமே மகிழ்ச்சியுன் கட்டிப்பிடித்தபடி பேசி சிரித்து ஆடி பாடி மகிழச்சியுடன் இருந்தனர். இறுதியாக தனது அண்ணணுடன் சேர்ந்து புனித் ராஜ்குமார் நிகழ்ச்சியில் நடனமும் ஆடினார். 

பஜ்ரங்கி 2 படம் வெளியானதை ஒட்டி, படக்குழுவை வாழ்த்தி புனித் ராஜ்குமார் ட்வீட் போட்டார்.  காலையில் ட்வீட் போட்டவர் மதியம் உயிருடன் இல்லை என்பதை ரசிகர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. 

1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்த புனித் ராஜ்குமாருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். புனித் ரஜ்குமாரின் குடும்பம் முழுவதுமே திரைத்துறையில் தான் உள்ளனர். சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என அவரின் இரண்டு சகோதரர்களும் நடிகர்களாக உள்ளனர். மேலும் இவரின் சகோதரரின் இரு மகன்களான வினய் மற்றும் யுவா ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். இவர்கள் குடும்பத்தில் புனித் ராஜ்குமாருடன் சேர்த்து 12 பேர் திரைத்துறையில் நடிகர்களாகவும், இயக்குமர்களாகவும், நடிகையாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரே வருடத்தில் கன்னட திரையுலகில் இரண்டு பெரும் நட்சத்திரங்கள் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட உலகில் கார்டியாக் அர்ரெஸ்ட் மூலம் ஏற்படும் இரண்டாவது பெரிய மரணம் ஆகும் இது. கடந்த வருடம் பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். இவர் பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகர் அர்ஜுனின் உறவினர் ஆவார். சிரஞ்சீவி சர்ஜாவிற்கு கடந்த ஜூன் 6ம் திகதி மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் அன்றைய தினமே மரணம் அடைந்தார். இவரின் மரணத்திற்கும் கார்டியாக் அர்ரெஸ்ட் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். நல்ல உடற்கட்டு கொண்ட, பிட்டான நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கார்டியாக் அர்ரெஸ்ட் மூலம் மரணம் அடைந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயது என்ன சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்த போது அவருக்கு வயது   35தான். இந்த நிலையில்தான் 46 வயதே நிரம்பிய புனித் ராஜ்குமாரும் கார்டியாக் அர்ரெஸ்ட் காரணமாக மரணம் அடைந்துள்ளார். 

கன்னட திரையுலகில் அப்பு மற்றும் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர்  நடிகர் மட்டுமில்லாமல், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர் என்று பன்முகத் திறமைக்கொண்டு விளங்கி இருக்கிறார். இவ்வளவு சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் இடம் பெற்ற புனித் ராஜ்குமார்  இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும், இவரது நினைவுகள் என்றும் மக்கள் மனதில் அழியாது நிலைத்திருக்கும்.