Monday, March 27, 2023

ஐபிஎல் இல் இருந்து வெளியேறிய வீரர்கள்

இந்தியாவில்  நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கில் ஏலத்தில்  வாங்கப்பட்ட சில வீரர்கள் வெளியேறியதால் அணிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

 காயம், உடல்தகுதியின்மை போன்ற காரணங்களினால் சில வீரர்கள் வெளியேறினர். ஐபிஎல்  இல் கிடைக்கும் பணத்தை விட நாட்டுக்கு விளையாட வேண்டும் என சில  வீரர்கள் ஐபிஎல் க்கு  குட்பை சொல்லியுள்ளனர்.

  இங்கிலாந்து அணியின் முன்னணி    அதிரடி துவக்க வீரரான   ஜொனி பேர்ஸ்டோ இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் போது நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதன் காரணமாகவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜொனி பேர்ஸ்டோவை ஏலத்தைன்  வாங்கிய  தற்போது பஞ்சாப் அணிக்கு  பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ்   பிற்பகுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்றும் கடைசி சில போட்டிகளை தவிர்த்து விட்டு ஆஷஸ் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள இருப்பதினால் பிளேஆப் சுற்றுக்கு முன்னதாகவே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி நாடு திரும்ப விடுவேன் என்று அறிவித்துள்ளார்.   சென்னை அணியில் இடம் பெற்றிருந்த நியூஸிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக வெளியேறினார்.மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி சிஎஸ்கே அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜூலை மாதம் காயமடைந்த  ஜஸ்பிரித் அதன் பின் 2 முறை காயமடைந்து மீண்டும் வெளியேறினார் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள பும்ரா 2023 உலகக் கிண்ணப் போட்டியில்  விளையாடுவார் என்பதால் இந்த ஐபிஎல் தொடரில் இலாதது  மும்பைக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது

 அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான ஜே ரிச்சர்ட்சன்  1.5 கோடிக்கு மும்பையால் வாங்கப்பட்டார்.  உள்ளூர் தொடரில் காயத்தை சந்தித்த இவர் 2023 ஐபிஎல் தொடரில்  இருந்து விலகியுள்ளார்.பும்ரா இல்லாத மும்பைக்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 2021 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்   கடந்த டிசம்பர் மாதம் சந்தித்த கார் விபத்தால் காயமடைந்துள்ளார்.  2023 ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2023 உலகக்கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் விளையாட மாட்டார்.  அவர்  இல்லாததால்  டெல்லி அணி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.

10 கோடிக்கு ராஜஸ்தானால் வாங்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா காயமடைந்ததால் ஐபிஎல்  இல் விளையாடமாட்டார். இவர் 2008க்குப்பின் ராஜஸ்தான்  இறுதிப் போட்டியில் விளையாட   முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும் தேர்வாகி கணிசமான போட்டிகளில்   இவர் 2023 ஐபிஎல் தொடரில் விலகியது மட்டுமல்லாமல் 2023 உலகக் கோப்பையில் விளையாடுவதும் சந்தேகம்.

 இங்கிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டரானவில் ஜேக்ஸ்சை பெங்களூரு அணி 3.2 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. பங்களாதேஸுக்கு எதிரான ரி20   தொடரில் தொடைப்பகுதியில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் தனது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்குவதற்கு முன்பாகவே விலகியுள்ளார்.

நிலையில் சென்னை அணியின் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி, லக்னோ அணியின் முக்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மோசின் கான், கொல்கத்தா அணியின் ப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூரு அணியின் முக்கிய மிடில் ஆர்டர் வீரர் ரஜத் படிதர், பெங்களூரு அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -62


 அறிஞர்,கலைஞர்,கவிஞர் என்றால்  அது முறையே அண்ணாதுரை,கருணாநிதி,கண்ணதாசன் ஆகியோரைச் சுட்டும்  என்பது யாவரும் அறிந்ததே.சினிமாவில் நடிகர்களின்  பெயருக்கு முன்னால்  பொறிக்கப்பட்ட பட்டப்  பெயர்கள், கவிஞர், இயக்குநர்  போன்றவர்களுக்கும்  சூட்டப்பட்டது. அதிகமானவர்களுக்கு  பட்டம் பெயர் கொடுத்தவர் கருணாநிதி. கருணாநிதிக்கு  எம்.ஆர்.ராதா கொடுத்த "கலைஞர்" எனும் பட்டம் தான்  இன்றுவரை  கருணாநிதியின் முகத்தை  மனக்கண்ணில் நிறுத்துகிறது .

நாடகமேடைகளில் தன்  நிகரில்லாமல் நடிகனாக விளங்கிய  எம்.ஆர்.ராதாவுக்கு அ937 ஆம் ஆண்டு  ‘ராஜசேகரன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம்  கிடைத்தது.     மேலை நாடுகளுக்குச் சென்று திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றுவந்த  இந்தப் படத்தை ஆர்.பிரகாஷ் இயக்கினார். ‘ராஜசேகரன்’ படத்தில் இ.ஆர்.சகாதேவன் கதாநாயகன். எம்.ஆர்.ராதா வில்லன். இந்தப் படத்துடன் ‘ஏமாந்த சோனகிரி’ என்றொரு படத்தையும் இணைத்துத் திரையிட்டார்கள்

.கொலிவூட்டின் ‘டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ்’ போல எம்.ஆர்.ராதாவின்  நடிப்பு இருந்ததால் ‘இண்டியன் டக்ளஸ்’ என்ற வாசகத்துடன் அவரது படங்கள் போட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அவருடைய நடிப்பு மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக  இருந்தது.படம் வெற்றி பெறாததால் எம்.ஆர்.ராதாவுக்கு சினிமா வாய்ப்புகள்  கிடைக்கவில்லை.

   சினிமாவை நம்பிப் பிரயோசனம்  இல்லை என்பதால்  மீண்டும் நாடகத்துக்குத் திரும்பினார்  எம்.ஆர்.ராதா யதாத்தம் பொன்னுசாமிப் பிள்ளை ‘இழந்த காதல்’, ‘விமலா அல்லது விதவையின் கண்ணீர்’ ஆகிய இரண்டு நாடகங்களையும் பார்த்த எம்.ஆர்.ராதா அவற்றை மெருகேற்றி அரங்கம் அமைத்தால் சிறப்பாக  இருக்கும் என  பொன்னுசாமிப் பிள்ளையிடம்  சொன்னார். அத்துடன் அதில் வரும் வில்லன் ஜெகதீஷ் வேடத்தில் தானே நடிக்கிறேன் என்றும் சொன்னார்.  பொன்னுசாமிப்பிள்ளை  ஒப்புதலளித்தார்.

சேலத்தில் நியூஓரியண்டல் தியேட்டரில் புத்தம்புதுப் பொலிவுடன் அரங்கேறிய  ‘இழந்த காதல்’. பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆறு மாதகாலம் நடந்து நாடகவுலகில் புதிய சாதனை படைத்தது.  எம்.ஆர்.ராதாவின் நடிப்பை ‘ராஜசேகரனில்’ பார்த்து ரசித்தவர் மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர்.சுந்தரம். அவர் தயாரிப்பில் உருவான ‘சந்தனதேவன்’, ‘சத்தியவாணி’ ஆகிய படங்களில் ராதாவுக்கு நடிக்க  வாய்ப்பளித்தார்.நாடகத்தில் இருந்து சினிமாவுக்குத் திரும்பினர் எம்.ஆர்.ராதா.

மதராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்று அறியப்பட்டிருந்த ராதாவின் பெயரை எம்.ஆர்.ராதா என்று சுருக்கி வைத்தா டி.ஆர்.சுந்தரம்.தான் என்று ஒரு   அந்த இரு படங்களும் பெரிய வெற்றிபெறவில்லை. எனவே, ராதா நாடகத்தில் இன்னும் கவனம் செலுத்தினார். ‘சரஸ்வதி கான சபா’ என்றொரு நாடகக் குழுவைத் தொடங்கினார். ‘இழந்த காதல்’ நாடகத்தை அதில் நடத்தினார். சரிவர வசூல் இல்லை. பின்னர் ‘மதுரை மங்கள பாலகான சபா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் வாரம் இரண்டு நாட்கள் பி.எஸ்.ஞானத்துடன் இணைந்து நடித்துவந்தார் ராதா.

  1943-ல் ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார் ராதா. முகப்புத் திரைச்சீலையில், ‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்தையும் எழுதி வைத்தார்.துணிச்சலோடு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள் வாயிலாகச் சொல்லிவந்தார்.பெரியாரின் கொள்கைகளைப் பேசியதால் ராதாவின் நாடகங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். சண்டைகளும் சலசலப்புகளும்கூட அவ்வப்போது நடக்கத் தொடங்கின. கலவரங்களின்போது படுதாவை இழுத்துவிட்டு, மேடையில் மைக் முன்னே ராதா தோன்றிவிடுவார்.

"யார் கலாட்டா செய்வது? உங்களுக்கு நாடகமோ அல்லது அதில் சொல்லப்படுகிற விஷயமோ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தந்த பணத்தைத் திருப்பி வாங்கிக்கொண்டு வெளியேறிவிடுங்கள். தேவையின்றி மக்களுக்குத் தொல்லை தராதீர்கள்.நான்தான் சீர்திருத்த நாடகம் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறேனே. அதைப் பார்த்துவிட்டுத்தானே நாடகத்திற்கு வந்தீர்கள்? அப்படியானால் நான் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும். இல்லையேல் கிளம்புங்கள். நேரத்தை வீணாக்க வேண்டாம். என் உயிர் உள்ளவரையில் என் கருத்தை நான் சொல்லிக்கொண்டேயிருப்பேன்." கலகலப்பு அமைதியாகிவிடும்

. ராதாவின் விருப்பப்படி கலைஞர் எழுதிய நாடகம்தான் ‘தூக்குமேடை’. அதில் ராதாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர் தலைவராக கருணாநிதியும் நடித்தார். அந்த நாடகமும் தமிழ்நாட்டில் பெரும் புரட்சியை உண்டுபண்ணியது.

பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் இந்த நாடகத்துக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ராதா, "நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நாடகத்தை எழுதி, அதில் நடித்தும் சிறப்பித்த இவரை நான் இன்றுமுதல் அறிஞர் என்ற பட்டப்பெயருடனேயே அறிஞர் கருணாநிதி என்றே அழைக்க விரும்புகிறேன்" என்றார்.

இதைக் கேட்டு விருட்டென எழுந்த கருணாநிதி, "இல்லை... அறிஞர் என்றால் அது அண்ணா மட்டும்தான்" என்றார். ராதா விடாமல், "சரி, பேரறிஞர் கருணாநிதி என்று அழைக்கட்டுமா?" - என்றார். அப்போதும் குறுக்கிட்ட கருணாநிதி, "அண்ணாவைவிட நான் எதிலும் உயர்ந்தவனில்லை!" என்றார்.

"அப்படியானால் நான் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கட்டுமா?" என்றதுதான் தாமதம், கூட்டத்திலிருந்த தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். கைதட்டி வரவேற்றார்கள். அன்றிலிருந்துதான் அவர் கலைஞர் கருணாநிதி என்று உலகின் நாவுகளெல்லாம் உச்சரிக்கும் திருப்பெயர் பெற்றார். அதுபோல ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தைப் பார்த்து வியந்த பட்டுக்கோட்டை அழகிரிதான் எம்.ஆர்.ராதாவை ‘நடிகவேள்’ என்று சிறப்புப் பெயர் சூட்டி அழைத்தார்

’மக்கள் திலகம்’ எம்ஜிஆர் போல், ‘புரட்சி நடிகர்’ எம்ஜிஆர் போல, ‘நடிகர்திலகம்’ சிவாஜி போல், ‘லட்சிய நடிகர்’ எஸ்எஸ்ஆர் போல், ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் போல், அப்போது சிவகுமார், கமல், ரஜினி முதலானோருக்குக் கூட பட்டங்கள் சூட்டப்படவில்லை. ஆனால் விஜயகுமாருக்கு ‘புரட்சிக்கலைஞர்’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது.எழுபதுகளின் இறுதிகளில் வெளியான விஜயகுமாரின் படங்களில், விஜயகுமாருக்கு ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகுமார் என்று டைட்டில்  இருந்தது.விஜயகாந்தின் வரவு விஜயகுமாருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.  காலப்போக்கில் "புரட்சிக் கலைஞர்"  எனும் பட்டமும் விஜயகாந்துக்குக்  கொடுக்கப்பட்டது.

எண்பதுகளில், கொஞ்சம் கொஞ்சமாக விஜயகுமார் நாயகனாக நடிக்கும் படங்கள் குறைந்தன. வில்லனாக நடிக்கும் படங்கள் வரத்தொடங்கின. கமலுக்கும் ரஜினிக்கும் வில்லனாக நடித்தார் விஜயகுமார். பிறகு, வில்லனாகவும் குணச்சித்திரக் கேரக்டரிலும் வெளுத்துவாங்கினார். இந்த தருணங்களில் ‘இவர்களுடன் விஜயகுமார்’ என்று டைட்டிலில் போட்டு கெளரவப்படுத்தினார்கள். நாளடைவில் விஜயகுமாருக்கு கொடுத்த ‘புரட்சிக்கலைஞர்’ எனும் பட்டம் மறைந்தேபோனது. ‘விஜயகுமார்’ என்று மட்டும் டைட்டிலில் போடும் காலமும் வந்தது.

’காதல் இளவரசன்’ என்கிற டைட்டிலுக்கும் ‘உலகநாயகன்’ என்கிற டைட்டிலும் நடுவே பட போஸ்டர்களில், ‘நவரச நாயகன்’ என்று கமலுக்கு அடைமொழி கொடுத்தார்கள். ஆனால் தொடர்ந்து அப்படிப் போட்டுக்கொள்ளவில்லை கமல். கலைஞர் கருணாநிதி சூட்டிய ‘கலைஞானி’ பட்டம் சேர்ந்தது. பிறகு இந்த ‘நவரசநாயகன்’ என்கிற பட்டம் கார்த்திக் வசம் சென்றது. இன்றைக்கும் ‘நவரசநாயகன்’ என்றால் கார்த்திக் என்றும் ‘புரட்சிக்கலைஞர்’ என்றால் விஜயகாந்த் என்றும் மக்கள் மனதில்   பதிந்துவிட்டது. தீம்புனல்,

சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் புட்டின்


 உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா   அங்கு பல மனித உரிமை மீறல்களை நடத்தியது.  குழந்தைகளை நாடு கடத்திய குற்றச்சாட்டில் புட்டினுக்கு பிடிவாரண்ட பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உக்ரைன் போர் விவகாரத்தில் சர்வதேச அளவில் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 

உக்ரைன் மீதான விசாரணை 2022 aam aaNdu  மார்ச் maatham 2ஆம் thikathi தொடங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கிறது.

போர் தொடங்கியது முதலே உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஐசிசி  எனும்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபது புட்டின், ரஷ்யாவின்  குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால்  உக்ரைன்  உருக்குலைந்துள்ளது. ரஷ்யாவின் போர் முகத்தால்  உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து, ரஷ்யாவில் இருந்தும் ஏற்றுமதியாகும்  கோதுமை,கச்சா எண்ணைய் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ரஷ்யாவின் மீது  பொருளதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின்  இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவே உக்ரைன்  மீது சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதாக  புட்டின் தெரிவித்தார். ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பு நாடு இல்லை. ஐசிசி அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால் இந்த பிடிவாரண்ட் எல்லாம் செல்லாது என்று ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.  உக்ரைன் போரில் ரஷ்யா எந்தவொரு போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளது.  உறுப்புரிமை இல்லாத நாட்டின் மீது விசாரனை நடத்த முடியாது.  ஆனால், உகரைன்  உறுப்பு நாடு என்பதால் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு உள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. விசாரணை போர்க்குற்றங்கள், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் , ஆக்கிரமிப்பு விவகாரம் உள்ளிட்டவற்றை ஐசிசி விசாரிக்கும். உறுப்பு நாடுகள் விசாரிக்க முடியாது அல்லது விரும்பாத விவகாரங்களை ஐசிசி விசாரிக்கும். உறுப்பு நாடுகளில் வசிக்கும் மக்கள் அல்லது உறுப்பு நாடுகளின் பகுதிகளில் நடக்கும் குற்றங்களை ஐசிசியால் விசாரிக்க முடியும். 

ஐ.சி.சியில் 123 நாடுகள் உள்ளன.  2023ஆம் ஆண்டு பட்ஜெட்டாக சுமார் 170 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டது. இப்போது சர்வதேச நீதிமன்றம் 17 விவகாரங்களை  விசாரித்து வருகிறது. உக்ரைன், உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, வெனிசுலா, மியான்மார், பிலிப்பைன்ஸ் உட்பட 17 விவகாரங்களை   ஐசிசி விசாரித்து வருகிறது. இதுவரை சர்வதேச நீதிமன்றம் 31 வழக்குகளை விசாரித்துள்ள நிலையில், 30க்கு மேற்பட்ட  பிடிவாரண்ட்களை ஐசிசி நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதில் 21 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். ஆனாலும்,  14 பேர் இன்னும் விசாரணைக்குக் கூட ஆஜராகவில்லை.. குற்றஞ்சாட்டப்பட்டோரில் 5 பேர் மரணமடைந்ததால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன.

  சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் 10 பேருக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். யும், 4 பேரை  விடுதலையும் செய்துள்ளனர். காங்கோ, மாலி , உகாண்டா நாடுகளைச் சேர்ந்த 5 பேரைப் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐசிசி குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு 9 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசியால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.

  ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி  லாரன்ட் கபாக்போ தான் ஐசிசி முன் ஆஜரான  மிக முகியமான முதல்  தலைவர் ஆவார். அவர் மீது மூன்று ஆண்டு விசாரணை நடந்தது. 2019இல் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

  ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள்   சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதரிக்கிறன. அமெரிக்கா, சீனா ,ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதில் உறுப்பினர்களாக இல்லை. அரசியல் ரீதியாக வழக்கு தொடரப்படலாம் என்பதே இதை அவர்கள் புறக்கணிக்கச் சொன்ன காரணமாக இருக்கிறது.   இந்த நீதிமன்றத்தில் மொத்தம் 15 நீதிபதிகள் உள்ளனர். இந்த நீதிபதிகள் ஐநா பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபையால் ஒன்பது வருடப் பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீதிபதி நியமனம் முழு பெரும்பான்மையைப் பெறுபவர்கள் மட்டுமே நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள். இதனால் சில நேரங்களில் பல சுற்றுகளில் வாக்குப்பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.   நீதிமன்றம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும் வகையில், நீதிமன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நீதிபதி தனது பதவிக் காலத்தில் இறந்தாலோ அல்லது இராஜினாமா செய்தாலோ, காலியிடத்தை நிரப்ப உடனடியாக சிறப்புத் தேர்தல் நடத்தப்படும்.

சர்வதேச முற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா  உறுப்பினராக  இல்லை என்பதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட புட்டினையும், மரியா ல்வோவா-பெலோவாவையும் கைது செய்ய முடியாது.ரஷ்யாவில் இருக்கும் வரை அவர்களைக் கைது செய்ய முடியாது. இருவரும் ரஷ்யாவுக்கு வெளியே எதாவது வெளிநாட்டிற்குச் சென்றால்.. சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் இந்த உத்தரவைச் செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பு நாடுகளாக இருக்கும் 123 நாடுகளில் புட்டின்  காலடி எடுத்து வைத்தாலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன உலக நாடுகள் இதனால் புட்ன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.

  சர்வதேச நீதிமன்றத்திற்கு எனச் சொந்தமாக எந்தவொரு    படையும் இல்லை. தங்கள் உத்தரவைச் செயல்படுத்த அவர்கள், ஐசிசி உறுப்பு நாடுகளின்  பொலிஸையே  படையையே முழுமையாக நம்பி உள்ளனர். உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்யத் தலைவர் மீதான உத்தரவு என்பதால் உலக நாடுகள்  அவரைக் கைது செய்வதர்கு வாய்ப்பு இல்லை.    சூடானின் முன்னாள்  தலைவர் ஓமர் அல்-பஷீர் மீது ஐசிசி இதேபோல வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இருப்பினும், அவர் தென்னாப்பிரிக்கா, ஜோர்டான் எனப் பல சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளுக்குச் சென்றார். அவர் 219இல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், இன்னும் அவர் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

சேர்பிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிச் 2006இல் விசாரணையை எதிர்கொண்டார். விசாரணை நடக்கும்போதே அவர் உயிரிழந்தார். முன்னாள் போஸ்னிய சேர்பியத் தலைவர் ரடோவன் கராட்சிக் 2008 கைது செய்யப்பட்டார். அவர் இனப்படுகொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.  அவரது ராணுவத் தலைவர் ரட்கோ மலாடிக் 2011இல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களில் புட்டின் மீது குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஐநா கூறியுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியது முதலே அங்குப் போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் இதற்கு புட்டினே முக்கிய காரணம் என்றும் ஐநா தரப்பில் கூறப்படுகிறது. குழந்தைகள் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடுகடத்துதல் உள்ளிட்ட போர்க்குற்றத்திற்கு புட்டினே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. புதின் நேரடியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து இந்த குற்றங்களைச் செய்திருக்கலாம்.. அல்லது அவர் தனது ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் குழந்தைகளில் சிலர் ரஷ்யக் குடியுரிமையைப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்றும் அக்குழந்தைகள் கட்டாயமாக வளர்ப்பு குடும்பங்களில் சேர்க்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

 "இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் ரஷ்யாவில் நிரந்தரமாக இருக்கிறார்கள். முதலில் இப்படி இடமாற்றம் செய்வது தற்காலிகமானவை என்றே கூறினர். இருப்பினும், இப்போது வரை பெற்றோர் மற்றும் குழந்தைகள் சந்திக்க முடியவில்லை. அங்குப் பல சிரமங்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் தனியாக இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக 16,221 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது போர்க் குற்றமாகவே கருதப்படும். இதில் ல்வோவா- பெலோவா இணை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

  இது மட்டுமின்றி உக்ரைனில் நடந்த பலாத்காரம், சித்திரவதை தவிர, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் உள்ளிட்ட அனைத்திற்கும் ரஷ்யாவே பொறுப்பு என்று ஐ.நா விசாரணைக்குழு கூறியுள்ளது. குறிப்பாக புச்சா மற்றும் இசியம் பகுதிகளில் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டதாகவும் அதில் காட்டமான கருத்துகள் கூறப்பட்டுள்ளது.

  உக்ரைனின் கெர்சன் பகுதியில் மட்டும் ரஷ்யா 400 போர்க்குற்றங்களைச் செய்ததாக உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி  குற்றம் சாட்டியிருந்தார். புட்டினுக்கு எதிரான  போர்க்குற்ற ஆதரங்கள் பலமாக  இருந்தாலும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாத கையரு நிலையில்  உலகம்  உள்ளது.

Sunday, March 26, 2023

கிரெம்ளினில் சந்தித்த “அன்புள்ள நண்பர்கள்”


 உலக நாடுகள் அனைதும் ரஷ்யாவுக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன.  வல்லரசான சீனா ரஷ்யாவுடன்  கைகோர்த்துள்ளது.  உக்ரைன்  மீதான தாக்குதலை உடனடியாக நிருத்துமாரு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. உக்ரைன்  மீதான  போரை  இப்போதைக்குக் கைவிடுவதற்கு  புட்டின் தயாராக இல்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று கிரெம்ளினில் தனது "அன்புள்ள நண்பர்" ஜி ஜின்பிங்கிற்கு இரவு விருந்தளித்தார், உக்ரைனில் போர்க்குற்றங்களுக்காக ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, அவரது மிகவும் சக்திவாய்ந்த கூட்டாளியுடனான தனது உறவைக் காட்டினார்.

ஜி  ஜின்பிங்  கடந்த மாதம்   மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சீனத் தலைவர் பெய்ஜிங்கை உக்ரேனில் சமாதானம் செய்யக்கூடிய ஒரு நாடாக சித்தரிக்க முயற்சிக்கிறார், ஏனெனில் அவர் தனது நெருங்கிய கூட்டாளியுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துகிறார்.புட்டினும் ஜியும் கிரெம்ளினில் சந்தித்தபோது ஒருவரையொருவர் "அன்புள்ள நண்பர்" என்று வாழ்த்தினர், மேலும் ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் பின்னர் அவர்கள் 4/2 மணிநேரம் முறைசாரா பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிவித்தனர், மேலும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் செவ்வாயன்று திட்டமிடப்பட்டது.

மாஸ்கோ பல மாதங்களாக ஜியின் வருகைக்கான திட்டங்களை பகிரங்கமாக விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் உக்ரைனில் இருந்து குழந்தைகளை நாடு கடத்தியதற்காக புடின் மீது போர்க்குற்றம் புரிந்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்த பின்னர், சீனத் தலைவரின் தனிப்பட்ட ஆதரவிற்கு நேரம் புதிய அர்த்தத்தை அளித்தது.மாஸ்கோ சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்துவதை மறுக்கிறது, அவர்களைப் பாதுகாப்பதற்காக அனாதைகளை அழைத்துச் சென்றதாகக் கூறுகிறது.   இந்த வாரண்ட் இரட்டைத் தரத்தை பிரதிபலிப்பதாக பீஜிங் கூறியது. மேற்கத்திய நாடுகள் இந்த வாரண்ட்டை  உற்று நோக்குகின்றன.  ரஷ்யத் தலைவரை ஒரு பாரிய ஆக்க வேண்டும் என்று கூறுகிறது.

"உக்ரைனில் நடந்த அட்டூழியங்களுக்கு கிரெம்ளினைப் பொறுப்பேற்க சீனா எந்தப் பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புட்டினுக்குக் கைது வாரண்ட் பிறப்பித்த சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி ஜி ரஷ்யாவுக்குப் பயணம் செய்கிறார்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு புடினுக்கு அழுத்தம் கொடுக்க ஷி தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார், மேலும் ரஷ்ய துருப்புக்கள் இருக்க அனுமதிக்கும் போர் நிறுத்தத்திற்கு பீஜிங் அழைப்பு விடுக்கலாம் என்று வாஷிங்டன் கவலை கொண்டுள்ளது.உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு திட்டத்தை சீனா வெளியிட்டது, புட்டின் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்க மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தனது பிடியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நேரத்தை வாங்குவதற்கான ஒரு தந்திரமாக மேற்கில் நிராகரிக்கப்பட்டது.

ரஷ்யாவும் சீனாவும் உலகெங்கிலும் உள்ள "நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களின் ஒரே நெட்வொர்க்கைக் கொண்டிருக்கவில்லை", அதனால்தான் அவர்கள் இப்போது தங்கள் உறவை இறுக்குகிறார்கள். இது ஒரு வசதியான திருமணம், இது பாசத்தை விட குறைவாக இருக்கும்" என்று கிர்பி கூறினார்.

 ரஷ்யாவிற்கு சீனா  ஆயுதம் வழங்கக்கூடும் என்று  அமெரிக்கா அஞ்சுகிறது. அதை பீஜிங் மறுத்துள்ளது. ரஷ்யா தனது துருப்புக்களை வெளியேற்றும் வரை போரை நிறுத்த முடியாது என்று கூறும் கெய்வ், மேற்கத்திய நட்பு நாடுகள் பகிரங்கமாக சந்தேகம் கொண்டிருந்தாலும், கடந்த மாதம் பீஜிங்கின் சமாதான முன்மொழிவு வெளியிடப்பட்டபோது எச்சரிக்கையுடன் சீனாவை நோக்கி எச்சரிக்கையாக இருந்து வருகிறது.

  ரஷ்யாவை ஆயுதபாணியாக்குவது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார், ஆனால் பீஜிங் இந்த அபாயத்தை அறிந்திருப்பதாக அவர் நம்புவதாகவும், அது சாத்தியமில்லை என்று தான் கருதுவதாகவும் கூறினார். அவர் ஷியை தன்னுடன் பேச அழைத்துள்ளார்.

கடந்த ஆண்டு கிரெம்ளின் தலைவர் உக்ரைன் மீது படையெடுப்பதற்கு உத்தரவிடுவதற்கு சற்று முன்பு ஜியுடன் புட்ட்ன்  உடன் "வரம்புகள் இல்லை" கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். புட்டின் மேற்கு நோக்கி அதன் அண்டை நாடுகளின் நகர்வுகளிலிருந்து ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; உக்ரைனும், மேற்கு நாடுகளும் இதை ஒரு சுதந்திர அரசின் மீது தூண்டப்படாத தாக்குதல் என்று அழைக்கின்றன.

ரஷ்யாவின் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய பொதுமக்கள் இறந்தனர்.  இரு தரப்பிலும் பல  வீரர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. மாஸ்கோ உக்ரேனிய நகரங்களை அழித்துவிட்டது, மில்லியன் கணக்கான மக்களை அகதியாக்கியது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை தன்னுடன் இணைத்துள்ளதாகக் கூறுகிறது.

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திங்களன்று பிரஸ்ஸல்ஸில் 155 மிமீ பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்காக கூட்டாக வாங்க ஒப்புக்கொண்டன. இரு தரப்பினரும் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான ரவுண்டுகள் சுடுகிறார்கள்.

கிமாஸ்  ராக்கெட் லாஞ்சர்கள், ஹோவிட்சர்கள் , பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள், மேலும் காம் ஏவுகணைகள், டாங்கி  எதிர்ப்பு ஆயுதங்கள் ,நதிப் படகுகளுக்கான வெடிமருந்துகள் உட்பட $350 மில்லியன் மதிப்புள்ள தனது சமீபத்திய இராணுவ உதவிப் பொதியை அமெரிக்கா அறிவித்தது.

கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முட்டில் கடுமையான சண்டை தொடர்ந்தது, அங்கு உக்ரேனியப் படைகள் கடந்த கோடையில் இருந்து மிக நீண்ட மற்றும் இரத்தக்களரி போரில் ஈடுபட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திலிருந்து பெரிய வெற்றியைப் பெறாத மாஸ்கோ, நூறாயிரக்கணக்கான புதிதாக அழைக்கப்பட்ட ரிசர்வ்வாதிகள் மற்றும் சிறைகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குற்றவாளிகளை உள்ளடக்கிய ஒரு பாரிய குளிர்கால தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ரஷ்ய முன் வரிசை நான்கு மாதங்களாக  முன்னேறவில்லை.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன், நவம்பர் மாதத்திலிருந்து முக்கியமாக தற்காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது, ரஷ்யாவின் தாக்குதல் படைகளை அதன் சொந்தமாக திட்டமிட்ட எதிர்த்தாக்குதலைத் தொடங்கும் முன் குறைக்கும் நோக்கத்துடன் உள்ளது.