Sunday, March 17, 2024

பிடிகொடாத எடப்பாடி கதவை மூடிய அமித்ஷா


 பாரதீய  ஜனதாவுடன்  தேன் நிலவு கொண்டாடிய அண்னாதிராவிட முன்னேற்றக் கழகம் விவாகரத்து செய்துள்ளது. மீண்டும்  இணைந்து செயற்படுவதற்கு அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்த  பாரதீய ஜனதா ஏமாந்துள்ளது. காத்திருந்து காலம் கடத்திய பாரதீய ஜனதா    அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது.இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் ஐயம்  உறுதியாகி உள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி. அதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, தான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சூரியமூர்த்தி மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில், சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், "அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.

உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

மா மக்களவை தேர்தல் நெருங்குவதால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் நான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனு வரும் மார்ச் 25ஆம் திகதி  விசாரணைக்கு வரவுள்ளது.

  இந்த நிலையில், சூரியமூர்த்தியின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இந்திய நாடாளுமன்றத்  தேர்தல்  நெருங்கும் சூழலில் இந்த வழக்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

  ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து ஆட்சியை நடத்தினார். சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும், அதிகாரப் போட்டி காரணமாகத் தனித் தனியாகப் பிரிந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றினர். அதற்கு அடுத்து, நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக இரட்டை சிலை சின்னம் மட்டுமின்றி, அதிமுக கட்சி, கொடி என எதையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பன்னீர்செல்வம் மாறினார். தற்போதும் .பன்னீர்செல்வத்தின் சிவில் வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது.

அண்னா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகள் பிரிந்து போயுள்ளன.  இந்த நிலையில் இரட்டை இலை முடக்கப்பட்டால்  எடப்பாடியில் நிலை மிகவும்  மோசமாகி விடும் .

விசுவாசியான  .பன்னீர்ச்செல்வத்தை  ஏறெடுத்தும்  பார்க்காத பாரதீய ஜனதா அவருடன் கைகோர்த்துள்ளது.   தமிழக சட்ட மன்ற இடைத்தேர்தலில் தனது செல்வாக்கை  வெறிப்படுத்தி  வெற்றை பெற்ற   டி.டி. தினகரனை சிறைக்கனுப்பிய பாரதீய  ஜனதா அவரையும்  கைக்குள்  போட்டுள்ளது. பன்னீரும் தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிப்பார்கள். அதே  வேளை அவர்களின் சமூக வாக்குகளும் வெளியேறாமல் பாதுகாக்கப்படும். தாமரைச் சின்னத்தில் போட்டியிட  தினகரன் மருத்துவிட்டார். தனது குக்கர் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  இரட்டை இலையில் போட்டியிடப் போவதாக பன்னீர் அறிவித்துள்ளார். இரட்டை இலை அவரின் கையை விட்டுப் போய் வெகு நாட்களாகிவிட்டது.  கரை வேட்டி  அணியக் கூடாது என  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆனாலும், இரட்டை இலைக் கனவில்  பன்னீர் மிதக்கிறார்.

மத்திய அரசை எடப்பாடி  நேரடியாகப் பகைத்து விமர்சித்து வருவதால்  இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமோ  என்ற ஐயம் எழுந்துள்ளது.

பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கப் போன சரத்த்குமார்  தனது கட்சியை  பாரதீய ஜனதாவுடன்  இணைத்துவிட்டார். அவரின்  முடிவை ஏற்றுக்கொள்ளாத தொண்டர்கள் சிலர்  இணைப்புக் கூட்டத்தில்  வெளிநடப்புச் செய்தனர்.  ஒருவர்  காசியில் மொட்டை அடித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.   நாடாமையின் தீர்ப்பைத்  தொண்டர்கள் ஏற்கவில்லை.சரத்குமாரால் பாரதீய ஜனதாவுக்கு எந்த விதமான ஆதாயமும்  இல்லை.  பிரபல்யமான  ஒருவர் பாரதீய ஜனதாவில்  ஐக்கியமாகி உள்ளார் என்ற திருப்தி மட்டும்   போதுமானது.

டாக்டர் ராமதாஸும், பிரேமலதாவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியுடனும்,  பாரதீய ஜனதாவுடனும் பேரம்  பேசினார்கள்.  இந்தப் பேச்சுவார்த்தை தமிழக மக்களுக்கானது அல்ல. தமது அரசியல்பதவிக்கான  பேச்சுவார்த்தைதான் அது. நாடாளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற முடியாது அன்பதை ராமதாஸும், பிரேமலதாவும் நன்கு அறிவார்கள். அதிக  தொகுதிகளுடன்  ஒரு  எம்.பி பதவி  வேண்டும் என்பதே அவர்களின்  கோரிக்கையாகும். எம்.பி பதவி இல்லை  என முகத்தில் அடித்தது போல்  அவர்களுக்குக் கூறப்பட்டது.

வாக்கு வங்கியைப் பிரிப்பதில் கில்லாடியான பாட்டாலி மக்கள் கட்சி,  பாரதீய ஜனதாவின்  பக்கம் சாய்ந்துள்ளது.   இதனாக் அண்ணா திராவுட முன்னேற்ரக் கழக்க்த்துக்கு பெரும்  பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பாஅட்டாலி மக்கள் கட்சியின் துணையுடன்  அதிக தொகுதிகலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தின் முன்னாள் அமைச்சர் சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துச் சென்று  எடப்பாடி சார்பில்  பேச்சு வார்த்தை நடத்தினார்.  முதல்  சந்திப்பிலேயே, 15 தொகுதிகளிம்  ஒரு  ராஜ்யசபா  பதவியும் என்ற ராமதாஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில்  அன்புமனி டெல்லிக்குச் சென்றார்.  பாரதீய ஜனதாவுடனான  பேச்சி வார்த்தையில் முன்னேற்றம் ஏர்பட்டுள்ளதை  அன்புமனியின்  டெல்லிப் பயணம் சூசகமாகத் தெரிவித்தது.

பத்துத் தொகுதிகளுடன்  ஒரு  மைச்சுப் பதவி  என  அன்புமணி  கேட்டாராம்.   10 தொகுதிக்கு  சம்மதம் தெரிவிக்கப்பட்டது.  மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று வாக்கப்படும். பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஒருவர்  தேர்தலில்  வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று   சொல்லப்பட்டதை  அன்புமனி ஏற்றுக்கொண்டாராம்.

பாட்டாளி மக்கள்  கட்சி  கைவிட்டுப் போனதால்  பிரேமலதாவை வலை போட்டுப் பிடித்துள்ளார் எடப்பாடி. பாட்டாளி  மக்கள் கட்சிக்காகக் காதிருந்து ஏமாற்றமடைந்த எடப்பாடி,  பிரேமலதாவியும் இழக்கத் தயாராக இல்லை.  விஜயகாந்த்  ஆக்ரோசமாக  இருந்த  போதே அந்தக் கட்சியின்  வாக்கு வங்கி  அதலபாதாளத்துக்குச் சென்றது. இதை எல்லாம் தெரிந்துகொண்டும் பிரேமலதா அதிக தொகுதி கேட்டு அடம்  பிடிக்கிறார்.  பாரதீய ஜனதா புறம் தள்ளி விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் வேறு இடம்  இல்லை என்பதால்  பிரேமலதா  இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஏழுதொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் வேண்டும் என  பிரேமலதா அடம்  பிடித்தார். ராஜசபா பதவி கிடசிக்காது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கறாராகச் சொல்லி விட்டது.  நான்கு தொகுதிகள் மட்டும்  கொடுக்கபால் எஅன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடித்துச்ட் சொல்லி விட்டது.  எல்லாவற்றுக்கும்  மெளனமாகத் தலையாட்டிய  பிரேஅம்லதா தரப்பு கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய தொகுதிகளைக் கேட்டுள்ளது.   ந்திர் வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர்  இறுதி முடிவு  எட்டப்படும்  எனத் தெரிகிது. 

ஸ்டாலினின் தலைமையிலான கூட்டணி  தேர்தலுக்குத் தயாராகி விட்டது.  பாரதிய ஜனதாவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்  இன்னமும் தொகுதிப் பங்கீட்டை முடிக்கவில்லை. எடப்பாடி, அண்ணாமலை  ஆகிய  இருவரின்  செல்வாக்கும் தேர்தல் முடிவின் மூலம சந்திக்கு   வந்துவிடும். மும்முனைப் போட்டி ஸ்டாலினுக்கு சாதகமாக இருக்கப்போகிறது.

ரமணி.

 

பெங்களூரில் தண்ணீர்ப் பஞ்சம் ஐபிஎல் நடத்துவதில் சிக்கல்


 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்ட் என்றால் அது பெங்களூரு மாநகரில் அமைந்துள்ள சின்னச்சாமி மைதானம்தான்.

  பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கோடை காலம் இன்னும் முழுமையாக தொடங்காத நிலையில் பெங்களூரு நகருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது. இப்படியான நிலையில் ஐபிஎல் போட்டியை சின்னச்சாமி மைதானத்தில் நடத்தினால் மைதானத்தினை பாராமரிக்க மட்டுமே தினம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லீற்ற ர் தண்ணீர் தேவைப்படும். இதுவே போட்டி நடக்கும் தினம் என்றால், ரசிகர்களின் பயன்பாட்டிற்கு கூடுதலாக லட்சக்கணக்கான லீற்ற ர் தண்ணீர் தேவைப்படும் என்பதால், இதனைக் கருத்தில் கொண்டு, பெங்களூரில் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், பெங்களூரு அணிக்கு இந்த ஆண்டு விசாகப்பட்டினம் அல்லது கொச்சி மைதானம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணை காலத்திற்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விசாகப்பட்டினம் மைதானம் கொடுக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு அணிக்கு கொச்சி மைதானத்தில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது பெங்களூரு  அணி ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும், நிலைமையை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இந்த முடிவை ஏற்கத்தொடங்கிவிட்டனர். 

Friday, March 8, 2024

100 ஆவது டெஸ்டில் அஷ்வின், பேர்ஸ்டோவ் ஜோடி



தர்மசாலாவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான   இங்கிலாந்து,  இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான ஐந்தாவது  டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீரர்  ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்   ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தமது 100 ஆவது  டெஸ்ட்  போட்டியில் விளையாடுகின்றனர்.

 இங்கிலாந்து அணியின் முன்னாள் ப்டன் மைக்கேல் அதர்டன் , அலெக் ஸ்டீவர்ட் ஆகியோர் 2000 ஆம் ஆண்டு ஓல்ட் ட்ராஃபோர்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதன் முதலாக தமது  100 ஆவது டெஸ்ட் போட்டியில் இணைந்து விளையாடினார்கள்.   

 தென்னாப்பிரிக்காவின் ஜக் கலிஸ், ஷான் பொலக் , ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகிய மூன்று வீரர்கள் 2006 இல் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து  ஆகியவற்றுக்கிடையிலான  போட்டியின்போது தங்களின் 100வது டெஸ்டில் விளையாடினர்.


2013 இல் பெர்த்தில் நடந்த இங்கிலாந்துஅவுஸ்திரேலியா ஆஷஸ் போட்டியில் அலஸ்டர் குக் , மைக்கேல் கிளார்க் ஆகிய  இருவரும் தமது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினர்.

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் தொடங்கி ஒரு நாள் கழித்து, நியூசிலாந்து கப்டன் டிம் சவுத்தி ,கேன் வில்லியம்சன்  ஆகிய  இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது தங்கள் 100வது டெஸ்டில் ஒன்றாக விளையாடுகின்றனர்.