Wednesday, December 31, 2008

மிரட்டியது பங்களாதேஷ்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணி வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி 526 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 526 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணிக்கு மிகக் கடுமையான இலக்கு. பங்களாதேஷ் அணி இரண்டு இன்னிங்ஸிலும் 500 ஓட்டங்களை அடிப்பதே சந்தேகம். அப்படியான நிலையில் 526 ஓட்டங்களை நினைத்துப் பார்க்க முடியாது. மிகப் பிரமாண்டமான இலக்கு. ஆனால், அணித்தலைவர் மொஹமட் அஷ்ரபுல் சஹிட் அல் ஹசன், முஜிபுர் ரஹிம் ஆகியோர் இணைந்து இலங்கை அணி வீரர்களை திக்குமுக்காடச் செய்தனர்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 387 ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்றது அண்மையில்தான் நடைபெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களை அடித்து பங்களாதேஷ் அணி வெற்றி பெற முடியாது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த உண்மை.
ஆனால், இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 413 ஓட்டங்கள் அடிக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் யாரும் எதிர்வு கூறவில்லை.
பங்களாதேஷûடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி தட்டுத்தடுமாறி 293 ஓட்டங்கள் எடுத்தது. அதில் அல்ஹசன் 70 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தினார்.
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 178 ஓட்டங்கள் எடுத்தது.
முதலாவது இன்னிங்ஸில் விட்டதவறை திருத்திய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 405 ஓட்டங்கள் எடுத்தது.
மஹேல, சங்கக்கார, சமரவீர ஆகிய மூவரும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தனர். இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பங்களாதேஷûக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுக்கவில்லை. பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களின் முன்னால் இலங்கை அணி வீரர்களின் துடுப்பாட்டம் எடுபடவில்லை.
முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்ட பங்களாதேஷ் அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் தமது விஸ்வரூபத்தைக் காட்டி இல ங்கை அணியை மிரட்டினார்கள்.
தமிழ் இக்பால் முகமட் அஷ்ரபுல், சஹிட் அல் ஹுசேன், முஜிபுர் ரஹிம் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி வீரர்களின் பந்துகளைச் சிதறடித்து தமது திறமையை வெளிப்படுத்தினர்.
மொஹமட் அஸ்ரபுல் 70 ஓட்டங்களுடனும் சஹிட் அல் ஹுசைன் 34 ஓட்டங்களுடனும் 5ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
பங்களாதேஷ் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில் ஆறாவது இணைப்பாட்டமாக விளையாடிய மொஹமட் அஷ்ரபுல், சாஹிட் அல் ஹுசைன் ஜோடி இலங்கை அணியை சோதித்தது. மிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் அஷ்ரபுல் 101 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சமிந்த வாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 193 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் 16 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 112 ஓட்டங்கள் எடுத்தனர்.
பலமான ஜோடியை பிரித்த சந்தோஷத்தில் இலங்கை அணி இருந்த வேளையில் களமிறங்கிய சஹிட் அல் ஹஜுசேன் முஜிபுர் ரஹீம் ஜோடி இலங்கை அணியை சோதித்தது.
இவர்கள் இருவரும் இணை ந்து 111 ஓட்டங்கள் எடுத்தனர். சஹிட் அல் ஹுஸைன் 96 ஓட்டங்களில் ஆட்டம் இழக்க முஜிபுர் ரஹீம் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில 413 ஓட்டங்கள் எடுத்தது. முரளிதரன் 141 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக சஹீட் அல்ஹசே செய்யப்பட்டார்.
100 ஓட்டங்கள்
மஹேல ஜயவர்த்தன 166, மொஹமட் அஷ்ரபுல் 101,
5 விக்கெட்டுகள்
சஹிட் அல் ஹுøஸன் 70/5, முரளிதரன் 49/6
சதத்தை தவறவிட்டவர்கள்: சமரவீர 90, சஹீட் அல் ஹுசேன் 96.

Tuesday, December 30, 2008

அடங்கியதுஅவுஸ்திரேலியா



கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவுஸ்திரேலியாவுடனான இரண்டு
டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று
தொடரைக் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா.
16 வருடங்களாக தாய் மண்ணில் தோல்வியடையாத அவுஸ்திரேலியா அணியை ஸ்மித்
தலைமையிலான தென் ஆபிரிக்க அணி டெஸ்ட் தொடரில்
தோல்வியடையச் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் ஆறு விக்கெட்டினால்
தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடந்த இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கை ஓங்கி இருந்தவேளை டுமினியும் ஸ்டெயினும் பொறுப்புடன் விளையாடி புதிய சரித்திரம் படைக்க அடித்தளமிட்டார்கள்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில்
துடுப்பெடுத்தாடி முதலாவது இன்னிங்ஸில் 394 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆபிரிக்க அணி முதலாவது இன்னிங்ஸில் 459 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆபிரிக்கா ஏழு விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜோடி சேர்ந்த டுமினியும் ஸ்டெயிஅஸி அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக் கனவைத் தகர்த்தனர். டுமினி 166 ஓட்டங்களும் ஸ்டெயின் 76 ஓட்டங்களும் எடுத்து அவுஸ்திரேலிய அணியை திக்குமுக்காடச் செய்தனர்.
கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணியான
அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில்
அதி கூடிய ஓட்டம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும்
ஸ்டெயினின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத அவுஸ்திரேலிய அணி 247 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 183 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
மிக இலகுவான ஓட்ட எண்ணிக்கையை ஒரு விக்கெட்டை இழந்து பெற்றது தென் ஆபிரிக்க அணி, ஸ்மித் 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மக்கன்சி ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களும் அம்லா ஆட்டமிழக்காது
183 ஓட்டங்களும் எடுத்தனர்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டெயின் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

டுமினி ஸ்டெயின் ஜோடி 180 ஓட்டங்களை சேர்த்தனர். இது 9 ஆவது விக்கட்டுக்கு எடுக்கப்பட்ட 3 ஆவது அதிக பட்ச ஓட்டங்களாகும். இன்னும் 10 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இந்த விக்கெட்டுக்கு புதிய சாதனை படைத்திருக்கலாம். தென் ஆபிரிக்காவின் மார்க் பௌச்சரும் சிம் கொக்கும் 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக
9 ஆவது விக்கெட்டுக்கு
95 ஓட்டங்கள் குவித்ததே தற்போது சாதனையாக உள்ளது.
தென் ஆபிரிக்காவின் கடைசி 4 விக்öகட்டுகள் இணைந்து 318 ஓட்டங்கள் குவித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
அதே சமயம் கடைசி 4 விக்கெட்டுகள் சேர்ந்து
300 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்திருப்பது டெஸ்ட் கிரிக்கட்டில் 11 ஆவது முறையாக நிகழ்ந்துள்ளது.
10 ஆவது வரிசையில் அதிக ஓட்டங்கள் விளாசிய 2 ஆவது தென் ஆபிரிக்க வீரர் ஸ்டெயின் (76 ஓட்டங்கள்) ஆவார். இதற்கு முன்பாக இந்த
வரிசையில் தென் ஆபிரிக்காவின் சிம்காக்ஸ்
108 ஓட்டங்கள் (1998 ஆம் ஆண்டு)
பாகிஸ்தானுக்கு எதிராக குவித்து இருக்கிறார்.
இந்த டெஸ்டில் தென் ஆபிரிக்கா 65 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. மெல்பேர்னில் நடந்த டெஸ்டில் சுற்றுப் பயண அணி முன்னிலை பெறுவது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1996 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவை 219 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி 36 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.

100 ஓட்டங்கள்
பொண்டிங் 101
டும்பினி 166

சதத்தை தவறவிட்டவர்
பொண்டிங் 99

5 விக்கெட்
ஸ்டெயின் 97/5, 67/5

வெற்றியை நோக்கி இலங்கை



இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 521ஒட்டங்கள் என்ற எண்ணிக்கையை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சஹீப் அல் ஹசனின் பந்து வீச்சில் தடுமாறிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 293 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல, சங்கக்கார, சமரவீர ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் இரண்டாவது இன்னிங்ஸில் 405 ஓட்டங்கள் எடுத்தது.
முரளியின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 178 ஒட்டங்கள் எடுத்தது. 49 ஓட்டங்களைக் கொடுத்த முரளி ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
நான்கு விக்கட்டுகளை இழந்து 291 ஒட்டங்கள் எடுத்த நிலையில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
ஆறு விக்கட்டுகள் இழந்து 405 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை நிறுத்திய இலங்கை அணி பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
மஹேல 166, சங்கக்கார 67, சமரவீர 62 ஒட்டங்கள் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் முரளியின் சுழல் பங்களாதேஷ் வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தது.
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின் போது பங்களாதேஷ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் அஷ்ரபுல் 70 ஓட்டங்களுடனும் சஹீப் அல்ஹசன் 34 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பங்களாதேஷ் அணி வெற்றிபெறுவதற்கு இன்னமும் 267 ஓட்டங்கள் தேவை.

Monday, December 29, 2008

அழகிரியின் அதிரடியால் தடுமாறுகிறது தி.மு.க‌


தமிழக அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதை அறிவதற்கு ஒரு சந்தர்ப்பமாக திருமங்கலம் தொகுதியின் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமங்கலம் தொகுதியில் உறுப்பினரான இளவரசன் மரணமானதால் திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இளவரசன் சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்தலிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தவேளையில் அத்தொகுதியின் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று வைகோ அறிவித்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் தொகுதி வைகோவால் மறக்க முடியாத தொகுதியாகும். திருமங்கலம் தொகுதியில் வைகோ பேசிய பேச்சின் காரணமாகதான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வைகோவை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளினார். வைகோவுடன் பொடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்தான் இளவரசன்.
இளவரசனின் இடத்துக்கு அழகு சுந்தரத்தை வைகோ நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வைகோவுடன் பொடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களில் அழகு சுந்தரமும் ஒருவர். திருமங்கலம் இடைத்தேர்தலின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நேருக்கு நேர் மோதுவதற்கு ஜெயலலிதா தயாராகி விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திருமங்கலம் தொகுதியின் இடைத் தேர்தல் விறுவிறுப்பாக அமையும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேறி விட்டன. மார்க்ஸிஸ்ட் கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஆயினும் திருமங்கலத்தில் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்யும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சியுடன் இணையும் என்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது விஜயகாந்தின் தேசிய முன்னேற்றத் திராவிடக் கட்சி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி இணையும் சாத்தியக் கூறு உள்ளது.
யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தே போட்டியிடுவேன் என்ற விஜயகாந்தின் கொள்கையினால் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் சாத்தியமும் உள்ளது. தமிழக அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய வேண்டுமானால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதைத் தவிர வேறு மார்க்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தனியாகவே உள்ளது. அக்கட்சியுடன் கூட்டணி சேர எந்த ஒரு கட்சியும் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஒதுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாட்டாளி மக்கள் கட்சியை கண்டுகொள்ளாததனால் இணைப்பு சாத்தியப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியை நோக்கி முதல்வர் கருணாநிதி நேசக்கரம் நீட்டியுள்ளார். செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சித் திரõவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவற்றின் செயற்குழுவின் முடிவு கட்சித் தலைவரின் விருப்பத்துக்கு மாறான முடிவுகளை எடுத்ததில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாக விமர்சித்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடு வெட்டி குரு சிறை வைக்கப்பட்டதும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதும் கூட்டணி பற்றிய ரகசியப் பேச்சுவார்த்தையின் பிரதிபலன் என்றே எண்ணத் தோன்றுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபடப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் டில்லித் தலைவர்களின் விருப்பதை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.
திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம் ஆகியவற்றுடன் சமமாகப் போட்டியிடும் வல்லமை இல்லாததனால் பாரதீய ஜனதாக் கட்சி இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் சற்று குறைந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் கொஞ்சம் கூடி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்வெட்டு ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கு எதிரான முக்கிய பிரசாரமாக அமைய உள்ளது.
இலவசப் பொருட்களின் பட்டியலினால் ஆட்சியை பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம், பொங்கலுக்காக பொருட்களை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தவிர மாறன் குடும்பத்துடனான சமரசமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமைய உள்ளது. சன் தொலைக்காட்சியின் பிரசாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாக உள்ளது.
முதல்வர் கருணாநிதியின் மகனான மு. க. அழகிரியின் கோட்டையாக மதுரை விளங்குவதால் தனது கௌரவத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டுள்ளார். அவர் மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ள முதல்வர் பிரசாரக் குழுத் தலைவராக அவரை நியமித்துள்ளார்.
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தாலும் மதுரை முதல்வர் மு.க.அழகிரி என்றே அங்குள்ளவர்கள் கூறுவார்கள். அழகிரியின் பலத்தினால் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட் பாளராக லதா அதியமான் நியமிக்கப்பட் டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற அதியமான் இறந்த பின்னர் அவரது மனைவியாரான லதா கழகப் பணியைச் செய்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக முத்துராமலிங்கம் போட்டியிடு கிறார்.
1996ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாக உள்ளார்.
திருமலங்கலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தனப்பாண்டியனை தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சி மீண்டும் தெரிவு செய்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முன்னோடியாக திருமங்கலம் இடைத் தேர்தல் அமைய உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா? இல்லையா? என்பதை திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்த உள்ளது
.வர்மாவீரகேசரி 28 12 2008

மீளுமா அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே மெல்பேர்னில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 185 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் களத்தில் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலி அணி முதலாவது இன்னிங்ஸில் 394 ஓட்டங்கள் எடுத்தது. டுமினி, ஸ்டெயின் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தென் ஆபிரிக்க அணி அவுஸ்திரேலியாவின் வெற்றிநடையை தடை செய்தது.
டுமினி, முதல் சதத்தையும் ஸ்டெயின் முதலாவது அரை சதத்தையும் அடித்தனர்.
விக்கெட் இழப்பின்றி நான்கு ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. தென் ஆபிரிக்க அணி 65 ஓட்டங்களைக் கூடுதலாக எடுத்தது.
12 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு அணி ஒன்று முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியை விட அதிக ஓட்டங்களை மெல்பேர்னில் எடுத்த சாதனையை தென் ஆபிரிக்கா தனதாக்கிக் கொண்டது.
தென் ஆபிரிக்க அணி வீரர்களின் பந்து வீச்சுக்கு முகங் கொடுக்க முடியாது அவுஸ்திரேலிய வீரர்கள் ஆட்டம் இழந்தனர். ஹைடன் 23 ஓட்டங்களுடனும் கட்டிச் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். முதலாவது இன்னிங்ஸில் 101 ஓட்டங்கள் எடுத்த அணித் தலைவர் பொண்டிங் 99 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
ஜோன்ஸன் ஆட்டம் இழக்காது 43 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
ஸ்டெய் ஐந்து விக்கட்டுகளையும் கலிஸ், மாக்கஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் நிட்னி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது தென் ஆபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களுடனும் மக்கன்சி மூன்று ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Thursday, December 25, 2008

கிரிக்கெட்டை அச்சுறுத்தும்பயங்கரவாதம்


பயங்கரவாத அச்சுறுத்தல்களினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் விளையாட்டில் கிரிக்கெட் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சில நாடுகள் பங்குபற்றவில்லை. சீனாவில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கிற்கு திபெத் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதும் எதுவித அசம்பாவிதமும் இன்றி சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், தென் கொரியா, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்பே, கென்யா ஆகிய நாடுகளில் கிரிக்கெட்டுக்கு அதிக வரவேற்புள்ளது.
மும்பையில் நவம்பர் 26 ஆம் திகதி நடந்த தாக்குதலின் காரணமாக கிரிக்கெட் விளையாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இங்கிலாந்து அணியின் ஒத்துழைப்புடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்ததனால் பயங்கரவாதத்தை கிரிக்கெட் வென்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் நடந்து முடிந்த பின்னர் மும்பைத் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலின் கொடூரம் காரணமாக இங்கிலாந்து அணி மிகுதி இரண்டு போட்டிகளையும் ரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பியது.
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையே திட்டமிடப்பட்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் உண்டானது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடந்து முடிந்தன. கிரிக்கெட் விளையாடும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளும் பயங்கரவாதத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமிப்பதற்கு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உதவி செய்ததால் அந்த நாட்டு வீரர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
இனத்துவேசம் மேலோங்கி பெரும்பான்மை இனமான கறுப்பர்களை சிறுபான்மையின வெள்ளையர் சிறுமைப்படுத்தி ஒதுக்கியதால் கிரிக்öகட் போட்டிகளில் இருந்து தென் ஆபிரிக்கா இடை நிறுத்தப்பட்டது. இனத்துவேசம் ஒழிந்த பின்னர் தான் கிரிக்öகட் அரங்குக்கு தென்ஆபிரிக்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிம்பாப்வேயில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சியினால் அங்குள்ள கிரிக்öகட் வீரர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நியாயத்தைப் பேசிய வீரர்கள் தம் தாய்நாட்டிற்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
1996 ஆம் ஆண்டு இலங்கையில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றபோது இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதென கூறிய அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இலங்கையில் விளையாட மறுத்து விட்டன. இந்திய அணி இலங்கையில் விளையாடியது.
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது குண்டு வெடித்ததினால் போட்டியை இடை நிறுத்திய அந்த அணி நாடு திரும்பியது.
2006 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணி இலங்கைக்கு விஜயம் செய்தது. பஸ்களில் குண்டுகள் வெடித்ததால் பாதுகாப்பு இல்லை எனக் கூறிய தென் ஆபிரிக்க அணி நாடு திரும்பியது. கிரிக்கெட் போட்டி நடைöபறாது என்பதனால் தத்தளித்த இலங்கைக்கு இந்தியா மீண்டும் கைகொடுத்தது. இந்திய அணி இலங்கைக்கு வந்து விளையாடி இங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்று இரண்டாவது தடவையாக உலகத்துக்கு எடுத்துக் கூறியது.
மும்பைத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு இந்திய அணி மறுத்துவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை மூன்றாவது நாட்டிலாவது நடத்த வேண்டும் என்று விரும்பும் பாகிஸ்தான் கிரிக்கட் சபை அதற்கான கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தியா மசிந்து கொடுப்பதாக இல்லை.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உதவி செய்ய அர்ஜுன ரணதுங்க முன்வந்தார். பாகிஸ்தானில் இருந்து அழைப்பு வந்தால் எமது அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்று அர்ஜுன அறிவித்தார். அவர் அறிவித்து ஓரிரு நாட்களில் அர்ஜுன தலைமையிலான கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டுவிட்டது.
ஜென்டில்மன் எனப்படும் கிரிக்கெட்டை ஒரு காலத்தில் ஊழலும் ஆட்ட நிர்ணய சதியும் ஆக்கிரமித்திருந்தன. இன்று பயங்கரவாதம் கிரிக்கெட்டை ஆட்டிப் படைக்கிறது.மும்பைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிரிக்கட்டை மிக விரைவில் இந்தியா மீட்டெடுத்துவிட்டது. பயங்கரவாதத்தினால் கிரிக்கெட்டை அழித்து விட முடியாது என்ற தகவலை உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த அறைகூவலுக்கு பக்கபலமாக இங்கிலாந்து அணியும் உள்ளது.
பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி உள்ள இன்னொரு நாடு பங்களாதேஷ். பங்களாதேஷிலும் அடிக்கடி குண்டு வெடிப்பு, கலவரங்களும் நடைபெறுகின்றன. இப்போது அங்கே இராணுவ ஆட்சி நடைபெறுகிறது.
கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் கென்யா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரண்டு நாடுகளிலும் பயங்கரவாத அச்சுறுத்தல், அரசியல் ரீதியான நெருக்குதல் எவையும் இல்லை.
ரமணி
மெட்ரோநியூஸ்
26 12 2008

இனியும் வேண்டாம் சுனாமி!

கடலே உனக்கு உள்ளிருக்கப்பிடிக்கவில்லையா?
அதுதான் வெளி உலகைப் பார்க்க வந்தாயோ?
இயற்கையை அழித்த மனிதருக்கு
நீ கொடுக்கும் தண்டனையா இது?
விடையில்லா ஒரு புதிர்
இயற்கையை அழித்தவர்கள் மனிதர்களாயின்
நீ ஏன் ஒன்றும் அறியாத குழந்தைகளை
இரையாக்கினாய்?
இரையாக்குவதற்கு மனிதரா
உனக்குத் தேவைப்பட்டார்கள்... சொல்...
இந்த உலகில் இப்படி ஒரு நிலை
தேவை தானா? சொல் கடலே....
பெற்றோரை இழந்த பிள்ளைகள்
எத்தனை பேரோ?
பிள்ளைகளை இழந்த
பெற்றோர் எத்தனை பேரோ?
எண்ணிக்கையில்லா இழப்பு
ஒரு நாட்டுக்கு மட்டுமா வந்தாய்?
பல நாடுகளில் பல உயிர்களை
எடுத்தாய் அல்லவா?
இறைவன் கொடுத்த அழகு நீ
ஏன் உலகை அலங்கோலமாக்கினாய்
இந்தப் பிஞ்சு உள்ளங்களின்
இலட்சியங்கள் எத்தனையோ
உன்னை அன்னையாய் நினைத்த‌
உள்ளங்களை ஏன் அழித்தாய்
வசதியாகவும், மகிழ்வுடனும்
வாழ்ந்த மனிதர்களை
ஒரு நிமிடத்தில் துன்பக்கடலில்
மூழ்கடித்து விட்டாயே...!
உன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நாம் முன்னின்று நிவாரணம் கொடுக்கின்றோம்
எம் மக்கள் இத்துன்ப கடலில் இருந்து
மீள்வது எப்போது
இனி மீனவர்களின் கதி என்ன?
ஏற்கெனவே மீனவர்கள் உயிரை
கையில் பிடித்துக் கொண்டு
கடலில் மீன்பிடிக்கச் செல்வார்கள்
இனி அவர்கள் உயிரை
உன்னிடம் ஒப்படைத்துவிட்டு
அல்லவோ செல்வார்கள்
இனியும் வேண்டாம் சுனாமி
இங்கு துடிதுடிக்கும்
உயிர்களின் கோரிக்கை இது!
தாட்ஷா வர்மா
மித்திரன் வாரமலர்
26 01 2005







Tuesday, December 23, 2008

டெஸ்ட்தொடரை வென்றது இந்தியா


இங்கிலாந்து அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்ததனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது.
சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றதனால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 453 ஓட்டங்கள் எடுத்தது.
கம்பீர் துடுப்பெடுத்தாடி 179 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு காலத்தில் பிரகாசித்த ராகுல் ட்ராவிட் மிக நீண்ட நாட்களின் பின்னர் 136 ஓட்டங்கள் எடுத்து தனது இடத்தை தக்க வைக்க முயற்சி செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்ப்ட்ட ஷேவாக் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் 11 ஓட்டங்களிலும், லக்ஷ்மன் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் 27, டோனி 29, மிஸ்ரா 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பிளின்டொப், கொலிங்வூட் ஆகியோர் மூன்று விக்கட்டுகளையும் சுவான் 2 விக்கெட்டுக்களையும் அன்டர்சன், புரோட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸில் 302 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி வீரர்கள் எதிர்பார்த்தது போன்று பிரகாசிக்கவில்லை. அணித் தலைவர் பீட்டர்சன் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணியைக் காப்பாற்றினார். பீற்றசன் 144 ஒட்டங்கள் எடுத்தார்.

பெல் 50 ஓட்டங்களும், அண்டர்சன் ஆட்டமிழக்காது 62 ஒட்டங்களும் எடுத்தனர். பனேச்சர் ஐந்து ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் அதனை விட குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
ஹர்பஜன் சிங் நான்கு விக்கட்டுகளையும் சஹீர்கான் மூன்று விக்கட்டுகளையும் மிஸ்ரா இரண்டு விக்கட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கட்டுகளை இழந்து 251 ஒட்டங்கள் எடுத்ததுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
நான்கு விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
சேவாக் 17, டிராவிட்டே 0, டெண்டுல்கர் 5, லக்ஷ்மன் 15 ஒட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டமிழந்தனர்.
நான்கு விக்கட்டுகளை இழந்து 80 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜோடி சேர்ந்த கம்பீரும் யுவராஜ் சிங்கும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் இருவரும் இணைந்து 153 ஓட்டங்கள் எடுத்தனர்.
93 பந்துகளுக்கு முகம் கொடுத்து யுவராஜ் சிங் நான்கு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் எடுத்தார். அணித் தலைவர் டோனி ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார்.
சதத்தை நோக்கிச் சென்ற கம்பீர் 97 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழ ந்து 251 ஓட்டங்களை எடுத்து ஆட்ட த்தை நிறுத்திக் கொண்டது.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை இழந்து 64 ஓட்டங்களை எடுத்தது.
ஆட்டநாயகனாக கம்பீரும், தொடர் நாயகனாக சஹீர்கானும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இரட்டை சதத்தை தவறவிட்ட கைல்ஸ்


மேற்கு இந்தியத் தீவுகள், நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நைபரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மே. இந்தியதீவு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. மேற்கு இந்தியதீவுகள்அணி முதலாவது இன்னிங்ஸில் 307 ஓட்டங்கள் எடுத்தது. சந்தர்போல் ஆட்டம் இழக்காது 126 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூஸிலாந்து அணி வீரர் ஓ பிரைன் 76 ஓட்டங்களை கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெட்டோரி இரண்டு விக்கெட்டுகளையும் பிரங்களின் படல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். நியூஸிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸில் 371 ஓட்டங்கள் எடுத்து ஆரம் பத் துடுப்பாட்ட வீரரான ரிம் மக்கின் ரொஸ் 136 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய மக்கின் ரொஸ் முதலாவது சதம் இதுவாகும்.
மேற்கு இந்தியதீவுகள் அணியின் பந்து வீச்சாளர் எட்வேட் 87 ஓட்டங்கள் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார் தவ்லர் இரண்டு விக்கெட்டுகளையும் பவல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மே. இந்தியத்தீவுகள் அணி 375 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் கிரிஸ் கெய்ல் 197 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இரட்டைச் சதத்தை தவற விட்டார். பட்டேல் ஐந்து 28 விக்கெட்டுகளையும் வெட்டோரி, பிராங்கின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிரெய்ன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
312 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தெரிவு செய்யப்பட்டார். இரண்டு டெஸ்ட் போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.

Monday, December 22, 2008

டோனிக்கு கோயில்



இந்திய அணியின் தலைவர் டோனிக்கு கோவில் கட்டப்போவதாகக் கூறி அவரது ரசிகர்கள் ஆன்மீகவாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார்.
தமிழ்நடிகைகளுக்கு கோயில் கட்டியதை அறிந்த ரசிகர்கள் டோனிக்கு கோயில் பற்றி அதிர்ச்சியுடன் இருந்தனர்.
இந்த நிலையில் டோனிக்கு கோவில் கட்டுவது தான் விரும்பவில்லை எனக் கூறிய டோனியின் உறவினர்கள். ஆன்மீகவாதிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளனர். திறமைமிக்க டோனியின் வாழ்வில் எழுதப்படவிருந்த கறுப்புப் புள்ளியை டோனியின் உறவினர்கள் தவிர்த்து விட்டனர்.

தி.மு.கவின் தலை விதியை நிர்ணயிக்கும் இடைத்தேர்தல்


தமிழக அரசாங்கத்தின் செயற்பாடுகளைமக்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதை அறிவதற்குஒரு சந்தர்ப்பமாக திருமங்கலம் தொகுதியின் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமங்கலம் தொகுதியில் உறுப்பினரான இளவரசன் மரணமானதால் திருமங்கலம்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறஉள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்
னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இளவரசன்சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்த
லிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தவேளையில் அத்தொகுதியின் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்போட்டியிடும் என்று வைகோ அறிவித்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் தொகுதி வைகோவால் மறக்கமுடியாத தொகுதியாகும். திருமங்கலம் தொகுதியில் வைகோ பேசிய பேச்சின் காரணமாகதான்அன்றைய முதல்வர் ஜெயலலிதா
வைகோவை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளினார். வைகோவுடன் பொடா சட்டத்தில்
சிறைவாசம் அனுபவித்தவர்தான் இளவரசன்.இளவரசனின் இடத்துக்கு அழகு சுந்தரத்தை
வைகோ நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வைகோவுடன் பொடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களில் அழகு சுந்தரமும்ஒருவர். திருமங்கலம் இடைத்தேர்தலின்மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துடன்நேருக்கு நேர் மோதுவதற்கு ஜெயலலிதா தயாராகி விட்டார்.திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட
முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திருமங்க
லம் தொகுதியின் இடைத் தேர்தல் விறுவிறுப்பாக அமையும்.



திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட்கட்சியும் வெளியேறி விட்டன. மார்க்ஸிஸ்ட்கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன்இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.ஆயினும் திருமங்கலத்தில் அக்கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்யும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்இருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சியுடன் இணையும் என்று இதுவரைஅதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் அல்லதுவிஜயகாந்தின் தேசிய முன்னேற்றத் திராவிடக்கட்சி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி இணையும் சாத்தியக் கூறுஉள்ளது.யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தேபோட்டியிடுவேன் என்ற விஜயகாந்தின் கொள்கையினால் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்துடன் இணையும்சாத்தியமும் உள்ளது. தமிழக அரசாங்கத்தைதோல்வியடையச் செய்ய வேண்டுமானால்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்
இணைவதைத் தவிர வேறு மார்க்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்துவெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி
தனியாகவே உள்ளது. அக்கட்சியுடன் கூட்டணிசேர எந்த ஒரு கட்சியும் தயாராக
இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தால்ஒதுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் பாட்டாளி மக்கள்கட்சியை கண்டுகொள்ளாததனால்இணைப்பு சாத்தியப்படவில்லை.பாட்டாளி மக்கள் கட்சியை நோக்கி முதல்வர் கருணாநிதி நேசக்கரம் நீட்டியுள்ளார்.செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும் என்றுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சித் திரõவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவற்றின்செயற்குழுவின் முடிவு கட்சித் தலைவரின்விருப்பத்துக்கு மாறான முடிவுகளை எடுத்ததில்லை.திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாக விமர்சித்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. பாட்டாளிமக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியானகாடு வெட்டி குரு சிறை வைக்கப்பட்டதும்பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டது
கூட்டணி பற்றிய ரகசியப் பேச்சுவார்த்தையின் பிரதிபலன் என்றே எண்ணத் தோன்றுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபடப் போவதாக காங்கிரஸ் கட்சிஅறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் டில்லித்தலைவர்களின் விருப்பதை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் உள்ள பாட்டாளி மக்கள்
கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிசேரும் சாத்தியக் கூறுகள் அதிகமாக
உள்ளன.

திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாரதிய ஜனதாக்
கட்சி அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம் ஆகியவற்றுடன் சமமாகப் போட்டியிடும் வல்லமைஇல்லாததனால் பாரதீய ஜனதாக் கட்சி இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கி உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் சற்றுகுறைந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பலம் கொஞ்சம் கூடி உள்ளது.அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்வெட்டுஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கு எதிரான முக்கிய பிரசாரமாகஅமைய உள்ளது.இலவசப் பொருட்களின் பட்டியலினால்
ஆட்சியை பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம், பொங்கலுக்காக பொருட்களை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுதவிர மாறன் குடும்பத்துடனான சமரசமும்திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத்தீர்மானிக்கும் காரணியாக அமைய உள்ளது.சன் தொலைக்காட்சியின் பிரசாரம் திராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாகஉள்ளது.
முதல்வர் கருணாநிதியின் மகனான மு. க.அழகிரியின் கோட்டையாக மதுரை விளங்குவதால்தனது கௌரவத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டுள்ளார்.அவர் மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ள
முதல்வர் பிரசாரக் குழுத் தலைவராக அவரைநியமித்துள்ளார்.
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தாலும் மதுரை முதல்வர் மு.க.அழகிரி என்றே
அங்குள்ளவர்கள் கூறுவார்கள். அழகிரியின்பலத்தினால் திராவிட முன்னேற்றக் கழகம்
வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்
பாளராக லதா அதியமான் நியமிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டப் பேரவைஉறுப்பினராக வெற்றி பெற்ற அதியமான்
இறந்த பின்னர் அவரது மனைவியாரான லதாகழகப் பணியைச் செய்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்வேட்பாளராக முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். 1996ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் இப்போது அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாக உள்ளார்.திருமலங்கலம் தொகுதியில் போட்டியிட்டுதோல்வியடைந்த தனப்பாண்டியனை தேசியமுன்னேற்ற திராவிடக் கட்சி மீண்டும் தெரிவுசெய்துள்ளது.இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முன்னோடியாக திருமங்கலம் இடைத் தேர்தல்அமைய உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா? இல்லையா? என்பதை திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தஉள்ளது.
வர்மா வீரகேசரி வாரமலர் 21 12 2008

Sunday, December 21, 2008

அடிவாங்கிய அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்க அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே பேர்த் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி ஆறு விக்öகட்டுகளினால் வெற் றி பெற்று சாதனை படைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 414 ஓட்டங்களை நான்கு விக்கெட்டுகளை இழந்து தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்க அணித் தலைவர் ஸ்மித் அடித்த 103 ஓட்டங்கள் சரித்திர வெற்றிக்கு உதவியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதலாவது இன்னிங்ஸில் 375 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்öகட்டுகளை இழந்து 319 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டத்தை நிறுத்தி தென் ஆபிரிக்க அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
414 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின் போது மூன்று விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்கள் எடுத்தது.
கலிஸ் 32 ஓட்டங்களுடனும் டிவில்லியர்ஸ் 11 ஓட்டங்களுடனும் ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
அவுஸ்திரேலிய மண்ணில் அதனை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் விளையாடிய தென் ஆபிரிக்க வீரர்கள் தாம் நினைத்ததை முடித்து அவுஸ்திரேலிய அணியை மண் கௌவச் செய்தனர்.
கலிஸ் 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டி. வில்லியர்ஸ் டும்மினி ஜோடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேடிக் கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய வீரர்களின் வேகங்களும் சுழல்களும் தென் ஆபிரிக்க வீரர்களை ஒன்றும் செய்யவில்லை.
டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களும் டும்மினி ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டிவிலியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ஈடாடுகிறது இந்தியப் பெரும் சுவர்



இந்திய அணியை சரிய விடாது நிமிர்த்திப் பிடித்த இந்தியப் பெருஞ்சுவர் என வர்ணிக்கப்பட்ட ராகுல் ட்ராவிட் இன்று எதிரணி வீரர்களின் பந்துகளைச் சந்திக்க முடியாது தடுமாறுகிறார்.
மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்புச் செய்தவர். களத்தடுப்பில் அக்கறையுடன் செயற்பட்டவர், ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அசத்தியவர். விக்கெட் கீப்பராக கண்ணும் கருத்துமாக பந்துகளைப் பிடித்து எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என பல சிறப்புக்களைப் பெற்ற ராகுல் ட்ராவிட்டின் நிலை பரிதாபமாக உள்ளது.
கங்குலி, சச்சின், ட்ராவிட் ஆகிய மூவரையும் மும்மூர்த்திகள் என இந்தியப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.
இவர்கள் மூவரும் சோபிக்கத் தவறிய போது சகல ஊடகங்களும் மிக மோசமாக விமர்சித்தன. இவர்கள் விரைவில் ஓய்வு பெறவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. மிகச் சிறந்த வீரர்கள் சிலவேளை தடுமாறுவது சகஜம் ஆகையினால் இவர்கள் மூவருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி ஒலித்தது.
இளம் இந்திய வீரர்களின் எழுச்சி பழைய வீரர்களை தடுமாறச் செய்தது. புதியவர்களின் விஸ்வரூபத்தினால் பழைய வீரர்கள் மனதளவில்
பாதிக்கப்பட்டனர். அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் ஓய்வு பெறப் போவதாக கங்குலி அறிவித்தார். கங்குலியை முந்திக் கொண்டு டெஸ்ட் அணித் தலைவர் கும்ப்ளே ஓய்வு பெற்று விட்டார். மூத்த வீரர்கள் ஓய்வு பெறவேண்டும் என தாம் வற்புறுத்தவில்லை என இந்திய கிரிக்கெட் சபை மீண்டும் மீண்டும் கூறி வந்த
போதும் கும்ப்ளேயின் அவசர ஓய்வின்
காரணம் புரியவில்லை.
கங்குலியும் கும்ப்ளேயும் ஓய்வு பெற்று விட்டனர். அடுத்து ஓய்வு பெறப் போவது ட்ராவிட்டா?
லக்ஷ்மனா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஓய்வு பெறுவோர் பட்டியலில் சச்சினின் பெயர் இடம்பெறவில்லை. சச்சின் மீது சகலரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் திறமைகாட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் சதமடித்து விமர்சகர்களின் வாயை அடைத்து விட்டார். ட்ராவிட்டும் லக்ஷ்மனும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றுதான் அவர்களது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியாது அவர்கள் தவிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டு ட்ராவிட்டுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ட்ராவிட் 669 ஓட்டங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரே ஒரு சதம் மட்டும் அடித்துள்ளார். கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 127 ஓட்டங்களை மட்டும் எடுத்துள்ளார். எட்டு இன்னிங்ஸ்களில் 76 ஓட்டங்கள் எடுத்தார். இதில் பெங்களூரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 51 ஓட்டங்களே அண்மையில் அவர் எடுத்த அதிகமான ஓட்டமாகும்.
5, 39, 11, 11, 0, 3, 3, 4 இவையெல்லாம் ட்ராவிட்டின் ஓட்ட எண்ணிக்கை என்றால் நம்ப முடியாதுள்ளது.
25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதங்களுடன் 10,373 ஓட்டங்கள் எடுத்த வீரர் இவ்வளவு மோசமாக விளையாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. 52.12 என்ற சராசரி ஓட்ட விகிதத்தை உடைய ட்ராவிட் 2008 ஆம் ஆண்டு 27.87 சராசரி ஓட்ட விகிதத்தை எடுத்திருப்பதனால் அவரது ஆட்டம் முடிவுக்கு வருகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்த ட்ராவிட் மோசமான நிலையில் ஓய்வு பெறக் கூடாது. சிறிது காலம் கடுமையான பயிற்சி எடுத்து உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் தனது முத்திரையை மீண்டும் பதித்து விட்டு ஓய்வு பெற்றால் அவருடைய மதிப்பு இன்னமும் அதிகரிக்கும்.
ரமணி
மெட்ரோநியூஸ் 19 12 2008

Tuesday, December 16, 2008

விஜயகாந்துடன் அணி சேரமுற்சிக்கும் தமிழகக் கட்சிகள்



காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குக்குறைந்துள்ளதாகவும் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலுக்கு முகம் கொடுத்தால்வெற்றி பெற முடியாது என்றும்தெரிவிக்கப்பட்ட கருத்தை வட இந்தியாவின்மாநிலத் தேர்தல் முடிவுகள் தகர்த்துள்ளதால்தமிழக முதல்வர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளார்.
கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பத்தாலும்குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிளவினாலும் தடுமாறிய தமிழக முதல்வர் கருணாநிதி, சகல
பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வைக் கண்டுள்ளார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும்இடையேயான பனிப்போர், மாறன் குடும்பத்துடன் ஏற்பட்ட பிணக்கு ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வைக் கண்டுள்ளார் முதல்வர்.
பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் கூட்டணி
யில் சேர்ப்பதற்கு முதல்வர் தயாராகிவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதைத் தவிர பாட்டாளி மக்கள் கட்சிக்குவேறு மார்க்கம் இல்லை.மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட மார்க்ஸிஸ்ட் கட்சி,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்இணைந்துள்ளது.
மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் இருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனதுமுடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியைமார்க்ஸிஸ்ட் கட்சி கண்டுகொள்ளவில்லை.திராவிட முன்னேற்றக் கழகத்தினால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்தது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்
மார்க்ஸிஸ்டும் இணைவது உறுதியான போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி யாருடன் கூட்டணிசேர்வது என இன்னமும் அறிவிக்கவில்லை.காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைப்பதில்லை என்ற உறுதியில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. ஆகையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேரும்சூழ்நிலை உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்கூட்டணி சேரும் கனவில் இருந்த பாரதீய ஜனதாக் கட்சி தனித்துப் போயுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவுடன் இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் பலமிழந்த நிலையில் இருப்பது அதற்கு பெரும்பின்னடைவாகும். தமிழகத்தின் எந்த ஒருதொகுதியிலாவது தனித்து நின்று வெற்றிபெறுவதற்கான செல்வாக்கு அற்ற நிலையில்பாரதீய ஜனதாக் கட்சி உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும் தமக்குரியகூட்டணிக் கட்சிகளைத்தேர்வு செய்து விட்டன.தனித்து விடப்பட்டுள்ள பாரதீய ஜனதாக்கட்சி விஜயகாந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டுகட்சிகளுக்கும் சவால் விடும் வகையில்வளர்ந்துள்ள விஜயகாந்தை தமது அணியில்சேர்ப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிசெய்து வருகிறது.
பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணிஅமைத்தால் முஸ்லிம்களின் வாக்குகளையும்கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் இழக்க
வேண்டிய சூழ்நிலை விஜயகாந்துக்கு ஏற்படலாம்.விஜயகாந்தை தமதுஅணிக்குள்கொண்டு வருவதற்கு ஜெயல
லிதாவும் முதல்வர் கருணாநிதியும் பெரும்முயற்சி செய்கின்றனர். விஜயகாந்தைஅண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தில்சேர்ப்பதற்குமார்க்ஸிட் கட்சி முயற்சி செய்து வருகிறது.திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்
துக்கு தூது விட்டுள்ளது.நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போதுதனித்து நின்று வெற்றி பெற முடியாது
என்பதை விஜயகாந்த் உணர்ந்துள்ளார். தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத நிலையில் இருக்கு
ம் பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்வதற்குவிஜகாந்த் முன்வர மாட்டார். பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றிக் கனிøயப் பறிக்க முடியாது என்பதனால் பாரதீயஜனதாக் கட்சியை விஜயகாந்த் தவிர்த்து
விடக்கூடும்.திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில்ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்தால்ஒரு சில தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சிவெற்றி பெறும். இந்த இரண்டு கட்சிகளில்ஏதாவது ஒன்றுடன் விஜயகாந்த் கூட்டணிசேர்ந்தால் அங்கே கட்சிக் கொள்கை பின்தள்ளப்பட்டு விடும். கூடுதலான தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் கட்சிக்கே முக்கியத்துவம் வழங்கப்படும்.விஜயகாந்தும் கம்யூனிஸ்ட் கட்சியும்இணைந்து போட்டியிட்டால் ஒன்று அல்லதுஇரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.ஏதாவது, ஒரு அணியில் இணைய வேண்டியகட்டாயத்துக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த முதல்வர் கனவில் தமிழக அரசியல்வாதிகள் மிதந்து கொண்டிருக்கபிரதமர் நாற்காலியை குறி வைத்து ஜெயலலிதா காய்நகர்த்தி வருகிறார்.நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று ஆயிரத்துக்கும் அதிகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால்ஜெயலலிதாவுக்கு அதிக முக்கியத்துவம்வழங்கப் படப்போவது உறுதியாகியுள்ளது.மூன்றாவது அணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது விட்டால் மத்தியில்ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணிக்கேஜெயலலிதா முயற்சி செய்வார்.இந்நிலையில், பொருளாதாரப் பிரச்சினைஅத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு, மும்பைத் தாக்குதல் போன்றவற்றின்பாதிப்புகள் இருந்தும் மாநிலங்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றமைஎதிரணிகளை கதிகலங்க வைத்துள்ளது.
வர்மா
வீரசேசரி வாரவெளியீடு 14 12 2008

Monday, December 15, 2008

இங்கிலாந்தின் சவாலை தகர்த்தது இந்திய அணி



இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 387 ஓட்டங்களை அடித்து ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது இந்திய அணி.
ஷேவாக், கம்பீர் ஆகியோரின் அதிரடியான அடித்தளமும் சச்சின், யுவராஜ் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டமும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.
இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸில் 316 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 247 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டு இந்திய அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
387 என்பது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் அணிக்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய இமாலய இலக்கு.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான ஷேவாக் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களைத் திணற வைத்தார்.
68 பந்துகளில் நான்கு சிக்ஸர் 11 பௌண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு நிம்மதியை அளித்தது.
இந்திய அணி தனி ஒரு வீரரில் தங்கி இருக்கவில்லை என்பதை ஏனைய வீரர்கள் நிரூபித்தனர்.
கம்பீர் 41 ஓட்டங்களுடனும் டிராவிட் இரண்டு ஓட்டங்களுடனும் ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
ஒரு விக்கெட்டை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 256 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. டிராவிட் நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் மூன்று ஓட்டங்களை மட்டுமே பெற்றார். ஆகையினால் டெஸ்ட் அணியில் இருந்து டிராவிட் கழற்றி விடப்படும் நாள் தூரத்தில் இல்லை.
டிராவிட் வெளியேறியதும் கம்பீருடன் இணைந்தார் டெண்டுல்கர். இந்திய அணி 183 ஓட்டங்கள் எடுத்த போது 66 ஓட்டங்கள் எடுத்த கம்பீர் ஆட்டமிழந்தார்.
டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்த லக்ஷ்மன் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி நான்கு விக்கட்களை இழந்து 224 ஓட்டங்கள் எடுத்தபோது ஐந்தாவது இணைப்பாட்டமாக சச்சினுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் பொறுப்புடன் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்த ஜோடியைப் பிரிப்பதற்கு இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தவிபொடியாகின.
இந்திய மண்ணில் இந்திய அணியை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகப் பிரமாண்டமான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.
டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களும் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கி இருந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்களை அச்சுறுத்தி ஆட்டமிழக்கச் செய்த இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் யுக்தி இரண்டாவது இன்னிங்ஸில் பலிக்கவில்லை.
இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொண்ட சச்சினும் யுவராஜும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து துடுப்பெடுத்தாடினர்.
அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை டெஸ்ட் போட்டியில் தோல்வியடையச் செய்த இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றது.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் சதமடித்து தனது 41 ஆவது சதத்தை பூர்த்தி செய்த அதேவேளை இந்திய அணி வெற்றி பெற்றது.
196 பந்துகளுக்கு முகம் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் ஒன்பது பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்கள் எடுத்தார்.
131பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ் ஒரு சிக்ஸர் எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்கள் எடுத்தார்.
நான்கு விக்கட்டுகள் இழந்து 387 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி ஆறு விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக ஷேவாக் தெரிவு செய்யப்பட்டார். டெஸ்ட் போட்டியில் 2008 ஆம் ஆண்டு 2008 ஆம் ஆண்டு 1445 ஓட்டங்கள் எடுத்து ஷேவாக் சாதனை செய்துள்ளார்.

Sunday, December 14, 2008

வெற்றிபெறுமா இந்திய அணி?


சென்னையில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணி 387 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஸ்டிரஸ், கொலிங்வூட் ஆகிய இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து இந்திய அணிக்கு சவால் விடுத்துள்ளனர்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 316 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்டிரஸ் 123 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 241 ஓட்டங்கள் எடுத்தது. டோனி 53 ஓட்டங்களும் ஹர்பஜன் 43 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய அணிக்கு பெரும் சோதனையாக அமைந்தது.
ஸ்டிரஸ் 73 ஓட்டங்களுடனும் கொலிங்வுட் 60 ஓட்டங்களுடனும் நேற்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர். இங்கிலாந்து அணி 43 ஓட்டங்களில் மூன்று விக்கட்டுகளை இழந்தது ஆகையினால் இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
இங்கிலாந்து அணி வீரர் இருவரையும் பிரிப்பதற்கு இந்தியா அணித் தலைவர் டோனி எடுத்த முயற்சிகள் அனைத்தும் ஸ்டிரஸ், கொலிங்வூட் இருவரும் இணைந்து 214 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியை கதிகலங்க வைத்தனர்.
108 ஓட்டங்கள் எடுத்த ஸ்டிரஸ்ட் ஹர்பஜன் சிங்கின் பந்தை லக்ஷ்மனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிளிண்டொப் நான்கு ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கொலிங்வூட் 108 ஓட்டங்களில் சஹீர்கானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
ஒன்பது விக்கட்டுகளை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது இங்கிலாந்து அணி ஆட்டத்தை நிறுத்தி இந்திய அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷேவாக், கம்பீரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 33 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தது. ஷேவாக் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டு சிக்ஸரும் எட்டு பௌண்டரிகளும் அடி த்து ஷேவாக் 50 ஓட்டங்களை நிறைவு செய்தார்.
108 பந்துகளில் இந்திய அணி 100 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி 131 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 83 ஓட்டங்கள் எடுத்திருந்திருந்த ஷேவாக் ஆட்டமிழந்தார்.
கம்பீர் 41 ஓட்டங்களுடனும் ட்ராவிட் இரண்டு ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tuesday, December 9, 2008

வரலாற்றில் இந்தவாரம் நவம்பர்30 டிசம்பர்7





நவம்பர்30: மும்பைகுண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இந்திய உள்துறை
அமைச்சர் சிவராஜ் பட்டீல் ராஜினாமா.புதிய உள்துறை
அமைச்சராக ப.சிதம்பரம் நியமனம்.

இலங்கை ஜனாதிபதி இத்தாலிசென்றார்.

டிசம்பர் 01 : இலங்கை ஜனாதிபதி துருக்கிசென்றார்.

இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபன தலைவராக மேஜர்
ஜெனரல் அசோகதெல்தெனியவின் நியமனத்துக்கு நீதிமன்றம்
அனுமதி வழங்கியது
கொக்காவில் கைப்பற்றாப்பட்டதாக அரசங்கம் அறிவித்தது.
தமிழகமுதல்வரின் கும்பமும்,மாறனின் குடும்பமும் சமரசமாகின.
டிசம்பர் 02: தமிழகநாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை
சந்தித்துஇலங்கையில் யுத்தநிறுத்தம் செய்யவேண்டுமென
வலியுறுத்தினர்.

அமெரிக்காவின் வெளியுறவுச்செயலராக ஹிலரியை புதியஜனாதி
பதி ஒபாமா நியமித்தார்

தாய்லாந்தில் எதிர்க்கட்சிகளின்போராட்டம்
தீவிரமடைந்ததனால் பிரதமர்கேரம் வை வாங்
சாவத் பதவிவிலக முடிவுசெய்தார்.

அமெரிக்கவெளியுறவிச்செயலர் கொண்டலீசா றைஸ் இந்தியாவு
க்குச்சென்றார்.

கனடாவின் சிறுபான்மை அரசைக்கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள்
ஒப்புதலளித்தன.

டிசம்பர் 03:கோவாவில் நடைபெற்ற 39 ஆவது இந்திய சர்வதேசதிரைப்பட
விழாவில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகவுக்குதங்கமயில்
விருது வழங்கப்பட்டது.

இலங்கையில் சிறையில் இருக்கும் ஊடகவியலாளர் திசநாய
கத்துக்கு எலலைகளற்ற ஊடக அமைப்பினால் ஊடகசுதந்திர
விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில்போட்டியிட்டு தோல்வியடைந்த
ஜோன் மக்கெய்ன் இந்தியாவுக்குச்சென்றார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக தாய்லாந்துப்பிரதமர்
அறிவித்ததும் விமான நிலையத்தை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்ட
க்காரர்கள் வெளியேறினர்.

டிசம்பர் 04:தமிழகமுதல்வர் தலைமையிலான தமிழக அரசியல் கட்சித்
தலைவர்கள் பிரதமர்மன்மோகசிங்கைச் சந்தித்து இலங்கையில்
யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்தனர்.
வெளியுறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜி இலங்கை வருவதாக
தகவல் வெளியானது.
கொண்டலிசா ரைஸ் பாகிஸ்தான் சென்று பிரதமரையும் ஜனாதி
பதியையும் சந்தித்தார்.
இலங்கையில்மேல் நீதிமன்றத்துக்கு முதன்முதலாகபெண் நீதிபதியாக
எம்.நூருல்மைமூன் நியமனம்.
அண்ணாதிராவிடமுன்னாற்றக் கழகமும் மார்க்சிஸ்ட் கட்சியும் இணை
யப்போவதாக அறிவுப்பு வெளியானது.
ரஷ்யஜனாதிபதி மெத்வதே இந்தியா விஜயம்.
டிசம்பர் 05;பெற்றோல்விலை20ரூபாவால் குறைக்கப்பட்டாது.
கனாகராயான்குளம் கைப்பற்றப் பட்டது.
டிசம்பர் 07:வெளிநாட்டுக்குச் செல்ல அரியநேந்திரன் எம்.பிக்கு விமானநிலயத்
தில் அனுமதி மறுப்பு.

Monday, December 8, 2008

பிரிந்தகுடும்பம் இணைந்ததால் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பிசுபிசுத்தது


முதல்வர் கருணாநிதியும் டாக்டர் ராமதாஸும் சந்தித்துப் பேசிய பின்னர் காடு வெட்டி
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தது தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தது, முதல்வர் கருணாநிதிக்கும்மாறன் குடும்பத்துக்கும் இடையிலான பகைø
ம முடிவுக்கு வந்தது ஆகியவை தமிழகத்தில்கடந்த வாரம் பரபரப்பான செய்திகளாகபவனி வந்தன.இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக
நடைபெறும் யுத்தம் உடனடியாக முடிவுக்குக்கொண்டு வரப்பட வேண்டும், இலங்கையில்யுத்தநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டு
ம் என்று தமிழகத்தில் எழுந்த குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.அண்டை நாட்டில் நடைபெறும் உள்நாட்டுயுத்தத்தில் இந்திய அரசு தலையிடமாட்டாதுஎன்ற நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம்யுத்தத்தில் தீவிரம் காட்டி வருகிறது.இலங்கையில் நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசுதயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்நம்பிக்கையூட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் தலைமையிலான அரசியல்கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்குடன்பேசும்போதும் விடயங்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தபோது கோடிட்டு காட்டியுள்ளனர்.தமிழகத்தில் இருந்து கொண்டு
அறிக்கை வெளியிடுவதாலும் கடிதம் எழுதுவதாலும் எதுவித பிரயோசனமும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன் ஆகியோர்வலியுறுத்தி வந்தனர். இலங்கையில்நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவர முடியுமா இல்லையாஎன்பதை பிரதமரிடம் நேரடியாகக்கேட்டு விடும் முடிவுடன் தான்தமிழக அரசியல் கட்சித் தலைவர்
கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்கள்.
தமிழக அரசுக்கு சாதகமான முடிவையே பிரதமர் அறிவித்துள்ளார்.வெளியுறவுத்துறை அமைச்சர்பிரணாப்முகர்ஜி இலங்கைக்குச்சென்று யுத்த நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பார் என்ற பிரதமரின் உத்தரவாதத்தைப்பெற்றுக்கொண்ட திருப்தியில் முதல்வர் தலை
மையிலான குழுவினர் தமிழகம் திரும்பினர்.திராவிட முன்னேற்றக் கழகத்தினால் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளிமக்கள் கட்சி மீண்டும் கூட்டணிக்குள்இணையும் சாத்தியம் தென்பட்டுள்ளது.தமிழக முதல்வர் கூட்டிய சர்வகட்சி மாநாட்டில்டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டபோதுதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிமீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகரானகாடு வெட்டி குரு மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்பிணையில் வெளிவர முடியாதவகையில் குற்றங்கள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன. . தலைவர்கள் இருவரும்கதைத்ததும் காடு வெட்டி குருமீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் செல்லாக்காசாகிவிட்டன.குருபிணையில் விடுதலை செய்யப்பட்டார்
அரசாங்கம் நினைத்தால் ஒருவரை சிறைக்கு அனுப்பலாம்.அதேவேளை, அவரது குற்றங்களை இல்லாமலும் செய்யலாம்என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தமிழக முதல்வரின் அரசியல்வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவுதினகரன் பத்திரிகையில் பிரசுரமானதால் முதல்வர், கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் பிரிந்தன. முதல்வரின் மகனான மு.க.அழகிரிக்கு அரசியலில் செல்வாக்கு இல்லை
என்று கருத்துக்கணிப்பு கூறியதால் மதுரையில்உள்ள மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்வெகுண்டெழுந்து மதுரையில் உள்ள தினகரன்அலுவலகத்தை தீக்கிரையாக்கினர். அதையடுத்து கொழுந்து விட்டெறிந்த பகைமைஉணர்வு இப்போது தணிந்துவிட்டது.அரசியலில் சோர்வடையாத முதல்வர் கருணாநிதி குடும்பப் பிரச்சினையால் சோர்வடைந்தார். மாறன் குடும்பத்தின் பிரச்சினைகலைஞரின் அரசியல் வாரிசு ஸ்டாலின் தான்என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக அரசியலில் அழகிரி
களமிறங்குகிறார் என்று ஊகம் என்பன முதல்வரை பெரிதும் பாதித்தன.முதல்வருடன் சமரசமாவதற்கு மாறன் குடும்பம் பெரு முயற்சி செய்தார். மாறன் குடும்பத்தை ஒதுக்கக்கூடாது என்பதில் ஸ்டாலின்உறுதியாக இருந்தார். மாறன் குடும்பத்தை அர
சியலில் இருந்தும் தொலைக்காட்சி உலகில்இருந்தும் இல்லாமல் செய்வதற்கு மு.கா. அழகிரி பெரு முயற்சி செய்தார்.இப்போது மாறன் குடும்பத்துடன் உறவைபுதுப்பித்ததனால் தனக்கு எதிரான பிரசாரத்தைமுடக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. காங்கிர
ஸுக்குள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறைவடைந்துள்ளது. இழந்த செல்வாக்கை மீண்டும்பெறுவதற்கு பிரதமருடனான சந்திப்பும்மாறன் குடும்ப உறவும் உதவி செய்யும்.நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது
தமிழகத்தின் சக்திமிக்க சன் தொலைக்காட்சியின் சேவைகள், தினகரன், மாலை முரசுஎன்பவற்றின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை.
பிரிந்த குடும்பம் ஒன்றானது தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டபோது உயிரிழந்த அப்பாவி ஊழியர்கள் மூவரின் குடும்பத்துக்கு தினகரன் நிர்வாகம் என்னபதில் கூறப் போகிறது?
கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சன் தொலைக்காட்சியில் இருந்துகலைஞருடன் சங்கமமாகிய சுமார் 250 ஊழியர்களுக்கு கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் என்ன பதில் கூறப் போகிறது என்பன பலரிடம் எழுந்துள்ள கேள்விகள்.
எவ்வாறாயினும் இழந்துபோன செல்வாக்கைமீண்டும் பெறுவதில் தமிழக முதல்வர்பெற்றுவிட்டார்
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 07 12 2008

Friday, December 5, 2008

போர் முனைப்பில் உபகண்டம்


இந்திய பாகிஸ்தான் எல்லையில் இதுவரை காலமும் மையம் கொண்ட இந்திய பாகிஸ்தான் உரசல்கள் மும்பைக்குள் சதிராட்டம் ஆடியதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் தோன்றியுள்ளது. இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கான சகல முயற்சிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட எல்லை தாண்டிய பயங்கரவாதம் கடல் வழியாக மும்பையில் அரங்கேறியதனால் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளே அச்சத்தில் உறைந்துள்ளன.
வல்லரசு என்று தன்னைப் பிரகடனப்படுத்திய இந்தியாவின் வர்த்தக நகரில் மீசை முளைக்காத சில இளைஞர்கள் மூன்று நாட்கள் ஆடிய வெறியாட்டம் இந்தியாவின் பாதுகாப்பை சுக்குநூறாக்கியுள்ளது. மும்பைத் தாக்குதலின் முழுப் பொறுப்பும் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் பின்னணியில் நடைபெற்றதாக இந்தியா உறுதியாக நம்புகிறது.
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதி, விமான நிலையங்கள்
ஆகியவற்றில் கடும் பாதுகாப்பு இருப்பதனால் இந்தியாவுக்குள் நுழை
வதற்கு கடல் மார்க்கத்தை
தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்தனர்.
பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்கு ஊடுருவுவார்கள் என்ற தகவல் இந்திய புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்கனவே கிடைத்து. தேசிய பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதே தகவலை அமெரிக்கா இரண்டு முறை இந்தியாவுக்கு வழங்கி எச்சரித்தது. உளவுத் தகவல்களை உதாசீனம் செய்ததனால் மும்பை பயங்கரவாதம் உலகையே ஆட்டிப் படைத்தது.
தாஜ், ஒபராய் ஆகிய ஹோட்டல்கள் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இருப்பதை புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தின. தாஜ் ஹோட்டல் நிர்வாகம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால் அந்தப் பாதுகாப்புகள் போதுமானதல்ல. தாஜ் ஹோட்டலின் பின்பகுதியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தீவிரவாதிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினார்கள்.
மும்பையின் நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல்கள் நடைபெற்றாலும் இத்தாக்குதல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக இருந்தது. அமெரிக்கர்களையும் பிரிட்டிஷ் பிரஜைகளையும் இனம் கண்டு சுட்டுக் கொன்றார்கள்.
நாரிமன் ஹவுஸில் நடைபெற்ற தாக்குதலின் மூலம் இஸ்ரேல் நாட்டுக்கெதிராகவும் தாக்குதல் நடைபெற்றது. நாரிமன் ஹவுஸ்ஸில் குடியிருப்பவர்கள் யூத மக்கள்.
இந்தியாவில் குடியேறியுள்ள யூத மக்களின் நல்வாழ்வுக்கு இஸ்ரேல் உதவி செய்து வருகிறது.
குறைந்த உறுப்பினர்களுடன் கூடிய அழிவையும் அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேறியுள்ளது.
பொருளாதாரத்திலும் அறிவியலிலும் மேற்கு நாடுகளுக்குப் போட்டியாக இந்தியா வளர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளர்ச்சியினால் மேற்கு நாடுகளும் அண்டை நாடான சீனாவும் கலங்கிப் போயுள்ளன. இந்தியப் பொருளாதாரத்தை சிதறடிக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரவாதிகளிடம் மேலோங்கியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் நட்புறவை வளர்த்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் அணுசக்தி உற்பத்திக்கு உதவி செய்து வருகின்றன. சந்திரயான் விண்கலம் இந்திய அறிவியலை நிலவுவரை அழைத்துச் சென்றுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஏட்டிக்குப் போட்டியாக புதிய வகை ஏவுகணையினை பரீட்சித்துப் பார்த்திருந்தன. இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு முன்னால் பாகிஸ்தானின் வான்வெளி ஆய்வு பூஜ்யமாக உள்ளது.
தீவிரவாதிகளின் இலகுவான இலக்காக மும்பை உள்ளது. 1993 ஆம் ஆண்டு டிசெம்பர் 3 ஆம் திகதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடித்து 257 பேர் உயிரிழந்தனர். 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி இருவேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானார்கள். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி ஏழு இடங்களில் குண்டு வெடித்து 200 பேர் மரணமானார்கள்.
இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 25 பெரிய குண்டு வெடிப்புகள் நடைபெற்றன. இக்குண்டு வெடிப்புகளினால் 7000 க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க தலைமையிலான போருக்கு இந்தியா ஆதரவு வழங்கவில்லை. ஆனால் அந்த நாடுகளில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகமும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.
ஆப்கானிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட அல்கைதா 1989 ஆம் ஆண்டு ஆரம்பமானது. 1992 ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் ஆர்மி இஸ்லாமிக் குரூப் ஆரம்பமானது. 1970 ஆம் ஆண்டு எகிப்தில் அல் ஜிகாத் உருவானது. 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் அல் உம்மா ஆரம்பிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு ஈராக்கில் அபுநிதாஸ் முஜாகுதீன் ஈகாலிக் ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு லெபனானில் அஸ்மத் அல் அன்சார் ஆரம்பிக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஹரக்கத் அல் அன்ஸார் ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அல் ஹரக்கத் அல் முஜாகிதீன் 1989 ஆம் ஆண்டு லக்ஸர் இ தொய்பா, பிலிப்பைன்ஸில் 1991 ஆம் ஆண்டு அபுசாயாம் ஆகிய இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இந்த இயக்கங்களை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ளன.
உலகில் உள்ள 65 நாடுகளில் 177 தீவிரவாத அமைப்புகள் திரைமறைவில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு எதிராக சுமார் 10 தீவிரவாத அமைப்புகள் வன்செயல்களை நடத்துகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இரண்டு இலட்சம் அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.
அல்குவைதா, லக்ஸர் இ தொய்பா, அல் முஜாகிதீன் உட்பட 10 தீவிரவாத இயக்கங்களின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது. காஷ்மீர் பிரச்சினையும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களும் தீவிரவாதிகளை மேலும் கோபமடையச் செய்துள்ளன.
காஷ்மீர் பிரச்சினை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கைகளில் இருந்து தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஏதாவது ஒரு மூலையில் தினமும் பயங்கரவாத சம்பவம் நடைபெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புக்களே காரணம் என்று இந்தியா ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தான் மறுக்கிறது. தீவிரவாதிகள் அடிக்கடி குறி வைக்கப்படும் நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன. இந்தியாவில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா கூறுகின்றது. பாகிஸ்தானில் நடைபெறும் தாக்குதல்களுக்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தானால் குற்றம் சாட்ட முடியாதுள்ளது.
லக்ஸர் இ தொய்பா அமைப்பும், பாகிஸ்தானின் உளவு அமைப்பும் இணைந்தே மும்பைத் தாக்குதலை நடத்தின என்று இந்தியா கூறுகின்றது. மும்பைத் தாக்குதல் பற்றிய விசாரணைகளுக்கு உதவப் போவதாக பாகிஸ்தானின் பிரதமர் சர்தாரி அறிவித்தார். இரு நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள கசப்புணர்வை இந்த அறிவித்தல் போக்கியுள்ளதாக உலகம் நம்பிக் கொண்டிருக்கையில் பாகிஸ்தானின் ஜனாதிபதி தனது பேச்சின் தொனியையே மாற்றினார்.
இந்தியா வழங்கியுள்ள பட்டியலில் உள்ள பயங்கரவாதிகள் எவரும் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தானின் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது இந்திய பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. அன்றைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான கோலின் பவல் இந்தியாவுக்கு விஜயம் செய்து யுத்த மேகத்தைக் கலைத்தார். இன்றும் அதேபோன்ற ஒரு நிலை தோன்றியுள்ளது.
பயங்கரவாதிகள் மும்பையின் மீது திணித்த வன்செயலினால் பாகிஸ்தானின் மீது இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் கொன்டலீசா றைஸ் தனது ஐரோப்பிய விஜயத்தை ரத்துச் செய்து விட்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் பயங்கரவாதிகளைத் தேடி அளிக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட ஒபாமா கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் இராணுவத் தளபதியாக இருந்த போது பாகிஸ்தானின் படைகள் கார்க்கில் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தன. இந்தியப் படையின் தாக்குதல் காரணமாக கார்க்கிலில் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. கார்க்கில் போரின் போது பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைவதற்கு இந்தியப் படைகள் தயாராக இருந்தன. பாகிஸ்தானின் படைகள் பின்வாங்கியதனால் இந்தியப் படைகள் எல்லை தாண்டவில்லை.
பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தானின் அனுமதி தேவை இல்லை என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டையே இந்தியாவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் உதவி செய்யவில்லை என்றால் தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாமை அழிப்பதற்காக இந்திய இராணுவம் எல்லை தாண்டினால் அது இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணமானதாகி விடும்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் தீவிரவாத மக்கள் பாகிஸ்தானில் இருந்து செயற்படுவது உலகறிந்த உண்மை. பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளும்
பாகிஸ்தானிலேயே உள்ளனர்.
உலகெங்கும் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கு பாகிஸ்தான் உதவி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றாலும் அங்கு ஆட்சியை நடத்துவது இராணுவம்தான் என்பது உலகறிந்த உண்மை. மும்பைத் தாக்குதலினால் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளது. யுத்தத்தை நிறுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை பூண்டோடு களைவதற்கான முயற்சியை அமெரிக்கா செய்து வருகிறது.
மும்பையில் வாழும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் தமது நாட்டுப் பிரஜைகளைக் கொலை செய்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. பாலஸ்தீனம், ஈரான் போன்ற நாடுகளின் மீது ஒரு கண் வைத்துள்ள இஸ்ரேல், பாகிஸ்தான் மீதும் தன் பார்வையை வைத்திருப்பது உண்மை.
பாகிஸ்தான், இந்திய எல்லையில் யுத்த மேகம் சூழ்ந்துள்ளது. அதனை களைய வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அரசுக்கு உள்ளது. யுத்தத்தைத் தவிர்ப்பதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் விரும்பினாலும் பாகிஸ்தானின் இராணுவமும் உளவு அமைப்பும் ஒப்புதல் வழங்குமா என்ற சந்தேகம் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைத் தாக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் தான் இந்தியாவின் குண்டு வெடிப்புகளை நடத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் வசிக்கும் இஸ்ரேலியர்களின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதனால் பாகிஸ்தான் மீது மிகுந்த கோபத்தில் உள்ளது
இஸ்ரேல்.
மும்பை மீதான தாக்குதல்
காரணமாக பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வன்செயலுக்குத் துணைபோகாத நாடு பாகிஸ்தான்
என்பதை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா என்பதை அறிய உலகம் ஆவலாக உள்ளது.
ரமணி; மெட்ரோ, 05.12.2008

Wednesday, December 3, 2008

ஸகியே இந்த வேளையில்....





அடவுகளின் சேர்க்கை
நறுமணம் கொண்ட பூமாலை போல
கோர்வைகளாகின
அலாரிப்பு எனும் விடியலின் பின்
ஸ்வரமும் ஜதியும் இணைந்து
ஜதீஸ்வரம் ஆகியது.

நாயகா நாயகி பாவம் பதவர்ணமாகியது.
கோபாலனின் குறும்புத்தனம்
சப்தம் ஆகியது.
உன் கால்களி்ல் கொஞ்சி விளையாடும்
சலங்கை இன்று ஆடப்போவது என்ன?

நிருத்தமா? நிருத்தியமா? நாட்டியமா?
அன்று தாருகாவனத்தில் சிவதாண்டவம்
விஷ்ணு ஆடியது காலிங்க நர்த்தனம்
இன்று நீ ஆடப்போவது லாசிய தாண்டவமா?
ஸகியே இந்த வேளையில்
நீ பல்கலைகளையும் பற்று
நாட்டியக்கலையில் சிகரத்தை
எட்டிப்பிடிக்க எனது வாழ்த்துக்கள்

தாட்ஷா வர்மா
கொழும்பு 13







பரத நாட்டிய அரங்கேற்றம் ஒரு பார்வை! அண்மைக் காலங்களில் நிகழ்ந்த அரங்கேற்றங்களை பார்க்கையில் பரதநாட்டியம் தற்போது நோர்வேயில் ஒரு நல்ல ஆரோக்கியமான பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றே தோன்றுகிறது. அந்தவகையில் செல்வி ராகவி ரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றமும் 15.11.2008 ல் எணூணிணூதஞீ ண்ச்ட்ஞூதணணடதண் மண்டபத்தில் சிறப்பாகவே நடந்தது.
நடன ஆசிரியை திருமதி மேசி சூசை அவர்கள் இந்த அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். எட்டு வயதே நிரம்பிய செல்வி ராகவியால் திருமதி மேசி சூசை பெருமை பெற்றாரா அல்லது திருமதி மேசி சூசை அவர்களால் செல்வி ராகவி பெருமை பெற்றாரா என்று தோன்றக்கூடிய வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. எட்டு வயதில் ஒரு பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்ததை நோர்வேயில் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
பொதுவாக ஒரு மாணவி அரங்கேற்றம் செய்ய குறைந்தது நான்கு வருடங்களுக்குமேல் தேவை என்கிற நிலையில் செல்வி ராகவி எட்டு வயதில் அரங்கேற்றம் செய்கிறார் என்றால் அவர் எத்தனை வயதில் நாட்டியம் பயில தொடங்கியிருக்க வேண்டும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வந்திருந்த பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் ஒரு கருத்தை கூறியிருந்தார் டழத்துக் கலையென்று நாங்கள் எதை வெளியில் கொண்டு போகப்போகிறோம் வேறு இனத்தவற்கு எங்கள் நடனம் என்று எதை அடையாளப்படுத்தப் போகிறோம். நல்ல கேள்வி இதற்கான பதிலை இந்த நிகழ்ச்சியிலேயே திருமதி மேசி சூசை அவர்கள் தந்திருக்கிறார் அதற்கு பின்பு வருகிறேன்
இந்த அரங்கேற்றத்திலே செல்வி ராகவி முறையே புஸ்ப்பாஞ்சலி, ஐதீஸ்வரம், சப்தம, வர்ணம, பதம், கீர்த்தனை, தில்லானா, கூத்து (கூத்தையும் ஒரு உருப்படியாக சேர்த்த துணிச்சலுக்கு எமது பாராட்டுக்கள்) என எட்டு உருப்படிகளை ஆடிக்காட்டினார் இதில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.
வர்ணம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்ட நடனம் நன்கு அறிந்த பாடல். வர்ணம் பொதுவாக பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் ஆனால் அதற்கு மாறாக ரசிக்க வைத்தது வர்ணத்திலே நவரச பதவர்ன கதைகளையும் தனது நடனத்தால் அழகாக விழங்கப்படுத்தினார் செல்வி ராகவி பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கோபமான அம்மன் சாந்தமாகும் அம்மன் என பிரமாதப் படுத்தினார் குறை இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது
பதம் தாயே ஐசோதா ... மிக அழகாக அபினயம் பிடித்தார் செல்வி ராகவி நடனம் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது தில்லானா நல்ல அழகான நடனம் பொதுவாகவே தில்லானா ரசிக்கக்கூடிய நடனம் செல்வி ராகவியும் அனுபவித்து பார்க்கக்கூடியமாதிரி ஆடினார் கூத்து – பேராசிரியர் பாலசுகுமாரின் கேள்விக்கு திருமதி மேசி சூசை அவர்கள் பதில் சொன்ன இடம் மிக மிக அற்புதமாய் இருந்தது இந்த கூத்தை நிகழ்த்தியதன் முலம் திருமதி மேசி சூசை நடன ஆசிரியர்களுக்குள் தன்னை தனித்து அடையாளம் காட்டுகிறார் இளம் நடன ஆசிரியர்கள் கொஞ்சம் யோசிக்கலாம் கூத்தில் ஒரு புதிய யுக்தியை கையாண்டிருக்கிறார் திருமதி மேசி அவர்கள் பின்னணியில் வார்த்தைகளைத் தவிர்த்து தாளத்தில் நடர்ந்திருப்பதால் இங்கே கூத்து தனி நடனம் என்ற நிலைக்கு மாறிவிடுகிறது அத்துடன் நடன அசைவுகளும் வழமையான கூத்துவடிவத்திலிருந்து மாறுபட்டு தனி வடிவம் பெற்றுவிடுகிறது உலகிலேயே கூத்தை பரதநாட்டிய உருப்படிகளில் ஒன்றாக உருவகப்படுத்திய பெருமை திருமதி மேசி சூசை அவர்களையே சாரும்
வழமையாக கூத்தில் வரும் பாத்திரங்களை அதீத ஒப்பனையால் கோமாளிகள் போன்று தோற்றம் பெறச் செய்துவிடுவார்கள் அதற்கு மாறாக இங்கே அதிகம் உறுத்தாத ஒப்பனை இயல்பாக பார்வையாளர்களை கூத்துடன் ஒன்றிக்க வைத்துவிடுகிறது பார்வையாளர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பே அதற்கு சாட்சி ஓப்பனைக் கலைஞர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும் மிக நேர்த்தியாக இருந்தது ஆடைகளும் முக அலங்காரமும
மேடையமைப்பு மிக மோசம் வெறுமையாக இருந்தது ஒரு பாரம்பரிய நடனத்துக்கு ஏற்ப சிறிய அளவிலாவது ஏதும் செய்திருக்கலாம் அல்லது இப்பிடி மாலைகளைக் கட்டி அலங்கோலப் படுத்தாமலாவது இருந்திருக்கலாம் பொதுவாகவே வேறு விடயங்களுக்கு காசை இறைப்பவர்கள் மேடையமைப்புக்கு பின் நிற்பது ஏன்? அல்லது வேறு சில நிகழ்ச்சிகளில் பார்த்தது போல வேறு நாடுகளிலிருந்து அலங்காரப் பொருட்ளை இறக்கி (மஞ்சள் நிறத்தில்கூட என்ன ரசனையோ) அசிங்கமாய் ஒரு செற் போடுவார்கள் ஏன் இங்கிருக்கும் கலைஞர்கள் கண்களில் தெரிவதே இல்லை அதே காசை இங்கேயே பாவிக்கலாமே அதே போல இந்தியக் கலைஞர்களையே தொடர்ந்தும் பாவிக்கிறோமே எப்போது எமது கலைஞர்கள் கண்களில் தெரியப் போகிறார்கள் ஒலியமைப்பு நன்றாக இருந்தது
நன்றி
ஸ்ரிபன

ntpictures.com

Sunday, November 30, 2008

பொருத்தமான பாடல்



கோலம் போடும் இந்தப் பெண்ணுக்குப் பொருததமானபாடல்

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
. வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ
முடித்தேன்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நில
வில் என்றுமில்லை தேய்பிறை...

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர
லாமா குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை
என்ன தரவேண்டும்.

வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்...

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்க ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை. வெண்நிலவை கண்டு
தொட்டுவர ஆசை

அழகா இருக்காங்க பொண்ணுங்க அழகாயிருக்காங்க
எங்களைப் பார்க்கிற பொண்ணுங்க எல்லாம்...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய
அழகு...
.
புள்ளி வச்சி கோலம்தான் போட்ட தந்த சாமி கோலங்
களை மீறிதான் ஆடுது இந்த பூமி எல்லாதான் இருக்கும்
உள்ளது பாரு பூவெல்லாம் சாமிதான்
.
இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள இங்கிலீசு
படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டுல இப்படித்தான்
இருக்க வேண்டும்.

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் குலம்
விளங்க விளக்கு வைப்போம்...

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி உந்தன் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா...

ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீதானோ...
ரிஸ்லா ரஜப்டீன், உக்குவெல.
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டு விழி நீர் தெளித்து
ஒரு கோலமிட்டேன்.
.
புதிய வானம் புதிய பூமி எங்கும் பூ மழை பொழிகிறது நீ
வரும் போது பூ மகள் கோல மழை பொழிகிறது..

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

கண் இரண்டில் மை எழுதி கன்னத்தில் பொட்டு
வைத்து...

பெண்ணே எழுந்து புது கோலம் போடு ஆண் என்பதும்
பெண் என்பதும் ஆண்டவன் கோலங்களே! இன்பங்களு
ம் துன்பங்களும் அவன் செய்த வண்ணங்களே...
மெட்ரோநியூஸ் 26 11 2008

பாட்டாளி மக்கள் கட்சிக்குபச்சைக்கொடி காட்டிய முதல்வர்



இலங்கையில் நடைபெறும் யுத்தம்முடிவுக்கு வரவேண்டும்டிவுக்குவர வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில்ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகமக்களின் இந்தக் கோஷம் டில்லியின் காதுகளுக்குஇன்னமும் கேட்கவில்லை.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டப் பேரணி,
பொதுக் கூட்டம் என்பன தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக நடைபெற்று வருகின்றன.தமிழகத்தின் உணர்வலைகளை மத்தியஅரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.அதன் காரணமாக இலங்கையில் நடைபெறும்யுத்தம் இன்னமும் வீரியம் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில்இருந்து ஒலிக்கும் குரல்இரண்டுபட்டுள்ளது. தமிழகஅரசின் ஆதரவுடன் ஒருகுரலும் தமிழக அரசுக்குஎதிரான இன்னொரு குரலும் இலங்கைத் தமிழ் மக்களுக்குஆதரவாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீர்மானங்களுக்குகாங்கிரஸ் கட்சிதுணைபோகின்றதே தவிரஅதன் எண்ணம் எல்லாம்
புலிகள் ஒடுக்கப்படவேண்டும் என்பதிலேயே குறியாகஉள்ளது.
புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, பழ. நெடுமாறன் போன்றோர் தமிழகஅரசுடன் ஒத்துழைக்காதுஇலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ்கட்சி என்பன இலங்கைபிரச்சினைக்கு நல்லதொரு
தீர்வு கிடைக்க வேண்டும்என விரும்பும் அதேவேளை புலிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும்கண்ணாக உள்ளனர்.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து யுத்தத்தைநிறுத்துவதற்கு மத்திய அரசுஇன்னமும் தயாராகஇல்லை. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்
சிகளின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளிமக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தமிழகத்தின் சார்பில் பிரதமரைச் சந்திப்பது உறுதியாகியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்,தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம் ஆகியனதமிழகத்தின் சார்பில் பிரதமøரச் சந்திக்கும்குழுவில் இடம்பெறப் போவதில்லை.கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும்
இது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாககுரல் கொடுக்கும் கட்சியினர் தமக்குள் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம்மத்திய அரசிடம் உள்ளது. இதற்காக அழுத்தம்
கொடுக்க வேண்டிய தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கம் நிற்கின்றன.பிரதமர் மன்மோகனைச் சந்தித்த பின்னர்
தமிழக முதல்வர் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதை அறிவதற்கு தமிழ் பேசும்உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
பிரதமரின் பேச்சில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று வழமைபோன்று முதல்வர் அறிக்கை விடுவாரா அல்லது முடிவு
எடுக்க வேண்டிய அழுத்தத்தை பிரதமருக்குகொடுப்பாரா என்பதை அறிவதற்கு டிசம்பர்4ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் எதிர்காலத் தேர்தல்களின் முடிவுகளை இலங்கைப் பிரச்சினைதீர்மானிக்க உள்ளது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் சிங்கள அரசுக்குஆதரவாக இந்திய மத்திய அரசு நடந்து கொள்கிறது என்பதை தமிழகம் அறிந்து கொண்டுள்ளது.
ஆகையினால் சிங்கள அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்ற எண்ணம் தமிழக மக்களிடம்
உள்ளது. ஆகையினால் தமிழக அரசும் மத்தியஅரசும் ஆக்கபூர்வமான ஏதாவது ஒருமுடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்
.இதேவேளை தமிழகத்தின் கூட்டணிகள்மாறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அகில இந்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் ஜெயலலிதாவை கடந்தவாரம் தமிழகத்தில் சந்தித்த பின்னர் புதிய கூட்டணிஉருவாகும் என சூசகமாக அறிவித்துள்ளா
ர். ஜெயலலிதாவுக்கு இது வரை காலமும் போட்டியாளராக கருணாநிதிதான் இருந்தார். விஜயகாந்தின் வரவு ஜெயலலிதாவுக்குபெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு பலமானகூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் வைகோ மட்டும்தான்கூட்டணி சேர்ந்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் மத்திய அரசுக்கு ஆதரவு
வழங்குவதற்கும் இது பலமான கூட்டணிஅல்ல என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும்.அதனால்தான் கம்யூனிஸ்ட் கட்சியுடன்
இணைந்து நாடளாவிய ரீதியின் மூன்றாவதுகூட்டணி அமைக்க விரும்புகிறார் ஜெயலலிதா.திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிர
ஸூம் ஒன்றை ஒன்று விட்டுப்பிரியாது என்பது நிரூபணமாகியுள்து. முதல்வர் கருணாநிதியால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள்கட்சி மீண்டும் இக்கூட்டணியில் சேரும்வாய்ப்பு உள்ளது. முதல்வரும் ராமதாஸும்சந்தித்துப்பேசிய பின்னர் பாட்டாளி மக்கள்கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடு வெட்டிகுரு மீதான குற்றங்களின் தாக்கம் குறைவடைந்துள்ளது.
விஜயகாந்தும் மாக்ஸிஸ்டுகளும் நெருங்கிவருகின்றனர். தமிழகத்தில் மூன்று பெரும் கூட்டணிகள் உருவாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.மத்தியில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்புகாங்கிரஸூக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும்தான் உள்ளது.
ஆகையினால் மூன்றாவது அணியில் போட்டியிட விரும்பும் ஜெயலலிதா கணிசமானவெற்றியை பெற்றால் மத்தியில் ஆட்சிஅமைக்கும் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைஉருவாகும்.இலங்கைப் பிரச்சினையும், புதிய கூட்டணிவியூகங்களும் தமிழக அரசியலை விறுவிறுப்படையவை த்துள்ளன.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 30 11 2008