Monday, November 30, 2009

ஜெயலலிதாவின் முடிவால்உற்சாகமான தொண்டர்கள்


திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதனால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதனால் அனிதா ராதாகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்தார். வந்தவாசி தொகுதியில் இருந்து சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஜெயராமன் மரணமானதால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வந்தவாசி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள்.
தமிழக அரசின் செல்வாக்கு, மின்னணு இயந்திரத்தில் முறைகேடு, பணத்துக்கு வாக்காளர்களை வாங்குவது போன்ற குற்றச்சாட்டுகளினால் கடந்த முறை நடைபெற்ற ஐந்து இடைத்தேர்தல்களைப் புறக்கணித்த ஜெயலலிதா திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதலில் அறிந்து தேர்தலில் முனைப்புக் காட்டி உள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளை நம்பி களமிறங்கிய விஜயகாந்த் எதிர்பார்த்த வாக்குகளைப் பெறவில்லை. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் மும்முனைப் போட்டி நடைபெறவுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழமைபோல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளியான காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பிரசாரம் செய்யவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உட்பூசல்கள் அதிகரித்து வரும் வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக ஆர்வமுடன் பிரசாரம் செய்யும் தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? ஒப்புக்காகப் பிரசாரம் செய்பவர்கள் யார் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பிரசாரப் பணிகளை ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் உள்ள தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கு வெளிக்காட்ட வேண்டிய கட்டாய சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத்தேர்தலுக்கு முகம்
கொடுக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் இடைத்தேர்தலின் பிரதான பிரசாரமாக எதிர்க்கட்சிகளினால் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகவும் கர்நாடக அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் மத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதை பிரதான எதிர்க்கட்சிகள் மக்கள் முன் விளக்கத் தொடங்கிவிட்டன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அமைச்சின் செயற்பாட்டுக்கு எதிராக தான் எடுத்திருக்கும் நடவடிக்கையை மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்த இடைத்தேர்தலில் 20 சதவீத வாக்குகளைப் பெற்ற விஜயகாந்தின் கட்சி அடுத்த மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய நிலை உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாததனால் விஜயகாந்தின் கட்சிக்கு வழமையைவிட கூடுதலான வாக்குகள் கிடைத்தன. இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் விஜயகாந்தின் கட்சிக்கு கிடைப்பது சந்தேகம்.
விஜயகாந்தின் அரசியல் நடவடிக்கையினால் வழமை போன்று வாக்குகள் சிதறுமே தவிர அவரது கட்சி வேட்பாளர் வெற்றி பெறமாட்டார்.
வந்தவாசி தேர்தல் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமானது. வந்தவாசியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பது சிரமமானது. வன்னியர் அதிகமுள்ள தொகுதி வந்தவாசி.
வன்னிய சமூகத்தின் வாக்கு வங்கியைக் குறி வைத்து ஆரம்பிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தனி மரமாக நிற்கிறது. எந்தக் கூட்டணியிலும் இல்லாது தனித்து நிற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வந்தவாசியிலும் செல்வாக்கு உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் குறைந்து கொண்டு போவதை கடந்த கால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சியில் நம்பிக்கை வைத்துள்ளவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் முயற்சி செய்கின்றன.
திருச்செந்தூர் தொகுதியின் மீது தமிழகத்தின் பார்வை விழுந்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல்வாக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியுமே கடந்த தடவை திருச்செந்தூர் தொகுதியின் வெற்றியைத் தீர்மானித்தன.
இம்முறை அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியா, திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெறப் போகிறது என்பதை அறிவதற்கு தமிழகம் ஆவலுடன் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூரில் களமிறக்கியுள்ளது. அம்மன்டி, நாராயணன் என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருச்செந்தூரில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு துணையாக நின்றவர் அம்மன்டி நாராயணன். தூத்துக்குடி மாவட்டத்தில் அனிதா ராதா கிருஷ்ணன் அரசியலுக்கு அறிமுகமாகியபோது அவருக்கு பலத்த எதிர்ப்பு வந்தது.
அந்த எதிர்ப்புகளை சமாளித்து அனிதா
ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்ததில் அம்மன்டி நாராயணனுக்கும் பங்கு உள்ளது. அம்மன்டி நாராயணனை வேட்பாளராக அறிவித்து அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கை உடைத்துள்ளார் ஜெயலலிதா.
திருசெந்தூர்த் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். 2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரனைத் தோற்கடித்தார்.
2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக ஏ.டி.கே. ஜெயசீலன் போட்டியிட்டு 13,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதுவரை 12 பொதுத் தேர்தலையும் ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்த திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதி இப்போது இரண்டாவது இடைத்தேர்தலுக்குத் தயாராகி விட்டது.
13 தேர்தல்களைச் சந்தித்த திருச்செந்தூர் தொகுதியில் ஏழு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகமும் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையே திருச்செந்தூரில் ஓங்கி உள்ளது. கட்சியின் செல்வாக்கா, வேட்பாளரின் செல்வாக்கா திருச்செந்தூர் தொகுதியில் வெற்றியைத் தேடித் தரும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 29/11/09

Monday, November 23, 2009

தி.மு.க.வை ஒதுக்குகிறது காங்கிரஸ்கூட்டணியை விரும்புகிறது தி.மு.க.


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. பல விடயங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை பெற்றே நிறைவேற்றி வந்த காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தெரியாமலே பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர்திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒதுக்கத் தொடங்கியது காங்கிரஸ் கட்சி. மத்திய அமைச்சரவையில் அமைச்சுக்களை ஒதுக்குவதில் ஆரம்பித்த பிரச்சினை முல்லைப் பெரியாறு அணை விவகாரம் வரை விஸ்வரூபமாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டமடைந்த போது தமிழக முதல்வர் கருணாநிதியுடனான ஆலோசனையின் பின்னரே சகல முடிவுகளும் எடுக்கப்பட்டன. பயங்கரவாதம் பூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது என்று இலங்கை அரசு அறிவித்த பின்னர் தமிழக முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் இன்றி பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன.
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்துக்கு விஜயம் செய்யும்போது முதல்வர் கருணாநிதியைச் சந்திப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர். ராகுல் காந்தியின் தமிழக விஜயத்தின் பின்னர் இந் நடைமுறை மாற்றம் பெற்றது. தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்த ராகுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. தொலைபேசியில்கூட அவருடன் உரையாடவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆஷாத் சென்னைக்குச் சென்றபோது முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான உறவு பலமாக இருக்கிறது, கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று பேட்டியளித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யும்போது முதல்வர் கருணாநிதியை சந்திப்பது சம்பிரதாய முறையாக இருந்து வந்தது.
இந்திய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தார். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வரும்போது அல்லது இலங்கையில் இருந்து டில்லிக்குச் செல்லும்போது தமிழக முதல்வரைச் சந்திப்பது சம்பிரதாயமாக இருந்து வந்தது. இந்தச் சம்பிரதாய வழமையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் காங்கிரஸ் மேலிடம் ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் இதனைப் புரிந்து கொண்டுள்ளது. ஆனால், கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பீடம் அடிக்கடி உரத்துக் கூறி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் போக்கைப் புரிந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் தமிழக காங்கிரஸ் பிரமுகரான இளங்கோவன், தனது வெறுப்பைத் தீவிரமாக்கி உள்ளார்.
திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணைந்த வைபவம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு உரையாற்றிவர்களில் அதிகமானோர் திராவிட முன்னேற்றக் கழகத்தை எச்சரிக்கும் தொனியிலேயே தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
திருநாவுக்கரசருக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு உள்ளது. எம்.ஜி. ஆரின் விசுவாசிகளும் திருநாவுக்கரசரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இன்னமும் அவர் மீது மதிப்பு வைத்துள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியில் இருக்கும்போது தமிழகத்தில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
ஆனால், அவரின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியின் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிபீடம் ஏற முடியாது என்பது வெளிப்படையானது.
மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி அமைச்சுப் பதவி வழங்கி உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி குரலெழுப்பி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் குரலை சோனியா காந்தியின் துணையுடன் தமிழக முதல்வர் கருணாநிதி அடக்கி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும்போது காங்கிரஸ் தலைமைப் பீடம் தலையிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை சாந்தப்படுத்துவது வழமையானது. தமிழக காங்கிரஸ் தலைவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விமர்சிக்கும் போது தலைமைப் பீடம் எதுவும் சொல்வதில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அவமானங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி தொடர்கிறது என்று அவ்வப்போது அறிக்கை விடுத்து வருகிறது.
தமிழக அரசாங்கத்தில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்கத் துடிக்கின்றனர். விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்வராகவும் தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் இருக்கலாம் என்று காங்கிரஸ் விரும்புகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்வரை விஜயகாந்த் காங்கிரஸுடன் சேர மாட்டார்.
ஆகையினால், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒதுக்கும் கைங்கரியத்தை காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். என்னதான் பிரச்சினை ஏற்பட்டாலும் கூட்டணியில் இருந்து இப்போதைக்கு வெளியேறும் எண்ணம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. இதே போன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை உடனடியாக கைவிட காங்கிரஸ் கட்சியும் தயாராக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரித்ததனால் விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்ற கருத்து உள்ளது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே பகிஷ்கரித்த இடைத் தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகளை விஜயகாந்தின் கட்சி பெறவில்லை. இந் நிலையில் விஜயகாந்துடன் இணைந்தாலும் ஆட்சியைப் பிடிப்பது காங்கிரஸுக்கு சிரமமானதே.
காங்கிரஸுடனான கூட்டணியை திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டால் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தமது பூரண ஆதரவை வழங்குவர்.
இதேபோன்று ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ராமதாஸும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகக் கூடும். இதுவரை செய்த சாதனைகளை முன்வைத்து புதிய வியூகத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கும்.
வெளியிலே பூகம்பங்கள் ஏற்படும் வேளை இரண்டு கட்சித் தலைவர்களும் எதுவும் நடக்காதது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சி காட்டிய ஆதரவினால் கூட்டணிக் கட்சிகளைத் தூக்கி எறிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி ஓரங்கட்டத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான பனிப் போர் வெளிச்சத்துக்கு வரும் நாளை எதிர்க் கட்சிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 22/11/09

Wednesday, November 18, 2009

திருநாவுக்கரசரின் வெளியேற்றத்தால்பலமிழந்தது தமிழக பா.ஜ.க.


தமிழக அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை களைவதற்கான நடவடிக்கையை முதல்வர் கருணாநிதி ஆரம்பித்துள்ளார். சொத்துச் சேர்ப்பதுதான் அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம் என்ற பரவலான கருத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் தமது பெயரிலும் தமக்கு வேண்டியவர்களின் பெயரிலும் அதிகளவான சொத்துக்களைச் சேர்த்துள்ளார்கள் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அமைச்சர் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி பெறுமதியான சொத்துக்களை குறைந்த விலைக்கு சில அமைச்சர்கள் சுருட்டியுள்ளனர். தற்போது அவர்களின் பக்கம் தமிழக முதல்வரின் பார்வை திரும்பியுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதாவின் மீது திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்தது. ஆனால், திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் சிலர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் பெறுமதிமிக்க காணிகளை வாங்கியுள்ளனர்.
செல்வாக்கும், பதவியும் அவர்களின் செயலைத் தடுக்கவில்லை. பொது மக்கள் மத்தியில் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த விசயங்கள் தமிழக உளவுத்துறையின் மூலம் முதல்வரின் கவனத்துக்குச் சென்றதும் முதல்வர் கருணாநிதி எடுத்த அதிரடி முடிவினால் தவறான வழியில் சொத்துச் சேர்த்த அமைச்சர்கள் அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மிக முக்கிய அமைச்சர் ஒருவரை அழைத்த முதல்வர் கருணாநிதி குறைந்த விலையில் வாங்கிய இடத்தை உரியவரிடம் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவுக்கிணங்க அவர் ஒப்படைத்ததை கேள்விப்பட்டவர்கள் அதேபோன்று தாம் வாங்கிய இடங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் இந்த அதிரடி நடவடிக்கை அவர் மீது நல்ல பெயரை உருவாக்கி உள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எதுவும் செய்ய முடியாது என்ற மன நிலை மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
ஒரு ரூபாவுக்கு ஒருபடி அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச காஸ் இணைப்பு ஆகிய திட்டங்கள் போன்று கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பலர் உயிர் பிழைத்துள்ளனர். பலரின் நோய் தீர்க்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ வசதிகளைப் பெற முடியாதவர்கள் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதை அறிந்த ஜெயலலிதா அதேபோன்ற ஒரு திட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மூலம் நடைமுறைப்படுத்த விரும்புவதாக செய்தி ஒன்று கசிந்துள்ளது. மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு இது போன்ற செயற்பாடுகள் தேவை என்பதை ஜெயலலிதா உணர்ந்துள்ளார் போல் தெரிகிறது.
ஹெலி விபத்தில் பலியான ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு புகழையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது இது போன்ற ஒரு காப்பீட்டுத் திட்டம் தான். அவர் இறந்ததும் அதிர்ச்சியில் பலர் இறந்தனர். கவலையில் பலர் தற்கொலை செய்தனர். அதே நடைமுறையைத்தான் தமிழக முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தி யுள்ளார்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் தனது அரசியல் வாரிசான ஸ்டாலினுக்குப் போய் சேரும் என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது. ஸ்டாலினின் அரசியலை ஸ்திரப்படுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகனை ஓரம் கட்டியதைப்போல் அமைச்சர் ஆற்காடு வீராசாமியையும் கட்சி மேலிடம் ஓரம் கட்டத் தொடங்கி உள்ளது. மின்துறையில் ஏற்பட்ட நெருக்கடியில் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அடிக்கடி ஏற்பட்ட மின் தடையினால் அரசுக்கு பலத்த நஷ்டம். இதனை ஒழுங்குபடுத்தத் தவறியதாக ஆற்காட்டார் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதல்வர் கருணாநிதியின் கீழ் பணியாற்றியவர்கள் ஸ்டாலினின் கீழ் பணியாற்றும்போது சில சிக்கல்கள் ஏற்படலாம். அதனைத் தடுப்பதற்கும் ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களுக்கு சில பதவிகளை வழங்கவும் வேண்டிய சூழ்நிலை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எம்.ஜி. ஆருடன் இணைந்து தமிழக அரசியலில் ஒரு காலத்தில் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட திருநாவுக்கரசர் ஜெயலலிதாவின் எழுச்சியினால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அரசியலில் செல்வாக்குள்ள திருநாவுக்கரசர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்தார்.
அரசியலில் அனுபவமும் திறமையும் உள்ள திருநாவுக்கரசருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் தேசியச் செயலர் பதவியும் கொடுத்து பாரதீய ஜனதாக் கட்சி அழகுபார்த்தது. அத்வானி, வாஜ்பாய் ஆகியவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் அத்வானியின் கை ஓங்கியதால் வாஜ்பாயின் ஆதரவாளரான திருநாவுக்கரசர் ஓரம் கட்டப்பட்டார். கட்சியிலுள்ள தனது செல்வாக்கு குறைவதை அறிந்த திருநாவுக்கரசர் கட்சியுடனான தொடர்புகளை குறைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் மிக மோசமான நிலையில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியை வளர்ப்பதற்கு தலைவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநாவுக்கரசரின் வெளியேற்றத்தால் தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சியின் நிலை பரிதாபமாக உள்ளது.
சிதம்பரம், வாசன், தங்கபாலு, இளங்கோவன் போன்ற தலைவர்களின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உள்ளது. புதிதாக களம் புகுந்த திருநாவுக்கரசரை ஆதரிக்கவும் அங்கு சிலர் தயாராக உள்ளனர். திருநாவுக்கரசரின் வருகையால் தமிழக காங்கிரஸின் செல்வாக்கு உயர்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. திருநாவுக்கரசர் அரசியலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/11/09

நாயும்பூனையும்

எனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்பிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.
ஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.
"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா."
என்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா<சிங்களம்> என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.
எனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்" தெஹிவளை தெக்காய்" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். "அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.
சாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள‌ நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.
இவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.நண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.
நான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்.

Sunday, November 8, 2009

அசுரபலத்துடனான தமிழக அரசும்பலமிழந்துள்ள எதிர்க்கட்சிகளும்


தமிழக எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளதால் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எதுவித இடைஞ்சலும் இன்றி ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக உள்ளன. ஏனைய கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளாகவே உள்ளன. அவை பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயற்படாமையினால் தமிழக அரசு சிறப்பாகச் செயற்படுவதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா ஆறு மாத அஞ்ஞாதவாசத்தின் பின்னர் கடந்த வாரம்தான் சென்னைக்குத் திரும்பினார். ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. கொடநாட்டில் ஓய்வெடுத்த ஜெயலலிதா தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை. இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சில செயற்பாடுகளை கொடநாட்டில் இருந்து நிறைவேற்றினார் ஜெயலலிதா. கொடநாட்டில் இருந்து விடுத்த உத்தரவுக்கிணங்க கட்சியில் இருந்து சிலர் வெளியேற்றப்பட்டார்கள். ஒரு சில நிர்வாகிகள் தூக்கியெறியப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் ஏற்பட்ட புகைச்சலை சரியான முறையில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தவறிவிட்டது. முல்லைபெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு இந்திய மத்திய அரசின் துணை அமைச்சர் அனுமதி அளித்ததை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்கொடி தூக்க அழைப்பு விடுத்தது.
தமிழக அரசுக்கு ஆதரவு வழங்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் அவ்வப்போது தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதும் பின்னர் அடங்கிப் போவதும் வழமையான நடவடிக்கைகளில் ஒன்று. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள், தற்போது காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதையே தனது பிரதான கொள்கையாகக் கருதுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஒரே கூட்டணியில் இருந்தாலும் மூன்று கோணங்களில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளின் பலவீனங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதா தவறிவிட்டார். ஜெயலலிதாவின் பலவீனத்தினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமான கட்சியாக உள்ளது.
அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடும் எனக் கருதப்படும் பாரதிய ஜனதாக் கட்சி தமிழகத்தில் தனி மரமாக உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர தமிழக அரசியல் கட்சிகள் எவையும் தயாராக இல்லை.
பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அக்கட்சியை விட்டு ஒதுங்கி உள்ளார். தனித்து நின்று தமிழக அரசை எதிர்க்கும் துணிவு பாரதீய ஜனதாக் கட்சிக்கு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றீடாக அரசியல் நாடகத்தில் நடிக்க களமிறங்கிய விஜயகாந்த் ஜெயலலிதாவையும் முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து அறிக்கை விடுவதுடன் தன் கடமை முடிந்தது என்ற திருப்திப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் விஜயகாந்த் நிலைமையை சரிவரப் பயன்படுத்தாமல் காட்டமான அறிக்கை வெளியிடுவதிலேயே கவனமாக உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்தபோது, பொறுப்பான எதிர்க்கட்சி போன்று செயற்பட்ட டாக்டர் ராமதாஸ் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறுகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை பரம எதிரியாக கருதும் வைகோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி தமிழக அரசைச் சாடுகிறாரே தவிர, தமிழக அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிவதற்குரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் இரண்டு எதிர்க்கட்சி வரிசையில் உள்ளன. அவையும் தமக்குரிய பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தாமையினால் தமிழக அரசு எதுவித இடைஞ்சலும் இன்றி தனது பணியைத் தொடர்கிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதையும் எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டிய தமிழக எதிர்க்கட்சிகள் பத்திரிகை அறிக்கையுடன் தமது பணியை முடித்துக் கொண்டன. தமிழக அரசை எதிர்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்து தவறவிட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். இதுவரை காலமும் அதிக அக்கறை காட்டாத அகதிகள் மீது தமிழக அரசு தற்போது கருணை காட்டத் தொடங்கி உள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கி இருக்கும் முகாம்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளின் அபிமானத்தைப் பெறுவதற்கு தமிழக அரசு திட்டம் தீட்டி உள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் இந்த விசயத்திலும் முழு அளவிலான அக்கறையைக் காட்டவில்லை. எதிர்க்கட்சிகளின் பலவீனங்களை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளம்ர் தமிழக முதல்வர் கருணாநிதி.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 08/11/09

Wednesday, November 4, 2009

அப்ரிடி அக்மல் அதிரடியால் வென்றது பாகிஸ்தான்



நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே அபுதாபியில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் அப்ரிடி, கம்ரல் அக்மல் ஆகியோரின் அதிரடியினால் பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சல்மான் பட் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். அணித் தலைவர் யூனுஸ் கானும் ஓட்டமெதுவும்
எடுக்காது ஆட்டமிழந்தார்.
சல்மான் பட், யூனுஸ்கான் ஆகிய இருவரும் ஷேன் பொண்டின் பந்தை மெக்கலமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர். ஓட்டமெதுவும் எடுக்காது பாகிஸ்தான் அணியின் இரண்டு விக்
ய்கட்டுகள் விழுந்ததனால் பாகிஸ்தான் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மொஹமட் யூசுப் 30 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். உமர் அக்மல் ஓன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் முக்கியமான 4 வீரர்களும் 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
ஐந்தாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய அப்ரிடி, கம்ரன் அக்மல் ஜோடி 101 ஓட்டங்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டது.
56 பந்துகளுக்கு முகம் கொடுத்த அப்ரிடி மூன்று
சிக்சர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஓரமின் பந்தை பட்லரிடம் பிடிகொடுத்து அப்ரிடி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அப்துல் ரஸாக் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் மளமளவென வீழ்ந்தாலும் கம்ரன் அக்மல் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்கள் எடுத்தது பாகிஸ்தான். 43 பந்துகளுக் முகம் கொடுத்த கம்ரன் அக்மல் ஆட்டமிழக்காது நான்கு சிக்சர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷேன் பொண்டிங், வெட்டடோரி ஆகியோர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சோத்தி பட்லர், ஓராம் ஆகியோர் தலா ஒரு விக்ய்கட்டையும் வீழ்த்தினர்.
288 என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 39.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
மக்கலம் 21, ரெட்மன்ட் 52, வெட்டோரி 38 ஓட்டங்கள் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
சயீட் அஜ்மல், அப்ரிடி, உமர் குல், அப்துல் ரஸாக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மொஹமட் அமீர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக அப்ரிடி தேர்வு செய்யப்பட்டார்.

Tuesday, November 3, 2009

24 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஒவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்கள் எடுத்தது.
வட்சன், மார்ஸ் ஜோடி களமிறங்கியது 23 பந்துகளுக்கு முகம் கொடுத்த மார்ஸ் ஐந்து ஓட்டங்கள் எடுத்த நிலையில் நெஹ்ராவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி வீரர்களின் பந்தைப் பதம் பார்த்து ஆறு பௌண்டரிகள் உட்பட 49 ஓட்டங்கள் எடுத்த வட்சன் ஹர்பஜனின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பொண்டிங், வைட் ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது பொண்டிங் ஒரு நாள் போட்டியில் 73 ஆவது அல்ரச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் வைட் ஒரு நாள் அரங்கில் தனது நான்காவது அரைச் சதத்தைத் பூர்த்தி செய்தார்.
52 ஓட்டங்கள் எடுத்த பொண்டிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பொண்டிங் வெளியேறியதும் களமிறங்கிய ஹஸி தனது அதிரடி மூலம் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் விடுத்தார்.
41 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹஸி ஒரு சிக்சர், இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை இஷாந்த் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தர்.
ஹென்றிக்ஸ் ஆறு ஓட்டங்களுடனும் ஜோன்சன் எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 62 ஓட்டங்கள் எடுத்த ஹஸி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா 49. 2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 256 ஒட்டங்கள் எடுத்தது.
நெஹ்ரா மூன்று விக்கட்டுகளையும் ஹர்பஜன் இரண்டு விக்கட்டுகளையும் யுவராஜ் சிங் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
251 ஒட்டங்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணி 46. 4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
ஷேவாக் தனது வழமையான அதிரடியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார்.
சச்சின் மிக நிதானமாகத் துடுப்பெடுத்தாடினார். 19 பந்துகளில் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 30 ஒட்டங்கள் எடுத்த ஷேவாக் ஹரிட்ஸின் பந்தில் எல்.பி.
டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
கோஹ்லி 10 ஓட்டங்களில் வெளியேறினார். 17 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர் சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை யில் நடுவர் அசோக டி சில்வாவின் தவறான முடிவில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
யுவராஜ்சிங் 12, டோனி 26, ரைனா 17, ஜடேஜா 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஹர்பஜன் தன் பங்குக்கு அவுஸ்திரேலிய வீரர்களை மிரட்டினார். 25 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹர்பஜன் ஒரு சிக்சர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார். பிரவீன் குமார் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 46. 4 ஒவர்களில் சகல விக்கட்களையும் இழந்த இந்திய அணி 226 ஓட்டங்கள் எடுத்தது.
பொலிங்கர், வட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் ஹரிட்ஸ் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக வட்சன் தெரிவு செய்யப்பட்டார். ஏழு போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றன.

Monday, November 2, 2009

அடக்க முயல்கிறது காங்கிரஸ்அடங்க மறுக்கிறது தி.மு.க



திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு பலமாக இருப்பதாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் வெளியே காட்டிக் கொண்டாலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான சிறு சிறு உரசல்கள் அவ்வப்போது பூதாகரமாக வெளியே தெரிகின்றன.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நொந்து போய் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் மத்திய தொலைத் தொடர்பு அலுவலகத்தின் மீது சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனை அமைந்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அமைச்சு அலுவலகத்தில் சி.பி.ஐ. நுழைந்திருக்க முடியாது என்ற கருத்து உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடுவதற்கு தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தினுள் சி.பி.ஐ. நடத்திய அதிரடிச் சோதனை முன்னோட்டமாக அமைந்துள்ளது.
யுனிடெக், ஸ்பெக்ரம் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ரம் அலைவரிசை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக உருவான சர்ச்சை இன்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சின் அலுவலகத்தினுள் சி.பி.ஐ புகுந்து சோதனை நடத்தும் நிலைக்கு வளர்ந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான அமைச்சு ஒதுக்கப்பட்டபோதே காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான புகைச்சல் ஆரம்பமானது.
ஸ்பெக்ரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு வாங்கிய நிறுவனங்கள் அதனை கூடிய விலைக்கு விற்பனை செய்துள்ளன. இதனால் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தொலைத் தொடர்பு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பங்குகளை வாங்கும் நிறுவனங்கள் அதனை விற்பனை செய்யும்போது நிதி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும். ஸ்பெக்ரம் அலைவரிசையை வாங்கிய நிறுவனங்கள் நிதி அமைச்சின் அனுமதியைக் கேட்டு மத்திய அமைச்சின் அனுமதியுடன் தான் விற்பனை செய்தது. ஆகையினால் மத்திய அரசும் தவறு செய்துவிட்டது என்ற கருத்தும் உள்ளது.
ஸ்பெக்ரம் அலைவரிசை ஒதுக்கீடு எல்லாம் பிரதமரின் ஒப்புதலுடன்தான் நடைபெற்றது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை எல்லாம் முறைப்படி பிரதமரின் ஒப்புதலுடன் தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார் அமைச்சர் ராசா.
எதிர்க்கட்சி அலுவலகங்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வீடுகளிலும் திடீரெனப் புகுந்து சோதனை செய்யும் சி.பி.ஐ. ஆளும் கட்சி அமைச்சின் அலுவகத்தினுள் புகுந்தமை கூட்டணிக்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2001 ஆம் ஆண்டைப் போலவே 2007 ஆம் ஆண்டில் முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமை வழங்கப்பட்டது என்று முடிவு செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. இந்த முறை தவறானது இதில் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அப்போதே எதிர்க்கட்சிகள் கூறின.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தினுள் புகுந்த சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ரம் தொடர்பான பல ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். சோதனை பற்றிய அறிக்கை எதனையும் சி.பி.ஐ. இதுவரை வெளியிடவில்லை. சி.பி. ஐ.யின் அறிக்கையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் ஆராயும்.
மாயாவதி, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்த போது அவர்களை அடக்குவதற்கு சி.பி.ஐ. யை ஆயுதமாகப் பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சி. அதேபோன்று ஒரு நிலையே இப்போதும் ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அடங்குமா காங்கிரஸ் கட்சி அடக்குமா என்பது சி.பி. ஐ. யின் அறிக்கையின் பின்னர் தெரியவரும்.
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அனுமதி வழங்கிய மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷள்க்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்த திட்டமிட்டிருந்த எதிர்ப்புக் கூட்டம் முல்லைப் பெரியாறு எதிர்ப்புக் கூட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த அறிவிப்பினால் மத்திய அரசு தமிழக அரசின் நடவடிக்கையை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியது.
தமிழக அரசும், மத்திய அரசும் முட்டி மோதுவதைப் பார்க்க எதிர்க்கட்சிகள் ஆவலாக இருந்த வேளையில் மதுரையில் நடைபெற இருந்த முல்லைப் பெரியாறு எதிர்ப்புக் கூட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ரத்துச் செய்தது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்ததனால் எதிர்ப்புக் கூட்டத்தை தமிழக அரசு கைவிட்டது.
வட மாநிலங்களில் தனது எதிர்க்கட்சிகளை வீழ்த்தி தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையில் ஏற்பட இருந்த பூகம்பம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த நகர்வைப் பார்த்து காய் நகர்த்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 01/001/09

நாயும்பூனையும்

எனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்.
பிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.
ஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.
"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா."
என்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா<சிங்களம்> என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.
எனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்" தெஹிவளை தெக்காய்" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். "அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.
சாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள‌ நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.
இவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.
நண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.
நான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்

சூரன்போர்

ஊரைவிட்டு வெளியேறியபின்னர் அந்நியமானவைகளில் சூரன்போரும் அடக்கம்.சூரன்போர் என்றபெயரில் சூரனை முன்னும் பின்னும் கொண்டோடுகிறார்கள்.செல்வச்சந்னதி,பொலிகண்டி கந்தவனம்,நெல்லியடிமுருகமூர்த்தி போன்றவற்றில் நடைபெறும் சூரன்போர் உணர்ச்சிவசமாக இருக்கும்.சூரனைக்கொண்டோடுவது,உயர்த்துவது,பதிப்பது,ஒற்றைக்கையில் தூக்கி லாவகமாக ஆட்டுவதைப்பார்க்கும்போது உண்மையான யுத்தம்போல் இருக்கும்.சூரனின் பககத்தில் இருந்து ஒலிக்கும் பறைமேளம் ஆடுபவர்களுக்கு உற்சாகத்தைக்கொடுக்கும்.

கொழும்பில் நடைபெறும் சூரன்போர் வித்தியாசமானதாக உள்ளது.பெருந்திரளான மக்கள்மத்தியில் சூரன்போர் நடைபெற்றது.பக்தியுடன் வந்தவர்கள்கொஞ்சப்பேர். முசுப்பாத்திபாக்கவந்தவர்கள் அதிகமானோர்.சூரனின் சகோதரர்களின் தலையை முருகன் வெட்டும்போது அரோகரா,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்றகோசம் வானைப்பிளக்கும்.கொழும்பில் நடந்தசூரன்போரின்போது யாரோஒரு லூசுப்பயல் கைதட்டினான் எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

கடைசிக்கட்டத்தில் சூரன் மாமரமாக வருவார்.சூரனை ஆட்டுபவர் மாங்காயையும் மாவிலையையும் பக்தர்களூக்கு எறிவார் பக்தர்கள் அதை பூஜை அறையில் வைப்பார்கள்.கொழும்பில் நடந்த சூரன்போரின் வானரக்கூட்டம் ஒன்று மாங்காயை பறித்து சுவைத்தது. சிலபக்தர்கள் வானரத்திடம் மாங்காய் கேட்டு கெஞ்சினார்கள்.

கொழும்புக்கு வந்தபுதிதில் எனதுமகளை சூரன்போருக்கு கூட்டிச்சென்றோம்.அப்போது மகளூக்கு நான்குவயது. சூரன்போர்பற்றிய கதை தெரிந்தபடியால் சூரன்போரை ஆர்வமாகப் பார்த்தார். முருகன் அசையவிலலை.சூரன் ஓடித்திரிந்தது மகளூக்கு சந்தோசமாக இருந்தது. உணர்ச்சிவசப்பட்ட மகள் கமோன் சூரன் என்றார்.
நன்றி
http://eelamlife.blogspot.com/2009/10/blog-post_24.html