Friday, April 26, 2013

வடக்கேபோகும் மெயில் வெளியீட்டுவிழாவில்

இரா.யோகராஜன்{நிகழ்ச்சியைத்தொகுத்து வழிநடத்தினார்.}
.ஆர்.வி.லோஷன்{ரவிவர்மாவின் விளையாட்டுக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
கே.எஸ்.சிவகுமாரன்.{ரவிவர்மாவின் சினிமாக்கட்டுரைகள் பற்றிய சிறப்பு விமர்சனம்}
பேராசிரியர்.மா.கருணாநிதி{நூல் அறிமுக உரை}
மேமன் கவி{ ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரை}
மூத்த ஊடகவியலாளர் வீ.தேவராஜ்{தலைமை உரை}
 
வதிரி.சி.ரவீந்திரன்.[வரவேற்புரை
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடியஆசிரியை  திருமதி.திலகா மகேஸ்வரன்
Add captionசூரன்.ஏ.ரவிவர்மாவின் வடக்கேபோகும் மெயில் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும்  ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரையும் கடந்த 20 ஆம் திகதி கொழும்புதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.   
வடக்கேபோகும் மெயில் வெளியீட்டுவிழாவில்ராஜ ஸ்ரீ காந்தனின்  படத்துக்கு சட்டத்தரணி செ. பேரின்பநாயகம் மல‌ர்மாலை சூட்டுகிறார்.

Thursday, April 25, 2013

பரம்பரையாகத்தொடரும் எழுத்தூழியம்


இலக்கிய உலகில் பிரவேசித்த காலத்திலேயே எனக்கு இலங்கையில் வடமராட்சிப்பிரதேசத்துடன் நெருக்கமான உறவும் பாசமும் ஆரம்பமாகிவிட்டது. இன்று வரையில் நீடிக்கும் இந்தச்சொந்தம்எப்பொழுதும் முற்றுப்பெறாத தொடர்கதையாகத்தான் வளரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குண்டு.
இந்த உறவு நீடிப்பதற்கு நான் மட்டுமல்ல என்னை நேசிக்கும் அந்தப்பிரதேச கலைஇ இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும்தான் காரணம். இந்த உறவு சங்கிலித்தொடர் போன்றது.
என்னுடன் சகோதரவாஞ்சையுடன் உறவாடும் தெணியான் எனக்கு அறிமுகப்படுத்தியவர்தான் ராஜஸ்ரீகாந்தன். அவரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இந்த கதைக்கோவையின் படைப்பாளி ரவிவர்மா. புலம்பெயர்ந்து வந்தபின்பும் எனக்கு வடமராட்சியுடனான உறவு ஆரோக்கியமாகவே தொடருவதற்கு இலக்கியமும் இதழியலும் முக்கியமான காரணிகள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைக்கு வந்தபொழுது வடமராட்சிக்கும் பயணித்தேன். அப்பொழுது எனக்கு இரண்டு தகவல்கள் கிடைத்தன. ஒன்று சகோதரர் தெணியானின் பிறந்த நாள்விழாவும் அவரது நூல்களின் வெளியீட்டு நிகழ்வும். மற்றது ரவிவர்மாவின் முதலாவது சிறுகதைத்தொகுப்பு.
கடந்த ஜனவரி 6 ஆம் திகதி அல்வாயில் ஜீவநதி இதழின் ஏற்பாட்டில் தெணியான் விழாவுக்கு தலைமைதாங்கிவிட்டு கொழும்பு திரும்பியதும் ரவிவர்மா வீட்டிற்கு விருந்துக்கு வந்தேன். அவரது குடும்பமும் எனது இனிய நண்பர் மறைந்த ராஜஸ்ரீகாந்தனின் குடும்பமும் அந்த விட்டில் என்னை உபசரித்து மகிழ்ந்தார்கள். எனக்கு அன்றைய தினம் மனநிறைவான நாள். பாசாங்குத்தனமற்ற உபசரிப்புகளை மறக்கவே முடியாது.
ரவிவர்மா தனது சிறுகதைத்தொகுதி பற்றி குறிப்பிட்டார். அதற்கு வாழ்த்துரை வேண்டும் எனவும் சொன்னார். அவர் ஒரு ஊடகவியலாளர் என்ற முகம் மாத்திரமே அதுவரையில் தெரியும். அவரும் சிறுகதை எழுதுகிறார் என்று சொன்னதும்இ  “இலக்கிய உலகில் படைப்பாளிகளாக இயங்குபவர்கள் பத்திரிகையாளர்களாகவும் நடமாடுவது அபூர்வம்எனச்சொன்னேன்.
ரவிவர்மா இலக்கியபிரதி ஆக்குநராக தனது எழுத்துலகப்பிரவேசத்தை ஆரம்பித்து ஊடகவியலாளரானாரா? அல்லது ஊடகவியலாளராக எழுதத்தொடங்கி படைப்பாளியானரா? என்ற ரிஷிமூலம் எனக்குத்தெரியாது.
ஆனால் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியால் பாராட்டப்பட்ட வடமராட்சி தேவரையாளி சமூகத்தின் குலதெய்வம் சூரனின் முதல் பேரன் என்ற ரிஷிமூலம் எனக்குத்தெரியும். ராஜஸ்ரீகாந்தன் 2004 இல் பதிப்பித்து வெளியிட்ட சூரன் சுயசரிதை நூலின் மூல எழுத்துப்பிரதி ரவிவர்மாவிடமே இருந்திருக்கிறது என்ற தகவலை ராஜஸ்ரீகாந்தன் வாயிலாக தெரிந்துகொள்கின்றோம்.
வடமராட்சியில் அடிநிலைமக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து போராடிய சூரனின் வாரிசு ரவிவர்மா என்பதனால் அந்த ஒளிவட்டத்தில் தன்னை பிரகாசித்துக்கொள்ள அவர் முயலவில்லை. இயல்பிலேயே இலக்கியநாட்டமும் பெற்றவர்களின் கவியாற்றலின் வழிகாட்டலும் ரவிவர்மாவை செதுக்கி செப்பனிட வைத்திருக்கின்றன.
ரவிவர்மாவின் மூத்த சந்ததி கவிபுனைவதில் ஆற்றல் மிக்கது. அவர்கள் கவிஞர்களாக மிளிர்ந்தார்கள். ரவிவர்மா சிறுகதைப்படைப்பாளியாகவும் ஊடகவியலாளராகவும் இரண்டு தளங்களில் பயணிக்கின்றார்.
ரவிவர்மா அமைதியான அதிர்ந்து பெசத்தெரியாத தன்னடக்கம் மிக்கவர். எனது நெஞ்சத்தக்கு அவர் நெருக்கமானதற்கும் அவரது இந்த இயல்புகள்தான் காரணமாக இருக்கவேண்டும். அத்தகைய ஒருவர் இலக்கியவாதியாக சிறுகதை படைப்பதும் ஊடகவியலாளராக செய்திகளை செப்பனிடுவதும் எனக்கு மிகுந்த மனநிறைவைத்தருகின்றன. உள்ளார்ந்த இலக்கிய ஆற்றல்மிக்கவர்களினால் செய்தி ஊடகத்தையும்  சிறப்பிக்கமுடியும். ரவிவர்மாவின் பின்புலம் மனிதஉரிமைக்காக போராடிய முற்போக்கு சக்திகளின் பாரம்பரியத்தில் உருவானது.
ரவிவர்மா தனது எழுத்தூழியத்தில் மென்மேலும் பணிகளைத்தொடர வாழ்த்துகின்றேன்.

முருகபூபதி
அவுஸ்திரேலியா

வடக்கே பொகும் மெயில் சிறுகதைத்தொகுப்புக்கு திரு.முருகபூபதி வழங்கிய வாழ்த்துரை

Wednesday, April 24, 2013

வடக்கேபோகும் மெயில் மங்கள விளக்கேற்றிய பிரமுகர்கள்

திரு.வீ.தனபாலசிங்கம்
தினக்குரல் பிரதம பொறுப்பாசிரியர்.
திருமதி.அன்னலட்சுமி ராஜதுரை
கலைக்கேசரி ஆசிரியை
கலாபூஷணம் செல்லத்தம்பி மாணிக்கவாசகர்.
கவிஞர்.திருமதி.மியூரியல் ஜெயானந்தசா மி
திரு.வீ.தேவராஜ்
மூத்தஊடகவியலாளர்
புரவலர் ஹாசிம் உமர்
சூரன்.ஏ.ரவிவர்மாவின் வடக்கேபோகும் மெயில் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும்  ராஜ ஸ்ரீ காந்தன் நினைவுரையும் கடந்த 20 ஆம் திகதி கொழும்புதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.  
திரு.தி.ஞானசேகரன்
ஞானம் ஆசிரியர்.

Tuesday, April 23, 2013

வடக்கே போகும் மெயில் – முன்னுரை – க. நவம்


சூரன் ரவிவர்மாவின்
வடக்கே போகும் மெயில்

நவீன விஞ்ஞானஇ தொழில் நுட்பங்களின் கடுகதி வளர்ச்சியானதுஇ இன்றைய வாசகர்கள் மத்தியில் பல்வேறு அனுகூலங்களைக் கொண்ட மின்-வாசிப்பான்கள் (-சநயனநசள) இணையப் பலகைகள் (வயடிடநவள) போன்ற மின்-நூல்களை அறிமுகம் செய்து வைத்துள்ளபோதிலும்இ இப்புதுவரவுகள் காகித நூல்களின் பாவனையிலும் பயன்பாட்டிலும் பாரிய மாற்றங்களை விளைவிக்கத் தவறிவிட்டன என்பதுதான் அண்மைக்காலக் கணிப்பீடுகளின் முடிபு. காகிதப் புத்தகம் தரும் துணைக்கும் தோழமைக்கும்பயன்பாட்டுக்கும் பரிச்சயத்திற்கும் ஈடு இணை இல்லை என்பதுதான் உண்மை!
புத்தகம் ஒன்று, அது புத்தகமான தருணத்திலேயே பூரணத்துவம் பெறுவதில்லை. அது படிக்கப்படவும் வேண்டும். அதனைப் படிப்பதென்பது, அதன் ஆசிரியரது அனுபவத்தை வாசகர் பெறுவதாகும். புத்தகம் ஆசிரியருக்கும் வாசகருக்கும் இடையிலானதோர் இணைப்புப் பாலம்; ஏகாந்த உறவாடல் சாதனம். அதில் ஆசிரியரும் வாசகரும் சம பங்காளிகள். ஆசிரியர் தமது எண்ணங்களையும் அனுபவங்களையும் படிபிப்னைகளையும் வாசகர் மனதில் சரிவர விதைத்து, வாழ்வியல் குறித்த பரந்த தரிசனத்திற்கு வழிதிறக்கும் பணியில் வெற்றிபெறும் போதேஇ புத்தகம் தனது பூரணத்துவத்தை எய்துகிறது.
சூரன் . ரவிவர்மாவடக்கே போகும் மெயில்என்ற பெயரில், தமது16 சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிடுகின்றார். இப்புத்தகமானது தனது பிறவிப் பணியின் பாதியினையே இதுவரை பூர்த்தி செய்திருக்கிறது. இனி, இது இடம்விட்டு இடம் நகர்ந்து, கால இடைவெளி கடந்து, வாசகரைச் சென்றடைய வேண்டும்; தனிமையில் வாசகரால் நுகரப்பட வேண்டும்; வாசகரோடு அணுக்கமான உறவை உண்டுபண்ண வேண்டும்; வாசகருக்குப் புதிய அனுபவங்களை அள்ளி வழங்க வேண்டும்; வாழ்வின் நிதர்சனங்களைச் சித்திரித்து, மனித மேம்பாட்டுக்குத் திசை காட்ட வேண்டும். இவற்றிலேயே இப்புத்தகத்தினது பிறவிப் பணியின் மீதிப்பாதி தங்கியுள்ளது.
வடக்கே போகும் மெயில்திரட்டினைப் படித்து முடிக்கும் வாசகர்கள், இதன் ஆசிரியர் ரவிவர்மா பொழுதுபோக்கு அம்சங்களைக் கதைகளாக்கும் ஒரு கேளிக்கை எழுத்தாளரல்ல என்பதையும், பதிலாக அவர் சமூகத்தின் மீது கரிசனையும் அக்கறையும் கொண்ட ஒரு மனிதநேயப் படைப்பாளி என்பதையும் சுலபமாகக் கண்டறிந்து கொள்வர். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தமது கதைகளினூடாகப் பேசும் ரவிவர்மா, அதே மக்களின் அக வாழ்க்கையின் நெருக்கடிகளையும் கதைகளாக்கித் தந்திருக்கின்றார். எனவே இலக்கியம் சமூக நோக்குடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தினின்றும் அவர் விலகிச் செல்லவில்லை என்பதும், அவரது இத்திரட்டு வாசகனுக்கு நுட்பமான புதிய அனுபவங்களை வழங்கி, மனித மேம்பாட்டுக்கு உரம் சேர்க்கத் தவறவில்லை என்பதும் நம்பிக்கை தரும் செய்திகளாகும்.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையின் வரலாற்றுப் போக்கினை மாற்றியமைத்த இனமுரண்பாடுகளும், அதன் வழியாக எண்பதுகளின் ஆரம்பம்தொட்டு முனைப்புப்பெற்ற இனவிடுதலைப் போராட்டமும், மக்களின் அமைதி வாழ்வைத் துவம்சம் செய்துபோன யுத்த அவலங்களும், அவற்றின் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இடம்பெறாத அண்மைக்கால ஈழத்தமிழ் இலக்கியப் படைப்புகள் அனேகமாக இல்லை என்றே கூறலாம். ரவிவர்மாவின்வடக்கே போகும் மெயில்சிறுகதைத் திரட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘வடக்கே போகும் மெயில்இ’ ‘விடியலைத் தேடி,’ ‘குலதெய்வம்,’ ‘என்று மறையும்,’ ‘திக்குத் தெரியாத,’ ‘தாலி பாக்கியம்,’ ‘தண்ணீர் தண்ணீர்ஆகிய கதைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இனமுரண்பாட்டினையும் யுத்தக் கெடுதிகளையும் தொட்டுச் செல்லும் கதைகளாகவே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு -
போர்க் காலங்களின்போது கொழும்புசென்று தற்காலிகமாக லொட்ஜ் ஒன்றில் தங்கி நிற்கும் தமிழருக்கு ஏற்படக்கூடிய பீதியையும்இ அதனால் ஏற்படும் தடுமாற்றங்களையும்தண்ணீர் தண்ணீர்என்ற கதை உணர்ச்சிச் செறிவுடன் நேர்த்தியாகச் சித்திரிக்கின்றது. அச்சமும் பதற்றமும் உச்சமடைகையில், எதைச் செய்யக்கூடாதோ அதையே செய்ய நேர்ந்துவிடும் அபாயத்தை எண்ணி அஞ்சும் மனம்இ தனக்குள் இலேசாக நகைக்கவும் செய்கிறது. சிறுகதை வரம்புகளுக்குள் அடங்க மறுத்தாலும்இ தன் பங்கைச் சரிவரச் செய்திருக்கும் ஒரு சின்ன மாத்திரைக் கதை ,இது.
திக்குத் தெரியாதஎன்ற சிறுகதை இனமுரண்பாட்டின் கோரமுகத்தைக் காட்டும் இன்னொரு கதையாகும். வன்செயல்களுடன் சம்பந்தப்படாத இளைஞர்கள்கூட, சில சமயங்களில் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சோகங்களைச் சொல்லும் கதை. அனைவரது முகங்களிலும் அச்சமும் சந்தேகமும் அள்ளிப் பூசப்பட்ட பாதுகாப்பு வலயம் ஒன்றினுள் எடுக்கப்பட்ட திகில் திரைப்படம் போன்று நகர்த்திச் செல்லப்படும் கதை.
போர்க்கால சூழலோடு பின்னிப் பிணைந்த இவைபோன்ற பல கதைகளுடன், சாதாரண மக்களின் அகவயமான எழுச்சிகளையும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் படம் பிடித்துக் காட்டும் வகைசார்ந்த படைப்புக்களையும் ரவிவர்மா இத்தொகுதியில் தந்திருக்கின்றார். ‘செல்லாக்காசு’, ‘பொன்னுக்கிழவி’, ‘மிலேனியம் அப்பா’, ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘முடிவிலும் ஒன்று தொடரலாம்’, ‘திரைகடலோடியும்’ ‘கொக்கு வெடிஎன்பன மனோவினோதங்களின் வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டுக் காட்டும் குறிப்பிடத்தக்க கதைகள். உதாரணங்களாக ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டுவதாயின்
கிழிந்து, உருக்குலைந்து பெறுமதியிழந்துபோன பத்து ரூபா தாள் காசைத் தந்திரமாகப் பிறரது தலையில் கட்டியடித்துவிட முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும், ஒரு சராசரி மனிதமனம் படும் அவஸ்தையைசெல்லாக்காசுஅழகாகச் சொல்கிறது. அறம்சார்ந்த மனச் சிக்கல்களுக்கு மத்தியிலும், வாழ்வின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில், விரும்பியோ விரும்பாமலோ, நாமும் ஒரு கணேசமூர்த்தியாக இருந்திருக்கின்றோமோ என எண்ணி, வாசகர் மனம் சஞ்சலப்படும் வகையில் கதை நகர்ந்து செல்கிறது. அதுவே அக்கதையின் வெற்றியும் கூட!
இலட்சியங்களும் ஆசைகளும் கனவுகளும் மனித வாழ்வின் இயங்கியலுக்கான உந்துசக்தியாக விளங்குவன. இந்த யதார்த்தத்தை நிறுவும் விதமாகவே பொன்னுக்கிழவியின் சின்னச் சின்ன ஆசைகள் அவளது வாழ்க்கைப் படகை அவ்வப்போது முன்னோக்கி நகர்த்திச் சென்றுள்ளன. இறுதியில் மனநிம்மதியுடன் உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்வதற்கும்,தனது கடைசி ஆசை ஒன்று நிறைவேறிவிட்டதுஎன்ற செய்திதான் பொன்னுக்கிழவிக்குத் தேவைப்படுகின்றது. மேலும்பொன்னுக்கிழவிஎன்ற இந்தக் கதை மூலமாக, மரணவீடுகளில் இடம்பெறும் சம்பவங்களையும் சம்பிரதாயங்களையும் ஒருவித எள்ளலுடன் எடுத்துக்கூறி, எமது கிராமியப் பண்பாட்டுக் கோலங்களை ரவிவர்மா கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக,வடக்கே போகும் மெயில்எனும் இத்திரட்டிலுள்ள கதைகளை தமது மனதின் அகவயமான, புறவயமான தூண்டுதல்களின் விளைவாக, தமக்கே உரிய நடையில் ரவிவர்மா எழுதியுள்ளார். இதிலுள்ள எல்லாவகைக் கதைகளிலும் ரவிவர்மாவின் மனிதநேயம் இழையோடி இருக்கின்றது. தாம் வாழும் சமூகம் மீதான கரிசனை அவரது கதைகளில் ஊறிப் பரவிக்கிடக்கின்றது. இந்தக் கருத்துநிலை ஆரோக்கியம் தான் ரவிவர்மாவின் கதைகளின் பலம். இதற்குப் பக்கதுணையாக அவரது எழுத்துடன் இயல்பாக ஒட்டியிருக்கும் மெல்லிய அங்கதம், அவரது கதைகளுக்கு மென்மேலும் மெருகூட்டி சுவாரசியத்தை வழங்குகிறது.
சுமார் நூறு வருட வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் சிறுகதையானது படிமுறை ரீதியான பரிணாம வளர்ச்சிக்கும்  (Evolution) – உருமாற்றத்திற்கும் (Metamorphosis) உள்ளாகி, முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இத்தருணத்தில் ஒரு கதையின் உள்ளடக்கத்துக்கு ஈடாக, அதன் உருவம், உத்தி, படிமம், மொழிநடை, என்பவற்றுடன்படைப்பாளியின் கண்ணோட்டம், அனுபவம், கற்பனை வளம்இ படைப்பாற்றல் போன்றவற்றின் சீரான ஒருங்கிணைவு பெரிதும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவ்வகைப்பட்ட நுட்பங்களைக் கருத்தில் கொண்டு, ரவிவர்மா மென்மேலும் தமது சிறுகதை எழுத்துப் பணியைத் தொடரவேண்டும்.
ரவிவர்மாவின் பாட்டனார் ஆசாரியார் திரு. கா. சூரன் அவர்கள் ஒரு பண்பட்ட சிற்பக் கலைஞர்; தந்தையார் ஆசிரியர் திரு. சூ. ஏகாம்பரம் அவர்கள் ஓர் உன்னதமான ஓவியக் கலைஞர்; பெரிய தந்தையார் கலாவினோதன் திரு. பெ. அண்ணாசாமி அவர்கள் ஓர் அற்புதமான நடிகர், நாடக அரங்கக் கலைஞர். இத்தகைய காத்திரமான கலைப் பாரம்பரியத்தின் வழிவந்த ரவிவர்மா, தமது கலை இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும். வேரில் பலாவாக ஒளிந்திருக்கும் அவரது பன்முகப்பட்ட படைப்பாற்றல் வெளிக்கொணரப்பட வேண்டும். நவீன தமிழ்ப் புனைவிலக்கியம் அவரது ஆற்றல்களால் புது மெருகு பெறவேண்டும். வாழ்த்துக்கள்!
. நவம்
கனடா
09-01-2013