Showing posts with label வெள்ளம். Show all posts
Showing posts with label வெள்ளம். Show all posts

Wednesday, September 20, 2023

பாலைவன நாடான லிபியாவை மூழ்கடித்த வெள்ளம்

புயல், மழை, வெள்ளம், பூகம்பம், காட்டித்தீ போன்ரவற்றாஇல் நடைபெரும் அழிவுகளும்,   உயிரிழப்புகளும் அண்மையில் முக்கிய செய்தியாக  இடம் பிடிக்கின்றன.மொராக்கோவைத் தாக்கிய புகம்ப அழிவுகள் பற்றிய இழப்புகள்  முழுமையாக வெளிவரமுன்பு  லிபியாவில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் கவனத்தை ஈர்ந்தது.

பாலைவன நாடான  லிபியாவை  வெள்ளம்  புரட்டிப் போட்ட செய்தி  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  லிபியாவின்  கிழக்கு நகரமான டெர்னாவில் மிகப்பெரிய அளவிலான இறப்பு ,அழிவுக்கு ஏற்பட்டுள்ளது.  நகரின்கால்வாசிப்பகுதி  வெள்ளத்தால் உருக்குலைந்தது.   வாடி டெர்னா நதியே  வெள்ளப் பெருக்குக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மலைகளில் இருந்து நகரத்தின் வழியாக கடலுக்குள் ஓடும் வாடி டெர்னா நதி, மழை பெய்யும் போது  வெள்ளம் வந்தாலும், ஆண்டின் பெரும்பாலும்   வறண்டு இருக்கும். அருகிலுள்ள நகரமான பைடாவில்  இல் சுமார் 414மி.மீ மழை பெய்தது இது மிகப் பெரிய மழை என  பதியப்பட்டுள்ளது.

  இரண்டு நதி பள்ளத்தாக்குகள் சங்கமிக்கும் நகரத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் முதல் அனை  உள்ளது. அது முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக செய்மதிக் காட்சிகள்  வெளிப்படுத்தின.  காட்சிகள் காட்டுகின்றன.  முதல் அணையை உடைத்த பிறகு, வெள்ளம் நகரின் தெற்கு விளிம்பில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பள்ளத்தாக்கு வழியாக கீழ்நோக்கித் தொடர்ந்தது. இரண்டாவது அணையின் கீழ்புறத்தில், நகரின் மையப்பகுதி வழியாக ஒரு பரந்த நீரோடை, இருபுறமும் உள்ள கட்டிடங்களை உடைத்தது.

ஆற்றில் இருந்து வெகு தொலைவில் இருந்த பல மாடி அடுக்குமாடி குடியிருப்புகள் அவற்றின் முகப்புகள் அழிக்கப்பட்டன,கொங்கிரீட்  தளங்கள் இடிந்து விழுந்தன, டெர்னாவில் மட்டும் 2,000 பேர் இறந்திருக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. புயலுக்குப் பிறகு லிபியா சர்வதேச உதவியைக் கோருகிறது.

2011 ஆம் ஆண்டு ல்   எதேச்சதிகாரத் தலைவர் முயம்மர் கடாபியின் ஆட்சி  கவிழ்க்கப்பட்ட பின்னர், பல வருடகால யுத்தம் மற்றும் மத்திய அரசாங்கம் இல்லாததால் லிபியா சிதைந்து கிடக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், லிபியாவின் உமர் அல் முக்தார் பல்கலைக்கழகத்தின் நீர்வியலாளர் அப்தெல்வானீஸ் ஏஆர் ஆஷூர், 1942 முதல் ஐந்து வெள்ளங்களை மேற்கோள் காட்டி, பருவகால ஆற்றுப்படுகை அல்லது வாடி மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு டெர்னாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தார்.

அணைகளை முறையாக பராமரிப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.   : "ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டால் அதன் விளைவு வாடி மற்றும் நகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்"என்று அவரது கட்டுரை கூறியது  

இந்த வெள்ளம் லிபியாவின் நவீன வரலாற்றில் மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழல் பேரழிவாகும், இழப்புகளைச் சந்தித்த பைடா நகரம் உட்பட மற்ற பகுதிகளும் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பெங்காசி மற்றும் கிழக்கு லிபியாவின் பிற இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற அரசாங்க கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன.

லிபியாவில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளனர், இது ஒரு பெரிய மத்திய தரைக்கடல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் லிபியாவில் அணைகளை உடைத்து, கட்டிடங்களை அடித்துச் சென்றது.சுமார் 125,000 மக்கள் வசிக்கும் நகரமான டெர்னாவில், கட்டடங்கள்  இடிந்து விழுந்துள்ளன.கார்கள்  வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நகரின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் 1,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மாவட்டத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வாடா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அல்-காபிசி தெரிவித்தார்.  போதிய இட வசதி இல்ல்லாமையினா. மருத்துவ மனையின் தாழ்வாரங்களில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசி உட்பட மற்ற கிழக்கு நகரங்களும் புயலால் பாதிக்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செஞ்சிலுவை சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் டேமர் ரமலான் தன் குழுவுடன்  ப்[அனியாற்றுகிறார். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும்,  காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10,000 த்தைத்  தாண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

லிபியாவை தாக்கிய வெள்ளத்தில் 5,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.டானியல் புயல் நாட்டைத் தாக்கியதால் அணைகள் உடைந்ததால் கிழக்கு நகரமான டெர்னாவின் கால் பகுதி வெள்ளநீரால் அழிக்கப்பட்டது, இதுவரை 1,500க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேரிடர் மண்டலமாக  டெர்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முயன்றபோது அதன் லிபியா பிரிவைச் சேர்ந்த மூன்று தன்னார்வத் தொண்டர்கள் செவ்வாயன்று இறந்ததாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தலைமைச் செயலாளருமான ஜெகன் சபாகைன் ,கூறினார்  

லிபியா அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிளவுபட்டுள்ளது மற்றும் 2011 நேட்டோ ஆதரவு எழுச்சிக்கு பின்னர் பொது சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளன, இது பல ஆண்டுகளாக பிரிவு மோதல்களைத் தூண்டியது.


 சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திரிப்போலி அரசாங்கம் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் டெர்னாவுக்கு உதவிகளை அனுப்பியுள்ளது. செவ்வாயன்று மேற்கு நகரமான மிஸ்ரட்டாவிலிருந்து ஒரு நிவாரண விமானம் புறப்பட்டது.

Sunday, December 20, 2015

தமிழக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்



வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை மக்களை  நிர்க்கதியாக்கியது என்றே முதலில் தகவல் வெளிவந்தது. ஆனால், இது இயற்கையின் சாபமல்ல அதிகாரம் இல்லாத அதிகாரிகள் மேலிட உத்தரவுக்காகக் காத்திருந்ததனால் ஏற்பட்ட அவலம் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசு இயந்திரத்தில் ஜெயலலிதாவின் உத்தரவு இல்லாமல் ஒரு சிறுதுரும்பைக்கூட தூக்கிப்போட  முடியாது. உரிய நேரத்தில்செம்பரம்பாக்கம்   ஏரியைத் திறக்காமையினாலேயே சென்னையை  வெள்ளம் சூழ்ந்தது  என்ற உண்மை இப்போபோது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்குயார் பொறுப்பு என்பதை தமிழக அரசு வெளிப்படுத்தவில்லை.
அதிகரித்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.  நீர் வரத்து அதிகரித்தமையினால் ஏரியைத் திறந்துவிடவேண்டும்  என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை  விடுத்தனர். அவர்களின் கோரிக்கை போதுப்பணித்துறைக்கும் தலைமைச் செயலகத்துக்குமிடையே பந்தாடப்பட்டதே தவிர  யாரும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.
இரண்டு நாட்களில் அதிகளவி மழை பெய்யப்போவதாக  தகவல் வருகிறது  அதற்கு நாம் தயாராக வேண்டும் என என கடந்த நவம்பர் மாதம்  28  ஆம் திகதி பொதுப்பணித்துறை அதிகாரிகளினால் தலைமைச்  செயலருக்கு அறிவிக்கப்பட்டது. மறுநாளும் அதற்கடுத்த நாளும்  தலைமைச்  செயலரின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருந்தனர். டிசம்பர் முதலாம் திகதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்குதலினால் பகலில் 7500 கன  அடி தண்ணீரும்   இரவில் 29000 கன அடி தண்ணீரம் திறந்து விடப்பட்டதாக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஒரு இரவில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதனால்தான் சென்னை வெள்ளத்தில்மூழ்கியது. அதிகாரிகளின் ஆலோசனையை  கேட்டு செயற்பட்டிருந்தால் இவ்வளவு அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். பொதுப்பணித்துறையின் பொறியியலாளர்களும் தலைமைச்  செயலக அதிகாரிகளும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர்.  மக்களின் அவலத்தைக் கண்ட தன்னார்வலத் தொண்டர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி மக்களுக்கு உதவினர். தமிழக ஆளும் கட்சியைச் சேர்ந்த எவரும் உடனடியாகக் களத்தில் இறங்கவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், சட்டசபையைக்  கூட்டி விவாதிக்க வேண்டும், போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக்கின. பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் வார்த்தைக் கூறாத முதல்வர் ஜெயலலிதா வட்ஸ் அப்பில் தன்னிலைவிளக்கம் கொடுத்துள்ளார். இவை எல்லாம் மக்களின் மனதில் ஆறாத வடுவாக உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண உதவிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.ஆளும் கட்சியினருக்கு  அதிகளவில் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்தக்   குற்றச்சாட்டுகள் எவற்றுக்கும் ஜெயலலிதா பதிலளிக்கவில்லை.
மத்திய  அரசு கொடுத்தா நிவாரண நிதி போதுமானதல்ல மேலும் நிவாரண நிதி தரவேண்டும் எனஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார் ஆடம்பரப் பொருட்களும் வீட்டுப் பாவனைப்போருகளும் வெள்ளத்தால் அடித்துச்  செல்லப்பட்டு விட்டன.  சிறுகச் சிறுக சேமித்ததை எல்லாம் சிறுதுளியாகி பெருமழையான் வெள்ளம் அள்ளிக் கொண்டு போனது. பணம் கொடுத்து வாங்கிய பொருட்களும் இலவசமாகக் கிடைத்த பொருட்களும் வெள்ளத்துக்கு இரையாகின. மிக்சி,கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழம் முன்வந்துளது. இது இன்னொரு வகையான தேர்தல்   கொடுப்பனவின் முன்னோட்டமாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன,
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மட்டும் ரூ.40 கோடி செலவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே நடக்காத நிலையில் அதற்காக ரூ.100 கோடி செலவழிக்கப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்  அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை வீழ்த்துவேன் என சபதமிட்ட வைகோவின் கட்சி நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அவருக்கு அதிர்ச்சியளித்துள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு மாற்று அணியாக மக்கள் நல கூட்டு இயக்கத்தை மக்கள் நல கூட்டணியாக மாற்ற வைகோ முடிவு எடுத்தபோது, அக்கட்சியில் இருந்து முன்னணி தலைவர்களான மாநில பொருளாளர் மாசிலாமணி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வைகோவின் தீவிர விசுவாசியுமான பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன்,  . மாநில மகளிர் அணி செயலாளர் விஜயகுமாரி உள்பட பலர் விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்து  மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தனர்.
இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் பெருமாள், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் சரவணன்கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தில்லை செல்வம் உள்ளிட்ட 12 நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில்  திராவிட முன்னேற்றக் கழக. தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் 
மு.க.ஸ்டாலின்  ஆகியோரை சந்தித்து,  திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்து  கொண்டனர். இவர்களுடன் அவர்களின் ஆதரவாளர்கள் பலரும்  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.  .இவர்களின் வெளியேற்றம்  வைகோவுக்கு பலத்த  அடியாக உள்ளது.

தூத்துக்குடியில் ஜோயலின் செல்வாக்கினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமாகி உள்ளது.  திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  கூட்டணி சீர எந்தக்  கட்சியும் தயாராக இல்லை. கட்சி அப்படியே இருக்க கட்சியின் தலைவர்களையும்  மாவட்டச் செயலாளர்களையும் தொண்டர்களையும் வளைத்துப்போடும் போடும் கைங்கரியத்தில்   திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டுள்ளது.
தமிழக மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். மக்களின் நாடித்துடிப்பை அறிந்து சேரும் கூட்டணியே வெற்றி பெரும்.

வர்மா.
தமிழ்த்தந்தி
20/12/15

Saturday, December 12, 2015

அல்லல்படும் மக்கள்மீது திணிக்கப்படும் நிவாரண அரசியல்

வந்தாரை வரவேற்ற தமிழத்தின் தலை நகரான சென்னை மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் கையேந்தும்   நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.  சென்னை இப்போது சேறும் சகதியுமாக... மலை மலையான குப்பையாக மாறியிருக்கிறது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த பெருமழையால் பாதிக்கப்படட சென்னை மாநகரில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று என காத்திருக்கின்றனர் பொதுமக்கள். டிசம்பர் 2 ஆம்திகதி  காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 340 மில்லிமீற்ற  மழை சென்னையில் பெய்துள்ளது. பொதுவாக டிசம்பர் முழுவதிலுமே 250 மிமீ மழைதான் பெய்யும். இதுதான் உண்மை நிலவரம்.
 டிசம்பர் 1 ஆம்திகதி  செவ்வாய்கிழமை காலை 8.30 தொடங்கி புதன்கிழமை 8.30 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் மட்டும் 494.20 மி.மீ மழை பெய்து மக்களை நடுங்க வைத்தது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 475 மி.மீ மழை பெய்து கதிகலங்க வைத்தது
 நவம்பர் மாதம் பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏற்கனவே நிரம்பியிருக்க டிசம்பர் 1 ஆம் திகதி பெய்த மழை நீரால் ஏரி உடையாமல் இருக்க அனைத்து நீரும் அப்படியே அடையாறில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ளத்துடன் சென்னையில் பெய்த மழை வெள்ளமும் இணைந்து 80000 கனஅடி நீராக பெருக்கெடுத்து சென்னை நகருக்குள் புகுந்து கபளீகரம் செய்தது
  வெள்ளம் வடிந்த பின்னர் எஞ்சியிருப்பது சேறும் சகதியும், குப்பைகளும்தான். வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் வீதியில் இறைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள் அங்கு வசித்தவர்கள்
 வெள்ளத்தில் இருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக்கொண்டு கட்டிய துணியோடு வெளியேறிய மக்கள் வெள்ளம் வடிந்த பின்னர் தாங்கள் வசித்த பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள். இதுநாள் வரை வசித்த வீட்டிற்குள் சேற்றை அள்ளி போட்டுவிட்டு போயிருக்கிறது வெள்ளநீர்.

உ ணவுக்காகவும், குடிநீருக்காகவும், பாலிற்காகவும் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது இயற்கை ஆடிய கோரத்தாண்டவம்.

தொலைகாட்சி  பெட்டி , குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டிய வீடு சேதமடைந்துள்ளதை விவரிக்க முடியாத வேதனையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள்.
 மழை வெள்ளத்திற்கு மிஞ்சியப் பொருட்கள் பழுதாகி உள்ளதால் அவற்றை உபயோகிக்க முடியாத நிலையே இருக்கிறது. பொருட்சேதம், நிறைந்துள்ள குப்பைகள் ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது இங்குள்ள மக்களுக்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என இத்தனையையும் மீறி இயல்பு நிலைக்கு வர மக்கள் முயற்சித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லில் அடங்காதவையாக இருக்கிறது.
 
 இந்த பெருவெள்ளம் ஒருவகையில் மக்களை ஒன்றிணைத்துள்ளது என்றே சொல்லலாம். வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து தவித்து வருவோருக்கு சக மனிதர்களின் ஆறுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.   
மழை வெள்ளம் என்பன வழமையானவைதான்.ஒரு சில சிறிய சேதங்களுடன் வெள்ளம்  வடிந்துவிடும் என எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.அவர்கள் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் கண்முன்னாலேயே அடித்துச் செல்லப்பட்டன. மழை,வெள்ளம,சுறாவளி,சுனாமி ,பூகம்பம்  போன்ற இயற்கை அனந‌ர்த்தங்களை மனிதனால் வெல்ல முடியாது. அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை அதிலிருந்து  மீட்க முடியும்.மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உதவும் வரலாற்றுக்கடமையை செய்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது.
மழை வெள்ளத்தால்  சென்னை மக்கள் அவதிப்படும்போது  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில்  ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்.எதிர்க் கட்சிகளின் கண்டனக் கணைகளுக்குப் பின்னர்தான் அவர் சென்னைக்குத் திரும்பினார். ஜெயலலிதா சென்னைக்கு வந்தபின்னரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.சமூக ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களும் பாதிக்கப்பட்டமக்களைக் காப்பாற்ற களம் இறங்கினார்கள். அரசின் மீது மக்களின்  கோபம் திசை திரும்பியது. சமூக வலைத்தளங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவின.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழகில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதனை எதிர்த்து வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் பேசாமடந்தைகளாக இருந்தனர். ஜெயலலிதாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதனால் அவர்கள் வாளாவிருந்தனர் பாதிக்கப்பட்டம் மக்களின் அவலக்குரலும் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களும் அரசின் காதுகளில் விளவில்லை.
சென்னையின் வெள்ளப்  பாதிப்பபைப் பார்வையிட மோடி வருகிறார் என்ற செய்தி பரவியதும் ஜெயலலிதா உசாரானார். ஹெலிக்கொப்டரில் ஏறி பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டா.. அதன்பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புறப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஏற்கெனவே  வழங்கிய உதவித்தொகையுடன் மேலும் ஆயிரம் கோடி ருபா வழங்க உத்தரவிட்டார். வழமைபோல் அத்  தொகை காணாது என தமிழக அரசு கூறியது.

. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கைப்பற்றிய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவற்றின் மீது ஜெயலலிதாவின் படத்தை ஓட்டினார்கள். நிவாரணம் உதவி என்பனவற்றை   ஜெயலலிதாதான் வழங்கினார் என்பதை மக்கள் அறிய  வேண்டும் என்பதற்காக இச்செயல் நடைபெற்றது. தன்னார்வலத் தொண்டர்கள் கொண்டுவந்த பொருட்களை அடித்துப் பறிப்பதிலும் அவர்கள் குறியாக இந்தனர்.  . தாமும்உதவி  செய்யாது.  உதவி செய்பவர்களையும் செய்யவிடாது தடுக்கும் அரசாங்கத்தின்  மீது மக்களின் கோபம்   திரும்பியது இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது காயை நகர்த்தியது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்ய களம் இறங்கியது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஸ்ராலின் சென்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களும் தொண்டர்களும் வெள்ளத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். கருணாநிதி, ஸ்ராலின் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன கலைஞர்,சன் ஆகிய தொலைக்காட்சிகளின் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அவலங்களை வெளிப்படுத்தினார்கள். ஜெயா தொலைக் காட்சியில் அரசாங்கம் உதவி செய்வதாக காட்டப்பட்டது
 ராகுல் காந்தி வெள்ளத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழாக அரசியல் தலைவர்கள் அனைவரும் தமது தொண்டர்களுடன் மக்களுக்கு உதவினார்கள் கருணாநிதியும் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களைச்  சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால்,ஜெயலலிதா  மக்களைச்  சந்திக்கவில்லை. அரசியல் கட்சியை வழி நடத்துபவர் வழி நடத்துபவர். தமிழக முதல்வர் என்ற தகுதிகளுடன் இருக்கும் ஜெயலலிதா  பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது மிகப் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது  

தமிழக மக்களின் நலனும் தமிழக அரசின் நலனும் வெவ்வேறானவை மட்டுமல்ல எதிரெதிரானவை என்பதை அதிகார வர்க்கத்தின் இந்தப் போக்கு பளிச்சென்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த ஓர் அரசு நம் கண் முன்னால் அவர்களைக் கைவிட்டிருக்கிறது. மட்டுமின்றி, மக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இடர்பாடுகளிலும் இக்கட்டுகளிலும் சிக்கிச் சீரழிந்துள்ள மக்களை மீட்பதும் அவர்களை மீள்குடியமர்த்து வதும் அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத் தவறிவிட்டது தமிழக அரசு. சந்தேகமில்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோல்வி இது. இந்தத் தோல்வியின் கசப்பால்தான் அமைச்சர்களும் அதிமுக அடிப்பொடிகளும் மெய்யான அக்கறையுடன் நிவாரண உதவிகள் அளித்துவருபவர்கள்மீது பொறாமையுடன் பாய்கிறார்கள்.   தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி கடிதம் எழுதியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்துக்கு முதன் முதலாக வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை. இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஜெ. அனுப்பிய கடிதம்: கடந்த 3-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாங்கள் அளித்த 5 கோடி ரூபாய் நன்கொடைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 டிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெ கூறியிருப்பதாவது: கடந்த 4-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், ஒடிஷா முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் தர முன்வந்ததற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழையினால் ஏற்பட்ட பேரழிவின் அளவு மிக அதிகமானது. இந்த இயற்கை இடர்பாட்டின் விளைவுகளை போக்க எனது அரசாங்கம் அயராது பணியாற்றி வருகிறது. உங்களின் அக்கறைக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார். அதே நேரத்தில் கர்நாடகாவின் நிதி உதவியை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.
கருணாநிதியின்  ஆட்சியில் 2008ஆம் ஆண்டு பெருமழை பெய்த போது   ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில்,  திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். அரசாங்கம்  அறிவித்திருந்த சலுகைகள் போதாது என்றும் கூறியிருந்தார்  
தமிழாக அமைசசர்களான செல்லூர்  ராஜு, நந்தம் விஸ்வநாதன் கூகுல இந்திரா ஆகியோர் ஜெயலலயொதாவின் தொகுதிக்கு சென்ற போது கோபமுற்ற மக்கள் அதம்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.   காரில் இருந்து இறங்காது குசலம் விசாரித்தவர்களை மக்கள் வற்புறுத்தி இறங்க ச்  செய்தனர் 

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஐ.டி., துறைக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு 20 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யமஹா,  போட்,என்பீல்ட் ஆகிய வாகன நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.100 கோடி ரூபா வரையான் உணவுப்பொருட்கள்  சேதமடைந்துள்ளன.  
பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, கன்னியாகுமரி மாவட்ட இலங்கை அகதிகள் பணமும் நிவாரணப்பொருட்களும் வழங்கினர்.

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டம்  பெருமாள்புரம், பழவிளை, ஞயுறான்விளை மற்றும் கோழிவிளை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.  இப்பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் விதம் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான துணிமணிகள், போர்வைகள் மற்றும் 13,370 ரூபாய் காசோலை ஆகியவற்றை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண பொது மையத்தில் இன்று வழங்கினர். 

தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்த இலங்கை அகதிகளை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும்  பாராட்டினர்
வெள்ளம் வந்து கொட்டிவிட்டு போன குப்பைப்கிடங்காய் காட்சியளிக்கிறது சென்னை மாநகரம். பல ஆயிரம் தொன்  குப்பைகள் மலையாக குவிந்துள்ளன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கு   பணியாளர்கள் போதாது என்பதால் பிற மாநகராட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கான துப்புறவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தலைநகர் சென்னை வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிபோன சென்னையில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பொதுமக்கள் தற்போது வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனைத்து சாலைகளிலும் 2 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் பாதிப்பால், தேங்கிய குப்பைகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்து கொண்டு சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.  ,  
  வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. சென்னையில் இப்போதைக்கு உடனடியாக செய்யவேண்டிய முதல்பணி குப்பைகளை அகற்றுவதுதான்.
மலேரியா.எலிக்காய்ச்சல்,டயரியா போன்ற நோய்கள் தாக்கக்ககூடிய அபாயமும் உள்ளது. வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்ட கால் நடைகள்  ஆங்காங்கே இறந்து துர்நாற்றம் வீசுகின்றன.  இவற்றாலும் நோய்கள் உருவாகும் நிலை உள்ளது.
  கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 5,000 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த தமிழக அரசுமறுபுறம் கர்நாடக அரசு அளிக்க முன்வந்த 5 கோடி ரூபாய் நிதியுதவியை பெற முதலில் மறுத்தது. இத்  தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தங்களது உதவி  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு  அறிவித்தது.  மத்திய அரசு அனுப்பிய உணவுப்பொதிகளையும் நிவாரண உதவிகளையும் தமிழாக அரசு உடனடியாக விநியோகிக்க முன்வரவில்லை. தமிழக அரசின் மந்தகதியான நிர்வாகம் மக்களுக்கு  பெரும் சோதனையாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகள் மக்களை பெரும் பீதிகுள்ளாக்கின. மழை தொடரும் வெள்ளம் அதிகரிக்கும்,நாசா அறிவிப்பு என வெளியான வதந்திகள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துன்புறுத்தின.
 தமிழக சட்டமன்றத்  தேர்தலின் போது இந்தப் பாதிப்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும். கோபத்தில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
வர்மா 
தமிழ்த்தந்தி
13/12/15

Wednesday, December 9, 2015

கொட்டித்தீர்த்தது மழை முடங்கியது சென்னை

 சீர்மிகு சிங்காரச் சென்னையில் பெய்யாப்பெருமழை பெய்ததால் வெள்ளத்தில் சிக்கி சீரழிந்துள்ளது. மழை வெள்ளம் ஆற்றுநீர் என்பவற்றினால் சென்னையில்  முடங்கியது.  சென்னையில் 40 மணிநேரத்துக்கும் மேலாக அடைமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவு வெள்ள நீர் கரைபுரண்டோடியது
வானத்து சுனாமிபோல்இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கன மழையால்தமிழகத்தின் தலைநகரானசிங்கார சென்னைசீரழிந்து விட்டது. நீர் நிலைகள் நிரம்பிஉபரி நீர் திறந்து விடப்பட்டுஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால்இயல்பு வாழ்க்கை முடங்கிமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். முப்படைகளுடன்தேசிய பேரிடர் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில்வடகிழக்கு பருவ மழைஒரு வாரத்திற்கு முன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இடையில்மூன்று நாட்கள் மழை விட்ட நிலையில்சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம்கடலுார் மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்துகொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. முழுமையாக மீளாத நிலையில்வங்கக்கடலில்அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகளால்இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், 'வானத்து சுனாமிபோல் விடாது மழை கொட்டித் தீர்க்கிறது.
எப்போதும் இல்லாத வகையில், 24 மணி நேரத்தில்காஞ்சிபுரம் மாவட்டம்தாம்பரத்தில், - 49; திருவள்ளூர் மாவட்டம்,செம்பரம்பாக்கம் - 47; சென்னையில் பரவலாக, 29 செ.மீ.மழை பெய்துள்ளது.  விடாது மழை கொட்டித் தீர்த்ததால்தலைநகர் சென்னை தண்ணீரில்தத்தளிக்கிறது. 
சென்னைக்கு குடிநீர் தரும் செம்பரம்பாக்கம்பூண்டிபுழல் ஏரிகள் உட்படஅனைத்து ஏரிகளிலும் இருந்துஉபரிநீர்எப்போதும் இல்லாத வகையில்அபரிமிதமாக திறந்து விடப்பட்டுள்ளதால்நிலைமை சிக்கலாகி விட்டது.அடையாறுபக்கிங்ஹாம் கால்வாய்,கூவம்கொற்றலைஓட்டேரி நல்லா எனஅனைத்து ஆறுகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. எப்போது கரை உடைத்து ஆபத்து ஏற்படுமோ எனஅஞ்சும் அளவுக்குபடுமோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளம் மற்றும் ஏரிகளில் தண்ணீர் திறப்பால்தாம்பரம்வேளச்சேரிமுடிச்சூர்சோழிங்கநல்லுார்ஓ.எம்.ஆர்.எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலைகுன்றத்துார்,பள்ளிக்கரணைசைதாப்பேட்டை எனதென் சென்னைமத்திய சென்னையில் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. தரைத்தளம்முதல் மாடி வரை வெள்ளம் 

சூழ்ந்ததால்மொட்டை மாடிகளில் ஏறிதங்களை மீட்க யாராவது வருவரா எனலட்சக்கணக்கான மக்கள் அபய குரல் கொடுத்த வண்ணம்உள்ளனர்.
மீனவர்கள் உதவியுடன்பொதுநல அமைப்பினர் தங்கள் பகுதிக்குள்மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராணுவம் உள்ளிட்ட முப்படைகள்கடலோர காவல் படைதீயணைப்புப் படை எனகளத்தில் ஏராளமானோர் குவிந்ததாலும்உரிய இடங்களுக்கு மீட்புக்கு செல்ல முடியவில்லை. மின் தடையால்மொபைல் போன் நிறுவனங்களின் டவர்கள் செயல் இழந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால்வெள்ளத்தில் சிக்கித் தவிப்போர்யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். உதவி கோரி அழைப்பு வந்த பகுதிகளில் உள்ளோரைமீட்பு படையினரும்தொடர்பு கொள்ள முடியாமல் திணறினர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும்தகவல் தொடர்பு துண்டிப்பால்மீட்புப்பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்கின.


சென்னையில்புறநகர் ரயில் போக்குவரத்துவெளி மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்தும் முடங்கியது. தண்ணீர் புகுந்ததால்,சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னையில்அண்ணா சாலை உள்ளிட்ட, 90 சதவீத சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்கள் இயக்கம் குறைவாக இருந்தது. தனியார் கால் டாக்சிகளின் செயல்பாடும் முடங்கி உள்ளது. பாதுகாப்பு கருதிசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்இரண்டு நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை        ஒரே நாளில் மட்டும்   சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  ஒரே நாளில் 26செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை இப் போது பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 3ந்தேதி ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது 2வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருமாதம் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை வீழ்ச்சியால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒக்டாபர் மாதம் 28  ஆம் திகதி வடகிசக்கு பருவமழை  ஆரம்பித்தது. நவம்பர் மாதம் வங்கக்கடலில் அடுத்தடுத்து தோன்றிய காற்றழுத்தம் தொடர் மழைக்கு வழிவகுத்தது. 90 சதவித பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
வீதிகளில் 10 அடிக்கு மேல் வெள்ளம்  பாய்வதால் போக்குவரத்து முடங்கியது..  வெள்ளத்தில் மூழ்கிய சில  பகுதிகளுக்கு மீட்புக்குழு செல்லமுடியாத நிலை உள்ளது. தன்னார்வத்தொண்டர்களும்  உதவும் மனம் படைத்தவர்களும் தமது உயிரையும் பொருட்படுத்தாது  துணிச்சலுடன் மீட்புப்பணியைச் செய்கிறார்கள். சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீவிர மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தீவிர மீட்பு பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. இதைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, கடலோர படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் வீரர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டனர். மீட்பு பணிகளுக்காக பெங்களூரில் இருந்து 2 கம்பெனிகளின் 80 ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  


பலத்த மழைவெள்ளம் ஆகியவற்றால் இலட்சக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் தங்க இடமின்றி மக்கள் தவிக்கின்றனர்.  உணவு குடிதண்ணீர் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி மக்கள் பரிதவிக்கின்றனர். ஹெலிகொப்டர் மூலம் உணவுப்பொதிகள் போடப்படுகின்றன.
மழையால் தமிழகத்தில், 269 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். தமிழக மழை சேதம் பற்றி லோக்சபாவில் அறிக்கை சமர்ப்பித்து அவர் கூறியது: வெள்ள சேதத்தால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 என தெரியவந்துள்ளது. சென்னையில் 40 சதவீத தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. என்றார்.
 


    வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் 2வது நாளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன், தொலைபேசி, ஏ.டி.எம். சேவை பாதிக்கப்பட்டுள்ளது

 
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 மணிநேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லை. இதனால் மக்களால் செல்போன்லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியவில்லை. செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதால் வெளிமாவட்டங்கள்மாநிலங்களில் வசிக்கும் உறவினர்களால் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிய முடியவில்லை. சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்து ஏ.டி.எம். மையம் சென்றவர்கள் சேவை இல்லாததால் அதிருப்தி அடைந்தனர். ஒரு சில இடங்களில் செயல்படும் ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுகின்றனர்.

சென்னை வாசிகளின் பிரதானமாக பயன்படுத்தி மின்சார ரயில் சேவைகள் மற்றும் மாநகரப்பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கியது. இதனால், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் கொட்டித்தீர்க்கும் கன மழை காரணமாக   டிசம்பர் -3  டிசம்பர் -4 ஆகிய இருதினங்களும்   பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு தினங்களிலும் விடுமுறை அளிக்க தனியார் நிறுவனங்களை  அரசு அறிவுறுத்தியுள்ளது.


பலத்த மழையின் காரணமாக சென்னையில் இருந்து விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. விமான போக்குவரத்து மற்றும் சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியும் ஹெலிக்கொப்டரிலிருந்து தனித்தனியாக வெள்ள சேதங்களைப்பார்வையிட்டனர்.   தமிழக வெள்ள நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடி ஹெலிகொப்டரில் அமர்ந்தபடி சுற்றி பார்த்தார். இதன்பிறகு தமிழக ஆளுநர், ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரை, அடையாறு ஐஎன்எஸ்-ல் சந்தித்து ஆலோசித்தார். பிறகு மோடி கூறியதாவது: நான் பார்வையிட்ட பகுதிகளில் வெள்ள சேதம் மிக அதிகமாக இருந்ததை உணர முடிந்தது. தமிழக மக்களின் இந்த துயர நேரத்தில், மத்திய அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்.
 உடனடியாக, தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே மத்திய அரசு வெள்ள நிவாரணத்திற்காக ரூ.940 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.  பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களும்  தமிழாக அரசுக்கு  உதவ முன்வந்துள்ளன, 
சென்னையின்  சீரழிவுக்கு  மசிவேழம், ஆறுகள், ஏரிகள் உடைப்பெடுப்பு என பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது. வரைமுறையற்ற  கட்டுமானப்பணிகளும் சனப்பெருக்கமுன் முக்கிய காரணிகள் என்பதை வசதியாக அனைவரும் மறந்துவிட்டனர்.  சென்னையின் சராசரிமழை 1468 மி ,மீ  ஒருமாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒருநாளில் பெய்து முடித்தது.    மழை வெள்ளத்தைத் தாங்கக்கூடிய வல்லமை சென்னைக்கு இல்லை.
 1976 ஆம் ஆண்டு  452.4 மி.மீ மழை பெய்தது. அன்று அந்த மழை வெள்ளத்தி சென்னை தாங்கியது. இன்று   வளர்ச்சி என்ற பெயரில் சென்னை சீரழிந்துவிட்டது. அதனால்தான் இந்த நிலைமை. சென்னையில் நேற்று முன்தினம் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் சராசரியாக 27 செ.மீ. (275 மி.மீ.) மழை பதிவானதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிக அளவு மழை இதுவாகும்.
இந்த மழை அளவை வைத்து பார்க்கும் போது, கடந்த 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  ஒரே நாளில் 26செ.மீ. (261 மி.மீ.) பெய்த மழை அளவே அதிக மழையாக இருந்தது. தற்போது அந்த மழை அளவை  இப்போது  பெய்த மழை அளவு தாண்டி விட்டது.
ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 3– ஆம் திகதி  ஒரே நாளில் 23 செ.மீ. (234 மி.மீ.) பெய்து இருந்தது. இது2வது அதிகபட்சமான மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது
Add caption
பெருமளவு மக்கள் தொகை அதிகரித்த நகரத்தில் சென்னை முதலிடத்தைப் பிடித்தது.  அதிகரித்த மக்கள் தொகையும் சீரழிவுக்கு ஒரு காரணம். சதுப்பு நிலங்கள்,நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டமையும் இன்றைய அவலநிலைக்கு   சான்றாகும். சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து நான்கு ஆறு வழி திவீக பாதை அமைக்கப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடிகள்  வணிக வளாகங்கள் என்பன கட்டப்பட்டன.

கிறனிற் முரகீடு குறித்து சகாயம் ஆய்வு செய்தபூது தமது பகுதியில் இருந்த ஏரிகள், வாய்க்கால்கள் என்பன அழிக்கப்பட்டதாக அவரிடம்  முறைப்பாடு செய்யப்பட்டது.  இந்த அத்து மீறல்களை கடந்தகால தமிழக அரசுகள் கண்ண்டும் காணாது விட்டன.  அந்த சிறிய சலுகைகள் இன்று விச்வறுபம் எடுத்து மக்களை நிர்க்கதியாக்கி உள்ளன.

அடையாறு,கூவம் கரைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டமையினால் வெள்ளம் வடிந்து ஓட  வழி இல்லாது  ஊருக்குள் நுழைந்து ஊரை வெள்ளக் காடாக்குகிறது.
இன்றைய அவலத்தை கவனத்தில் எடுத்து  இயற்கை சஈர்ரங்களின்  பூத்து நகரத்தையும் மக்களையும்  பாதுகாக்கும் நிர்வாகத்தை அரசு கையில் எடுக்க வேண்டும்.
தமிழ்த்தந்தி
06/12/15