Saturday, March 29, 2014

ஜீவநதி



கலை இலக்கிய மாத சஞ்சிகையான ''ஜீவநதி' பங்குனிமாத இதழ் திருகோணமலை மாவட்ட சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. ஜீவநதியின் 11ஆவது சிறப்பிதழ் இது. மலையகச் சிறப்பிதழ் வெளியிட்டு மூன்று மாத இடை வெளியில் திருகோணமலை மாவட்ட  சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் வெளியிடுவதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுகின்றன. கலை, இலக்கியம் பற்றிய ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள்  சிறப்பிதழ் மூலம் ஆவணப் படுத்தப்படுகிறது. திருகோணமலை பற்றிய பல புதிய தகவல்களை இச்சிறப்பிதழின் மூலம் அறிய முடிகின்றது.

''திருகோணமலை சில இலக்கியக் குறிப்புகள்' எனும் கட்டுரையின் மூலம் இராஜ தர்ம ராஜா நீண்டதொரு பட்டியலைத் தந்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என அவரது பார்வைப் பரந்து விரிகின்றது. திருகோணமலை என்றாலே  மனதில் தோன்றுவது திருக்கோணேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றி தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழி களில் வெளிவந்த நூல்கள் பற்றியும் திருக்கோணேஸ்வரத்தைப் பற்றிப் பாடியவர்களின்  விபரங்களையும் தந்துள்ளார்.
''திருகோணமலை தேசிய இலக்கிய சமபோக்கு' எனும் கட்டுரையை திருமலை நவம்  எழுதியுள்ளார். திருகோணமலை அடையாளங்கள், புராணங்கள், நவீன வரவுகள், நவீன தமிழ்க்கவிதைகள், திருகோணமலை சிறுகதை முன்னேற்றம் நாடக மரபு, திருமலை மெல்லிசை, முற்போக்குச் சிந்தனை, வறட்சிக் காலம், 2000ஆம் ஆண்டுக்குப்பின் ஆகிய உபதலைப்புகளில் பல தகவல்களைத் தந்துள்ளார்.
நிலம் பிரிந்தவனின் (சுஜந்தனின்) கவிதைகள் ஒரு வாசக நிலைக்குறிப்பு இதனை எழுதியவர் ய. சிந்திரா. இன்று வெளிவரும் கவிதைத் தொகுப்புகள் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்துகிறார் ய.சீ.சீந்திரா.

 நிலம் பிரிதலின் சோகம் என்பது பெரும்பாலான ஈழத் தமிழர்கள் அனுபவித்த  அனுபவித்துக் கொண்டிருக்கிற சோகம். இதனை பல கவிஞர்களும் காலத்துக்குக் காலம் பதிவுசெய்தே  வருகின்றனர். சுகந்தன் சம்பூர் கிராமத்தியில் பிறந்து வாழ்ந்து தற்போது  அங்கு வாழும் உரிமை இழந்து நிற்கும் ஒருவர். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தனது சொந்த நிலத்திலிருந்து பிரித்தெறியப்பட்ட அனுபவங்களின் வரிசையாகவே இருக்கின்றன என  கவிஞரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

காலனித்துவ திருகோணமலை ஆக்கிரமிப்பாளர்கள் பதிவுகளுக்கூடாக வேர்களைத் தேடும் முயற்சி என்ற தலைப்பில் கனகசபாபதி சரவணபவனின் காலனித்துவ  தலைப்பில் திருகோணமலை எனும் நூல் பற்றி வி. கௌரிபாலன் எழுதிய கட்டுரை ஜீவநதியில் உள்ளது.
எழுத்தாளர் தாபி. சுப்பிரமணியத்தின் நேர்காணல் பிரசுரமாகியுள்ளது. செ.ஞான ராசா இவரைப் பேட்டிக்கண்டுள்ளார்.
கே.எம்.எம்.இக்பால், வீ.என்.சந்திரகாந்தி, ஏ.எஸ்.உபைத்துல்லா, கிண்ணியா சபருள்ளா, ஷெல்லிதாசன் மூதூர் முஹமட் ராபி, திருமலை சுந்தா  சூசை எட்வேட் ஏ.எம்.எம்.அலி ஆகியோர் எழுதிய சிறுகதைகள் ஜீவநதியை அலங்கரிக்கின்றன.
செ.. ஞானராசா, தாமரைத்தீவான், மு.யாழவன், அ.கௌரிதாசன், எஸ். பாயிஷா அலி, கேணிப் புத்திரன், மூதூர் முகைதீன், சா, மீரா, தி.பவித்திரன், மூதூர்கலை மேகம் ஆகியோர் எழுதிய  கவிதைகள் இச்சிறப்பிதழில் உள்ளன.
ஊர்மிளா

 சுட‌ர் ஒளி 23/03/14


Friday, March 28, 2014

மெக்ஸிகோ 1986

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பின் கடவுளின் கைஎன மரடோனா கூறியது இன்றும் உலகக்கிண்ண வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாக  உள்ளது. இங்கிலாந்துக்குச் சொந்தமான  போக்லண்ட் தீவுகளை ஆர்ஜென்ரீனா ஆக்கிரமித்தது. சினங்கொண்ட இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனாவை விரட்டிவிட்டு  போக்லண்டட் தீவுகளை  தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தலைக்குப் பதிலாக கையால் கோல் அடித்தார் மரடோனா.
உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் வாய்ப்பு கொலம்பியாவுக்கு வழங்கப்பட்டது.  நிலநடுக்கம்  காரணமாக மிகவும் மோசமாக கொலம்பியா பாதிக்கப்பட்டதனால் அந்தச் சந்தர்ப்பத்தை மெக்ஸிகோ பெற்றுக்கொண்டது. 16 வருடங்களின் பின்னர்  மெக்ஸிகோவில் இரண்டாவது முறையாக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 308 தகுதிகாண் போட்டிகள் நடைபெற்றன. 801 கோல்கள் அடிக்கப்பட்டன.

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 121 நாடுகள் இறுதித் தகுதிகாண் போட்டிகளில்  விளையாடின. 24 நாடுகள் மெக்ஸிகோவில்  விளையாடத் தகுதிபெற்றன.
1986ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 29ஆம் திகதிவரை 52 போட்டிகள் நடைபெற்றன. 132 கோல்கள் அடிக்கப்பட்டன. 23,94,031 பேர் பார்வையிட்டனர்.
நெதர்லாந்து தகுதி பெறவில்லை. கனடாவும், ஈராக்கும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடின. ஈரானுடனான  யுத்தம் காரணமாக தகுதிகாண் போட்டிகளில்  விளையாடாத ஈராக்,  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டது. 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.  ஒரு அணியில்  தலா நான்கு அணிகள்  முதல் இரண்டு இடம்பிடிக்கும்  அணிகளுடன்  அதிகூடிய புள்ளிகளுடன் மூன்றாம் இடம்பிடிக்கும் நான்கு அணிகள்  இணைந்து  16 அணிகள்  இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு ''ஏ'யில் ஆர்ஜென்ரீனா, பல்கேரியா, இத்தாலி, தென்கொரியா, குழு ''பீ'யில் மெக்ஸிகோ, பரகுவே, பெல்ஜியம், ஈரான்,  குழு ''சி'யில் ÷Œõவியத் ரஷ்யா, பிரான்ஸ், ஹங்கேரி, கனடா, குழு ''டி'யில் பிரேஸில், ஸ்பெ#ன், நெதர்லாந்து, அல்ஜிரியா, குழு ''ஈ'யில்  டென்மார்க், மே.ஜேர்மனி, உருகுவே, ஸ்கொட்லாந்து,  குழு ''எப்'இல் மொராக்கோ, இங்கிலாந்து, போலந்து, போத்துகல்  ஆகியன  மோதின.
மெக்ஸிகோ, பல்கேரியா, சோவியத் ரஷ்யா,பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா, உருகுவே, பிரேஸில்,  போலந்து, இத்தாலி, பிரான்ஸ், மொராக்கோ, மே.ஜேர்மனி, இங்கிலாந்து,  பரகுவே, டென்மார்க், ஸ்பெ#ன் ஆகிய 16 நாடுகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகின. இதில் வெற்றிபெற்ற நாடுகள் கால் இறுதியில் விளையாடத் தகுதிபெற்றன.

பிரேஸில், பிரான்ஸ், மே.ஜேர்மனி, மெக்ஸிகோ,   ஸ்பெ#ன், பெல்ஜியம்   ஆகியவற்றுக்கிடையேயான  கால் இறுதிப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் பிரேஸில், மே.ஜேர்மனி, பெல்ஜியம்  ஆகியன பெனால்ரியில் வெற்றிபெற்று அரை இறுதிக்குத் தெரிவாகின. ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து,  ஆகியவற்றுக்கிடையேயான  போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து பரபரப்பாக இருந்த வேளையில் 86ஆவது நிமிடத்தில் உயர்ந்து வந்த பந்தை தலையால் மோதுவதற்குப் பதிலாக கையால் தட்டி கோலாக்கினார் மரடோனா.
தலா இரண்டு முறை சம்பியனான ஆர்ஜென்ரீனாவும், மே.ஜேர்மனியும் இறுதிப்போட்டியில் மோதின. 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜென்ரீனா  சம்பியனானது. மூன்றாவது முறை சம்பியனாகும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட  மே.ஜேர்மனி, மூன்றாவது முறை இரண்டாம் இடம்பிடித்து ஆறுதலடைந்தது. பெல்ஜியம், பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 4-2 என்ற கோல்களால்  வெற்றிபெற்ற பிரான்ஸ் மூன்றாம் இடம் பிடித்தது.
ஐந்து கோல்கள் அடித்த மரடோனாவுக்கு கோல்டன் போல் விருது வழங்கப்பட்டது.  ஆறு கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் சரிலிங்கர் கோல்டன்  ஷூ விருது பெற்றார்.
ரமணி 
சுடர் ஒளி 23/03/14

உலகக்கிண்ணம் 2014

அமெரிக்கா
ஜேர்மனி,  போத்துகல் ஆகியவற்றுடன் அமெரிக்கா, கானா ஆகியனவும் குழு ''ஜி'யில் உள்ளன. வடஅமெரிக்காவிலிருந்து அமெரிக்கா தகுதிபெற்றது. ஆபிரிக்கா  கண்டத்திலிருந்து கானா தகுதிபெற்றது. 2010ஆம் ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டியின் கால் இறுதியில் அமெரிக்காவும், கானாவும் சந்தித்தன.  பரபரப்பான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் வெற்றிபெற்ற கானா அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
                                          அமெரிக்கா
அன்ரிகுவா அன்ட்  பார்படாஸ், கௌதமாலா,  ஜமேக்கா ஆகியவற்றுடன் மூன்றாவது தகுதிகாண் போட்டியில் குழு ''ஏ'யில்  விளையாடிய அமெரிக்கா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றது.  ஒரு போட்டியைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து  13 புள்ளிகளுடன் நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. அமெரிக்கா 11 கோல்கள் அடித்தது. அமெரிக்காவுக்கு   எதிராக நான்கு  கோல்கள் அடிக்கப்பட்டன. கிளின்ட் டெம்சி எட்டு கோல்களும், ஜோஸ் அஸ்ரிடேவின் நான்கு கோல்களும்  அடித்தனர்.
ஹொண்டூராஸ், கொஸ்ராரிகா, மெக்ஸிகோ, ஜமாசியா, பனாமா ஆகியவற்றுடன் குழு ''ஏ'யில் விளையாடிய அமெரிக்கா ஏழு போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து  13 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிரேஸிலுக்குச் செல்வதை உறுதிப்படுத்தியது.
ஹொண்டூராஸுடனான முதலாவது போட்டியில் அமெரிக்கா தோல்வியடைந்ததும் பயிற்சியாளரின் மீது  கடுமையான விமர்சனம் எழுந்தது. அப்போது பரீட்சார்த்தமான முயற்சியைக் கைவிட்டு அனுபவம் உள்ள வீரர்களை   விளையாடுவதற்கு அனுமதித்தார். அமெரிக்காவுக்கு எதிராக 25 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.

ஜோர் கன்கிரிஸ்மான் அமெரிக்காவின் பயிற்சியாளராக உள்ளார்.   உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி அணியின் வீரர் இவர். 80 சர்வதேச போட்டிகளில் 38 கோல்கள் அடித்துள்ளார். மத்தியகள வீரரான  கிளின்ட்டெம்சி அணித்தலைவராக உள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களில் 50 கோல்கள் அடித்துள்ளார்.  மைக்கல் பிரட்லி அமெரிக்க அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அமெரிக்க  அணியின் முன்னாள் பயிற்சியாளராக  பொப்பின் மகன். மிகத் துரிதமாக பந்தை கையாளும் இவரை ரோம் கழகம்  ஒன்று 3.5 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தம்  செய்துள்ளது.  82 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஜோன் புரூக்ஸ், ரிம் யஹாவாடி பிரட் ஸான் கமரோன், பிரெக்  யஐகா மயூர் எட்யூ ஆகியோர் ஐரோப்பியக் கழகங்களுக்கு  விளையாடும் வீரர்களாவர்.  ஜோன் ஹக்ர கிளாடியோ,  ரெயான் பிர்ரெ#ன் மக்பினரட் ஆகியோர் முன்னாள் வீரர்களாவர்.  1930ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய அமெரிக்கா 10ஆவது முறையாக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்   விளையாடுவதற்காகுத் தகுதிபெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டு குழு ''சி'யில் இங்கிலாந்து, ஸ்லோவேனியா, அல்ஜிரியா ஆகியவற்றுடன் விளையாடியது. ஒரு போட்டியில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தியது.  புள்ளி அடிப்படையில்  முதலிடம் பிடித்து கால் இறுதியில் கானாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. 

கானா
             கானா                                           உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக ஆபிரிக்காவிலிருந்து தகுதிபெற்ற நாடு கானா.  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக பிளேஓவ் போட்டி வரை காத்திருந்தது கானா.
லெசோகோ, ஸாம்பியா, சூடான் ஆகிய நாடுகளுடன் குழு ''டி'யில் விளையாடிய கானா  ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து 24 புள்ளிகளைப்  பெற்றது.  கானா 18 கோல்கள் அடித்தது. எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. லெசோகோவுக்கு எதிராக 7-!0 கோல் கணக்கிலும், சூடானுக்கு எதிராக 40 கோல் கணக்கிலும் வெற்றிபெற்றது.
உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறும் பிளேஓப் போட்டியில் கானாவும் எகிப்தும்  மோதின.  முதலாவது போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற கானா நம்பிக்கையுடன் இரண்டாவது போட்டியை எதிர்கொண்டது. இரண்டாவது  போட்டியில் 21 கோல் கணக்கில்   தோல்வியடைந்தது.  இரண்டு நாடுகளும்  தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் இரண்டு போட்டிகளிலும் கானா ஏழு கோல்களும் எகிப்து மூன்று கோல்களும் அடித்தன. அதிக கோல்கள்  அடித்த  கானா பிரேஸில் பயணத்தை உறுதிசெய்தது.
அஸமோ கயன் ஆறு கோல்களும் சுல்லி முன்தாரி, அப்துல்வரிஸ் ஆகியோர் தலா மூன்று கோல்களும் அடித்தனர்.  கானாவுக்கு எதிராக 14 மஞ்சள் அட்டைகளும், ஒரு சிவப்பு  அட்டையும் காட்டப்பட்டன.
ஜேம்ஸ் கெவிஸ் அப்பாச்சி கானா அணியின் பயிற்சியாளராக உள்ளார். அஸமோ கயன் அணித்தலைவராக உள்ளார். 2010ஆம் ஆண்டு அரை இறுதிப் போட்டியில் இவர் அடித்த பெனால்ரி கோல் ஆகவில்லை. கெவின்பிரின்ஸ்,  மைக்கல் எஸைன், சுல்லிமுன்தா ஆகியோர் நம்பிக்கை தரும் வீரர்களாவர்.  அபெடிபீலே,  சாமுவல் குபோர்,  இப்றாஹிம் சன்டே ஆகியோர் முன்னாள் வீரர்களாவர்.
2006ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. 2010ஆம் ஆண்டு அரை இறுதியில்  உருகு வேயிடம்  பெனால்ரியில் தோல்வியடைந்தது.
ரமணி 
சுடர் ஒளி 23/03/14

Thursday, March 27, 2014

தமிழக அரசிய்லில் குழம்பிய கூட்டணி


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடான கூட்டணி என்று தமிழருவி மணியனால் விதந்துரைக்கப்பட்ட  மோடி, விஜயகாந்த், வைகோ, டாக்டர் ராமதாஸ் அடங்கிய  கூட்டணி நாளொரு பிரச்சினையும் பொழுதொரு சிக்கலுமாகக் கூடியுள்ளது.
கூட்டணிக்குத் தலைமை வகிப்பது யார்? யாருக்கு அதிக தொகுதிகள் என்ற பிரச்சினை முற்றியவேளை  ராமதாஸும், விஜயகாந்த்தும் தன்னிச்சை வேட்பாளர்களை  அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். மோடிக் காக வாக்குக் கேட்கமாட்டேன் என்ற விஜயகாந்த், இறுதியில் மனம்மாறி  மோடியை பிரதமராக்க வேண்டும். என பிரசாரம்  செய்ய ஆரம்பித்துள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியியின் தலைமை யிலான  கூட்டணி என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் கூட்டணியின் தலைவர் தானே  என்பதை விஜயகாந்த் உணர்த்துகிறார். பரம எதிரிகளான விஜயகாந்தும் டாக்டர் ராமதாஸும்  ஒரே கூட்டணியில் இருந் தாலும் ஒருவரின் காலை ஒருவர் இழுத்து விடுவதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் தமிழகத்தில் இருந்து தூக்கி எறிவதற்காக கூட்டணி அமைக்கப்பாடு பட்ட தமிழருவி மணியன்  வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனக் கருதுகிறார். இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக பிரசாரம் செய்யப்போவதில்லை என வெறுப்புடன் அறிவித்துள்ளார். தமிழக அரசியலில் என்றுமில்லாதவகையில் பெருத்த குழப்பங்களுடன் ஒரு கூட்டணி அமைந்துள்ளது.

ஒரு தொகுதிக்கு மூன்று தலைவர்களும்  குடுமிப்பிடி   சண்டை போட்டார்கள். தமது வெற்றிக்குச் சாதகமான தொகுதிகளை  விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று சிறு பிள்ளைகள்போல் சண்டையிட்டார்கள். இவர்களா இந்தியாவை ஆட்சி செய்யப் பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக்  கூட்டணி வெற்றிபெற்றால் அமைச்சரவையில் இடம்பிடிப்பதிலும் பலத்த போட்டி  இருக்கும்.
கூட்டணிக் குழப்பத்தால் தமிழகப் பக்கம் செல்வதற்கு அஞ்சிய  பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தொகுதி பங்கீடு பற்றிய சாதக சமிக்ஞை கிடைத்ததும் நிம்மதி அடைந்துள்ளனர். விஜயகாந்த் 14, பாரதீய ஜனதாக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தலா 8,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்க ழகம் 7, கொங்கு நாட்டு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன தலா  ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. தேர்தல் கூட்டணி பற்றிய இழுபறிகள் ஓரளவு பூர்த்தியாகிவிட்டன. விஜயகாந்த் நினைத்ததுபோல் அதிக தொகுதிகளைப் பெற்றுவிட்டார். ராமதாஸும், வைகோவும் விஜயகாந்தைவிட குறைந்த தொகுதிகளைப் பெற்றுள்ளனர். மற்ற கட்சிகளைவிட தாம் அதிக தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்றே சகல தலைவர்களும்  மனதுக்குள் நினைக்கின்றனர்.
பாரதீய ஜனதாவின் கூட்டணி என்றே வைகோவும், டாக்டர் ராமதாஸும் நினைக்கின்றனர். தனது தலைமையிலான  கூட்டணி என்று விஜயகாந்த் நினைக்கிறார். எப்படியாவது வெற்றிபெற வேண்டும்,  மந்திரி சபையில் இடம்பிடிக்க வேண்டும் என்றே   பாரதீய ஜனதாக் கட்சியினர்  நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பலமான  கூட்டணி என்ற கோஷத்துடன் ஆரம்பமான கூட்டணி குழப்பத்துடன் நிறைவு பெற்றுள்ளது.





இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்ற புகழுடன் வலம் வந்த காங்கிரஸ் தமிழகத்தில் செல்வாக்கிழந்துள்ளது. தமிழகத்தின் தீண்டாக்கட்சியான காங்கிரஸுடன் கூட்டணிசேர சிறிய கட்சிகள்  கூட முன்வரவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முதலாக கூட்டணி இல்லாது தேர்தலுக்கு முகம் கொடுக்கப்போகிறது காங்கிரஸ். தோல்வி உறுதி எனத் தெரிந் துகொண்ட தமிழகத் தலைவர்கள் போட்டியிடப் போவதில்லை எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மத்தியில்  ஆட்சியிலிருந் தபோது தமிழக மக்களின் துயரை துடைக்க முன்வராத காங்கிரஸுக்கு  தேர்தலுக்கு முன்பே பலத்த அடி விழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு  வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக இல்லை என்பது வெளிப் படையானது.  செத்த பாம்பைப்போல் கிடக்கும் காங்கிரஸை தோற்கடிப்போம் என ஜெயலலிதா அறை கூவல்  விடுத்துள்ளார். ஜெயலலிதா  சொன்னாலும்  சொல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்குத் தள்ளப்படப்போவது நிச்சயம்.  செல் வாக்கானபோது கோஷ்டி பூசலினால் ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிய காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது எனத் தெரியாது தடுமாறுகின்றனர். கவிழ்ந்துபோன கப்பலில் இருந்து  கரை தெரிகிறதா என நோட்டமிடுகின்றனர்.  தமிழக காங்கிரஸ் கட்சியின்  தலைவர்கள் துவண்டு போயுள்ளனர். தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர்.

கூட்டணிக்குள் இருந்த சிறுசிறு பிரச்சினைகளை முடித்துவிட்டு தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளது  திராவிடமுன்னேற்றக் கழகம். திராவிடமுன்னேற்றக் கழகத்தின் எதிரி  வெளியே இல்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தை மதுரையில் மண்கௌவச் செய்வேன் என சபதம் எடுத்துள்ளார் அழகிரி. அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும்  தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட  பணத்தை முழுவதுமாகச் செலவளித்துள் ளார்.  நாடாளுமன்றத்தில் ஒருவருடனும்  பேசாது அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர். மொழிப் பிரச்சினையால் மூத்த அரசியல்வாதிகளுடன் அதிகம் பேசாது தனிமையிலே இனிமை கண்டார்.அழகிரிக்கு எதிராக திராவிட முன்னேற்றக்கழகம் காய் நகர்த்திவரும் வேளையில் பிரதமர் மன்மோகன், ரஜினி,  பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர்   ஆகியோரைச் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அழகிரியின் செயற்பாடுகளால் எரிச்சலடைந்த  திராவிட முன்னேற்றக் கழகம் அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அடங்காத அழகிரி ஒவ்வொரு  முறையும் ஒவ்வொரு அறிக்கை விட்டு  பரபரப்பைக் கிளப்புகிறார். அப்பாவை எதிர்க்கமாட்டேன். அப்பாவைச் சுற்றி சதிகாரர்கள் உள்ளனர். அப்பாவை மீட்கப் போகிறேன்  என அவ்வப் போது அறிக்கை விடுத்த அழகிரி,  மோடி பிரதமரானால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.



பாரதீய ஜனதாக் கூட்டணிக்காக பிரசாரம் செய்ய வைகோ தயாராகிவிட்டார். 40 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஸ்டாலினும், இலங்கை ஜனாதிபதியும் சேர்ந்து  தன்னைத் தோற்கடிக்கப் போவதாக வைகோ கூறியது அதிர்ச்சியளித்துள்ளது. இவ்வளவு மோசமாக வைகோ பேசுவார் என்று யாருமே கருதவில்லை.வைகோவும், புலிகளும் இணைந்து ஸ்டாலினுக்கு குறிவைப்பதாக குற்றம் சாட்டியே  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்தில் இலங்கை ஜனாதிபதியையும், ஸ்டாலினையும் இழுத்துள்ளார் வைகோ.

தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி என்று கருதி இருந்தவேளையில்  ஐந்வதாக கோதாவில் குதித்துள்ளன இடதுசாரிகள். தமது பலவீனம் பற்றி நன்கு தெரிந்து கொண்டே தனித்துப் போட்டி என அறிவித்துள்ளன. விஜயகாந்துக்கு தூது அனுப்பிய கருணாநிதி இடதுசாரிகளுக்கும் தூது விட்டார். தோழர்கள் வந்தால் சந்தோஷப்படுவேன் என்ற அவரின் வார்த்தை ஜாலம் இடதுசாரிகளின் காதில் விழவில்லை. நான்காவது இடம்பிடிப்பது இடதுசாரிகளா, காங்கிரஸா என்ற போட்டி நடைபெற உள்ளது. புத்தசாலிகளான இடதுசாரித் தலைவர்கள் போட்டியிடாது தோழர்களை களமிறக்கியுள்ளனர்.

தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்கெதிராக  நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்கு வங்கியில் சிறிதளவு வீழ்ச்சி அல்லது முன்னேற்றம் ஏற்படும். கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி வெற்றி தோல்விக்கு வழிவகுக்கும். கடைசி நேரத்தில் முடிவு செய்யும் வாக்காளர்களால்  தேர்தல் கருத்துக் கணிப்புகள் மாறுவதுண்டு.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி தேர்தலின் முடிவில் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை ஏற்டலாம். வெற்றி வாய்ப்பு இல்லாத கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? தமிழக கட்சிகள் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி சேர வில்லை என காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்தால் எதிர்பார்த்த முடிவில் மாற்றம் ஏற்பட லாம். காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதாக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார் கள். திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் இதனால் பயனடையலாம்.
நடுநிலையாளர்களின் வாக்கும் தேர்தல் முடிவில் ஆதிக்கம் செலுத்தலாம். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை உதாசீனம் செய்த  ஜெயலலிதாவுக்கு  வாக்களிக்க வேண்டுமா? கூட்டணி சேர்வதற்கே இத்தனை நாள் இழுத்தடித்த பாரதீய ஜனதா    கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமா? தமிழகத்தை மாற்றான் மனப்பான்மையுடன் நோக்கிய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டுமா?    பத்து வருடங்கள் ஆட்சியில் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து விட்டு காங்கிரஸை நடுத்தெருவில் விட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  வாக்களிக்க வேண்டுமா என நடுநிலையாக வாக்காளர்கள் சிந்தித்தால் அவர்களின் வாக்கு சிதறிவிடும்.
தமிழகத்தில் ஐந்துமுனைப் போட்டி என கருதப்பட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேதான் உண்மையான போட்டி நடைபெறும்.

வர்மா 
சுடர் ஒளி  23/03/14

Friday, March 21, 2014

நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவதும் கலைதான்

நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவதும் கலைதான்

உடுவை தில்லை நடராஜா.

அரசில் உயர் பதவி வகிப்பவர். இலக்கிய உலகில் தனக்கென‌ ஒரு இடம் பிடித்து வைத்திருப்பவர். ஆன்மீகப் பக்கத்திலும் தடம் பதித்தவர். ஓய்வின்றி வேலை செய்யும் நிலையிலும் நாடகத்துக்கென நேரம் ஒதுக்கி நாடக மேடையிலும் தனது முத்திரையைப்பதித்தவர் உடுவை தில்லை நடராஜா.


மாணவப்பருவத்திலேயே பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதி இருந்தார். தில்லை நடராஜா என்ற பெயரில் வேறு இருவர்  எழுதிய ஆக்கங்களை இவர் எழுதியதா சிலர் பாராட்டிய போது, தனக்கென ஒரு தனித்துவமான பெயர் வேண்டும் எனச்சிந்தித்து உடுவை தில்லை நடராஜா என்று தன‌து தனித்துவத்தை அடையாளப்படுத்தினார். 

சில்லையூர்,தாளையடி தெளிவத்தை, வதிரி என ஊர்ப் பெய‌ரைச் சொன்னதும் எழுத்தாளர்களின் பெயர்  பிரதிபலிப்பது போல உடுவை என உச்சரித்தாலே தில்லை நடராஜா என்ற பெயர் மனதிலே ஒட்டிக்கொள்ளும். 

உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் க.பொ.த[சா/தா] தரம் வரை படித்தபின் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்தார்.மாணவப்பருவத்திலே நடிக்க ஆரம்பித்த உடுவை தில்லை நடராஜா அரசில் உயர் பதவி வகித்தபோதும் நடிப்பைக் கைவிடவில்லை. நடிகர்கள் கேவலமானவர்கள் அல்லர். உயர்வாகப்பார்க்கப்பட வேண்டியவர்கள் என நிரூபித்துள்ளார். தன‌து நாடக அனுபவங்களை மனம் திறந்து வெளிப்படுத்துகிறார். 

கே; சிறுவயதிலேயே எழுத்து நாடகம் என  இரண்டிலும் தடம் பதித்தீர்கள். இது எப்படிச்சாத்தியமானது? 

ப; அப்பாதான் காரணம். பாடசாலையில் படிக்கும் போதே புத்தகங்கள் வாங்கித்தருவார்.கூட்டங்கள், நாடகம், படம் ஆகியவற்ருக்குப் போகும் படி கூறுவார்.கல்கண்டு,கரும்பு ஆகிய புத்தகங்களை விரும்பிப் படித்தேன்.ப‌டித்து முடிந்ததும் கதையைக்கேட்பார்.படம் ,நாடகம் என்றாலும் அப்பபடித்தான். இலக்கியம், அரசியல் கூட்டங்களுக்குப்போனால் அங்கு ந‌டைபெற்றதைக் கூறவேண்டும். மறுநாள் பத்திரிகையில் நான் சொல்லாத தகவல் ஏதும் வந்தால் ஏன் சொல்லவில்லை என்று கேட்பார். அந்தப் பயிற்சி பின்னாளில் உயர் பதவி வகிக்கும் போதும் எனக்கு உதவுகிறது.


கே; மாணவப்பருவத்து எழுத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

ப; பத்திரிகைகளில் எனது பெயருடனும்,படத்துடனும் கதைகள் பிரசுரமானபோது தனி உலகத்தில் மிதந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் என்னைப்பற்றி உயர்வாகப்பேசினர். ஈழநாடு,சுதந்திரன் ஆகியவற்றில் எனது எழுத்துக்கள் வெளியாகின. அப்போதே சில தொடர்கதைகளும் எழுதினேன். ராஜகோபல், சிவகுருநாதன் ஆகியோர் என்னை உற்சாகப்படுத்தினர்.அப்பா வேலை செய்த யாழ்.தில்லைபிள்ளை லக்ஷ்மி விலாசில் டொமினிக் ஜீவா போன்றவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.


 கே.கே.எஸ் வீதியில் உள்ள தமிழ்ப் பண்னை புத் சாலை,லங்கா புத்தகசாலை,மறவன்புலோ சச்சிதானந்தத்தில் காந்தளகம் அச்சகம் ஆகியவற்றுக்கு அடிக்கடி போவதனால் அதிகமான புத்தகங்கலைப் ப‌டிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. காசு கொடுக்காமல் அதிக புத்தகங்களைப் படித்தேன்.பின்னர் அரசு காசுதந்து ஆலயங்களுக்குப்போய் ஆய்வு செய்யச்சொன்னது. தணிக்கை சபை உறுப்பினராக இருந்ததனால் படம் பார்க்க காசு தந்தார்கள். இவை எல்லாம் மற்றவர்களை விட எனக்குப்புதுமையான அனுபவங்கள்.

கே;நாடகத்தின் பக்கம் உங்கள் பார்வை எப்போது திரும்பியது?

ப; அருள் எம்பெருமான்தான் எனக்கு முதன் முதலில் நடிக்கச்சந்தர்ப்பம் தந்தார். அதன் பின்னர் திருமதி சிவராஜா எனக்கு நாடகப்பயிற்சி தந்தார். அருள் எம்பெருமானின் "உலகம் போறபோக்கைப்பாரு", திருமதி சிவராஜாவின் "சகுந்தலை","வீரபாண்டியகட்டபொம்மன்" ஆகியவை பாடசாலை காலத்தில் எனக்கு பெருமை தேடித்தந்தவை.

கே; நாடகத்தில் நடிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


ப; மிகவும் பெருமையாக இருக்கும்.அரசனாக நடிக்கும் போது அம்மாவின் சீலையை தாறுபாச்சி உடுத்துவார்கள். பருத்தித்துறையச்சேர்ந்த சீன் சிவலிங்கம் என்பவரிடம் அரச உடுப்பு வங்குவேன். முகத்துக்கு ம் உத்துவெள்ளை பூசுவார்கள். சப்பாத்துக்கு தங்க சரிகை ஒட்டி முன்னுக்கு கூர்வைத்து வடிவமைப்போம். மேக்கப் செய்வதை சிலர் வந்து புதினம் பார்ப்பார்கள். புதினம் பார்க்கவரும் சிறுவர்களைக் கலைப்போம். எல்லம் கொஞ்ச நேரம் தான்.பிறகு மேக்கப் அரிக்கத்தொடங்கும்.தலையில்வைத்த டோப்பாவின் மனம் வயிற்றைப்புரட்டும்.எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதான் நடிப்போம்.தேங்காய் எண்னெய் போட்டுத்தான் மேக்கப்பைக்களைய வேண்டும்.

கே; நாடகமேடை அனுபவத்தில் உங்களைப்பாதித்த சம்பவம்?

ப; யாழ் இந்துக்கல்லூரி வைரவிழாவின் போது யாழ்ப்பாணம் தேவனின் நாடகத்தில் கம்பனாக நடித்தேன். எனக்கான ஒப்பனை முடிந்ததும் அங்கு வந்த சொக்கன் என்னைப்பார்த்தார். "தம்பி, கம்பன் ஆழ்வார் அவர் விபூதி பூசுவதில்லை. ஒப்பனையை மாற்று" என்றார். அவரின் ஆலோசன எனக்குப்பிடிக்கவில்லை. நான் ஏறுமாறாகப்பேசிவிட்டேன்.அவர் யார் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.நாடகம் முடிந்ததும் எனது நண்பர்களான பாமா ராஜகோபாலன்,சபாரட்ணம்,பெருமாள்,கோபு ஆகியோர் ஒப்பனையின் குறையைச்சுட்டி காட்டினார்கள்.அதன் பின் சொக்கனிடம் நான் மன்னிப்புக்கேட்டேன்.

கே; உங்களுக்குப் புகழைத்தேடித்தந்த நாடகங்கள் எவை?

 

ப; தேவன் யாழ்ப்பாணம் எழுதிய தெய்வீகக்காதல்,சொக்கனின் இராஜ ராஜசோழன்,ஞானக்கவிஞன்,சங்கிலி யோகனாதனின் கல்லறைக்காதல், எஸ்.எஸ். கணேசபிள்ளையின் அசட்டு மாப்பிள்ளை,சி.சண்முகத்தின் வாடகை வீடு ஆகிய நாடகங்கள் எனக்குப் புகழைத்தேடித்தந்தன.

 

கே;யாழ்ப்பாணத்தில் நாடகம் நடித்த உங்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே நடிப்பதற்கான சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?

 

ப; எனது முதல் வேலை  என்ன என்பது பலருக்குத் தெரியாது. பொலிஸ் திணைக்களத்தில் எழுது வினைஞ‌ராகக் கடமையாற்றினேன் அதுதான் எனது முதல் வேலை.வவுனியாவில் வேலை செய்தபோது முற்றவெளி திறந்தார்கள். எனக்குப் பழைய நாட‌கவியாதி பிடித்தது. அங்கு ந‌ண்பர்களுடன் நாடகங்கள் நடித்தேன். அப்போதுதான் மு.பாக்கியநாதன்,அவரின் தம்பி பாக்கியராஜா,வதிரி.சி.ரவீந்திரன் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.கொழும்புக்கு மாற்றாலாகியபின் எஸ்.எஸ்.கணேசபிள்ளையும் நானும் ஒரே அறையில் இருந்தோம். அதன்பின் எனது வளர்ச்சியைப்பார்த்து நானே வியந்தேன்.

 

கே; கொழும்பு நாடக அனுபவம் எப்படி இருந்தது?

 

ப; மில்கவைற்றின் ஆதரவில்வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அசட்டு மாப்பிள்ளை நாடகம் நடந்தது. நாடகம் முடிந்ததும் நடிகர்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் உடை மாற்றிக்கொண்டிருந்ததனால் என்னை அழைக்கத் தாமதமானது.அப்போது சபையிலிருந்து தில்லை நடராஜா என்று பலர் சத்தம் போட்டார்கள். வவுனியாவில் இருந்துவந்த நண்பர்கள் தான் சத்தம் போட்டதாக பின்னர் அறிந்தேன்.


கே; நாடகங்களை அரங்கேற்றுவது இலகுவானதாக இருந்ததா?

 ப; நடிக்கும்போது அந்தப்பிரச்சினை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.நாடகத்தை மேடை ஏற்றும்போதுதான் பிரச்சினைகள் தெரிய ஆரம்பித்தன. நான் பொலிஸ் என்பதனால் எல்லோரும் எனக்கு உதவி செய்தனர். வாகன‌ வசதி, நிதி உதவி எல்லாம் எனக்கு தாராளமாகக் கிடைத்தன. 

கே; பொலிஸில் இருந்து அரச உயரதிகாரியான பின்பும் நீங்கள் நடிப்பதை நிறுத்தவில்லையே. என்ன காரணம்? 

ப; நடிப்பது இழிவான செயலல்ல. உயரதிகாரியானபின் எனது திறமையை வெளிக்காட்டுவதில் தவறில்லை. எனக்குக் கீழே இருப்பவர்களும் அப்போதுதான் தம‌து திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இளவாலை ஹென்றி அரசன் பாடசாலையின் நிதி உதவிக்காக அசட்டு மாப்பிள்ளை நாடகம் நடத்த எஸ்.எஸ். கணேசபிள்ளையிடம் கேட்டார்கள். தில்லை நடித்தால் நான் தயார் என்றார்.அப்போது நான் அர‌ச‌ அதிப‌ராக‌ இருந்தே. என்னிட‌ம் கேட்டார்க‌ள். நானும் ஒப்புத‌ல‌ளித்தேன். ஜோன் டீ சில்வா அர‌ங்கில் ந‌டைபெற்ற‌ அந்த‌ நாட‌க‌த்தின் மூல‌ம் மூன்று இல‌ட்ச‌ம் ரூபா நிதி சேர்ந்த‌து. என‌து உத‌வியினால் அதிக‌ள‌வி நிதி சேர்ந்த‌தையிட்டு நான் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டேன். 

கே; உங்க‌ளின் திற‌மையை எப்ப‌டி நீங்க‌ள் ப‌ட்டை தீட்டினீர்க‌ள்? 

ப‌; அப்ப‌டி ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் என‌க்கு வ‌வுனியாவில் கிடைத்த‌து. நாட‌க‌த்துக்கான‌ அறிவித்த‌ல்க‌ள் த‌வ‌று என சில ந‌ண்ப‌ர்க‌ள் சுட்டிக்காட்டினார்க‌ள். என‌து அறிவித்த‌ல்க‌ளை ஒலிப்ப‌திவு செய்து பார்த்த‌போது  த‌வ‌றை உண‌ர்ந்தேன்.அத‌ன் பின்ன‌ர் எப்ப‌டிப்பேசுவ‌து என‌ ஒத்திக்கை பார்த்தேன். 

கே; நாட‌க‌த்தின் ப‌க்க‌ம் அதிக‌ அக்க‌றையுட‌ன் நீங்க‌ள் செய‌ற்ப‌ட‌ ஊக்க‌ம் த‌ந்த‌து யார்?

ப‌; அம்மாவின் அம்மாவுட‌ன் சென்று வ‌ல்லிபுர‌க்கோவிலில் ந‌டைபெறும் நாட‌க‌ங்க‌ளைப்பார்ப்பேன். தேருக்கு முத‌ல் நாள் போய் தேரில‌ன்று நாட‌க‌ம் ந‌டை பெறும் நாடகத்தைப் பார்த்து விட்டு அடுத்த‌ நாள் தான் வீட்டுக்கு வ‌ருவேன்.வி.வி.வைர‌முத்து, கொக்குவில் செல்வ‌ராசா ஆகியோரின் நாட‌க‌ங்க‌ள் எம‌து ஊரில் போட்டிக்கு ந‌டைபெறும். வீர‌ப‌த்திர‌ர் கோவிலில் வி.வி.வைர‌முத்துவின் நாட‌க‌மும், விதானையார் ப‌ட‌லையில் கொக்குவில் செல்வ‌ராசாவின் நாட‌க‌மும் ந‌டைபெறும். ஏட்டிக்குப் போட்டியாக‌ விள‌ம்ப‌ர‌ம் செய்வார்க‌ள்.அரிச்ச‌ந்திர‌ம‌யான‌காண்ட‌ம் ப‌ல‌ரின் ந‌டிப்பில் பார்த்தேன். வி.வி. வைர‌முத்துவுக்கு ஈடு இணை யாருமில்லை. 

கே; ம‌ற‌க்க‌முடியாத‌ அனுப‌வ‌ம்?

ப‌; எழுதும‌ட்டுவானில் ந‌டைபெற்ற‌ நாட‌கத்தை ம‌ற‌க்க‌முடியாது. வானொலி நாட‌க‌க்க‌லைஞ‌ர்க‌ள் ந‌டிக்கும் ஆறு நாட‌க‌ங்க‌ள் ந‌ட‌க்கும் என்று ஒரு வார‌மாக‌ விள‌ம்ப‌ர‌ம் செய்தார்க‌ள். மாலை ஆறு ம‌ணிக்கு ஆர‌ம்ப‌மாகும் என்ற‌ நாட‌க‌ம் இர‌வு 10 ம‌ணிக்கு ஆர‌ம்ப‌மான‌து. மூன்று ம‌ணிக்கு நாட‌க‌ம் முடிந்து விட்ட‌து. ச‌ன‌ம் க‌லைய‌வில்லை. இன்னும் ந‌டியுங்கோ அல்‌ல‌து பாடுங்கோ என்றார்க‌ள். எங்க‌ளுக்கும் ச‌ந்தோஷ‌ம். எம்ம‌வ‌ர்க‌ள் த‌ம‌து திற‌மைக‌ளை வெளிப்ப‌டுத்தினார்க‌ள். கடைசியாக‌த்தான் எம‌க்கு உண்மைதெரிய‌வ‌ந்த‌து. அதிக‌மான‌வ‌ர்க‌ள் அய‌ற்கிராம‌ங்க‌ளில் இருந்து வ‌ண்டிலில் வ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ரும்போது லாம்பு கொண்டுவ‌ர‌வில்லை. விடியும் வ‌ரை காத்திருக்க‌ வேண்டும் என்ப‌த‌னால்தான் எங்க‌ளை ந‌டிக்கும்ப‌டி கூறினார்க‌ள்.


கே; ப‌யிற்சிய‌ளித்தால் ந‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் முன் வ‌ருவார்க‌ளா?
ப‌;கொழும்பிலே மிக‌வும் குறைவான‌ சாத்திய‌மே உள்ள‌து. அன்ர‌னி ஜீவா சில‌ முய‌ற்சிக‌ள் செய்கிறார். க‌லைச்செல்வ‌னும் இதில் முய‌ற்சி செய்தார். பேராசிரிய‌ர் மெள‌ன‌குரு, குழ‌ந்தை ச‌ண்முக‌ம் ஆகியோர் த‌ம‌து பிர‌தேச‌த்தில் செய்வ‌தாக‌ அறிந்தேன்.

கே; நீங்க‌ள் ந‌டிப்ப‌தைப்ப‌ற்றி உங்க‌ளுக்கு இணையான‌ உய‌ர் அதிகாரிக‌ள் என்ன‌ க‌ருதுகிறார்க‌ள்?   


ப‌; அவ‌ர்க‌ளும் அதை வ‌ர‌வேற்கிறார்க‌ள். ந‌டிக‌ர் காமினிதிச‌நாய‌க்காவுட‌ன் நான் ப‌ணியாற்றிய‌போது ந‌டிக‌னுக்கு முன்னால் இன்னொரு ந‌டிக‌ன் என‌ பெருமையாக‌க் கூறினார்.சில‌ விருந்துக‌ளின் போது ம‌ற்ற‌‌வ‌ர்க‌ளை ம‌கிழ்விக்கும்செய‌ல்க‌ளைச்சில‌ர் செய்வார்க‌ள். சிலர் பாடுவார்கள். சிலர் நடிப்பார்கள்.சிலவேளை நடிப்பென்று தெரியாமல் ஏதாவது செய்வார்கள்.க‌டைசியில் தான் அது ந‌டிப்பென்று ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குத்தெரியும்.

அண‌மையில் எம‌து பாட‌சாலை ப‌ழைய‌ மாண‌வ‌ர் விழா கொழும்பில் ந‌டைபெற்ற‌போது  ஏதாவ‌து ந‌டியுங்க‌ள் என்று ந‌ண்ப‌ர் விஜ‌ய‌பால‌ன் கேட்டார். அங்கிருந்த‌ ஜெய‌சோதியுட‌ன் க‌தைத்துவிட்டு நான் போய்விட்டேன். அவ‌ர் ச‌த்த‌மாக‌ உடுவையைக்க‌ண்டீர்க‌ளா என‌க்கேட்டார். அவ‌ர் ப‌ல‌ரிட‌ம் கேட்ட‌போது அன‌வ‌ரும் என்னைத்தேடினார்க‌ள். பின்ன‌ர்தான் அது ந‌டிப்பு என‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குத்தெரிந்த‌து.

கே; தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளீர்களா? 

ப‌ ; ரூபவாஹினியில் விக்ரர் ஹென்றி கொடவின் தொடர் நாடகத்தி நடித்தேன். விஸ்வநாதன் நெறியாள்கை செய்தார். 

கே; பலரின் நாடகத்தில் நடித்திருக்கிறீர்கள் நீங்கள் நாடகம் எழுதினீர்களா?



ப; பலநாடகங்கள் எழுதினேன்.ஈழநாடு 10ஆவது ஆண்டுவிழாவில் மேடை ஏறிய பூமலர் என்ற ஓரங்க நாடகம் பரிசு பெற்றது. பல வானொலி நாடகங்கள் எழுதினேன். 

கே; உங்களுடைய நாடக வெற்றிக்கு யார் காரணம்? 

ப; எனக்கு நடிக்கச் சந்தர்ப்பம் தந்தவர்களும், என்னுடன் நடித்தவர்களும் தான் காரணம். மயில்வாகனம் சர்வானந்தா, கமலினி செல்வராஜா,அச்சுதன்,ராஜபுத்திரன் யோகராஜா, விஜயாள் பீற்றர்,ஏ.எம்.சி.ஜெயசோதி போன்ற‌வ‌ர்க‌ளின் ஒத்துழைப்பும் என‌து வெற்றிக்குக் கார‌ண‌ம்.

கே;  எதிர்கால கால நாடக‌‌ உல‌க‌ம் எப்ப‌டி இருக்கும் என‌ நினைக்கிறீர்க‌ள்?


ப‌; ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் நாட‌க‌மும் அர‌ங்கிய‌லும் இருப்ப‌த‌னால் புதிய‌ எழுச்சி பெறும் என‌ நினைக்கிறேன்.


ரவி
சுட‌ர் ஒளி 09/03/14

Thursday, March 20, 2014

ஒளி அரசி

அன்பு,அறிவுத்திறன்,போட்டி,வாழ்த்து,பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களுடன் மகளிர்தின சிறப்பிதழாக மார்ச்மாத ஒளி அரசி மலர்ந்துள்ளது.

'பெண்கல் வியாபாரப்பண்டமல்ல பேணிப்பாதுகாக வேண்டிய பொக்கிஷம்' என்கிறார் இம்மாத இல்லத்தரசியான கலாபூஷணம் நூருல் அயில் நஜ்முல். 'பிரச்சினைகளுக்கு அஞ்சமாட்டேன் தீர்ப்பதற்கு முயற்சி செய்வேன்' என்கிறார் இம்மாத மங்கையான யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சு. வேணுகா.தும்பளையில் இயங்கும் வலிந்துதவு சமூக சேவை அமைப்பின் செயற்பாடுகள் பற்றி விபரிக்கிறார் . பருத்திதாசன்.

சேவை செய்வதையே நோக்கமாகக்கொண்டு வாழும் சுதேச மருத்துவர் உமாபதி ஸ்ரீசங்கரின் சேவை பற்றிய சிறப்புக்கண்ணோட்டம்,உயர் கல்விகற்கும் மாணவியை அதிபரும் ஆசிரியைகளும் சந்தேகப்பட்டதனால் கல்வியைத்தொடர முடியாது தவிக்கும் மாணவியின் உண்மைக்கதை, அப்பாவின் மிதிவண்டி குறும்பவிமர்சம்,குழந்தை ர்ப்பில் ந்தையின் மை என்பன் சிறப்பம்சமாகஉள்ள‌.

ரொமான்ஸ் சியங்கள், ட்டுச்சேலை ரிசாகப்பெறும் ட்டுரை, களிர் சிறப்புக்கதை, றைந்தஎழுத்தார் திக்கம் சிவயோகரின் நினைவுகள்,டாக்டர் எஸ்.அருள்ராமலிங்கம் ரும் பெண்களுக்கானருத்துவக்குறிப்புகள்,காதலி தேடிக்கொடுத்தனைவி[தொடர்கதை],இரண்டு காதுகளும் ஒரு வாயும் கிடைத்திருப்பன் காரம் ற்றி வெற்றியாளர் ரொபின் ர்மா ரும் விளக்கம்,சிறுவர்பகுதி போன்றசுவையானஅம்சங்கள் மார்ச்மாத ஒளி அரசியில் உள்ள‌.

'தாமரையின் உயம் எவ்வவு' என்றகுட்டிக்கதையின் மூலம் நாம் உயவேன்டியஅவசியத்தை ஒளி அரசியின் ஆசிரியத்தலையங்கல் தெளிவுபடுத்தி உள்ளது. நீரின்  உயம் அதிகரிக்கஅதிகரிக்கரையின் உயமும் அதிகரிக்கும்.

ஊர்மிளா

 சுடர் ஒளி 09/03/14

ஸ்பெய்ன் 1982

அதிக அணிகள் , அதிக பார்வையாளர்கள் புதிய முறை என்பவற்றுடன் ஸ்பெய்ல் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டி களைகட்டியது. ஜூன் மாதம் 13ஆம் ஆண்டு முதல் ஜூலை 11ஆம் திகதி வரை நடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 24 நாடுகள் பங்கு பற்றின. 14 கோல்கள் அடிக்கப்பட்டன. 2109 23 பேர் பார்வையிட்டு புதிய சாதனை படைத்தனர். 109 நாடுகள் தகுதிகாண் போட்டியில் பங்குபற்றின. நெதர்லாந்தும், மெக்ஸிகோவும் தகுதிபெறவில்லை. அல்ஜீரியா கமரூன், யஹாண்டுராஸ், குவைத் , நியூஸிலாந்து ஆகியன உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
அரை இறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் பெனால்ரி மூலம் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்பட்டது. 24 நாடுகளும் ஆறு பரிவுகளாகப்  பரிக்கப்பட்டன. ஒரு பரிவில் தலா நான்கு நாடுகள் இடம்பெற்றன.
குழு 1இல் போலாந்து, இத்தாலி, கமரூன், பெரு ஆகியன போட்டியிட்டன. முதலிடம் பெற்ற போலாந்து இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. இத்தாலி, கமரூன் ஆகியன விளையாடிய மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன. இரண்டும்  சமமான புள்ளிகளைப் பெற்றன. அதிக கோல்கள் அடித்த இத்தாலி அடுத்தடுத்த சுற்றுக்குத் தெரிவானது.
குழு 2இல் ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா, சிலி ஆகியன  விளையாடின. இத்தாலி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து நான்காவது இடம்பிடித்தது.  மே.ஜேர்மனி , ஒஸ்ரியா, அல்ஜீரியத ஆகிய மூன்நு நாடுகளும் மூன்று போட்டிகளில்  விளையாடின.மூன்று நாடு களும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தன. மூன்று நாடுகளும்  தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. ஆறு கோல்கள் அடித்த ஜேர்மனி முதல் அணியாக இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.  அல்ஜீரியா ஐந்து கோல்களும்   ஒஸ்ரியா மூன்று கோல்களும் அடித்தன.  அல்ஜீரியாவுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிககப்பட்டதால் ஒஸ்ரியா இரண்ஙடவது சுற்றுக்குத் தெரிவானது.
  பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா  , ஹங்கேரி, எல்சல்வடோர்  ஆகியன குழு 3இல் விளையாடின. எல்சல்வடோருக்கு எதிராக 10-1 என்ற  அதிக கோல்கள் அடித்து  ஹங்கேரி சாதனை படைத்தது.
இங்கிலாந்து, பிரான்ஸ், செக்கஸ்லோ வியா, குவைத் ஆகியன குழு 4இலும், நெதர் லாந்து, ஸ்பெய்ன்,யூகஸ்லோவியா, ஹொண்டுராஸ் ஆகியன  குழு 5இலும், பிரேஸில், ரஷ்யா, ஸ்பெய்ன் நியூஸிலாந்து  ஆகியன  குழு 6இலும் விளையாடின. சோவியத்ரஷ்யா, ஸ்பெய்ன் ஆகியன சமபுள்ளிகளைப் பெற்றன. அதிக கோல் அடித்த ஸ்பெய்ன் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகினது.
போலந்து, சோவியத்ரஷ்யா,பெல்ஜியம் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் போலாந்தும், சோவியத்ரஷ்யாவும்  சமபுள்ளிகளைப் பெற்றதனால் அதிக புள்ளிகளைப் பெற்ற போலந்து அரை இறுதிக்குத் தெரிவானது.
ஜேர்மனி, இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகியன  2ஆவது குழுவிலும், இத்தாலி, பிரேஸில், ஆர்ஜென்ரீனா ஆகியன குழு 3இலும், பிரான்ஸ், ஒஸ்ரியா, நெதர்லாந்து ஆகியன  குழு 4இலும் விளையாடின.
போலந்து, பிரான்ஸ், இத்தாலி, மே. ஜேர்மனி ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளும் அரை இறுதியில் மோதின. போலந்துக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற இத்தாலி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.  ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்ரி யின் மூலம்  5-4 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி இறுதிப்போட்டியில்  விளையாடத் தகுதிபெற்றது.
1934/ 38  ஆம் ஆண்டுகளில்  சம்பியனான இத்தாலியும் 1954ஆம் ஆண்டு சம்பியனான மே.ஜேர்மனியும் இறுதிப்போட்டியில் சந்தித்தன. 1966ஆம் ஆண்டு ஜேர்மனியும், 1990ஆம் ஆண்டு இத்தாலியும் இறுதிப் போட்டிவரை முன்னேறி சம்பியன் கிண்ணத்தைத் தவறவிடடன. பரபரப்பான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. 40 வயதான  இத்தாலிய கப்டன் டினோ ஸ்பி சம்பியன் கிண்ணத்தை உயர்த்திப்பிடித்தார். 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்திய போலந்த் மூன்றாம் இடம்பிடித்தது.
இத்தாலிய வீரரான ரோஸி கோல்டன் ஷூ விருதைப் பெற்றார்.
பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் குவைத் விளையாடியபோது நடுவர் தவறு செய்ததாகக் கூறி குவைத்தின்  உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரான  மன்னர் பஹாஹ் மைதானத் தினுள்சென்று நடுவருடன் தர்க்கப்பட்டார். அவரின் கட்டளைப்படி குவைத் வெளியேறிய தால் பிரான்ஸ்  வெறறி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இச்சம்பவத்தின் காரணமாக பஹாத்துக்கு 14அயிரம் டொலர் தண்டப்பணமாகச் செலுத்தினார். 
 அல்ஜிரியா அணித்தலைவராக செயற்பட்ட  சலாட் அசாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதி என கருதிய அல்ஜிரியா தூக்குத் தண்டனை வதித்தது.

ரமணி 
சுடர் ஒளி 16/03/14

Wednesday, March 19, 2014

கலை இலக்கியப் பார்வைகள்

திறனாய்வாளர், எழுத்தாளர், ஒலிபரப்பாளர், பத்திரிகையாளர் எனபல துறைகளில் ஆழமாகக்  கால்பதித்துள்ள கே.எஸ். சிவகுமாரன் எழுதி பத்திரிகை, சஞ்சிகை ஆகியவற்றில் பிரசுரமான கட்டுரைகள் அடங்கிய 'கலை இலக்கியப் பார்வைகள்' எனும் நூல் மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கவிதை, இலக்கியம், சிறுகதைகள், இசை, ஈழத்து ஆங்கில இலக்கியம், நவீன குறுங்காவியம், உருவக்கதைகள், பெண்ணியமும் தேசியமும்,  சமூக முன்னேற்றத்துக்கான பத்திரிகைகளின் பங்களிப்பு,  சிறுவர் இலக்கியம், இலங்கைக்கான புதிய சிந்தனை ஆகியவை பற்றிய  கே.எஸ். சிவகுமாரனின்  ஆழமான பார்வையுடனான கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன.
இலங்கையில் ஒரு காலத்தில் பொப் இசைப் பாடல்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.  வானொலியில் பொப்பாடல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேடைகளிலும் பொப்பாடல்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டது. பொப் என்பதன் அர்த்தம் தெரியாத நிலையில்தான் அதனை எல்லோரும் ரசித்தார்கள். "பொப்" என்றால் பொப்பியூலர் என்ற ஆங்கிலப் பதத்தின் சுருக்கம்.  அதன் அர்த்தம் தெரியாமல்தான் நம்மவர்கள் அப்பெயரைக் கொடுத்ததாக விளக்குகிறார்.
பொப்பியூலர் என்றால் மக்களிடம் பிரபல்யமானது என்று பொருள். சினமாப் பாடல்களையும் பொப் பாடல்கள் என அழைக்கலாம் என்கிறார்.

ஈழத்து ஆங்கில இலக்கியம் தமிழர்முஸ்லிம்கள்  பங்களிப்பு என்ற கட்டுரையில் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார் எஸ்.கே.கே.க்ரௌதர் ராஜாப் ரொப்டர்.   அழகு சுப்பரமணியம், ஸி.வி.வேலுப்பிள்ளை, கவிஞர் தம்பிமுத்து, வின்ஸண்ட் துரைராஜ், ஈ.ஸி.டி. கந்தப்பா, ஜீன் அரச நாயகம் யாம், செல்லத்துரை, அ.சிவானந் தன், ஜெகதீஸ்வரி கனகநாயகம், சுரேஷ் கனகராஜா ஆகியோர் பற்றிய சிறுகுறிப்புகளைத் தந்துள்ளார்.
இப்பங்களிப்பைச் செய்தவர்களுள்  பலர் கிறிஸ்தவர்களாகவும், முழுத்தமிழர் அல்லாத வர்களாகவும் (அதாவது இவர்கள் கலப்புத் திருமணம் காரணமாகப் பிறந்தவர்கள் எனலாம்) இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
 புனைகதை இலக்கியத்தில் முக்கியமான வடிவமாக உருவகக்கதை  உள்ளது. எம்.ஜி.எம். முஸம்மிலின் 'பரதிபலன்' என்ற உருவகக் கதைத் தொகுப்பு பற்றிய கே.எஸ். சிவகுமாரனின் பார்வையின் மூலம்  உருவகக்கதை பற்றிய பல தகவல்கள் கிடைக்கின்றன. உருவகக்கதையின் மூலம் வாசகர்களின்  மனதில் இடம்பிடித்த வி.எஸ்.காண்டேகர் சுவோ எஸ். பொ பற்றியும் தனது பார்வையைப் பதித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் சிவகுருநாதனைக் கௌரவித்து திருகோணமலையில் நடந்த விழாவில் கே.எஸ்.சிவகுமாரன் ஆற்றிய சிறப்புரை 'முன்னேற்றத்தில் பங்களிப்பு' எனும் தலைப்பல்  தொகுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை நிறுவனத்தின் பணிகளைப் பட்டியலிட்டு ஒரு செய்தி எத்தனைபேரின் மேற்பார்வையின் பின்னர் பரசுரமாகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகைகளின்  பக்கச்சார்புத் தன்மைகளால் உண்மையான நிலைமையை வாசகர்கள் அறியமுடியாத நிலைமை உள்ளது. இது பக்கச்சார்பானது. சிங்கள, ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகள்  அனைத்தும் இதனையே தான் செய்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறார்.
சாந்தராஜ், நீர்கொழும்பு, ந.தருமலிங்கம், அகளங்கன், புலோலியூர், ந.இரத்தின வேலோன், சி.சிவாணி, சி.எஸ்.எம்.மன்ஸூர் அன்புமுகைதீன், தில்லைச்சிவன், ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம், எஸ் அகத்தியன், மாத்த ஹஸீனா, ஓ.கே.குணநாதன், அமரர் இரா.சிவலிங்கம், அமரர் சோம சுந்தரம்  ஆகியோரைப் பற்றிய  பதிவுகளும் இந்நூலில் உள்ளன.
சிந்தாமணி வார இதழில் தொடர்கதையாக  வெளிவந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற 'ஷாமிலாவின் இதயராகம்' பற்றிய விரிவான பார்வையைத் தந்துள்ளார்.
ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு உதவும் பொக்கிஷமாகக் கலை இலக்கியப் பார்வைகள் எனும் நூல் உள்ளது.


நூல் :! கலை இலக்கியப் பார்வைகள்
ஆசிரியர் :! கே.எஸ். சிவகுமாரன்
வெளியீடு :! மீரா பதிப்பகம்
விலை:!ரூ. 250


சூரன்
 சுடர் ஒளி 16/03/14

உலகக்கிண்ணம் 2014

           ஜேர்மனி
ஜேர்மனி, போர்த்துக்கல், கானா, அமெரிக்கா ஆகிய நாடுகள் குழு ஜி பிரிவில் உள்ளன. ஜேர்மனி, போர்த்துக்கல் ஆகியன ஐரோப்பி யாவிலிருந்தும், ஆபிரிக்காவிலிருந்து கானாவும்,  வட அமெரிக்காவிலிருந்து   அமெரிக்காவும் இக்குழு வில் இடம்படித்துள்ளன.
மிகப்பலமான  அணிகளில் ஒன்றாக  ஜேர்மனி விளங்குகிறது. ஜேர்மனி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  போத்துகல் ஓர் இடம் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளது.  அமெரிக்கா ஓர் இடம் முன்னேறி 13ஆவது இடத்திலும், கானா 13இடங்கள் கீழிறங்கி 3ஆவது இடத்திலும் உள்ளன.

                                       ஜேர்மனி
ஜேர்மனிக்கு எதிராக விளையாடும் நாடுகளின் பட்டியலைப் பார்த்ததும் ஜேர்மனிய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மிக இலகுவாக ஜேர்மனி இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும்  என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
பரோஸ் தீவுகள், ஒஸ்ரியா, அயர்லாந்து, சுவீடன், கஸகஸ்தான்  ஆகிய நாடுகளுடன் குழு சீ பிரிவில் ஜேர்மனி போட்டியிட்டது. ஒன்பது போட்டிகளில்  வெற்றிபெற்று ஒரு  போட்டியைச் சமப்படுத்தி 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றது. ஜேர்மனி,  36 கோல்கள் அடித்தது.  எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன. அவற்றில் ஏழு கோல்களை  சுவீடன்  அடித்தது. ஜேர்மனிக்கு எதிராக 16 மஞ்சள் அட்டைகள் காண்பக்கப்பட்டன.
அயர்லாந்துக்கு எதிராக 6-0 கோல்கணக்கில் வெற்றிபெற்றது. சுவீடனுக்கு எதிரான முதலாவது போட்டியில் இரு நாடுகளும் தலா நான்கு கோல்கள் அடித்ததால் சமநிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில்  ஜேர்மனி வெற்றி பெற்றது. ஐரோப்பாக் கண்டத்தில் அதிக கோல்கள் அடித்து சாதனை  செய்துள் ளது ஜேர்மனி.
மூன்று முறை சம்பயனானது. மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடி  தோல்வியடைந்தது. 82, 86ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் விளையாடி  தோல்வியடைந்து  90ஆம் ஆண்டு சம்பியனானது. 86ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந் தது. 90ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவை வீழ்த்தி  சம்பியனானது. தொடர்ந்து மூன்று முறை இறுதிப் போட்டியில் விளையாடி சாதனைப் படைத்தது.
2006ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டும் அரை இறுதிவரை முன்னேறி மூன்றாம் இடத்தைப் படித்தது. 99 போட்டிகளில் விளையாடி 222 கோல்கள் அடித்தது.
ஜோசிம்லோ, அணியின் பயிற்சியாளராக உள்ளார். முன்னாள் பயிற்சியாளரான கிலிஸ்மானுக்கு உதவியா ளராக இருந்தவர். பெயன் மூனிச்சின் வீரரான பிலிப்லெஹாம் தலைமை வகிக்கிறார். பயிற்சியாளரும், அணித் தலைவரும் கடந்த இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியவர்கள். மனுவல் நெயர் கோல் கீப்பராக இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. பிலிப்லெகானுடன், செஸ்மர் பஸ்ரியன்,  ஒஸில்,  தோமஸ் முல்லர். இவர் கடந்த உலகக் கிண்ணப் போட்டியில்  இளம் வீரராகத் தெரிவா னார். மைக்ரோ ரியூஸ், ரொனி குரூஸ், கெஸ்ரிஜீப் ஆகியோர் இருப்பது எதிரணிக்குச் சவாலானது. மெசுல் ஒஸில் 8 கோல்களும், ரியூஸ் 6 கோல்களும் அடித்துள்ளனர்.
கிரேட் முல்லர், லொகார் மத்யூஸ் ஆகியோர் முன்னாள் வீரர்களாவர். 1934ஆம் ஆண்டு முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய ஜேர்மனி,  18ஆவது தடவையாக  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளது. 1930 ஆம் ஆண்டு தகுதி பெறவில்லை. இரண்டாவது உலக யுத்தம் காரணமாக 1950ஆம் ஆண்டு ஜேர்மனி தடை செய்யப் பட்டது.
2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் குழு டி யில் ஜேர்மனி, கானா, அவுஸ்திரேலியா, சேர்பியா ஆகியன மோதின. இரண்டு வெற்றிகளை யும், ஒரு தோல்வியையும் சந்தித்த ஜேர்மனி,  ஆறு புள்ளி களுடன் முதலிடம் படித்து இரண்டாவது சுற்றுக்குத் தெரி வாகியது. இரண்டாவது சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி யில்  4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. கால் இறுதியில் ஆர்ஜென்ரீனாவுடன் மோதி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய் னுடன் விளையாடி   தோல்விய டைந்தது. அரை இறுதியில் தோல்வியடைந்த ஜேர்மனி,  உருகுவே ஆகிய வற்றுக்கிடையே யான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடம் படித்தது.
இந்தக் குழுவில் இரண்டாம் இடம் பிடித்த கானா,  கால் இறுதியில் 1-0 என்ற கோல்  கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது. ஜேர்மனி, கானா ஆகிய இரண்டு நாடுகளும் இந்த முறையும் ஒரே குழுவில் உள்ளன. கடந்த முறை இரு நாடுகளையும் வீழ்த்திய  ஸ்பெய்ன் சம்பிய னானது

                                                     போத்துகல்
கிறிஸ்ரியானி ரொனால்டோ என்ற தனி ஒரு வீரருக்காகவே இலட்சக்கணக்காக ரசிகர்கள் போத்துகல் அணியை விரும்புகிறார்கள். ஐரோப்பாக் கண்டத்திலிருந்து  பளே ஓவ் மூலம் கடைசியாகத் தகுதிபெற்ற நாடு. சுவீடனுக்கும், போத்துகலுக்கும் இடையேயான பிளே ஓவ்போட் ரொனால்டோவுக்கும், இப்றாஹி மிவோவிச்சுக்கும்  இடையேயான பலப்பரீட்சை யாகவே நடந்தது.
ரொனால்டோ,  இப்றாஹிமிவோவிச் ஆகிய இருவரும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினார்கள். முதல் போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இரண்டாவது போட்டியில் ரொஙனால் டோ   மூன்று கோல்களும், இப்றாஹிமிவோவிச் இரண்டு கோல்களும் அடித்தனர். 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் பொஸ்னியாவுடன் பளே ஓவ் போட்டியில் வெற்றிபெற்றுத்தான் போத்துகல் தகுதி பெற்றது. இக்குழுவில் இருந்து  இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் சந்தர்ப்பம் உள்ளது.
லெஸ்ஹம் பேர்க், அஸபைசான், ரஷ்யா, அயர்லாந்து, இஸ்ரேல், போத்துகல் ஆகிய குழு  எப் ல் விளையாடின. ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி யடைந்து 21  புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. போத்துகலுக்கு எதிராக 11 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. போத்துகல் 20 கோல்கள் அடித்தது. எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப் பட்டன. ரொனால்டோ  எட்டு கோல்களும், கோலாஸ் அகஸ்ரின் ஆறு கோல்களும் அடித்தனர்.
பாலோபென்ரோ பயிற்சியாளராக உள் ளார். முன்னாள் மத்தியகள, பன்கள வீர ரான இவர், அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள் ளார். கிறிஸ்ரியானி ரொனால்டோ தலைவராக உள்ளார். பெபே, புருனோ அல்விஸ், பபயோ கொசன்ரோ ஆகியோர் பலமான வீரர்களாவர்.
1966ஆம் ஆண்டு முதல்முதல் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய போத்து கல் ஆறாவது  முயாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.
ரமணி 
சுடர் ஒளி 16/03/14

Tuesday, March 18, 2014

கொள்கை மாறிய விஜயகாந்த்

கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் போட்டியாக விஜயகாந்த் அரசியலில் களம் இறங்கியபோது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்ற ஒறைற்வரிக் கோஷம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தித்  தொண்டர்களாக்கியது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் வாக்குகளைச் சிதறடித்து தமிழகத்தின் பிரதான திராவிடக்கட்சிகளின் வெற்றியைப் பாதித்தது.
தமிழகத்தில் சமபலத்துடன் வாக்கு வங்கியைக்கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளை வீழ்த்த முடியும் என்ற விஜய காந்தின் கனவு சகல தேர்தல்களிலும் தவிடு பொடியானது.ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்தால்தான் வெற்றிபெறமுடியும் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்து கொண்ட விஜயகாந்த் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கட்சித் தொடர்களினால் போற்றிப் புகழப்பட்ட விஜயகாந்தின்  எதிர்கால அரசியல் ஜெயலலிதாவின் கையில் ஒப்படைக்கப்பட்டது. வீதி அபிவிருத்திக்காக  விஜயகாந்தின் திருமணமண்டபத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டது. திருமண மண்டபம் இடிக்கப்படுவதை தவிர்ப்பற்காக அன்றைய முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் விஜயகாந்த். திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை உடைக்காது மாற்று திட்டத்தை  முன்வைத்தார் விஜயகாந்த். அவரின்  விருப்பம்  நிராகரிக்கப்பட்டது.
ஆசையுடன் கட்டிய திருமண மண்டபத்தை இடித்த கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கையுடன் ஜெயலலிதாவிடம் சரணடைந்தார் விஜயகாந்த். அவரின் விருப்பத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்.இந்தக் கூட்டணியின் பலமும், 2ஜி ஊழலும் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா முதல்வரானார்  எவரும் எதிர்பார்க்காத வகையில் விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவரானார்.திராவிட முன்னேற்றக்கழகம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.பெயருக்குத்தான் எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் பவனிவருகிறார். உத்தியோகபூவமற்ற எதிர்க்கட்சியாக திராவிட முன்னேற்றக்கழகம்  செயற்படுகிறது. விஜயகாந்தின் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  தமிழக சட்டசபை உறுப்பினர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகளை ஜெயலலிதா செவிமடுத்தார். விஜயகாந்தை எதிர்ப்போர்  ஜெயலிதாவிடம் சரணடைந்தனர். அவர்களைக் கட்சியிலிருந்து விலக்க முடியாது திணறுகிறார் விஜயகாந்த்.

கருணாநிதியை பழிவாங்கி வெற்றிபெற்றது போல் ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளார் விஜயகாந்த்.நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து ஜெயலலிதாவை தோற்கடிப்பேன் என்ற விஜயகாந்த் யாருடன் கூட்டணி அமைப்பது என்று உறுதியான முடிவெடுக்காது பாரதீய ஜனதாக்கட்சி, திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ரகசிய பேச்சை நடத்தினார். தன்னை தேடி வருபவர்களுக்கு படி கொடுக்காது நழுவினார். சிங்கப்பூர், மலேஷியா ஆகிய  நாடுகளுக்கு விஜயகாந்த் சென்று வந்தபோது  கூட்டணி பேச்சுக்காக விஜயகாந்த் வெளிநாடு பயணம் என்று செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் அடிபடும். இதனை விரும்பிய விஜயகாந்த் தனது மதிப்பு உயர்வதாக கணித்தார். 
டில்லியின் பிரதமர் மன்மோகனை விஜயாகாந்த் சந்தித்தபோது புதிய கூட்டணி என்ற செய்தி விறுவிறுப்பாக  வலம் வந்தது. தமிழக மீனவர் பிரச்சினைக்காகவே பிரதமரை சந்தித்ததாக  விஜயகாந்த் கூறினார். பிரதமர் பதவியிலிருந்து  வெளியேறுவதற்காக நாட்கனை எண்ணிக்கொண்டிருக்கும் மன்மோகனுடன்  தமிழக மீனவர் பிரச்சினை குறித்து எடுத்துரைத்தேன் என்றார். புதிய பிரதமரை சந்தித்து இக்கோரிக்கையை விடுத்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.  பத்து வருடங்களாக பிரதமராக இருக்கும்    மன்மோகனுக்கு தமிழக மீனவர்களின்  பிரச்சினை பற்றி விஜயகாந்த் சொல்லித் தான் தெரியவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 
தமிழக சட்டசபை உறுப்பனர்களுடன் டில்லியில்  பிரதமரை சந்தித்த விஜயகாந்த் சோனியா,ராகுல் ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதேவேளை பாரதீய ஜனதாக்கட்சியுடனும் அவரது நம்பிக்கைக்குரியவர்கள் தொடர்பு வைத்திருந்தனர். இதையறிந்த காங்கிரஸ் கதவை இழுத்து மூடி  சந்திப்பைத் தடுத்தது. பெரும் எடுப்புடன் டில்லிக்குச் சென்ற விஜயகாந்தின் படை வெறும் கையுடன் சென்னைக்குத் திரும்பியது.





இந்திய அரசியல் வரலாற்றில் கூட்டணிக்காக மற்றைய தலைவர்களை  அலையவைத்த அரசியல் தலைவராக விளங்குகிறார் விஜயகாந்த்.  காலநிலை மாறுவதுபோல விஜயகாந்தின் அரசியல் நிலையும் அடிக்கடி மாறியது. விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியாது பாரதீய ஜனதாக்கட்சி, திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தடுமாறின.
தேசியக்கட்சிகளும், மாநிலக்கட்சி களும் தன் பின்னால் அலைவதை வெகுவாக ரசித்த விஜயகாந்த், தனது மதிப்பு உயருவதாக எண்ணி போக்குக் காட்டினார். விஜயகாந்தின் நடவடிக்கையினால்  காட்டமடைந்த திராவிட முன்னேற்றக்கழகம் விஜயகாந்தின் வரவை எதிர்பார்க்காது தொகுதிப் பங்கீட்டை முடித்தது.

ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே தனது கொள்கை என்று அறிந்த விஜயகாந்த், வேறு வழியின்றி பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதிக தொகுதிகள் கூட்டணிக்குத் தலைமைத் தாங்குவது மைத்துனர் சுதீஷிக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி, தேர்தல் செலவுக்குப் பணம் இவையே விஜயகாந்தின் மிக முக்கியமான கோரிக்கைகள்.
விஜயகாந்த், வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகிய மூவரும் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். யாருடன் கூட்டணி என்று தெரியாமலே தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ். அவர் அறிவித்த தொகுதிகளில் சில தமக்கு வேண்டும் என்று  விஜயகாந்தும், வைகோவும் கூறுகின்றனர். தமக்கு வெற்றி வாய்ப்புக்குச் சாதகமான தொகுதிகளைப் .பிடித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுகின்றனர். கூட்டணி தர்மத்தை மீறி வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ் கொஞ்சம் இறங்கி வர சம்மதித்துள்ளார். தனது மகன் அன்புமணிக்கு  ராஜ்யசபா எம்..பி. வேண்டும் என்பதே ராமதாஸின் முக்கியமான நிபந்தனை.
ராமதாஸும், விஜயகாந்தும் கூட்டணி யில் இருந்தாலும் இருவரும் இணைந்து மேடையேறமாட்டார்கள். ராமதாஸின் வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்தும், விஜயகாந்தின் வேட்பாளருக்கு ஆதரவாக ராமதாஸஸும் .பிரசாரம் செய்யமாட்டார்கள். இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்புக்கு இது பாதகமாக அமையலாம். ராமதாஸின்  கட்சி முன்நிறுத்திய வேட்பாளருக்கு விஜயகாந்தின் ஆதரவாளர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. விஜயகாந்தின் வேட்பாளருக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
பாரதீய ஜனதாக் கூட்டணிக்கு வைகோ என்ற .பிரசாரப் பீரங்கி கிடைத்துள்ளார். அவருடைய பேச்சைக் கேட்பதற்கு மக்கள் அதிகளவில் கூடுவார்கள். இந்தக் கூட்டணி யில் .பிரதம பேச்சாளராக வைகோ உள்ளார். மக்கள் மனதைக் கவரும் பேச்சாளர் வேறு  எவரும் இக்கூட்டணியில் இல்லை. வைகோவை வீழ்த்த வேண்டும்  என திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் கங்கணம் கட்டியுள்ளன.இதனால் வைகோ தனது தொகுதியிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

தேர்தல்  பற்றிய  அறிவிப்பு வெளியான .பின்னர் தலைவர்களும் தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குவார்கள்.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான .பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமிழந்து விட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை மலைபோல் நம்பயிருந்து காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று  திராவிட முன்னேற்றக்கழகம்  தீர்மானம் நிறைவேற்றினாலும் இறுதி நேரத்தில் கூட்டணி சேரலாம் என்ற நப்பாசையில் காலம் கடத்தியது  காங்கிரஸ்.கருணாநிதியின் பிடியில் இருந்த திராவிட முன்னேற்றக்கழகம் முற்றுமுழுதாக ஸ்டாலினின் வசம் வீழந்துள்ளது. கழகத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அனைத்துக்கும் முடிவு காணவேண்டும் என உறுதியுடன்  செயற்படுகிறார் ஸ்டாலின். அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த அழகிரி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். அழகிரியின் ஆசிர்வாதத்துடன் கலகம் செய்தவர்களும் அடக்கப்பட்டுவிட்டனர். கழகத்துக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வரும் பிரச்சினைகளை  எதிர்கொள்ளத் தயாராகி விட்டார் ஸ்டாலின்

 
 திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாது தேர்தலைச் சந்திப்போம் என்று வீரவசனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடங்கி ஒடுங்கிவிட்டனர்.  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சி எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின. காங்கிரஸுடன் கூட்டணி இல்லை  என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பு எல்லாவற்யும் காங்கிரஸ் கட்சி தீர்த்து வைக்கவில்லை என்று ஸ்டாலின் தெளிவுபடக் கூறிவிட்டார். 2ஜி ஊழல் விவகாரம் சி.பி.ஐயின் சோதனை, நோய் வாய்பட்டிருக்கும்  தயாளு அம்மையாரை விசாரிக்க  வீட்டை நீதிமன்றமாக மாற்றியது. மீனவர் பிரச்சினை  இலங்கைப் பிரச்சினை என ஸ்டாலின் பட்டியலிட்ட குற்றச்சாட்டுகளுக்குக் காங்கிரஸ் தலைவர்களினால் பதிலளிக்க முடியவில்லை.

கூட்டணி இல்லாது தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பது தமிழக காங்கிரஸ்  தலைவர்களுக்கு நன்கு  தெரியும் ஆகையினால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை  என அறிவித்துள்ளனர்.  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ராஜ்ய சபா  எம்.பியான ஜி.கே.வாசன் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சி பலவீன மாக இருக்கும் நிலையில்  வாசன் தகப்பனின் கட்சியைத்தூசு தட்டி புனரமைப்புச் செய்வார் என அடிக்கடி  செய்திகள் வெளியானபோது  மறுத்து வந்தார் வாசன். இப்படி ஒரு நிலை ஏற்படும் எனத் தெரிந்திருந்தால்  தகப்பனின் கட்சியைப் பலப்படுத்தி இருக்கலாம் என இப்போது கருதுகிறார்.
சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஞான தேசிகன், தங்கபாலு , இளங்கோவன்  ஆகிய தமிழகத் தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர். கடந்த 10 வருடங்களாக அமைச்சர்களாகவும், எம்.பியாகவும் பவனி வந்தவர்களுக்கு  தோல்விப்பயம்  ஏற்பட்டுள்ளது. தமது தொகுதியை உரியவகையில் கவனித் திருந்தால் பயமின்றிக் களமிறங்கி இருக்கலாம்  தேர்தல் காலத்தில் மட்டும் தொகுதியை எட்டிப்பார்க்கும்  தலைவர்கள் தாமாகவே ஒதுங்கிவிட்டனர்.

திராவிட முன்னேற்றக்கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் முதன் முதலாக அதிக தொகுதிகளில் நேரடியாக  போட்டியிடுகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை  நிறுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் துணை இன்றி 40தொகுதி களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்குவது இதுவே முதல்முறை. திராவிட முன்னேற்றக்கழகம் ஐந்து தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இந்த 35 தொகுதிகளில்  இரண்டு  கட்சி களும்  நேரடியாக மோதுகின்றன.

தமிழகத்தில் அதிகளவு வாக்குவங்கி இல்லாத  பாரதீய ஜனதாக்கட்சியுடன் விஜயகாந்த் இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியின் வாக்குவங்கி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்,அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும்  சவால் விடக்கூடியளவு பலமானதல்ல. இந்த வாக்குவங்கியின் தரவுகளின் அடிப்படையிலேதான் ஸ்டாலினும், ஜெயலலிதாவும் தமது பலத்தைக் காட்ட களமிறங்கியுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்   வெற்றி தோல்விதான் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர் தலைத் தீர்மானிக்கும்  சக்தியாக இருக்கும். ஸ்டாலினினும், ஜெயலலிதாவும் இதை உணர்ந்துள்ளனர் போல் தெரிகிறது. கூட்டணி இல்லாது தமது பலத்தைக் காட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முகங்கொடுக்க அஞ்சுகின்றனர். தேர்தலில் போட்டியிடாது பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் பிரபலமான காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவும், ஊழல் வேட்பாளர்களுக்குப் போட்டியாகவும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு  சகல பக்கங்களிலிருந்தும் அடிவிழுகிறது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டபொழுதே அதன் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அதன் தலைவர்கள் சிலர் நம்புகிறார்கள்.
தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இது வரை காலமும் பதவியில் வசதியும், சுகமும் அனுபவித்த காங்கிரஸ் தலைவர்கள் இக் கட்டான  இந்நிலையில் கட்சியை கைவிட முயற்சிப்பதை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. தேர்தல் நடைபெறும் முன்பே தாம் தோற்று விட்டதாக  காங்கிரஸ்  தலைவர்கள்  நம்புகிறார்கள்.

வர்மா 
சுடர் ஒளி 19/03/14