Wednesday, November 30, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 13




குடும்பத்தை வழிநடத்தவேண்டிய அண்ணன், தம்பியின் மனைவியைச் சீரழிக்க முயற்சி செய்யும் ஒருவரிக்கதை தான் வாலி. கூட்டுக் குடும்பம் பண்பாடு கலாசாரம் என்ற கட்டுக் கோப்பிலிருந்து வெளியேறும் ஒரு காமுகனைப் பற்றிய கதையை தடம் மாறாமல் முடிந்திருக்கிறார் எஸ்.ஜேசூர்யா.
ஒரே உருவம் கொண்ட இரட்டைப் பிறவியான அண்ணன் வாய்பேச‌ முடியாதவன். தம்பி உல்லா ச‌மான பேர்வழி. அழகான ஒரு பெண்ணைக் கண்டு மையல் கொள்கிறான் அண்ணன். அவளை யே மனைவியாக்க வேண்டும் என்று தேடி அலைந்து தோல்வி அடைகிறான் அண்ணன். தான் ஒரு தலையாகக் காதலித்த பெண் தம்பியின் மனைவியானதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். தம்பியின் மனைவி என்றாலும் பரவாயில்லை அவளை அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறான்.
தம்பியின் முதலிரவு ஏற்பாடு தடல்புடலாக நடக்க ஆத்திரம் மேலிடத் துடிக்கிறான் அண்ணன். கனகச்சிதமாகத் திட்டமிட்டு முதலிரவைத் தடை செய்கிறான். உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி தம்பியின் மனைவியைக் குழப்புகிறான். அண்ணன் யார் தம்பி யார் என்று தெரியாது குழம்புகிறாள் தம்பியின் மனைவி. அண்ணனின் ச‌தியை அறிந்த தம்பியும் மனைவியும் அதிர்ச்சியடைகின்றனர். அண்ணனைத் திருத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அண்ணன் சுட்டுக் கொல்ல‌ப்படுகிறான்.
வாய்பேச‌ முடியாத அண்ணனாகவும் தம்பியாகவும் இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார் அஜித். நாயகன் அஜித்தையும் வில்லன் அஜித்தையும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். அஜித்தின் திரையுலக வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்திய படம் வாலி. அண்ணன் அஜித், தம்பி அஜித் ஆகிய இருவருக்கும் இணையாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றவர் நாயகி சிம்ரன்.
1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் மிகச் சிறந்த ஒரு நடிகையான ஜோதிகா அறிமுகமானார். வாலி படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவர் தலையைக் காட்டினாலும் பின்னர் தவிர்க்க முடியாத நடிகையாக பரிணமித்தார். விவேக், லிவிங்ஸ்டன், இந்து, அஜித் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தரமான படங்களையும் வில்லங்கமான படங்களையும் தந்த எஸ்.ஜே.சூர்யா திரைகதை எழுதி இயக்கினார். ஆபாச‌ம், விரச‌ம் எதுவும் அதிகமாக இல்லாது சிறந்த முறையில் உருவாக்கினார் எஸ்.ஜே.சூர்யா.
நிலவைக் கொண்டு வா, சோனா ஓ சோனா, ஏப்ரல் மாதத்தில், வானில் காயுதே வெண்ணிலா ஆகிய பாடல்கள் தேனிசை தென்றல் தேவாவின் இசையில் மனதைக் கவ‌ர்ந்தன. நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வாலி திரைப்படம் வசூலில் புதியசாதனை செய்தது.


ரமணி

மித்திரன்27/11/11

Tuesday, November 29, 2011

ஜெயலலிதாவின் அதிரடியால்திண்டாடும் தமிழகம்

பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் தமிழக அரசு தாறுமாறாக உயர்த்தியதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கருணாநிதி மீது நம்பிக்கை இழந்த மக்கள் ஜெயலலிதா மீது அதிக நம்பிக்கை வைத்து முதலமைச்சர் என்ற அரியாசனத்தில் அவரை அமர்த்தினார்கள். கருணாநிதி செய்த தவறினால் தான் ஆட்சி அதிகாரத்தை இழந்தார் என்பதை உணர்ந்த ஜெயலலிதா தரமான ஆட்சியைத் தருவார் என்றே எதிர்பார்ப்பு மேலோங்கியது.
குடும்ப ஆட்சியிலிருந்து மீண்ட தமிழகம் குழப்ப ஆட்சியில் சிக்கியுள்ளது. ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனேயே கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்தத் தொடங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அவமான நடவடிக்கைகளைத் தாங்கிக் கொண்டு இடதுசாரிகளும், சரத்குமாரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். அவமானத்தைக் கண்டுபொறுக்க முடியாத விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கத் தொடங்கி விட்டார். கூட்டணிக் கட்சிகளைப் படுகுழியில் தள்ளிய ஜெயலலிதா பொதுமக்கள் மீது பெருஞ்சுமையைத் தூக்கி வைத்துள்ளார்.
எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றை மத்திய அரசு உயர்த்தும்போது கண்டன அறிக்கை போராட்டம் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் ஜெயலலிதா நகர பஸ் கட்டணத்தை 50 சதவீதமாகவும் புறநகர் பஸ் கட்டணத்தை 60 சதவீதமாகவும் பால் விலையை 25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளõர். இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று மத்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா. தமிழக அரசின் கடன் சுமையை நீக்குவதற்கு ஒரு இலட்சம் கோடி கடனாகத் தருமாறு பிரதமர் மன்மோகனைச் சந்தித்தபோது ஜெயலலிதா கோரிக்கை விடுத்தõர். அந்தக் கோரிக்கைக்கான பதிலை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ஆகையினால் விலையைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டதனால் கீழ்மட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை அதிகரிப்பினால் தமிழக அரசின் மீது மக்கள் சீற்றம் கொள்ளக் கூடாது என்பதில் ஜெயலலிதா அவதானமாக செயற்பட்டுள்ளார். விலை அதிகரிப்புக்கும் தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. மத்திய அரசு கை விரித்ததனால் தான் விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் தோன்றி விளக்கமளித்துள்ளார் ஜெயலலிதா. விலை உயர்வுக்கு தமிழக அரசு மீது மக்கள் கோபம் கொள்ளாது மத்திய அரசின் மீது எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்றே தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறார். இந்த அணுகு முறை அவருக்கு எதிராகவே மாறும் நிலை உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை உயர்ந்துள்ளது. மின் கட்டணமும் விரைவில் உயரும் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக ஆட்சி மாற்றத்துக்குஇவைகாரணமாக அமையலாம்.தமது ஆட்சி பறிபோகும் என்றுமின் வாரியத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் அன்றே திருவாய் மலர்ந்தருளினார்.
பொருட்களின் விலையை உயர்த்தாது ஆட்சி நடத்த முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. விலை அதிகரிக்கப்படும் போது பொதுமக்களைப் பாதிக்காது அதிகரிக்கப்பட வேண்டும். தமிழக அரசின் விலை அதிகரிப்பு மக்களின் தலையில் பாரிய சுமைகளை ஏற்றியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது ஒரே தடவையில் இவ்வளவு அதிகமாக விலை உயர்த்தப்படவில்லை எனது ஆட்சிக் காலத்தின் போது பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று பெருமையாக அறிக்கை விட்டுள்ளார் கருணாநிதி. பஸ் கட்டணத்தை நேரடியாக உயர்த்தாது மறைமுகமாக உயர்த்தியதாக கருணாநிதி மீது குற்றம் சாட்டப்படுகிறது. மறைமுக விலை உயர்வு மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை.
திரõவிட முன்னேற்றக் கழகம் விட்ட தவறுகள் காரணமாக தமிழக ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது. தமிழக ஆட்சி அதிகாரத்துடன் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டரை வருடங்கள் உள்ளது. ஆகையினால் இந்த விலை அதிகரிப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் விலை அதிகரிப்பு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள ஜெயலலிதா தயவு தாட்சண்யமின்றி பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் அதிகரித்துள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு என்பனவற்றின் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் தயாராகின்றன. எதிர்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தமிழக அரசுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆளும் கட்சியை அனுசரித்து அரசியல் நடத்தி வந்த விஜயகாந்த், ஆளும் கட்சியைத் தாக்கத் தொடங்கி விட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த விஜயகாந்த் இப்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா தன்னை அவமதித்ததனால் ஜெயலலிதாவின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார் விஜயகாந்த். ஆளும் கட்சியை அனுசரித்துப் போவதைக் கைவிட்டு உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படப் போவதாக உணர்த்தியுள்ளார்.
சட்ட சபை இடமாற்றம், சமச்சீர் கல்வி, ஊழியர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றினால் கடும் விமர்சனத்துக்குள்ளான தமிழக அரசு பஸ் கட்டணம், பால் விலை அதிகரிப்பினால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளதை ஆட்சி பீடம் ஏறி ஆறு மாதங்களுக்கிடையில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தைநீதிமன்றத்தி நாடவேண்டியநிலை மக்களுக்கு ஏற்பட்டது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், மக்களின் உயர்வுக்குப் பாடுபடுவதும் அரசாங்கத்தின் கடமை என்பதை ஜெயலலிதா உணரத் தவறிவிட்டார். ஆட்சி பீடம் ஏறியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பழிவாங்க ஆரம்பித்தார். இப்போது பொது மக்களின் தலையில் கை வைக்கத் தொடங்கி விட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆட்சியின் போது ஏற்பட்ட கடன் சுமையைச் சமாளிக்கவே பஸ் கட்டண, பால் விலை உயர்த்தப்பட்டது என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மா



வீரகேசரிவாவாரவெளியீடு27/11/11

Sunday, November 27, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 12


மன்னர்களும் செல்வந்தர்களும் தாசியிடம் செல்வது அந்தக் காலத்தில் வழமையானது. ஒரு சில தாசிகள் மன்னர்களையும் செல்வந்தர்களையும் மட்டும் அனுமதிப்பார்கள். மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். அபாஞ்சி சற்று வித்தியாசமானவள். வசீகரிக்கும் அழகும், மயக்கும் சிரிப்பும் கொண்ட தாசி அபாஞ்சியை யாருமே நேரடியாகப் பார்க்கக் கூடாது. அவளது சிரிப்பையோ பேச்சையோ யாரும் கேட்கக் கூடாது. அவளைப் பார்த்தால் சிரிப்பை@யா, பேச்சு ஒலியை@யா கேட்டாலும் அபராதம் கட்ட வேண்டும். அபராதம் கட்ட வசதி இல்லையென்றால் தாசி அபரஞ்சியின் வீட்டில் அடிமைபோல் வேலை செய்ய வேண்டும். தாசி அபரஞ்சியைக் கனவில் கூடக் காணக் கூடாது. கனவு கண்டாலும் அபராதம்தான். தாசி அபரஞ்சியைப் பற்றி படிக்கும் இவ்வேளையில் சின்னத்தம்பி குஷ்பு ஞாபகம்வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த தாசி அபராஞ்சியின் ஆட்சி மன்னன் ஆட்சியை விட ஒருபடி மேலே இருந்தது. அபரஞ்சியின் அனுமதி இன்றி அவளைப் பற்றி நினைத்தால் கனவு கண்டால் ஆயிரம் பொன் அபராதம் கட்ட வேண்டும். ஆகையினால் தாசி அபரஞ்சியைப் பற்றி கதைக்கப் பயந்தனர். தாசி அபரஞ்சி மீது மோகம் கொண்ட கோயில் குருக்கள் ஒருவர் அவளை அடைவதற்காக வசியப் பொடி தயாரித்து அபரஞ்சி வீட்டில் வேலை செய்யும் சிங்காசியிடம் கோயில் பிரசாதம் பொங்கலில் கலந்து கொடுக்கிறார். வசியப் பொடியை சாப்பிட்டதும் தாசி அபரஞ்சி தன்னைத் தேடி வருவாள் என்று குருக்கள் எதிர்பார்த்தார்.
வேலைக்காரியான சிங்காரி கோவில் பிரசாதத்தை அபரஞ்சிக்குக் கொடுக்கவில்லை. பிரசாதத்தைச் சாப்பிட்ட சிங்காரியும் மிகுதியைச் சாப்பிட்ட ஆடும் கோவில் குருக்களைச் சுற்றத் தொடங்கின. தனது திட்டம் நிறைவேறாததனால் கோவில் குளத்தங்கரையில் படுத்த தாசி அபரஞ்சியைக் கனவு காண்கிறாள். குருக்களின் படி மீது தாசி அபரஞ்சி படுத்திருக்க தன்னை மறந்த நிலையில் அபரஞ்சி அபரஞ்சி எனப் புலம்புகிறார். குருக்கள்அபரஞ்சியின் அடியாட்கள் குருக்களைப் பிடித்துச் சென்று அபரஞ்சியின் முன் நிறுத்துகின்றனர். அபராதம் செலுத்த வசதி அற்ற ஏழைக் குருக்கள் தாசியின் வீட்டு வேலைக்காரனாகிறார்.
தாசி அபரஞ்சி வீட்டில் கிளி வடிவில் இருக்கும் விக்கிரமாதித்தன் தனது கூடு விட்டு கூடு பாயும் திறமையால் மீண்டும் விக்கிரமாதித்தனாக மாறி தாசி அபரஞ்சியைத் தண்டிக்கிறாள். சொத்துக்களை இழந்த தாசி அபரஞ்சி ஆலயத்தில் தஞ்சமடைகிறாள்.
ஜெமினி நிறுவனம் தயாரித்து 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தாசி அபரஞ்சி வசூலில் புதிய சாதனை படைத்தது. தாசியைப் பற்றிய கதை என்பதனால் கவர்ச்சிக் காட்சிகள் தாராளமாக புகுத்தப்பட்டன. மறு தணிக்கை செய்யப்பட்டே இப் படம் வெளியானது. தாசி அபரஞ்சியாக பிரபல தெலுங்கு நடிகையான புஷ்பவல்லி தமிழுக்கு அறிமுகமானார். சம்பூர்ண ராமாயணம் தெலுங்குப் படத்தின் சின்ன வயது சீதையாக அறிமுகமாகி பிரபல்யமான புஷ்பவல்லியை மாதச் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்தது ஜெமினி நிறுவனம். காதல் மன்னனின் வலையில் விழுந்த புஷ்பவள்ளி ஜெமினி கணேசனின் மனைவியானார். இவரது மகள் ரேகா பிரபல ஹிந்தி நடிகை. தாசி அபராஞ்சி படத்தில் நடித்த புஷ்பல்லியின் பிரமாண்டமான கட் அவுட் அனைவரையும் கவர்ந்தது. எங்கே நின்று பார்த்தாலும் புஷ்பவல்லியின் கண்கள் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
விக்கிரமாதித்தனாக எம்.கே. ராதாவும் கோவில் குருக்களாக கொத்தமங்கலம் சுப்புவும் வேலைக்காரியாக எஸ்.எஸ். சுந்தரபாயும் நடித்தனர். என்.எஸ். கிருஷ்ணன், ரி.ஏ. மதுரம் காளி என். இரத்தினம் சி.டி. ராஜகாந்தம், கே. சாரங்கபாணி ஆகியோர் நடித்தனர். கொத்தமங்கலம் சுப்பு, சுந்தரி பாய் ஜோடியின் நகைச்சுவை இப்படத்தின் மூலம் பிரபலமாகியது.
ஒலிப்பதிவு பி.எஸ். ரங்கா. இசை எம்.டி. பார்த்த சாரதி எஸ். ராஜேஸ்வரராவ் கதை வசனம், பாடல்கள் கொத்தமங்கலம் சுப்பு, டைரக்ஷன் பி.என். ராவ்.

ரமணி
மித்திரன்20/11/11

Tuesday, November 22, 2011

அ.தி.மு.க. விசுவாசிக்குபதவி கொடுத்த சோனியா

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ராஜ்ய சபா எம்.பி. யான பி.எஸ். தேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியின் பின் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலு ராஜினாமாச் செய்தார். தங்கபாலு ராஜினாமாச் செய்ததும் உடனடியாகப் புதிய தலைவரைத் தெரிவு செய்யாது இழுத்தடித்து வந்த காங்கிரஸ் தலைமை மிக ஆறுதலாகப் புதிய தலைவரின் பெயரை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒருவர் நியமனம் பெற்றால் அல்லது தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கப்பட்டால் அவர் யாருடைய ஆள் என்று தான் பார்ப்பார்களே தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி கிடைத்துள்ளது என்று சந்தோசப்படமாட்டார்கள். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் நியமிக்கப்பட்டதனால் ஜி.கே. வாசனின் கோஷ்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு ராஜினாமாச் செய்ததும் அப்பதவியைக் கைப்பற்றப் பலர் முயற்சித்தனர். தமிழக காங்கிரஸைப் பற்றி மிக நன்றாக அறிந்து வைத்துள்ள மேலிடம் புதிய தலைவரை நியமிக்க அவசரப்படவில்லை.
தமிழர் காங்கிரஸுக்கு உயிரூட்ட ராகுல்காந்தி எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்ததனால் அவசரப்பட்டு புதியதொரு பிரச்சினையை உருவாக்க தலைமைப்பீடம் விரும்பவில்லை. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைவதற்கு தங்க பாலுதான் முக்கிய காரணம் என தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு நெருக்கமான தங்கபாலுவுக்குப் பதிலாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஞானதேசிகன் நியமிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நகர்வைக் கோடி காட்டியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டுத் தூரப் போகிறார் கருணாநிதி. அடுத்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர கருணாநிதி விரும்பமாட்டார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் கனிமொழி சிக்கியதிலிருந்து கட்சியின் செயற்பாடுகளை விட குடும்பத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் கருணாநிதி. தானும் மகன் ஸ்டாலினும் எதிர்க்கட்சிகளால் பழிவாங்கப்பட்ட போது கலங்காத கருணாநிதி கனிமொழி சிறையில் இருப்பதனால் துவண்டு போயுள்ளார். கனிமொழி பட்ட வேதனைகளும் துன்ப துயரங்களும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டணியில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.
ஜி.கே. மூப்பனாரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் ஞானதேசிகன். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மூப்பனார் புதிய கட்சி ஆரம்பித்தபோது அவருடன் சென்றவர் ஞானதேசிகன். ஸ்ரீ வல்லிபுரத்தூரைச் சேர்ந்த இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்தவர். கர்நாடக காங்கிரஸில் இருந்த கட்சிப் பூசலுக்கு மத்தியில் உட்கட்சித் தேர்தலை நடத்தி சோனியாவிடம் நல்ல பெயரைப் பெற்றவர். தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டிகளை சமாளித்து கட்சியை முன்னேற்றுவõர் என்ற நம்பிக்கையிலேயே சோனியா இவரைத் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்து வரப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போது கருணாநிதி கைவிட்டால் ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்கு முன்னேற்பாடாகவே ஞானதேசிகன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழக ஆட்சி மாற்றத்தை அடுத்து பரபரப்பாக அரங்கேறிய நில மோசடி வழக்குகள் இடையில் சற்றுத் தொய்வடைந்திருந்தன. இப்போது மீண்டும் வேகம் பெறத் தொடங்கிவிட்டன. நில மோசடி வழக்கில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி அபகரிப்பு வழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மீண்டும் ஒரு நில மோசடிப் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீதும் நில மோசடிப் புகார் எழுந்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக நில மோசடி நில ஆக்கிரமிப்பு பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு சிலர் பிணையில் விடுதலையாகியுள்ளனர். பலர் இன்னமும் சிறையிலேயே உள்ளனர். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்புப் பற்றிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகார் செய்ததனால் அதற்காகத் தனிப் பிரிவு அமைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கிய புள்ளிகள் இதில் சிக்குவார்கள் என்று பரபரப்பாகச் செய்திகள் வெளியாகின. இன்னமும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களைச் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடைபெறுகின்றன.
தோல்வியடைந்த கட்சியிலிருந்து வெளியேறும் கைங்கரியத்தைத் தமிழக அரசியல்வாதிகள் ஆரம்பித்து விட்டனர். காங்கிரஸ் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் கட்சி தாவியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அதிலிருந்து வெளியேறிய பலர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இப்போது வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி தோல்வியடைந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் தாவத் தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலூர் சம்பத் விஜயகாந்தின் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள சுமார் 200 பேர் இவருடன் கட்சிமாறியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது கட்சி மாறுபவர்களைத் தடுத்து நிறுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலை உண்டாகும்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு20/11/11

Monday, November 21, 2011

ஏங்குகிறேன்

முழு மதியின் ஒளியில்
பால் வீதி காணுகிறேன்
தேயா நிலவுகாண ஏங்குகிறேன்

சூரியனின் சுள்ளிட்ட‌
க‌திர்க‌ளால் வேத‌னைய‌டைகிறேன்
சுடாத‌ சூரிய‌ன் காண
ஏங்குகிறேன்

ம‌ல‌ர்க‌ளின் எழில் கொஞ்சும்
வ‌ன‌த்தில் இன்புறுகிறேன்
வாடா ம‌ல‌ர் காண
ஏங்குகிறேன்

என் தாய் ம‌ண்ணில்
ஓடிவிளையாட‌ ஆசையுறுகிறேன்
யுத்த‌மில்லா ம‌ண்காண‌
ஏங்குகிறேன்

நான் காண‌ விரும்பும்
ம‌ண்ணின் ஏக்க‌ம்
ம‌தி போல் சூரிய‌ன் போல்
க‌ட‌ல் வான் ம‌ல‌ர் போல்
ஆகி விடுமோ என‌
ஏங்கிக்கொண்டே இருக்கிறேன்

தாட்ஷாவ‌ர்மா
ஜீவ‌ந‌தி_ கார்த்திகை 2011

Saturday, November 19, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 11

உயரமான இடத்தில் இருந்து விழுந்த பேராசிரியர் தாம்பத்திய சுகம் அனுபவித்தால் இறந்துவிடுவார் என வைத்தியர்கள் எச் ச‌ரிக்கின்றனர். தனது இயலாமையினால் இளம் மனைவியின் எதிர்பார்ப்பு கருகிப் @பாவதை விரும்பாத அந்தப் பேராசிரியர் மனைவிக்கு இன்னொருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இப்படிப்பட்ட ஒரு விபரீதமான கதைக் கருவுடன் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் சாரதா.
வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து வித்தியாசமான கதையுடன் வெளியான இப்படத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அந்த எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் புஷ்வாணமாக்கி சாரதாவை வெற்றிப்படமாக்கினார்கள் தமிழ் ரசிகர்கள். 1962 ஆம் ஆண்டு வெளியான படங்களில் பரபரப்பாக பேசப்பட்ட படம் சாரதா.
கல்லூரி பேராசிரியர் எஸ்.எஸ்.ஆரை அவரிடம் படிக்கும் மாணவி விஜயகுமாரி காதலிக்கிறார். மாணவியின்
காதலை ஏற்க மறுக்கிறார் பேராசிரியர் எஸ்.எஸ்.ஆர். எஸ்.எஸ்.ஆரை வெறித்தனமாக காதலிக்கும் விஜயகுமாரி எக்காரணம் கொண்டும் காதலை கைவிட முடியாது என்று கூறுகிறார். மாதா பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் குரு மாணவியை மணக்க முடியாது என்கிறார் எஸ்.எஸ்.ஆர். இறுதியில் எஸ்.எஸ்.ஆரின் மனது மாறுகிறது. விஜயகுமாரியின் பிடிவாதம் வெற்றிபெறுகிறது. கல்லூரி விழாவுக்காக உயரமான இடத்தில் நின்று அலங்காரம் செய்யும் பேராசிரியர் தவறி விழுகிறார். அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால் தாம்பத்திய சுகம் அனுபவித்தால் உயிர் போய் விடும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். இதனை கேட்ட விஜயகுமாரி அதிர்ச்சியடைகிறார்.
வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரியை நெருங்குகிறார். வைத்தியரின் எச்சரிக்கையினால் எஸ்.எஸ்.ஆரின் விருப்பத்தை நிறை@வற்றாது காலம் கடத்துகிறார் விஜயகுமாரி. தனது இயலாமையை தெரிந்துக் கொண்ட எஸ்.எஸ்.ஆர் துடிக்கிறார். விஜயகுமாரியின் வாழ்க்கை சூனியமாகிவிட்டதால் துயரடைகிறார். தன்னால் மனைவிக்கு இன்பமான வாழ்க்கை கொடுக்க முடியாததை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு அவளுக்கு அசோகனை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். எஸ்.எஸ்.ஆரின் விருப்பத்துக்கு விஜயகுமாரி சம்மதிக்கவில்லை இன்னொரு திருமணம் செய்ய முடியாது என மறுக்கிறாள். எஸ்.எஸ்.ஆரின் வற்புறுத்தலினால் இரண்டாவது திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள் சாரதா.
திருமண கோலத்துடன் எஸ்.எஸ்.ஆரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற விஜயகுமாரி எழுந்திருக்கவில்லை. கணவனின் காலடியில் உயிர் பிரிகிறது. ஒருவருக்கு ஒருத்தி என்ற @காட்பாட்டை நிலை நிறுத்துகிறார் விஜயகுமாரி.
எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி, அசோகன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், வி.நாகையா, சகஸ்ரநாமம், எஸ்.வி.ராஜம்மா, புஷ்பலதா @பான்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்தார்கள். வி.மகாதேவனின் இசையமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் உயிரூட்டின. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், கண்ணானால் நான் இமையாவேன், மெல்ல மெல்ல அருகில் வந்து, தட்டுத் தடுமாறி நெஞ்சம், கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் , மணமகளே மணமகளே வா வா ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. "மணமளேள மணமகளே வா வா' என்ற பாடல் இன்றும் திருமண வீடுகளில் ஓங்கி ஒலிக்கிறது. ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சூல‌மங்கலம்ககோகாதரிகள் ஆகியோரின் குரல் பாடல்களுக்கு மெருகூட்டின.
சாரதா படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதிய கே.எஸ் கோபால கிருஷ்ணன் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனிடம் கொடுத்தார். .கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மீது அதிக நம்பிக்கை வைத்த ஏ.எல்.சீனிவாசன் சாரதா படத்தை இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். திரைக்கதை வசன கர்த்தா மட்டுமல்ல சிறந்த இயக்குநர் என்பதையும் முதல் படத்தின் மூலம் நிரூபித்தார் கே.எஸ்கோபால கிருஷ்ணன்.
சாரதா படத்தின் கதையை கேள்விப்பட்ட ஏ.எல்.சீனிவாசனின் நண்பர்கள் அவரை எச்சரித்தனர். முற்பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் நம்பிக்கை இழந்து பணத்தைத் திரும்ப தரும்படி நெருக்கடி கொடுத்தனர். சாரதா படம் வெளியாகி வசூலை வாரி குவித்ததுடன் மாநிலத்துக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றது. ஏ.எல் புரடக்ஸன் என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்த ஏ.எல்.சீனிவாசன் மெஜஸ்டிக் என்ற ஸ்டூடி@யாவை குத்தகைக்கு எடுத்து படங்களை தயாரித்தார். சாரதா தந்த பெரும் வெற்றியின் பின்னர் மெஜஸ்டிக் ஸ்டூடியோவை வாங்கிசாரதா ஸ்டூடியோ எனப் பெயர் மாற்றினார்.
விஜயகுமாரி நடித்த பாத்திரத்தின் பெயர் சாரதா ஆகையினால் படத்துக்கு சாரதா எனப் பெயரிட்டார்கள். நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் இப்போது இல்லை. கதாநாயகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்று கதாநாயகிகளுக்கு இல்லை. தெய்வத்திருமகள் என்ற பெயரில் அண்மையில் ஒருபடம் வெளியானது. படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த குழந்தையை முன்னிலைப்படுத்தியே படத்துக்கு பெயர்சூட்டப்பட்டது. இப்படத்துக்கு முதலில் நாயகனை முன்னிலைப்படுத்தி தெய்வத்திருமகன் என்றே பெயர்சூட்டப்பட்டது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு அலை காரணமாகவே படத் தலைப்பு மாற்றப்பட்டது.
ரமணி


மித்திரன் 06/11/11

Monday, November 14, 2011

ஜெயலலிதா அதிரடிநடுத்தெருவில் ஊழியர்கள்!




தமிழக வாக்காளர்கள் ஐந்து வருடங்களுக் கொருமுறை மாற்றத்தை விரும்புகின்றார்கள். ஆனால் எத்தனை வருடங்கள் சென்றாலும் ஜெயலலிதா மாறமாட்டார். அவரது சுபாவம் அப்படியேதான் இருக்கும் என்பதை அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிப்படுத் துகின்றன.
ஆறு அமைச்சர்களை அதிரடியாக தூக்கிவிட்டு புதிய அமைச்சர்கள் ஆறு பேரை நியமித்துள்ளார். சுமார் 13,500 மக்கள் நலப்பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். மக்கள் நலப் பணியாளர்கள் இப்போது மூன்றாவது முறையாக ஜெயலலி தாவால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவிப்பது, மனுத்தாக்கல் செய்ய முதல் அவர்களை நீக்கி விட்டுப் புதியவர்களை நியமிப்பது, அடிக் கடி அமைச்சரவையை மாற்றி அமைப்பது எல்லாம் ஜெயலலிதாவுக்குக் கைவந்த கலை. கருணாநிதியின் தலைமையில் அமைச் சரவை ஐந்து வருடங்கள் அசைவில்லாமல் இருக்கலாம். ஜெயலலிதாவின் தலைமை யிலான அமைச்சரவையில் ஐந்து நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாது. எப்போ பதவி பறிபோகும் என்று தெரியாது பதை பதைப்புடன் தான் காலத்தை தள்ள வேண் டும்.
அதிகார துஷ்பிரயோகம், உள்ளாட்சித் தேர்தலின் போது அசமந்தமாகச் செயற் பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரின் வெற்றிகாகச் செயற்படாதது ஆகிய காரணங் களினால் ஆறு அமைச்சர்கள் தூக்கி எறியப் பட்டு புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர். கடந்த மே மாதம் எசக்கிமுத்து அமைச்சராகப் பதவி ஏற்றார். ஜூன் மாதம் அவர் பதவி இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக செந்தமிழன் பதவி ஏற்றார். இப்போது செந்தமிழனும் பதவி இழந்துள்ளார்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற பரஞ்சோதி மீது ஏகப் பட்ட புகார்கள் குவிந்தன. அப் புகார்களின் பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருக்க லாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதனால் சிவபதி அமைச்சுப் பதவி இழந்தார். உதயகுமாரின் குடும்பத்தவர் மீது ஊழல் புகார் சுமத்தப் பட்டதால் உதய குமாரின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட மக்களின் அதிருப்திக்கு ஆளான புத்தி சந்திரன் அமைச்சுப் பதவியை இழந்தார். சண்முகவேலுக்கு இரண்டு முறை அமைச்சுப்பதவி மாற்றப்பட்டது. அவரது நிருவாகத்திறன் குறைவானதன் காரணத்தி னால் அவரும் பதவி இழந்தவர்களின் பட்டியலில் இணைந்தார்.
அதிகார துஷ்பிரயோகம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என்பவையின் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியை இழந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என்பன இருக்காது என்று ஜெயலலிதா உறுதியளித்திருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா முதல்வராகி ஆறு மாதங்களுக்கிடையில் அதிரடி யாக அமைச்சர்களை மாற்றுகிறார். அமைச் சுப் பதவியை இழந்தவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். ஜெயலலிதாவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பது அவர் களுக்கு நன்கு தெரியும். இந்த அமைச்சரவை மாற்றம் கடைசியானதல்ல. இன்னும் பலமுறை மாற்றம் செய்யப்படும். அப்போது அமைச்சராகலாம் என்ற நம்பிக்கை அவர் களுக்கு இருக்கிறது.
ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் கதிகலங்கினர். ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களினால் முன்னாள் அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டர் வரை கைது செய்யப் பட்டனர். ஜெயலலிதாவின் பார்வை இப்போது திராவிட முன்னேற்றக்கழக ஊழியர்களின் மேல் விழுந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தினால் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். சுமார் 13,500 ஊழியர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகளின் அடிப்படைத் தகவல் களைப் பராமரித்து, ஊராட்சி சொத்துக் களைப் பாதுகாப்பது, சிறு சேமிப்பில் மக்களை ஊக்குவிப்பது ஆகியவை மக்கள் நலப்பணியாளர்களின் வேலையாகும். இவர்களின் பணிகளைக் கவனிக்க ஊராட்சியில் போதுமான ஊழியர்கள் இருப்பதனால் தற்காலிகப் பணியாளர்களான இவர்களின் பதவியை இரத்துச் செய்யலாம் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜதுறையின் ஆணையாளர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆணையாளர் திராவிட முன்னேற்றக் கழக அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர் களைப் பணி நீக்கம் செய்யலாம் எனப் பரிந்துரை செய்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி னால் மக்கள் நலப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். திராவிட முன்னேற்றக் கழகத் தால் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை 1999ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பினார். 1996ஆம் ஆண்டு முதல் வரான கருணாநிதி மீண்டும் அவர்களுக்கு வேலை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு முதல்வரான ஜெயலலிதா மீண்டும் அவர் களை வேலையிலிருந்து விரட்டினார். 2006 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வரானதும் ஜெயலலிதாவால் பதவி இழந்தவர்களுக்கு மீண்டும் பதவி கொடுத்தார். இப்போது ஜெயலலிதாவின் முறை. அவர் தனது அதிகாரத்தின் மூலம் சுமார் 13,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மதுபானச்சாலை ஊழியர்களாக நியமனம் பெற்றவர்களை கருணாநிதி வீட்டுக்கு அனுப்பவில்லை. 1999 ஆம் ஆண்டு இருந்த அதே மன நிலையிலேயே ஜெயலலிதா இப்பவும் இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் பயனடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கொள்கையை அவர் இன்னும் கைவிடவில்லை.
ஜெயலலிதாவின் பழிவாங்கும் படலத்துக்கு மக்கள் நலப்பணியாளர்கள் இறையாகியுள்ளனர். திராவிடமுன்னேற்றக் கழகத்தால் கட்டப்பட்ட கட்டடங்களே ஜெயலலிதாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இந்த நிலையில் ஊழியர்கள் எம்மாத்திரம்? ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு நாங்களாக இருக்குமோ என்ற அச்சம் சாலைப் பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு13/11/11

Sunday, November 13, 2011

கட்சிகளின் கண்ணைத் திறந்தஉள்ளூராட்சித் @தர்தல்

தமிழக அரசியல் கட்சிகளின் பலமும் பலவீனமும் உள்ளாட்சித் தேர்தலின் மூலம் பட்டவர்த்தனமாகத் தெரியவந்துள்ளது. ஆளும்கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தல் நடைபெற முன்னமே கணித்தது சரியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நகரத்திலும் கிராமத்திலும் செல்வாக்குள்ளவர்களே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். வேட்பாளர்களின் செல்வாக்கும் தமிழக ஆளும்கட்சி என்ற அங்கீகாரமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது.
சென்னை மேயர் வேட்பாளராக சைதை துரைசாமி அறிவிக்கப்பட்டபோதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது ஸ்டாலினுக்கே நெருக்கடி கொடுத்தவர் சைதை துரைசாமி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவையில் எதிர்க் கட்சிகள் இருந்த இடம் தெரியாது துவண்டு விட்டனர்.
யாருடனும் கூட்டணி சேராது தனித்து நின்று தேர்தல்களைச் சந்தித்த விஜயகாந்த் சில இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தள்ளிவிட்டு இரண்டாம் இடம்பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்த விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலில் நிமிர முடியாது அடி வாங்கியுள்ளார். விஜயகாந்த் தனித்துத் தேர்தலைச் சந்தித்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தனித்து நின்று தேர்தலைச் சந்திப்பது விஜயகாந்தின் கொள்கையாக இருந்தது. கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தார் விஜயகாந்த். அந்தக் கூட்டணியே அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது. கருணாநிதியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வாக்களித்த மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே உள்ளாட் சித் தேர்தலில் வாக்களித்தனர்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் மாற்றீடாகவே விஜயகாந்தைத் தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல் சந்தர்ப்பத்தில் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்த விஜயகாந்த் அடுத்து வரும் ஏதாவது ஒரு தேர்தலில் கருணாநிதியுடன் கூட்டுச் சேர்வார் என்பதை விளங்கிக் கொண்ட தமிழக மக்கள் விஜயகாந்தை ஒதுக்கியுள்ளனர். விஜயகாந்தின் ஆவேசமான பேச்சுகள் எவையும் ஜெயலலிதாவை வீழ்த்த உதவவில்லை. கடந்த தேர்தல்களின் போது சில இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி இரண்டாம் இடம்பிடித்த விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் சகல கட்சிகளும் தனித் தனியாகப் போட்டியிட்டதனை கட்சிகளின் உண்மையான வாக்கு வங்கி விபரம் தெரிய வந்துள் ளதுடன் இது வரை காலமும் திராவிடக் கட்சிகளின் முதுகில் Œவாரி öŒ#து வந்த காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலையை விஜயகாந்தின் கட்சி பிடித்துள்ளது. கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கடசியால் ஜெயிக்க முடியாது என்ற உண்மை தெளிவாகத் தெரிந்துள்ளது. வெறும் வாய்ச்சவடால் பேசிய தங்கபாலு, இளங்கோவன், யுவராஜ் ஆகி யோர் அடங்கிவிட்டனர்.
""தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த தனால் தான் தோல்வியடைந்தோம்'' என்று வாய்கிழிய பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தலின் தோல்விக்குரிய காரணத்தை வெளிப்படுத்த முடியாது மௌனமாகிவிட்டனர். தமது செல்வாக்கைப் பற்றி தலைமைப் பீடத்துக்கு தவறான தகவல்கள் கொடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமது தோல்விக்கான காரணத்தைத் தேடி அலைகின்றனர்.
ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்ட பின்னர் சோனியாவைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்த கருணாநிதி அண்மையில் டில்லி சென்றபோது சோனியா காந்தியைச் சந்தித்தார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கோனியõவின் சுகம் விசாரிப்பதற்கான சந்திப்பு என்ற வெளிப்படையாகக் கூறினாலும் உள்ளாட்சித் தேர்தலின் தோல்வியே இச்சந்திப்புக்கு வழிவகுத்தது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் சொல்கேட்டு நடந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும் என்பதை சோனியா காந்தி உணர்ந் துள்ளார்.
கூட்டணி சேர்ந்தõல்தான் வெற்றி பெறலாம் என்பதே உள்ளாட்சித் தேர்தல் விஜயகாந்துக்கும் சோனியாவுக்கும் அறிவுறுத்தியுள்ளது. விஜயகாந்தின் வாக்கு வங்கி அப்படியே தான் உள்ளது. இந்த வாக்கு பலத்துடன் தனித்துப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடியாது என்பதை விஜயகாந்த் தெரிந்து கொண்டுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கி படிப்படியாகக் குறைந்து கொண்டே போகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததே இதற்கு முக்கிய காரணம். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பகைமையை அகற்றி ஒற்றுமையாகச் செயற்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது.
பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கறழகம் ஆகியன தனித்து தேர்தலில் போட்டியிட்டன. இருப்பதும் இல்லாமல் போய்விடும். கட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால் கூட்டணி அமைக்க வேண்டிய நிலையில் இக்கட்சிகள் உள்ளன.


பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வேளையில் முன்னரைப் போன்று பேச முடியாத நிலையில் இக்கட்சிகள் உள்ளன. இதேவேளை, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது இப்போது உள்ள இதே சதவீத வாக்கு வங்கி இருக்குமா என்பது சந்தேகமே.
தமிழக அரசியல் கட்சிகளின் செல்வாக்கு வெளிப்படையாகத் தெரியவந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விரும்பிக் கொடுப்பதைப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளன. விஜயகாந்துடன் ஒட்டிக் கொண்ட இடதுசாரிகள் படுதோல்வியடைந்துள்ளன. இடதுசாரிகளால் விஜயகாந்துக்கு எதுவித இலாபமும் கிடைக்கவில்லை.
கனிமொழி பிணையில் வெளிவரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பின் பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாவாரவெளியீடு30/10/11


Friday, November 11, 2011

பா.ம.க.வுக்குள் பிளவுகலக்கத்தில் தொண்டர்கள்


வன்னியர்களின் வளமான வாழ்வுக்காக ஆரம்பமான பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்துள்ளன. தமிழக தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக ஒரு காலத்தில் விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி காலத்தின் கோலம் காரணமாக தேடுவார் இன்றி அநாதையாக நின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்து நினைத்ததை சாதித்து வந்தார் ராமதாஸ். வன்னியர் சமுதாயத்திற்காக ஆரம்பமான இயக்கம் நாளடைவில் அரசியல் கட்சியாக மாறி ராமதாஸின் மகன் அன்புமணி அமைச்சராவதற்கு பேரம் பேசியதால் வன்னியரின் மதிப்பை இழந்து நிற்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வியடைந்தது. இந்தக் தோல்விக்கு கட்சித் தலைவர்க கோ.சி மணி தான் காரணம் என்று கட்சியின் நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கோ.சி மணியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள டாக்டர் ராமதாஸ் இதன் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளருமாக இருந்தவருமான வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதனால் பாட்டாளி மக்கள் கட்சியினுள் பூகம்பம் வெடித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் வேல்முருகன். வேல் முருகனின் வசீகரப் பேச்சு கட்சிக்குள் பலரை இழுத்தது. மாற்றுக் கட்சித் தலைவர்களும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு பாராட்டினர். வேல் முருகன் வெளியேற்றப்பட்டதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இதன் காரணமாக ஆங்காங்கே சில வன்செயல்கள் நடைபெற்றன. கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. கட்சிக் கொடிக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டது. ராமதாஸின் கட் அவுட் அடித்து நொருக்கப்பட்டது.
கடலூர் பண்ருட்டி, நெய்வேலி ஆகிய இடங்களில் உள்ள வேல் முருகனின் ஆதரவாளர்கள் தமது வெறுப்பை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. கடலூர், கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள அனைவரும் இராஜினமா செய்து விட்டதாக தலைமைக்கு அறிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். பலர் தாமாகவே வெளியேறினர். அப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை.
தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியடைந்து நலிந்து போயுள்ள பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து வேல் முருகன் வெளியேற்றப்பட்டது கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசுர வளர்ச்சியினால் எதிர்க்கட்சிகள் தலைதூக்க முடியாத நிலையில் உள்ளன. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூகம்பம் அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்கட்சியிலிருந்து முக்கியமானவர்கள் வெளியேறுவதும் வெளியேற்றப்படுவதும் வாடிக்கையான சம்பவம் தான். அதனால் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு காலப் போக்கில் சரியாகி விடும். இன்றைய தமிழக அரசியல் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்ட இப்பிரச்சினை உடனடியாகத் தீர்ந்து விடாது. சட்ட சபையின் முன்னாள் உறுப்பினர்களான திருக்கச்சூர், ஆறுமுகம், எதிரொலிமணியன், வேலுச்சாமி, பவானி ராமநாதன், செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் மீதும்கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருந்ததாகவும் வேல் முருகனை நீக்கியதால் ஏற்பட்ட கொந்தளிப்பால் அத்திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் மத்தியில் பிரபல்யமடைய முன்னின்று சேவை செய்த தலித் எழில் மலை, பேராசிரியர் தீரன், அருள்மொழி போன்றவர்கள் ஏற்கனவே கட்சியிலிருந்து விரட்டப்பட்டனர். புதுச்சேரியில் கட்சியைக் கட்டிக் காக்க பேராசிரியர் ராமதாஸ் அரசியலை விட்டு ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் வேல் முருகனை கட்சி வெளியேற்றியது பாட்டாளி மக்கள் கட்சியில் மட்டுமல்ல வேறு கட்சியினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி கோ.சி. மணி, அ.கி. மூர்த்தி ஆகியோர் சுற்றியுள்ளவர்களை கட்சியில் நிலைத்து நிற்பார்கள். நியாயத்தைக் கேட்பவர்கள். கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் அதிருப்தியுடன் கட்சியில் இருப்பவர்களும் ஒதுங்கி இருப்பவர்களும் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாகப் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


கருணாநிதி தமிழக முதல்வராகப் பதவி வகித்தபோது காலத்தால் அழியாத பிரமாண்டமான கட்டடங்கள் சிலவற்றை அமைத்தார். ஒவ்வொரு காலத்திலும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய கட்டடங்களாக அவை அமைந்தன. அப்படிப்பட்ட கட்டங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு அக் கட்டடத்தை சிறுவர்களுக்கான உயர் வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். கருணாநிதியின் பெயரை வரலாற்றில் இருந்து மறைக்க வேண்டும் என்பதை தனது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்படாத ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கிறார் ஜெயலலிதா.
திராவிடக் கட்சிகளின் வழிகாட்டி அறிஞர் அண்ணாதுரை அண்ணாவின் பேச்சால் கவரப்பட்ட இலட்சக்கணக்கான இளைஞர்கள் அண்ணா திராவிடக் கட்சியில் சேர்ந்தனர். திராவிடக் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது இலட்சக்கணக்கான தொண்டர்களும் இளைஞர்களும் அவரின் பின்னால் சென்றனர். அண்ணாவின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த எம்.ஜி.ஆர். தான் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டி அண்ணாவுக்குக் கௌரவம் கொடுத்தார். எம்.ஜி.ஆர்.இன் கட்சியை வழி நடத்தும் ஜெயலலிதா அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் கடமை. அதனை மூடுவதற்கு திட்டமிட்டது கருணாநிதி மீது அவர் வைத்துள்ள பகைமையை வெளிப்படுத்துகிறது. கருணாநிதியின் நேரடிக் கண்காணிப்பில் உருவான பிரமாண்டமான கட்டிடங்களில் புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. புதிய தலைமைச் செயலகத்தைக் கைவிட ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காக புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவ மனையாக்கப் போவதாகக் கூறினார். அந்த வார்த்தை இப்பொழுதும் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் திசையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் சிறுவர் வைத்தியசாலையாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
நூலகத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
புதிய தலைமைச செயலகம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய இரண்டும் மருத்துவமனை வசதிகள் அடங்கிய கட்டிடங்கள் அல்ல. கருணாநிதி மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த அறிவிப்புகள். கருணாநிதியின் எதிர்ப்புக்கு முன்னாள் அண்ணாவின் பெயரும் கால்தூசு என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.
கடற்கரையில் கம்பீரமாக நின்ற கண்ணகி சிலை வாஸ்துப் பிரச்சினையில் தூக்கி எறியப்பட்டது.
கருணாநிதி முதல்வரானதும் கண்ணகி மீண்டும் புதுப் பொலிவு பெற்றார். செம்மொழி நூலகம் புதிய தலைமைச் செயலகம் ஆகியவற்றின் பட்டியலில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் இடம்பிடித்துள்ளது. கருணாநிதியின் மீள் வருகை இவற்றிற்கு நிவாரணம் வழங்கும்.
வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவர் சிலை என்பனவற்றை என்ன செய்யப் போகிறார் முதல்வர் ஜெயலலிதா.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு06/11/11




Thursday, November 10, 2011

திருச்சிமேற்கு இடைத் தேர்தலில்அ.தி.மு.க தி.மு.க. செல்வாக்கு ச‌ரிவு

திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலையில் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாகப் போட்டியிட்டன.
திருச்சி இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் கடந்த @தர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.
திருச்சி மேற்கு சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மரியம் பிச்சை மரணமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான திருச்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நேருவை தோற்கடித்து வெற்றி பெற்றார். மரியம்பிச்சை மரணமானதால் அவரின் குடும்பத்தவர்களில் ஒருவருக்கு ஜெயலலிதா சந்தர்ப்பம் வழங்குவார் என்று எதிர்பார்க் கப்பட்டது. எதிர்பார்ப்புகளை உடைத்தெறி வதில் புகழ்பெற்ற ஜெயலலிதா பரஞ்சோதி என்பவருக்கு சந்தர்ப்பம் வழங்கினார்.
2006ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பரஞ்சோதி. இம்முறை ஸ்ரீரங்கம் தொகுதியை ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுத்தார் பரஞ்சோதி. ஸ்ரீரங்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி என்பதனால் ஜெயலலிதா அங்கு ஸ்ரீரங்கத்தை தனக்கு விட்டுத்தந்த பரஞ்சோதிக்கு நன்றி செலுத்துமுகமாகவே திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் பரஞ்சோதிக்குச் சந்தர்ப்பம் கொடுத்தார் ஜெயலலிதா.
திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர். இத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும். ஆதரவாக வேறு கட்சிகள் எவையும் பிரசாரம் செய்யவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 68,804 வாக்கு களையும், கே. என். நேரு 54,196 வாக்குகளையும் பெற்றனர். 14,608 வாக்கு வித்தியாசத்தில் பரஞ்சோதி வெற்றி பெற்றார். ஆனால் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளது. மரியம்பிச்சை 7179 வாக்குகளின் மேலதிகமாக பெற்று வெற்றி பெற்றார். பரஞ்சோதி 14,608 வாக்குகள் மேலதிகமாகப் பெற்று வெற்றி பெற்றாலும். மரியம்பிச்சை கடந்த @தர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைந்த வாக்குகளையே பரஞ்சோதி பெற்றார். நேருவும் கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குகளைப் பெற்றார்.
மரியம் பிச்சை 77, 890 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பரஞ்சோதி 68,804 வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலில் நேரு 70, 711 வாக்குகளைப் பெற்றார். இம்முறை 54,196 வாக்குகளைப் பெற்றார். இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழமை. ஆனால் கடந்த தேர்தலை விட ஆளும் கட்சி குறைவான வாக்குகளைப் பெற்றதால் அதன் செல்வாக்கு சரிந்துள்ளது. அதே போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் மிகவும் குறைந் துள்ளது. இடைத் தேர்தலில் தோல்வியால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பாதிப்பும் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னைத் திருத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கும் பண்ருட்டி இராமச்சந்திர னுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. விஜயகாந்தின் ரசிகர்களை அரசியல் தொண்டர்களாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர். தமிழக சட்ட மன்றத் தலைவராக விஜயகாந்த் வீற்றிருப் பதற்கு காரணமானவர். சினிமா நடிகரும் ரசிகர் மன்றங்களும் அரசியலில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைத்தவர். விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்கு பின்புலமாக நின்று உழைத்தவர். விஜயகாந்தும் பண்ருட்டி இராமச்சந்திரனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயற்படு கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதாக அண்மையில் செய்தி கசிந்துள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்லிலும், உள்ளூராட்சித் தேர்தலிலும் நடை பெற்ற சம்பவங்களை நோக்கும் போது இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளது உண்மை போல் தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை என்றால் கல்யாண சுந்தரம் ஞாபகத்துக்கு வருவதுபோல். பண்ருட்டி என்றால் இராமச்சந்திரன் தான் நினைவுக்கு வருவார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப் பெரும் அரசியல் சக்தியாக விளங்கியவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேறிய போது அவருடன் சேர்ந்து வெளியேறி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் வளரப் பாடுபட்டார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஓரம் கட்டப்பட்ட எம்.ஜி. ஆரின் விசுவாசிகளில் பண்ருட்டியும் ஒருவர்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழ கத்தில் இருந்து வெளியேறி பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் முதலாவது சட்ட மன்ற உறுப்பினர் இவர்தான். விஜயகாந்த் அரசியல்கட்சி ஆரம்பித்தபோது விஜயகாந்துடன் இணைந்தார்.

பண்ருட்டி தொகுதியில் இருந்து தொடர்ந்து ஆறு தடவை வெற்றி பெற்றார். கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது பண்டிருட்டித் தொகுதியையே எதிர்பார்த்தார். ஆனால் அவரை ஆபத்தூர் தொகுதியில் போட்டியிடுமாறு விஜயகாந்த் பணித்தார். விஜயகாந்தின் இந்த முடிவால் தனது தொகுதியை இழந்து ஆபத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விஜயகாந்தின் கட்சித் தலைவராகச் செயற்படுகிறார்.
அரசியல்வாதிகள் எல்லோருக்கும் உள்ள ஆசை பண்ருட்டியிடமும் உள்ளது. தனது மகனுக்கு கட்சியில் பொறுப்பான பதவி ஒன்றைக் கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை விஜயகாந்த் உதாசீனம் செய்தார். இதனால் விஜயகாந்துக்கும் பண்ரூட்டிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பண்ருட்டி கலந்து கொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிவு வெளியான பின்னர் பண்ருட்டியும் இன்னும் சிலரும் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் தாவலாம் என்ற கருத்து நிலவுகிறது. பண்ருட்டி கட்சியை விட்டு வெளியேறினால் அது விஜயகாந்துக்குப் பேரிழப்பு. தமிழக சட்ட மன்றத் தேர்தலின்@பாது அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பண்ருட்டி கூறிய பதில் நிஜமாவதும் பொய்யாவதும் விஜயகாந்தின் செயற்பாட்டில்தான் உள்ளது.


சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு23/10/11




Saturday, November 5, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 10

நண்பனின் காதலியை அனுபவிக்கத் துடிக்கும் ஒருவன் தன் ஆசையை அவள் நிறைவேற்றாதனால் நண்பன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து ரசிக்கிறான். நட்பு துரோகமாக மாறியதால் காதலனை இழந்த பெண் நான்கு பிள்ளைகளின் தகப்பனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். தன் காதலனின் மரணத்துக்குக் காரணமானவன் தன் கணவனின் மூத்த மகன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இவர்களின் உணர்ச்சிகரப் @பாராட்டத்தைச் சித்தரிக்கும் படம்தான் 1976 ஆம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு.
ஆபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில காட்சிகளில் மட்டும் தலையைக் காடிய ரஜினிகாந்த் வில்லனாக நடித்து படம் முழுவதும் ஆக்கிரமித்தார். சிகரெட்டை எறிந்து லாவகமாக வாயில் நிறுத்தி தீ மூட்டும் காட்சியின் @பாது விசித்தல் ச‌த்தத்தில் தியேட்டர் அதிர்ந்தது. மூன்று முடிச்சு படத்தில் ரஜினி பேசாமலே தியேட்டர் அதிர்ந்தது. பின்னர். சிவாஜி படத்தில் சும்மா அதிருதில்ல என ரஜினி வச‌னம் பேசியபோது தியேட்டர் அதிர்ந்தது.
கமலும் ரஜினியும் நண்பர்கள். கமல் ஸ்ரீ@தவியைக் காதலிக்கிறார். பெண் பித்தனான ரஜினி ஸ்ரீ@தவியை அனுபவிக்கத் துடிக்கிறார். ரஜினியின் விபரீத எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீ தேவி கமலிடம் ரஜினியைப் பற்றிக் கூறுகிறார். நண்பன் ரஜினி மீது அதீத நம்பிக்கை வைத்த கமல் அதனை நம்பவில்லை. ஸ்ரீதேவிக்கு கமல் வாங்கிக் கொடுத்த புடவையை சிகரெட்டால் சுட்டு ஓட்டையாக்குகிறார் ரஜினி. இது பற்றி கமலிடம் ஸ்ரீதேவி முறையிட்டு புடைவையை விரித்தபோது சுட்ட புடைவை எதுவித சேதமும் இன்றிக் காணப்பட்டது. தன் நன்பனைப் பற்றித் தவறாகக் கற்பனை செய்வதைக் கைவிடுமாறு கமல் அறிவுரை கூறுகிறார்.
கமல், ரஜினி, ஸ்ரீதேவி மூவரும் ஏரியிலே படகுச் சவாரி செல்லும்@பாது ஏரியிலே தவறி விழுகிறார் கமல். நீச்சல் தெரிந்த ரஜினி எதுவித சலனமும் இன்றி நண்பன் நீரில் மூழ்கி இறப்பதைப் பார்த்து ரசிக்கிறார். வாழ்க்கையில் விரக்தியடைந்த ஸ்ரீதேவி கமலின் நினைவாக வாழ்கின்றார். தனக்கென பாதுகாப்பான வாழ்க்கை ஒன்று தேவை என்பதை உணர்ந்த ஸ்ரீதேவி பத்திரிகையில் வெளிவந்த மணமகள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனான கல்கத்தா விஸ்வநாதனுக்கு. இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படுகிறாள். அங்கே ஸ்ரீதேவியின் நிம்மதியை குலைக்க கல்கத்தாவிலிருந்த விஸ்வநாதனின் மூத்த மகனான ரஜினி வந்து சேர்கிறார்.
மிருகங்களின் முகமூடி அணிந்து விளையாடும் சிறுவர்களுடன் ரஜினியும் முகமூடி அணிந்து விளையாடுகிறார். அப்போது அங்கே வந்த கல்கத்தா விஸ்வநாதன் தனது இரண்டாவது மனைவியான ஸ்ரீதேவிக்கு மூத்த மகன் ரஜினியை அறிமுகப்படுத்துகிறார். நான் இவரை ஏற்கனவே சந்தித்தேன் மிருகமாக என்று கூறுகிறார் ஸ்ரீதேவி. அதைக் கேட்ட தகப்பனும் ரஜினியும் அதிர்ச்சியடைகின்றனர். மிருக முகமூடி அணிந்திருந்ததை பார்த்ததாக கூறி சமாளிக்கிறார் ஸ்ரீதேவி. தன் இச்சைக்கு அடிப்பணிய மறுத்தவள் தாயாக வந்ததை ரஜினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காம வெறியுடன் தன்னை பார்த்த ரஜினியை மகனாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீதேவி தாயாக பணிவுடன் தலையைத் தடவி அதிர்ச்சி கொடுக்கிறார். ஸ்ரீதேவி தொட்டுக் கதைக்கும் போதெல்லாம் மின்சாரம் பாய்வது போல துடிக்கிறார் ரஜினி. ரஜினி முன்னர் கூறிய அதே வார்த்தைதனைக் திரும்பக் கூறி திக்குமுக்காட வைக்கிறார் ஸ்ரீதேவி.
பெண் பித்தனான ரஜினி வீட்டு வேலைக்காரியான அனுபமாவைக் கெடுக்கிறார். தன் தவறை உணர்ந்து ரஜினி திருந்துகிறார். தன்னால் கெடுக்கப்பட்ட அனுபமாவை திருமணம் செய்கிறார் ரஜினி. ரஜினி தவறுவிடும் போதெல்லாம் அவரின் மனச்சாட்சியாக வந்து மிரட்டுகிறார் கே.நடராஜ்.திரைக்கதை வசனம் எழுதி மிக் சிறந்த முறையில் இயக்கினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். பிரச்சினையான கதைகளை கையிலெடுத்து மிக லாவகமாக கையால்வதில் பாலசந்தருக்கு நிகர் பாலசந்தர் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் இயக்குநர் சிகரம். பாலசந்தரின் வசனங்களும் காட்சிகளும் பெரும் வரவே ற்பைப் பெற்றன.
அந்தாதி வடிவில் கவியரசு கண்ணதாசன் எழுதிய ஆடி வெள்ளி தேடி உன்னை, வசந்த கால நதிகளில் நானொரு கதாநாயகி ஆகிய பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசை இன்றும் மனதை வருடுகின்றது.
கதாநாயகனாகப் பவனிவந்த கமல் ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றி இருக்கிறார். கதாநாயகியான ஸ்ரீதேவி முதியவ
ருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறார். கமல், ஸ்ரீதேவி ஆகிய இருவரும் தமது நட்சத்திர அந்தஸ்த்தைப் பற்றிக் கவலைப்படாது கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளனர்.
தமிழில் வெற்றிபெற்ற இப்படம் மாத்தூரு சீதா என்னும் பெயரில் மலையாலத்திலும் ஓகசீகதா எனும் பெயரில் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றது
ரமணி
மித்திரன் 23/10/11

Thursday, November 3, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 9

ஹைதராபாத்தில் உள்ள விபசாரி ஒருத்தி கும்பகோணத்து பிராமணக் குடும்பத்தில் மருமகளாகிறாள். விபசாரத்தை துறந்து அக்ரஹாரத்து பெண்ணாக வாழ விரும்பும் அவளை அனுபவிக்கத் துடிக்கிறார் அந்தக் குடுபத்து ஜோதிடர். ஜோதிடரின் பேச்சைக் @கட்டு அக்குடும்பத்தவர் நடப்பதால் துன்பப்படும் ஒரு பெண்ணின் கதை தான் தனம் என்ற திரைப்படத்தின் ஒரு வரிக் கதை.
ஏழைகளிடம் சுரண்டும் முதலாளிகளிடமும் வறியவர்களிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பண்ணையாளர்களிடம் உள்ள பணத்தைப் பறித்து ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் கதாநாயகன் பணத்தை பகிர்ந்தளிப்பதும் பெண் விபசாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதும் தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி.
தனம் படத்தின் நாயகி ச‌ங்கீதா தன் உடம்பை விற்றுக் கிடைக்கும் பணத்தை அந்த சே ரியிலுள்ள சிறுவர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்கிறாள். 500 ரூபா இருந்தால் அணுகலாம் இல்லையேல் நடையைக் கட்டலாம் என்று தன்னை தேடிவரும் வாடிக்கையாளர்களிடம் முகத்தில் அடித்ததுபோல் கூறி பேரம் பேசுவார் சங்கீதா. ஹைதராபாத்துக்கு மேற் படிப்பிற்காக செல்லும் பிராமண இளைஞனான பிரேமுக்கு தனத்தின் இரக்க குணமும் சுபாவமும் பிடித்துவிடுகிறது. தன்னை திருமணம் செய்யும்படி தனத்திடம் கேட்கிறார். தான் விபசாரி என்பதை வீட்டில் உள்ளவர்களுக்கு கூறி அவர்கள் ஏற்றுக் கொண்டால் திருமணம் செய்வதாக உறுதியளிக்கிறார் தனம்.
தனத்துடன் கும்பகோணம் செல்கிறார் பி@ரம். பி@ரமின் விருப்பத்திற்கு குடும்பத்தவர்கள் பலமான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். குடும்ப ஜோதிடரான கோட்டா சீனிவாசன் ராவ் கூறியால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். சங்கீதா ஒரு தனலக்ஷ்மி அவள் இக்குடும்பத்தின் மருமகளானால் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று குடும்ப ஜோசியர் கூறினார். திருமணத்தின் பின்னர் அக்குடும்பம் செல்வச் செழிப்பில் மிதக்கிறது. தனம் குடும்பப் பெண்ணாக வே மாறிவிட்டார். பழையதை மறந்துவிட்டார். விபசாரி எப்பவும் விபசாரி@ய என நினைக்கும் கோட்டா சீனிவாசராவ் அவளை அடைய துடிக்கிறார். பிரேமின்சகோகாதரனும் சீண்டிப் பார்க்கிறான். எல்@லாருக்கும் பதிலடி தருகின்றார் சங்கீதா.

ஹைதராபாத்தில் 500 ரூபாவுடன் சங்கீதாவை அனுபவிக்க முடியாது ஏமாற்றமடைந்த கருணாஸ் சங்கீதாவுக்கு எதிராக செய்யும் செயல்கள் எல்லாம் @தால்வியில் முடிகிறது தனத்தை அனுபவிக்க முடியாது தவித்த @காட்டா சீனிவாசராவ் அவளைப் பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்திருந்தார். தனத்துக்கு பெண் குழந்தை பிறக்கிறது அப்@பாது வியாபாரம் படுக்கிறது. பி@ரமின் பாட்டன் மரணமாகிறார். குழந்தை பிறந்த @நரம் சரியில்லை என்று கோட் டா சீனிவாசராவ் கூறுகின்றார். அவரின் ஆ@லாசனைப்படி குழந்தையை கள்ளிபால் கொடுத்து கொலை செய்கிறார்கள். குழந்தை இறந்ததும் துடிக்கிறாள் சங்கீதா. தன் குழந்தை கொலை செய்யப்பட்டதாக அறிந்த சங்கீதா அந்தக் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறாள்.
குடும்பத்தவர் அனைவருக்கும் தன் கையால் சமைத்து பரிமாறுகிறாள் தனம். வில்லன் கோட்டா சீனிவாசராவும் விருந்தில் கலந்துக் கொள்கிறார். தனம் கொடுத்தது விருந்து அல்ல விஷம் என்பதை சாப்பிட்ட அனைவரும் தெரிந்துக் கொள்கின்றனர். விஷத்தை சாப்பிட்ட அனைவரும் இறக்கின்றனர். எல்லோரும் இறக்கும்போது சிரித்த சங்கீதா கணவன் இறக்கும் @பாது அழுகிறாள். மீண்டும் ஹைதராபாத் செல்லும் சங்கீதா 500 ரூபாவுக்கு விபசாரியாகிறாள்.
சங்கீதா செய்த கூட்டுக் கொலைப்பற்றி விசாரணை செய்த உயர் பொலிஸ் அதிகாரிகள். சங்கீதா பழி வாங்கியது நியாயம் என்பதால் விசாரணையை கை விடுகின்றனர்.
படத்தின் இறுதிக் காட்சியில் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சங்கீதா. சேŒலை அணிந்து கவர்ச்சியாக நடமாடும் சங்கீதா இறுதி காட்சியில் கலக்கிவிடுகிறார். கிரிஷ் கர்ணட் கோட்டா சீனிவாசன் ராவ் ஆகி@யார் படத்துக்கு மெருகூட்டுகிறார்கள். சிவா இயக்கிய இப்படம் வெற்றிப்படம் அல்ல என்றாலும் பாடல்களும் ஒளிப்பதிவும் மனதைவிட்டு அகலவில்லை.
கண்ணனுக்கு என்ன வேண்டும் என்ற பாடலை என்றைக்குமே மறக்க முடியாது. இப்பாடல் திரைப்படத்துக்காக எழுதப்படவில்லை. கண்ணதாசனின் மகள் வைஷாலியிடம் ஒரு கண்ணன் பாட்டு வேண்டும் என இளையராஜா கேட்டு வாங்கிய பாடலையே தனம் படத்தில் இணைத்தார்.


ரமணி
மித்திரன் 30/10/11