Showing posts with label மகளிர்23. Show all posts
Showing posts with label மகளிர்23. Show all posts

Friday, August 18, 2023

இங்கிலாந்துக்கு சவால்விடும் ஸ்பெய்ன்


மகளிர்  உலகக்கிண்ண அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, ஸ்பெய்னும் 20 ஆம் திகதி சிட்னியில் வடக்கும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை  நடத்த  உள்ளன.

பரபரப்பாக  நடந்த அரை இறுதிப் போட்டியில்  இரண்டு ஐரோப்பிய அணிகள்  பலப்பரீட் சை  நடத்தின.  80 ஆவது நிமிடம்  வரை  இரண்டு அணிகளும்  கோல் அடிக்கவில்லை. கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை எதிரணி வீரர்களும், கோல்கீப்பர்களும்  முறியடித்தனர்.  81வது நிமிடத்தில் ஸ்பெய்ன் வீராங்கனை சல்மா கோல் அடித்தார். பதிலுக்கு  சுவீடன் வீராங்கனை  ரெபெக்கா 88வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க ஆட்டம் சமநிலையை எட்டியது.  சுவீடன் வீரர்களும், ரசிகர்களும்  உற்சாகமடைந்த.  அந்த உற்சாகம் அடுத்த நிமிடம் கரைந்துபோனது.  89 ஆவது நிமிடத்தில் கார்மோனா கோல் அடித்தார்.  2003 இல் கனடாவின் காரா லாங்கிற்குப் பிறகு,சுவீடனுக்கு எதிராக மகளிர் உலகக்கிண்ண  அரையிறுதியில் கோல் அடித்த இரண்டாவது இளம்பெண் என்ற பெருமையை கார்மோனா  பெற்றார்.2-1    என்ற கோல்கணக்கில் ஸ்பெய்ன்  முன்னிலை  பெற்றது. அதுவே  வெற்றிக்  கோலாகியது.

போட்டிநேரத்தில் பந்து முழுவதும் ஸ்பெய்னின் ஆதிக்கத்திலேயே இருந்தது. 13 முறை  ஸ்பெய் னும், 6 முறை  சு வீடனும்  கோல்கம்பத்தை நோக்கி அடித்தன.  சுவீடன் அடித்த இரண்டு கோல்களும், ஸ்பெய்ன் அடித்த மூன்று கோல்களும் தடுக்கப்படடன.டார்கெட்டை நோக்கி 2 ஷாட்களை ஸ்பெயினும், 3 ஷாட்களை ஸ்வீடனும் செய்தன. ஸ்பெய்ன் வீராங்கனைகள் 6 முறையும் சுவீடன் வீராங்கனைகள் 13 முறையும் தவறு செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில்  நாடைபெற்ற அரையிறுதியிலும், கடந்த ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கடைசி நான்கிலும்  தோல்வியடைந்த சுவீடன் , இந்த ஆண்டு மகளிர் அரை  இறுதியிலும் தோல்வியடைந்தது . சுவீடன்   ஐந்து அரையிறுதிப்  போட்டிகளில்  விளையாடி  நான்கில் தோல்வியடைந்துள்ளது   நான்காவது முறையாக மூன்றாவது இடத்தைப் பிடிக்க முயற்சிக்கும். 

கடந்த ஆண்டு பயிற்சியாளர் ஜார்ஜ் வில்டாவுக்கு எதிராக ஸ்பெய்ன்  வீராங்கனைகள்  கிளர்ச்சியைசெய்தனர்.

ஸ்பெய்னைச் சுற்றியுள்ள சர்ச்சை கடந்த செப்டம்பரில் ஆரம்பமானது., பயிற்சியாளர்  வில்டா வுக்கு எதிராகவும் ,தேசிய அணிக்கான நிலைமைகள் குறித்தும்  புகார் கடிதத்தில் 15  வீராங்கனைகள் கையெழுத்திட்டனர். அவர்களில்  மூவர்   இந்த உலகக் கிண்ண  அணியில் உள்ளனர்,

 இரண்டு முறை பலோன் டி'ஓர் வென்ற  ஸ்பெய்ன் வீராங்கனை அலெக்ஸியா புட்டெல்லாஸ், மூன்றாவது உலகக்   போட்டியில்  விளையாடுகிறார்

சுவீடன்   இதுவரை உலகக்   கிண்ணத்தை  வென்றதில்லை.  2003 இல்  ரன்னர்-அப் , மூன்று முறை மூன்றாவது இடத்தைப் பிடித்தது.    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில்  சுவீடன் வெள்ளிப் பதக்கங்கம் வென்றது.  மேலும் 2016 இல்  பிறேஸிலில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வென்றது.

சிட்னியில் நடை  பெற்ற மகளிர் உலகக்கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய இங்கில்லாந்து  3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. முந்தைய இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அரையிறுதியில் தோல்வியடைந்த இங்கிலாந்து, கடந்த ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் வெற்றியுடன் உலகப் கிண்ணப் பட்டத்தை சேர்க்கும் முனைப்பில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதியை எட்டியுள்ளது.  2022 இல் யூரோ சம்பியனாகிய  பின்னர்   இரண்டாவது பெரிய போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட ஆர்வமாக  இருக்கிறது  இங்கிலாந்து.

ஏப்ரலில் நடந்த நட்பு ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில்  அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது, சரீனா விக்மேன் பயிற்சியாளர் இடத்தைப் பிடித்த பிறகு அவர்கள் பெற்ற ஒரே தோல்வி.   இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இரு அணிகளும் இதுவரை சம்பியனாகத அணிகள்.

எதிர் வரும் 20-ஆம்திகதி    ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பிரமாண்டமான இறுதிப் போட்டியில் ஸ்பெய் ன் அணி இங்கிலாந்து  எதிர்கொள்கிறது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இங்கிலாந்து அணி தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றிகளைக் குவித்து வருவதால், இறுதிப் போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கிலாந்து அணி ரசிகர்கள்  உள்ளனர்.

Wednesday, July 26, 2023

மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டம்


    மகளிர்  உலக கிண்ண   9 வது சீசனை அவுஸ்திரேலியாவ் உம் நியூஸிலாந்தும் இணைந்து நடத்துகின்றன.    ஜூலை  20 ஆம் திகதி தொடங்கிய போட்டி   ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை நடைறும் .   1988 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆண்கள்  உலகக் கிண்ணப் போட்டிகளில்  என்ன விதிமுறைகள் பின்பற்ற்றப்பட்டடதொ

  அதே விதிமுறைகளை பின்பற்றியே   மகளிர்  உலகக்  கிண்ணப் போட்டியும்  நடக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த  உலகக்கிண்ணப் போட்டிகளில் 24 நாடுகள் பங்குபற்ரின  ஆனால், இம்முரை  முதன்  முதலாக 32 நாடுகள் 64  போட்டிகளில் விளையாடுகின்றன. அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான், தென் கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா , கனடா, கோஸ்டா ரிக்கா, ஜமேக்கா, சாம்பியா, மொரோக்கோ, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, கொலம்பியா, பிறேஸில், ஆர்ஜென்ரீனா, நோர்வே, ஜேர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹைட்டி, போர்ச்சுகல், பனாமா ஆகிய நாடுகள் உகலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன.

பரிசுத் தொகை

சம்பியனாகும்  அணிக்கு  4,290,000 டொலரும், ஒரு வீரருக்கு 270,000 டொலர் என்று மொத்தம் 10,500,000 டொலர்  பரிசாக வழங்கப்படும்.

ரன்னேஸ் அணிக்கு  3,015,000 டொலரும், ஒரு வீரருக்கு 195,000 டொலர் என்று மொத்தம் 7,500,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.

மூன்றாவது பரிசை வெல்லும் அணிக்கு 2,610,000 டொலரும், ஒரு வீரருக்கு 180,000 டொலர் என்று மொத்தம் 6,750,000  டொலர்  பரிசாக வழங்கப்படும்.

 நான்காவது பரிசை வெல்லும்  அணிக்கு  2,455,000 டொலரும், ஒரு வீரருக்கு 165,000 டொலர் என்று மொத்தம் 6,250,000 டொலர்  பரிசாக வழங்கப்படும்.

 5  ஆம் இடத்தை பிடிக்கும் அணிகலூக்கு   2,180,000 டொலரும், ஒரு வீரருக்கு 90,000 டொலர் என்று மொத்தம் 17,000,000 டொலர்  பரிசாக வழங்கப்படும்.

9௧6 ஆம் இடத்தை பிடிக்கும் அணுகளுக்கு  1,870,000 டொலரும், ஒரு வீரருக்கு 60,000 டொலர் என்று மொத்தம் 26,000,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.

17௩2 ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு  1,560,000 டொலரும், ஒரு வீரருக்கு 30,000  டொலர் என்று மொத்தம் 36,000,000 டொலர் பரிசாக வழங்கப்படும் .

  32 நாடுகளுக்கான மொத்த பரிசுத் தொகை $110 மில்லியன் ஆகும், இது முந்தைய பதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். கத்தாரில் நடைபெற்ற ஆண்கள் போட்டியில் மொத்த பர்ஸ் $440 மில்லியன் ஆகும். FF கோப்பையை வெல்லும் அணிக்கு $10.5 மில்லியன் வழங்கப்படும். அதில் $6.21 மில்லியன் வீரர்களுக்கும், $4.29 மில்லியன் கூட்டமைப்புக்கும் வழங்கப்படும். அவுஸ்திரேலியா , நியூசிலாந்து முழுவதும் உள்ள, ஒன்பது வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள 10 மைதானங்கள் போட்டிகளுக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரங்களில், சிட்னியில் மட்டும் இரண்டு இடங்களில் போட்டிகள் நடத்தப் படுகிறது. சிட்னி கால்பந்து ஸ்டேடியம் ,ஸ்டேடியம் அவுஸ்திரேலியா என்ற இரண்டு மைதானங்கள் அங்கு உள்ளன.

Sunday, July 2, 2023

80,000 ரிக்கெற்களும் விற்று முடிந்துவிட்டன‌

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கிண்ண தொடக்க  போட்டியின்  80,000 ரிக்கெற்களும் விற்பனையாகிவிட்டதாக பீபாவின் மூத்த அதிகாரி டேவ் பீச்  செவ்வாயன்று  தெரிவித்தார்.

பெண்கள் உலகக்  கிண்ணத் தலைமை நிர்வாகி டேவ் பீச் கூறுகையில், ஜூலை 20 ஆம் திக‌தி  நடைபெறும் அவுஸ்திரேலியா அய‌ர்லாந்து ஆகியவற்ருக்கிடையிலான  போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னி ஸ்டேடியத்தில் நடைபெற  உள்ளது. 80,000 ரசிகர்கள் அமரக்கூடிய மைதானத்தின் அனைத்து ரிக்கெற்களும் விற்பனையாகிவிட்டன.  இது சுமார் 80,000 ரசிகர்களைக் கொண்டுள்ளது. றினார்.

அதே நாளில் ஆக்லாந்தில், நியூசிலாந்து ,நோர்வே ஆகியவற்ருகிடையிலான நடைபெற  உள்ளது. , ஈடன் பார்க்கில் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டத்திற்கு "சில ஆயிரம்" டிக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. 

நியூசிலாந்தில் போட்டியின் குறைந்த டிக்கெட் விற்பனை குறித்த அச்சம் இருந்தபோதிலும், தொடக்க ஆட்டத்தில் ஆக்லாந்து மைதானம் விற்றுத் தீர்ந்துவிடுமா என்று கேட்டதற்கு "ஆம், நிச்சயமாக" என்று பீச் பதிலளித்தார்.

அவுஸ்திரேலியா , நியூசிலாந்தில் நடக்கும் 64 போட்டிகளுக்கு சுமார் 1.1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக  பீபா  உதைபந்தாட்ட  நிர்வாக குழு   தெரிவித்துள்ளது. 

பீபாவின் மகளிர் கால்பந்தாட்டத் தலைவி சாராய் பேரேமன், நியூசிலாந்தில் உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை குறைவாக இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இதுவரை 270,000 டிக்கெட்டுகளும் அவுஸ்திரேலியாவில் 830,000 டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக பீச் கூறினார்.

அந்த சமமற்ற எண்கள் 26 மில்லியன் மக்கள் வாழும் அவுஸ்திரேலியா மற்றும் ஐந்து மில்லியன் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தின் மக்கள்தொகை அளவைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

"மாடில்டாஸ் ஒரு உயர் தரவரிசை அணியாகவும், கால்பந்து ஃபெர்ன்களின் ஃபார்மிலும் பார்க்கும்போது, நியூசிலாந்து நன்றாகச் செயல்படுகிறது" என்று அவர் கூறினார்.

 

Monday, May 15, 2023

உலகக்கிண்ண உதைபந்தாட்ட அனுசரணையாளரானது யுனிலீவர்


 அவுஸ்திரேலியா,நியூஸிலாந்து ஆகிய நாடுகளில்  நடைபெறும் மகளிர்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் அதிகாரபூர்வ அனுசரணையாளராக  யுனிலீவர் இணைந்துள்ளது.

ரெக்ஸோனா,டோவ்,லைஃப்போய், லக்ஸ் ஆகியவற்ரின் தயாரிப்பாளரான யுனிலீவர் பீபாவுடன்   முத்ச்ன்  முதலாக  இணைந்துள்ளது.

 . 2020 இல் தொடங்கப்பட்டதபீபாவின் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்துடன்  யுனிலீவர்ஒத்துழைக்கும். இந்த முயற்சி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வாய்ப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் கால்பந்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிக்கிறது. யுனிலீவர் நிதியுதவி, மனித வளங்கள் மற்றும் பெண்களின் விளையாட்டைச் சுற்றியுள்ள ஆர்வத்தின் எழுச்சியைத் தட்டிக்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஆதரவை வழங்கும்.

  மகளிர் உலகக் கிண்ணப் போட்டி உலகின் மிகப்பெரிய தனித்த பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது, இது சுமார் இரண்டு பில்லியன் மக்களை சென்றடைகிறது.  போட்டியின் 64 போட்டிகளில் 1.5 மில்லியன் ரசிகர்களை  இலக்காகக் கொண்டுள்ளது, மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க பல வாய்ப்புகளை வழங்குகிறது.

யூனிலீவர் பிராண்டுகளின் தற்போதைய திட்டங்களில் இந்த ஒத்துழைப்பு உருவாக்கப்படும், இது சமூகங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சமீபத்திய வேலைகளில் Rexona's Breaking Limits திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது, இது சமூக விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளிக்கிறது மற்றும் இளைஞர்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கான தடைகளை கடக்க உதவுகிறது. டவ் சுயமரியாதை திட்டம் 2004 இல் தொடங்கப்பட்டதில் இருந்து அடுத்த தலைமுறை பெண்களில் உடல் நம்பிக்கையை ஊக்குவித்து வருகிறது, இன்றுவரை 94 மில்லியன் இளைஞர்களை சென்றடைந்துள்ளது.

 எதிர்காலத்தில்  பீபா  ரசிகர்களுக்கு நேரடியாக தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் அடங்கிய மொத்தம் 80,000 பரிசுப் பொதிகளை வழங்க யுனிலீவர் திட்டமிட்டுள்ளது.

Saturday, February 25, 2023

உலகக்கிண்ணப் போட்டிக்கு போத்துகலும் ஹெய்ட்டியும் தகுதி பெற்றன


 நியூஸிலாந்தில் நடைபெற்ற  பிளேஃஓவ்  போட்டிகளில் வெற்றி பெற்ற  போத்துகலும், ஹெய்ட்டியும்  முதன் முதலாக  மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

புதன்கிழமை நடைபெற்ற பிளே-ஆஃப் வெற்றிக்குப் பிறகு போத்துகல் , ஹெய்ட்டி ஆகியன    அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து ஆகியன  இணைந்து நடத்தும் மகளில்  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

ஆக்லாந்தில் நடைபெற்ற பிளே-ஓஃப் போட்டியின் குரூப் பி பைனலில் சிலியை 2 ௧ என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்ற ஹெய்ட்டி முதல் முறையாக எலைட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கிடையில், ஹமில்டனில் நடந்த மகளிர் உலகக் கோப்பை பிளே-ஓஃப்  போட்டியில் போத்துகல் 2  -1 என்ற கோல் கணக்கில் கமரூனை வீழ்த்தியது.

  இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் சீனாவுடன்  குழுயில் D இல் ஹெட்டி இடம் பெறும்.

 அமெரிக்கா, வியட்நாம் மற்றும் நெதர்லாந்துடன் குழு  A  இல்  போத்துகல்    இருக்கும்.   ஜூலை 20 முதல் ஓகஸ்ட் 20 வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகலில்  உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும். 

ஹாமில்டனில் நடைபெறும் சி குரூப்  போட்டியில் பராகுவே பனாமாவை எதிர்கொள்ளும் போது போட்டியின் மற்றொரு இடம்  இன்று  வெளிக்கிழமை  தீர்மானிக்கப்படுகிறது.