Tuesday, January 31, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 54

ஸ்ரீதரின்  வெற்றிப்படங்களின் வரிசையில்  கதலிக்க நேரமில்லை  முக்கியமானது. ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகிய  இருவரு சினிமாவில் அறிமுகமான படம்.  நகைச்சுவைப்  படமான காதலிக்க நேரமில்லை ரசிகர்களை மகிழ்வித்தது. இயக்குநர் ஸ்ரீதரும், கவிஞர் கண்ணதாசனும்  மிகவும் நெருக்கமான நண்பர்கள். இடைக்கிடை  இருஅவ்ரும் கோபித்துக்கொள்வார்கள்.  பின்னர் சமாதானமாகி விடுவார்கள்.

  கவிஞர் கண்ணதாசன்  பலருடன்  முரண்படுவதும் பிறகு சேர்வதும் சகஜம். கவிஞர் சிலருடன் மட்டும்தான் நெருங்கிப் பழகுவார். அதில் இயக்குநர் ஸ்ரீதர் முக்கியமானவர். அடுத்தடுத்த வெற்றிகளுடன் ‘வித்தியாசமான இயக்குநர்’ எனப் பெயர் எடுத்திருந்தார். ‘தேன்நிலவு’ தொடங்கி அவரின் எல்லா படங்களுக்கும் கவிஞர்தான் பாடல்கள் எழுதுவார்.ஸ்ரீதர் கவிஞரைவிட இளையவர். அவரை கவிஞர் ‘ஸ்ரீ’ என்றுதான் அழைப்பார்.

  புதுமுகங்களை வைத்து  இயக்கவுள்ள ஒரு புதுப்படம் தொடர்பாகப் பேச  ஸ்ரீதரரும், கண்ணதாசனும்  சந்தித்தனர்.  ஸ்ரீதரின் உதவி இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் (ஸ்ரீதரின் சகோதரர்), புரொடக்‌ஷன் மேனேஜர் ,பஞ்சு அருணாசலம்,அவரின் உதவியாளர்களும்அங்கே  இருந்தனர். கவிஞர், எம்.எஸ்.வி., ஸ்ரீதர் மூவரும் உள்ளே அறையில் அமர்ந்து   பேசிக்கொண்டிருந்தனர். மற்றையவர்கள் வெளியே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். 

மலேஷியாவில் இருந்து ஒருவர் வந்திருக்கிறார்.அவருடைய  பெயர் ரவிச்சந்திரன்.ரொம்ப ஸ்டைலா  இருக்கான்.  அழகான விமானப் பனிப்பெண்ணச் சந்தித்தேன்.  கானிசனா என்ற அந்தப் பெண்ணிடம் நடிக்க சம்மத்மா எனக் கேட்டேன். ஒத்துக்கொண்டார். லவ் காமெடி க்லந்த கலர் படம் எடுக்கப்போரன்.  "காதலிக்க நேரமில்லை" அதுதான் டைட்டில் என ஸ்ரீதர் சொன்னார்.

மிக இளம் வயதிலேயே புகழ் அடைந்ததால் ஸ்ரீதருக்கு தன்னம்பிக்கை அதிகம். அது அவரின் பேச்சிலேயே எதிரொலிக்கும். அது அகந்தையோ, திமிரோ கிடையாது. ஆனால், சமயங்களில் அது எதிரில் உள்ளவர்களைக் காயப்படுத்திவிடும். அன்றும் அப்படி ஆரம்பித்திருக்கிறார். ‘என்னைத் தவிர இந்த ஷாட்டை வைக்கிறதுக்கு எவன் இருக்கான், ஒரு பயலைச் சொல்லுங்க கவிஞரேஎனச் சொல்லி இருக்கிறார். ‘ஆமாம் ஸ்ரீ, நீ திறமையானவன்...’ என, கவிஞர் பாராட்டியிருக்கிறார். பிறகு, போகப்போக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கோபமாக அறையில் இருந்து வெளியேறினார் ஸ்ரீதர். ‘சொந்தப் படம். ஏன் புதுமுகங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்குற?என கண்ணதாசன்  கேட்டபோகு. ஸ்ரீதருக்கு கோபம் வந்து விட்டது.  நான் நினைச்சா எது வேணும் னாலும் பண்ணுவேன். எனக்கு எவனும் தேவை இல்லைர்ன ஸ்ரீதர் சத்தமாகச் சொன்னார்.

 நான் வேணாமா, விஸ்வநாதன்கூட வேணாமா?’என்ரு கணதாசன் கேட்டார்.

 நீங்க ரெண்டு பேரும் பெரிய பக்கபலம்தான். ஆனா, நீங்க இல்லைனாக்கூட என்னால படம் எடுக்க முடியும்ஸ்ரீதர் கோபத்துடன் பதிலளித்தார்.

 அப்படின்னா நாங்க இல்லாம இந்தப் படத்தை நீ எடுத்துப்பாரேன் என்று கண்னதாசன் விளையாட்டாகச் சொன்னார். ஸ்ரீர் கோபப்பட்டு  அறையை விட்டு   கோபத்துடன் வெளியேறினார்.  கண்ணதாசன்  கோபப்படாமல் சிரித்தபடி அமைதியாக  இருந்தார்.

காதலிக்க நேரமில்லை படக்தின்  படப்பிடிப்பு ஒரு வாரத்தில்  பொள்ளாச்சியில் நடைபெற்றது. பாடல் தயாராகவில்லை.  திடீரென சித்ராலய கோபுவை அழைத்த   ஸ்ரீதர், நீ போய் கவிஞர்கிட்ட கதையைச் சொல்லி பாடல்களை ரிக்கார்ட் பண்ணிட்டு வந்துடுஎன,  அனுப்பினார்.  அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டர்கள். கண்ணதாசனும், எம்.எஸ்.விச்வநாதனும் வேண்டாம் எனக் கூரியவர கண்னதாசனிடம் ஒருவரைத் தூது விட்டார்.    ஒரே ஒரு பாட்டு மட்டும் கண்டிப்பா இந்த சிச்சுவேஷனுக்கு வரணும். மத்ததை உங்க இஷ்டத் துக்கு எழுதச் சொல்லிட்டார்என சித்ராலயா  கோபு சொன்னார். கதை, திரைக்கதை   கோபு. காமெடி ஏரியாவில் கோபு  கில்லாடி.

வெறும் நான்கு நாட்களில் ஏழு பாடல்களை எழுதிக் கொடுத்தார் கவிஞர். அதில் வந்தவிஸ்வநாதன் வேலை வேணும்...’ மட்டும்தான் சிச்சுவேஷனுக்கு எழுதியது. மற்ற பாடல்கள் எல்லாம்இந்தப் பாட்டை இங்கே வெச்சுக்கலாம், அதை அங்கே வெச்சுக்கலாம்எனக் கவிஞரும் கோபுவும் முடிவு செய்தவை. ஒலிப்பதிவு முடிந்து    பாடல்களைக் கேட்டுவிட்டு ஸ்ரீதர் துள்ளிக் குதித்துவிட்டார். ‘படம் சூப்பர் ஹிட். பிச்சிக்கிட்டுப் போயிடும். அந்தாளு ஞானிய்யா. ‘நான் இல்லாம நீ நிக்க முடியுமா?’னு சபதம்  போட்டான். அது உண்மைதான்.. இப்பதான்யா எனக்குப் புரியுது. இப்ப சொல்றேன். நீ வேணும்னா பாரு, இந்த செஞ்சுரியிலேயே இதுதான்யா பெஸ்ட் பிக்சர்ஸ்ரீ தரின் பேச்சில் அவ்வளவு உற்சாகம்.

சந்தோஷ மிகுதியால் கவிஞருக்கு ட்ரங்க் கால் புக்பண்ணி பேசினார் ஸ்ரீதர். ‘நீங்க பொள்ளாச்சிக்குப் புறப்பட்டு வரணும். நாலு நாளாவது என்கூடத் தங்கணும்என்றார்.  கவிஞர்  வேண்டாம் என  புறகணித்தவர் அவரை அன்புடன் அழைத்தார்.  கண்னதாசன் நான்கு நாட்கள்  பொள்ளாச்சியில் தங்கி  ஸ்ரீதரை உற்சாகப்படுத்தினா    

60-களில் வந்த படம், ‘சாரதா’. அந்தப் படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர்தான் எழுதினார். படப்பிடிப்பும் முடிந்தது. படத்தைப் போட்டுப்பார்த்த பிறகு ஒரு பாட்டு சேர்த்தால் நன்றாக இருக்குமே என நினைத்து இருக்கிறார்கள். ஆனால், அந்தச் சமயத்தில் கவிஞர் ஊரில் இல்லை. படம் வெளியாக வேண்டிய   நெருக்கடி என்பதால் பாடல் அவசரமாகத் தேவைப்பட்டது.  கவிஞர் வெளியூர் சென்று விட்டார் என அவரது உதவியாளர் பஞ்சு அருணாசலம் தெரிவித்தார். அவசரமாகப் பாடல் தேவை என்பதால் படலை எழுதும்படி இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், பஞ்சு அருணாசலத்திடம்   கூற்னார்.  பஞ்சு அருணாசலம் மறுப்புத் தெரிவித்தார். கவிஞரிடம் நன் சொல்கிறேன் பாட்டை எழுது என கே.வி.மகாதேவன் வற்புறுத்தினார். தயக்கத்துடன் பஞ்சு அருணாசலம் எழுதிய பாடல்  இன்றுவரை திருமண வீட்டின் தேசிய கீதமாக  ஒலிக்கிறது. அந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியதாக பலர்  இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.  

மணமகளே மருமகளே வா வா... உன் வலது காலை எடுத்துவைத்து வா வா...’ என்ற அந்தப் பாடல்  பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஈஸ்ட்மென்கலரில் வெளியான முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். படம் தெலுங்கில் பிரேமிஞ்சி சூடு என்ற பெயரிலும், இந்தியில் பியார் கியே ஜா என்றும், கன்னடத்தில் ப்ரீத்தி மது தமாஷே நோடு என்றும், மராத்தியில் தூம் தாடகா என்றும் ரீமேக் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வசூல் வேட்டையினை நடத்தியது. தொடர்ந்து 175 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை புரிந்தது.

ஆனால் இத்தனை சாதனைகளுக்கு முன்னாலும் பெரிய போராட்டத்தினையே இயக்குனர் ஸ்ரீதர் சந்தித்து இருக்கிறார். முதல் பிரச்சனை பூஜையில் துவங்கியது. ஸ்ரீதரின் ஆசையின்படி ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் மகனை கேமராவினை ஆன் செய்ய ஏற்பாடு நடைபெற்றது. ஆனால், பூஜை துவங்கிய நேரத்தில் வின்செண்ட் மகன் செட்டில் இல்லை. பூஜை செய்ய வேண்டிய ஐயரும் இல்லை.

இதனால் இயக்குனர் ஸ்ரீதரே சாமிக்கு ஆரத்தி எடுத்திருக்கிறார். ஆனால் அதுவும் அணைந்து விட்டதாம். இப்படி தொடர் தடங்கலால் படக்குழு அதிர்ந்துள்ளது. என்ன தொடர் அபசகுணமாக உள்ளதே எனப் பேசப்பட்டதாம். படப்பிடிப்பு துவங்கினால் ஒரு காட்சியில் கேமராவின் பெல்ட்டும் அருந்து விழுந்து விட்டதாம். ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் இந்த பிரச்சனைகளால் கொஞ்சம் கூட மனம் தளரவில்லை. தொடர்ந்து படப்பிடிப்பினை நடத்தினார். அவர் உழைப்பே படத்தினை வெற்றி வழிக்கு அழைத்து சென்றது.