Tuesday, December 28, 2010

தி.மு.க.வைக் கைவிடதயாராகிறது காங்கிரஸ்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார் ராகுல் காந்தி. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. தமிழக அரசின் இலவசத் திட்டங்கள், சலுகைகள் என்பன மக்களின் மனதில் நன்கு ஊன்றிப் போயுள்ளது. ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறினால் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தன என்ற முதல்வர் கருணாநிதியின் புள்ளி விபரம் அவர்களை சிந்திக்கத் தூண்டியது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்பெக்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என்ற பெருமை ஸ்பெக்ரம் விவகாரத்துக்குக் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசா தப்புச் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி அடித்துக் கூறுகிறார். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவான தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படாமையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது காங்கிரஸ் தலைவர்கள் பலர் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். அவர்கள் சீறும் போது காங்கிரஸ் தலைமை அவர்களை அடக்கி வைத்திருந்தது காங்கிரஸ் தலைமை. இன்று தலைமையைத் தட்டிக் கேட்கும் துணிவு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பிறந்துள்ளது.
காங்கிரஸ் தலைமைப் பீடத்திலும் தமிழகக் காங்கிரஸிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாக வெளிவிடுவதில்லை. இளங்கோவன் போன்ற ஒரு சிலர் மட்டும் அவ்வப் போது துணிவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தனர். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுத் தலைவர்கள் வெளிப்படையாகத் தமது கருத்துக்களைக் கூறத் தொடங்கி விட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கிய இலவசங்களும், சலுகைகளும் ஸ்பெக்ரம் என்ற மிகப் பிரமாண்டமான ஊழலின் முன்னால் அடிபட்டுப் போகும் நிலை உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு எதிரான கருத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் பகிரங்கமாகக் கூறவில்லை. ராசாவைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. ராசாவைக் காப்பாற்றுவதற்காக தலித் என்ற ஆயுதத்தை முதல்வர் கருணாநிதி கையில் எடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதா மிகவும் ஆர்வமாக உள்ளார். ஜெயலலிதாவின் மீது மதிப்பு வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களும் அதற்கு முழு முயற்சி செய்து வருகின்றனர்.
ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போன்றவர்கள் பகிரங்கமாக இதனைத் தெரிவித்துவருகின்றனர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறும் கட்சிகள் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறும் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் வாடிக்கையான சம்பவம். இந்த வழமையை மாற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். காங்கிரஸின் முதுகில் ஏனைய கட்சிகள் தொடர்ந்தும் சவாரி செய்ய இடமளிக்கக் கூடாது. காங்கிரஸுடன் மற்றக் கட்சிகள் சேர வேண்டும் என்பதே ராகுலின் குறிக்கோள்.
ராகுல்காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஸ்பெக்ரம் விவகாரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைந்தால் காங்கிரஸ் கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய் விடும். காங்கிரஸ் கட்சி மதிப்புடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டுமானால் காங்கிரஸின் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் உள்ள பலர்மீது. ஊழல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு சிலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் கட்சி தான் என்பதை நிரூபிக்கும். ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் பதவி வகிக்க முடியாது. ஊழலை ஊக்குவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி கூறியுள்ளார். சோனியாவின் இந்தக் கூற்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணியாக அடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகக், கூட்டணியில் இருந்து வெளியேறினால் விஜயகாந்துடன் கூட்டணி சேரும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் செல்வாக்கு மிக்க ஊழல் இல்லாத கட்சி தலைவராக விஜயகாந்த் உள்ளார் என்ற கருத்து உள்ளது.
இளைஞர் காங்கிரஸில் உள்ளவர்கள் அடுத்த தமிழக முதல்வர் என்று இளைஞர்களை உசுப்பி விட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பல பிரிவுகள் உள்ளன. வாசன், இளங்கோவன், சிதம்பரம் போன்ற தலைவர்களின் பின்னால் பலர் அணி வகுத்து உள்ளனர். ஒரு தலைமையின் கீழ் தமிழக காங்கிரஸ் செயற்பட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். ராகுல் காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக இளைஞர் காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் அதற்குள்ளும் சில கோஷ்டிப் பூசல்கள் உள்ளன.
ஸ்பெக்ரம் விவகாரம் ஜெயலலிதாவை உற்சாகமடைய வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் முக்கிய எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சியின் வெளியேற்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதிப் பலத்தைக் குறைத்து விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜய் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு விஜய் விரும்பினார். அவரைக் கட்சியில் சேர்ப்பதற்கான சமிக்ஞையை காங்கிரஸ் வெளியிடாததால் அரசியல் ஆர்வத்தை அடக்கி வைத்திருந்தார். இப்போது விஜய் அரசியலில் இறங்கும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
விஜயின் வரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் போக்குக் காட்டி விட்டு காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திராவிடக் கட்சிகளில் இணைந்தால் ஊழலைப் பற்றிப் பிரசாரம் செய்ய முடியாது. ஸ்பெக்ரமின் முன்னால் போஸ் ஊழல் காணாமல் போய் விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் பலமடைந்து வரும் வேளையில் ராசாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ராசாவை கட்சியில் இருந்து நீக்கினால் துணிவுடன் பிரசாரம் செய்யலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் ராசாவை பலிக்கடா ஆக்குவதிலேயே தங்கியுள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 26/12/10

Friday, December 24, 2010

இந்திய அரசியலை அதிரவைக்கும் ஸ்பெக்ரம் தமிழக சினிமாவைஆட்டிப்படைக்கும் அரசியல்


தமிழக அரசியலில் இருந்து தமிழ் சினிமாவை பிரித்துப் பார்க்க முடியாது. அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்துக்கும் அரசியலில் சேரப் போவ தாக அறிவித்த விஜய்க்கும் தொடர்ந் தும் நெருக்கடிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. ஆர். ராசாவின் பிரச்சினையின் சூடு ஆறுவ தற்கு முன்னர் சீமானின் விடுதலை தமிழக அரசியலை இன்னும் சூடாக்கியுள்ளது.
எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியோருக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதற்கு தமிழக அரசியல் தான் காரணம் என்று கருத்து நிலவுகிறது. நடிகர் விஜய் காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கே ராகுலைச் சந்திப்பதற்கு இலகுவில் அனுமதி வழங்கப் படுவதில்லை. விஜய் ராகுலைச் சந்தித்தது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. விஜயின் எதிர்பார்ப்பு நிறைவேறாததனால் அரசியல் பிரவேசம் தடைப்பட்டது.
அரசியல் கட்சி ஆரம் பிக்க வேண்டும் என்று எண்ணம் விஜ யிடம் இருக்க வில்லை. ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதனை அறிய அவரது ரசிகர்கள் தமது தலைவரை முதல்வராக்கப் போவதாக அறிவித்தார்கள். முதல்வர் கனவில் அரசியலில் இறங்கிய விஜயகாந்த் இன்னமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை மட்டும் தடுக்கிறது விஜயகாந்தின் கட்சி. விஜயகாந்த் எனும் நடிகர் வெற்றி பெற்றாரே தவிர விஜயகாந்தின் செல்வாக்கினால் அவரது கட்சியில் போட்டியிட்ட யாரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தான் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய தகவல் வெளியானது.
விஜயின் தகப்பன் எஸ்.ஏ. சந்திரசேகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர அபிமானி தனது மகனை முதல்வர் அரவணைப்பார் என்று எதிர்பார்த்தார். எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோரின் வெளியேற்றத்தின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பட்ட அவஸ்தைகளை மனதில் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் விஜயை இணைப்பதற்கு தயக்கம் காட்டியது. விஜய் நடித்த படங்களை வெளியிடுவதற்கு தமிழக தியேட்டர் உரிமையாளர் கள் போட்டி போடுவார்கள். கூடுதல் பணம் கொடுத்து விநி யோக உரிமையை வாங்குவார்கள். விஜய் நடித்த "காவலன்'படத்தை வெளியிடு வதற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்த மாதம் படம் வெளியிட வேண்டிய காவலன் படம் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகரன், ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பு பற்றிய உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியில் இணைவதற்கு முன்னர் தனது ரசிகர்களின் பலத்தைக் காட்டுவதற்கு பிரமாண்டமான மாநாடு ஒன்றை நடத்தும் எண்ணம் விஜயிடம் உள்ளது.
விஜயகாந்தின் மைத்துனர் தயாரித்து விஜய்காந்த் இயக்கி நடித்த விருதகிரி என்ற படத்தைத் திரையிடுவதற்கு தமிழகத்தில நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை. தமிழக அரசியல் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்களின் படங்கள் வெளியிட முடியாத நிலை உள்ளது. எதிர்ப்பை மீறி வெளியிட்டாலும் வெற்றி பெற முடியாதுள்ளது.
ராசாவை சுற்றி பின்னப்பட்ட ஸ்பெக்ரம் என்னும் வலை டில்லியையும் தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது அரசாங்கம் திணறுகிறது. "ஸ்பெக்ரம்' விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் அலுவலகங் களிலும் வீடுகளிலும் திடீர் திடீரென சோதனைகள் நடைபெறுகின்றது. திடீர் சோதனைகளின் போது முக்கியமான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகினவே தவிர அவை பற்றிய விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
"ஸ்பெக்ரம்' விவகாரத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் சோதனைகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. "ஸ்பெக்ரம்' ஒதுக்கீடு முறைப்படி தான் நடைபெற்றது என்பதில் மத்திய அரசு உறுதியாய் உள்ளது. "ஸ்பெக்ரம்' ஒதுக்கீட்டி"ல் ஊழல் நடைபெற்றிருந்தால் அது அரசாங்கத் துக்குத்தான் அவமானம் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ராசாவின் ராஜினாமாவின் மூலம் விவகாரத்தை அடக்கி விடலாம் என்ற எண்ணம் நிறைவேறவில்லை.
"ஸ்பெக்ரம்' விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லை. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர் தான் இதனைச் செய்தார் என்ற கருத்து காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது . "ஸ்பெக்ரம்' ஒதுக்கீட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக் கும் தொடர்பு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
ராசாவைக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் ஒன்றாகச் குரல் கொடுக்கின்றனர். எதிரும் புதிருமாக இருக் கும் மூவரும் ராசாவின் விவகாரத்தில் ஒற்றுமையாக உள்ளனர். ராசாவை விட கட்சி பெரிது என்று மூவரும் ஒருமித்துக் குரல் கொடுக்கின்றனர். ராசா தப்பிச் செல்லவில்லை என்று அடித்துக் கூறிய முதல்வர் கருணாநிதி என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றார்.
அமைச்சர் பூங்கோதையும் நீரா ராடியாவும் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் வெளியாகி திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்னமும் சூடாக்கியுள்ளது. முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் பூங்கோதை. இவ் விவகாரம் தயாளு அம்மாளுக்கும் நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தமிழருக்கு ஆதரவான சீமானின் பேச்சு அவரை சிறைக்கு அனுப்பியது அவருக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த சீமான் முதல்வர் கருணாநிதிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் சீமான். இந்த சவால் எதிர்க்கட்சிகளை மகிழச்சியில் ஆழ்த்தியுளளது. கருணாநிதிக்கு எதிராக சீமான் பொது வேட்பாளராக போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தங்களால் முடியாததை சீமானால் செய்ய முடியும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் தோல்வி அடையாத தலைவர் என்ற பெருமையுடன் இருக்கும் கருணாநிதியை வீழ்த்த நல்லதொரு அஸ்திரம் கிடைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/12/10

Monday, December 20, 2010

உதைபந்தாட்டத்தில் உலக நாடுகளுக்குஅதிர்ச்சி கொடுத்த ரஷ்யாவும் கட்டாரும்

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை 2018 ஆம் ஆண்டு நடத்துவதற்கான உரிமையை ரஷ்யா பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை குட்டி நாடான கட்டார் பெற்றுள்ளது.
சூரிச்சில் கடந்த வாரம் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இந்த அதிர்ச்சியான முடிவு வெளியானது. உதைபந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த நாடுகளை சிலவேளை குட்டிநாடுகள் தோற்கடித்து பெருமைபெறுவது போல இங்கிலாந்து, ஹொலண்ட், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளை தோற்கடித்து 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றுள்ளது. சகல வசதிகளும் உள்ள அமெரிக்காவையும் அவுஸ்திரேலியாவையும் தோல்வியடையச் செய்து 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை கட்டார் பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு இங்கிலாந்து, ரஷ்யா ஆகியனவும் ஸ்பெயின், போர்த்துக்கல்லுடன் இணைந்தும், பெல்ஜியம், ஹொலண்டுடன் இணைந்தும் போட்டியிட்டன. உலகக் கிண்ண உதைபந்தாட்ட சம்பியனான ஸ்பெய்ன் தனது நாட்டில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த பெரிதும் ஆர்வம் காட்டியது. ஆனால் இங்கிலாந்தின் முயற்சிகள் ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி இங்கிலாந்தில் தான் நடைபெறும் என்ற மாயையைத் தோற்றுவித்தது.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், பிரதமர் டேவிட் கமருன், இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர உதைபந்தாட்ட வீரருமான டேவிட் பெக்கம் ஆகியோர் முழு மூச்சாகப் பிரசாரம் செய்தனர். ரஷ்யாவில் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமானதால் வீரர்களின் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி யிருக்கும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வீரர்கள் சுமார் நான்கு மணி நேரம் பயணம் செய்து மைதானத்தைச் சென்றடைந்ததை சுட்டிக் காட்டியவர்கள் ரஷ்யாவிலும் அதேபோன்று பல மணி நேரம் பயணம் செய்து மைதானத்தை அடைய வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.
2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறாததனால் இங்கிலாந்து பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இளவரசர் வில்லியம், பிரதமர் டேவிட் கமரூன், உதைபந்தாட்ட நட்சத்திரம் டேவிட் பெக்கம் ஆகியோரின் முயற்சி வீணாகியது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்யும் அங்கத்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி தமக்கு ஆதரவு கோரினர். வாக்களிக்கும் உறுப்பினர்களின் உறுதி மொழியினால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை தங்களுக்குக் கிடைக்கும் என்று இங்கிலாந்து எதிர்பார்த்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஊழல் நடைபெறும் என்று ரஷ்யா கருதியது. அதன் காரணமாக புட்டின் அந்த விழாவில் பங்குபற்ற வில்லை. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்யும் அங்கத்தவர்களில் இருவர் ஊழல் காரணமாக வாக்களிக்கத் தடை செய்யப்பட்டனர்.
ஊழல் காரணமாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை தமக்குக் கிடையாது என்று ரஷ்யா எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்க்காது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை ரஷ்யாவுக்குக் கிடைத்தது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி இன்னொரு பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தி விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். 13 உதைபந்தாட்ட மைதானங்களைப் புனரமைப்பதற்கு 3.5 பில்லியன் டொலரை செலவு செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. உதைபந்தாட்ட மைதானங்களின் புனரமைப்புப் பணி நிறைவுறும் போது இந்தத் தொகை மேலும் பல பில்லியன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியை நடத்த அவுஸ்தி ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, கட்டார் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தியதால் மீண்டும் அந்த நாடுகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் போட்டியிலிருந்து ஜப்பானும் தென்கொரியாவும் வெளியேறின.
சிட்னி ஒலிம்பிக்கை பிரமாண்டமாக நடத்தியதால் அவுஸ்திரேலியாவின் மீது எதிர்பார்ப்பு கூடியது. அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவுக்குப் போட்டியாகப் பரப்புரை செய்தது. குட்டி நாடான கட்டாரை யாரும் கணக்கில் எடுக்கவில்லை. எதிர்பார்ப்புகளை உடைத்து 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை கட்டார் பெற்றுள்ளது.
கட்டாரின் வெப்ப நிலை உதைபந்தாட்ட வீரர்களின் உடல் நிலையைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு உள்ளது. வீரர்களின் தங்கி இருக்கும் ஹோட்டல்களையும் விளையாட்டு மைதானங்களையும் குளு குளு என வைத்திருக்கப் போவதாக கட்டார் உறுதியளித்துள்ளது.
எண்ணெய் வளம் மிக்க நாடான கட்டார் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்காகச் செலவு செய்யத் தயாராக உள்ளது. அங்கு அமைக்கப்படப் போகும் உதைபந்தாட்ட மைதானங்கள் எதிர்காலத்தில் கட்டாருக்குப் பயன்படுமா என்ற கேள்விக்கு கட்டார் பதிலளிக்கவில்லை.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் புதிய நாடுகளில் நடைபெற வேண்டும் என்பதில் பீஃபா உறுப்பினர்கள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. ரஷ்யாவிலும் கட்டாரிலும் முதன் முதலாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற உள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்வதற்கு 24 உறுப்பினர்கள் ரகசியமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் ரெய்னல்ரெமாரி (ரெமாரி) அமோஸ் அடமு (நைஜீரியா) ஆகியோர் தமது வாக்குகளை பணத்துக்கும் பெண்ணுக்கும் விற்பனை செய்ய முன் வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் வாக்களிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களும் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, வட / மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த தலா மூன்று உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்வதற்காக வாக்களித்த உறுப்பினர்களின் விபரம்:
தலைவர்
செப் பிளெச்சர் (வயது 74, சுவிற்ஸர்லாந்து) பீஃபா தலைவர் 1998 ஆம் ஆண்டு முதல் தலைவராக இருக்கும் இவர் பீஃபாவின் எட்டாவது தலைவர்.
மூத்த உப தலைவர்கள்
ஜுலியோ குரோடோனா (வயது 79, ஆர்ஜென்ரீனா) பிரபல தொழிலதிபரான இவர் உதைபந்தாட்டக் கழகமாக அர்செனாவின் ஸ்தாபகர் இஸ்ஸா ஹயரோ (64, கமரூன்), கமரூன் சுல்தானின் மகனான இவர் கமரூனின் முன்னாள் பிரதமர். கமரூன் உதைபந்தாட்ட அணியின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவரின் சகோதரர்.
டாக்டர் சுங் மொங் யூன் (59, தென் கொரியா), அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் பீஃபா தலைவர் தேர்தலில் இன்றைய தலைவருக்கு போட்டியாளராக விளங்குபவர் உலகின் பிரபலமான ஹுண்டாய் நிறுவனத்தின் பிரதான பங்காளர், ஜக் வார்னர் (67, ரினிடாட் அன்ட்டுபாக்கோ) CONCACAFதலைவர், ரினிடாட்டின் போக்குவரத்து அமைச்சர், 1980 ஆம் ஆண் டும் 1990 ஆம் ஆண்டும் தற்காலிக பிரதமராகப் பதவி வகித்தவர்.
அஞ்ஜில் வில்லாஇலானோ (60, ஸ்பெயின்), ஸ்பானிய பெடரேஷன் தலைவர், சட்டத்தரணி, ஸ்பானிய அணியின் முன்னாள் வீரர் 1970 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடி 22 வெற்றிக் கிண்ணங்களை ஸ்பெயின் பெறுவதற்கு பிரதான காரணியாக இருந்தவர். மைக்கல் பிளட்டின் (55 பிரான்ஸ்), UEFA தலைவர், பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் பிரான்ஸ் அணியின் வெற்றிக்காகப் பல கோல்களை அடித்தவர். 1984 ஆம் ஆண்டு ஐரோப்பிய வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் பெற்ற அணியில் விளையாடியவர். 1978, 1982, 1986 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரான்ஸ் அணிக்காக விளையாடியவர். பிரான்ஸ் உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நான்கு வருடங்கள் பணியாற்றியவர்.
ஜோம் தோம்ஸன் (64, இங்கிலாந்து) முன்னாள் நீதிபதி FA தலைவர், UEFAஉபதலைவர்.
அங்கத்தவர்கள்
டாக்டர் மைக்கல் டுகூச் (64 பெல்ஜியம்)பெல்ஜியம் FA தலைவர் ரிக்காடோ ரெரா ரெக்ஸிரா (63, பிரேஸில்) 2014ஆம் ஆண்டு பிரேசில் உலகக் கிண்ண உதைபந்தாட்டக் குழுவின் இணைத்தலைவர். பீஃபாவின் முன்னாள் தலைவரும் ஜோகோஹாவெலெஞ்சின் மகனை மணமுடித்து விவாகரத்துப் பெற்றவர்.
மொஹமட் பின் ஹம்மான் (61, கட்டார்) பல நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர். அடுத்த ஆண்டு நடைபெறும் பீஃபா தலைவர் தேர்தலில் இன்றைய தலைவருக்கு பிரதான போட்டியாளராக இருப்பவர். செனஸ் எரிக் (68, துருக்கி) UEFAஉபதலைவர், துருக்கி FA தலைவர்.CONCACAP சொக்பிஸைர் (65, அமெரிக்கா), இணிணஞிச்ஞிச்ணீ பொதுச் செயலாளர். வொரவி மகுடி (59) தாய்லாந்துFAபொதுச் செயலாளர் நிக்கோலம் நியோஸ் (82, பரகுவே) வழக்கறிஞர் விளையாட்டுச் செய்தியாளர் பகுதி நேர சரித்திர விரிவுரையாளர் ஜுஜி ஒகுரா (72, ஜப்பான்) போகுவாவின் பொது முகாமையாளர், ஜப்பான் FA தலைவர், மரியோஸ் எலப்கரிஸ் (64, சைப்பிரஸ்) UEFA பொரு ளாளர், சைப்பிரஸ் FA தலைவர்.
ஜக்குயில் அனோயுமா (58, ஐவரிகோஸ்ட்) ஐவரிகோஸ்ட்FAதலைவர், பிரான்ஸ் பெக்கேன் போயூர் (65, ஜேர்மனி), கைசர் என்வாசல்லமாக அழைக்கப்படும் இவர் ஜேர்மனி அணி 1974, 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற போது அணித் தலைவராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் கடமையாற்றினார். 1974 முதல் 1976ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை ஜேர்மனி ஐரோப்பியச் சம்பியனான அணியில் விளையாடியவர். 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ண அமைப்புக் குழுவில் பணியாற்றினார்.
ரபீல் சல்குரோ (63, கௌதமாலா) கௌதமாலா அணியின் முன்னாள் வீரர் ஹனி அபோரிடா (57, எகிப்து) பொறியியலாளர், க்+20 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிக் குழுவின் அங்கத்தவர். விராலி முற்கோ (51, ரஷ்யா) ரஷ்ய உதைபந்தாட்ட யூனியனின் முன்னாள் வீரர். 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா உதைபந்தாட்ட அணியில் பயிற்சியாளராகக் கடமையாற்றினார். 2008ஆம் ஆண்டு வரை ரஷ்ய விளையாட்டு அமைச்சராக கடமையாற்றினார்.
ரமணி
சூரன்.ஏ,ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 10/12/10

Tuesday, December 14, 2010

ராசாவைக் கைவிட விரும்பாத கருணாநிதிsகூட்டணியை உதறமுடியாது தவிக்கும் காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னால் அமைச்சர் ராசாவின் டெல்லி வீட்டிலும் அலுவலகத்திலும் சி. பி. ஐ. நடத்திய அதிரடிச் சோதனையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் விழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2ஜி அலைவரிசை ஒதுக்கிய விவகாரத்தில் அன்றைய தொலைத் தொடர்புகள் அமைச்சர் ராசாவின் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. ஸ்பெக்ரம் ஊழல் விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்ற போது அமைச்சர் ராசா இராஜினõமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராசாவின் இராஜினாமாவின் பின்னர் பிரச்சினை ஓய்ந்து விடும் என்று காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்த்தன. எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியால் ராசா மீதான ஊழல் விவகாரத்தை சமாளிக்க முடியாது காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் தடுமாறுகின்றன. எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற முடக்கம் காங்கிரஸ் கட்சியை நிலை தடுமாற வைத்துள்ளது. ராசாவின் பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு பாதிப்படையுமோ என்று இரண்டு கட்சிகளும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் அதனை வெளியே காட்டாது இரண்டு கட்சிகளும் அடக்கி வாசிக்கின்றன.
ஸ்பெக்ரம் அலை ஒதுக்கீட்டின் மூலம் 1.76 இலட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு ஊழல் நடைபெறவேயில்லை என்று அடித்துக் கூறிய முதல்வர் கருணாநிதி தனி ஒருவரால் எப்படி இவ்வளவு ஊழல் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். ராசா ஊழல் செய்யவில்லை என்று முதல்வர் கூறுகிறாரா அல்லது ஊழலில் மற்றவர்களுக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகின்றாரா என்று தெரியவில்லை.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் முக்கிய தரகராகச் செயற்பட்டு வந்த நீரா ராடியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்பெக்ரம் ஒதுக்கீடு முறைப்படி இல்லாமல் தரகர்கள் மூலம் நடைபெற்றது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ஊடகங்கள் பல தகவல்களை பகிரங்கப்படுத்தின. ஊடகங்களில் வெளியான பல தகவல்கள் முக்கியஸ்தர்கள் சிலரை அசௌகரியப்படுத்தியுள்ளன. பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் தனது தனி மனித உரிமையை மீறியதாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் டாடா.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ரகசிய பேரங்கள் பகிரங்கமானதால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் கலங்கிப் போயுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் கதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீரா ராடியாவுடன் உரையாடும் குரல் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோருடையது தானா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களிடம் விசாரணை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளில் பலர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றனர். சிலர் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் எதிரியான ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டார். கருணாநிதி குடும்பத்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. தயாளு அம்மாளும், கனிமொழியும் விசாரிக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு அது சாதகமாகி விடும். ஜெயலலிதாவின் ஊழல் பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் வாய் திறக்க முடியாத நிலை தோன்றி விடும்.
தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் கருணாநிதியும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு அவரது அரசியல் எதிரிகளினால் சுமத்தப்பட்டது. கருணாநிதி குடும்பத்தின் செல்வச் செழிப்பு அக்குற்றச்சாட்டு உண்மையில் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. தனது சொத்து விபரத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டன தலைவரைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் ஏனைய தலைவர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
நடிகர் விஜயை அரசியல் நீரோட்டத்தில் தள்ளி விடுவதற்காக முயற்சிகள் ஒருபுறம் நடைபெறுகின்றன. ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.கட்சி ஒன்று ஆரம்பிக்கப் போகிறார். ஜெயலலிதாவுடன் இணையப் போகிறார் என்ற செய்தி கடந்த வாரம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக வெளியாகின. திருச்சி மாநாட்டில் விஜய், அஜித் ஆகியோருக்கு ஆதரவாக ஜெயலலிதா பேசியதால் இந்த ஊகம் கிளம்பியுள்ளது.
விஜய் அண்மையில் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. விஜய் நடித்து வெளியான தோல்விப் படங்களை விநியோகம் செய்தது சன்பிக்ஸர்ஸ், சன்பிக்ஸர்ஸின் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான படமும் படு தோல்வி அடைந்தது. தோல்வியடைந்த கவலையில் இருந்து மீள்வதற்காக விஜய் மிகுந்த பிரயத்தனப்படுகிறார். அவரை அரசியல் குளத்தில் விழுத்துவதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களில் சிலர் விரும்புகின்றனர். அவர் செய்யும் நல்ல காரியங்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் இன்னமும் உரிய இலக்கை அடையவில்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் மிளிர்கிறார். தனித்து நின்று அவரால் வெற்றி பெற முடியவில்லை. சட்ட சபைத் தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அவருடைய செல்வாக்கை நம்பி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தையும் இழந்தனர்.
விஜயகாந்தின் அரசியல் தோல்வி சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசத்துக்கு முக்கிய பாடமாக அமைய வேண்டும். சினிமா நடிகர்களின் அரசியல் தோல்வியைக் கண்ட பின்னராவது விஜய் ரசிகர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனைத் தெரிந்து கொண்டும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் என்று அவரது ரசிகர்கள் கோஷமிடுகின்றனர். விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகச் கட்டுரைகள் பிரசுரமா கின்றன.
அரசியல் ஊகங்களுக்கு முன்னர் புள்ளி வைக்க விஜய் விரும்பவில்லை. தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக அவதானித்து வரும் விஜய் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. விஜய் அரசியலில் குதித்தால் தமிழக அரசியலில் எதிர்பார்க்கும் பாதிப்பு எதுவும் தோன்றப் போவதில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்புகள் நடிகர் விஜய்க்கு அதிகம் செல்வாக்கு இருப்பதை வெளிக்காட்டியுள்ளன. ரஜினியை விட அதிக செல்வாக்குமிக்கவர் விஜய் என்பது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. அரசியல்வாதி விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறதா என்ற கருத்துக் கணிப்பு நடைபெறவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி விட்டன. விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா என்ற விபரம் தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கும் போது தெரிந்து விடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/12/10

Friday, December 10, 2010

பீகாரில் காங்கிரஸ் தோற்றதால்உஷாராகிவிட்டார் கருணாநிதி

பீகார் சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததனால் தமிழக முதல்வர் கருணாநிதி மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான கூட்டணி தொடரும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் இந்தக் கூட்டணி தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
வட மாநில சட்ட சபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதே போன்று தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கனவு. ராகுல் காந்தியின் கனவை நிஜமாக்குவதற்கான பிரசாரங்களில் இளங்கோவனும், கார்த்திக் சிதம்பரமும் மும்முரமாகச் செயற்படுகின்றனர். இவர்களுடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜும் கைகோர்த்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருடன் தமிழக முதல்வர் கருணாநிதி மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து வரும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் பல வகையிலும் உதவி புரிந்து வருகின்றனர். மன்மோகன், சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோருக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தாலும் தேர்தலின் போது கூட்டணி சேர்வதா, தனித்துப் போட்டியிடுவதா என்பதை ராகுல் காந்திதான் தீர்மானிக்கின்றார். ராகுல் காந்தியின் விருப்பப்படியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாது விட்டாலும் முதல்வர் கருணாநிதியை சந்திக்காது திரும்புவதில்லை. தமிழகத்துக்குப் பலமுறை விஜயம் செய்த ராகுல்காந்தி இதற்கு விதிவிலக்காக முதல்வர் கருணாநிதியையோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையோ சந்திக்கவில்லை. ராகுல் காந்தியின் திட்டப்படி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அந்த எதிர்பார்ப்பு சிதறிவிட்டது.
திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தனித்துப் போட்டியிடும் அல்லது விஜயகாந்துடன் இணைந்து தமிழகத் தேர்தலை சந்திக்கும் என்ற கருத்து பலரிடமிருந்து வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தன்னுடன் இணையும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸைக் கைவிட்டால் எந்தவித நிபந்தனையுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகக் கூறி எதிர்பார்ப்பை அதிகரித்தார் ஜெயலலிதா.



திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டால் நஷ்டமடையப் போவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, ஜெயலலிதாவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துப் படுதோல்வி அடைந்தார். ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் வைகோ உள்ளார். ஆனால் அவரால் முன்னைய நாட்களைப் போன்று உரத்துக் குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொண்டு கூட்டணியில் இருந்து பிரிந்த இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்தனர். தோல்வியால் துவண்டுவிடாத இடதுசாரிகள் வழமை போல் அறிக்கைகளை வெளியிட்டு சவால் விடுத்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் தமிழகத்தை யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று இறுமாப்புடன் பேசிய டாக்டர் ராமதாஸ் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் அதுதான் வெற்றிக் கூட்டணி என்று உறுமினார்.
வைகோ, இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் இணைந்ததனால் ஜெயலலிதா இலாபமடைந்தார். வைகோ இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் உள்ளதையும் இழந்தனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் செல்வாக்கு மிக்க கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்டால்தான் தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை வெளிப்படுத்தியது.
அரசியல் கட்சித் தலைவர்களின் முடிவு வாக்காளர்களின் முடிவினால் நிராகரிக்கப்பட்ட சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. சட்டம், ஒழுங்கு, அன்பளிப்பு, ஊழல் என்பனவற்றை எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டுப் பிரசாரம் செய்தாலும் பல தேர்தல்களில் அவற்றை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி, மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், மக்கள் அனுபவிக்கும் இலவசங்கள் என்பனவற்றைப் பட்டியலிட்டு தமிழக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது. ஸ்பெக்ரம் ஊழலைப் பற்றி உரத்துக் கூறி வரும் எதிர்க்கட்சிகள் தேர்தல் சமயத்தில் ஸ்பெக்ரம் பிரச்சினையையே முக்கிய கருப்பொருளாகப் பிரசாரம் செய்யும்.
அரசியல்வாதிகளின் ஊழல்களை விசாரிப்பதற்காக அவ்வப்போது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்களின் அறிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஊழலை வெளிப்படுத்துவதற்காக விசாரணை அமைத்த கட்சியே ஊழல் செய்த கட்சியுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்தித்த அவலமும் அரங்கேறியுள்ளன. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேன்முறையீடு செய்து விட்டு சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். கட்சித் தலைமை செய்யும் குற்றங்களை விசுவாசம் மிக்க தொண்டர்கள் மறந்து விடுவதே வழமையானது.
ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் ராஜா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தால் மட்டும் போதாது. அவரைக் கட்சியில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் முதல்வர் கருணாநிதிக்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்.
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பீகாரில் தோல்வி அடைந்தது போல் தமிழகத்திலும் அடி வாங்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்வதற்கு சோனியாகாந்தி தயாராக இல்லை. விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து பரீட்சார்த்தம் செய்ய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டணி சேர்ந்தால்தான் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து உள்ளார். காங்கிரஸ் கட்சியையே அவர் பெரிதும் நம்பி இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட காங்கிரஸ் கட்சி இப்போதைக்குத் தயாராக இல்லை. ஆகையினால் ஜெயலலிதாவின் பக்கம் சாய்வதற்கு விஜயகாந்த் தயாராகி விட்டார் போல் தெரிகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் அது பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சாதகமாகிவிடும். தமிழகத்தில் காணாமல் போன பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வலுப் பெற்றுவிடும். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அது நெருக்குதலைக் கொடுக்கும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/12/10

Wednesday, December 8, 2010

சிறந்த உதைபந்தாட்ட வீரருக்குமூவரின் பெயர்கள் சிபாரிசு


சிறந்த உதைபந்தாட்ட வீரருக்கான விருதை பீஃபா ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப்பெறுவதற்கு லியனல் மேர்ஸி (ஆர்ஜென்ரீனா), ஷேவி (ஸ்பெய்ன்) அன்ரன் இன்ரென்ரா (ஸ்பெய்ன்) ஆகிய மூவரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.
ஆர்ஜென்டீனா வீரராக லில் மேர்ஸிக்கு உலகெங்கும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு போர்த்துக்கல் வீரரான கிறிஸ்ரியானி ரொனால்டோவுக்கும் லியனல் மேர்ஸிக்கும் இடையே நடந்த கடும் போட்டியில் லியனல் மேர்ஸி சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்பெயின் உலகக் கிண்ணச் சம்பியனாவதற்கு ஷேவியின் சிறந்த விளையாட்டும், ஒரு காரணம், இந்த ஆண்டு லியனல் மேர்ஸிக்கு கடும் போட்டியாளராக ஷேவி உள்ளார். ஸ்பெய்ன் நாட்டின் இன்னொரு வீரராக அன்ரன் இன்லெஸ்ராவும் சிறந்த வீரருக்கான போட்டியில் உள்ளார். இவர்கள் மூவரும் பார்ஸிலோனா அணியின் வீரர்களாவர்.
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 07/12/10

Wednesday, December 1, 2010

ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையால்தடுமாறுகிறது இந்திய மத்திய அரசு




இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஊழல்களுள் முதன்மையாகக் கருதப்படுவது "ஸ்பெக்ரம் 3ஜி' முறைகேடு. சுமார் 1.76 இலட்சம் கோடி மதிப்பான "ஸ்பெக்ரம் 3ஜி' விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக களமிறங்கின. எதிர்க்கட்சிகளின் நெருக்குதலை சமாளிக்க முடியாத மத்திய அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக ராசா அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ராசாவின் ராஜினாமாவை கனத்த இதயத்துடன் அனுமதித்த முதல்வர் கருணாநிதி குற்றமிழைக்காத ராசா மீண்டும் அமைச்சராவார் என்று எதிர்பார்த்தார்.
குற்றம் என்ன செய்தார் ராசா என்று கேட்ட கருணாநிதிக்கு தகுந்த ஆதாரங்களுடன் குற்றப் பட்டியலை வெளியிட்டன டில்லி ஊடகங்கள். இணையத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியான ஆதாரங்களைக் கண்டு திகைத்துப் போயுள்ள முதல்வர் கருணாநிதி ராசாவின் ராஜினாமாவுடன் ஸ்பெக்ரம் விவகாரம் முற்றுப் பெற்றுவிடும் என்றே இந்திய மத்திய அரசு எதிர்பார்த்தது. ராசா ராஜினாமாச் செய்த பின்னரும் தொடர்ச்சியாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் செயற்படவிடாது எதிர்க்கட்சிகள் முடக்கின.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சு தயாநிதிமாறனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளை ராசாவின் கைகளுக்குச் சென்றது. கருணாநிதி, மாறன் குடும்பப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிட்டதால் தயாநிதிமாறனுக்கு தொலைத் தொடர்பு அமைச்சுப் பதவி வழங்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொலை தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் வரக்கூடாது என்பதில் டில்லியில் உள்ள சில தரகர்கள் உறுதியாக இருந்தார்கள். தங்களுடைய தொழிலுக்கு தயாநிதிமாறன் இடைஞ்சலாக இருப்பார் என்று அந்தத் தரகர்கள் நம்பினார்கள். இது பற்றி நீரா ராடியார், கனிமொழி, ஆர். ராசா ஆகியோரின் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் அம்பலமாகியுள்ளன.
சி.பி.ஐ. பொறுப்பெடுத்த ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தில் பல பெரும்புள்ளிகள் அகப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ரம் ஒதுக்கீடு ரத்துச் செய்யப்படலாம் என்ற கருத்தும் உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதனால் அரசாங்கம் இதில் தலையிட முடியாது. முறைப்படி ஏலம் விடாது ஒதுக்கீடு செய்ததனால் சுமார் 1.76 இலட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த இழப்பீட்டை நிவர்த்தி செய்தால் எதிர்க்கட்சிகள் அமைதியடைந்துவிடும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
இதேவேளை அப்படி ஒரு முடிவை அரசாங்கம் எடுத்தால் அன்று பெறுமதி குறைத்துக் கொடுத்ததற்கான காரணத்தை அரசாங்கம் வெளியிட வேண்டிய நெருக்கடி ஏற்படும். தவறு நடந்ததை அரசாங்கமே ஒப்புக் கொண்டதாக ஏற்பட்டுவிடும்.
ஸ்பெக்ரம் விவகாரத்தை இந்திய அரசு தீர்த்து வைத்தால் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கருதப்படும். நீதிமன்றம் கேட்ட சில கேள்விகள் இந்திய அரசை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. ஸ்பெக்ரம் ஊழல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் இன்னமும் பதிலளிக்காதது ஏன் என்ற நீதிமன்றத்தின் கேள்வி அரசாங்கத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஸ்பெக்ரம் விவகாரத்தினால் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. பீகார் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அவமானத்தைக் கொடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. 243 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ராகுல் காந்தியின் பரீட்சார்த்த முயற்சி காங்கிரஸ் கட்சியை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.
பீகாரில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ராகுலின் விருப்பத்துக்கு இணங்க தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் பரம எதிரியான நீதிஸ்குமாரின் தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் வழிகாட்டல்களினால் வட இந்தியாவில் எழுச்சி கண்ட காங்கிரஸ் கட்சி பீகார் தேர்தல் முடிவும் சாதகமாக அமைந்தால் அதே வழியில் தமிழகத்திலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோஷம் எழுந்திருக்கும். பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த படுதோல்வி தமிழகத் தலைவர்களின் மனதை மாற்றிவிடும் ஒரு நிலை ஏற்படலாம்.
விஜயகாந்த் நடித்து முதன் முதலாக இயக்கிய விருதகிரி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் அதிக கவனம் செலுத்திய விஜயகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. திரைப்படத் தோல்வியிலிருந்து மீள்வதற்கு சொந்தமாகப் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் விஜயகாந்த். விருதகிரி படத்தை வெளியிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று விஜயகாந் கூறியுள்ளார்.
தமிழக சினிமாத்துறை தமிழக அரசின் செல்வாக்கு மிகுந்தவர்களின் கைகளில் இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கூறிய விஜயை பணிய வைத்த திரைப்பட நிறுவனம் அவர் நடித்த படங்களைத் தோல்விப்படமாக்கியது. தமிழ்த் திரைப்படத்தின் அவலத்தை முதல்வரின் முன்னால் முழங்கிய அஜித் வீட்டுக்கு அழைத்து மிரட்டப்பட்டார் என்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மை என்பது போல் விஜயகாந்தின் கூற்று உள்ளது. கலாநிதிமாறன், ஸ்டாலினின் மகன் உதயநிதி, அழகிரியின் மகன் துளா தயாநிதி ஆகியோர் தமிழ்த் திரைப்படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். தவிர இவர்கள் தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். தமிழகத்தின் பல தியேட்டர்கள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. தமிழகத்தின் பிரதான நகரங்களில் உள்ள வசதி மிக்க தியேட்டர்களை இந்த மூவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆகையினால் அந்தத் தியேட்டர்களில் விஜயகாந்தின் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது.
தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் ஏ.பீ.சீ. என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ தரம் உள்ள நல்ல தியேட்டர்கள் கலாநிதி, உதயநிதி, துளா தயாநிதி ஆகியோரின் கைகளில் உள்ளன. அவர்களின் வசமுள்ள தியேட்டர்களில் விஜயகாந்தின் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது. தரம் குறைந்த தியேட்டர்களில்தான் விருதகிரி திரையிடப்பட வேண்டிய நிலை உள்ளது. விஜயகாந்தின் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் கிடைப்பது சாத்தியமில்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தின் கைகளில் உள்ள அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் விஜயகாந்தின் படத்தை இருட்டடிப்புச் செய்து விடும்.
விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் திராவிட முன்னேற்றக் கழகம் விஜயகாந்தின் திரைப்பட வளர்ச்சியை அடியோடு புரட்டிப் போட கங்கணம் கட்டியுள்ளது.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மைலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினராகத் தெரிவான நடிகர் எஸ்.வி. சேகர், விஜயகாந்தைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் கட்சியுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து புகழ்ந்து பாடினார்.
எஸ்.வி. சேகர் கட்சி மாறப் போகிறார் என்ற செய்தி பரபரப்பாக அடிபட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கொண்டே தமிழக அரசைப் பாராட்டிப் பேசினார். பின்னர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் என்று வதந்தி பரவியது. விஜயகாந்த்தான் நாட்டை ஆளத் தகுதியானவர் என்று இப்போது திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
விஜயகாந்துக்கு ஆதரவாக பிரபல நடிகர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில் எஸ்.வி. சேகர் விஜயகாந்தை ஆதரித்துக் குரல் கொடுத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.வி. சேகரினால் விஜயகாந்துக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு28/11/10

Sunday, November 28, 2010

வில்லியமின் நிச்சயதார்த்தத்தில் நினைவு கூரப்பட்ட டயனா

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் மூலம் டயானா மீண்டும் நினைவு கூரப்பட்டுள்ளார். சார்ள்ஸ்டயானா திருமணம் கடந்த நூற்றாண்டில் மிகப் பிரமாண்டமான திருமணமாக அமைந்தது. பிரிட்டிஷ் மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகின் பல கோடி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் டயானா. உலகின் எண்ணற்ற படப்பிடிப்பாளர்களுக்குத் தீனி போட்டவர் டயானா. பப்பராசிகளினால் துரத்தப்பட்டு கொடூரமாக உயிரை இழந்தார்.
சார்ள்ஸ் டயானா திருமணம் முறிந்த போது டயானாவின் பக்கமே அதிகமானோர் இருந்தனர். இளவரசர் சார்ள்ஸுடனான திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட டயானாடொடி என்ற கோடீஸ்வரரைக் காதலித்த போது அதிகமானோர் அக் காதலை விரும்பவில்லை. டயானாவைக் கைவிட்ட இளவரசர் சார்ள்ஸ் தனது காதலியான கமிலாவைக் கரம் பிடித்தார். டயானாவின் இடத்தில் கமீலாவை இருத்திப் பார்க்க அதிகமானோர் விரும்பவில்லை. டயானாவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கமீலாவுக்குக் கொடுக்கப்படவில்லை.
கென்யாவில் தனது திருமணம் பற்றி வில்லியம் அறிவித்த போது எவரும் ஆச்சரியப்படவில்லை. கதே மிடில்ரொன் என்னும் யுவதியை வில்லியம் காதலிப்பது உலகறிந்த விடயம். திருமண நிச்சயதார்த்தத்தின் போது தனது தாய் டயானா அணிந்த மோதிரத்தை மிடில்ரொன் கையில் வில்லியம் அணிந்தபோது உலகமே அதிசயமாகப் பார்த்தது.
டயானா அணிந்த மோதிரத்தை தனது எதிர்கால மனைவியின் விரலில் அணிவித்து தாய் டயானாவுக்குரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார் வில்லியம். நீள் வட்டமான நீல நிறமுடைய அந்த மோதிரத்தில் 14 வைரங்கள் உள்ளன.
இங்கிலாந்தின் அடுத்த இளவரசி தனது மனைவி கதே என்பதை வில்லியம் பூடகமாக அறிவித்துள்ளார். டயானாவை நேசிப்பவர்களின் பார்வை கதேயின் பக்கம் திரும்பியுள்ளது. கமீலாவை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர் கதேயை இளவரசியாக ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டனர் என்பது இங்கிலாந்துப் பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
தனது மனைவி கமீலா ராணியாவதை தான் விரும்புவதாக இளவரசர் சார்ள்ஸ் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள அதிகளவான மக்கள் இதனை விரும்பவில்லை என்பது பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இளவரசர் சார்ள்ஸ், டயானாவைக் கைவிட்டதை விரும்பாத இங்கிலாந்து மக்களில் அதிகமானோர் அவர் கமீலாவைக் கரம் பிடித்ததையும் விரும்பவில்லை.
தனது தாய் டயானாவின் மோதிரத்தை கதேக்கு வழங்கியதை இங்கிலாந்து மக்கள் வரவேற்றுள்ளனர். அதேவேளை முறிந்து போன திருமண ஞாபகார்த்த மோதிரத்தை வில்லியம் கதேக்கு வழங்கியதை சிலர் விரும்பவில்லை. ஆனால் டயானாவுக்கு கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம் கதேக்கும் கொடுக்கப்படும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
வில்லியம், கதே திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் டயானா சார்ள்ஸ் திருமணத்தைப் போன்று மிகவும் சிறப்பாக அத் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வில்லியம் கதே திருமணத்தைக் குறி வைத்து இப்பொழுதே வியாபாரம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. வில்லியம் கதே ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. திருமண நிச்சயதார்த்தத்திலன்று விற்பனைக்கு வந்த இப் பொருட்களை பிரிட்டிஷ் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
இங்கிலாந்தில் வெளிவரும் சகல பத்திரிகைகளும் வில்லியம் கதே திருமண நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியை முன்பக்கத்தில் படங்களுடன் பிரசுரித்தன. திருமணம் நடைபெறும் வரை ஊடகங்களின் பார்வை அரச குடும்பத்தின் மீதுதான் இருக்கும்.
1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி சார்ள்ஸைத் திருமணம் முடிப்பதற்காக தகப்பன் ஏர்ள்ஸ் பென்சரின் கரத்தைப் பிடித்தபடி டயானா நடந்து வந்தபோது அந்தத் திருமண வைபவத்தில் ஆறாவது வரிசையில் தனது சிறிய மகனுடன் அமர்ந்திருந்தார் திருமதி கமீலா பாக்கர். டயானாவின் மகன் வில்லியத்தின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது சார்ள்ஸின் மனைவியாக இருந்தார் கமீலா.
முதலில் யாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறதோ அவருக்குத்தான் தாய் டயானாவின் மோதிரத்தை கொடுக்க வேண்டும் என்று வில்லியமும் ஹரியும் முடிவு செய்திருந்தார்கள். சார்ள்ஸும் கமீலாவும் மறக்க நினைத்த டயானாவை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார் வில்லியம்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 26/12/10

Wednesday, November 24, 2010

அணி மாற விரும்புகிறது காங்கிரஸ்தனிவழி போகத் தயாராகிறது தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இருந்த பனிப்போர் அமைச்சர் ராசாவின் இராஜினாமாவுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் கூட்டணிக் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மதிப்புக் கொடுத்து வந்துள்ளன. கூட்டணி அமைத்த பின்னர் குடைச்சல் கொடுக்காது நல்ல பிள்ளையாக வலம் வரும் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசின் துணையுடன் தனது காரியங்கள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றி வந்தது.
மத்திய அரசு அமையும் போது எத்தனை அமைச்சர்கள், எந்தத் துறை அமைச்சர்கள் என்று பேரம் பேசி அமைச்சுப் பதவிகளைப் பெற்று வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். பெரும்பான்மை இன்றி தமிழகத்தில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தை இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. அமைச்சர் ராசாவின் பொறுப்பில் இருந்த ஸ்பெக்ரம் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அத்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து
விட்டன.
ஸ்பெக்ரம் விற்பனையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய போது மத்திய அரசும் தமிழக அரசும் அதைப் பூசி மெழுகி மறைக்க முயன்றன. ஸ்பெக்ரம் ஏலம் எல்லாம் முறைப்படிதான் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எல்லாவற்றையும் ஒப்படைத்து குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் என்று அமைச்சர் ராசா சவால் விட்டார். ஸ்பெக்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. பொறுப்பெடுத்து விசாரணை செய்து வருகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. அமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பட்டும் படாமலும் கூறி வந்தது. எதற்கும் மசியாது ராசாவை அமைச்சராக அழகு பார்த்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. எதிர்க்கட்சிகளின் கேள்விகளை நாடாளுமன்ற இரு அவைகளின் முடக்கம் சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப பல முனைகளில் நெருக்குதல் ஏற்பட்ட போது ராசா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார்.
வருமானவரித் துறை, மத்திய அமுலாக்கப் பிரிவு என்பனவும் தமது விசாரணைகளை முடுக்கிவிட்டன. இவை தவிர நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பகிரங்கப்படுத்தப்பட்டன. ராசா இராஜினாமாச் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என்பதை காலம் கடந்து கருணாநிதி உணர்ந்து கொண்டார்.
இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளில், தொலைத்தொடர்பு அமைச்சும் ஒன்று. தயாநிதிமாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கருணாநிதி குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது தயாநிதிமாறனிடம் இருந்த தொலைத் தொடர்புத் துறை பிடுங்கப்பட்டு ராசாவிடம் வழங்கப்பட்டது. குடும்பப் பிரச்சினை சுமுகமாகி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறியபோது தொலைத் தொடர்புத் துறையை தயாநிதிமாறனிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அவர் பதவி வகித்த போது ஏற்பட்ட முன்னேற்றம் ராசா அமைச்சரானதும் தேக்கமடைந்தது. ஆனால் அந்த அமைச்சுப் பதவி மீண்டும் ராசாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்குமிடையே ஏற்பட்ட பல முறுகல்களை சோனியாவும், மன்மோகன் சிங்கும் மிகவும் பக்குவமாகத் தீர்த்து வைத்தார்கள். ராசாவின் விவகாரம் அவர்களின் கையையும் மீறிச் சென்றுவிட்டது. பலமுறை விசாரணைகள் ராசாவை முடக்கியுள்ளன. ராசா தொடர்ந்தும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்பிய திராவிட முன்னேற்றக் கழகம் இப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு மிகுந்த பிரயாசைப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போயின.
ஸ்பெக்ரம் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதனால் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது அரச தரப்பு வழக்கறிஞர் தடுமாறினார். ராசாவின் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முன்பு ராசா இராஜினாமாச் செய்து விட்டார். அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊழல் விவகாரம் புதியதல்ல. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மிக பல ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டு அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. அவற்றை மாற்ற தலைவர்கள் தாம் கறைபடியாதவர்கள் போல் அறிக்கை விடுகின்றனர்.
சசிதரூ, அசோக் சவான், கல்பாடி ஆகியோர் அண்மையில் ஊழலில் சிக்கி பதவி துறந்தவர்கள். அவர்களை முன் உதாரணம் காட்டித்தான் ராசா இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி காரணமாக ராசா இராஜினாமாச் செய்தார். தொலைத் தொடர்புத் துறை அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமாச் செய்தாலும் அந்த அமைச்சுப் பதவி தமது கட்சியில் உள்ள ஒருவருக்குத்தான் கிடைக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நினைத்தது. ஆனால் கபில் சிபிலை காங்கிரஸை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக்கியது காங்கிரஸ் கட்சி. ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவரான கபில் சிபிலை அமைச்சராக்கி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது காங்கிரஸ்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி சேரப் போகிறது என்ற தகவல் பரபரப்பாக வெளியான போது திராவிட முன்னேற்றக் கழகம் அதனை அசட்டை செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தரப் போவதாக ஜெயலலிதா அறிவித்த பின்னர் சுதாகரித்துக் கொண்ட கருணாநிதி ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார்.
அமைச்சுப் பதவியில் இருந்து ராசா இராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதியாகக் கூறி வந்த கருணாநிதி முக்கியமான ஒரு முடிவை எடுத்த பின்புதான் ராசாவின் இராஜினாமாவுக்கு ஒப்புதலளித்தார். ராசா தவறு செய்யவில்லை என்று கருணாநிதியும், கனிமொழியும் மட்டும்தான் குரல் கொடுத்து வருகின்றனர். ஏனையோர் அமைதி காக்கின்றனர். தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது புதிய கூட்டணிகள் உதயமாவதற்கான அறிகுறி இப்போதே தோன்றியுள்ளது. ராசாவின் விவகாரம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான விரிசலை அதிகரித்துள்ளது. தமிழக சட்ட சபைத் தொகுதிப் பங்கீட்டின் போது இரு கட்சிக்குமிடையேயான விரிசல் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
தமிழக ஆட்சியில் பங்கு பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் தான் கூட்டணி என்ற முடிவில் உள்ளது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியை நம்பி கூட்டணி சேர்வதற்கு தமிழகக் கட்சிகள் எவையும் தயாராக இல்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினாலும் பரவாயில்லை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/12/10

Sunday, November 21, 2010

இராணுவத்துடன் போராடும்ஜனநாயகப் போராளி

இராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில் ஜனநாயகம் தளைத்தோங்க வேண்டும் என்பதற்காக மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆங் சாங் சூகி கடந்த சனிக்கிழமை வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராட்டக் குழுத் தலைவரான ஜெனரல் ஆங் சான், கின் கி தம்பதியருக்கு 1945 ஆம் ஆண்டு பிறந்தவர்.
யாங் கூனில் பிறந்த ஆங் சாங் சூகி தனது வாழ்நாளில் அதிக காலத்தை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கழித்தார். டில்லியின் தனது படிப்பை மேற்கொண்ட ஆங் சாங் சூகி, இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியற்றில் பட்டம் பெற்றார். மிக்கேல் ஆரிஸ் என்ற பிரிட்டிஷ்காரரை மணமுடித்தார்.
ஆங் சாங் சூகியின் தகப்பன் ஜெனரல் ஆங் சான் 1947 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 1988 ஆம் ஆண்டு மியன்மார் திரும்பினார். அப்போது இராணுவ ஆட்சிக்கு நாட்டு மக்கள் காட்டிய எதிர்ப்பைக் கண்டு மக்களின் விடுதலைக்காக தேசிய ஜனநாயக லீக் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 1962 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று போராடிய ஆங் சாங் சூகிக்கு மியான்மார் அரசு கொடுத்த பரிசு வீட்டுக் காவல்.
ஆங் சாங் சூகியின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்ட மியன்மார் அரசு 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரை வீட்டுக் காவலில் வைத்தது. ஆங் சாங் சூகியை விடுதலை செய்யுமாறு உலக நாடுகள் அனைத்தும் ஏகோபித்த குரலில் கோரிக்கை விடுத்தன. அவை எவையும் மியன்மார் அரசின் போக்கை மாற்றவில்லை. சிறையில் இருந்தபடி தனது போராட்டத்தை நடத்தினார் ஆங் சாங் சூகி, அவரது நியாயமான போராட்டத்தை அங்கீகரித்த நோபல் பரிசுக் குழு 1991 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கிக் கௌரவித்தது.
தாயைப் பார்ப்பதற்காக நாடு திரும்பிய ஆங் சாங் சூகி தாய் நாட்டை விடுவிப்பதற்காகப் போராட்டத்தில் இறங்கியதால் கணவனையும் பிள்ளைகளையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. புற்றுநோயாளியான ஆரிஸ் தன் மனைவி ஆங் சாங் சூகியைக் கவனிப்பதற்காக மியன்மாருக்குச் செல்ல விரும்பினார். மியன்மார் அரசு அவருக்கு விஸா வழங்க மறுத்து விட்டது. கணவனைப் பார்க்க ஆங் சாங் சூகி விரும்பிய போது இங்கிலாந்துக்குச் சென்றால் நாடு திரும்பக் கூடாது என்று மியன்மார் அரசு நிபந்தனை விதித்தது. விடுதலையா, கணவனா என்ற கேள்வி எழுந்தபோது தனக்கு நாட்டு மக்களின் நலனே முதன்மையானது என்று முடிவெடுத்தார். 1999 ஆம் ஆண்டு சூகியின் கணவர் பிரிட்டனில் மரணமானார்.
1990 ஆம் ஆண்டு மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. ஆங் சாங் சூகியின் கட்சி வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த இராணுவ அரசு ஆட்சியை ஒப்படைக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஆங்சாங் சூகியின் வீட்டுக் காவல் முடிவடையும் வேளையில் அவரது வீட்டில் அமெரிக்கரான ஜோன் எட்வேட், என்பவர் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததாகவும் அதற்கு ஆங் சாங் சூகி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறி குற்றம் சாட்டி 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை அவரது வீட்டுக்காவலை நீடித்தது.
நவம்பர் 7 ஆம் திகதி மியான்மாரில் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆங் சூங் சூகி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியை முடக்குவதற்குரிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஆங் சாங் சூகி அறிவித்தார். இதனால் அவரது கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஆங் சாங் சூகியின் கட்சியில் இருந்து பிரிந்தவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றனர்.
மியன்மாரில் நடைபெற்ற தேர்தலில் இராணுவ ஆட்சியாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்த நிலையில் ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் இருந்த போது அவருக்கு இரண்டு பெண் உதவியாளர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர். தொலைபேசி இணைய வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆங் சாங் சூகியின் வீட்டின் முன்னால் திரண்ட மக்கள் கூட்டம் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தியது. வீட்டுக் காவலில் இருந்து விடுதலையான ஆங் சாங் சூகி என்ன செய்யப் போகிறார் என்பதே உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. மியான்மாரில் இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தன்னை சிறையிட்டவர்களின் மீது கோபப்படவில்லை என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
மியான்மாரின் அரசியலில் சிக்கலான நேரத்தில் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ அரசு அங்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. உலக நாடுகள் இராணுவ அரசைக் கண்டித்ததே தவிர உறுதியாக எதிர்ப்புக் காட்டவில்லை. ஆங் சாங் சூகியின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்றால் இராணுவச் சாயம் பூசப்பட்ட அரசைக் களைய வேண்டும். மியன்மார் அரசு இராணுவ அரசு அல்ல. ஜனநாயக அரசு என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதிரடி அரசியலில் ஆங் சாங் சூகி ஈடுபட மாட்டார். அமைதி வழி சென்றுதான் நினைத்ததைச் சாதிக்கும் ஆளுமை ஆங் சாங் சூகியிடம் உள்ளது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 19/11/10

Tuesday, November 16, 2010

காங்கிரஸுக்கு வலை விரிக்கும் ஜெயலலிதா



காங்கிரஸுக்கு வலை விரிக்கும் ஜெயலலிதா
தி.மு.க.வுக்கு எச்சரிக்கை விடுக்கும் காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று இரண்டு கட்சியின் தலைவர்களும் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலின் போது புதிய கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். காங்கிரஸ் தலைமை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை விரும்புகிறது. ஆனால் ராகுல்காந்தியும் தமிழகத்தின் சில தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை விரும்பவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைய வேண்டும் என்று தமிழகத் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
ஜெயலலிதாவும், விஜயகாந்தும் காங்கிரஸ் கட்சியை எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க வேண்டாம் என்று தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இச்செய்தியை ஜெயலலிதா மறுக்கவில்லை. இதபோல்தான் விஜயகாந்த் தன்பங்குக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான பிரச்சினை இல்லை என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களைக் கவனத்தில் எடுக்காது டில்லித் தலைமைப் பீடத்தின் கருத்தையே திராவிட முன்னேற்றக் கழகம் கவனத்தில் எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபை ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிக நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதி அதற்கு சரியாக பிடிகொடாது பதிலளித்து வருகின்றார். ஸ்டாலினைத் துணை முதல்வராக்கியதைக் காங்கிரஸில் உள்ள சிலர் விரும்பவில்லை. தங்களுடைய ஆலோசனை இன்றி துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டதாக விசனப்படுகின்றனர். தமிழக ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதற்கு தாம் உதவி செய்தபடியால் துணை முதல்வர் பதவி தமக்கு வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள சிலர் விரும்புகின்றனர்.
தமிழகத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் ஆட்சியில் பங்குபற்றுவதற்குரிய அமைச்சர்களின் எண்ணிக்கை துணை முதல்வர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் எண்ணம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் தமிழக முதல்வராவதற்கு விஜயகாந்த் விரும்புகிறார். தான் ஆட்சியைப் பிடிப்பதற்காக அமைச்சரவையில் பங்கு போட்டு துணை முதல்வர் பதவியைத் தாரைவார்க்க விஜயகாந்த் ஒப்புக் கொண்டால் கூட்டணியில் மாற்றம் ஏற்படும். ஆட்சியில் பங்கு கொடுக்க விஜயகாந்தும் விரும்பாவிட்டால் காங்கிரஸின்பாடு திண்டாட்டமாகி விடும்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பு எதனையும் காங்கிரஸ் மேலிடம் வெளிப்படுத்தவில்லை. ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்தால் அது காங்கிரஸை விட ஜெயலலிதாவுக்குத்தான் அதிக இலாபத்தைக் கொடுக்கும். ஆகையினால்தான் காங்கிரஸுடன் கூட்டு சேர ஜெயலலிதா விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவதை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
கார்கில் போரில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கியதில் ஊழல் செய்த மும்பை முதல்வர் அசோக் சவான்கொமன் வெல்த்போட்டியில் தில்லுமுல்லு செய்த சுரேஷ் கல்மாடி ஆகியோரின் பதவிகளைப் பிடுங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஸ்பெக்ரம் ஊழலில் சிக்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட அமைச்சர் ராஜாவை திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தை மீறி நடவடிக்கை எடுக்க முடியாது தடுமாறுகிறது காங்கிரஸ் கட்சி.
ஊழல் செய்த முக்கிய புள்ளிகளை பதவியிலிருந்து விரட்டியது போன்று அமைச்சர் ராஜாவின் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஊழல்வாதிகள் அரசியலில் இருந்து ஓரம்கட்டப்பட வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். ராஜாவின் விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ராகுல்காந்தி நம்பிக்கை இழந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைப் போன்று நேர்மையாக நடக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜாவுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கு முயற்சி செய்யும். இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை இழக்க விரும்பாத காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் திரிசங்கு நிலையை நன்கு உணர்ந்துள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சிக்கு தெம்பூட்டும் விதமாகப் பேசி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் அதற்கு மாற்றீடாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கப் போவதாகக் கூறியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெற்றி பெற்ற ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
மேலதிகமாக ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா எங்கிருந்து கொண்டு வருவார் என்பது தெரியவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறி வரும் நிலையில் வேறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு அவர் தமது அணியில் சேர்ப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை விடும் வகையில் காங்கிரஸ் ஊழல் பேர்வழிகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களின் தாக்கம் அடுத்த வாரம் பகிரங்கத்துக்கு வந்து விடும்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 14/11/10

Friday, November 12, 2010

களை எடுக்கும் ஜெயலலிதாகலக்கத்தில் தொண்டர்கள்


தமிழக சட்ட சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் வேளையில் மாவட்டச் செயலாளர்களையும் மாவட்டப் பொறுப்பாளர்களையும் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார் ஜெயலலிதா. சக்தி மிக்க பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் தூக்கி எறிவதற்கு ஜெயலலிதா எப்போதும் தயங்கியதில்லை.
தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொன்னையன் போன்ற நிர்வாகிகளையே தூக்கி எறிந்த ஜெயலலிதா மாவட்டச் செயலாளர்களையும் பொறுப்பாளர்களையும் தூக்கி எறிந்தது ஆச்சரியமானதல்ல.
கோவையிலே தமிழக அரசு செம்மொழி மாநாட்டை நடத்தித் தனது பலத்தை வெளிப்படுத்தியது. அதே கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தை நடத்தி ஆளும் கட்சியைக் கிலிகொள்ளச் செய்தவர் செ. ம. வேலுச்சாமி. அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் ஜெனிபர் சந்திரன், விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் வளர்மதி ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
வட சென்னையில் 13 வருடங்களாக மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் சேகர் பாபு. வடசென்னையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதில் முன்னிற்பவர். அவருடைய பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேகர் பாபுவின் ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பிரமுகர்களில் சிலரின் பதவி பறிக்கப்படுவதும் அவர்களின் ஆதரவாளர்கள் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதும் வழமையான சம்பவங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
சென்னையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் சேகர் பாபு. தமிழக சட்ட சபையில் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசும் போது உரத்துக் குரல் கொடுப்பவர்களில் முதன்மையானவர் சேகர் பாபு. சபாநாயகரின் பணிப்பின் பேரில் பலமுறை அவைக் காவலர்களினால் தமிழக சட்டசபையில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர் சேகர் பாபு. அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி போன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் சேகர் பாபுவும் விழப் போகிறார் என்ற சந்தேகத்திலேயே அவரிடமிருந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
வட சென்னையில் சேகர் பாபுவின் செல்வாக்கு அதிகமானது. அவர் அணிமாறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலத்த வீழ்ச்சியாக அமையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரும் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவும் போது கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது தொண்டர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் நிற்பதாகவே தலைமைப்பீடம் கருதியது. ஆனால் அணி மாறியவர்களில் பலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஜெயலலிதாவின் இந்த அதிரடியான நடவடிக்கைகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவால் வெளியேற்றப்படுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சூழ்நிலை தோன்றும் சந்தர்ப்பம் உள்ளது.
""நாம் ஒற்றுமையாக இருந்தால் ஆயிரம் தி. மு. க. வந்தாலும் எம்மை வீழ்த்த முடியாது'', ""ஆறாவது முறை நான் முதலமைச்சராவது மக்களின் கைகளில்தான் உள்ளது'' தமிழக சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தல்களையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தமிழக முதல்வர் உரைத்த வார்த்தைகள் அவை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கூறுகிறாரா அல்லது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கூறுகிறாரா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் அடுத்த முறை தான் முதல்வராவது தமிழக மக்களின் கைகளில் என்கிறாரா அல்லது தனது மக்களின் கைகளில் உள்ளது என்கிறாரா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுடன் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடமையும் கண்ணியமும் திசைமாறிப் போய் விட்டன. இதுவரை இருந்த கட்டுப்பாடும் கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கோஷ்டி மோதல் இல்லாத கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்ளும் கோஷ்டி மோதல் ஒளிர்விடத் தொடங்கியுள்ளது. ஸ்டாலினின் ஆதரவாளர்களும் அழகிரியின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே தம்மை இனம் காட்டியுள்ளனர்.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. ஏனைய தலைவர்கள் கோஷ்டியாகச் செயற்படவில்லை என்றுதான் தலைமை நினைத்துக் கொண்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டம் ஒன்றின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தமது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்டாலினையும் அழகிரியையும் ஒற்றுமையாக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முக்கிய கடமைகளில் முக்கியமானது அழகிரியை சமாதானப்படுத்துவதுதான்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 71/12/10




தமிழக சட்ட சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் வேளையில் மாவட்டச் செயலாளர்களையும் மாவட்டப் பொறுப்பாளர்களையும் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார் ஜெயலலிதா. சக்தி மிக்க பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் தூக்கி எறிவதற்கு ஜெயலலிதா எப்போதும் தயங்கியதில்லை.
தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொன்னையன் போன்ற நிர்வாகிகளையே தூக்கி எறிந்த ஜெயலலிதா மாவட்டச் செயலாளர்களையும் பொறுப்பாளர்களையும் தூக்கி எறிந்தது ஆச்சரியமானதல்ல.
கோவையிலே தமிழக அரசு செம்மொழி மாநாட்டை நடத்தித் தனது பலத்தை வெளிப்படுத்தியது. அதே கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்தை நடத்தி ஆளும் கட்சியைக் கிலிகொள்ளச் செய்தவர் செ. ம. வேலுச்சாமி. அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் ஜெனிபர் சந்திரன், விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர் வளர்மதி ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
வட சென்னையில் 13 வருடங்களாக மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் சேகர் பாபு. வடசென்னையில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பதில் முன்னிற்பவர். அவருடைய பதவி பறிக்கப்பட்டு எம். ஜி. ஆர். மன்றச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேகர் பாபுவின் ஆதரவாளர்களில் ஆயிரக்கணக்கானோர் இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பிரமுகர்களில் சிலரின் பதவி பறிக்கப்படுவதும் அவர்களின் ஆதரவாளர்கள் அதனை எதிர்த்து ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதும் வழமையான சம்பவங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
சென்னையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் சேகர் பாபு. தமிழக சட்ட சபையில் ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசும் போது உரத்துக் குரல் கொடுப்பவர்களில் முதன்மையானவர் சேகர் பாபு. சபாநாயகரின் பணிப்பின் பேரில் பலமுறை அவைக் காவலர்களினால் தமிழக சட்டசபையில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர் சேகர் பாபு. அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி போன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் சேகர் பாபுவும் விழப் போகிறார் என்ற சந்தேகத்திலேயே அவரிடமிருந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
வட சென்னையில் சேகர் பாபுவின் செல்வாக்கு அதிகமானது. அவர் அணிமாறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலத்த வீழ்ச்சியாக அமையும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பெரும் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவும் போது கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது தொண்டர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் நிற்பதாகவே தலைமைப்பீடம் கருதியது. ஆனால் அணி மாறியவர்களில் பலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஜெயலலிதாவின் இந்த அதிரடியான நடவடிக்கைகளால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவால் வெளியேற்றப்படுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஜெயலலிதாவைப் பழிவாங்கவும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் சூழ்நிலை தோன்றும் சந்தர்ப்பம் உள்ளது.
""நாம் ஒற்றுமையாக இருந்தால் ஆயிரம் தி. மு. க. வந்தாலும் எம்மை வீழ்த்த முடியாது'', ""ஆறாவது முறை நான் முதலமைச்சராவது மக்களின் கைகளில்தான் உள்ளது'' தமிழக சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளுமன்றத் தேர்தல்களையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தமிழக முதல்வர் உரைத்த வார்த்தைகள் அவை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கூறுகிறாரா அல்லது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் கூறுகிறாரா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் அடுத்த முறை தான் முதல்வராவது தமிழக மக்களின் கைகளில் என்கிறாரா அல்லது தனது மக்களின் கைகளில் உள்ளது என்கிறாரா?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுடன் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடமையும் கண்ணியமும் திசைமாறிப் போய் விட்டன. இதுவரை இருந்த கட்டுப்பாடும் கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கோஷ்டி மோதல் இல்லாத கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்ளும் கோஷ்டி மோதல் ஒளிர்விடத் தொடங்கியுள்ளது. ஸ்டாலினின் ஆதரவாளர்களும் அழகிரியின் ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே தம்மை இனம் காட்டியுள்ளனர்.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. ஏனைய தலைவர்கள் கோஷ்டியாகச் செயற்படவில்லை என்றுதான் தலைமை நினைத்துக் கொண்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டம் ஒன்றின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தமது கோஷ்டிப் பூசலை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்டாலினையும் அழகிரியையும் ஒற்றுமையாக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முக்கிய கடமைகளில் முக்கியமானது அழகிரியை சமாதானப்படுத்துவதுதான்.
சூரன்.ஏ.ரவிவர்மா

Thursday, November 4, 2010

இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ஒபாமா?



உலகத் தலைவர்களில் பலர் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பதிலும் உலகத் தலைவர்களில் பலர் அதிக அக்கறையாக உள்ளனர். ""மாற்றம் தேவை'' என்ற தாரக மந்திரத்துடன் புஷ்ஷின் அரசைத் தோற்கடித்த அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் இந்திய விஜயத்தினால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. ஒபாமாவின் இந்திய விஜயத்தினால் மாற்றம் வராதா என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
கொம்பியூட்டர் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள இந்தியர்கள் பலர் அமெரிக்காவிலேயே தொழில் புரிகின்றனர். வேலை இல்லாத அமெரிக்கர்
களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக இந்தியாவுக்கு வழங்கப்பட்ட தொழில்நுட்பப் பணிகளை ஒபாமா குறைத்து விட்டார்.
ஒபாமா ஜனாதிபதியான பின்பு வெளிநாட்டினரின் விஸாக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒபாமாவின் விஜயத்தினால் இதற்கான தீர்வுகள் கிடைக்கலாம் என்று இந்தியா கருதுகிறது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் பரம எதிரியான சீனா இதற்கு எதிர்ப்புக் காட்டி வருகிறது. சீனாவின் எதிர்ப்பை முறியடித்து ஐ.நா.வில்
பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு ஒபாமா உதவக் கூடும் என்று இந்தியா நம்புகிறது.
காஷ்மீர் விவகாரத்தினால் இந்தியாவின் மீது திணிக்கப்படும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஒபாமாவின் வருகை உதவும் என இந்தியா நினைக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி முதலில் இந்தியாவுக்கு விஜயம் செய்வதும் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதும் வழமையாகி விட்டது. 2011 ஆம் ஆண்டு ஒபாமா பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானும் சீனாவும் எல்லையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. ஒபாமாவின் விஜயத்தின் மூலம் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களும் தொழில்நுட்ப உதவிகளும் கிடைக்கலாம். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் பின்னர் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் சில இன்னமும் அமுலில் உள்ளன. ஒபாமாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் அந்தத் தடைகள் விலக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அமெரிக்காவுக்குப் போட்டியாக ரஷ்யா இருந்த போது ரஷ்யாவுடன் இந்தியா மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. அதனால் அமெரிக்காவும் அமெரிக்கா சார்பு நாடுகளும் இந்தியா மீது அதிக அக்கறை காட்டவில்லை. ரஷ்யாவின் பிரிவினைக்குப் பின்னர் அமெரிக்காவுடன் நட்புறவு கொள்ள வேண்டிய சூழ்நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதேவேளை இந்தியாவின் பொருளாதாரத் தொழில்நுட்பம், இராணுவ வளர்ச்சி காரணமாக இந்தியாவை கவர வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. கிளின்டன் இந்தியாவுக்கு விஜயம் செய்ய முன்னர் 22 வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதி எவரும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவில்லை.
ஏர் போர்ஸ் 1 என்ற விசேட விமானத்திலேயே ஒபாமா பயணம் செய்வார். நான்கு என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 630 மைல் வேகத்தில் பறக்கும் ஆற்றல் உள்ளது. விமானியின் அறைக்குக் கீழே உள்ள தளத்தில் ஒபாமாவின் அறையும், அதன் அருகில் அலுவலகமும் உள்ளது. அதனை அடுத்து மருத்துவர்கள் அலுவலகம் உள்ளது.
விமானத்தின் நடுப் பகுதியில் விருந்தினர்கள் அறையும், பாதுகாப்பு அலுவலர்கள் அறையும் உள்ளன. வால் பகுதியில் பத்திரிகையாளர்களுக்கான அறையும் விமான ஊழியர்களுக்கான அறையும் உள்ளன. விமானத்தில் பறந்தபடியே உலகில் எந்த இடத்துக்கும் தொடர்பு கொள்ளும் தகவல் தொழில்நுட்ப வசதி உள்ளது.
ஒபாமா இந்தியாவில் பயணம் செய்வதற்காக பாதுகாப்பு, தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட விசேடமான கார் கொண்டு வரப்பட்டுள்ளது. 18 அடி நீளமும் 5 அடி 10 அங்குல உயரமும் உள்ள இக்கார் மணிக்கு 60 மைல் வேகத்தில் பயணம் செய்யும். கார் முழுவதும் எட்டு அங்குலத்துக்கு இரும்புத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. எதையும் தாங்கும் சக்தி உள்ள கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயரில் சிறு சேதம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதல் போன்றவற்றினால் காருக்கு சிறுசேதம் கூட ஏற்படாது.
ஒபாமாவின் இருக்கைக்கு முன்னால் கொம்பியூட்டர், தொலைபேசி வசதிகள் உள்ளன. அவர் காரில் இருந்தபடியே துணை ஜனாதிபதி, அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் உட்பட உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம். இரவில் பார்க்கும் கண்ணாடி, நவீன துப்பாக்கி, கண்ணீர் புகைக் குண்டு வீசும் கருவி ஆகியன உள்ளன. ஒபாமாவின் இரத்த குரூப் காரில் இருக்கும். அமெரிக்க உளவுத்துறையின் சிறப்புப் பயிற்சி பெற்றவர் சாரதியாக இருப்பார்.
ஒபாமாவின் இந்திய விஜயம் தீர்மானிக்கப்பட்டதும் அமெரிக்க அதிகாரிகளும், உளவு அதிகாரிகளும் இந்தியாவுக்குச் சென்று பாதுகாப்புப் பற்றி இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். உலகின் அதிக உச்சப் பாதுகாப்புப் படையுடன் ஒபாமா நாளை இந்தியா செல்கிறார். அவர் செல்லும் இடங்களில் 5 கிலோ மீற்றர் தூரம் வரை செல்போன்கள் ரிமோட் கொன்ட்ரோல்கள் என்பனவற்றைச் செயலிழக்கச் செய்யும் கருவிகள் கொண்டு செல்லப்படும். ஆள் இல்லாத விமானங்களுடன் வெளியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும்.
மகாத்மா காந்தியை நேசிக்கும் ஒபாமாவின் விஜயத்தின் மூலம் பல தேவைகளை நிறைவேற்ற இந்தியா காத்திருக்கிறது.


சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 05/11/10

சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

இலங்கை, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே மெல்போனில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மத்தியூஸ், மலிங்கவின் அதிரடி துடுப் பாட்டத்தின் மூலம் இலங்கை அணி 1 விக்கெட்டால் வெற்றி பெற்றது. 9 ஆவது விக்கெட்டுக்கு இணைந்து விளையாடிய மத்தி யூஸ், மலிங்க ஆகியோர் 27 வருட 9 ஆவது விக்கெட்டுக் கான இணைப்பாட்ட சாத னையை முறியடித்தனர். 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீரர்க ளான கபில்தேவ், கிர்மானி ஆகியோரின் சாதனையையே இவர்கள் முறியடித்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி வீரர்களின் அபார பந்து வீச்சினால் தடுமாறிய அவுஸ்திரேலிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
மைக் ஹசி ஆட்டமிழக்காது 71 ஓட்டங்கள் எடுத்தார். காயத்திலிருந்து மீண்டும் அணியில் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஹிட்டின் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
பெரேராவின் அபாரமான பந்து வீச்சு அவுஸ்திரேலிய வீரர்களைக் கட்டுப்படுத்தியது. 46 ஓட்டங்களைக்
கொடுத்த பெரேரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலிய பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. சங்கக்கார. 49 ஓட்டங்கள் எடுத்தார்.
எட்டு விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை மத்தியுவ், மலிங்க ஜோடி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றிக்கு வித்தி ட்டனர். இவர்கள் இருவரும் 132 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இலங்கை அணி 239 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் மலிங்க ஆட்டமிழந்தார். 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த மலிங்க நான்கு பவுண்டரி இரண்டு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.
ஒரு ஓட்டம் எடுப்பதற்காக களமிறங்கிய முரளிதரன் பவுண்டரி அடித்து வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
மத்தியுஸ் 77 ஓட்டங்கள் எடுத்தார். 84 பந்துகளுக்கு முகம் கொடுத்த மத்தியூஸ் எட்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக மத்தியூஸ் தேர்வானார்.
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 04/11/10

Wednesday, November 3, 2010

தமிழககாங்கிரஸ்தலைவர்களால்திருமாவளவனுக்குகடும்நெருக்கடி


திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு நீடிக்குமா அல்லது இடையில் முறிந்து விடுமா என்ற பட்டி மன்றம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, எமது உறவு உறுதியாக உள்ளது என்று இரண்டு கட்சித் தலைவர்களும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சங்கடப்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமைப்பீடம் தமிழகத் தலைவர்களுக்கு உத்தரவிட்டும் இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் போன்ற ஒரு சிலர் எல்லை மீறிப் பேசி வருகின்றனர்.
தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியின் பேச்சுக்குக் கட்டுப்படுபவர்கள் என்பதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் கருணாநிதி ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்குவதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. தமிழக அரசு அமுல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையில் உதித்தவை என்று காங்கிரஸார் பிரசாரம் செய்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்துக்கு இளைஞர் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் இடையில் தடம் மாறி திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் பயணமாக மாறியது. இலவசத் தொலைக்காட்சியினால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்று இளைஞர் காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. இந்தப் பிரசாரத்தினால் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க முடியாது. தாங்களும் தருகிறார்கள் இல்லை. தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்ற ஆவேசம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழகக் காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் அரசியல் உலகில் மிகப் பிரபல்யமானது. ராகுல் காந்தியின் மேற்பார்வையிலேயே இளைஞர் காங்கிரஸ் வளர்த்தெடுக்கப்பட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் இல்லை என்று யாரும் கூற முடியாத நிலை உள்ளது. வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி என்று இளைஞர் காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சீண்டிப் பார்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திருமாவளவனைச் சீண்டத் தொடங்கி விட்டனர். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்திய அரசு நடந்து கொண்ட முறையை திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார். கூட்டணிக்குள் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திருமாவளவன் குற்றம் சாட்டுவதைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது திராவிட முன்னேற்றக் கழக அரசும் மெத்தனமாய் இருந்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதைப் பற்றி திருமாவளவன் வாயே திறப்பதில்லை. காங்கிரஸ் கட்சியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் திருமாவளவன் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குற்றம் சாட்டுவதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. காங்கிரஸின் தயவு இல்லாமல் திருமாவளவன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆகையால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் திருவாய் மலர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவு இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை இரண்டு கட்சித் தலைவர்களும் மறந்து விட்டனர்.
தமிழகத்தில் உள்ள தலித்துக்களில் அதிக மானோர் திருமாவளவன் பின்னால் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி தலித்களிடமுள்ளது. அமைச்சர் சிதம்பரத்தின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த
விதமான செல்வாக்கும் இல்லாத கார்த்திக்கின் அண்மைக் காலக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வேறு ஒருவர் இருப்பதாகவே தோன்றுகிறது.
நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் மறைவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல நடிகர்களும், நடிகைகளும் இருந்தாலும் எஸ். எஸ். சந்திரனின் பேச்சு எப்பவும் எதிர்க் கட்சிகளை மட்டம் தட்டுவதாகவே இருக்கும். எஸ்.எஸ்.சந்திரனின் இடத்தை நிரப்புவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நடிகர் ராதாரவியை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார் ஜெய
லலிதா.
நடிகர் ராதாரவி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்லது சரத்குமாரின் கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அரசியலை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியை ராதா ரவி கடந்த வாரம் சந்தித்தார். அப்போது காங்கிரஸில் ராதாரவி இணைகிறார் என்று பரபரப்பாகச் செய்தி வெளியானது. ராதா ரவி அதை மறுக்கவோ ஒப்புக் கொள்ளவோ இல்லை. இந்த நிலையில் திடீரென அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் புள்ளிகளில் பலர் அதிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஏதோ ஒரு இலாபம் இல்லாமல்
ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்க மாட்டார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு தொகுதியில் ராதாரவி தேர்தலில் போட்டியிடலாம் அல்லது காலியாகும் ராஜ் சபை உறுப்பினராகி நாடாளுமன்றம் செல்லலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறுபவர்களை மீண் டும் கட்சிக்குள் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்புகிறார். தமிழக தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் கட்சியில் பலம் குறையக் கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாக உள்ளார்.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு
31/10/10

Tuesday, October 26, 2010

குலுங்கியது மதுரைகுதூகலத்தில் ஜெயலலிதா


மதுரையில் தனது செல்வாக்கைக் காட்ட களமிறங்கிய ஜெயலலிதா அதில் வெற்றி பெற்றுவிட்டார். அழகிரியின் கோட்டையில் அ.தி.மு.க. கொடி பட்டொளி வீசியது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் வியூகத்தை உடைப்பதற்கும் காங்கிரஸை அடிபணிய வைக்கவும் உரிய நடவடிக்கையைத் தமிழக முதல்வர் முடுக்கி விட்டுள்ளார்.
அழகிரியின் ஒத்துழைப்பின்றி மதுரையில் சிறப்பாக எதனையும் செய்ய முடியாது. அழகிரியின் கோட்டை மதுரை. தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்தாலும் மதுரையை ஆள்பவர் அழகிரி. "மதுரை அரசாளும் மீனாட்சி' என்பது பக்திப் பாடல். ஆனால் அழகிரி கை அசைத்தால் மதுரையே அதிரும் என்ற பெருமைகளை உடைத்தெறிந்துவிட்டார் ஜெயலலிதா.
தமிழக அரசைக் கண்டித்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்த உடனேயே பிரச்சினைகள் ஆரம்பமாகிவிட்டன. அண்ணன் அழகிரியின் கோட்டைக்குள் ஜெயலலிதாவை நுழைய விடக் கூடாது என்பதில் ஒரு சிலர் உறுதியாக இருந்தனர். திட்டமிட்டபடி மதுரையில் கூட்டம் நடத்துவேன் என்று உறுதிபடத் தெரிவித்தார் ஜெயலலிதா. மதுøரக்கு வந்தால் கொல்லப்படுவாய் என்று ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏட்டிக்குப் போட்டியாகத் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்தவர்கள் ஆதாரத்துடன் கைது செய்யப்படவில்லை. மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாது மதுரையில் வெற்றிகரமாகக் கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா.
மதுரையில் ஜெயலலிதா நடத்தும் கூட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. ஏதாவது அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமல்லாது அழகிரிக்கும் அவப் பெயர் ஏற்பட்டு விடும் என்பதை தமிழக அரசு உணர்ந்திருந்தது. ஆகையினால் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை.
அழகிரியின் கோட்டையை அதிர வைத்து விட்டார் ஜெயலலிதா. கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் கூடிய கூட்டத்தை விட அதிகளவான மக்கள் மதுரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி ஒரு பெருங் கூட்டம் மதுரையில் கூடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மதுரையில் கூடிய மக்கள் வெள்ளம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்கத் தயங்கிய கட்சிகள் சிந்திக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.
அழகிரியின் கோட்டையில் தனது செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்று களமிறங்கிய ஜெயலலிதா அதில் வெற்றி பெற்று விட்டார். மதுரையின் மூலை முடுக்கு எங்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. ஏட்டிக்குப் போட்டியான சுவரொட்டி யுத்தம் ஜெயலலிதாவின் மதுரை விஜயத்துடன் முடிவுக்கு வந்தது. மதுரையில் கூடிய கூட்டம் ஜெயலலிதாவுக்குப் புதுத் தெம்பை அளித்துள்ளது. ஜெயலலிதாவைக் காணத் திரண்ட மக்கள் வெள்ளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஜெயலலிதா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் வெளிமாவட்டங்களில் இருந்து மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஜெயலலிதாவின் கட்டளைக்குப் பணிந்து இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கும் அது பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய பேட்டியிலிருந்தும் எம்.ஜி. ஆரின் விசுவாசிகள் இன்னமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.
இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும் இப்படித்தான் ஜெயலலிதாவின் பின்னால் மக்கள் வெள்ளம் திரண்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக இருந்தன. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஜெயலலிதா பெறவில்லை. ஜெயலலிதாவை நம்பி பின்னால் சென்ற வைகோ, ராமதாஸ் ஆகியோரும் இடதுசாரிக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வியூகத்தை உடைப்பதற்கும் காங்கிரஸ் கட்சியை அடிபணிய வைக்கவும் உரிய வியூகங்களை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார் முதல்வர் கருணாநிதி. சோனியாகாந்தியின் திருச்சி உரை முதல்வர் கருணாநிதியைச் சிந்திக்கத் தூண்டி உள்ளது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் விருப்பம். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்துக்கும் ராகுல் காந்தியின் ஆசைக்கும் சோனியா காந்தி ஒப்புதலளிக்கவில்லை. திருச்சியில் சோனியா காந்தி ஆற்றிய உரை அவர்களின் விருப்பத்துக்கு சாதகமான சமிஞ்ஞையை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் அல்லது ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோஷத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக அரசியலில் பங்கு கொடுத்து அவர்களை அமைச்சர்களாக்குவதற்கு முதல்வர் கருணாநிதி விரும்ப மாட்டார். ஆகையினால் ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம்.
விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியில் பங்கு பெறலாம். சுழற்சி முறையில் முதல்வராகலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்பது விஜயகாந்துக்கு நன்கு தெரியும்.
விஜயகாந்தும் காங்கிரஸும் இணைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த முதல்வர் கருணாநிதி புதிய கூட்டணிக்கான அத்திபாரத்தை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார். நம்ப வைத்து கழுத்தறுத்த கருணாநிதியும் அரசியல் வியாபாரி ராமதாஸும் சந்தித்துள்ளார்கள். தனது மகனுக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி தரவில்லை என்பதனால் நம்ப வைத்து கழுத்தறுத்த கருணாநிதி என்று ராமதாஸ் விமர்சித்தார். அதனைப் பொறுக்க மாட்டாத துரைமுருகன் அரசியல் வியாபாரி ராமதாஸைச் சாடினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி கலந்துரையாட தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கு ராமதாஸ் அனுமதி கேட்டார். உடனே அனுமதி கிடைத்துவிட்டது. தமிழகத் தேர்தல் கூட்டணிக்கான புதிய ஆரம்பமாகவே இதனைக் கருதலாம். ஜெயலலிதாவின் முதலாவது தெரிவு காங்கிரஸ், இரண்டாவது தெரிவு விஜயகாந்த், மூன்றாவது இடத்தில் ராமதாஸ் உள்ளார். தனது நிலை என்ன என்பதை உணர்ந்து கொண்ட ராமதாஸ் தமிழக முதல்வரின் பக்கத்துக்குச் சாய்ந்து விட்டார்.
காங்கிரஸும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்தால் ஜெயலலிதா பலவீனமாகிவிடுவார். வெற்றி வாய்ப்பு இல்லாத ஜெயலலிதாவுடன் இருக்கும் இடதுசாரிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவி விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கணக்குப் போட்டுள்ளார்.
சூரன்.எ.ரவிவர்மா.
வீரகேசரிவாரவெளியீடு 24/10/10