Friday, February 27, 2009

எல்லாப்புகழும் இறைவனுக்கே


ஆங்கிலத் திரைப்படத்தின் தரத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் ஒஸ்கார் விருது முடிவுகளால் உலகமே இந்தியாவை திரும்பிப் பார்த்துள்ளது.
இந்தியாவில் தயாரான ஸ்லம்டோக் மில்லியனர் என்ற திரைப்படம் எட்டு விருதுகளையும் ஸ்மைல்பிங்கி என்ற ஆவணப் படம் சிறந்த ஒஸ்கார் விருதையும் தட்டிச் சென்றுள்ளன.
சிறந்த இசை, சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக இரண்டு விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார். விருதுப் பாடலை குல்சார் எழுதியவர் பிரபல ஹிந்திக் கவிஞரான சுவீந்தர் சிங், மகாலக்ஷ்மி ஐயர் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளõர். முதல்வனில் குறுக்குச் சிறுத்தவளே, அலைபாயுதேயில் யாரோ யாரோடி ஆகிய பாடல்களைப் பாடியவர்தான் மகா லக்ஷ்மி ஐயர்.
மேலைத்தேய இசை வித்தகர்களுடன் போட்டியிட்ட இந்தியரான ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றது இந்திய இசைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.
ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புகுந்த ரஹ்மான் இந்திய சினிமாவை தன் பிடிக்குள் அடக்கினார். ஒஸ்கார் விருதை வென்றதன் மூலம் திரை உலக சக்கரவர்த்தி என்பதை நிரூபித்துள்ளார்.
சாமானியரும் ரசிக்கும் வகையில் இசை அமைப்பது ரஹ்மானின் பாணியாகும். ஓஸ்கார் விருது என்பது தமிழ்க்கலைஞர்களுக்கு கனவாகவே இருந்தது. இரண்டு ஒஸ்கார் விருதுகளை ஒரே தடவையில் பெற்று கனவை நிஜமாக்கியுள்ளார் ரஹ்மான்.
விழா மேடையில் தாயையும், தனது கலாசாரத்தையும் அரங்கேற்றி தன்னடக்கத்தை வெளிப்படுத்தினார்.
ஒஸ்கார் விருது பெற்ற இன்னொரு இந்தியர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டி, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத புனலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர் ஒலிக்கலவையில் தன்னிகரில்லாதவராக விளங்குகிறார். ஒலியில் இவர் புரிந்த சித்து விளையாட்டை கஜினி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனுபவித்தார்கள்.
முஸ்லிம் மதத்தவரான இவரது கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் வேறுபாடு இன்றி ஒன்றாக வாழ்கின்றனர்.
விருது பெற்ற மகிழ்ச்சியில் பேசிய பூக்குட்டி சிவராத்திரியான இன்று என் நாட்டவருக்கும் உறவினர்களுக்கும் ஊர் மக்களுக்கும் கிடைத்த பரிசு என அடக்கத்துடன் கூறினார்.
ஒஸ்கார் விருதை வென்ற ஆவணப்படம் ஸ்மைல் பிங்கி உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிர்சா பூர் அருகே உள்ள ராம்பூர் தயாகி என்ற கிராமத்தில் எட்டு வயது சிறுமியின் உண்மைக்கதைதான் ஸ்மைல் பிங்கி.
உதடு பிளவுபட்ட இச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள், கேலிகள் என்பனவற்றை புடம் போட்டு வெளிக்காட்டிய ஆவணப் படம்.
ஸ்மைல் பிங்கியுடன் போட்டியிட்ட இன்னொரு குறும்படம் தி பைனல் இஞ்ச். போலியோவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவும் பணியாளர்களின் வெளிப்பாடு இதில் விபரிக்கப்பட்டுள்ளது.
நடித்த பின்னர் பிங்கிக்கு சமூகசேவை நிறுவனம் இலவசமாக சத்திரசிகிச் சை செய்து உதட்டை சரிப்படுத்தியது.எனக்கு மட்டும் வாழ்வு கிடை த்தால் போதாது இந்தியாவில் என்னைப் போன்ற 40 இலட்சம் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல மரு த்துவ சிகி ச்சை கிடைக்க வேண்டும் என்று லொஸ்ஏஞ்சல்ஸில் இருந்து குரல் கொடுத்துள்ளார் பிங்கி.
ஏழ்மை, வறுமை அங்கவீனம் இல்லாத ஒஸ்கார் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.





ரஹ்மானின் முதல் படங்கள்...
தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது.
இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா.
மலையாளத்தில் முதலம் படம் யோதா.
தெலுங்கில் முதல் படம் சூப்பர் பொலிஸ்.
ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஒப் ஹெவன்.
ரஹ்மானை அலங்கரித்த விருதுகள்...
எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதைவிட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான். அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டோக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப் பாஃப்டா விருதுகள்.
இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள்.
ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995) பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கல்விக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).
தேசிய விருதுகள்
ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).
பிலிம்பேர் விருதுகள்
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல்தேசம்(1997), மின்சாரகனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலைபாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை,(2008).
ஸ்க்ரீன்விருது
காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009),
தினகரன் சினி விருதுகள்
மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000),
தமிழக அரசு
விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).
சினிமா எக்ஸ்பிரஸ் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).
கலாசாகர் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).
பிலிம்பேன்ஸ் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).
சினி கோயர்ஸ் விருது
ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995),பாம்பே (1996).
ஜீ விருது
ஜீ சினி விருது (குரு. 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999) ஜீ. சினி விருது (தால், 2000) ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஒப் பகத் சிங் 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007).
சர்வதேச இந்திய திரைப்பட விருது
தால் (2000). லகான் (2002). சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007).
குளோபல் இந்தியன் திரை விருது
சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி 2007)
உலக அரங்கில் தலை நிமிர்ந்த இந்தியா
பெப்ரவரி 24.02.2009
ரஹ்மான் பெற்ற விருதுகள்
ஸ்லம்÷டாக் மில்லியனர் படத்தில் இசை அமைத்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை தலைநிமிர செய்துள்ளார் ரஹ்மான். இப்படத்துக்கான ஒஸ்கார் உள்ளிட்ட சர்வதேச விருதுகள் தவிர்த்து அவர் பெற்ற பிற விருதுகள்.
குளோபல் இந்தியன் பிலிம் விருது (2007).
மகாவீர் மகாத்மா (2005)
சங்கீத் விருது (2004)
லதா மங்கேஷ்கர் விருது (2004)
பத்ம ஸ்ரீ (2000)
இன்டர் நேஷனல் இந்தியன் பிலிம் அகடமி விருது (2000.02.03. 07.08)
எம்.டிவி. விருது (1999, 2003).
கலைமாமணி (1995)
மொரீஷியஸ் தேசிய விருது (1995)
மலேசிய விருது (1995)
வரவிருக்கும் படங்கள். நாயர் சன் (ஜப்பான், மாண்டரின்,
மங்கோலி, ஆங்கிலம்)
ப்ளூ (இந்தி)
புலி (தெலுங்கு)
அசோகவனம் (தமிழ், இந்தி)
சென்னையில் ஒரு மழைக்காலம்
(தமிழ்)
எய்ட் பை டென் (இந்திய)
சுல்தான் தி வாரியர் (தமிழ்)
விண்ணை தாண்டி வருவாயா (தமிழ்)
எந்திரன் (தமிழ்)
தீ நைன்டீன்த் ஸ்டெப்(தமிழ், ஆங்கிலம் ஜப்பான்)
ரமணி
மெட்ரோநியூஸ்
27 02 2009

Wednesday, February 25, 2009

முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையே கிரைஸ் சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது கூ20 போட்டியில் நியூசிலாந்து ஏழு விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 162 ஒட்டங்கள் எடுத்தது.
முதல் ஓவரிலேயே ஷெவாக் வழமையான அதிரடியை காட்டினார். அவர் சந்தித்த முதல் மூன்று பந்துகளையும் வரிசையாக சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களை பரவசமடையச் செய்தார். ஏழு பந்துகளில் ஒரேயொரு சிக்ஸர் அடித்த கம்பீர் பிரையனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சிறந்த முறையில் அதிரடியில் ஓட்டங்களைக் குவித்த ஷெவாக் பிரையனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 10 பந்துகளைச் சந்தித்த ஷெவாக் நான்கு சிக்ஸர் உட்பட 26 ஒட்டங்கள் எடுத்தார்.
ரோஹித் சர்மா 7, யுவராஜ் 1, டோனி 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எதிர்முனையில் ரெய்னா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார்.
7.5 ஓவரில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 61 ஓட்டங்கள் எடுத்து இந்தியா தடுமாறிய வேளை களமிறங்கிய யூசுப் பதான் அதிரடியாக எட்டு பந்துகளில் 20 ஒட்டங்களை குவித்தார். மக்கலம் வீசிய 10 ஆவது ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டினார். நான்காவது பந்தையும் சிக்ஸரை நோக்கி அடித்தபோது. எல்லையில் காத்திருந்த ஜேக்கப் ஓரமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இர்பான் பதான் 12, ஹர்பஜன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
43 பந்துகளைச்சந்தித்த ரெய்னா ஆட்டமிழக்காது 61 ஓட்டங்கள் எடுத்தார்.
163 என்ற இலகுவான ஓட்ட எண்ணிக்கையுடன் களமிறங்கிய நியூசிலாந்து 18.5 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரைடர் இஷாந் சர்மாவின் பந்துவீச்சில் ஒரு ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
மக்கலம், குப்டில் ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை திணறடித்தது. இஷாந்த் சர்மா இரண்டு நோபோல்களை வீச அதனை பிரீகிட் மூலம் எதிர்கொண்ட குடில் பௌண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டி 10 ஓட்டங்களை எடுத்தார். பதானின் பந்தையும் பதம் பார்த்த குடில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார்.
ஹர்பஜனின் பந்த வீச்சில் ஆட்டமிழந்த குடில் 28 பந்துகளுக்கு முகம் கொடு த்து மூன்று சிக்ஸர் நான்கு பௌண்டரி அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுத்தார்.
மக்கலம் டெய்லர் ஜோடி 40 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்தது. 20 பந்துகளில் மூன்று சிக்ஸர் ஒரு பௌண்டரி அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்த ரெய்லர், சஹீர்கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மக்கலம் ஓராம் ஜோடி நியூசிலாந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. மக்கலம் 49 பந்துகளுக்கு முகம் கொடுத்து மூன்று சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.
15 பந்துகளைச் சந்தித்த ஓராம் இரண்டு சிக்ஸர் மூன்று பௌண்டரி அடங்கலாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியின் மக்கலம் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது டுவென்டி 20 போட்டி நாளை நடைபெறும்.

இலங்கைக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான்

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கராச்சியில் நடைபெற்ற பரபரப்பான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
முதல் மூன்று நாட்களும் இலங்கை அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மூன்றாம் நாள் மாலையில் இருந்து ஐந் தாம் நாள் வரை பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் தன் தலைமையில் பொறுப்பைச் சுமந்து இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
யூனுஸ் கானின் 313 ஓட்டங்களும் கமரன் அக்மல் ஆட்டமிழக்காத 158 ஓட்டங்களும் இலங்கை வீரர்களை திக்குமுக்காடச் செய்தன.
ஐந்து விக்öகட்டை இழந்து 574 ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் 765 ஓட்டங்கள் அடித்து இலங்கையை திக்கு முக்காடச் செய்தது. முதல் இன்னிங்ஸில் 121 ஓட்டங்கள் கூடுதலாக பாகிஸ்தான் எடுத்ததனால் இலங்கை வீரர்கள் சோர்வடைந்தனர்.
யூனுஸ்கான் 306 ஓட்டங்களுடனும் கமரன் அக்மல் 27 ஓட்டங்களுடனும் நேற்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர். பெர்னாண்டோவின் பந்து வீச்சில் 313 ஓட்டங்கள் எடுத்த யூனுஸ்கான் ஆட்டமிழந்தார்.
788 நிமிடங்கள் களத்தில் நின்ற இவர் 568 பந்துகளுக்கு முகம் கொடுத்து நான்கு சிக்ஸர் 27 பௌண்டரிகள் அடங்கலாக 313 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆறு விக்கெட்டுகளை இழந்து 765 ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு இலங்கையை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
கமரன் அக்மல் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களும் யசிர் அரபாத் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்தது.
பரணவிதாரண 9, வர்ணபுர 21, சங்கக்கார 65, டில்சான் 2, மஹேல 22 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக யூனுஸ்கான் தெரிவு செய்யப்பட்டார்

Sunday, February 22, 2009

கூட்டணிக் கணக்கில் தீவிரமாயுள்ளஅரசியல் கட்சிகள்


இலங்கையில் தாக்குதலுக்குள்ளாகும் தமிழ் மக்களுக்காக காரணமாக தமிழக மக்கள் பல வழிகளிலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் தமிழக அரசும் மத்திய அரசும் தமது ஆட்சியை தக்கவைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றன.
தமிழகத்தில் செல்வாக்குள்ள இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது வழமையான பல்லவியுடன் புலி எதிர்ப்புக் கொள்கையை கையில் எடுத்துள்ளது. வன்னியில் உள்ள தமிழ் மக்கள் அழிந்தால் அது புலிகளின் அழிவாகவே ஜெயலலிதா கருதுகிறார். இதற்கு நேர்மாறான கொள்கையுடைய வைகோ, அடுத்து வரும் தேர்தலில் அடுத்த முதல்வராக ஜெயலலிதாவை அமர்த்தி அழகு பார்க்க ஆசைப்படுகிறார். இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் தரத்தைப் பலப்படுத்த வைகோ தன்னாலான சகல முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
பரபரப்பான அரசியல் நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்பதை அறிய முடியாமல் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி உள்ளார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து காரசாரமாக அறிக்கை விடும் ராமதாஸ் தனது மகனின் மந்திரிப் பதவி நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து ராமதாஸ்தான் வெளியேறப் போகிறார், ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரப்போகிறார் என்று ராமதாஸைப் பற்றி பரபரப்பான செய்திகள் வெளிவரும். அவற்றுக்கு மறுப்பு அறிக்கை விடுவதிலேயே ராமதாஸ் அதிக கவனம் செலுத்துகிறார்.
பழ. நெடுமாறன் தலைமையிலான இயக்கம் இலங்கைத் தமிழர்களுக்காக அரசியல் இலாபமின்றி போராட்டங்களையும், விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறது. தா. பாண்டியன், வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பழ. நெடுமாறனின் போராட்டங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். தமிழின விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை நெறிப்படுத்துகின்றனர். ஆனால், உணர்ச்சி வசப்படும் தமிழக மக்களில் சிலர் தமது உயிரை துச்சமென நினைத்து தீக்குளிக்கின்றனர். தமிழகத்தில் கொழுந்து விட்டெரியும் தீக்குளிப்புக் கலாசாரத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்றார். ஆனால், தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கின்றார்.
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத தமிழக அரசாங்கம், இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் திட்டங்களைத் தீட்டி வருகிறது.நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் போட்டியிடுவதென்று காங்கிரஸின் தலைமைப் பீடம் தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டணியின் தரத்தைப் பலப்படுத்தப்போகும் சிறிய கட்சிகள் எவை என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறுவது அண்மைக்கால வரலாறாக உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை.
தமிழகத்தில் உள்ள கட்சிக்கு நிரந்தரமான வாக்கு வங்கிகள் உள்ளன. சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை இந்திய மத்திய அரசிலும், தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைவடைந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. அண்மையில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கருத்துக்கணிப்பை சிதறடித்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் தமது செல்வாக்கு வங்கியைக் காட்டி கூட்டணியில் கூடிய ஆசனங்களைப் பெற காத்து நிற்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அணியிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடது சாரிகள் ஓர் அணியிலும் உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இடம் பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்று இன்னமும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி எதுவென்பதை அறிந்து அதன் பின்னரே கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவெடுப்பார்.
கட்சிகளின் வாக்கு வங்கிகளைவிட தமிழ் இன உணர்வு என்ற புதிய அலை ஒன்று தமிழகத்தில் எழுந்துள்ளது. வைகோ, டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன், திருமாவளவன் ஆகியோரின் தமிழ் இன உணர்வுப் பிரசாரங்களால் கவரப்பட்ட வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க முடியாது குழம்பப் போகின்றனர்.
வைகோ, தா. பாண்டியன் ஆகியோரை ஆதரித்தால் ஜெயலலிதாவின் கரங்கள் பலமடைந்து விடும். திருமாவளவனுக்கு வாக்களித்தால் தமிழக முதல்வர் கருணாநிதியும் சோனியாவும் பலமடைந்து விடுவார்கள்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர்க்கப்படும் என்று தலைவர் அத்வானி டில்லியிலிருந்து முழங்கியுள்ளார். இந்திய அரசியலில் இது ஒரு திருப்புமுனையாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அதனுடன் கூட்டணி சேர்வதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எவையும் தயாராக இல்லை.
தமிழக தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழின உணர்வு வாக்குகள் விளங்கப் போகின்றன. அதனை கவர்வதற்கான வியூகங்களை அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டத் தொடங்கி விட்டன.

வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
22/02/2009

Tuesday, February 17, 2009

ஏமாந்தகமல்


உலக நாயகன் என்று வர்ணிக்கப்படும் கமல்ஹாசனை தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய படம் ஏ.வி.எம்மின் "களத்தூர் கண்ணம்மா'. சிறுவனாக இருந்த கமல் நடிக்கும் ஆர்வத்தில் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அவருடைய மனதைக் கவர்ந்ததனால் "களத்தூர் கண்ணம்மா'வில் நடிக்கும் வாய்ப்பு கமலுக்குக் கிடைத்தது.
திரைப்படங்களை வாங்கி விநியோகித்த ஏ.வி.எம்.மின் பிள்ளைகளின் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தடை கூறாது அனுமதி வழங்கினார்.
பட்டுவும் கிட்டுவும் என்ற கதையைப் படித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நல்ல கதை. ஆனால் இப்போதைக்கு தன்னால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகஜவார் சீதாராமனுக்கு தெரிவித்தார். படம் தயாரிப்பதற்கு தகப்பன் அனுமதி வழங்கிய பின்னர் கதையைத் தேடி அலைந்த சரவணனும் சகோதரர்களும்ஜவார் சீதாராமன் எழுதிய நல்ல கதை ஒன்று தகப்பனிடம் இருப்பதை அறிந்த பிள்ளைகள் அந்தக் கதையை படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். அன்று மாலை கதையை வாங்கி மேலும் ஒரு கொம்பனிக்கு கொடுப்பதற்காகஜவார் சீதாராமனுக்கு ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரைச் சந்தித்தார். அப்போது அக்கதையை தனது பிள்ளைகள் எடுக்கப் போவதாகக் கூறினார்.
முதன்முதலாகத் தயாரிக்கப் போகும் படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அமரதீபம், உத்தம புத்திரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய டி.பிரகாஷ்ராவை இயக்குனராக நியமித்தார்கள்.
"யார் பையன்' என்ற படத்தில் பிரமாதமாக நடித்த டெய்ஸி ராணி என்ற பெண் குழந்தைக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் பேசி முன்பணமும் கொடுத்தார்கள். ஹிந்தியில் பெயரும் புகழும் பெற்ற டெய்ஸி ராணியின் நடிப்பு அவர்களை கவர்ந்ததனால் பணத்தைப் பற்றிக் கவலைப்படாது ஒப்பந்தம் செய்தார்கள்.
சிறுவனான கமலைக் கண்ட ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் ஒரு நிமிடத்தில் கமலின் திறமையை இனம் கண்டு கமலுக்கு மேக் அப் டெஸ்ட் செய்யும்படி கூறினார். இயக்குனர் பிரகõஷ்ராவ்,ஜெமினி, சாவித்திரி ஆகியோருக்கும் கமலை மிகவும் பிடித்து விட்டது.
ஏ.வி.எம். சரவணனுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றான் சிறுவன் கமல். அப்போது ""கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ'' என்ற பாடலின் ஷூட்டிங் நடைபெற்றது. கமல் முதன் முதலில் பார்த்த ஷூட்டிங் அது தான். ஏற்கனவே எடுக்கப்பட்ட அப்பாடலின் சில காட்சிகள் மீண்டும் அன்று படமாக்கப்பட்டன. மாங்காய் சீஸனில் அப்பாடல் காட்சி முதலில் படமாக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது மாமரத்தில் மாங்காய்கள் இல்லை. ஆகையினால் டூப் மாங்காய்களை தொங்க விட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள். மாங்காயைக் கண்டதும் சிறுவன் கமலின் நாவில் எச்சில் ஊறியது. தனக்கு ஒரு மாங்காய் பிடுங்கித் தரும் படி ஜெமினி கணேசனிடம் கேட்டான். குறும்புக்கார ஜெமினி கணேசன் மாமரத்தில் ஏறி டூப் மாங்காயை பறித்துக் கொடுத்தார். மாங்காயைக் கடித்ததும் டூப் மாங்காய் என்றதனை எறிந்தான் சிறுவன் கமல்.
படப்பிடிப்பு நடந்த வீட்டை உண்மையான வீடு என்றே கமல் முதலில் நினைத்தார். அது செற் என்று தெரிந்ததும் ""ஐயையோ டூப் வீடு'' என்று சத்தமிட்டான் சிறுவன் கமல்.
சாவித்திரி உப்புமாவை ஊட்டி விடும் காட்சியில்தான் சிறுவன் கமல் முதன்முதல் நடித்தார். சாவித்திரி ஊட்டிய உப்புமாவை வாயில் அடக்கி வைத்திருந்துவிட்டு படப்பிடிப்பு முடிந்ததும் துப்பி விட்டு ""ஐயையோ டூப் உப்புமா'' என்றார்.
அது உண்மையான உப்புமாதான் என்பதை நிரூபிப்பதற்காக உதவி இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் சாப்பிட்டுக் காட்டினார். அதன் பின்னர்தான் அது உண்மையான உப்புமா என்ற உண்மை சிறுவன் கமலுக்குத் தெரிந்தது.
"களத்தூர் கண்ணம்மா' மிகவும் சிறப்பான படமானது. எட்டாயிரம் அடி எடுக்கப்பட்டபோது படத்தைப் போட்டும் பார்த்தார்கள். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாருக்கு திருப்தி இல்லை, சிறுவன் கமலின் நடிப்பில் உருவான ""அம்மாவும் நீயே அப்பாவும் நீயே'' பாடல் ஒன்றரை நிமிடங்கள் படமாக்கப்பட்டது. அக்காட்சியை இன்னும் அதிகமாக்கி மூன்று நிமிடங்களுக்குள் படமாக்குமாறு கூறினார். அதேபோன்று வேறு சில காட்சிகளையும் மீண்டும் படமாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இயக்குநர் பிரகாஷ்ராவுக்கும் மற்றவர்களுக்கும் இதில் உடன்பாடு இல்லை. பிரகாஷ்ராவ் புதிய வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்வதற்கு நாள் குறித்து விட்டார். களத்தூர் கண்ணம்மாவை மீண்டும் படமாக்கினால் அவருடைய கிரகப்பிரவேசம் தள்ளிப் போய்விடும். ஆகையால் அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அவரை தடுத்து நிறுத்த ஏ.வி.எம். விரும்பவில்லை. அவருக்குப் பதிலாக பீம்சிங்கை இயக்குனராக ஒப்பந்தம் செய்தது.
பிரகாஷ் ராவுக்கு தமிழ் சரியாகத் தெரியாததõல் ""அருகில் வந்தõள் உருகி நின்றாள்'' என்ற பாடலின் பல்லவியை கவிஞர் கண்ணதாசன் எழுதிக் கொடுத்தபோது அதன் அர்த்தம் புரியாததால் இன்னொரு பல்லவி எழுதுங்கள் என்றார். கவியரசு இன்னொன்று எழுதிக் கொடுத்தார். அதுவும் திருப்தி கொடுக்காததால் இன்னொன்று கேட்டார். கவிஞரும் எழுதிக்கொடுத்தார். பிரகாஷ் ராவைத் திருப்திப்படுத்துவதற்காக சளைக்காது 58 பல்லவிகளை கவியரசு எழுதிக் கொடுத்தார்.
களத்தூர் கண்ணம்மா தயாரான அதே சமயம் கடவுளின் குழந்தை என்ற படத்தை சின்ன அண்ணாமலை தயாரித்தார். கல்யாண்குமார், ஜமுனா ஆகியோர் நடித்த கடவுளின் குழந்தை, களத்தூர் கண்ணம்மா ஆகிய இரண்டு படங்களும் நோபொடீஸ் சைல்ட் என்ற ஆங்கிலப் படத்தின் மூலக் கதையில் இருந்து உருவானவை.
"கடவுளின் குழந்தை' வெளியானதன் பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியானால் படம் வெற்றி பெறாது என்று ஏ.வி.எம். சரவணனும் மற்றவர்களும் நினைத்தனர். பல காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் கூறினார்.
களத்தூர் கண்ணம்மா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கடவுளின் குழந்தை வெளியாகி சிறந்த படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.


கடவுளின் குழந்தைக்குப்பின்னர் களத்தூர் கண்ணம்மா வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இரண்டு படங்களும் ஒரே கதை என்று தெரியாத வகையில் படமாக்கப்பட்டிருந்தன. சிறுவன் கமலின் நடிப்பு சகலரையும் கவர்ந்தது.
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்தது. அப்பாடலின் முதல் வரி அம்மையும் நீயே அப்பனும் நீயே என்றுதான் இருந்தது. ஏ.வி.எம். சரவணனின் மூத்த சகோதரியின் கணவரான அருண் வீரப்பன்தான் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே எளிமையாக உள்ளது என்று யோசனை கூறினார்.
கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் வசூலை முறியடித்து புகழையும் பெற்றது "களத்தூர் கண்ணம்மா'.

ரமணி
மித்திரன்
08 02/15 02 2009

Sunday, February 15, 2009

தமிழக அரசியலில் தலைவர்களின் நிலைப்பாடு

தமிழக அரசியலில் தலைவர்களின் நிலைப்பாடும்
தொண்டர்களின் எதிர்பார்ப்பும்

இந்திய விடுதலைக்காக தியாகத் தீயில் மூழ்கி எழுந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்த தனது கட்சித் தொண்டரை கொச்சைப்படுத்தியுள் ளது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படித்து உணர்ச்சி வசப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமது விடுதலைக்காக இந்தியா குரல் கொடுக்கும் என்று நினைத்து ஏமாந்துவிட்டனர்.இலங்கையில் நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசியல் வாதிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று உரத்துக் குரல் கொடுத்தும் அக்குரல் இன்னமும் டில்லியைச் சென்றடையவில்லை.
அரசியல்வாதிகளின் குரல் அலட்சியப்படுத்தப்பட்டு வருகையில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு சகலரையும் ஒரு கணம் திடுக்கிடச் செய்தது.
முத்துக்குமாரின் வழியில் பள்ளப்பட்டி ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோரும் இலங்கைப் பிரச்சினையை காரணம் காட்டி தீ மூட்டி தற்கொலை செய்தனர்.இலங்கைப் பிரச்சினை இந்தியாவில் கனன்று கொண்டிருக்கையில் மலேசியாவில் ரவி என்பவர் வாகனத்தின் முன்விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழக ஆளுங்கட்சி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளது.
இதேவேளை இப்பிரச்சினைக்காக தமிழக அரசை வலு இழக்கச் செய்யும் சகல முயற்சிகளையும் ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறார்.இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்தால்தான் அது புலிகளுக்கு செய்யும் உதவியாக அமைந்து விடும் என்று காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு வேறு, காங்கிரஸ் தொண்டர்களின் நிலைப்பாடு வேறு என்பதை ரவிச்சந்திரனின் தற்கொலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ரவிச்சந்திரனின் குடும்பமே காங்கிரஸ் கட்சி யின் தீவிர ஆதரவானது. ரவிச்சந்திரன், அவருடைய தாய், தந்தை எல்லோரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழுணர்வு இல்லை என ஏனைய கட்சிகள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சித் தொண்டனுக்கு தமிழுணர்வு உள்ளது என்பதை வெளிப்படுத்தவே தன்னைப் பலியாக்கியுள்ளார் ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரனின் தீக்குளிப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த அவமானத்தைத் தோற்றுவித்துள்ளது. கட்சிகளும் தலைவர்களுக்கும் விசுவாசமாக இருப்பதை வெளிக்காட்டுவதற்காக தீக்குளிப்பது தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் ஒரு சம்பவம். அப்போது அந்த வேளையில் அந்த உடலை வைத்து அரசியல் நடைபெறுவதும் வாடிக்கையானது என்று தனது கட்சித் தொண்டனின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி ரவிச்சந்திரனின் மரணத்தை கண்டு கொள்ளவே இல்லை. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட செல்லவில்லை.
திராவிட முன்னேற்றக்கழக தொழிற்சங்க உறுப்பினராக ரவிச்சந்திரன் இருப்பதாகக் கூறி அவரது உடலை கைப்பற்றி அரசியல் நடத்த திராவிட முன்னேற்றக்கட்சி முயற்சித்தது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் அந்த முயற்சியை முறியடித்து சகல மரியாதைகளுடனும் இறுதிச் சடங்கை நடத்தியது.
தியாகத்தால் வளர்ந்த காங்கிரஸ் கட்சி தனது தொண்டனின் தியாகத்தை உதாசீனம் செய்துள்ளது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் சூடுபிடித்திருக்கும் வேளையில் தமிழகத்தின் பிரதான இரண்டு திராவிட கழகங்களும் தமது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் ஒரளவு வெற்றி கண்டுள்ளன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், இடதுசாரிகள் ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அவமானங்களை தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிவதில்லை என்று காங்கிரஸும் திராவிட முன்னேற்றக்கழகமும் உறுதி மொழி எடுத்துள் ளன.
மக்களுடன் தான் கூட்டணி என்ற கோசத்துடன் அரசியல் நடத்தும் விஜயகாந்த் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். தனித்துப் போட்டியிட்டதால் அவருக்கு கிடைத்த வாக்குகளின் விகிதாசாரம் அவரது கட்சியை அங்கீகரிக்க போதுமானதாக இல்லை.
தேர்தலில் போட்டியிடும் கட்சியென அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு அதற்குரிய நிரந்தர சின்னம் ஒதுக்கப்பட வேண்டுமானால், இந்திய தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரத்துக்கு அதிகமான வாக்கைப் பெற வேண்டும். தமிழக அரசியலில் திடீரென சலசலப்பை ஏற்படுத்திய விஜயகாந்தின் கட்சி தேர்தல் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள வாக்கு விகிதத்தை இன்னமும் எட்டவில்லை. ஆகையினால் அவரது கட்சி அரசியல்கட்சியாக இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், பெரிய கட்சியுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜயகாந்த். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர விஜயகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். இடது சாரிகள், பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் இல்லாத இடைவெளியை விஜயகாந்த் நிரப்புவார் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த், சோனியா என்ற புதிய கூட்டணி ஜெயலலிதாவுக்கு சவாலாக உள்ளது. முதல்வர் கருணாநிதியை போற்றியும், தூற்றியும், அறிக்கை விடும் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவுடன் இணையும் சாத்தியக் கூறு அதிகமாக உள்ளது.இந்தியப் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டால் இலங்கைப் பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். கூட்டணிப் பேரமும் மந்திரிப்பட்டியலும் முதலிடம் பிடித்துவிடும்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
15 02 2009

Friday, February 13, 2009

மஹேலவின் இடத்தை நிரப்பப்போவது யார்?


அர்ஜுனவுக்குப் பின்னர் இலங்கைஅணியை வழி நடத்தி மிக உச்சத்துக்குஅழைத்துச் சென்ற அணித் தலைவர்மஹேல ஜயவர்த்தன திடீரென தனதுதலைமைப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.பல சாதனைகளையும் வெற்றிகளையும்பெற்ற மஹேல தலைமையிலான அணிஅண்மைக் காலத்தில் மிகவும்மோசமாகவிளையாடியது.அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற பலம்வாய்ந்த அணிகளைப் புரட்டி எடுத்தஇலங்கை அணி, சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகியவற்றிடம் அடிவாங்கும் வகையில் மோசமாகச் செயற்பட்டது. அண்மையில்
பாகிஸ்தானுடன் நடந்த ஒரு நாள் தொடரில் தட்டுத் தடுமாறி கிண்ணத்தைப்பெற்றது.
2004ஆம் ஆண்டு ஒருநாள் அணிக்கும்2006ஆம் ஆண்டின் டெஸ்ட் அணிக்கும் தலைவரானார் மஹேல. 2007ஆம் ஆண்டுஉலகக் கிண்ண இறுதிப் போட்டிவரைஇலங்கை அணியை வழி நடத்தினார்.2008ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத்தைஇலங்கைக்கு பெற்றுக் கொடுத்தார்.மஹேல தலைமையிலான இலங்கைஅணி 94 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 54 வெற்றிகளையும் 35 தோல்விகளையும் பெற்றது. ஐந்து போட்டிகள் கைவிடப்பட்டன.
26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15வெற்றிகளையும் ஏழு தோல்விகளையும்நான்கு போட்டிகளில் சமநிலையையும்பெற்றது.
100 டெஸ்ட் போட்டிகளில்விளையாடிய மஹேல 7959 ஓட்டங்களைப்பெற்றார். 299 ஒருநாள் போட்டிகளில்விளையாடி 8042 ஓட்டங்கள் பெற்றார்.
மஹேல தலைமையிலான இலங்கை அணிதோல்வியடைந்தபோதுஇவர் விமர்சிக்கப்படவில்லை. அவரிடம்இருந்து தலைமைப் பொறுப்பு பறிக்கப்படும் என
எவரும் கருதவும் இல்லை.இந்திய அணிக்கு எதிரான ரி20 போட்டிக்கு டில்ஷான்தலைவராக நியமிக்கப்பட்டதனால் மஹேலமீது உள்ள நம்பிக்கையை
இலங்கை கிரிக்கெட்இழந்து விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.அந்தச் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதைப்போன்றே மஹேல தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார்.பாகிஸ்தானுடனான இரண்டு டெஸ்ட்போட்டிகளுக்கு தலைவராகச் செயற்படும்மஹேல அதன் பின்னர் அணியில் தொடர்ந்
தும் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் அடுத்த தலைவர் யார் என்ற ஊகத்தில் பல பெயர்கள் வெளிப்படுகின்றன. உப தலைவரராக உள்ளசங்கக்கார தலைவராகும் வாய்ப்பு அதிகம்உள்ளது. டில்ஷான் தவைராகலாம் என்றஎதிர்பார்ப்பும் உள்ளது.ரி20 மூலம் டில்ஷானின் தலைமைப்பணி பரீட்சிக்கப்பட்டது. முதல் போட்டிஎன்பதனால் அவர் மிகவும் பதற்றமாகஇருந்தார். சனத் ஜயசூரிய அவரை ஆசுவாசப்படுத்தினார்.இலங்கை அணியின் வெற்றிகள் பலவற்றுக்குகாரண கர்த்தாக்களாக விளங்கியமுரளி, வாஸ் ஆகிய இருவரில் ஒருவர்தலைவராக வேண்டும் என்ற விருப்பமும்இலங்கை ரசிகர்களிடம் உள்ளது. அவர்களில் ஒருவரைத் தலைவராக்கும் எண்ணம் இலங்கை கிரிக்கெட்டிடம் இல்லைஎன்பது அனைவரும் அறிந்த உண்மை.
ரமணி
மெட்ரோநியூஸ்
13 02 2009

Tuesday, February 10, 2009

ரஜினியை பாராட்டுவது எப்போது?


மூச்சை அடக்கி மூன்று வருட தியானத்தின் பின்னர் வெளியான நான் கடவுள் படம் ஓஹோ என்று ஓடுகிறது. ரசிகர்களின் நம்பிக்கையை பாலா நிறைவேற்றி உள்ளார். நான் கடவுள் படத்தைப் பாராட்டி ரஜினி கடிதம் எழுதி உள்ளார். நல்லதைப் பாராட்வதில்தப்பில்லை.
இப்படி ஒரு பாராட்டை ரஜினி பெறுவது எப்போது எங்கோயோ கேட்ட குரல் முள்ளும் மலரும் ஸ்ரீ ராகவேந்திரா போன்ற படங்களில் நடித்த ரஜினியைப் பார்த்து பாராட்ட ஆசையாகவுள்ளது.
தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டிய பொறுப்பு ரஜினியிடம் உள்ளது.
இளம் நடிகைகளுடன் ஆடிப்பாடி நடிப்பதை விடுத்து மனதில் நிற்கும் பாத்திரங்களில் ரஜினி நடிப்பது எப்போது?

Monday, February 9, 2009

தடம் மாறுகிறது காங்கிரஸ் தடுமாறுகிறது தி.மு.க


முத்துக்குமார் மூட்டி வைத்த தீ தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. அதனை அணைப்பதற்கு மாநில அரசும், மத்திய அரசும் பெரும் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன. இலங்கைத் தமிழ் மக்கள் படும் வேதனை கண்டு தமிழகமே பொங்கி எழுந்துள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என வசனம் எழுதியவர் பொங்கவும் இல்லை தூக்கத்தில் இருந்து எழவும் இல்லை.
இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும், அமைதி திரும்ப வேண்டும் என்ற கோஷத்துடன் விநோதமான கூட்டணிகள் உருவாகியுள்ளன. விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். அதேவேளை தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் என்பன விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரிக்கின்றன.
அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகம் புலிகளை எதிர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது. இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை பா
ரதீய ஜனதாக் கட்சி அடிக்கடி வலியுறுத்தி வருகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக எதிரெதிர்க் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இதில் அங்கம் வகிக்கின்றன. பழ. நெடுமாறன் இந்தப் பேரவையின் தலைவராகச் செயற்படுகிறார். தமிழ் இன ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பேரவை ஒன்றை அமைத்ததõல் திராவிட முன்னேற்றக் கழகம் தனிமைப்படுத்தப்பட்டது.
உலகத் தமிழர்களுக்கே தலைவன் தானென்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்பதை தமிழ் பேசும் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரவைக்கு போட்டியாக தமிழர் உரிமை பாதுகாப்பு பேரவை அமைத்ததுடன் திருப்திப்பட்ட முதல்வர், இலங்கைப் பிரச்சினைøயத் தீர்க்கும் பொறுப்பை மத்திய அரசிடம் விட்டு விட்டார்.
இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை விட விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலேயே இந்திய காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வந்த பின்னர் யுத்தம் நிறுத்தப்படும் என்ற கருத்து இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவியது. பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு வந்தார், கதைத்தார், சென்றார். யுத்தம் நிறுத்தப்படவில்லை. அதன் பின்னர் வன்னிப் பகுதியில் மிக மோசமான தாக்குதல் நடைபெறுகிறது.
மத்திய அரசு நடுங்கும் வகையில் முக்கியமான முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாகாமல் சாதுரியமாக காய் நகர்த்தி உள்ளார் முதல்வர் கருணாநிதி.
மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கி விட்டால் தமிழகத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நன்றாக அறிந்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 35 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் பல பிளவுகள் இருந்தாலும் தலைமைப் பீடம் எடுக்கும் முடிவை தமிழக காங்கிரஸ் ஒரு போதும் தட்டிக் கழித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை வேடம் போடுகிறது, நாடகமாடுகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள் உறுதியளித்தால் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸை எதிர்க்க, தூக்கி எறியத் தயாராக உள்ளது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கட்சிகளைச் சார்ந்த 39 உறுப்பினர்கள் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பாதுகாப்பேõம் என்ற உறுதிமொழியை இவர்கள் வழங்கினால் முதல்வர் கருணாநிதி பொங்கி எழுவார்.
விடுதலைப் புலிகளை ஜென்ம விரோதியாக கருதுபவர் ஜெயலலிதா. அவரது ஆலோசகர்களான சோ, சுப்பிரமணிய சுவõமி ஆகியோரும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் ஒத்த கருத்துள்ளவர்கள். ஜெயலலிதாவை முற்று முழுதாக நம்பியுள்ள வைகோ, இலங்கைத் தமிழ் மக்களுக்காக உணர்வுபூர்வமாக செயற்படுகிறார்.
மத்திய அரசையும் மாநில அரசையும் குறை கூறும் பாட்டõளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி மத்திய அமைச்சராக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களைக் கண்டு கொதித்துப் போயுள்ள டாக்டர் ராமதாஸ், மத்திய அரசில் இருந்து மகனை வெளியேற்றத் தயாராக இல்லை. இலங்கைத் தமிழ் மக்களின் அவலத்தைத் தீர்க்க உரத்துக் குரல் கொடுக்கும் இடதுசாரிகள் ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகத்தில் அரசமைக்கத் தயாராகி விட்டனர்.
தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடும் இலங்கைப் பிரச்சினையை மத்திய அரசு பெரிதுபடுத்தாது.
தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையில் தமது பலத்தைக் காட்ட முனையும் வேளையில் தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து தமது பலத்தைக் காட்டியுள்ளனர்.
மாணவர்களின் எழுச்சிப் போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றினால் நிலை குலைந்த தமிழக அரசு கல்லூரிகளை மூடிவிட்டது.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அடிப்படைக் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் தமிழ் வாழ்வதற்காகப் போராடிய திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழ் மக்களுக்காகப் போராடத் தயங்குகிறது.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டுமானால் ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும்தான் முக்கியமே தவிர போராட்டங்கள் அல்ல என்பதை தமிழக அரசு உணரத் தவறிவிட்டது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
08 02 2009

Sunday, February 8, 2009

நவரசத்தில் ஒன்று மறைந்து விட்டது.


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்குப் பின்னர் நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களைப் பரவசப்படுத்தியவர் நாகேஷ். நடிகர் திலகம் , மக்கள் திலகம், உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, அல்டிமேட்ஸ்டார் என்று பட்டப் பெயர்களுடன் நடிகர்கள் புகழ் பெற்றுக்கொண்டிருக்கையில் நாகேஷ் என்ற மூன்றெழுத்துடன் கம்பீரமாகப் பவனி வந்தவர்.
நகைச்சுவைத் திலகம், தாய் நாகேஷ் போன்ற பட்டப்பெயர்கள் இவருக்கு இருந்தாலும் நாகேஷ் என்ற மூன்றெழுத்தே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டது.
அவருடைய பெயருக்கும் உருவத்துக்கும் பொருத்தமேயில்லை.
குண்டுராவ் என்பது அவரது இயற்பெயர். பெயரில் மட்டும் தான் குண்டு உள்ளது. உருவம் சுண்டி விட்டால் விழுந்திடக் கூடியது
.
நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் அவரின் அடிமனதில் ஆழமாக ஊன்றியது. நடிகனாவது அவ்வளவு இலகுவானது அல்ல என்பதை தனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டார்.
நாகேஷை நகைச்சுவை நடிகனாக்கியது ரசிகர்கள்தான். காரியாலயங்களிலும் அமைச்சூர் நாடகங்களிலும் அவர் நடித்த போது ரசிகர்கள் சிரித்தார்கள். கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான் என ரசிகர்கள் முடிவு செய்தார்கள். ரசிகர்களின் விருப்பத்திற்காக நகைச்சுவை நடிகரானார் நாகேஷ்.
ஈரோடை அடுத்த தாராபுரம் என்ற ஊரில் உள்ள கன்னட இளைஞனான நாகேஷ் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு ஹைதராபாத்தில் ரேடியோ கொம்பனி ஒன்றில் வேலை பார்த்தார். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். கைநிறைய சம்பாதிக்காமல் வீடு திரும்பமாட்டேன் என்று சபதத்துடன் சென்னை சென்று இறங்கினார் நாகேஷ். கை நிறைய சம்பாதிப்பேன் என்ற சபதத்தில் நாகேஷ் வெற்றி பெற்றார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்ற அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்கள் அரங்கேறின. யாருக்காக அழுவது எனத் தெரியாது அழுதார்

புத்தம் புதிய காருடன் வீட்டுக்குச் சென்றபோது தாயார் மரணமாகி விட்டார். கன்னட பிராமண இனத்தைச் சேர்ந்த நாகேஷ் கிறிஸ்தவப் பெண்னை காதலித்து மணந்ததனால். குடும்பத்தவர் அவரை ஒதுக்கி விட்டனர். மகன் ஆனந்தபாபு போதைக்கு அடிமையானதால் இரண்டாவது முறை சோகத்தில் வீழ்ந்தார். மிகச்சிறந்த நடிகரான நாகேஷûக்கு மத்திய அரசும் தமிழக அரசும் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை. கலைமாமணி விருது தமிழக அரசால் நாகேஷுக்குக் கொடுக்கப்பட்டது. இரட்டை அர்த்த வசனம் பேசும் விவேக்குக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீர சிவாஜி போன்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நடிகர் திலகம் சிவாஜியின் மூலம் தமிழ் மக்கள் கண்டார்கள். அதேபோல் ஏழைப் புலவன், வறுமையில் வாடும் புலவன், தருமி எப்படி இருப்பான் என்பதை திருவிளையாடல் படத்தின் மூலம் வாழ்ந்து காட்டினார் நாகேஷ்.
சிவாஜியை மிஞ்சி நடிப்பதென்பது மிகவும் அபூர்வமான விடயம். திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்த நாகேஷ் நடித்த காட்சிகளில் சிவாஜியை விஞ்சி நடித்தார்.
ரயில்வே அலுவலகத்தில் எழுதுவினைஞராக பணிபுரிந்த போது நடிக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் நடிப்பதற்கு சந்தர்ப்பம் தேடி அலைந்தார். நாகேஷ் நடித்த நாடகம் ஒன்று எம்.ஜி.ஆரின் தலைமையில் நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் அந்த வயிற்று வலிக்காரனாக நடித்தவர் நன்றாக நடித்தார் என்று எம்.ஜி.ஆர். பாராட்டினார்.
தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் நாகேஷ் முதல் முதலில் திரை உலகில் அறிமுகமானார். சினிமா வாய்ப்பு தன்னைத் தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையினால் வேலையை விட்டுவிட்டு முழுநேர சினிமா நடிகனாக ஆசைப்பட்டார். தாமரைக்குளம் படம் தோல்வியடைந்தது. நாகேஷை தேடி தயாரிப்பாளர் யாரும் வரவில்லை. அப்போது அவருக்கு கை கொடுத்தவர்களில் பாலாஜி முக்கியமானவர். தான் நடிக்கும் படங்களில் நாகேஷûக்கு ஒரு வேடம் கொடுக்கும்படி கேட்பார். தனது சம்பளத்தில் 500 ரூபாவை நாகேஷுக்கு கொடுக்கும்படி பல தயாரிப்பாளர்களிடம் கேட்டõர். பின்னர் தயாரிப்பாளராக மாறிய பாலாஜி தனது படங்களில் நாகேஷுக்கு முக்கிய இடம் கொடுத்தார்.
வாலி, ஸ்ரீகாந்த், நாகேஷ் மூவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். கே. பாலச்சந்தரின் நாடகங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வந்தார். தனக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும்படி ஸ்ரீகாந்த் மூலமாக வேண்டுகோள் விடுத்தார் நாகேஷ்.
சினிமாவில் நடிப்பவர்களை நாடகங்களில் சேர்க்க முடியாது. முக்கியமான வேளைகளில் சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகையினால் சினிமாவில் நடிப்பவர்களை நாடகங்களில் நடிக்க சேர்க்க முடியாது என்றார் பாலச்சந்தர். நாகேஷ் துவண்டு விடவில்லை. பாலச்சந்தரின் மனம் மாறியது. அவரது நாடகங்களில் நாகேஷ் நடித்தார். நீர்க்குமிழி, நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் ஆகிய நாடகங்களில் நடித்த நாகேஷ் அøவ படமாக்கப்பட்ட போது அதே வேடங்களில் நடித்தார். பாலச்சந்தர், ஸ்ரீதர் ஆகிய இரண்டு இயக்குநர்களும் நாகேஷை புடம் போட்டு தங்கமாக்கினர்.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அவரது குணச்சித்திர நடிப்பு பார்த்தவர்களை கண் கலங்க வைத்தது. யாருக்காக அழுதான், நீர்க்குமிழி, சாது மிரண்டால் ஆகிய படங்கள் நாகேஷின் குணச்சித்திர நடிப்பு ஏனைய நடிகர்களுக்கு சவால் விட்டது.
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரண்டு பெரிய நடிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு தனிஇடத்தை அமைத்துக் கொண்டு முன்னேறினார்.
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் என ரசிகர் கூட்டம் இருப்பது போன்று அவர்களுக்கென தயாரிப்பாளர், இய க்குநர், கதாசிரியர் ஆகியோர் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளாக இருந்தனர்.
ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடனும் சிவாஜியுடனும் நடித்து தனது புகழைப் பரப்பினார் நாகேஷ். அடுத்தவர் மனதை புண்படுத்தாத, சக நடிகருக்கு அடிக்காத, இரட்டை அர்த்த வசனம் இல்லாத நகைச்சுவையை மக்கள் முன் அரங்கேற்றிய பெருமை நாகேஷையே சாரும்.
மகளிர் மட்டும் என்ற படத்தில் பிணமாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். நகைச்சுவை என்றால் நாகேஷ், நாகேஷ் என்றால் நகைச்சுவை என்பது தமிழ்த் திரையுலகில் எழுதப்படாத விதி. தில்லானா மோகனாம்பாள், கௌரவம் ஆகிய இரண்டு படங்களிலும் நாகேஷ் நகைச்சுவையுடன் கூடிய வில்லன் பாத்திரத்தில் நடித்தார்.
எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னர் நகைச் சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் கலக்கினார்.
நம்பியார், பாலாஜி, ராமதாஸ் ஆகிய வில்லன்கள் நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் தான் வில்லன். வில்லனான நம்பியார், பாலாஜி, ராமதாஸ் ஆகியோர் திருந்தி விட்டனர்.
தில்லானா மோகனாம்பாளை திவானின் விருப்பத்துக்கு இணங்க வைக்க படாதபாடுபட்டார்.
கௌரவம் படத்தில் தகப்பன் சிவாஜிக்கும் மகன் சிவாஜிக்கும் இடையில் பிரிவினையை உருவாக்கி அவர்களைப் பிரித்த பாத்திரம் கடைசிவரை மனதில் உள்ளது.
என்.எஸ். கிருஷ்ணன், மதுரம் ஜோடிக்குப் பின்னர் தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்பிப்பார்த்து ரசித்த ஜோடியாக நாகேஷ், மனோரமா விளங்குகின்றது. நாகேஷ், மனோரமா ஜோடி இல்லாத படங்கள் வெளியாவது மிகவும் அபூர்வம்.
சிவாஜி, எம். ஜி.ஆர், கமல், ரஜினி, அஜித்,விஜய் ஆகிய நான்கு தலைமுறை நடிகர்களுடன் சவால் விட்டு நடித்தவர். நாகேஷ் சிறந்த நடிகர் மட்டுமல்ல மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாத உண்மை.
நாகேஷûம் வீரப்பனும் இணைந்து பல நாடகங்களுக்கு கதை வசனம் எழுதினார்கள். அவர் சொந்தமாக நாடகக் கம்பனி நடத்தி வந்தார்.
சினிமாவில் நடித்தாலும் அவரது ஆவல் குறையவில்லை. மதுவுக்கு அடிமையாகி உயிருக்குப் போராடி எம்.ஜி.ஆரின் தயவினால் உயிர் பிழைத்தார். முதலீடு முடங்கி பணப் பிரச்சினை ஏற்பட்டபோதும் எம்.ஜி.ஆர். கைகொடுத்து உதவினார்.
மிக உயரத்தில் இருந்த போதும் யாருக்கும் எந்த இடையூறும் கொடுக்காது நடித்தார். திøரயில் சிரிக்க வைத்தவர் நிஜத்தில் அழ வைத்துவிட்டு சென்று விட்டார்.
வர்மா
மெட்ரோநியூஸ்
06 02 2009

Friday, February 6, 2009

ஒஸ்காரும் நாமும்


ஆங்கிலத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் அதியுயர் விருது ஒஸ்கார். தமது வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது ஒஸ்கார் விருதைப் பெற்று விட வேண்டும் என்ற ஆசை ஆங்கிலப் பட கலைஞர்களிடம் உள்ளது. ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்படுவதே கௌரவமாக கருதப்படுகிறது. விருது பெறாவிட்டாலும் ஒஸ்கார்வரை சென்ற பெருமையே போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆங்கிலப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒஸ்கார் விருது காலப் போக்கில் ஆங்கிலம் அல்லாத மொழிப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது. பல வருடங்களாக ஒஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஒஸ்கார் விருது இந்தியாவிலும் இலங்கையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதனால் இந்திய, இலங்கை ரசிகர்கள் ஒஸ்காரைப் பற்றி அதிகம் அறிவதற்கு ஆர்வப்பட்டார்கள். சிறு வயதில் இருந்தே இசையையும் ரஹுமானையும் பிரிக்க முடியாது என்பதை அவரை அறிந்தவர்கள் உணர்ந்தனர். தகப்பனின் வழிகாட்டலில் இசையை பயின்ற ரஹுமான் இளையராஜாவின் இசைக்குழுவில் சேர்ந்தார். 300க்கு மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படத் தின் மூலம் இந்திய தேசிய விருதை தட்டிச் சென்ற ரஹ்மான் இசை அமைப்பில் அதிக முறை தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள ரஹ்மானை ஸ்லம்டோக் மில்லியனர் என்ற ஆங்கிலப் படம் ஒஸ்கார் வரை ரஹ்மானை கொண்டு சென்றுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருது பெற்றதால் ஒஸ்கார் விருது அவருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவூட்டைச் சேர்ந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் விமர்சகர்கள் வழங்கும் விருதே கோல்டன் குளோப் எனப்படுகிறது.
ஸ்லம்டோக் மில்லியனர் படம் ஒஸ்கார் விருதின் 10 பிரிவுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் திரைக்கதை, பாடலாசிரியர், பாடகர் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றில் ஒஸ்கார் விருதை இப்படம் தட்டிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஹ்மானின் பெயர் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒசாயா என்ற பாடலை எழுதிய மாயா அருள் பிரகாசம் இவர் இலங்கையைச் சேர்ந்தவர். தற்போது லண்டனில் வசிக்கிறார். ஜெட் ஹோ என்ற ஹிந்திப் பாடலாசிரியர் குல்சார் ஆகியோரின் பெயர்களுடன் ரஹ்மானின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.விருதுகள் ரஹ்மானின் வீட்டுக் கதவை தட்டிய போதெல்லாம் அவற்றை அடக்கமாகவே பெற்றார். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற கொள்கையை அவர் என்றைக்குமே மறந்ததில்லை. ரஹ்மானின் அபிமானிகள் சற்று உணர்ச்சி வசப்பட்டவர்கள். அவர்கள் வாழ்த்துக் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
ரஹ்மானை தூக்கிப் பிடிக்கும் அவரது இலங்கை அபிமானிகள் இலங்கையரான மாயா அருள்பிரõகாசத்தை கண்டு கொள்ளவில்லை.மேற்கத்தைய இசையில் உச்சக் கட்டத்தை எட்டி இருக்கும் ரஹ்மானின் அண்மைய கால தமிழ்ப் பாடல்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை. ரோஜா, டூயட், ரிதம்,காதலன், ஜென்ரில்மேன் படப் பாடல்கள் கேட்டவுடனேயே மனதை வருடின. இன்றும் அப்பாடல்கள் மனதில் ரீங்காரமிடுகின்றன. அவரின் அண்மைக்கால தமிழ்ப் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போன்ற ஆவலை ஏற்படுத்தவில்லை.தமிழை தப்பில்லாமல் பாடும் ஹிந்திப் பாடகர்களும் தமிழ்ப் பாடகர்களும் இருக்கையில் தமிழ் தெரியாத உதித் நாராயணனை தமிழில் அறிமுகப்படுத்தி தமிழைக் கொல்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.ஹிந்திப் பாடகிகளான ஆஷா போஷ்ஸேயின் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்' சாதனா சர்க்கத்தின் கிருஷ்ணா, முகுந்தா மாதா உன் கோயிலில் (நான் கடவுள்) ஆகிய பாடல்களில் அவர்களின் தமிழ் உச்சரிப்பு அட்சரசுத்தமாக உள்ளன. தமிழ் தெரியாத ஹிந்தி பாடகிகள் தான் அப்பாடலைப் பாடினார்கள் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

தென்னாபிரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பிரதி இந்தியத் தூதுவராக பணியாற்றும் வி.காஸ்ஸ்வரூட் எழுதிய ஏ அண்ட் கியூ நாவலே ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படமாக உருவானது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பணியாற்றிய போது இந்த நாவலை அவர் எழுதினார். தனது நாவலை வெளியிட முயற்சி செய்தார். யாரும் கண்டு கொள்ளவில்லை. புதிதாக பதிப்பகம் தொடங்கிய ஒருவர் வீடு தேடிச் சென்று நாவலை
வெளியிட்டார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் பசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றது. காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசையும் இந்த நாவல் தட்டிச் சென்றது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 36 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டன.
அமிதாப்பச்சனின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குரோர் பதியை மனதில் வைத்தே ஏ அன்ட் கியூ நாவல் எழுதப்பட்டது. மும்பையின் சேரிப் பகுதியில் வசிக்கும் 18 வயதான இளைஞன் குரேரர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை வென்றார். அவனுக்கு பின்னணியில் இருந்து யாரோ மோசடி செய்ததாக சந்தேகப்படுபவர்கள் அவரை பொலிஸில் ஒப்படைக்கின்றனர். தனது அனுபவங்களின் மூலமே விடை சொன்னதாக அவர் விபரிக்கும் போது மும்பையில் உள்ள சில சமூக அவலங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மும்பையின் சேரிப்புற வாழ்
க்கை தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. மும்பையின் மிக மோசமான வாழ்க்கை முறையை உலகுக்கு காட்டி விட்டார்கள் என்று ஒரு சிலர் கொதித்தெழுந்துள்ளனர்.

ஏ அன் கியூ நாவலை எழுதிய விகாஸ்ஸ் வரூப் தமிழ் நாட்டு மர்மக்கதை எழுத்தாளர்களை தமிழ் வாணன், சுபா, ராஜேஸ்குமார், புஷ்பாதங்கத்துரை, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார்.குழந்தை சலீமாக நடித்த அஸார் இஸ்மாயில் லத்திகாவõக நடித்த ரூபைனா ஆகியோர் சேரிப் புறத்தில் வாழ்பவர்கள் படத்திலங் வரும் காட்சி அவர்களது நிஜ வாழ்க்கையாகவுள்ளது. உலகின் தொலைக்காட்சிகளும் பத்திரிகை நிருபர்களும் இவர்களின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.மதர் இந்தியா லகான் ஆகிய ஹிந்தியப் படங்கள்ஒஸ்கார் வரை சென்றாலும் ஸ்லம்டோக் மில்லியனர் போன்று பரபரப்பாகப் பேசப்படவில்லை.ரஹ்மானுக்கு இதுவரை கிடைத்த விருதுகளும் எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் விருதுகளும் தமிழ் இசைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரங்களில் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.
ரமணி
மெட்ரோநியூஸ்
06 02 2009

Thursday, February 5, 2009

அருகில்வந்து தேனாக இனிக்கும் குரல்


ஆந்திரப் பிரதேசத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அந்த வீட்டில் சேஷகிரி அம்மாள் மனமுருகி பக்திப் பாடல்களைப் பாடுவார். அவரின் மகனான ஸ்ரீநிவாஸ் ஹிந்தி திரைப்படப் பாடல்களில் மனதைப் பறிகொடுத்தார். மெஹ்மூத், முகம்மது ரஃபி, மன்னாடே, முகேஷ், லதா மங்கேஸ்கர் ஆகியோரின் பாடல்களை பாடிப் பரவசமடைந்தார்.
ஸ்ரீநிவாஸின் கலை உணர்வை கண்ட தாய்மாமனான கிடாம்பி கிருஷ்ணமாச்சாரி, இசைத்துறையில் அவரை ஊக்குவித்து 12 வயதில் மேடையேற்றிப் பாட வைத்தார். பாடகனாகும் ஆசையில் சினிமா நாடகம் என்று மகன் சுற்றுவதைக் கண்ட தகப்பன் முதலில் படித்து பட்டம் வாங்கு என்று கட்டளையிட்டார். தகப்பனின் விருப்பப்படி பி. கொம் படித்து விட்டு பாடகனாகும் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்தார்.
ஸ்ரீநிவாஸ் கலைத்துறையில் வெற்றி பெறுவாரா என்று அறிவதற்காக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற சோதிடர் ஒருவரிடம் மகனை அழைத்துச் சென்றார் தாயாரான சேஷகிரி அம்மாள்.
ஸ்ரீநிவாஸின் சாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்த ஜோதிடர் உதட்டைப் பிதுக்கினார். கலைத்துறையில் இந்தப் பிள்ளை ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டான் என்று அடித்துக் கூறினார் சோதிடர். சோதிடரின் கூற்றால் தாயார் மனம் கலங்கினார். ஆனால் ஸ்ரீநிவாஸன் அசரவில்லை.
நீங்கள் சொல்லும் பலன்கள் எல்லாம் பலிக்குமா என்று ஜோதிடரைக் கேட்டார் ஸ்ரீநிவாஸ்.
பெரும்பாலும் பலிக்கும் சிலவேளை பலிக்காமலும் போகலாம் என்று பதிலளித்தார் சோதிடர்.
என் விஷயத்தில் உங்கள் சோதிடம் பலிக்காமல் போகலாம் என்று ஸ்ரீநிவாஸ் கூறினார்.
ஸ்ரீநிவாஸின் ஆர்வத்தைக் கண்ட சோதிடர் அவரை வாழ்த்தி அனுப்பினார்.
ஸ்ரீநிவாசனின் தகப்பனான பணித்திர சுவாமியின் குடும்ப நண்பர் வீணை வித்துவானான ஈமனி சங்கர சாஸ்திரி, ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். மகனின் எதிர்கால ஆசையை நிறைவேற்றுவதற்காக ஈமனி சங்கர சாஸ்திரியிடம் மகனை அழைத்துச் சென்றார் தகப்பன்.
சின்ன வயதில் ஸ்ரீநிவாஸன் பாடியதைக் கேட்ட ஈமனி சங்கர சாஸ்திரி வளர்ந்து விட்ட ஸ்ரீநிவாஸை பாடும்படி கூறினர். முகமது ரஃபியின் பாடலை பாடினார் ஸ்ரீநிவாஸின் அந்தக் குரலைக் கேட்டதும் ஈமனி சங்கரசாஸ்திரி மெய்சிலித்தார்.
இவனுடைய வருங்காலம் நல்லதாக இருக்கும். இவனை இங்கேயே விட்டு விட்டு ஊருக்குப் போங்கள் என்றார்.
1952 ஆம் ஆண்டு மிஸ்டர் சம்பத் என்ற படத்தை ஜெமினி அதிபர் வாசன் தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்தார். தமிழில் கொத்தமங்கலம் சுப்புவும், ஹிந்தியில் மோதிலாலும் பிரதான பாத்திரத்தில் நடித்தனர். மிஸ்டர் சம்பத் ஹிந்தி படத்தில் பெண் குரல்களுடன் இணைந்து சில துண்டுப் பாடல்களைப் பாடினார் ஸ்ரீநிவாஸன்.
ஸ்ரீநிவாஸின் குரலைக் கேட்டவாசன் மெய் மறந்தõர். சிறந்ததொரு பின்னணிப் பாடகரை அறிமுகப்படுத்தியதற்காக ஈமனி சங்கர சாஸ்திரிகளை பாராட்டினார். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் என்ற பெயர் பி. பீ. ஸ்ரீநிவாஸ் என்று அழைக்கப்பட்டது. பி. பீ. ஸ்ரீநிவாஸ் என்றால் பிளேபாக் கிங்கர் ஸ்ரீநிவாஸ் என்று மிஸ்டர் சம்பத்தின் ஒலிப்பதிவாளர் ஜீவா குறிப்பிட்டார்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ரீநிவாஸின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி. ஆருக்கும் ரி. எம். சௌந்தரராஜன் பின்னணிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளை ஜெமினிகணேசனுக்கு ஏ. எம். ராஜா பின்னணி குரல் கொடுத்தார்.
1959 ஆம் ஆண்டு வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜெமினி கணேசனுக்காக இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்ற பாடலை முதன் முதலாகப் பாடினார் பி. பீ. ஸ்ரீநிவாஸ். ஜி. ராமநாதனின் இசையில் உருவான இப்பாடலை பி. சுசீலாவுடன் இணைந்து பாடினார் ஸ்ரீநிவாஸ்.

ஜெமினி கணேசனின் குரலுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது ஸ்ரீநிவாஸின் குரல். கப்பலோட்டிய தமிழன் படத்துக்காக மீண்டும் ஒரு முறை ஜெமினி கணேசனுக்காக ஸ்ரீநிவாஸைப் பாடச் செய்தார் இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன். காற்று வெளியிடை கண்ணம்மா என்ற பாரதியின் இலக்கிய வரிகள் ஸ்ரீநிவாஸின் குரலில் தேனாக இனித்தது.
ஸ்ரீநிவாஸின் குரல் ஜெமினி கணேசனுக்கு பொருத்தினாலும் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியை உடைக்க முடியவில்லை. மிஸ்ஸியம்மா, களத்தூர் கண்ணம்மா, கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் பாடல்கள் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியில் ஜொலித்தன.
உத்தமி பெற்ற ரத்தினம் படத்தில் எஸ். வேணுவின் இசை அமைப்பில் தேடிடுதே வானமிங்கே, பாதை தெரியுது பார் படத்தில் எம். வி. ஸ்ரீநிவாஸன் இசை அமைப்பில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே, பொன்னித் திருநாள் படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் வீசுதென்றலே வீசு விடிவெள்ளி படத்தில் ஏ. எம். ராஜாவின் இசையில் பண்ணோடு பிறந்தது தாளம். மன்னாதி மன்னனில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் நீயோ நானோ யார் நிலவே போன்ற பாடல்கள் ஸ்ரீநிவாஸனுக்கு பெருமை சேர்த்தன.
பி. பி. ஸ்ரீநிவாஸனின் வாழ்க்கையை மாற்றிய பாடல் 1961 ஆம் ஆண்டு வெளியானது. ஏ. வி. எம். தயாரித்த பாவ மன்னிப்புப் படத்தில் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை பி. பீ. ஸ்ரீநிவாஸ் பாடினார். கண்ணதாசனின் அந்தப் பாடல் ஸ்ரீநிவாஸின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியது.
ஜெமினிகணேசனின் குரலுக்கு ஏ. எம். ராஜாவின் குரல்தான் பொருத்தம் என்று இருந்த வேளையில் காலங்களில் அவள் வசந்தம் பாடலை ஸ்ரீநிவாஸன் பாடினால் நன்றாக இருக்கும் என்று மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் கருதினார். இயக்குனர் பீம்சிங்குக்கும் அதே கருத்து இருந்தது. தங்கள் கருத்தை இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கூறினார்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஸ்ரீநிவாஸை பாடச் செய்யுங்கள் என்றார் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. காலத்தால் அழியாத தமிழ்த் திரைப்பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், ஸ்ரீநிவாஸன் கூட்டணி தமிழ்த் திரை இசையை தம் கைகளில் எடுத்தது.
ஸ்ரீநிவாஸின் குரல் ஜெமினி கணேசனுக்கு பொருத்தினாலும் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியை உடைக்க முடியவில்லை. மிஸ்ஸியம்மா, களத்தூர் கண்ணம்மா, கல்யாணப் பரிசு போன்ற வெற்றிப் படங்களின் பாடல்கள் ஜெமினி, ஏ. எம். ராஜா கூட்டணியில் ஜொலித்தன.
உத்தமி பெற்ற ரத்தினம் படத்தில் எஸ். வேணுவின் இசை அமைப்பில் தேடிடுதே வானமிங்கே, பாதை தெரியுது பார் படத்தில் எம். வி. ஸ்ரீநிவாஸன் இசை அமைப்பில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே, பொன்னித் திருநாள் படத்தில் கே. வி. மகாதேவன் இசையில் வீசுதென்றலே வீசு விடிவெள்ளி படத்தில் ஏ. எம். ராஜாவின் இசையில் பண்ணோடு பிறந்தது தாளம். மன்னாதி மன்னனில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் நீயோ நானோ யார் நிலவே போன்ற பாடல்கள் ஸ்ரீநிவாஸனுக்கு பெருமை சேர்த்தன.
பி. பி. ஸ்ரீநிவாஸனின் வாழ்க்கையை மாற்றிய பாடல் 1961 ஆம் ஆண்டு வெளியானது. ஏ. வி. எம். தயாரித்த பாவ மன்னிப்புப் படத்தில் காலங்களில் அவள் வசந்தம் என்ற
பாடலை பி. பீ. ஸ்ரீநிவாஸ் பாடினார். கண்ணதாசனின் அந்தப் பாடல் ஸ்ரீநிவாஸின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தியது.
ஜெமினிகணேசனின் குரலுக்கு ஏ. எம். ராஜாவின் குரல்தான் பொருத்தம் என்று இருந்த வேளையில் காலங்களில் அவள் வசந்தம் பாடலை ஸ்ரீநிவாஸன் பாடினால் நன்றாக இருக்கும் என்று மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் கருதினார். இயக்குனர் பீம்சிங்குக்கும் அதே கருத்து இருந்தது. தங்கள் கருத்தை இருவரும் சேர்ந்து தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கூறினார்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஸ்ரீநிவாஸை பாடச் செய்யுங்கள் என்றார் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. காலத்தால் அழியாத தமிழ்த் திரைப்பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், ஸ்ரீநிவாஸன் கூட்டணி தமிழ்த் திரை இசையை தம் கைகளில் எடுத்தது.காலங்களில் அவள் வசந்தம் பாடலின் மூலம் ஒரே இரவில் ஸ்ரீவாஸின் மதிப்பு உயர்ந்துவிட்டது. ஜெமினி ராஜா என்ற கூட்டணி மறைந்து ஜெமினி, ஸ்ரீனிவாஸ் கூட்டணி உருவானது. சௌந்தரரராஜன் பாடும் போது அப்பாடல் எம்.ஜி.ஆரீன் படமா, சிவாஜியின் படமா என்று கூறி விடலாம். ஸ்ரீநிவாஸ் பாடும்போது அது ஜெமினியின் படம்தான் என்று அடித்துக் கூறி விடலாம்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் இசை அமைப்பில் பீ.பீ. ஸ்ரீநிவாசுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் ஒரு புதிய உணர்ச்சியை ஏற்படுத்தின.
ஸ்ரீதரின் கை வண்ணத்தில் உருவான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் ஸ்ரீநிவாஸ்
பாடிய நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பாடல் உருகாத உள்ளத்தையும் உருக வைத்தது.

ஜெமினி சாவித்திரி ஆகியோரின் கால்ஷீட் கிடைத்ததும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விரும்பினார் தயாரிப்பாளர் அவசர அவசரமாக பாடலுக்கு இசை அமைத்தார் விஸ்வநாதன். அன்று மாலை சேலம் செல்வதற்காக நீலகிரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய ஸ்ரீநிவாஸ் திட்டமிட்டிருந்தார்.
விஸ்வநாதன் பாடலுக்கு இசையமைத்த பின்னர் ஸ்ரீநிவாஸ் ரயிலேறி விட்டார். அந்தப் பாடலை ஸ்ரீநிவாஸ் பாடினால் தான் பாடல் சிறப்பாக இருக்கும் என்று விஸ்வநாதன் கூறினார். வேறு யாரை யாவது பாடச் சொல்லலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறினார்கள்.
ஸ்ரீநிவாஸின் குரல் வாகு, பாணி எல்லாவற்றையும் மனதில் வைத்துத்தான் பாடலுக்கு இசையமைத்தேன். வேறு யாராவது
பாடுவதாக இருந்தால் புதிதாகத்தான் இசையமைக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னர் கூறினார்.
நல்ல மெட்டை கைவிட தயாரிப்பாளரும் தயாராக இல்லை. ஜெமினி சாவித்திரி ஆகியோரின் கால்ஷீட் கிடைப்பது கஸ்டம் என்றபடியால் வேறுஒருவர் பாட இசை அமைத்து படப்பிடிப்பும் முடித்து விட்டார்கள். ஸ்ரீநிவாஸுக்கு நேரம் கிடைத்தபோது படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ஸ்ரீநிவாஸ் பாட இசையமைத்தார் விஸ்வநாதன்.
துள்ளித் திரிந்த பெண்ணொன்று என்ற அப்பாடல் இன்றும் நெஞ்சில் துள்ளி விளையாடுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமாருக்காக 180 படங்களில் பாடியுள்ளார் ஸ்ரீநிவாஸ். சிவாஜி எம்.ஜி. ஆர் நடித்த படங்களில் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். ஆனால், சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் அவர் பாடிய பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சிவாஜிக்காக நான் சொல்லும் ரகசியம் படத்தில் கண்டேனே உன்னை புனர் ஜென்மம் படத்தில் எங்கும் ??? இல்லை ஆகிய பாடல்களைப் பாடி உள்ளார். எம்.ஜி.ஆருக்கும், மன்னாதி மன்னன் படத்தில் நீயோ நானோ யார் நிலவே, திருடாதேயில் என் அருகே நீ இருந்தால், பாசம் படத்தில் பால் வண்ணம் பருவம் கண்டேன் ஆகிய பாடல்களைப் பாடி உள்ளார்.
எட்டு மொழிகளில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கவிதைகள் எழுதி உள்ளார். நான்கு படத்தில் இவர் எழுதிய இரண்டு உருதுமொழிப் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
நிலவில் மனிதன் காலடி வைத்ததும் ஆங்கிலப் பாடல் எழுதி இசையமைத்து எஸ் ஜானகியுடன் பாடி இøத் தட்டை வெளியிட்டார். அப்பாடலைக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனும் நிலவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ரோங்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள்.
1986 ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் படத்தில் அவர் பாடிய தோல்வி நிலை என நினைத்தால் எனும் பாடல் இன்றும் எழுச்சிப் பாடலாக ஒலிக்கிறது.
ரமணி
மித்திரன் 25,01/01,02/08,02 2009

Sunday, February 1, 2009

விஜயகாந்த் பக்கம் சாய்கிறது காங்கிரஸ்


காங்கிரஸ் கட்சி இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வளைந்து நெளிந்து செல்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள்களை எல்லாம் புறந்தள்ளி வருகிறது.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்படி தமிழகக் கட்சிகள் அனைத்தும் பலமுறை பல வழிகளிலும் வேண்டுகோள் விடுத்துக் களைத்து விட்டன. இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவித ஆக்கபூர்வமான முயற்சியைக் கூட இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை.
தமிழக அரசின் மிரட்டல் கெஞ்சலாக தாழ்ந்தபோதும் கண்டு கொள்ளவேயில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. கட்சி பேதமின்றி தமிழக அரசியல் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் புறக் குடத்தில்வார்த்த நீர் போல வீணாகிப் போனது.
பிரதமர் மன்மோகன் சிங் நல்லவர், வல்லவர். காங்கிரஸ் தலைவி இரக்கமுள்ளவர் என்று கனவு கண்ட தமிழக முதல்வர் கருணாநிதி நிஜத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார் போல் தோன்றுகிறது.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா, தமிழக அரசியல் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வேண்டுகோள் விடுத்தது, சட்டமன்றத் தீர்மானம் எல்லாம் வெற்றுக் கோஷங்களாக அடங்கிப் போயின.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாம் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. இடதுசாரிகள், பாட்டாளி மக்கள்கட்சி ஆகியன கூட்டணியில் இப்போது இல்லையென்று தெரிந்து கொண்டும் காங்கிரஸுடன் கரம் கோர்க்க முதல்வர் கருணாநிதி தயாராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கணக்கு வேறு விதமாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.

ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து பட்ட அவமானங்கள் போதும் என்பதால் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடம் விரும்பவில்லை.
விஜயகாந்துடன் கூட்டணி சேரும் விருப்பம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.
விஜயகாந்தின் பிரதிநிதியான பண்ருட்டி ராமச்சந்திரன் டில்லியில் முகாமிட்டு முக்கிய தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். காங்கிரஸ் கட்சி விலகிச் செல்வதை உணர்ந்த தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய மத்திய அரசின் விருப்பத்துக்கு மாறாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது வெளிப்படுவதும் பின்னர் அடங்கிப் போவதும் வழமை.
இவ்விடயத்தில் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன ஓரணியில் உள்ளன. விடுதலைப்புலிகளை ஜென்ம விரோதிகளாகக் கருதும் ஜெயலலிதாவின் நிழலில் ஒதுங்கியுள்ளார் வைகோ.
இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. கருணாநிதி தலைமையில் ஒன்று சேர்வதற்கு டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோர் தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குவதற்கு தயங்கி நின்றார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் புரியத் தொடங்கியதால் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள்கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகியன ஓரணியில் நின்று தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெறுவது நிச்சயம்.
காங்கிரஸ், விஜயகாந்த் இணைப்பு உறுதி என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி கை கழுவி விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் புதியதொரு கூட்டணி உருவாகும். காலத்தின் கட்டாயம் காரணமாக வைகோவும் அதில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது கூட்டணி இல்லாது தனித்து இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி அணியும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றிணையும் ஒரு நிலை உருவாகும்.
இந்நிலையில் இலங்கை தமிழ் மக்கள் மீதான அனுதாப அலையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கவர்ச்சியான திட்டங்களும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றன.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
25 01 2009