Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Monday, November 6, 2023

இக்கட்டான நிலையில் இலங்கை கிறிக்கெற்


 உலகக்கிண்ண  கிரிக்கெற் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. உலகக்கிண்ண சம்பியன்களுக்கு நெருக்கடி கொடுத்த இலங்கை கிறிக்கெற் அணி நெருக்கடியில் சிக்கி உள்ளது. உலகக்கிண்ணத்தை வெல்வதே  விளையாட்டு வீரர்களின்  இலட்சியம்.

இலங்கையின்  உலகக்கிண்ண சம்பியன் கனவு 1999 ஆம் ஆண்டு நனவானது. அதன்  பின்னர் கிரிக்கெற்  வைரஸ் இலங்கை ரசிகர்களப் பீடித்தது. கிறிக்கெற்  ஜாம்பவான்களைக்கொண்ட கிரிக்கெற் அணிகள்  இலங்கையிடம் வீழ்ந்தன. கிரிக்கெற்றைச் சொல்லொக் கொடுத்தவர்களுக்கு இலங்கை பாடம் எடுத்தது.

இலங்கை கிரிக்கெற் அணியின் சம்பியன்கள்  ஒருவர் பின்  ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர்  அவர்களின் இடத்தை இடத்தை  நிரப்புவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ஆனாலும்,  இலங்கை பல  போட்டிகளில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ணத் தொடருக்காக ஏனைய அணிகள் தயாரான  போது சரியான  ஒரு  அணியைத் தயார்ப்படுத்த இலங்கை கிரிக்கெற் தவறிவிட்டது. உலகக் கிண்ணத் தொடர் நெருங்கிய வேளையில்  கப்டன் மாற்றப் பட்டார். உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு அணியாகப் போட்டியிடுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இல்லாதது, அத்தகைய போட்டிகளின் தோல்விகளை நேரடியாகப் பாதித்தது.

  வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமிர, மதிஷ பத்திரன, லஹிரு குமார ஆகியோர்  காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு  மாற்ரு வீரர்கள் எவரும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 

 னிப்பட்ட பழிவாங்கல்கள் மற்றும் புறக்கணிப்பு காரணமாக அஞ்சலோ மெயூஸ், தினேஷ் சந்திமால் போன்ற மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை.இலங்கையின் தோல்விக்கு இவை முக்கிய காரணமாகும்.

தற்போதைய இலங்கை கிறிக்கெற் செயற்குழு , தெரிவுக்குழுவின் செயற்பாடுகளின் படி 2040 இல் கூட உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாத இக்கட்டான நிலையில் உள்ளதாக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தினார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் பணத்தை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும், விளையாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்தாமல், தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காகவும் செயற்குழு பயன்படுத்துகின்ற சூழ்நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவுவுஸ்திரேலியாவில் ரி20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற ஊழல்களும், எல்.பி.எல் போட்டித் தொடரில் அந்நாட்டுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. உலகக் கிண்ணம் போன்ற பொதுவான லட்சியங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு, ஆலோசகர்கள் மற்றும் தேர்வுக் குழுவும் எல்.பி.எல் போட்டிகளுக்கு எப்படி ஒப்புக்கொண்டன? எல்.பி.எல் போட்டியை நடத்த வேண்டுமா என அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை அணியின்  மோசமான தோல்விக்குப் பொறுப்பேற்று  இலங்கை கிரிக்கெட் சபை  உடனடியாக பதவி விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.    இலங்கை கிரிக்கெற் சபைக்கும், விளையாட்டு அமைச்சருக்கும் இடையே  பல பிரச்சனைகள்  உள்ளன. அவை  பூதாகரமாக வெடிக்க  உள்ளன.

    தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் மாதாந்த சம்பளமாக 30000 அமெரிக்க டொலர், ஆலோசகர் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன 20,000 அமெரிக்க டொலர்,    உதவி பயிற்சியாளர் நவீத் நவாஸ் 14,000 அமெரிக்க டாலர்,    முழு பயிற்சி ஊழியர்களுக்கும் மாதந்தோறும் 120,000 அமெரிக்க டாலர்கள் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால்,  கிறிக்கெற்றில் எந்தவிதம்மான  முன்னேற்றமும்  இல்லை. ஜயவர்த்தன இருப்பதால், தலைமைப் பயிற்சியாளர் சில்வர்வுட் வெறும் கைப்பாவை போல் இருக்கிறார் என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது.

  இலங்கை கிறிக்கெற்  சபை  தேசிய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய காலகட்டம் இருந்தது. , ஆனால், அந்த சகாப்தத்தில் இலங்கை நான்கு உலகக் கிண்ண  இறுதிப் போட்டிகளில் விளையாடியது - ஒன்றில்சம்பியனானது.  ஏனென்றால் அதற்குள் முன்னுரிமை தரமானது. கிரிக்கெட், உருவாக்கப்படும் பணத்தின்   அளவு அல்ல.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்.  போராடித் தோற்பது வெற்றிக்குச் சமானமானது. போராடாமல்  தோற்பது அவமானமானது.  இரண்டு முக்கிய தொடர்களில்  இந்தியாவுக்கு எதிராக  50+  ஓட்டங்கள் என்பது மிக  மோசமான  பெறுபேறாகும்.

கிறிக்கெற் என்பது ஒரு விளையாட்டாக இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு மதமாக இருக்கும் நாட்டில் எப்படி கிறிக்கெற்  இந்த முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது என்று ஒருவர் ஆச்சரியப்படுவார். இலங்கை கிரிக்கெட்   விளையாட்டு அமைப்பு என்ற நிலையைக் கடந்து விட்டது.  இப்போது ஒரு வணிகத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுகிறது. 

இலங்கை  கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  மற்றயவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது.  கிறிக்கெற்றை நேசிக்கும்  இலங்கை ரசிகர்களின்  எதிர் பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

Friday, September 15, 2023

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் சர்வதேச விசாரணை


 இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை வெளிக்கொண்டுவர சர்வதேச  விசாரணை தேவை என  விடுக்கப்பட்ட கோரிக்கைகளை  இலங்கை அரசாங்கம் கடுமையாக  மறுத்தது. உள்ளகப் பொறிமுறையில் விசாரணை செய்யப்போவதாக அறிவித்த இலங்கை இன்றுவரை  ஒரு அடி கூட முன்னுக்கு நகரவில்லை.

ஈஸ்டர் தின தொடர் தாக்குதல்கள் தொடர்பாக சனல்4 வெளிஒயிட்ட காணொளி இலங்கை அரசியலில் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. சனல் 4 வெளியிட்ட ஆவணப் படம்  பொய் என அன்றைய ஆட்சியாளர்கள்  கூறியுள்ளனர். அதேவேளை சர்வதேச  விசாரணைதேவை என்ற  குலலும்  ஓங்கி ஒலிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தங்கள் கடமையை புறக்கணித்த உயர் போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், தற்போதைய உளவுத்துறை தலைவர் சுரேஷ் சல்லே சம்பந்தப்பட்ட சதி என்று பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சேனல் 4 ஆவணப்படம் விசில் புளோயர்களின் குற்றச்சாட்டுகளுடன் வெளிப்படுத்தியதை அடுத்து கார்டினலின் புதிய கோரிக்கைகள் வந்துள்ளன.

2019 தேர்தலில் ராஜபக்சேவை ஆதரித்த கார்டினல் மால்கம் ரஞ்சித், தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் கோரி வருகிறார். ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளின் போது மூன்று சொகுசு ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 269 பேர் கொல்லப்பட்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 310 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய உளவுத்துறை தலைவர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தொழில்முறை அலட்சியம் காரணமாக பெயரிடப்பட்ட மற்றொரு சிரேஷ்ட அதிகாரி தேசபந்து தென்னகோன் ஆகியோரை புதிய விசாரணை முடியும் வரை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு கர்தினால் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பான பல விசாரணைகளின்படி, ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு 17 நாட்களுக்கு முன்னர், அண்டை நாடான இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்பு விடுத்த எச்சரிக்கைகளுக்கு இலங்கை அதிகாரிகள் செயல்படத் தவறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்லார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  ஆணையாளர்  செயித் அல் ஹுசைன்  இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து வ்ர்ளியிட்ட அரிக்கையில்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அதேவேளை  ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக சனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய காதினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்றும், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காதினால் அவர்கள் அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம் என்றும், அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருப்பதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் உட்பட மொட்டின் அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள் என்றும், இன்றும் நீதி கிடைக்காததால், காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை மேலும் அவமதிக்காமல், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்   மேலும் தெரிவித்தார்.

சர்வதேச விசாரனைக்கு தமிழ் மக்கள் அழைப்பு விடுத்தபோது அதனைத் தட்டிக்  கழித்தச்வர்கள்,  இன்ரு சர்வதேச விசாரனை தேவை  என  முழக்கமிடுகின்றனர்.சர்வதேசத்தின் தலையீடு இல்லாம  எதனியும் செய்ய முடியாது என்பதை  சில அரசியல்வாதிகளும், ஏனையவர்களும்  இப்போதுத்சான்  புரிந்துகொண்டார்கள்.

Wednesday, August 30, 2023

தொட்டு விடும் தூரத்தில் நிலவு


 நிலவைப் பற்றிய பல கர்ணபரம்பரைக் கதைகள்  தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி  உணவு கொடுக்கும் நடைமுறை இன்றைக்கும்  உள்ளது.

 நிலவை ஆய்வு செய்வதற்கு ரஷ்யா முதலில் களம்  இறங்கியது.ரஷ்யாவுடன்  போட்டி  போடும் அமெரிக்காஅவின்  பார்வையும் நிலவின்  பக்கம் திரும்பியது. ரஷ்யாவும், அமெரிக்காவும்  பல தோல்விகளைச் சந்தித்தன. நிலவில் மனிதனை இறக்கி  அமெரிக்கா புதிய வரலாறு படைத்தது. ரஷ்யா   அமெரிக்கா ஆகிய இஅரண்டு வல்லரசுகலும் நிலவைத் தேடிப் போனதால்  இன்னொரு வல்லரசான சீனாவும் நிலவை ஆராயப் புறப்பட்டது. நான்காவது நாடாக  இந்தியாவும்  அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

1959 செப்டெம்பர் 13 ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலமே முதலில் நிலவைச் சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும். விண்வெளி ஆய்வுகள் மறைமுக பனிப் போராக  இருந்தது.    சோவியத் ஒன்றியத்தின் 'ஸ்புட்னிக் 1' எனும் முதன் முறையாக மனிதரால் தயாரிக்கப்பட்ட கலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி புவியைச் சுற்றிவர செலுத்தப்பட்டதும், 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி அமெரிக்க அப்போல்லோ 11 விண்கலத்தின் முதல் நிலவு தரையிறக்கம் ஆகியவை இந்தத் துவக்கக்காலத்தின் எல்லைகளாக பலமுறை கருதப்பட்டன. சோவியத் விண்வெளி திட்டமானது அதன் பல மைல்கற்களை சாதித்தது, அதன் முதல் உயிருள்ள ஜீவராசியை 1957 ஆம் ஆண்டு புவி சுற்றுப்பாதையில் இட்டது, முதல் விண்வெளியில் பயணித்த மனிதர் (யூரி காகரின் வாஸ்டாக் 1 இல் பயணித்தார்) 1961 ஆம் ஆண்டிலும், முதல் விண்வெளி நடை 1965 ஆம் ஆண்டிலும் (அலெக்ஸி லியோனவ்னினால்) 1966 ஆம் ஆண்டில் மற்றொரு வானுலக முக்கியப் பகுதியில் தானியங்கிமுறை தரை இறங்கியது மற்றும் 1971 ஆம் ஆண்டின் முதல் விண்வெளி நிலையத்தின் துவக்கம் (சல்யூட் 1) போன்றவற்றை அதில் உள்ளிட்டிருந்தது.

1990 ஆம் ஆண்டுகளிலிருந்து தனியார் துறையும் விண்வெளி சுற்றுலாவாண்மையை மேம்படுத்தவும் அதன் பிறகு நிலவிற்கான தனியார் விண்வெளி பயணத் திட்டத்தையும் துவங்கின

2000 ஆம் ஆண்டுகளில், சீனா மனிதர் இடம் பெற்ற விண்வெளி பயண திட்டத்தை வெற்றிகரமாக துவங்கியது. அதே போல, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ,இந்தியா ஆகியவையும் எதிர்காலத்தில்  ம்மனிதர்களை விண் வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன.     அமெரிக்காவின்  பார்வை இப்போது செவ்வாயை நோக்கித் திரும்பி உள்ளது.   ] சீனா, ரஷ்யா, ஜப்பான் , இந்தியா ஆகியவை 21 ஆம் நூற்றாண்டின் போது நிலவிற்கு மனிதரை அனுப்பும் பணித் திட்டத்திற்காக பரிந்துரைத்துள்ளன. அதே போல ஐரோப்பிய ஒன்றியமும் 21 ஆம் நூற்றாண்டின் போது நிலவு ,செவ்வாய் ஆகிய  இரண்டிற்கும் மனிதரை அனுப்பும் பணித் திட்டத்திற்கு பரிந்துரைத்துள்ளன

இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் ஏனைய நாடுகள் செலவிட்ட திகையை விட  முகக்கு குறைந்ததாகும். இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

இஸ்ரோவின் இந்த சாதனை முயற்சியைத் தான் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுள்ளனர்.

சந்திரயான்௩ விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் நிலவின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக இணையத்தில் நிலா தொடர்பான தேடல்கள் அதிகரித்துவருகின்றன. சந்திரன் தொடர்பான உங்களுக்குத் தெரியாத பத்து விஷயங்களை இங்கே சொல்கிறோம்.  ந்திரயான்௩ செயற்கைக்கோள் சென்றடைந்த  நிலவின் தென் துருவப் பகுதி மிகவும் வியப்பை ஏற்படுத்தும் பகுதியாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கூற்றின்படி, இந்த பகுதியில் பல ஆழமான குழிகளும் மலைகளும் உள்ளன என்றும், அவற்றைத் தாண்டி, சூரிய ஒளி பல பில்லியன் ஆண்டுகளாக அந்த நிலப்பரப்புகளை அடையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

விண்வெளியில் இந்தியா புதியதொரு சரித்திரத்தைப் படைத்துள்ளது. உலக நாடுகளின் கவனம் இந்தியாவின்  பக்கம் திரும்பி உள்ளது.

Wednesday, August 16, 2023

அரசியல்வாதிகளை உசுப்பிவிட்ட 13 ஆவது திருத்தல் சட்டம்


 


இலங்கை அரசியலில் அண்மைக்
  காலமாக  13  ஆவது திருத்தச்  சட்டம்  பேசுபொருளாகி உள்ளது. ஜனாதிபதி ரணில் 13 ஐ கையில் எடுத்துள்ளார்.அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து  நிறைவேற்ற  வேண்டும்  என்பதில் உறுதியாக  இருக்கிறார். 1987 ஆம் ஆண்டே தாமிழளர்களாலும்  ,  சிங்களவர்களாழும்  நிராகரிக்கப்படட 13  க்கு ஒடிஸிசன்  கொடுக்க  ரணில்  முயற்சிக்கிறார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நே  சர்வகட்சி மாநாட்டை க் கூட்டி  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தனது  நிலைப்பாட் டைத் தெரிவித்தார்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டிற்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தனது கடமை என்றும், இதனை பாராளுமன்றமே நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியாது என்றும் இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

பொலிஸ்  அ திகாரம் வேண்டும் என்பதே  தமிழ் அரசியல்வாதிகள்  நிலைப்பாடு . பொலிஸ்  அதிகாரம்  இல்லை என்கிறார்ரானில். இன்று பாராளுமன்றத்தில்  இருப்பவர்களில்  பலர் 13 ஐ தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு திரிபு படுத்துகின்றனர்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 1987 இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றும் அது தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

13 ஆவது திருத்தச்  சட்டம்  பிரிவினை வாதத்தை உருவாக்கும் என்பது சரத் வீரசேகரவின் கண்டுபிடிப்பு. அவருடைய கருத்துடன் பல சிங்களத் தலைவர்கள்   ஒத்துப்போகின்றனர். 13 க்கு ரணில்  உயிர் கொடுக்க  முயற்சிக்கிறார். சிங்களக் கடும் போக்குவாதிள்    13 ஐ மிக  கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்தியா மறந்து  போன 13 ஐ ஞபகப்படுத்தி   தமிழ் த் தலைவர்கள்  இந்திய மத்திய அரசுக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார்கள்.  தமிழக முதல மை ச் சராக  ஸ்டாலிளின்  பதவி  ஏற்ற பின்னர்  ஒரு  நினைவுக்  கடிதத்தை   அனுப்பினார்கள். அங்கிருந்து  ஒரு சத்தமும்  இங்கு வரவில்லை.

இலங்கையில்  நடவ்த்து இனப்படுகொலையை  இல்லையா என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள்  பட்டிமன்றம்  நடத்துகிறார்கள்.  இவ்த்தை விலையில்   இந்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா , இலங்கையில்  நடந்தது இனப்படுகொலை என  பகிரங்கமாக அறிவித்துள்ளார்.  இதனால் தமிழ் மக்கள் சந்தோஷப்   படமுடியாது.  இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக  அமித் ஷா   இலங்கை விவகாரத்தில் மூக்கை  நுழைக்கிறார். தமிழக  வாக்குக்காக சொன்ன அமுத ஷா  தேர்தல் முடிந்ததும்  மற ந்துவிடுவார்.

ஜனாதிபதித் தேர்தல்வரை   13 வண்டி ஓடும்.

 


Tuesday, August 1, 2023

பிளாஸ்டிக் மாசுக்கு எதிரான போராட்டம்


  உலகளாவிய ரீதியில் மக்கள்  பாவிக்கும் அத்தியாவசியப்  பொருட்கள்ல்  ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது.காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகைப் பொருட்கள், தேனீர்க் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் இவை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் பைகள்  கிடைப்பதாலும் வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றன.

இலகுவாகக் கிடைக்கும்  பிளாஸ்ரிக்கினால்  உலகம் மாசடைந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள்  உலக்ர்ங்கும்  பெரும்  பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.மழைகாலங்களில்  வெள்ளம் தங்குவதர்கும், நீரோட்டம் தடைப்படுவதற்கும்  பிளாஸ்ரிக்  முக்கியமானதாக  உள்ளது. குறைந்த விலையில் கிடைக்கும்  பிளாஸ்ரிக்கை அழிப்பது  இலகுவானதல்ல.

பிளாஸ்ரிக் பொருட்கள்   எளிதில் மக்கும் தன்மை அற்றவை. ஒரு சில நொடிகளில்  உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும், மற்றும் மண் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது கெடுதல் புரிகின்றது. பிளாஸ்டிக் நாட்டின் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இவை கிரேக்க மொழியில் “பிளாஸ்டிக் கோஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.

பிளாஸ்ரிக்  மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஹேமாஸ் குழுமம் Eco Spindles உடன் இணைந்து  அம்பாறையிலும் , கொழும்பிலும் இரண்டு அதிநவீன Baling தளங்களை நிறுவுகிறது. இந்த மூலோபாய ஒத்துழைப்பு மாதத்திற்கு 25,000 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அவசர சிக்கலைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குழுமத்தின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பொறுப்பான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதே முதன்மை இலக்காகும் என்று ஹேமாஸ் கூறியதுடன், அதன் இறுதி நுகர்வோர் பிளாஸ்டிக் கழிவுகளை ஈடுகட்ட வலுவான அர்ப்பணிப்புடன், ஹேமாஸ் குழுமம் Eco Spindles உடனான இந்த கூட்டாண்மையை தங்களது முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பொறுப்புடன் அகற்ற வேண்டும்.

இந்த இரண்டு பேலிங் தளங்களில் முதலீடு செய்வதன் மூலம், நிறுவனம் அதன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு முயற்சிகளை மேம்படுத்துவதையும், தேசிய தன்னார்வ விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) முயற்சிக்கு தீவிரமாக ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வசதிகள் ஒரு வட்ட பொருளாதார மாதிரியை வளர்ப்பதிலும், கழிவுகள் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதிலும், பொருட்கள் மற்றும் பொருட்களின் பயனுள்ள ஆயுளை நீட்டிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். கூடுதலாக, இரண்டு தளங்களை நிறுவுவது சுற்றியுள்ள சமூகங்களுக்கு, குறிப்பாக கழிவு சேகரிப்பவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும்.

Tuesday, July 25, 2023

தனித்து விடப்பட்ட மணிப்பூர்

 இந்திய மாநிலங்களில்  ஒன்றான மணிப்பூரில் நடந்தகொடூரம்  உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலக நாடுகளால்  மிகவும் மதிக்கப்படும் தலவராக பவனிவரும் மோடியின்   பாரதீய ஜனதாஆட்சி செய்யும்  மணிப்பூரில் இரண்டு மாதங்களாகக் கலவரம் நடக்கிறது.

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே  மோதல் என  வெளி உலகுக்குச் சொல்லப்படுகிறது. இளம்  பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியன் வன்கொடுமை செய்தது  வெளி உலகுக்குத் தெரியாமல் மறைப்பப்பட்டதுமேமாத 4 ஆம் திகதி நடந்த அந்தச் சம்பவம் கடந்த கடந்த ம் 25 ஆம் திகதிதான் வெளி உலகுக்குத்  தெரிய வந்தது." நெஞ்சம் வலிக்கிறது குற்றவாளிகள் தப்ப முடியாது என  பிரதமர்  ஒரு வரியில் முடித்துவிட்டார்.   

பாரதீய ஜனதாவின் ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அரங்கேறிக்கொண்டிருக்கும் வன்முறையில், குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள், நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பூதாகரமாக வெடித்திருக்கிறது.  மே 4-ம் திகதியே நடந்த  இக் கொடூரம்  தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவுசெய்திருந்தும்  குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய பிறகே, இப்படியோர் இழிவான சம்பவம் வெளிச்சத்துக்கே வந்தது. அதன் பின்னரே குற்றவாளி கைது செய்யப்பட்டார்.  

இத்தகைய சம்பவம் ஒன்று நடந்தது என்று தெரிந்தும்கூட பொலிஸார் இவ்வளவு நாள் இது பற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இப்படியிருக்க, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை இந்திய  நாடாளுமன்றத்தில் பெரும் விவாதப்பொருளாக மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றமும், `நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்தினால் நாங்களே தலையிட நேரும்' என்று எச்சரித்திருக்கிறது.

 பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர், ``பொலிஸார்தான் எங்களை அந்தக் கும்பலிடம் விட்டுச் சென்றனர்" என்று தனியார் ஊடகப் பேட்டியில் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

  மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்துக்கு  பழங்குடி அந்தஸ்து வழங்குவதர்கு எதிர்ப்புத் தெரிவித்து குகி பழங்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய  போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையால் 100 பேர் உயிர்  இழந்ததாக  அதீகார பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகள் அடித்து நொருக்கித்  தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் , தேவாலயங்கள் ஆலயங்கள் தீவைக்கப்பட்டன. இனக் குழுக்களுக்கிடையேயான  மோதல்  மதக் கலவரமானது.

இரன்டு மாதங்களாக நடைபெற்ற கலவரங்களை  மணிப்பூர் அரசும்,மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. மே மதம் 4 ஆம் திகதி நடைபெற்ற கொடூரச் சம்பவத்தை  மோடியும், அமித் ஷாவும் அறிந்திருப்பார்கள் அதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் சிறு சம்பவம் நடந்தாலும் , தலையிடும் ஆளுநர்களும், பாரதீய ஜனதாத் தலைவர்களும் அமைதியாக  இருக்கிறார்கள். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர் குலையலாம் . அதனை மத்திய அரசு தட்டி கேட்கப் போவதில்லை.

மணிப்பூரில் இரண்டு  மாதங்களாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூருக்குச் சென்று மக்களை சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மணிப்பூர் முதலமைச்சர் பிரென் சிங்கும் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.இந்த நிலையில் ராகுல் காந்தி பாதிக்கபபட்டவர்களை காண மணிப்பூருக்கு வியாழக்கிழமை புறப்பட்டார். சுரசந்துபுர் பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியை பிஷ்னபூர் அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக .என். செய்தி முகமையிடம் காவல்துறை கூறியது. இருப்பினும் அவர் ஹெலிகாப்டரில் தனது பயணத்தை தொடர்ந்தார். நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல், அங்குள்ளவர்களோடும் கலந்துரையாடினார். குழந்தைகளோடு அமர்ந்து உணவருந்தினார். ராகுலால் செய்ய முடிந்ததை பிரதமரால் ஏன் செய்ய முடியாது அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மோடியைத் தடுப்பது எது?

தமிழகத்தில்  திராவிட முன்னேற்ரக் கழக் அமைச்சர்களில் வீடுகளில் நடைபெறும் சோதனைகளுக்கு  மத்திய படையை அனுப்பும் பாரதீய ஜனதா மணிப்பூரில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

  மணிப்பூரில் நடைபெறும் கொடூரங்கள் வெளி  உலகுக்குத் தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில்  பாதிக்கப்படும் மக்களுக்கும் மோடிதான்  பிரதமர். இதனை உணர்ந்துகொண்டு மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை  பொதுமன்னிப்பில் விடுதலை செய்யும்  தலைவர்கள்  இருக்கும் வரை நீதி கிடைப்பது  தாமதமாகலாம்.