Monday, September 25, 2023

ஆறாவது உலகக்கிண்ணத்தை வென்று கொடுப்பாரா பட் கமின்ஸ்?


 அலன் போடர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி முதன் முதலாக  1987 ஆம் ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டி நடை பெற்ற  போது சம்பியனாகியது. அதன் பின் 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் ஸ்டீவ் வாக், ரிக்கி பொண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோரது தலைமையில் மொத்தம் ஐந்து முறை உலகக்கிண்ணத்தை வென்று  உலக கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாகத்  திகழ்ந்து வருகிறது.

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆஷஸ் கிண்ணம் ஆகியவற்றுக்கு அவுஸ்திரேலியாவுக்குத் தலைமை தாங்கிய  பட் கமின்ஸ் அணியையும் வேகப்பந்து வீச்சு துறையும்  பொறுப்பேற்றுள்ளார்.  50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில்  அதிக விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், நாதன் எலிஸ், சீன் அபௌட் ஆகியோரால் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு துறை   மிரட்டும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்ததாகவே இருக்கிறது.   மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்சேல் மார்ஷ், கேமரூன் க்ரீன் ஆகிய மூன்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பவுலிங் மற்றும் பேட்டிங் துறையை கவனித்துக் கொள்ளும் திறமைமிக்க ஆல் ரவுண்டர்களாக அவுஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர். சொல்லப்போனால் உலகின் எதிரணிகளை காட்டிலும் இப்படி மூன்று வேகப்பந்து ஆல் ரவுண்டர்கள் இருப்பது அவுஸ்திரேலியாவின் தனித்துவமான பலமாகும்.

இவர்கள் இருவருமே அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்ற நிலைமையில் கிளன் மேக்ஸ்வேல் சரவெடியாக பேட்டிங் செய்யும் திறமையுடன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியை மேலும் வலுப்படுத்துகிறார். அதே போல அனுபவம் மிகுந்த ஆடம் ஜாம்பாவுடன் எதிரணிக்கு ஆச்சரியத்தை கொடுப்பதற்காகவே இளம் வீரர் தன்வீர் சங்கா தேர்வாகியுள்ளார். அவர்களுடன் அஸ்டன் அகர் ஆல் ரவுண்டராக இருப்பதால் கிளன் மேக்ஸ்வேஸை சேர்த்து அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சு துறையும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அளவுக்கு வலுவாகவே இருக்கிறது. இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டாப் ஆர்டரில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி மிடில் ஆர்டரை பார்த்துக் கொள்வதற்காக தயாராக இருக்கிறார்.

ஆனால், கமின்ஸ், மக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் பட் கமின்ஸ் ஆகியோர் காயத்தை சந்தித்திருப்பது பின்னடைவாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தற்போது குணமடைந்து இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். எனவே அத்தொடரில் அவர்கள் களமிறங்குவார்கள் என்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்துடன் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணியாக அவுஸ்திரேலியா  இருக்க்கிறது.

வெளிச்சத்துக்கு வந்த கனடா இந்திய பனிப்போர்


 ஜி20 மாநாட்டை வெற்ரிகரமாக நடத்தி முடித்திய  பெருமையில் இருக்கும் இந்தியா  மீது கனடாப் பிரதமர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுக்கடுக்காகப் பல  குற்றச் சாட்டுகளித்த் தெரிவித்துள்ளதால்  இரு நாடுகளுகுமான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

 காலிஸ்தான் ஆதரவு இயக்க தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது மரணம் அங்கு வாழும் சீக்கிய சமூகத்தவரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை சுட்டுக் கொன்ற இரண்டு நபர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்தியாவால் தடை செய்யப்பட்ட  இயக்கத் தலைவரான நிஜ்ஜாரின்  கொலையில்  இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடாப் பிரதமர் ட்ரூடோ பாராளுமன்றத்தில்  பகிரங்கமாகத் தெரிவித்ததை இந்தியாவால்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இரகசியமாகச் செய்ய வேண்டியவற்றை கனடாப் பிரதமர்  போட்டுடைத்தார்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின்  போது இந்தியப் பிரதமர்  மோடியிடம் இது பற்றி  தெரிவித்ததாகவும்  ட்ரூட்டோ தெரிவித்ததை இந்தியாவால்  ஜீரணிக்க முடியவில்லை.

இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியது. பதிலடியாக     கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரி கேமரூன் மெக்கேயை  இந்தியா வெளியேற்றியது. இந்த்யா  ஒருபடி மேலே  போய் னடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு   விசா வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவின் சில இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என தாந்து நாட்டு மக்களுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை  அதிகரித்துள்ள நிலையில்,  கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்குலக நாடுகளின் உதவியை கனடா எதிர் பார்க்கிறது.இது இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது. ரஷ்யா மீது உலக நாடுகள் தடை விதித்த போது இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக  இருக்கிறது.

கனடா ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இந்தியாவிற்கும் கடந்த 10 வருடங்களாகவே ஏழாம் பொருத்தம்தான். ஜி 20 மாநாட்டிலேயே அவருக்கும் இந்தியாவிற்கும் நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. இந்தியா கொடுத்த ஹோட்டல் ரூமை மறுத்தது, இந்தியாவில் அவரின் விமானம் வேலை செய்யாமல் போனது., இந்தியா கொடுத்த விமானத்தை ஏற்க மறுத்தது, ஜி 20 மாநாட்டில் பொதுவான சந்திப்புகளில் ட்ரூடோ ஓரம்கட்டப்பட்டது என்று பல  பிரச்சனைகள்  ஏற்பட்டன.

  ஒருமுறை இந்தியாவுக்குச் சென்ற  ட்ரூடோவை வரவேற்காமல் இந்தியா அரசு தவிர்த்தது. இந்தியாவில் சாதாரண மனிதர் போல பாதுகாப்பு கூட இல்லாமல் ட்ரூடோ ஊர் சுற்றிவிட்டு கடைசியில் சர்ச்சையானதால் மரியாதைக்கு பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிகழ்த்திய சம்பவங்கள் கூட நடந்தன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா கொடுத்த ஆதரவுதான் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும். இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாட்டு மோதல் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.

சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான். 1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர். குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.கனடாவில் 1.2 % சீக்கியர்கள் வாழ்கிறார்கள். தேர்தலின் போது அவர்களின் வாக்கு வீதம்  முக்கியமானது.

காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்து வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாருக்கு குடியுரிமை தந்தது கனடா. தீவிரவாதி நிஜ்ஜார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்ர். இதற்கு இந்தியாவே காரணம் என கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா- கனடா இடையேயான உறவில் மோதல் உருவாகி உள்ளது.கனடா வாழ் இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இந்த பதற்றமான சூழ்நிலையில் கனடாவுக்கு சென்று காலிஸ்தான் தீவிரவாதி ப்ளஸ் நிழல் உலக தாதாவாக உருவான கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மாநில போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,000 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இதுவரை எந்த தகவல்களையும் இந்தியாவுக்கு கனடா வழங்கவில்லை. தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது.  கனடா தனது நற்பெயரை தற்காத்துக் கொள்ள வேண்டும். நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சொல்லும் கனடா இதுவரை தகுந்த ஆதாரங்களை கனடா அரசு தரவில்லை என்றும் ஆனால் இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு கனடாவில் உள்ள நபர்களின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அளித்தும் மேற்கொண்டு நடவடிக்கைகளை கனடா அரசு எடுக்கவில்லை என  இந்தியா தெரிவித்துள்ளது.

பஞ்சாப் காவல்துறை ஆவணங்களின்படி, ஜலந்தரின் ஃபில்லூர் பகுதியில் உள்ள பார்சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பதை அறிய முடிகிறது. தனது வாழ்வாதாரத்திற்காக 1996ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற அவர் அந்நாட்டு குடியுரிமை பெற்று பிளம்பராக தனது வாழ்கையை தொடங்கினார்.

சீக்கியர்கள் அதிகமாக வாழும் ’பஞ்சாப்’ மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் நாடு உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் வெளிநாடுகளில் சில சீக்கிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை தவிர்த்து அதிக சீக்கியர்கள் வாழும் நாடான கனடாவில் ’காலிஸ்தான்’ தனிநாட்டிற்கான தாக்கம் அதிகமாக அறியப்படுகிறது.

தனிநாடு கோரும் காலிஸ்தான் சார்பு அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நிஜ்ஜார் செயல்படத் தொடங்கினார். இதனால் அவரது செல்வ நிலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

ஜக்தார் சிங் தாரா தலைமையிலான பாபர் கல்சா இன்டர்நேஷனலில் சேர்ந்தபோது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான அவரது முயற்சி தொடங்கியது. பின்னர் காலிஸ்தான் புலி என்ற  அமைப்பை கட்டி எழுப்பினார்.

இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு எண்ணத்தை கொண்டவர்களை கண்டறிதல், அவர்களுடன் தொடர்பு கொண்டு வலைப்பின்னலை ஏற்படுத்துதல், அவர்களுக்கு பயிற்சி மற்றும் நிதி உதவி அளித்த ஆகிய செயல்பாடுகளில் நிஜ்ஜார் ஈடுபட்டதாக பஞ்சாப் காவல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து உள்ளூர் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. டல்லாவுடன் கைகோர்த்த பிறகு, நிஜ்ஜார் வெடிமருந்துகள், டிஃபின் மற்றும் கைக்குண்டுகளை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளார். பிப்ரவரி 2022ஆம் ஆண்டில், நிஜ்ஜார் அனுப்பிய வெடிமருந்துகளுடன் மூன்று பேரை சோனேபட் போலீசார் பிடித்தனர்.

நிஜ்ஜார் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்புடன் உடன் தொடர்புடையவர், இது இந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.  ஜூலை 1, 2020 அன்று உள்துறை அமைச்சகம் அவரை பயங்கரவாதியாக அறிவித்ததாகவும் கூறுகிறார். கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை புத்துயிர் அளிப்பது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜரை நாடு கடத்துமாறு பஞ்சாப் போலீசார் கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவுடன்  முட்டி மோதுவதற்கு  இந்தியா  தயாராகிவிட்டது.இந்தியாவைத் தனிமைப்படுத்த கனடா காய் நகர்த்துகிறது.

யுத்தத்தால் ஊனமுற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் மருத்துவமனை


 உக்ரைன்  மீது ரஷ்யா ஆக்கிரமித்த ஆரம்ப காலகட்டம் அது. கடந்த ஆண்டு மேமாதம். தனது சகல  போர்த்தலபாடங்களுடன்  ரஷ்யா முன்னேறியது. வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் தீரமுடன்  போராடினார்கள்.

ரஷ்யப்படைக்குப் பதிலடி கொடுப்பதற்காக உக்ரைன் வீரர்கள்  பதுங்கி இருந்தார்கள்  30 வயதான கோஷாவும் அவனது  நண்பனும் ரஷ்யப்படையின் வருகைக்காகப் பதுங்கி இருந்தனர்.எதிரிகளின் நடமாட்டம்  மிக அருகில்  கேட்டது. கோஷா  மெதுவாக  மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தான். அந்நியரின் நடமாட்டத்தைக் கண்ட கோஷாவின் நண்பன் வசியன் சத்தம் போட்டான். எச்சரிக்கையான ரஷ்யப்படையினர் சத்தம் வந்த திசையை நோக்கி மோட்டார் குண்டைச் செலுத்தினர்.  

சுய நினைவு வந்தபோது  மரண அவஸ்தையால் துடித்த  கோஷா தன்னிக் கொல்லும்படி வசியனைக் கேட்டார். இரக்கத்துடன்  கோஷாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் நண்பன் வசியன்.  ரஷ்யப் படைகளால் கோஷா கைது செய்யப்பட்டார். அவரது  நண்பன் வசியனனுக்கும்,  செல்ல  நாய்க்கும் என்ன நடததெனத் தெரியாது.  

"மக்கள் ஒன்றாக படுத்திருந்தனர், ஒருவர் அடுத்ததாக. அவர்கள் ஆயுதங்களை துண்டித்து, நாங்கள் படுத்திருந்த அதே அறையில் அறுவை சிகிச்சை செய்தனர்," என்று கோஷா நினைவு கூர்ந்தார்."ஒருவரின் கையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தரையில் கைகளும் கால்களும் நிறைந்த ஒரு பை இருந்தது."

மூன்று அல்லது நான்கு உயரமான படுக்கைகள் வரிசையாக அமைக்கப்பட்ட ஒரு நீண்ட குறுகிய அறையில் காயமடைந்தவர்கள் எப்படி படுத்திருந்தனர் என்பதை கோஷா விளக்குகிறார்."தோழர்கள் உயிருடன் அழுகிக் கொண்டிருந்தனர், எல்லோரும் துர்நாற்றம் வீசினர், அனைவருக்கும் சில தொற்று இருந்தது" என்று கோஷா கூறுகிறார்.

ஹேக்-சா மூலம் பதுங்கு குழியில் அவரது ஆரம்ப துண்டிக்கப்பட்ட பிறகு, காயம் "மீண்டும் கொப்பளிக்கத் தொடங்கியது" அதனால் அவரது கை உயரமான இடத்தில் துண்டிக்கப்பட்டது என்று கூறினார்.. போர்க் கைதியாக, கோஷா ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் அல்லது வலி நிவாரணிகள் இல்லாமல் கழித்தார்.உக்ரேனிய வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கட்டணம் வசூலிக்காது மற்றும் செயற்கையான ஒரு விலையுயர்ந்த வணிகமாகும். ஒரு கையின் விலை $100,000 (£81,000) மற்றும் ஒரு கைக்கு பதிலாக ஒரு கொக்கி கூடுதலாக $8,000 (£6,500) ஆகும். பல உக்ரேனியர்கள் கொக்கியைக் கேட்கிறார்கள், ஏனெனில் இது மிகவும் பயனுள்ளது.

பதினாறு மாதங்களுக்குப் பிறகு, வொஷிங்டன் சிற்றியில் உள்ள ஒரு சிறிய புரோஸ்டெடிக்ஸ் கிளினிக்கில், கோஷா தன் கதையைத் தெரிவித்தார். ரஷ்யப் படையெடுப் பின்  பின்னர்  சுமார்  25,000 உக்ரைனியர்கள் கைகால்களை இழந்துள்ளனர். துல்லியமான புள்ளிவிவரங்கள் சரிபார்க்க கடினமாக உள்ளன. சில வேளி இந்தத் தொகை அதிகமாக இருக்கலாம்.  மற்றும் மிக அதிகமாக இருக்கலாம். மாயமான ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. போரின் விலையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு புள்ளிவிவரத்தை  உத்தியோகபூர்வமாக வெளியிட உக்ரேனிய அல்லது ரஷ்ய அதிகாரிகள் தயாராக இல்லை.

உக்ரேனில் 18 மாத காலப் போரில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊனமுற்ற அமெரிக்கர்களைக் காட்டிலும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை குறைந்தது 10 மடங்கு அதிகமாக உள்ளது என்கிறார் மருத்துவர் மைக்கேல் . வாஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள மருத்துவ மைய ஆர்த்தோடிக்ஸ் மற்றும் ப்ரோஸ்தெடிக்ஸ் (எம்சிஓபி) க்கு வந்த 39வது உக்ரேனிய ராணுவ வீரர் கோஷா ஆவார். அவருக்கு முதன்முதலில் புரோட்டோடைப் செயற்கைக் கை பொருத்தப்பட்டது.

அங்குள்ள மருத்துவர்கள் இராணுவ செயற்கைக் கருவிகளில் நிபுணர்கள் மற்றும் இரண்டு தசாப்தங்களாக உலகப் புகழ்பெற்ற வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் அமெரிக்க வீரர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் உக்ரைனின் சவால் வேறு. இது மோதலின் தீவிரம் மற்றும் அடிப்படை துண்டிப்புகள் ஆகியவற்றால் கூட்டப்படுகிறது. 

யுனைடெட் ஹெல்ப் உக்ரைன் மற்றும் பிரதர்ஸ் பிரதர் ஃபவுண்டேஷனுடன் இணைந்து ஆபரேஷன் ரெனியூ ப்ரோஸ்தெடிக்ஸ் உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்க்கள்>

  உக்ரைனுக்குள் ஒரு கிளினிக்கைத் திறப்பதே  ஆவ்ர்களின்  திட்டம். தற்போதைக்கு, மைக் மற்றும் அவரது குழுவினர் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், நன்கொடையாக வழங்கப்பட்ட உபகரணங்களை வழங்குவதற்கும், உள்நாட்டில் சிகிச்சை நடத்துவதற்கும் உக்ரைனுக்ள்  செயர்படுகின்றன்ன்ர்,

அமெரிக்க அரசாங்கம் உக்ரைனுக்கான 'பாதுகாப்பு உதவிப் பொதிகளின்' தவணைகளில் பில்லியன் கணக்கான டொலர்கள் ஆயுதங்களை வழங்கியுள்ளது. ஆனால் இந்த தொகுப்புகள் சிகிச்சைக்கான நிதியுதவி அல்லது காயமடைந்த உக்ரேனிய வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்காது. 

ஒரு அறிக்கையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின்  செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் கரோன் ஜே கார்ன் கூறினார்: "காயமடைந்த உக்ரேனிய சேவை உறுப்பினர்களுக்கு செயற்கை சிகிச்சையை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட கோரிக்கைகள் எதையும் அவர்கள்  பெறவில்லை.

உக்ரேனிய ஆயுதப் படையைச் சேர்ந்த பலர் தற்போது Landstuhl இல் (ஜெர்மனியில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவ மருத்துவ வசதி) குறிப்பிட்ட செயற்கை சிகிச்சைக்கு வெளியே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இலியா மைக்கல்சுக் இரட்டை கை துண்டிக்கப்பட்டவர் மற்றும் இரண்டு அதிநவீன கார்பன் ஃபைபர் ஆயுதங்களை இறுதிப் பொருத்துவதற்குத் தயாராக இருக்கிறார்.அவரது கதை பயங்கரமானது. பாக்முத் நகரில் நடந்த இந்த போரின் மற்றொரு வரையறுக்கப்பட்ட போரில் டேங்க் எதிர்ப்பு ராக்கெட் அவரது வாகனத்தில் மோதியதால் ஒரு கை துண்டிக்கப்பட்டது மற்றும் மற்றொன்று துண்டுகளால் தூவப்பட்டது.36 வயதான அவர் ரஷ்யாவின் பிரபல வாக்னர் குழுவின் கூலிப்படையினரால் பிடிக்கப்பட்டார். ஒரு வீட்டின் அடித்தளத்தில் அவர்கள் வைத்திருந்த மயக்க மருந்து மூலம் அவர்கள் அவரை வெளியேற்றினர்.

  அவர்கள் அவருடைய இரு கைகளையும் துண்டித்தனர், அவர்கள் அவற்றை மூடவில்லை, அவர்கள் அவரைக் கட்டுக் கட்டினார்கள். அதனால் அது சுத்தமாக இல்லை. வாக்னர் குழு விட்டுச் சென்ற வடுக்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உள்ளன. அவரது இரு கைகளையும் வெட்டிய பிறகு அவர்கள் அவரை கேலி செய்தனர். அவர் சித்திரவதை செய்ததையும், ஆண்கள் தீ வைத்து எரிக்கப்படுவதையும், விரல்கள் வெட்டப்படுவதையும் பார்த்தார்.

Saturday, September 23, 2023

செவிப்புலனற்றவர்களின் விளையாட்டுப் போட்டி

 வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்கத்தின் 10 ஆவது விளையாட்டு விழா கடந்த வாரம் வதிரி டைமன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.வடமராட்சி, முல்லைத்தீவு,வவுனியா,திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய வற்றின் செவிப்புலனற்ற சுமார் 75 வீர, வீராங்கனைகள்  இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினர்.

   உதைபந்தாட்டம், கிறிக்கெற்,வலைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் மூன்று நாட்களாக நடைபெற்றன.  வெற்றியடைந்தவர்கள்   தமது இரண்டு கைகளையும்  உயர்த்தி  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.எதிரணியை அவமானப்படுத்தும் ஆக்ரோஷம் எவையும்  எவையும் அங்கு இருக்கவில்லை.  மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

பரிசளிப்புவிழா மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டது. பரிசுக்குரியவரின்  பெயர் அறிவிக்கப்பட்டதும்,  தாமதமின்ரி மேடைக்குச் சென்று பரிசைப் பெற்றுக்கொண்டனர். பரிசளிப்பு விழா சர்வதேச தரத்துக்கு அமைவாக நடத்தப்பட்டது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன்    அதிக கோல் அடித்தவர்,  சிறந்த கோல் கீப்பர், அதிக  ஓட்டங்கள் அடித்தவர், அதிக சிக்ஸர்கள் அடித்தவர், அதிக பவுண்டரிகள் அடித்தவர் என உதைபந்தாட்ட, கிரிக்கெற் போட்டிகளின் விருதுகள் வழங்கப்பட்டன.

உதைபந்தாட்டத்தில் வடமராட்சியை எதிர்த்து விளையாடிய மட்டக்களப்பு சம்பியனானது. வடமராட்சிய எதிர்த்து விளையாடிய வவுனியா  கிறிக்கெற்றில் சம்பியனாகியது. வலைப்பந்தாட்ட சம்பியனானது வடமராட்சி மகளிர் அணி. 

செவிப்புலனற்றவர்களின்  பேச்சையும்,  பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களின் உரைகளையும் மொழிபெயர்ப்பதற்கு செவிப்புலனற்றவர்களின் சைகை தெரிந்த மூவர் வந்திருந்தனர்.

 இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் செவிப்புலனற்றவர்கள் இந்த விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணையை வழங்கினர். சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும்  முல்லைத்தீவைச் செர்ந்தசெவிப்புலனற்ற  ஒருவர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மூன்று நாட்களும்  உடனுக்குடன் குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

Wednesday, September 20, 2023

பாலைவன நாடான லிபியாவை மூழ்கடித்த வெள்ளம்

புயல், மழை, வெள்ளம், பூகம்பம், காட்டித்தீ போன்ரவற்றாஇல் நடைபெரும் அழிவுகளும்,   உயிரிழப்புகளும் அண்மையில் முக்கிய செய்தியாக  இடம் பிடிக்கின்றன.மொராக்கோவைத் தாக்கிய புகம்ப அழிவுகள் பற்றிய இழப்புகள்  முழுமையாக வெளிவரமுன்பு  லிபியாவில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் கவனத்தை ஈர்ந்தது.

பாலைவன நாடான  லிபியாவை  வெள்ளம்  புரட்டிப் போட்ட செய்தி  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  லிபியாவின்  கிழக்கு நகரமான டெர்னாவில் மிகப்பெரிய அளவிலான இறப்பு ,அழிவுக்கு ஏற்பட்டுள்ளது.  நகரின்கால்வாசிப்பகுதி  வெள்ளத்தால் உருக்குலைந்தது.   வாடி டெர்னா நதியே  வெள்ளப் பெருக்குக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மலைகளில் இருந்து நகரத்தின் வழியாக கடலுக்குள் ஓடும் வாடி டெர்னா நதி, மழை பெய்யும் போது  வெள்ளம் வந்தாலும், ஆண்டின் பெரும்பாலும்   வறண்டு இருக்கும். அருகிலுள்ள நகரமான பைடாவில்  இல் சுமார் 414மி.மீ மழை பெய்தது இது மிகப் பெரிய மழை என  பதியப்பட்டுள்ளது.

  இரண்டு நதி பள்ளத்தாக்குகள் சங்கமிக்கும் நகரத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் முதல் அனை  உள்ளது. அது முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக செய்மதிக் காட்சிகள்  வெளிப்படுத்தின.  காட்சிகள் காட்டுகின்றன.  முதல் அணையை உடைத்த பிறகு, வெள்ளம் நகரின் தெற்கு விளிம்பில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பள்ளத்தாக்கு வழியாக கீழ்நோக்கித் தொடர்ந்தது. இரண்டாவது அணையின் கீழ்புறத்தில், நகரின் மையப்பகுதி வழியாக ஒரு பரந்த நீரோடை, இருபுறமும் உள்ள கட்டிடங்களை உடைத்தது.

ஆற்றில் இருந்து வெகு தொலைவில் இருந்த பல மாடி அடுக்குமாடி குடியிருப்புகள் அவற்றின் முகப்புகள் அழிக்கப்பட்டன,கொங்கிரீட்  தளங்கள் இடிந்து விழுந்தன, டெர்னாவில் மட்டும் 2,000 பேர் இறந்திருக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. புயலுக்குப் பிறகு லிபியா சர்வதேச உதவியைக் கோருகிறது.

2011 ஆம் ஆண்டு ல்   எதேச்சதிகாரத் தலைவர் முயம்மர் கடாபியின் ஆட்சி  கவிழ்க்கப்பட்ட பின்னர், பல வருடகால யுத்தம் மற்றும் மத்திய அரசாங்கம் இல்லாததால் லிபியா சிதைந்து கிடக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், லிபியாவின் உமர் அல் முக்தார் பல்கலைக்கழகத்தின் நீர்வியலாளர் அப்தெல்வானீஸ் ஏஆர் ஆஷூர், 1942 முதல் ஐந்து வெள்ளங்களை மேற்கோள் காட்டி, பருவகால ஆற்றுப்படுகை அல்லது வாடி மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு டெர்னாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தார்.

அணைகளை முறையாக பராமரிப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.   : "ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டால் அதன் விளைவு வாடி மற்றும் நகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்"என்று அவரது கட்டுரை கூறியது  

இந்த வெள்ளம் லிபியாவின் நவீன வரலாற்றில் மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழல் பேரழிவாகும், இழப்புகளைச் சந்தித்த பைடா நகரம் உட்பட மற்ற பகுதிகளும் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பெங்காசி மற்றும் கிழக்கு லிபியாவின் பிற இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற அரசாங்க கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன.

லிபியாவில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளனர், இது ஒரு பெரிய மத்திய தரைக்கடல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் லிபியாவில் அணைகளை உடைத்து, கட்டிடங்களை அடித்துச் சென்றது.சுமார் 125,000 மக்கள் வசிக்கும் நகரமான டெர்னாவில், கட்டடங்கள்  இடிந்து விழுந்துள்ளன.கார்கள்  வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நகரின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் 1,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மாவட்டத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வாடா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அல்-காபிசி தெரிவித்தார்.  போதிய இட வசதி இல்ல்லாமையினா. மருத்துவ மனையின் தாழ்வாரங்களில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசி உட்பட மற்ற கிழக்கு நகரங்களும் புயலால் பாதிக்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செஞ்சிலுவை சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் டேமர் ரமலான் தன் குழுவுடன்  ப்[அனியாற்றுகிறார். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும்,  காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10,000 த்தைத்  தாண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

லிபியாவை தாக்கிய வெள்ளத்தில் 5,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.டானியல் புயல் நாட்டைத் தாக்கியதால் அணைகள் உடைந்ததால் கிழக்கு நகரமான டெர்னாவின் கால் பகுதி வெள்ளநீரால் அழிக்கப்பட்டது, இதுவரை 1,500க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேரிடர் மண்டலமாக  டெர்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முயன்றபோது அதன் லிபியா பிரிவைச் சேர்ந்த மூன்று தன்னார்வத் தொண்டர்கள் செவ்வாயன்று இறந்ததாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தலைமைச் செயலாளருமான ஜெகன் சபாகைன் ,கூறினார்  

லிபியா அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிளவுபட்டுள்ளது மற்றும் 2011 நேட்டோ ஆதரவு எழுச்சிக்கு பின்னர் பொது சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளன, இது பல ஆண்டுகளாக பிரிவு மோதல்களைத் தூண்டியது.


 சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திரிப்போலி அரசாங்கம் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் டெர்னாவுக்கு உதவிகளை அனுப்பியுள்ளது. செவ்வாயன்று மேற்கு நகரமான மிஸ்ரட்டாவிலிருந்து ஒரு நிவாரண விமானம் புறப்பட்டது.

சிங்கப்பூரின் ஜனாதிபதியான இலங்கைத் தமிழன்


  சிங்கப்பூரின்  9ஆவது ஜனாதிபதியாக  தர்மன் சண்முகரத்னம் பதவி ஏற்றுள்ளார். ஊரெழுவைப் பூர்வீகமாகக்கொண்ட அவரது குடும்பம் பல வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தது. அவர் சிங்கப்பூரில் பிறந்து ,வளர்ந்து,  படித்து பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றார்.  

 தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிங்கப்பூர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே கூட 60 லட்சத்திற்குள்ளாகவே இருக்கும்.   தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக  இருக்கிறது. சிங்கப்பூரின்  அபரிமிதமான வளர்ச்சி உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருந்த  ஹலீமா யாக்கோப்பின் பாதவிக் காலம் கடந்த 13 ஆம் திகதியுடன்  நிறைவடைந்தது. முன்னதாக  புதிய ஜனாதிபதியத் தேர்வு செய்வதர்கான தேர்தல் நடைபெற்றது.    தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர்ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர்.       தர்மன் சண்முகரத்னமுக்கு 70.40% (1,746,427 வாக்குகள்) வாக்குகள் கிடைத்து மிகப்பெரிய வெற்றிய்யைப் பெற்றார்.   அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 15.72% , டான் கின் லியான்     13.88% வாக்குகள் பெற்றனர்.

  66 வயதான தர்மன் சண்முகரத்னம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்த இவர் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆவர்.  இவர் பொருளாதாரத்தில் முதுகலை ஆய்வுப் பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.  வழக்கறிஞரான இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி  சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் சிங்கப்பூரில் சமூக நிறுவனங்களிலும் லாப நோக்கற்ற கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் , மூன்று மகன்கள் உள்ளனர்.

2001ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து இருந்து முதலில் எம்பியாகத் தெரிவானார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2006, 2011, 2015, 2020ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று எம்பியானார்.  அந்நாட்டில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர்  2015- 2023 வரை சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும், 2011 முதல் 2023 வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும், 2011 முதல் 2019 மே மாதம் வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் பணியாற்றியவர்.  பிரதமரின் ஆலோசகராகவும் செயற்பட்டார். சிங்கப்பூரில் இதுவரை சீனாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில்ஜனாதிபதியாகத்  தேர்வுசெய்யப்பட்டுவந்தனர்.

சிங்கப்பூரில் பிப்ரவரி 25, 1957 இல் பிறந்த தர்மன், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர் ஆவார். இவர் பொருளாதார நிபுணர் மட்டுமில்லை. ஒரு நல்ல விளையாட்டு வீரர் ,கவிஞர் ஆவார்.

சிங்கப்பூரில் நோயியலின் தந்தை" என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி எமரிட்டஸ் பேராசிரியர் கே. சண்முகரத்தினம், சிங்கப்பூரில் புற்றுநோய் பதிவேட்டை நிறுவியவர் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவர். இவரின் மூன்று குழந்தைகளில் ஒருவர் தான் தர்மன்.

ஆங்கிலோ-சீனப் பள்ளியில் பயின்ற தர்மன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) இல் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.  (LSE பின்னர் 2011 இல் அவருக்கு கௌரவ பெல்லோஷிப்பை வழங்கியது). பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள வொல்ப்சன் கல்லூரிக்குச் சென்றார், அங்கு பொருளாதாரத்தில் முதுகலை தத்துவப் பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் மாணவரானார், அங்கு அவர் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MPA) முடித்தார் மற்றும் Lucius N. Littauer Fellows விருதைப் பெற்றவர் (கல்வித் திறன் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் MPA மாணவர்களுக்கு வழங்கப்பட்டது).தொழில் ரீதியாக ஒரு பொருளாதார நிபுணரான தர்மன், தனது பணி வாழ்க்கையை முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பொது சேவையில் செலவிட்டார். அவர் பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களுக்கு தலைமை தாங்கினார்.

ஜூன் 2023 இல், தர்மன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருக்க விரும்புவதாக அறிவித்தார்.ஜனாதிபதி பதவி ஒரு கட்சி சார்பற்ற அலுவலகம் என்பதால், அரசாங்கத்தின் அனைத்து பதவிகளிலிருந்தும் மற்றும் சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (PAP) உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜூலை 2023 இல் ராஜினாமா செய்தார். 

1970 களில் இங்கிலாந்தில் படிக்கும் போது ஒரு மாணவர் செயற்பாட்டாளரான, தர்மன் முதலில் சோசலிச நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார், பொருளாதாரம் குறித்த அவரது கருத்துக்கள் அவரது பணி வாழ்க்கையின் போது உருவாகின.

1992 இல் MAS இன் பொருளாதாரத் துறையின் இயக்குநராகப் பணியாற்றியபோது, சிங்கப்பூரின் 1992 இரண்டாம் காலாண்டு ஃபிளாஷ் GDP வளர்ச்சிக் கணிப்புகளை உள்ளூர் செய்தித்தாளில் வெளியிட்டது தொடர்பான வழக்கில், அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் (OSA) கீழ் தர்மன் மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு 1,500 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர் பொதுத் துறைக்கு சேவையாற்றினார் மற்றும் அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார்.

பின்னர் ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001 இல் அரசியல்வாதியாக அறிமுகமான அவர், 2003 இல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார், 2008 வரை இந்தப் பொறுப்பில் பணியாற்றினார்.

தர்மன் பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களுக்கு தலைமை தாங்கினார்.

பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய கவுன்சிலான முப்பது குழுவின் அறங்காவலர் குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

தர்மன் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறங்காவலர் குழுவில் உறுப்பினராகவும், 2024 ஆம் ஆண்டு ஐ.நா. உச்சிமாநாட்டில் பயனுள்ள பரிந்துரைகளை வழங்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2011 முதல் 2014 வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொள்கை ஆலோசனைக் குழுவான சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுவின் (IMFC) தலைவராக இருந்து, முதல் ஆசியத் தலைவராக ஆனார்.

2019 முதல் 2022 வரை, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) மனித மேம்பாட்டு அறிக்கையின் (HDR) ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக இருந்தார்.

தனது இளமை பருவத்தில் தர்மன் ஒரு சுறுசுறுப்பான விளையாட்டு வீரர். கல்வியின் ஒரு வடிவமாக விளையாட்டைப் பற்றி அவர் பேசினார்.

குழந்தைகள் அணியாக இருப்பதன் மதிப்பைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன் மூலம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்கிறார்கள், நிபுணத்துவத்தை வளர்க்க இது சிறந்த வழி. மேலும், போட்டியில் விழுந்து அல்லது தோல்வியடைந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் திறனை பெறுகிறார்கள்,என்று அவர் கூறினார்.அவர் 2002 முதல் சைனீஸ் கலிகிராஃபியும் ஆர்வத்துடன் கற்று வருகிறார்.

தர்மன் அரசு சாரா நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய சமூகத்தின் கல்வி செயல்திறன் மற்றும் அபிலாஷைகளை உயர்த்த முயற்சிக்கும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கத்தின் (SINDA) அறங்காவலர் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து சிங்கப்பூரர்களுக்கான திறன்கள் மற்றும் வேலைகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஓங் டெங் சியோங் லேபர் லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட் மற்றும் தேசிய வேலை வாய்ப்பு கவுன்சிலுக்கும் அவர் தலைமை தாங்கினார். சர்வதேச மேடைகளில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் அரசியல்வாதியான எஸ் ஆர் நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் 2009 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் ஜனாதிபதியாகப்  பணியாற்றினார், அதே சமயம் தேவன் நாயர் என்று அழைக்கப்படும் மலையாளி வம்சாவளியைச் சேர்ந்த செங்கரா வீட்டில் தேவன் நாயர் 1981 முதல் 85 வரை சிங்கப்பூரின் மூன்றாவது ஜனாதிபயாகப் பணியாற்றினார்.

Friday, September 15, 2023

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் சர்வதேச விசாரணை


 இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை வெளிக்கொண்டுவர சர்வதேச  விசாரணை தேவை என  விடுக்கப்பட்ட கோரிக்கைகளை  இலங்கை அரசாங்கம் கடுமையாக  மறுத்தது. உள்ளகப் பொறிமுறையில் விசாரணை செய்யப்போவதாக அறிவித்த இலங்கை இன்றுவரை  ஒரு அடி கூட முன்னுக்கு நகரவில்லை.

ஈஸ்டர் தின தொடர் தாக்குதல்கள் தொடர்பாக சனல்4 வெளிஒயிட்ட காணொளி இலங்கை அரசியலில் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. சனல் 4 வெளியிட்ட ஆவணப் படம்  பொய் என அன்றைய ஆட்சியாளர்கள்  கூறியுள்ளனர். அதேவேளை சர்வதேச  விசாரணைதேவை என்ற  குலலும்  ஓங்கி ஒலிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தங்கள் கடமையை புறக்கணித்த உயர் போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், தற்போதைய உளவுத்துறை தலைவர் சுரேஷ் சல்லே சம்பந்தப்பட்ட சதி என்று பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சேனல் 4 ஆவணப்படம் விசில் புளோயர்களின் குற்றச்சாட்டுகளுடன் வெளிப்படுத்தியதை அடுத்து கார்டினலின் புதிய கோரிக்கைகள் வந்துள்ளன.

2019 தேர்தலில் ராஜபக்சேவை ஆதரித்த கார்டினல் மால்கம் ரஞ்சித், தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் கோரி வருகிறார். ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளின் போது மூன்று சொகுசு ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 269 பேர் கொல்லப்பட்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 310 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய உளவுத்துறை தலைவர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தொழில்முறை அலட்சியம் காரணமாக பெயரிடப்பட்ட மற்றொரு சிரேஷ்ட அதிகாரி தேசபந்து தென்னகோன் ஆகியோரை புதிய விசாரணை முடியும் வரை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு கர்தினால் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பான பல விசாரணைகளின்படி, ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு 17 நாட்களுக்கு முன்னர், அண்டை நாடான இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்பு விடுத்த எச்சரிக்கைகளுக்கு இலங்கை அதிகாரிகள் செயல்படத் தவறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்லார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  ஆணையாளர்  செயித் அல் ஹுசைன்  இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து வ்ர்ளியிட்ட அரிக்கையில்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அதேவேளை  ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக சனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய காதினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்றும், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காதினால் அவர்கள் அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம் என்றும், அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருப்பதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் உட்பட மொட்டின் அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள் என்றும், இன்றும் நீதி கிடைக்காததால், காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை மேலும் அவமதிக்காமல், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்   மேலும் தெரிவித்தார்.

சர்வதேச விசாரனைக்கு தமிழ் மக்கள் அழைப்பு விடுத்தபோது அதனைத் தட்டிக்  கழித்தச்வர்கள்,  இன்ரு சர்வதேச விசாரனை தேவை  என  முழக்கமிடுகின்றனர்.சர்வதேசத்தின் தலையீடு இல்லாம  எதனியும் செய்ய முடியாது என்பதை  சில அரசியல்வாதிகளும், ஏனையவர்களும்  இப்போதுத்சான்  புரிந்துகொண்டார்கள்.

Thursday, September 14, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -80

தமிழ்த்திரை உலகில் நடைகை புஷ்பலதா அதிர்ஷ்டம்  இலாதவர் என்ருதான் சொல்ல வேண்டும். ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும்பாலும்  இரண்டாஅவ்து நாயகியாகவே வலம் வந்தார். தங்கை வேடத்துக்கு மிகப் பொருத்தமான நடிகையாகத் திகழ்ந்தார்.

நடிப்புத் திறனிலும் குறை சொல்ல முடியாதவர். ஒரு சில படங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான படங்களில் இரண்டாவது நாயகி அல்லது அக்காள், அண்ணி, தங்கை இப்படியான வேடங்களே அவருக்கு அளிக்கப்பட்டது புரியாத புதிர். நாட்டியம் கற்றுத் தேறிய கோயமுத்தூர் பொண்ணு கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த பெண். 6 பெண் மக்கள், 2 ஆண் பிள்ளைகள் என எட்டு குழந்தைகளைக் கொண்ட மிகப் பெரிய கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பத்தில் ஐந்தாவது பெண்ணாகப் பிறந்தவர்.

7 வயது குழந்தை புஷ்பலதாவும் மிகச் சூட்டிகையாக நாட்டியத்தைக் கற்றுத் தேர்ந்தார். நோஞ்சான் உடலும் வெகுவேகமாகத் தேறியது. அக்காலகட்டத்தில் இறுக்கமான சூழலைக் கொண்ட குடும்ப உறவுகளுக்கு மத்தியில், பெண் குழந்தையை நாட்டியம் கற்க அனுப்பியது உறவினர்களிடையே பெரும் புரளிப் பேச்சாக மாறியது. குடும்பப் பெண்கள் நாட்டியம் கற்பதும் ஆடுவதும் கௌரவமானதல்ல என்ற கருத்து ஆழமாக வேரூன்றி இருந்ததால், உறவினர்கள் இவர்கள் குடும்பத்தைத் தங்கள் உறவிலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டார்கள்.

9 வயதில் நாட்டிய அரங்கேற்றமும் நிகழ்ந்த்து. புஷ்பலதாவின் வாழ்க்கையை அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கு நகர்த்துவதில் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் அந்தக் கால நாடக நடிகைகளில் ஒருவரும் ஹார்மோனியக் கலைஞருமான பி.எஸ். ரத்னாபாய். வீட்டுக்கு அருகிலேயே இருந்த அவருக்குக் குழந்தைகள் இல்லை என்பதால், புஷ்பலதா மீது மிகுந்த வாஞ்சையும் அன்பும் கொண்டவராக இருந்தார்., பெரும்பாலான நேரங்களை அவர் வீட்டிலேயே கழித்தார் புஷ்பலதா.

அங்கிருந்தான் நாடகத்துறை சார்ந்தவர்களுடன் பழக்கமும் அவருக்கு ஏற்பட்டது. ‘ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப தந்தையாரின் நிதி நிலையும் ஆட்டம் கண்டது. குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. அதனால், பத்து வயதிலிருந்தே நாட்டிமும் நாடகமும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கைத் தேவையாக ஆனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்துடன் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு எம்.ஜி.ஆரின் பல நாடகங்களில் நடிப்பதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்தது. அது திரையுலகை நோக்கியும் மெல்ல நகர்த்திச் சென்றது. 

மந்திரிகுமாரி’ படத்தில் கள்ளர் கூட்டத் தலைவனாக, பிரதான வில்லனாக நடித்த எஸ்.ஏ.நடராஜன், கோவையைச் சேர்ந்தவர். தங்கள் ஊர்ப் பெண் என்ற பாசத்திலும் புஷ்பலதாவை நாடகங்களில் பார்த்திருந்ததாலும் அவரது திறமை மீது இருந்த நம்பிக்கையிலும் தான் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய ‘நல்ல தங்கை’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்தார். 1955ல் ’நல்ல தங்கை’ படத்தில் குழந்தை முகம் மாறாத தோற்றத்தில் பதின்பருவச் சிறுமியாக பாவாடை, தாவணி அணிந்த சிறு பெண்ணாக அறிமுகமானார் புஷ்பலதா.

இரண்டும்கெட்டான் வயதாக இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை. நாடகங்களிலும் நாட்டியத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அழகு கொஞ்சும் இளம் பெண்ணாக ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

புஷ்பலதா ஏற்று நடித்த படங்களிலும் மிகவும் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவராக, பொறுப்புணர்வு மிக்க பெண்ணாகப் பல படங்களில் தோன்றியிருக்கிறார். ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் குடும்பத்தின் கடைக்குட்டிப் பெண் சகுந்தலா (புஷ்பலதா). மூத்த அக்காள் கோகிலா (சாவித்திரி), படித்தவள் என்றாலும் உலகம் அறியாத வெகுளிப்பெண். இளம் பெண்ணுக்கே உரிய எந்தப் பண்பு நலன்களையும் கடைப்பிடிக்கத் தெரியாதவள். அதனால் சமூகத்தில் அவளுக்கு ஏற்படும் கெட்ட பெயரையும் அபவாதத்தையும் சேர்த்தே சுமக்கிறாள்.

‘பார் மகளே பார்’ படத்தில் வசதியான வீட்டுப் பெண்களேயானாலும் கண்டிப்பு மிக்க தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களாக சந்திராவும் காந்தாவும்  (விஜயகுமாரியும் புஷ்பலதாவும்). மூத்த பெண் சந்திரா அப்பாவைப் பார்த்து பயந்து நடுங்க, இளைய மகள் காந்தா, நியாயமான காரணங்களுக்காக அப்பாவிடம் துணிச்சலுடன் எதிர்த்துப் பேசும் குணமுள்ளவள்; அதே நேரம் சுயமரியாதை மிக்கவளும் கூட ‘வெட்கமாய் இருக்குதடி, இந்த வேலவர் செய்திடும் வேலை எல்லாமே’ என்ற பாடலுக்கு இருவரும் இணைந்து பரத நாட்டியம் ஆடி இருக்கிறார்கள்.

 

புஷ்பலதா முறையாக பரதம் பயின்றவர். விஜயகுமாரிக்கு நாட்டியம்  பரிச்சயம் இல்லாதது. ஆனால், அந்தப் பாடல் காட்சியைப் பாருங்கள் இருவருமே மிகச் சிறப்பாக ஆடியிருப்பார்கள். விஜயகுமாரி பலமுறை ஒத்திகை பார்த்து ஆட, எந்த ஒத்திகைக்கும் வராமலே மிக எளிதாக ஆடி விட்டார் புஷ்பலதா என்று இந்தப் படம் பற்றிய தன் நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் நடிகை விஜயகுமாரி.   

விஜயகுமாரி - புஷ்பலதா இருவரும் பல படங்களில் இணைந்து சகோதரிகளாக, உற்ற தோழிகளாக, அண்ணி - நாத்தனார் உறவில் என நடித்திருக்கிறார்கள். அசப்பில் உடன் பிறந்த சகோதரிகள் போன்றே தோற்றம் கொண்டவர்கள் இவர்கள். இருவரும் கோயமுத்தூர் காரர்கள். இருவரும் இணைந்து நடித்த பல பாடல்கள் மிகப் பெரும் ஹிட் பாடல்கள். ‘தூது சொல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி’, ‘அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்’, ‘கட்டித் தங்க ராஜாவுக்குக் காலை நேரம் கல்யாணம்’ போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

நானும் ஒரு பெண்’ படத்தில் அறிமுகமான ஏ.வி.எம் ராஜனுடன் இணைந்து அப்படத்தில் நடித்தார். அப்படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அறிமுகம், அதைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் ஏற்பட்ட ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறியது. புதுக்கோட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட சண்முக சுந்தரம் என்ற ஏ.வி.எம். ராஜன், ஏற்கனவே திருமணமானவர். புஷ்பலதா மீது கொண்ட தீவிர காதல் 1964 ல் திருமணத்தில் முடிந்தது. திரையுலகில் இம்மாதிரியான காதலும் முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் வாடிக்கை என்பதா? சாபக்கேடு என்பதா? இவர்களின் காதலுக்கு சாட்சியாக இரண்டு மகள்கள்.

* எம்.ஜி.ஆரின் கண் பார்வையற்ற தங்கையாக ‘எங்கள் தங்கம்’ படத்தில் நடித்தார்.

* சிவாஜிக்கு மகளாக பல படங்களில் நடித்தவர். அதே சிவாஜி கணேசனை வளர்த்து ஆளாக்கும் தாதியாகவும் ‘வசந்த மாளிகை’ படத்தில் நடித்தார். குறைந்த நேரமே தோன்றினாலும், கருணை பொங்கும் கண்களுடன் ஒரு இளம் விதவையாக, அன்பே உருவாகத் தோன்றுவார். அன்பு செலுத்துவதாலேயே ஜமீன்தாரிணியால் (சாந்தகுமாரி) துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் துறப்பார். அந்தக் கொலையை நேரில் பார்க்கும் சிறுவன் வளர்ந்த பின்னும் தாய் மீது பிடிப்பற்றவனாக பெரும் குடிகாரனாக மாறுவான்.

* ஜெமினி கணேசனுடன் இணையாக ‘ராமு’ படத்தில் கொஞ்ச நேரமே தோன்றினாலும் அவர்கள் இருவருக்குமான ‘பச்சை மரம் ஒன்று; இச்சைக்கிளி ரெண்டு’ பாடல் பெரும் வெற்றி பெற்றது.

* முத்துராமன், கல்யாண் குமார், சிவகுமார் என பலருடனும் இணைந்து நடித்தவர்.

* கவிஞர் கண்ணதாசனின் தயாரிப்பில் வெளியான, ‘தாயே உனக்காக’ படத்தில் சிவகுமாருக்கு ஜோடி. போர் முனையிலிருந்து விடுமுறையில் திரும்பி வரும் வீரனாக சிவகுமாரும் அவரது காதலியாக புஷ்பலதாவும் நடித்திருந்தனர். இப்படம் ‘Bஅல்லட் ஒf அ ஸொல்டிஎர்” என்ற ஒரு ரஷ்யப் படத்தின் தமிழ் வடிவம். வீட்டில் சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டுக் கிளம்பும் கதாநாயகி, ஒவ்வோர் இடமாகச் சென்று சேர்வதும் மீள்வதுமாக இருப்பார். நட்புக்காக பெரும்பாலான நட்சத்திரங்கள் நடித்திருந்தபோதும் அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

* ‘கவிதா’ என்றொரு படம் 60களில் வெளியானது. அதில் இளம் துப்பறிவாளராக பல்வேறு வேடங்களில் நம்பியாருடன் இணைந்து சாகசங்கள் செய்வார்.

70களிலேயே அம்மா வேடங்களுக்கு வந்தவர். பின்னர் கொடுமைக்கார மாமியார் வேடங்களையும் அவர் ஏற்கத் தயங்கவில்லை.  புஷ்பலதாவைப் பொறுத்த வரை கதாநாயகியாக நடித்த படங்கள் என்பது மிகவும் குறைவு. ஆனால், துடுக்குத்தனமும் துணிச்சலும் நிறைந்த பெண்ணாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். திரையுலக வாழ்வின் இறுதிக் காலத்தில் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் அம்மா வேடங்களை ஏற்றார்.