Thursday, January 29, 2009

6 விக்கெட்டுக்களால் வென்றது இந்தியா


இந்திய இலங்கை அணிகளுக்கிடையே தம்புள்ளையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற் றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டில்ஷான் ஓட்டமெதுவும் எடுக்காது "ரன் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார்.
ஜயசூரிய, சங்கக்கார ஜோடியின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 86 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார 44 ஓட்டங்களில் ஒஜாவின் பந்துக்கு ரெய்னாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். கந்தம்பே 17 ஓட்டங்களில் இஷாந்த் சர்மாவின் பந்தை சஹீர்கானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் விக்öகட்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கையில் ஜயசூரிய தனது ஆளுமையை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தார்.
114 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஜயசூரிய ஒரு சிக்ஸர் 10 பௌண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சஹீர்கானின் பந்தை பட்டேலிடம் பிடி கொடுத்து அவர் ஆட்டம் இழந்தபோது இலங்கை அணி 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அணித் தலைவர் மஹேல 11 ஓட்டங்களிலும் மஹ்ரூப் 35 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். 11 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்த கபுகெதர "ரன் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார்.
இஷாந்த் சர்மா மூன்று விக்கட்களையும் சஹீர்கான், ஒஜா ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
247 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 4 விக் கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.
துஷாரவின் பந்து வீச்சில் ஐந்து ஓட்டங்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். கம்பீர், ரெய்னா ஜோடி இந்திய அணியை தூக்கி நிறுத்தியது. இவர்கள் இருவரும் இணைந்து 113 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 68 பந்துகளுக்கு முகம் கொடு த்து 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முரளிதரனின் பந்தை கந்தம்பேயிடம் பிடி கொடு த்தே அவர் ஆட்டம் இழந்தார்.
கம்பீரின் விக்கெட்டைக் கைப்பற்றிய முரளிதரன் 501 ஆவது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் அதிரடி ஆட்ட நாயகர்களில் ஒருவரான ரெய்னா 54 ஓட்டங்களில் "ரன் அவுட்' முறையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்துவந்த யுவராஜ் 23 ஓட்டங்களு டன் ஆட்டமிழந்தார். டோனி ரோஹித் ஷர்மா ஜோடி நிதானமாக துடுப்பெடுத் தாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. டோனி ஆட்டமிழக்காது 61 ஓட்டங்க ளையும், ரோஹித் ஷர்மா 25 ஓட்டங் களையும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பாக துஷார, மஹ் ரூப், முரளிதரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டார்.

Monday, January 26, 2009

பலப்பரீட்சை நாளை ஆரம்பம்


இந்திய, இலங்கை அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி நாளை தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் மும்பைத் தாக்குதலினால் நடைபெறவில்லை. மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்தியா ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல முடியாது என அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியா விளையாடாததால் அதிருப்தியுற்ற பாகிஸ்தான் அணி தமது நாட்டில் பயங்கரவாதம் இல்லை என்பதை வெளி உலகுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது.
பாகிஸ்தானுக்கு உதவி செய்ய இலங்கை அணி அங்கு சென்றது. பாகி ஸ்தானுடனான தொடர் இரத்துச் செய்யப்பட்டதனால் இந்திய அணி இலங்கையுடன் ஒரு நாள் தொடரை விளையாட விரும்பியது. இலங்கை கிரிக்கெட் சபையும் சம்ம தம் தெரிவித்தது.
பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு தொடர், பாகிஸ்தானில் நடைபெற்ற ஒருநாள் தொடர் ஆகியவற்றில் சம்பியனான இலங்கை அணி நம்பிக்கையுடன் இந்திய அணி யை சந்திக்கிறது.
பங்களாதேஷில் சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகியவற்றுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் மிகுந்த கஷ்டப்பட்டே இலங்கை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலையே தோன்றியது. முரளிதரனின் அதிரடியினால் இலங்கை அணி வெற்றி பெற்றது.

தனது பந்து வீச்சு மூலம் இலங்கை அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த முரளிரதன், தனது துடுப்பாட்டம் மூலமும் இலங்கை அணிக்கு வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
பாகிஸ்தானுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது. இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவற்றை வீழ்த்திய பலமான நிலையில் உள்ள இந்திய அணி நம்பிக்கையுடன் இலங்கையை எதிர்கொள்கிறது.
இலங்கையின் பந்துவீச்சு பலமாக உள்ளது. துடுப்பாட்டம் எதிர்பார்த்தது போன்று பிரகாசிக்கவில்லை. இந்திய அணியின் பந்து வீச்சும் துடுப்பாட்டமும் பலமாக உள்ளன. டோனியின் தலைமைத்துவம் எதிரணிக்கு சவாலாகவே உள்ளது.
வசீம் அக்ரமின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைப்பதற்கு முரளி தயாராகவுள்ளார்.

Sunday, January 25, 2009

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாரகும் அழகிரி



திராவிட முன்னேற்றக் கழகத்தில் அசைக்க முடியாத பிரமுகராக அழகிரி வளர்ந்துவிட்டார். அழகிரி தலையிட்டால் தோல்வி கிடையாது என்ற நம்பிக்கையை அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தி உள்ளன. அழகிரியின் மகன் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று ஆருடம் சொல்லப்பட்ட வேளையில் அழகிரியே அரசியலில் இறங்குவதற்கு திராவிட முன் னேற்றக் கழகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
மதுரையில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அழகிரியின் பங்களிப்பு கட்டியமானது என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியை வேட்பாளராக்குவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முன்வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லாத நிலையில் வெற்றிக்காக பாடுபட்ட அழகிரிக்கும் தென்மண்டலத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மு.க. அழகிரியை களம் இறக்குவதற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம். தமிழக அரசியல் தலைவர்கள் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் கருமமாற்றுகிறார். மூன்றாவது அணியை உருவாக்க ஜெயலலிதா பலமுறை முயன்றார். அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. மூன்றாவது அணி கனவு கலைந்தாலும் பிரதமர் பதவி என்ற அவரது கனவு கலையவில்லை.
இந்தியப் பிரதமராவதற்கு முன்னோடியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா திட்டமிடுகிறார். எம்.ஜி.ஆருக்கும் தனக்கும் வெற்றியைத் தேடித்தந்த மதுரை மாவட்டத்தில் போட்டியிட ஜெயலலிதா விரும்புகிறார். ஜெயலலிதாவின் விருப்பத்தை முறியடிப்பதற்காகவே அழகிரியை வேட்பாளராக்க திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிக்கிறது.

மதுரையில் நடந்த மூன்று இடைத் தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. மூன்று வெற்றியின் பின்னணியிலும் அழகிரியின் செல்வாக்கு உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியின் வேட்பாளராக அழகிரி அறிவிக்கப்பட்டால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை மட்டுமல்லாது அழகிரியின் செல்வாக்கையும் பல மடங்கு உயர்த்தும். இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அசைக்க முடியாத பிரமுகராக அழகிரி உயர்ந்துவிடுவார்.
இதேவேளை இலங்கைத் தமிழர்களுக்காக திருமாவளவன் நடத்திய சாகும்வரை உண்ணாவிரதம் இலங்கை அரசிடமும் இந்திய மத்திய அரசிடமும் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரது உண்ணாவிரதம் தமிழக அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது
.
திருமாவளவனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் ஆற்றிய உரை தமிழக முதல்வரை சஞ்சலப்படுத்தி உள்ளது. தனது அரசாங்கத்தைக் கவிழ்க்க டாக்டர் ராமதாஸ் முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகம் முதல்வருக்கு எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள்படும் துன்பதுயரங்கள் களையப்பட வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசியல் தலைவர்களிடம் உள்ளது. ஆனால் தமிழக அரசியல் சதுரங்கத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான சக்திகள் பல முனைகளாகப் பிரிந்துள்ளன.
டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் முதல்வர் கருணாநிதி தலைமையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். இலங்கைத் தமிழர்களின் விடிவுக்காகப் பதவியையும் துறக்கத் தயாராக உள்ள முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியை கைவிடத் தயாராக இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் புலிகளுக்கு உதவி செய்தது போலாகி விடும் என்ற பயத்தில் காலத்தைக் கடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியை துறக்க முடியாமலும் திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரை கைவிட முடியாமலும் தவிக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறனின் பணி வேறு விதமாக உள்ளது. யாரையும் எதிர்பார்க்காது தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் செயற்பாடுகள் திருப்தி தருவதாக இல்லை என்று அவர் கருதுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவும் இலங்கைத் தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி வரும் தா.பாண்டியனும் விடுதலைப் புலிகளை ஜென்ம விரோதியாகக் கருதும் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்காக இவர்கள் இருவரும் உரத்துக் குரல் கொடுக்கையில் ஈழத்தமிழர் என்ற ஒரு இனமே இல்லை என்று ஜெயலலிதா வசைபாடி உள்ளார். ஜெயலலிதா கோ.சுப்ரமணியம் சுவாமி ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் அது புலிகளுக்கு செய்யும் உதவியாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு சுமுகமான தீர்வை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தாவிட்டால் தமிழகத்தின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பாதகமானதாகவே அமையும்.
தமிழகத்தில் செல்வாக்கு இழந்து நிற்கும் பாரதீய ஜனதாக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வகை செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் இத்தேர்தல் வியூகத்தை உடைப்பதற்கு தமிழக முதல்வரும் காங்கிரஸ் கட்சியும் முயற்சிக்கின்றனர்

.வர்மா
வீரகேசரி வாரமலர் 25 01 2009

Wednesday, January 21, 2009

ஒபாமாவின் ரூ.2.2 கோடி கார்


அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள பராக் ஒபாமா பயன்படுத்தும் காரில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. அதன் விவரம்:
? 18 அடி நீளமும், 5 அடி 10 அங்குலம் உயரமும் கொண்ட இந்த கெடிலாக் நிறுவன சொகுசு காரின் விலை ரூ.2.2 கோடி.
? அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகம் செல்லும் இந்த காரில் சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
? புறப்பட்ட 15வது விநாடியில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
? ஒரு லிட்டர் டீசலுக்கு 2.8 கி.மீ. து}ரம்தான் செல்லும்.
? இந்த காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. காரை குண்டு துளைக்காமல் இருக்க ஸ்டீல், அலுமினியம், டைட்டானியம் கலந்த தகடு பொருத்தப்பட்டுள்ளது.
? கண்ணி வெடி வெடித்தாலும் சேதம் ஏற்படாமல் தடுக்க 12 செ.மீ. கனமான தகடு காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. கார் கதவுகள் முக்கால் அடி கனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
? ஏவுகணை வீசி தாக்கினாலும் சேதமடையாத டீசல் டேங்க் காரில் பொருத்தப்பட்டுள்ளது.
? தீயணைப்பு கருவிகள், துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் காரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
? டயர்கள் வெடித்தாலும் தொடர்ந்து காரை ஓட்டலாம்.
? டிரைவர் சி.ஐ.ஏ.வால் பயிற்சி அளிக்கப்பட்டவர். தீவிரவாத தாக்குதல் உட்பட எந்த ஒரு அபாயகரமான சு10ழ்நிலையிலும் வேகமாக வண்டியை ஓட்ட அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
? நம்பர் பிளேட் பகுதியிலும், பக்கவாட்டிலும் இரவிலும் தெளிவாக படம் எடுக்க கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
? காரில் உள்ள ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் கார் எங்கு இருக்கிறது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்கலாம்.
? பின் பகுதியில் உள்ள இருக்கையில் ஒபாமா உட்கார்ந்து இருப்பார். அவருக்கு முன் இன்டர்நெட் வசதியுடன் ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப் கம்யூட்டர் உள்ளது. மேலும் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியும், துணை ஜனாதிபதி மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகனுடன் உடனடியாக பேச தொலைபேசிகளும் வைக்கப்பட்டுள்ளது.
? ஆபத்து காலத்தில் உதவுவதற்காக ஒபாமாவின் ரத்த வகையை சேர்ந்த ரத்தமும், ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் வைக்கப்பட்டிருக்கும்.

விடை பெற்றார் புஷ்


கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக இருந்த புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்படுவதற்கு முன் கடைசி நாளில் என்னென்ன செய்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவி காலத்தின் கடைசி நாளில் குற்றவாளிகளின் தண்டனை குறைப்புக்கு உத்தரவிடுவது வழக்கம். அதன்படி, 189 பேரை மன்னித்து விடுதலை செய்யவும். 9 பேரின் தண்டனையை குறைக்கவும் புஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இங்கிலாந்து, ரஷ்யா, ஜார்ஜியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், தென் கொரியா, இஸ்ரேல், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் புஷ் பேசினார்.
முன்னாள் அதிபர் புஷ் தனது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் குடியேறி உள்ளார்.
அதிபர் பதவியை ஏற்பதற்கு முன் நேற்று காலையிலேயே ஒபாமா, மனைவி மிஷெலுடன் வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவர்களை புஷ் தனது மனைவி லாராவுடன் வரவேற்றார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க இருந்த ஜோ பிடனும் தன் மனைவியுடன் வந்திருந்தார். அவர்களுக்கு புஷ் தேநீர் விருந்து கொடுத்தார்.
பின்னர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர், ஒபாமாவும், புஷ்சும் பதவி ஏற்பு விழா நடக்கும் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு காரில் சென்றனர். புதிய அதிபராக ஒபாமா பதவி ஏற்றதும், புஷ், தனது மனைவி லாராவுடன் விடைபெற்றார். அவர்களை புதிய அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
வாஷிங்டனில் உள்ள ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் புஷ், மனைவியுடன் புறப்பட்டார். அங்கிருந்து விமானப்படை பயணிகள் விமானத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிட்லாண்ட் நகருக்கு சென்றனர். அங்கு அவருக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து கார் மூலம் க்ராவ்போர்டு நகரில் உள்ள பண்ணை வீட்டில் புஷ் குடியேறினார்.

இடக்கையில் வரலாறு படைத்தோர்!


அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக் கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்
இவர் தவிர அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் புஷ் (சீனி யர்), பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், தாமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமேன் ஆகியோரும், அமெரிக்க துணை அதிபராக இருந்த நெல்சன் ராக்ஃபெல்லர், ஹென்றி வாலேஸ் ஆகியோரும் இடது கைப்பழக்கம் உடையவர்கள் தான்
நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட், அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸôண் டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின் சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பாவெல் பெüடன், கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்று வித்த ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது, 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது, 6-வது ஜார்ஜ் ஆகியோர் உள்பட வர லாறு படைத்த பலர் இடது கைப்பழக்கம் உடையவர்களே.

Tuesday, January 20, 2009

வாரிசுகளின் வீழ்ச்சியும் எழுச்சியும்


தமிழ்த்திரை உலகில் பல புதுமைகளைச் செய்தவர் பாராதிராஜா. இவர் அறிமுகப்படுத்திய நாயகிகள் மிகச் சிறந்த நடிகைகளாக இன்றும் திகழ்கின்றனர். ராதா, ராதிகா, ரதி,ரஞ்சனி என்று ஆர் எழுத்தில் இவரது அறிமுகங்கள் திரை உலகில் தமது வெற்றிக் கொடியை நட்டனர்.
நடிக்க தெரிந்தவர்களை தேடிப்பிடித்து அறிமுகப்படுத்திய பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக்கிப் பார்க்க ஆசைப்பட்டார். தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தன் மகனை நாயகனாக்க முயற்சி செய்தார். மிகச் சிறந்த படம் என பெருமை பெற்ற கடல் பூக்கள் மனோஜை குப்புற விழுத்தியது. தமிழ்த் திரை உலகில் பிராமாண்டத்துக்கு சொந்தக்காரர்களில் ஒருவரான கே.டி.குஞ்சுமோன் தன் மகன் எபி நாயகனாக்க முயற்சி செய்து கடனாளியானார். கோடீஸ்வரன் என்ற படம் இன்னமும் வெளிவரவில்லை. ஆனால், ஏ.பி. குஞ்சுமோன் கடனாளியாகிவிட்டார்.
ஏ.எல்.அழகப்பன் தன் மகன் உதயாவை கதாநாயனாக்க ஆசைப்பட்டு சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் திருநெல்வேலி என்ற படத்தை எடுத்தார். பெயருக்கு ஏற்றாற் போல் திருநெல்வேலி அல்வா கொடுத்து விட்டது.
ஐலவ் இந்தியா, மகா பிரபு போன்ற படங்களைத் தயாரித்த ஜி.கே. ரெட்டி, தன் மகன் அஜயை நாயனாக்க பூப்பறிக்க வருகிறோம். லவ்மரேஜ் என்ற இரண்டு படங்களை தயாரித்தார். இரண்டு படங்களும் படுதோல்வியடைந்ததால் சினிமாவை விட்டு வெளியேறி விட்டார்.

தமது மகன் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்ததனால் கதையில் கோட்டை விட்டவர்கள் திரை உலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டார்கள்.
தன் மகன் விஜயை நாயகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகர் பணத்தைச் செலவு செய்து படத்தைத் தயாரித்தார். படங்கள் சுருண்டு விட்டன. விஜய்யை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விக்ரமனின் பூவே உனக்காக வெவாரிசுகளின் வீழ்ச்சியும் எழுச்சியும் யானதும் விஜயின் புகழ் உயரத் தொடங்கியது. இன்னமும் இறங்கவில்லை.
ஆர்.பி. சௌத்ரி தன் மகன் ஜீவாவை ஆசைஆசையாய் படத்தின் மூலம் நாயகனாக்கினார். படம் படுத்து விட்டது. கவலைப்படாத சௌத்திரி தித்திக்குதே மூலம் மீண்டும் முயற்சி செய்தார். அதுவும் தித்திக்கவில்லை. சற்றும் சோர்வடையாத சௌத்தரி இன்னொரு மகன் ரமேஷை ஜித்தன் மூலம் நாயகனாக்க முயற்சி செய்தார். அதுவும் கை கூடவில்லை.
சத்தியராஜ் திரை உலகில் வலம் வர உதவி செய்த மாதம்பட்டி சிவகுமார் தன் மகன் சத்தியனை கதாநாயகனாக்க முயற்சி செய்து பணத்தை வாரி இறைத்தார். அவரின் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது
.
துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன், திருடா திருடி மூலம் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் பரபரப்பான ஹீரோவானார்.
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. ஜெயம் ஜெயித்ததும் இவரின் பெயருக்கு முன்னால் ஜெயம் ஒட்டிக் கொண்டது. எடிட்டர் மோகன் தன் மகன் ஜெயம் ரவியை நாயகனாக்கி மகிழ்ந்தார்.
தமிழ்த்திரை உலகில் பரபரப்பான நாயகர்களில் ஒருவரானார் ஜெயம் ரவி.
ஹீரோக்களின் சம்பளத்தை அதிகமாக்கி ஆச்சரியப்பட வைத்தவர் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தன் மகன் ரவி கிருஷ்ணாவை நாயகனாக்கிப்பார்க்க ஆசைப்பட்டு 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தைத் தயாரித்தார் படம் பெரு வெற்றி பெற்றது.ரவி கிருஷ்ணா காணாமல் போய்விட்டார்.
ரமணி
மித்திரன் 18 01 2009

Monday, January 19, 2009

அந்தக்காலத்து எஸ்.எம்.எஸ்


எஸ்.எம். எஸ். என்பது இன்றைய சமுதாயத்துடன் ஒன்றி விட்டது. 1940 களில் எஸ்.எம்.எஸ்.என்றால் பிரபல இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைக் குறிக்கும் வார்த்தையாக அமைந்தது.
கவியரசு கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமையை இனம் கண்டவர் ரி.எம். சௌந்தரராஜனின் முதலாவது பாடலுக்கு இசை அமைத்தவர். எம்.ஜி.ஆரின் முதலாவது கொள்கை விளக்கப் பாடலை உருவாக்கியவர் போன்ற பெருமைகளை உடையவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு.
மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்த இவரின் குடும்பத்துக்கும் இசைக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
முத்து சாமி நாயுடு என்ற பொலிஸ்காரனுக்கு 1914 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பையா நாயுடு. திருநெல்வேலி மாவட்ட கடையநல்லூரில் பிறந்த சுப்பையா நாயுடு சிறுவயதில் அடங்காத பிள்ளையாக இருந்தார். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தால் மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில் சுப்பையா நாயுடுவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார் தகப்பன்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி சுப்பையா நாயுடுவின் மேல் இரக்கப்பட்டு சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்காது தனது பொறுப்பில் வளர்த்தார்.
துடுக்குத்தனம் மிகுந்த அடங்காத சிறுவன் சுப்பையா நாயுடு அங்கும் தன் கை வரிசையைக் காட்டினார். சுப்பையா நாயுடுவின் நடவடிக்கை
பிடிக்காததனால் அவரை மீண்டும் தகப்பனிடம் அனுப்பி வைத்தார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி.
அடங்காத பிள்ளையைஅடித்து வளர்த்தார் தகப்பனார். வீட்டிலே இருந்தால் பிரச்சினைஅதிகமாகும் என்பதனால் 100 ரூபா காசுடன் வீட்டை விட்டு வெளியேறினார். சுப்பையா நாயுடு. சிங்கப்பூருக்குச் சென்றால் கை நிறைய சாம்பாதிக்கலாம் என்று அறிந்ததும் சிங்கப்பூர் செல்வதற்காக தஞ்சாவூருக்குச் சென்றார்.
தஞ்சாவூரில் முகாமிட்டிருந்த ஜகந்நாத ஐயரின் நாடகக் கம்பனியில் இருந்த இரண்டு சிறுவர்கள் ஓடி விட்டனர் என்ற செய்தி பரபரப்பாக இருந்த வேளையில் தான் சுப்பையா நாயுடு தஞ்சைக்குச் சென்றார். சிறுவனான சுப்பையா நாயுடுவைப் பார்த்த ஒருவர் நாடகக் கம்பனியில் இருந்து ஓடி வந்த சிறுவன் என்று நினைத்து அவரைப் பிடித்துக் கொடுக்க முயற்சி செய்தார். நிலைமையை உணர்ந்து சுப்பையா நாடக கம்பனி எங்கே இருக்கிறது என்று கேட்டு சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
விதி சுப்பையா நாயுடுவை நாடகக் கம்பனியில் இணைத்தது. அதன் காரணமாக மிகச் சிறந்த இசை அமைப்பாளர் ஒருவர் தமிழகத்திரை உலகுக்கு கிடைத்தார். சுப்பையா நாயுடுவின் குரல்வளம் நன்றாக இருந்ததால் அவருக்கு நாடகக் கம்பனியில் இடம் கிடைத்தது. ஜாகந்நாதையரிடமிருந்து நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை பிறந்தபோது சுப்பையா நாயுடு அவருடன் சென்றார். சுவாமி ராஜமாணிக்கப்பிள்ளையின் ஆசியுடன் தனது சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு
.
நவõப்ராஜ மாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பனியில் நடிகராக இருந்த சி.எஸ். ஜெயராமன் தந்தையிடம் இசைப்பயிற்சி செய்யும் போது அதனை கவனமாகக் கேட்டு சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு. இசைக்கலைஞர் டி.என். சுப்பிரமணிய பாகவதரிடம் கீர்த்தனையும், ராஜகோபால் அய்யரிடம் ஆர்மோனியமும் கற்று தனது சங்கீத அறிவை வளர்த்தார். சுப்பையா நாயுடு கம்பனியின் முழு நேர ஆர்மோனியக் கலைஞரானார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் பக்த ராமதாஸ் என்ற நாடகம் 1935 ஆம் ஆண்டு திரைப்பட மானது. அப்போது எம்.எஸ். சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை திரையில் ஒலித்தது. அதன் பின்னர் கோவை சென்றல் ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்துக்கு ஆர்மோனியக் கலைஞராக கடமையாற்றும் சந்தர்ப்பம் எம்.எஸ். சுப்பையா நாயுடுவுக்குக் கிடைத்தது. ரம்பையின் காதல், பிரகலாதா, ஆர்யமாலா, ஜதகல பிரதாபன், சாலிவாகனன் என்மகன் ஆகிய படங்களில் சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை ஒலித்தது.எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த ராஜகுமாரி என்ற படத்தில் சங்கீத டைரக்ஷன் மெட்டுக்கள் எம்.எஸ். சுப்பையா நாயுடு என்ற பெயர் ஜொலித்தது
ஜுபிடரின் அபிமன்யு படத்தின் காதல் காட்சிக்காக எழுதப்பட்ட பாடலுக்கு எஸ்.எம். சுப்பையா நாயுடு பலவிதமான மெட்டுக்களை அமைத்தார் எனினும், சரியாகப் பொருந்தவில்லை. ஸ்ரூடியோவில் உதவியாளராக இருந்த பையன் போட்ட மெட்டை தற்செயலாக கேட்ட சுப்பையாநாயுடு அந்த மெட்டை பயன்படுத்தினார். திருச்சி லோகநாதனும் ஜீவரத்தினமும் இணைந்து பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகவும் பிரபல்யமானது. அப்பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் என்று போற்றப்படும் எம்.எஸ். விஸ்வநாதன். இப்பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் தான் இசையமைத்தார் என்ற உண்மையை பின்னர் சுப்பையா நாயுடு வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு சங்கீத் டைரக்ஷன், மெட்டுக்கள் எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய படங்களுக்கு ஒருவர் இசையமைக்க இன்னொருவர் மெட்டமைப்பார். கன்னியின் காதலி படத்தின் 10பாடல்களுக்கு சுப்பையா நாயுடுவும் ஐந்து பாடல்களுக்கு சுப்ப ராமனும் இசையமைத்தனர். மோகினி படத்துக்கு சுப்பராமனும் சுப்பையா நாயுடுவும்இசை அமைத்தனர். திகம்பர சாமியார் படத்துக்கு ஜி.ராமநாதனும், சுப்பையா நாயுடுவும் இசை அமைத்தனர்.
கிருஷ்ண விஜயம் படத்துக்கு சுப்பையா நாயுடுவும். சி.எஸ். ஜெயராமனும் இசையமைத்தனர். பாப நாசம் சிவன் எழுதிய ஐந்து பாடல்களுக்கு அவரே மெட்டமைத்தார். சுப்பையா நாயுடுதான் வாத்திய இசையை சேர்த்தார்.
எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களையும், பிரசாரப்பாடல்களையும் பாடியவர் ரி.எம். சௌந்தரராஜன் எம்.ஜி. ஆருக்காக ரி.எம். சௌந்தரராஜன் பாடிய முதலாவது பாடல் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாக உள்ளது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு.
பட்டுக்கோட்டையார் பாப்பாக்களுக்குக் கூறிய அறிவுரை திருடாதே பாப்பா திருடாதே எம்.ஜி. ஆரின் கொள்கை விளக்கப்பாடல்களில் ஒன்றான இப்பாடலை தமிழ்த் திரையுலகுக்குத் தந்தவர் சுப்பையா நாயுடு.
19ஆம் நூற்றாண்டில் தமிழை வாழவைத்த தெய்வீகக்கவிஞர் வள்ளலார். இவருøடய பெருமையுடன் "நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என்ற விருத்தத்தை மிகவும் நேர்த்தியாக சூல மங்களம் ராஜ லக்ஷ்மியின் குரலில் தவளவிட்டவர்.
கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் காலத்தால் அழியாது சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று. காரைக் குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு போட்டியாக ஜானகியின் குரல் ஒலித்தது.
சிங்கார வேலனே தேவா என்ற பாடலுக்கான நாதஸ்வர இசையை ஒலிப்பதிவு செய்து விட்டு நாதஸ்வர ஸ்ருதிக்கேற்ப பெண் குரலைத் தேடினார்கள். பி.லீலா, லதா மங்கேஸ்கர் எனப்பலரும் நாயனத்தின் சுருதிக்கு இசைவாக பாட தங்களால் முடியாது எனக் கூறிவிட்டனர். நாதஸ்வர இசைக்கு லீலாவின் குரல் இசைவாக இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் சென்று கேட்டார்கள். ஜானகியின் குரல் நாதஸ்வர இசைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று லீலா கூறினார்.
லீலாவின் கூற்று பொய்க்கவில்லை. நாதஸ்வர இசைஎது ஜானகியின் குரல் எது என்ற வேறுபாடு காண முடியாத வகையில் இரண்டும் இணைந்துள்ளன.1962ஆம் ஆண்டு தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசையையும், ஜானகியின் பாடலையும் ஒன்றாக ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவாளர் ஜீவா பாராட்டுக்குரியவர்.
ஆமேரி ராகத்தில் அமைந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல்தான் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது.
தியாகராஜா பாகவதர் பாடிய "ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற வர்ண மெட்டில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதடி' என்ற பாடலை ரி.எம். சௌந்தரராஜனின் குரலில் வெளியிட்டார். இன்றைய ரீ மிக்ஸ்பாடல்களுக்கு இப்பாடல் முன்னோடியாக உள்ளது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். திருடாதே பாப்பா திருடாதே. சிங்கார வேலனே தேவா மட்டுமல்ல 1969 ஆம் ஆண்டு மன்னிப்பு படத்தில் சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான "நீ எங்கே என் நினைவுகள் அங்கே', "வெண்ணிலா வானில் வரும் வேளை' போன்ற பாடல்களும் அவரின் திறமைக்கும் சான்றாக உள்ளன.
ரமணி
மித்திரன் 04/ 11.01.2009

பங்களதேஷ் வீழ்த்தியது சிம்பாப்வே


சிம்பாப்வே பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் சிம்பாப்வே அணி இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தேர்வு செய்தது. 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த பங்களாதேஷ் 124 ஓட்டங்கள் எடுத்தது.
ரக்புல் ஹசன் 28 ஓட்டங்களையும் முஸ்ரபுல் ரஹீம் 22 ஓட்டங்களையும் எடுத்தனர். பிறைசின் பந்து வீச்சில் பங்க ளாதேஷ் வீரர்கள் தடுமாறினார்கள். இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்கள் பந்து வீசிய பிறைஸ் 22 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிளேக் மூன்று விக்கெட்டுகளையும், ரெயின் ஸ்ரூட், சிக்கும்புரா, மசகட்ஸா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 48.1 ஓவர்கள் பந்து வீசிய சிம்பாப்வே வீரர்கள் ஐந்து ஓட்டங்களை மட்டும் உதிரிகளாகக் கொடுத்தனர்.
125 என்ற இலகுவான ஓட்ட எண்ணிக்கையுடன் வெற்றிக்காகக் களமிறங்கிய சிம்பாப்வே அணி 49.2 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்கள் எடுத்து இரண்டு விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
உல்லர் அதிகபட்சமாக 24 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
ஆறு பந்துகளில் ஆறு ஓட்டங்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் துடுப்பெடுத்தாடிய பிறைஸ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து வெற்றியை தேடிக் கொடுத்தார்.
மோட்டாசா, சஹீப் அல் ஹசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ருபல் ஹசன், மொஹமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சிம்பாப்வே வீரர் றைமன் பிறைஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் சிம்பாப்வே முதல் வெற்றியை பெற்றுக் கொண்டது. பங்களாதேஷில் நடந்து முடிந்த முத்தரப்புப் போட்டியில் மூன்றாவது நாடாகக் கலந்துகொண்ட இலங்கை அணிக்கு சிம்பாப்வே பங்களாதேஷ் ஆகிய இரண்டும் கடும் நெருக்குதலை கொடுத்தன.

Sunday, January 18, 2009

திருமங்கலம் வெற்றியால் குதூகலிக்கும் தி.மு.க


திருமங்கலம் இடைத் தேர்தலின் வெற்றியினால் திராவிட முன்னேற்றக்கழகம் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளது. இந்தத் தேர்தலின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததனால் மு.க. அழகிரிக்கு தென்மண்டல திராவிட முன்னேற்றக்கழக அமைப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை அரசியலில் அழகிரிøயத் தவிர்த்து எதனையும் செய்ய முடியாது. திராவிட முன்னேற்றக்கழகம் 2006 ஆம் ஆண்டு ஆட்சிப் பீடமேறியதில் இருந்து இதுவரை மூன்று இடைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. மூன்று இடைத்÷தர்தல்களும் மதுரையிலேயே இடம் பெற்றன. மூன்று இடைத்தேர்தல்களின் வெற்றிக்கு பின்னால் மு.க. அழகிரியின் பங்களிப்பு உள்ளது.
மதுரை மத்திய தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மறைவினால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மதுரை மேற்குத் தொகுதியின் உறுப்பினரான அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் சண்முகம் மரணமடைந்ததனால் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் வீர இளவரசனின் மறைவினால் நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் லதா அதியமான் மிகப் பெரிய வெற்றிபெற்றுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்களின் வெற்றியின் பின்னால் மு.க. அழகிரியின் செல்வாக்கு இருப்பதை மறுக்கமுடியாது.
திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியின் பலம் குறைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியின் பலம் கூடிய நிலையில் லதா அதியமான் பெரு வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பெரும் எடுப்பில் பிரசாரம் செய்தன. கடந்த தேர்தலின் போது தனித்துப்போட்டியிட்ட அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காக களத்தில் இறங்கியது. கடந்த தேர்தலின் போது மூவேந் தர் முன்னேற்றக் கழகம் 7790 வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்தக் கட்சியின் வாக்குகள் எல்லாம் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு சென்று விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றியை தக்கவைப்பதற்காக வைகோ சூறாவளிப் பிரசாரம் செய்தார். தலைவர்கள் அணி மாறினாலும் தொண்டர்கள் அவர்களின் பின்னால் செல்லவில்லை என்பதை திருமங்கலம் இடைத் தேர்தலின் முடிவு உணர்த்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெற்றோல் கிடைக்காது மக்கள் திண்டாட்டம், மின் தடையால் தமிழகம் அனுபவிக்கும் அசௌகரியம், லொறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தினால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது மக்கள் அசௌகரி யம் போன்ற காரணங்களால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றியில் சந்தேகம் ஏற்பட்டது. எனினும் இந்தத் தடைகளையும் தாண்டி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்றது. தமிழக அரசின் செயற்பாடுகளை திருமங்கலம் தொகுதி மக்கள் அங்கீகரித்துள்ளமையே வெளிக்காட்டுகிறது
.
திருமங்கலம் தொகுதியில் பணம் கைமாறியதாக பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. யார் பணம் கொடுத்தாலும், மக்கள் வாங்கினார்கள். ஆகையினால் வாக்காளர்களுக்கு வருமானம் தந்த இடைத் தேர்தல் என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. பணம் பட்டுமாடா நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியதே தவிர கையும் மெய்யுமாக யாரும் அகப்படவில்லை.
திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் 38,399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் 40,923 வாக்குகளைப் பெற்றார். இடைத் தேர்தலில் 79,422 வாக்குகள் பெற்று மதுரை வரலாற்றில் பெரும் சாதனை செய்துள்ளõர்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் 4911 வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் 6834 வாக்குகள் குறைவாகப் பெற்றதுடன் கட்டுப்பணத்தையும் இழந்துள்ளார். விஜயகாந்தின் அதீத வளர்ச்சியை இந்த இடைத்தேர்தலின் தோல்வி கேள்விக் குறியாக்கி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும் திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கத்தை மோசமாக விமர்சித்தும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தை தாக்கியும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத் தன.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பிரசாரத்தை நடத்தியது.
எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை மக்களுடன் தான் கூட்டணி என்று மேடை தோறும் கர்ஜித்து வந்த விஜயகாந்தின் கட்சி வேட்பாளர் கட்டுப்பணம் இழந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த முதல்வர் கனவில் மிதக்கும் விஜயகாந்துக்கு இந்தப் பின்னடைவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏதாவது கட்சியுடன் இணைய வேண்டும் என்ற உண்மையை திருமங்கலம் வாக்காளர்கள் விஜயகாந்துக்கு உணர்த்தியுள்ளனர்.
ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோருடன் முதல்வர் போட்டியில் கலந்து கொண்ட சரத்குமாரின் வேட்பாளர் வெறும் 837 வாக்குகளைப் பெற்று சரத்குமாரை அதிர்ச்சிடைய வைத்துள்ளனர். பேரம் பேசும் சக்தி எதுவும் இல்லாத சரத்குமாரின் அரசியல் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மதில் மேல் பூனையாக இருந்த டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காரசாரமான அறிக்கைவிட்டு முதல்வர் கருணாதிநிதியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய டாக்டர் ராமதாஸுக்கு திருமங்கலம் தேர்தலின் முடிவு படிப்பினையை ஊட்டியுள்ளது.
இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது சகஜம் தான். எனினும் வட மாநிலத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் கட்சிகள் தோல்வியடைந்துள்ளன.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராவதற்காக இடைத்தேர்தலில் போட்டியிட்ட சிபு சோரன் தோல்வியடைந்தார். மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். நந்தி கிராமத்தில் 5000 வாக்குகளால் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி இடைத்தேர்த்லில் 40000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
எனவே வட மாநில இடைத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசின் ஆட்சிக்கு திருமங்கலத்தின் மக்கள் அங்கீகாரமளித்துள்ளனர்.
திருமங்கலம் இடைத்தேர்தலின் வெற்றிக்காக பாடுபட்ட மு.கா. அழகிரிக்கு தென்மண்டலத் திராவிட முன்னேற்றக்கழக அமைப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய முதல்வர் இந்த வெற்றிக்காக அழகிரிக்கு பரிசு வழங்கப்படும் என்றார். முதல்வர் உரையாற்றிய 18 மணித்தியாலயத்தினுள் அழகிரிக்கு கட்சியின் பொறுப்பான பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு கட்சியின் பொறுப்பான பதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் தான் அவருக்கு கட்சியின் பொறுப்பான பதவி வழங்கப்பட்டது. சூட்டோடு சூடாக அழகிரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி நியமன எம்.பி.யாகி மத்திய அமைச்சராக உள்ளார். விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் கட்சியின் பொறுப்பானதொரு பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். சரத்குமார் தன் மனைவி ராதிகாவுக்கு உபதலைவர் பதவி வழங்கி உள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக இவர்கள் எதனையும் செய்யவில்லை.
மூன்று இடைத்தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியைத் தேடிக் கொடுத்த அழகிரிக்கு முக்கிய பதவி கொடுத்ததை திராவிட முன்னேற்றக்கழகத்தில் உள்ள எவரும் எதிர்க்கவில்லை. தென் மண்டலத்தில் குறைந்திருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் செல்வாக்கை அழகிரி உயர்த்துவார் என்ற நம்பிக்கை கழகத்தின் தலைவர்களிடம் உள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட விமர்சனம் செய்ய முடியாத வகையில் மகனுக்கு பொறுப்புக்கொடுத்து அழகு பார்த்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
வர்மா
வீரகேசரி வார வெளியீடு 18 01 2009

அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி


தென்னாபிரிக்க அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையே ஹார்பட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்கள் எடுத்தது.
முதலாவது ஒருநாள் போட்டியில் 79 ஓட்டங்கள் எடுத்த வானர் ஐந்து ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இரண்டாது இணைப்பாட்டமாக களமிறங்கிய மாஸ், பொன்டிங் ஜோடி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 72 பந்துகளுக்கு முகம் கொடுத்த பொன்டிங் 64 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
ஹசி 28, ஹுசே 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். மாஸ் 78 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
ஹெய்டன் ஆட்டம் இழக்காது 23 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டம் இழந்தனர்.
நிதினி மூன்று விக்கெட்டுகளையும் ஸ்ரெயினி, கலிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
250 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி பரபரப்பான போட்டியில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் எடுத்து ஐந்து ஓட்டங்களில் தோல்வியடைந்தது.
அம்லா எட்டு ஓட்டங்களிலும் கிப்ஸ் 19 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். கைல்ஸ், வில்லியம் ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. 76 பந்துகளுக்கு முகம் கொடுத்த கைல்ஸ் 72 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். டிவில்லியஸ் 44 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். மக்கன் மோர்க்கிட் எட்டு ஓட்டங்களில் வெளியேற டும்மினி 35 ஓட்டங்களில் ரன்அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்க அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் எடுத்தது. பௌச்சர் ஆட்டம் இழக்காது 37 ஓட்டங்களையும் மோர்கிட் ஆட்டம் இழக்காது 11 ஓட்டங்களையும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணி வீரர் மார்க்ஸ் தெரிவு செய்யப்பட்டார். அவுஸ்திரேலிய தென்னாபிரிக்க ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Wednesday, January 14, 2009

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்


பங்களாதேஷில் நடைபெற்ற பரபரப்பான மூன்றாவது லீக் போட்டியில் பங்களாதேஷ் இலங்கையை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
சிம்பாப்பே, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது போட்டியில் சிம்பாப்பே, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்றது.
சிம்பாப்பே அணி 38 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இலங்கை, சிம்பாப்பே ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
சிம்பாப்பேயிடம் தோல்வியடைந்த பங்களாதேஷ் இலங்கையை எதிர்த்து விளையாடியது.
இலங்கையை தோற்கடித்தால் தான் இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்ற இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் களத்தடுப்பை தேர்வு செய்தது. போதிய வெளிச்சம் இன்மையினால் 31 ஓவர்கள் விளையாடுவதென நடுவர்கள் தீர்மானித்தனர்.
முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 30.3 ஓவர்கள் சகல விக்கட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது.
ஜயசூரிய அதிகபட்சமாக 54 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் மிகக் குறைந்த ஓட்டங்களையே எடுத்தனர். அறிமுக வீரரான ருபல்ஹசன், மோட்டரசா ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணி வீரர்கள் மளமளவென ஆட்டம் இழந்தனர்.
மஹேல ஜயவர்த்தன, கபுகெதர ஆகியோர் தலா 28 ஓட்டங்களும் முபாரக் 10 ஓட்டங்களும் எடுத்தனர்.
தரங்க, சங்கக்கார, துஷார, மெண்டிஸ் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காது ஆட்டம் இழந்தனர்.
5.3 ஓவர்கள் பந்து வீசிய ருபல் ஹசன் 33 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார். மோட்டரசா மூன்று விக்கட்டுகளையும் மஹபுல் அலாம், நயிம் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
148 என்ற இலகுவான ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு களமிங்கிய பங்களாதேஷ் 23.5 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 151 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
சஹிப் அல் ஹசன் தனி ஒருவராக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷûக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
11 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பங்களாதேஷின் மூன்று விக்கட்டுகள் வீழ்ந்ததனால் இலங்கை வீரர்கள் உற்சாகமடைந்தனர்.
நான்காவது இணைப்பாட்டமாக விளை யாடிய மொஹமட் அஷ்ரபுல், சஹிப் அல் ஹசன் ஆகியோர் 39 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து தெம்பூட்டினர்.
45 பந்துகளுக்கு முகம் கொடுத்த சஹிப் அல் ஹசன் நான்கு சிக்சர், ஒரு பௌண்டரி அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.
பங்களாதேஷ் அணி 102 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 26 ஓட்டங்கள் எடுத்த மொஹமட் அஷ்ரபுல் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய இக்பால் ஹசன் மூன்று ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அப்போது பங்களாதேஷ் அணி 126 ஓட்டங்கள் எடுத்தது.
சஹிட் அல் ஹசன் நயீம் இஸ்லாம் ஜோடி பங்களாதேஷûக்கு வெற்றியைத் தேடி கொடுத்தது.
சஹீப் அல் ஹசன் ஆட்டம் இழக்காது 92 ஓட்டங்கள் எடுத்தார். 69 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் இரண்டு சிக்சர் 10 பௌண்டரி அடங்கலாக 92 ஓட்டங்களை எடுத்தார்.
ஆறு பந்துகளுக்கு முகம் கொடுத்த நயிம் இஸ்லாம் இரு சிக்சர், ஒரு பௌண்டரி அடங்கலாக ஆட்டம் இழக்காது 12 ஓட்டங்கள் எடுத்தார்.
குலசேகர, மெண்டிஸ், துஷார ஆகியோர் தலா ஒரு விக்கட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக சஹிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

Monday, January 12, 2009

இலகுவாக வென்றது இலங்கை


பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் சிம்பாப்வே அணியை
வென்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி
முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மிகுந்த
சிரமத்தின் மத்தியில் ஆறுவிக்கெட்டுகளை இழந்து
210 ஓட்டங்கள் எடுத்தது.
சிம்பாப்வே வீரர்களின்பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத இலங்கை அணி வீரர்கள் வரிசையாக வெளியேறியதால் இலங்கை மிகக் குறைந்த
ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. இலங்கை அணி ஐந்து விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சிம்பாப்வே அணியின் கைமேலோங்கி இருந்த முபாரக் மத்தியூஸ், துஷார, ஆகியோர் இலங்கையின் மானத்தைக் காத்தனர்.
சிம்பாப்வே அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததினால் இலங்கை அணிவீரர்கள்
ஓட்டங்கள் குவிக்க சிரமப்பட்டனர். இலங்கை அணி
51 ஒட்டங்கள் எடுத்திருந்தபோது 22 ஓட்டங்கள் எடுத்த ஜயசூரிய ஆட்டம் இழந்தார். சிம்பாப்வே அணியை துவம்சம் செய்யும் நோக்குடன் களமறிங்கிய சங்கக்கார நான்கு ஓட்டங்களுடன் களத்தை விட்டு வெளியேறினார். அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். கபுகெதர ஏழு பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு பௌவுண்ரியுடன் ஆட்டமிழந்தார். இலங்கை அணி விக்கெட்டுகள் மளமளவென விழுந்தபோது ஒருபக்கத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தரங்க 43 ஓட்டங்களில்
ஆட்டம் இழந்தார்.
20.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கிய முபாரக், மத்தியுஸ் ஜோடி இலங்கை அணியை தூக்கி நிறுத்தியது முபாரக் 31ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, 50 ஓவர்கள் முடிவில் இலங்கை ஆறு விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்தது. மத்தியூஸ் ஆட்டம் இழக்காது 52 ஓட்டங்களும், துஷார ஆட்டம் இழக்காது 28 ஓட்டங்களும் எடுத்தனர். சிம்பாப்வே அணி 26 ஓட்டங்களை உதிரிகளாக விட்டுக்
கொடுத்தது. ரொபின் ஸ்ரொட் மூன்று விக்கெட்டுகளையும்,
சிக்கும்புரா, உசேயி பிரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சிம்பாப்வே அணி 28.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்கள் எடுத்த மஸ்ரி தென்பதி 15 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். குலசேகர, மெண்டிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளிதரன் இரண்டு விக்கெட்டுகளையும் துஷார மத்தியுஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
19 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மென்டிஸ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்தார். ஆட்டநாயகனாக மத்தியூஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை சிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
மூன்றாவது நாடாக விளையாடும் பங்களாதேஷ் ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்துள்ளது.

Sunday, January 11, 2009

திருப்புமுனையை ஏற்படுத்தப்போகும் திருமங்கலம் இடைத்தேர்தல்


திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நடந்து முடிந்த அதிரடி மாற்றங்கள் தந்தைக்குப் பின் தனயன் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. கட்சித் தலைமையை மகன் ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றே முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின் தான் என்பது எப்போதோ முடிந்த முடிவு. அந்த முடிவை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. கலைஞருடன் இணைந்து கட்சியை வழிநடத்தும் பேராசிரியர் அன்பழகனே, ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வதாக பல மேடைகளில் அறிவித்தார். ஆனால், கட்சியில் உள்ள சில மூத்த அரசியல்வாதிகள் சிலர் ஸ்டாலினிடம் கழகப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு எதிர்ப்புக் காட்டினார்கள். அவர்களின் எதிர்ப்பு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சாதுர்யமான தமது நடவடிக்கையின் மூலம் ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய விவகாரங்களை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றனர்.
ஸ்டாலின் துணை முதல்வராகிறார். ஸ்டாலினுக்கு உபதலைவர் பதவி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவிச் செயலாளராக ஸ்டாலின் தெரிவாகப் போகிறார் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சி மிகவும் அபரிமிதமானது. முதல்வர் கருணாநிதியின் மகன் என்பதைத் தாண்டி பல போராட்டங்களில் சிறைக்கு சென்று வளர்ந்தவர் ஸ்டாலின். தந்தைக்குப் பின்னர் தனயன் முடி சூடுவது என்பது இந்திய அரசியலில் சம்பிரதாயமாகி விட்டது. இதற்கு ஸ்டாலினும் விதிவிலக்கு அல்ல.
ஸ்டாலினின் வளர்ச்சிக்காக புதிய பதவி உருவாக்கப்படுமா? அன்பழகனின் பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் ஆற்காடு வீரõசாமியின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் அண்மைக்காலச் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவரின் மந்திரிப் பதவி பறிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளும் மிகவும் முக்கியமானவை. அந்த முக்கிய பதவிகளில் ஒன்றில் ஸ்டாலின் அமர்ந்துள்ளார். ஸ்டாலினுக்கு முக்கிய பதவியைக் கொடுப்பதற்கு அழகிரியும் மாறன் குடும்பமும் இடைஞ்சலாக இருப்பதாக ஒரு கருத்து நிலவியது.
மாறன் குடும்பத்துடன் உறவை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அழகிரி மிகவும் பிடிவாதமாக இருந்தார்.
அழகிரியைச் சமாதானப்படுத்தி பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கியதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது.
கட்சிக்குள் ஸ்டாலினுக்கு பதவி வழங்கும் அதே வேளை அழகிரிக்கும் முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அழகிரியைச் சமாதானப்படுத்துவது சற்று கடினமானது. உதவி செய்வதென்றõல் எவ்வளவு தூரம் இறங்கி வருவாரோ அவ்வளவு தூரம் இறங்கி வந்து உதவி செய்வார். எதிர்த்தாரென்றால் விரைவில் சமாதானமாக மாட்டார்.
திருமங்கலம் இடைத் தேர்தலின் பிரசாரத்திற்கான பொறுப்பு அழகிரியிடம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணன் அழகிரியும் தம்பி ஸ்டாலினும் சேர்ந்து திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் முக்கியத்துவத்தை கட்சிக்குள் குறைத்தது ஏனைய அமைச்சர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஸ்டாலினை எதிர்ப்பவர்களுக்கும் இதே நிலை வரும் என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக உட்கட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு வேண்டியவர்களே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் ஸ்டாலின் தலைவராவதற்கு எந்தத் தடையும் இருக்காது.
ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் திருமங்கலம் இடைத் தேர்தல் பரீட்சைக் களமாக உள்ளது. திருமங்கலம் தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்ற தொகுதி. ஆகையினால் வெற்றி நிச்சயம் என்று முடிவு செய்த ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை கவிழ்ப்பேன் என்ற உறுதியுடன் அழகிரி களத்தில் இறங்கியுள்ளார். திருமங்கலம் இடைத் தேர்தலில் தோல்வியடைந்தால் மதுரையில் உள்ள அழகிரியின் செல்வாக்கும் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படலாம். ஆகையினால் தனது முழு செல்வாக்கையும் பிரயோகித்து திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரின் வெற்றிக்காக அழகிரி பாடுபடுகிறார்.
விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிடக் கழகத்துக்கும் இந்த இடைத் தேர்தல் கௌரவப் பிரச்சினையாக உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்கை விட கூடுதலான வாக்கைப் பெற வேண்டும். அதனை விட்டு குறைந்த வாக்குகளைப் பெற்றால் விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்து விட்டது என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு திருமங்கலம் இடைத்தேர்தலில் பெறப்போகும் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக அமையும்.
.
விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சதீஸ் ஆகியோர் திருமங்கலத்தில் பிரசாரம் செய்கின்றனர். விஜயகாந்தின் குடும்பமே வெற்றிக்காக பிரசாரத்தில் குதித்துள்ளது.
விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடந்த தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வாக்குகளைப் பிரித்தனர். இந்த தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் வல்லமை விஜயகாந்தின் கட்சிக்கு உண்டு. திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியன வெற்றி பெறுவது விஜயகாந்தின் கையில்தான் உள்ளது. தேசிய முன்னேற்ற திராவிட கட்சியின் வேட்பாளருக்குக் கிடைக்கப் போகும் வாக்குகள் தான் திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கப்போகிறது.
சரத்குமாருக்கு இது முதலாவது தேர்தல். சரத்குமாரின் கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் அக்கட்சி நான்காவது இடத்தைப் பிடித்தால் அதற்கு எதிர்காலம் உண்டு. இல்லையேல் அக்கட்சி வளர்வதற்கு நீண்ட நாட்கள் செல்லும்.
சரத்குமார் கைதேர்ந்த அரசியல் வாதியாக மாறி விட்டார். தனது மனைவி ராதிகாவை உப தலைவராக்கி விட்டார். தொண்டர்கள் விரும்பினார்கள் மனைவி உபதலைவராகி விட்டார் என்கிறார் சரத்குமார். சரத்குமாரும் குடும்ப சமேதாராய் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.தமிழகத்தில் புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்காக திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வரை சில கட்சிகள் காத்திருக்கின்றன.




00000


மீண்டும் தலைவராக பீற்றர்சன் விருப்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய கெவின் பீட்டர்சன் மீண்டும் தலைமையேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ்ஸுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து பீட்டர்சன் கடந்த சில தினங்களுக்கு முன் விலகினார். அவரைத் தொடர்ந்து பயிற்சியாளர் பீட்டர் மூர்சும் விலகினார்.
பீட்டர்சன் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் புதிய தலைவர் ஆரம்ப ஆட்டக்காரர் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் தலைவர் பதவி வகிக்க பீட்டர்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்து செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்களையும் வெற்றிகளையும் குவிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
பிளின்டொப்புடன் தமக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவதையும் பீட்டர்சன் மறுத்துள்ளார். அவருடன் தமக்கு மிகுந்த நல்லுறவு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 11 01 2009

Saturday, January 10, 2009

பொம்மலாட்டம்


பாரதிராஜாவின் அற்புதமான படங்களில் இதுவும் ஒன்று. சண்டை குத்துப்பாட்டு அரிவாள் வெட்டு எதுவும் இல்லாமல் சிறந்த படத்தைத் தந்துள்ளர் பாரதிராஜா.திரைப்பட இயக்குனரின் வாழ்க்கையில் நடைபெறும் சின்னச்சின்ன சம்பவங்களை துல்லியமக வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனராக நடித்த நானாபடேகர் பாரதிராஜா நினைத்ததைப்போன்று இயல்பாக நடித்துள்ளார்.அர்ஜுன் நடித்திருப்பதால் ஒருசண்டைக்காட்சி இருக்கும் என எதிர்பார்த்து படம் பார்க்கப்போனவர்கள் ஏமாந்துபோனார்கள்.
பயங்கரம் குத்துவெட்டு ரத்த்ம் துப்பாக்கிச்சூடு எதுவும் இல்லாமல் மர்மக்கதை ஒன்றை தந்துள்ளார் பாரதிராஜா.இயக்குனர் நானாபடேகர் தனது அறிமுக நாயகியான ரஞ்சிதாவை கொலை செய்வதுடன் படம் ஆரம்பமகிறது.திட்டமிட்டு செய்தகொலையை மூடி மறைக்க முயற்சிக்கிறார் நானாபடேகர்.
அறிமுகநாயகியின் கொலையை விசாரிக்கும் அர்ஜுன், நானாபடேகர்மீது மேலும் இரண்டு கொலைகள்செய்ததாக நானாபடேகர்மீது குற்றம் சாட்டுகிறார்.படப்பிடிப்பின்போது நடந்த இரண்டு கொலைகளின் சூத்திரதாரி நானாபடேகர் என ஆதாரத்துடன் கூறுகிறார்.
திரைப்பட நாயகிகள் மீது சமுதாயத்தின் பார்வை. அதனால் நாயகிபடும் அவலம் . அதனைப் போக்குவதற்கு இயக்குநர் செய்யும் முயற்சி என்பனவற்றை பாரதிராஜா அருமையாகவிளக்கியுள்ளார்.நாயகியின்மீதுசில்மிசம் செய்பவர்களை கண்டிப்பது , நாயகிக்கு ஆறுதல்கூறுவது எல்லாம் இயல்பாகவே படமாக்கப்பட்டுள்ளது.
சினிமா உலகமே வியந்து போற்றும் இயக்குனரின் மனைவியும் பிள்ளையும் தனிமையில் தவிப்பதும் ,இயக்குனர்மீதுமனைவி சந்தேகப்படுவதும் சினிமாக்கலைஞர்களின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று.பொம்மலாட்டம் படத்தின்முடிவு தமிழ்த்திரைப்படத்துக்குப்புதிது.
நானாபடேகர்,அர்ஜுன்,ரஞ்சிதா,ருக்மணி ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். கஜால்அகர்வால், விவேக் ஆகியோர் சும்மாவந்துபோனார்கள்.பாரதிராஜாவின் படங்களின் வெற்றிக்கு பெரியபங்களிப்புவழங்கியதில் இசையும் ஒன்று.இப்படத்தின் வெற்றிக்கு இசை எந்தவகையிலும் உதவவவில்லை.
உலகத்தரம் வாய்ந்த படத்தை பாரதிராஜா தந்திருக்கிறார் என்பதில் எதுவிதசந்தேகமும் இல்லை.குடும்பத்துடன் பார்த்துரசிக்கக்கூடியபடம்.

Thursday, January 8, 2009

தப்பியது அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 103 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
மூன்று டெஸ்ட் தொடர் கொண்ட இப்போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 4?? ஓட்டங்களை எடுத்தது. நான்கு விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்கள் எடுத்தபோது அவுஸ்திரேலிய அணி இரண்
டாவது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.
தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 327 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்க அணி 272 ஓட்டங்கள் எடுத்தது. அம்லா 57 ஓட்டங்களும் டிவிலியஸ் 56 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் குறைந்த ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் கைட்டிலும் தொடர்நாயகனாக ஸ்மித்தும் தெரிவு செய்யப்பட்டார்கள். தனது மண்ணில் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலடைந்தது.
100 ஓட்டங்கள்
கிளார்க் 138 அவுஸ்திரேலிய, ஸ்மித் 108 தென் ஆபிரிக்க, டிவிலியஸ் 106 (ஆ.இ)தென் ஆபிரிக்கா.
பொண்டிங் 101 அவு ஸ்திரேலியா, டுமினி 106 தென்னாபிரிக்கா. பொண்டிங் 99, ஜோன்சன் 61/8 அவுஸ்திரேலிய ஸ்ரெய்ன் 87/5 தென் ஆபிரிக்க ஸ்ரெய்ன் 67/5 தென் ஆபிரிக்கா.

நியூசிலாந்து வென்றது

மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடும் மேற்கு இந்தியத்தீவுகள் அணி 41.9 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்கள் எடுத்தது.
சந்தர்போல் அதிகபட்சமாக 45 ஓட்டங்கள் எடுத்தார். கைல்ஸ் 18 ஓட்டங்களும் எட்வேட் ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களும் எடுத்தனர். மில்லர் ஆட்டம் இழக்காது 25 ஓட்டங்களும் எடுத்தனர். வெட்டோரி நான்கு விக்கெட்டுகளையும் மில்ஸ் கொதிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பட்டேல் ளைடர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
129 ஓட்டங்கள் என்ற இலகுவான ஓட்ட எண்ணிக்கையுடன் களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 20.3 ஓவர்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
தொடர் 14 ஓட்டங்களிலும் மக்குலம் 18 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். ஆட்டம் இழக்காத 51ஓட்டங்களும் பிளைன் ஆட்டம் இழக்காது 23, ஓட்டங்களும் எடுத்தனர். மூன்று விக்கெட்டுகளை பவல் வீழ்த்தினார்.
ஆட்டநாயகனாக நியூஸிலாந்து அணி வீரர் வெண்டேதெரிவு செய்யப்பட்டார். நியூஸிலாந்து மேற்கு இந்தியத்தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Tuesday, January 6, 2009

தொடரை வென்றது இலங்கை


இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையே சிட்டாகொங் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 465 ஓட் டங்களினால் வெற்றி பெற்றது.
இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 384 ஓட்டங்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணி முதலாவது இன்னிங்ஸில் 208 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணி வீரர்களான சமரவீர 72 ஓட்டங்களுடனும் டில்ஷான் 95 ஓட்டங்களுடனும் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
சமரவீர 77 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 177 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்தார்.
மிகவும் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 143 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 175 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் இரு சிக்ஸர் 14 பவுண்டரிகள் அடங்கலாக 143 ஓட்டங்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 162 ஓட்டங்கள் அடித்த டில்ஷான் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து சாதித்தார்.
கபுகெதர 59 ஓட்டங்களும் வாஸ் 20 ஓட்டங்களும் எடுத்தபோது இலங்கை அணி ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு பங்ளாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது பங்களாதேஷ் வீரர்கள் ஒன்பது பேர் பந்து வீசினார்கள்.
பங்களாதேஷ் அணி வெற்றிபெறுவதற்கு 624 என்ற மிகப்பிரமாண்டமான இலக்கை இலங்கை அணி நிர்ணயித்தது. துடுப்பாட்டத்தில் கலக்கிய டில்ஷான் பந்துவீச்சிலும் தனது திறமையைக் காட்டியதால் பங்களாதேஷ் அணி 158 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஷகீப் அல்ஹசன் 46, ரஹீம் 43, தமிம் இக்பால் 17, ஹசான் 10 ஓட்டங்களை எடுத்தனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர்.
4.2 ஓவர்கள் பந்து வீசிய டில்ஷான் 10 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மென்டிஸ் 3 விக்கெட்டுகளையும் பெர்னாண்டோ, வாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.

வெற்றி பெறுமா தென் ஆபிரிக்கா?

தென் ஆபிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 390 ஓட்டங்கள் என்ற இலக்கை அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 445 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆபிரிக்க அணி முதலா வது இன்னிங்ஸில் 327 ஓட்டங் கள் எடுத்தது.
விக்கெட் இழப்பின்றி 33 ஓட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஹைடன் 39, கட்டிச் 61, பொண்டிங் 53, கிளார்க் 41 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். ஹசே ஆட்டம் இழக்காது 45 ஓட்டங்கள் எடுத்தார்.
மார்க்கஸ் இரண்டு விக்கெட்டுகளையும் ஸ்ரெயின், ஹாமிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தென் ஆபிரிக்க அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான மார்க்ஸ் ஓட்டம் எதனையும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மக்கன்சி 25 ஓட்டங்களுடனும், அம்லா 30 ஓட்டங்களுடனும் நான்காம் நாள் களத்தில் உள்ளனர். முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 414 ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி கடைசி நாளான இன்று 313 ஓட்டங்களை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தென்னாபிரிக்க ரசிகர்களிடம் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
தென் ஆபிரிக்க வீரர்கள் சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்றனர். மூன்றாவது போட்டியையும் அவுஸ்திரேலியா இழக்கும் என்ற அவா ரசிகர்களிடம் உள்ளது.

Sunday, January 4, 2009

கெளரவப்பிரச்சினையான திருமங்கலம் இடைத்தேர்தல்


திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நடந்து முடிந்த அதிரடி மாற்றங்கள் தந்தைக்குப் பின் தனயன் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. கட்சித் தலைமையை மகன் ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றே முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின் தான் என்பது எப்போதோ முடிந்த முடிவு. அந்த முடிவை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. கலைஞருடன் இணைந்து கட்சியை வழிநடத்தும் பேராசிரியர் அன்பழகனே, ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வதாக பல மேடைகளில் அறிவித்தார். ஆனால், கட்சியில் உள்ள சில மூத்த அரசியல்வாதிகள் சிலர் ஸ்டாலினிடம் கழகப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு எதிர்ப்புக் காட்டினார்கள். அவர்களின் எதிர்ப்பு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சாதுர்யமான தமது நடவடிக்கையின் மூலம் ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய விவகாரங்களை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றனர்.
ஸ்டாலின் துணை முதல்வராகிறார். ஸ்டாலினுக்கு உபதலைவர் பதவி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவிச் செயலாளராக ஸ்டாலின் தெரிவாகப் போகிறார் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சி மிகவும் அபரிமிதமானது. முதல்வர் கருணாநிதியின் மகன் என்பதைத் தாண்டி பல போராட்டங்களில் சிறைக்கு சென்று வளர்ந்தவர் ஸ்டாலின். தந்தைக்குப் பின்னர் தனயன் முடி சூடுவது என்பது இந்திய அரசியலில் சம்பிரதாயமாகி விட்டது. இதற்கு ஸ்டாலினும் விதிவிலக்கு அல்ல.
ஸ்டாலினின் வளர்ச்சிக்காக புதிய பதவி உருவாக்கப்படுமா? அன்பழகனின் பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் ஆற்காடு வீரõசாமியின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் அண்மைக்காலச் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவரின் மந்திரிப் பதவி பறிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளும் மிகவும் முக்கியமானவை. அந்த முக்கிய பதவிகளில் ஒன்றில் ஸ்டாலின் அமர்ந்துள்ளார். ஸ்டாலினுக்கு முக்கிய பதவியைக் கொடுப்பதற்கு அழகிரியும் மாறன் குடும்பமும் இடைஞ்சலாக இருப்பதாக ஒரு கருத்து நிலவியது.
மாறன் குடும்பத்துடன் உறவை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அழகிரி மிகவும் பிடிவாதமாக இருந்தார்.
அழகிரியைச் சமாதானப்படுத்தி பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கியதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது.
கட்சிக்குள் ஸ்டாலினுக்கு பதவி வழங்கும் அதே வேளை அழகிரிக்கும் முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அழகிரியைச் சமாதானப்படுத்துவது சற்று கடினமானது. உதவி செய்வதென்றõல் எவ்வளவு தூரம் இறங்கி வருவாரோ அவ்வளவு தூரம் இறங்கி வந்து உதவி செய்வார். எதிர்த்தாரென்றால் விரைவில் சமாதானமாக மாட்டார்.
திருமங்கலம் இடைத் தேர்தலின் பிரசாரத்திற்கான பொறுப்பு அழகிரியிடம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணன் அழகிரியும் தம்பி ஸ்டாலினும் சேர்ந்து திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் முக்கியத்துவத்தை கட்சிக்குள் குறைத்தது ஏனைய அமைச்சர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஸ்டாலினை எதிர்ப்பவர்களுக்கும் இதே நிலை வரும் என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக உட்கட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு வேண்டியவர்களே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் ஸ்டாலின் தலைவராவதற்கு எந்தத் தடையும் இருக்காது.


ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் திருமங்கலம் இடைத் தேர்தல் பரீட்சைக் களமாக உள்ளது. திருமங்கலம் தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்ற தொகுதி. ஆகையினால் வெற்றி நிச்சயம் என்று முடிவு செய்த ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை கவிழ்ப்பேன் என்ற உறுதியுடன் அழகிரி களத்தில் இறங்கியுள்ளார். திருமங்கலம் இடைத் தேர்தலில் தோல்வியடைந்தால் மதுரையில் உள்ள அழகிரியின் செல்வாக்கும் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படலாம். ஆகையினால் தனது முழு செல்வாக்கையும் பிரயோகித்து திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரின் வெற்றிக்காக அழகிரி பாடுபடுகிறார்.
விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிடக் கழகத்துக்கும் இந்த இடைத் தேர்தல் கௌரவப் பிரச்சினையாக உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்கை விட கூடுதலான வாக்கைப் பெற வேண்டும். அதனை விட்டு குறைந்த வாக்குகளைப் பெற்றால் விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்து விட்டது என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு திருமங்கலம் இடைத்தேர்தலில் பெறப்போகும் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக அமையும்.
விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சதீஸ் ஆகியோர் திருமங்கலத்தில் பிரசாரம் செய்கின்றனர். விஜயகாந்தின் குடும்பமே வெற்றிக்காக பிரசாரத்தில் குதித்துள்ளது.
விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடந்த தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வாக்குகளைப் பிரித்தனர். இந்த தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் வல்லமை விஜயகாந்தின் கட்சிக்கு உண்டு. திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியன வெற்றி பெறுவது விஜயகாந்தின் கையில்தான் உள்ளது. தேசிய முன்னேற்ற திராவிட கட்சியின் வேட்பாளருக்குக் கிடைக்கப் போகும் வாக்குகள் தான் திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கப்போகிறது.
சரத்குமாருக்கு இது முதலாவது தேர்தல். சரத்குமாரின் கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் அக்கட்சி நான்காவது இடத்தைப் பிடித்தால் அதற்கு எதிர்காலம் உண்டு. இல்லையேல் அக்கட்சி வளர்வதற்கு நீண்ட நாட்கள் செல்லும்.
சரத்குமார் கைதேர்ந்த அரசியல் வாதியாக மாறி விட்டார். தனது மனைவி ராதிகாவை உப தலைவராக்கி விட்டார். தொண்டர்கள் விரும்பினார்கள் மனைவி உபதலைவராகி விட்டார் என்கிறார் சரத்குமார். சரத்குமாரும் குடும்ப சமேதாராய் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.தமிழகத்தில் புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்காக திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வரை சில கட்சிகள் காத்திருக்கின்றன.

வர்மா
வீரகேரரி வாரவெளியீடு 04 12 2008

பலமான நிலையில் அவுஸ்திரேலியா


தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ஓட்டங்கள் அடித்து பலமான நிலையில் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் டை வெல்ல வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
ஆறு விக்கெட்டுகளை இழந்து 267ஓட்டங்களை எடுத்த நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
மைக்கல் கிளார்க் 73 ஓட்டங்களுடனும் ஜோன்ஸன் 17 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 142 ஓட்டங்கள் எடுத்தனர்.
கிளார்க் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 138 ஓட்டங்கள் அடித்தார். 250 பந்துகளுக்கு முகம் கொடுத்த கிளார்க் 17 பவுண்டரிகள் அடங்கலாக 138 ஓட்டங்கள் எடுத்தார். கிளார்க்குடன் இணை ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய ஜோன்ஸன் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்ரெயின், ஹமிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் நிதினி, மொகைல், கலிஸ், டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தென் ஆபிரிக்க அணி முதலா வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்தது.
மக்கன்சி 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தென் ஆபிரிக்கா அணித் தலைவர் ஸ்மித் 30 ஓட்டங்களுடனும் கலிஸ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஸ்மித் 31 பந்துகள் 5 பவுன்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தார்.

தடுமாறுகிறது பங்களாதேஷ்



இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மெண்டிஸின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 208 ஓட்டங்கள் எடுத்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 384 ஓட்டங்கள் எடுத்தது.
டில்சான் 162 ஓட்டங்களும் கபுகெதர 96 ஓட்டங்கள், வர்ணபுர 63 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் மிகமிகக் குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சமரவீர 19, மஹேல 11 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறி னர். முதல் டெஸ்ட்டில் கலக்கிய சஹீட் அல் ஹசனின் இல ங்கை வீரர்கள் திக்கு முக்காடினர். அனுபவம் உள்ள உலக அணிகளை அச்சுறுத்தும் இலங்கை வீரர்கள் பங்களா தேஷ் வீரர்களின் பந்துக்கு தாக்குப்பிடிக்க முடியாது சுருண்டனர்.
கபுகெதர 93 ஓட்டங்களுடனும், வாஸ் ஒரு ஓட்டத்துடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். டில்சா னின் சதத்தைத் தொடர்ந்து கபுகெதரவும் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 96 ஓட்டங்களை எடுத்த சமரவீர சஹிர் அல் ஹசனின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இலங்கை அணியின் கடைசி நான்கு வீரர்களும் 13 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தன.
சஹீட் அல்ஹசன் நான்கு விக்கெட்டுகளையும், மொத்தரசா மூன்று விக்கெட்டுகளையும் ஹுசேன், எனமுல் ஹபீல், மொஹமட் அஸ்ரபுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பங்களாதேஷ் அணி முதலாவது இன்னிங்ஸில் 208 ஓட்டங்களை எடுத்தது.
பந்து வீச்சாளரான மொட்டரசா சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்கள் எடுத்தார். ஒன்பதாவது இணைப்பாட்டத்தில் மொட்டரசாவும் ஹீசேனும் இணைந்து 63 ஓட்டங்கள் எடுத்தனர். ஹீசேன் ஐந்து ஓட்டங்களை மட்டும் எடுத்தார். மொட்டரசா இரண்டு சிக்சர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்தார்.
மொஹமட் அஸ்ரபுல் 45, சித்திக் 28, ரஹீம் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.
மெண்டிஸ் நான்கு விக்கெட்டுகளையும், முரளிதரன் மூன்று விக்கெட்டு களையும், வாஸ் இரண்டு விக்கெட்டுகளையும் பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.