Sunday, August 10, 2008

இந்தியாவை அச்சுறுத்தும் பயங்கரவாதம்

பெங்களூர், அஹமதாபாத் ஆகிய நகரங்களில் கடந்தவாரம் நடந்த குண்டு வெடிப்புகளால் இந்தியா அதிர்ச்சியில் உறைந்துள்ளது.1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னர் நடைபெற்ற மிகப் பயங்கரமான தொடர் குண்டு வெடிப்புகளாக இவை கருதப்படுகின்றது.
பெங்களூர், அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து உஷாரான இந்திய பொலிஸார் சூரத்திலும் தமிழகத்திலும் நடைபெற இருந்த தொடர் குண்டு வெடிப்புகளைத் தடுத்துள்ளனர்.
சூரத்தில் இரண்டு வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரமான குண்டுகளுமம் அவற்றை இயக்குவ தற்கு பயன்படும் பொருட்களும் கைப்பற்றப் பட் டன. தமிழகத் தில் குண்டுக ளுடனும் பயன்

படுத்தப்படும் கருவிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுகளை பொருத்துவதில் நிபுணத்துவம் மிக்க
ஒருவர் சரணடைந்துள்ளார்.
சென்னையில் கைது செய்யப்பட்டவரின் பெயர் அப்துல் கபூர். அவருக்கு வெடிகுண்டுகளை செய்வது பற்றிய பயிற்சியை சென்னை புழல்
சிறையில் ஆயுள்தண்டனை பெற்று வரும் அலி அப்துல்லா என்பவர் வழங்கி இருந்தார்.
சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் அலி அப்துல்லாவிடம் ஒரே நேரத்தில் இரண்டு சிம் காட்டுகளைப் பயன்படுத்தி உரையாடக் கூடிய நவீன தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு லக்ஷர் இ தொய்பா, சிமி, ஹீதிஜி ஆகிய இயக்கங்கள் தான் காரணம் என்று இந்தியப் புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிடும். இந்த இயக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கங்கள்மறைமுகமாக இயங்கி வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கும் இந்த இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை.ஹஸ்புத் தஹிரீன் என்ற இயக்கமே இக் குண்டு வெடிப்புகளை நடத்தியது என்று புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனை கிலாபத் இயக்கம் என்று அழைக்கிறார்கள். உலகளாவியரீதியில் நபிகள் நாயகத்தின் பெயரால் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிலாபத் இயங்கி வருகிறது.
இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் இந்த இயக்கம் உலகில் உள்ள முஸ்லிம்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது விரைந்து உதவும் என்று கூறப்
படுகிறது. இங்கிலாந்து,
அமெரிக்கா, பாகிஸ்தான்
உட்பட சுமார் 50 நாடுகளில் கிலாபத் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின்
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைக் கொலை செய்தது லண்டனில் ரயில் நிலையங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் ஆகியவற்றுக்கு கிலாபத் இயக்கமே காரணம் என்று விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் தமது கொடூரமான செயல்களுக்கு பயன்படுத்துவதால் அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்துவதும் அதனைத் தடுப்பதும் இயலாத காரியமாக உள்ளது.
அஹமதாபாத் குண்டு வெடிப்பு நடைபெறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் பத்திரிகை அலுவலகங்களுக்கும் பொலிஸாருக்கும் ஈ மெயில் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஈமெயில் தகவல்கள் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு எச்சரிக்கை செய்வதற்கு முன்னர் தொடர் குண்டுகள் வெடித்து தமது அகோரத்தை வெளிப்படுத்திவிட்டன.
ஈமெயில் அனுப்பப்பட்ட
முகவரிக்குரிய அடுக்குமாடி
குடியிருப்பின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அதிர்ந்து விட்டனர். அந்த முகவரியில் அவர்கள் தேடிச் சென்ற தீவிரவாதி இருக்கவில்லை. அந்த வீட்டில் அமெரிக்கப் பிரஜை ஒருவர் குடியிருந்தார். அவரது ஈமெயில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருடப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
பெங்களூர், அஹமதாபாத், மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களும் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் உள்ளன.
கோவை தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்ட இந்திய உளவுத்துறை அடுத்து நடைபெறவிருந்த பல சதித் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியது. தீவிரவாதிகள் அடங்கிவிட்டார்கள். அவர்கள் இனி தலையெடுக்கமாட்டார்கள் என்று உளவுத் துறை கணித்திருந்த வேளையில் மீண்டும் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று இந்திய உளவுத்துறைக்கு சவால்விட்டுள்ளது.
இந்திய உளவுத்துறையின் ஆள் பற்றாக்குறையே பயங்கரவாத நடவடிக்கைகள் தலை தூக்க காரணமாக உள்ளதென்று தெரியவருகின்றது. ஆள் பற்றாக்குறை காரணமாக பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாது இருப்பதாக ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 வருடங்களில் பல
குண்டு வெடிப்புகள் நடை
பெற்றுள்ளன. கோவை தொடர் குண்டு வெடிப்பு, மும்பை குண்டு வெடிப்பு, இந்திய
நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் ஆகியவற்றின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய குண்டு வெடிப்புகளுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தான்
காரணம் என்று கூறப்பட்டதே தவிர உண்மையான
குற்றவாளிகள் கண்டு
பிடிக்கப்படவில்லை.
இந்திய அமெரிக்க அணு
ஆயுத ஒப்பந்தத்தின் விளைவே இக்குண்டு வெடிப்புகள் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
குஜராத்தில் முஸ்லிம்கள்
மீது நடைபெற்ற தாக்குதல்களின் பழி வாங்கல் இது
என்பது வெளிப்படையானது.
இந்தியாவின் மத்திய பிரதேசமான போபாவில் தான் லொபத் இயக்கத்தின் தலைமை யுகம் இயங்குவதாக இந்திய உளவுத் துறை சந்தேகப்படுகிறது. இந்தியாவில் இந்த இயக்கம் கால் பதித்துள்ளதால் இந்திய உளவுத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ் 01 08 08

1 comment:

Anonymous said...

இந்தியாவை ....அச்சறுத்தும் ....பயங்கரவாதமா.... சரிதான் போங்க

இந்திய உளவு ஸ்தாபனம் RAWவையே விரட்டி அடிக்கும் பயங்கரவாதத்தை பாக்கல்லியா ?


மேல் விபரங்களுக்கு
http://batteredmale.blogspot.com/2008/08/blog-post_6091.html

அன்புடன்
விநாயக்