Sunday, August 17, 2008

பாகிஸ்தானைப் பதறவைத்த செம்மசூதித்தாக்குதல்




பாகிஸ்தான் அரசியலுடன் மிக நெருங்கிய தொடர்புடையது லால் மசூதி எனப்ப
டும் செம்மசூதி. பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் இந்த மசூதி மீது மிகுந்த
மதிப்பு வைத்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்தின் அருகே அமைந்த இந்த மசூதி
யின் உட்பகுதியில் பெண்களுக்கான இஸ்லாமியப் பள்ளியான ஜாமீயா அப்ஸா மத்ர
ஸாவும் ஆண்களுக்கான மத்ரஸாவும்அமைந்துள்ளன.
பாகிஸ்தானின் ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி என அனைவரும் செம்மசூ
திக்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்துவந்தனர். செம்மசூதியில் இஸ்லாமியக்
கோட்பாடுகள் பற்றிய கல்வி போதிக்கப்படுகிறது.
புனிதப் போர் பற்றிய விரிவுரைகளுக்குசெம்மசூதி பிரபலமானது. மசூதியின் முன்னாள்
தலைவர் மௌலானா அப்துல் அஸாவின்உரைகள் இளைஞர்களையும் யுவதிகளை
யும் கவர்ந்திருந்தன.
ஆப்கானிஸ்தானுக்குள் ரஷ்யாநுழைந்தபோது முஜாகிதீன்கள் கடும் போர்
புரிந்தனர். புனிதப் போருக்கான அழைப்புவிடுக்கப்பட்டது.
செம்மசூதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். 1990 ஆம் ஆண்டு
இறுதியில் மசூதியினுள் மௌலானா அப்துல்லா கொல்லப்பட்டார். மசூதியினுள்
நடைபெற்ற இக்கொலைக்கான காரணம்இதுவரை வெளிவரவில்லை. மௌலானா
அப்துல்லாவின் மகன்களான மௌலானாஅப்துல் அஸீஸ், அப்துல் ரஷீத் காலி ஆகி
யோர் செம்மசூதியை நிர்வகித்தனர்.ஷரீயா சட்டத்திற்கு செம்மசூதி முக்கியத்து
வம் கொடுத்து வந்தது. இஸ்லாத்துக்கு மாறானகொள்கைகளை களைவதில் செம்ம
சூதி முக்கிய பங்கு வகித்தது. ஜிஹாத் என்றபுனிதப் போருக்கு ஊக்கம் கொடுப்பதிலும்
செம்மசூதி முன்னின்றது.
2001 ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா மீதுஅல் கைதா தாக்குதல் நடத்திய பின்னர் பா
கிஸ்தான் அரசு ஜிஹாத்துக்கான ஆதரவிலிருந்து மெதுவாக விலகிக் கொண்டது.
பயங்கரவாதத்தை உலகில் இருந்து அடியோடு ஒழிப்பதற்கு அமெரிக்கா விடுத்த
அழைப்புக்கு பாகிஸ்தான் அரசு துணைபோவதை செம்மசூதி நிர்வாகம் விரும்ப
வில்லை. பாகிஸ்தானின் பழங்குடியினர்தமக்கென சில சட்ட திட்டங்களை வைத்துள்ள
னர். அவர்களின் சட்டங்கள் செம்மசூதியின் சட்டங்களுடன் ஒத்துப் போகின்றன.
பாகிஸ்தானில் உள்ள பழங்குடி மக்களுக்குஉதவி செய்வதில் செம்மசூதி முன்ன
ணியில் உள்ளது. பாகிஸ்தானில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடு
களில் தமது மதக்கோட்பாடுகளையும்பரப்புவதில் செம்மசூதி அதிக அக்கறை
கொண்டுள்ளது.


2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைöபற்ற குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள்
செம்மசூதியில் இருந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது
செம்மசூதியை சோதனையிட பாகிஸ்தான்இராணுவம் முயற்சி செய்தது. செம்மசூதி
யில் கல்வி கற்ற மாணவிகள் எதிர்த்துநின்று பாகிஸ்தான் இராணுவத்தைத் தடுத்தன
ர். பெண்களின் எதிர்ப்பினால் சோதனைமுயற்சியை பாகிஸ்தான் இராணுவம்
கைவிட்டது.





சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட மசூதிகளை
பாகிஸ்தான் அரசு இடித்தது. அதனைஎதிர்த்து செம்மசூதி குரல் கொடுத்தது.
இடிக்கப்பட்ட மசூதிகள் அனைத்தையும்கட்டிக் கொடுக்க வேண்டும் என செம்ம
சூதி எச்சரிக்கைத் தொனியில் வேண்டுகோள் விடுத்தது.
செம்மசூதியின் மீது அமெரிக்காவுக்கும்ஒரு கண் உள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா,
இங்கிலாந்து, ஈராக் ஆகிய நாடுகளில்நடக்கும் பயங்கரவாத சம்பவங்களுடன்
அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாகஅமெரிக்கா கருதுகிறது.
முஷாரப்பைச் கொல்ல நடந்த பல முயற்சிகளின் பின்னணியில் செம்மசூதி இருப்ப
தாக பாகிஸ்தான் அரசு கருதுகிறது.செம்மசூதிக்கு அருகே உள்ள
காவலரண்ஒன்றின் மீது கடந்த 3 ஆம் திகதி தாக்குதல்
நடந்தது. காவலரணில் இருந்தவர்களும்பதில் தாக்குதல் நடத்தினார்கள். காவலர
ணைத் தாக்கியவர்கள் செம்மசூதிக்குள்அடைக்கலம் புகுந்தனர். காவலரணின் மீது
தாக்குதல் நடத்தியவர்கள் சரணடையவேண்டும் என்று இராணுவம் உத்தரவிட்டது.
இராணுவத்தின் உத்தரவை உதாசீனம்செய்தவர்கள் இராணுவத்தின் மீது துப்பாக்கி
ப் பிரயோகம் செய்தனர். இந்தச் சம்பவம்இராணுவத்தை இனங்கொள்ளச் செய்தது.
செம்மசூதியைப் பகைக்க பாகிஸ்தான்
அரசு என்றைக்குமே விரும்பியதில்லை.அங்கு நடைபெறுவதைத் தட்டிக் கேட்கவு
ம் முனைவதில்லை. இராணுவத்தினர்மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை சகித்துக்
கொள்ள முடியாத நிலையில் செம்மசூதியில் உள்ளவர்களை சணடையுமாறு பாகிஸ்தான்
அரசாங்கம் அறிவித்தது.பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிவித்தøல உதாசீனம் செய்த செம்மசூதித் தலை
வர் அப்துல் ரஷீட் இதனை ஏறறுக்கொள்ளாது சரணடைவதை விட உயிரைத்
துறப்பதே மேல் என்று சூளுரைத்தார். செம்மசூதி மீதான முற்றுகை நடைபெற்றுக்
கொண்டிருக்கும் வேளையில் பாகிஸ்தான்ஜனாதிபதி முஷாரப் பயனம் செய்த விமானத்
தின் மீது தாக்குதல் நடத்தப்ட்டது.அதிர்ஷ்டவசமாக விமானம் தப்பிவிட்டது.
இத்தாக்குதலுக்கும் செம்மசூதிக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்டது. இதனால்,
செம்மசூதியைக் கைப்பற்ற ஜனாதிபதிமுஷாரப் உத்தரவிட்டார்.
இராணுவத்தின் கடைசி வேண்டுகோளையடுத்து செம்மசூதியில் இருந்தவர்
கள் சரணடைந்தனர். அப்துல் ரஷீட்டின்சகோதரரும் செம்மசூதியின் மதப் போதகரு
மான அப்துல் அஸீஸ் பெண்களைப்போன்று பர்தா உடை அணிந்து தப்பிச்
செல்ல முற்பட்டபோது இராணுவத்தினால்கைது செய்யப்பட்டார்.
"ஒப்பரேஸன் சைலன்ஸ்' என்ற பெயரில்செம்மசூதி மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்
பட்டது. எதிரி நாட்டுடன் போர் புரிவதுபோன்று இராணுவ டாங்கி, ஹெலிகொப்டர்
ஆகியவற்றின் உதவியுடன் செம்மசூதிமீதான தாக்குதல் நடைபெற்றது.
இராணுவ நடவடிக்கை ஆரம்பமாக முன்னர் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவி
கள் சரணடைந்தனர்.பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து மாண
வர்கள் போராடினார்கள். செம்மசூதியின்மதத்தலைவர் அப்துல் ரஷீட் காஸி சுட்டுக்
கொல்லப்பட்டதுடன் இராணுவ நடவடிக்கைமுடிவுக்கு வந்தது.
செம்மசூதி மீதான தாக்குதலில் 160 மாணவர்கள் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்
துள்ளது. மரணமான மாணவர்களின்தொகை அதிகமாக இருக்கலாம் என்று கரு
தப்படுகிறது. செம்சூதி மீதான தாக்குதலும்தலைவர் அப்துல் ரஷீத் காஸி கொல்லப்பட்ட
தனாலும் பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும்நாட்களில் அங்கு என்ன நடக்கும் என்பதை
அறிவதற்கு உலகம் தயாராக இருக்கிறது.
வானதி
மெட்ரோநியூஸ்
12 07 2007

1 comment:

Thamiz Priyan said...

செம்மசூதியின் பெரும்பாலான பகுதிகள் தாக்குதலில் சேதமடைந்து விட்டன. புணரமைப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப் படவில்லை. வேறு தலைவரைக் கொண்டு அந்த மசூதியில் மீண்டும் தொழுகை நடத்த ஏற்பாடு செய்தது அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப் பட்டது. எனவே மசூதி தற்போது கேட்பாரற்று கிடக்கிறது. கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அப்துல் அஸீஸ் மீண்டும் விடுதலை செய்யப்பட்டு அங்கு மீண்டும் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்..... இதுவே இன்றைய நிலை.