Monday, July 15, 2013

தாலியை சுற்றிப்பின்னப்படும் கதைகள் வெற்றிபெறுகின்றன


தமிழ் சினிமாவில் ரசிகர்களைக்கவர்வதற்கு இரண்டு கருக்கள் உள்ளன.ஒன்று சகோதரபாசம். பாசமலருக்கு இணையாக எந்தப்படமும் இது வரை இல்லை.இரண்டு தாலியைச்சுற்றிப்பின்னப்படும் கதை.தாலி கட்டிய கடமைக்காக கணவனைக்காப்பாற்றும் பெண் பாத்திரங்கள் பல உண்டு. தாலிக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிகாரக்கணவனுடனும் கண்ணீருடனும்  வாழும் பெண் பாத்திரங்கள் தாய்க்குலத்தின் மனதில் எவ்விதத்தடையும் இன்றிஇடம்பிடித்து விடுகின்றன.  அதிகமான கதைகள் தாலியைப்பின்னணியாகக்கொண்டே பின்னப்படுகின்றன.
 குடிகாரக்கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு அல்லது இன்னொரு பெண்ணுடன் கணவன் கொண்டதொடர்பால் மனம் வெதும்பி பிறந்த வீட்டை நோக்கி பெட்டியுடன்  வரும் பெண்ணை வாசலிலே நிறுத்தி
"அவன் ஆம்பளை எதையும் செய்வான். நீதான் அனுசரிச்சுப்போகணும்." என்று   தகப்பன்,தாய் அல்லது சகோதரன்புத்தி மதி கூறுவார்கள்.அடுத்த காட்சியில் இந்தமூவரில் ஒருவர் வீட்டுக்கு வந்த பெண்ணை கணவனின் வீட்டிலே கொண்டுபோய் விட்டு விடுவார்கள்.

"மாப்பிளை, தெரியாத்தனமாச்செய்திட்டாள். புத்திசொல்லி கூட்டியாந்தேன். இனி இப்பிடித்தவறு நடக்காது". என்று மன்னிப்புக்கேட்பார்கள். பெரும்பாலான‌ மாப்பிளைகள் பெண்ணை ஏற்றுக்கொள்வார்கள்.ஏற்றுக்கொள்ளாத சில கணவனும், திருப்பி அனுப்பவேண்டாம் என்கிற சிலபெற்றோரும் சகோதரிகளும் சில கதைகளில் வருவார்கள்.
 இவை எல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு என சிலர் புலம்பினாலும் இப்படிப்பட்ட படங்கள் அமோகமாக ஓடி வசூலில் சாதனைசெய்வதால் அப்படிப்பட்டபடங்களைத்தொடர்ந்தும் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
"எங்க வீட்டு வேலன்" படத்தில் பொறுமையின் சின்னமாக ரேகா.தாய் ரேகாவின் கண்ணீரைத்துடைக்கும் சிலம்பரசனின் வயதுக்கு மீறிய நடிப்பு தாய்க்குலத்தை அலைமோத வைத்தது.
  இந்தியாவிலும் இலங்கையிலு தாறுமாறாக ஓடி வசூலில் சாதனை செய்தபடம்"சின்னத்தம்பி".வெகுளித்தனமான பிரபு. உலகம் தெரியாத குஷ்பு."இந்தக்கயிற்றை என் கழுத்தில் கட்டி மூண்டு முடிச்சுப்போட்டா என் மூண்டு அண்ணன்மாரும் உனக்கு அடிக்க மாட்டங்க" என்று குஷ்பு சொன்னதை நம்பி குஷ்புவின் கழுத்தில் மூன்று முடிச்சுப்போடும் பிரபு.தங்கை குஷ்புவின் கழுத்தில் தாலி கட்டிய பிரபு இருக்கும் இடத்தை அறிவதற்காக விதவைத்தாய்மனோரமாவைக்கொடுமைப்படுத்தும் தாரவி.இந்தக்காட்சிகள் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் சின்னத்தம்பியின் வெற்றி சரித்திரமானது.
  அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்கியராஜை ஓடி ஓடிக்காதலிக்கும் அம்பிகா, சந்தர்ப்பவசத்தால் ராஜேஸுக்கு மனைவியாகிறார். அம்பிகாவின் காதலைத்தெரிந்த ராஜேஸ், காதலரைச்சேர்த்துவைக்க முயற்சிக்கிறார். முடிவு எப்படி இருக்கும் என ரசிகர்கள் பதறியபோது தாலிசென்றிமென்ற் அம்பிகாவைத்தடுக்கிறது.
 "அவர்கள்" படத்தில் கொடுமைக்கார ரஜினியின் மனைவி‌சுஜாதா. விவாகரத்தின் பின்னர் "நானே வேண்டானப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் உனக்கெதுக்கு" என்று ரஜினி கேட்க "கழற்றி எறிஞ்சிடுவேன். ஆனா, இது எங்கப்பா செய்து போட்டது" என்று சொன்னபடி வெளியேறுவார் சுஜாதா.
 "என் கையில் துப்பாக்கி" என்பான் கலங்கரை விளக்கம் படத்தின் வில்லன்."இதோ துப்பாக்கியை விட சக்தி வாய்ந்த ஆயுதம். உன்னால் என்னை ஒன்றும் செய்து விடமுடியாது" எனத்தாலியைக்காட்டுவாள் கதாநாயகி.

 நானும் ஒருபெண்,விஜயகுமாரி‍- காவியத்தலைவி,செளகார் ஜானகி‍‍ -விதி,பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் பெண்ரசிகைகளை மட்டுமன்றி ஆண்ரசிகர்களையும் கவர்ந்தவர்கள்.கணீரென்றகுரலில் மனதில் இடம் பிடித்தவர் கண்ணாம்பா."பொறுத்ததுபோதும் மகனே மனோகரா பொங்கி எழு"என்ற கட்டளையை  என்றைக்குமே மறக்கமுடியாதது.
 பானுமதி,பத்மினி,சாவித்திரி,கே.ஆர்.விஜயா,சுஜாதா,பண்டரிபாய்,எம்.என்.ராஜம்,டி..மதுரம்,மனோரமா,சரோஜாதேவி,தேவிகா ஆகியோரும் தமது பாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர்.
வந்தாளே மகராசி படத்தில் ஜெயலலிதா இரட்டை வேடமேற்று நடித்திருந்தார்.அப்பாவி ஜெயலலிதாவை துன்புறுத்துவதைக்கண்ட துணிச்சல் மிக்க ஜெயலலிதா இடம் மாறி பழிவாங்குவதை தியேட்டரில் ஒலித்த ஆரவாரத்தின் மூலம் சிகர்களின் விருப்பத்தை அறிய முடிந்தது. ஜக்கம்மா, ரிவால்வர் ரீட்டா,கன்ஃபைட் காஞ்சனா போன்ற குதிரையில் துப்பாக்கியுடன் வந்த நாயகிகளும் மனதில் இடம் பிடித்தனர்.
 ரசிகர்களைக்கவர்வதற்காகவே தாய்க்குப்பின் தாரம் ,தாயைக்காத்த தனயன்  போன்ற பெயரில் படங்கள் வெளிவந்தன.எம்.ஜி.ஆரின் படங்களில் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கபபடும். கதாநாயகிகள் அவரை கனவில் காதலிப்பார்கள்.ஆபத்தான் வேளையில் கதாநாயகியைக்காப்பாற்றும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
 சிவாஜிகணேசனின் அதிகமானங்களில் இரண்டு தாநாயகிகள் ருவார்கள்.ஒருவரைக்காதலித்து இன்னொருவரைத்திருமம் செய்வார் அல்லது இரண்டு பேரையும் திருமம் செய்வார்.சிக்கலானகதை அமைப்பைக்கொண்டசிவாஜியின் ங்களைப்பார்ப்பற்கு சிகர்கள் அலைமோதுவார்கள்.முறியடிக்கப்படாதசாதனைகளின் சொந்தக்காரன் சிவாஜிகணேசன்.
 பெண்களைச்சுற்றியே தை இருந்தனால் சாரதா,குலள் ராதை,மிஸ்ஸியம்மா,அமுதா,வாயாடி,மேயர் மீனாட்சி,ந்தாளே ராசி என்ற‌ பெண் தாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி த்தின் பெயரும் இருந்தது.
  ஸ்ரீர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.பாலந்தர், வி.சி.குகநாதன், விசு,பாக்கியராஜ் போன்றர்கள் பெண்கதாபாத்திரங்களைச்சுற்றி தை அமைப்பதில் ல்ர்கள்.
 இன்றையதாநாயகிகள் தொடையையும் இடுப்பையும் காட்டி தொப்புளில் ம்பம் விடுவதிலும் ஆம்லெட் போடுவதிலும் அக்றை காட்டியதால் ஓரிரு ங்களுடன் காணாமல் போய்விடுகிறார்கள்.
 பிரமாண்டமானந்திரலேகா இன்றும்பேசப்படுகிறது.சனங்கள் குறைவாகவும் அதிகமானபாடல்களுடனும் வெளிவந்த‌  சிந்தாமணி பெருவெற்றி பெற்றது.சிந்தாமணி நாயகி ருக்குமணி யைக்காண்பற்காகஇலங்கைசிகர்கள்ப்பலில்இந்தியாவுக்குச்சென்றார்கள்.கே.பி.சுந்தராம்பாளின் டிப்பில் வெளியானஒளவையார் சாதனை புரிந்த‌து.
ணி
 தினக்குரல் 11/10/1998

2 comments:

தி.தமிழ் இளங்கோ said...

// பாசமலருக்கு இணையாக எந்தப்படமும் இது வரை இல்லை //

அதுமாதிரி படமெல்லாம் இனி வராது. எடுக்கவும் மாட்டார்கள்.

சகோதரபாசம், தாலி சென்டிமெண்ட் பற்றி நன்றாக அலசிய பதிவு.

வர்மா said...

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.மலர்ந்தும் மலராத பாடலைக்கேட்டாலே கண்ணீர் வழிந்து ஓடும்