Monday, December 29, 2014

திரைப்படங்களில் நிலவு

கமலஹாசன் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்' திரைப்படத்தில் தேவாவின் இசையில் வெளிவந்த ‘சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே' பாடலை மீண்டும் கேட்ட பொழுது கவிஞர் வாலியும் கவியரசு கண்ணதாசனும் நிலவு குறித்து தத்தமது பாடல்கள் வாயிலாக சர்ச்சையில் ஈடுபட்டது நினைவுக்கு வந்தது.
பொதுவாக இலக்கியத்திலும் சரி சினிமாவிலும் சரி கவிஞர்கள் பெண்ணைத்தான் நிலவுக்கு ஒப்பிட்டுப் பாடல்களும் கவிதைகளும் புனைந்திருப்பார்கள். ஆனால் கவிஞர் வாலி ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் எழுதிய பாடல் ஒன்று தான் ‘அவன் ஒரு நிலவு’ என்ற பாடல். சறோஜாதேவி எம்.ஜி.ஆரை நினைத்துப் பாடுவதாக அமைந்த இந்தப்பாடல் துரதிஸ்டவசமாக திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இந்தப்பாடலில் உள்ள சிறப்பு என்னவெனில் இந்தப்பாடலில் நிலவை ஆண்பாலாக்கி இருப்பார் கவிஞர் வாலி அவர்கள்.
இந்தப் பாடலைப் பற்றி கேள்விப்பட்ட கவியரசு கண்ணதாசன் கவிஞர் வாலியைப் பார்த்து ‘சந்திரனை நீ எப்படி ஆண்பாலாக்குவாய்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு வாலி நீங்களே ஒரு திரைப்படத்தில் 
‘பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்'
என்று ஒரு பெண் பாடுவதாக பாடல் எழுதி உள்ளீர்களே என்று கேட்டதற்கு கவியரசு கண்ணதாசன் அது படத்தில் வருகின்ற நாயகனின் பெயர் சந்திரன் என்பதால் அவ்வாறு எழுதியதாகக் கூறியிருந்தார்.
அதுபோல கவிஞர் வைரமுத்து ‘சகலகலா வல்லவனே சலவை செய்த சந்திரனே’ பாடலிலும் கதாநாயகனை ‘சலவை செய்த சந்திரனே’ என்று வர்ணித்து பாடல் எழுதியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து சந்திரனை சலவை செய்வதாய் பாடல் புனைந்திருப்பது இது முதற் தடவை இல்லை என்றாலும் அது பாடலாக திரைப்படம் ஒன்றில் வெளிவந்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். முன்னதாக 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படத்துக்காக அவர் எழுதிய ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் பல்லவியை முதலில் அவர் 'சலவை நிலா பொழிகிறதே என்று எழுதிக் கொடுத்துள்ளார். ஆனாலும் நிலவை சலவை செய்ய இயக்குனருக்கும் வேறு சிலருக்கும் பிடிக்கவில்லை என்பதனால் இறுதியாக ‘இளைய நிலா பொழிகிறதே' என்று மாற்றியதாக கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மௌனத்தின் சப்தங்கள்’ நூலில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலா, வெண்ணிலா, வான்மதி, சந்திரன் போன்ற சொற்களைக் கொண்டு எத்தனையோ பாடல்கள் தோன்றியுள்ளன. பெண்ணை நிலவுக்கு ஒப்பிட்டும் வர்ணித்தும் தமது ஏக்கத்தினையும் பரிதவிப்பினையும் நிலவிடம் கூறுவது போலவும்
1. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ (உலகம் சுற்றும் வாலிபன்)
2. வானில் முழு மதியைக் கண்டேன் வனத்தில் (சிவகாமி) 
3. என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே (எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்)
4. நாளையிந்த வேளை பார்த்து ஓடி வாநிலா (உயர்ந்த மகனிதன்)
5. வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே (மிஸியம்மா)
6. ஓஹோ வெண்ணிலா எந்தன் வெண்ணிலா வண்ணப் பூச்சூடவா (ராணி சம்யுக்தா) 
7. நிலவே என்னிடம் நெருங்காதே நீ (ராமு)
8. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (பொலிஸ்காரன் மகள்)
9. நிலவைப் பார்த்து வானம் சொன்னது (சவாலே சமாளி)
10. சந்திரனைப் பாராமல் அல்லி முகம் மலருமா? (குலமகள் ராதை)
11. வான் மதியே ஓ வான்மதியே (அரண்மனைக்கிளி)
12. வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா?
(மின்சாரக்கனவு)
13. வெண்ணிலவே வெண்ணிலவே வானத்தை விட்டுட்டு வா (லேடீஸ் அண்ட் ஜென்டில்மன்)
14. வெண்ணிலவுக்கு வானத்தை புடிக்கலியாம் (தாலாட்டுப் பாடவா)
15. வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏன் அம்மா? (காலமெல்லாம் காதல் வாழ்க)
16. வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா(பட்டினப் பிரவேசம்)
17. நிலாவே வா செல்லாதே வா (மௌன ராகம்)
18. நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் (என்றும் அன்புடன்)
19. நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து (எஜமான்)
20. வண்ணநிலவே வண்ணநிலவே (நினைத்தேன் வந்தாய்)
21. வண்ண நிலவே வைகை நதியே (பாடாத தேனீக்கள்)
22. நிலவொன்று கண்டேன் உன் ஜன்னலில் (கைராசிக்காரன்)
23. நிலவே நிலவே தாளம் போடு (தை பொறந்தாச்சு)
24. வா வெண்ணிலா உன்னைத் தானே (மெல்லத் திறந்தது கதவு)
25. நிலவு தூங்கும் நேரம் நினைவு (குங்குமச்சிமிழ்)
26. நிலா காய்கிறது நிறம் தேய்கிறது (இந்திரா)
27. நிலா காயுது நேரம் நல்ல நேரம் (சகலகலா வல்லவன்)
28. நிலவே மலரே சரிகமபதநி பாடு (பெரியண்ணா)
29. நிலவும் மலரும் பாடுது (தேன் நிலவு) 
30. நிலவுப்பாட்டு நிலவுப் பாட்டு (கண்ணுக்குள் நிலவு) 
31. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே (நந்தவனத் தேரு)
32. வெண்ணிலவு கொதிப்பதென்ன (சின்ன மாப்பிள்ளை)
33. இளையநிலா பொழிகிறதே (பயணங்கள் முடிவதில்லை)
34. வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே (வேட்டையாடு விளையாடு)
35. சந்திரனைத் தொட்டது யார் (ரட்சகன்)
36. ஓ வெண்ணிலா இரு வானிலா (காதல் தேசம்)
37. வெண்ணிலவை முதன்நாள் இரவில் ( உழைத்து வாழ வேண்டும்)
38. வெள்ளி நிலவே நீலக்கடலே (பாட்டு வாத்தியார்)
39. சந்திரனைக் கூப்பிடுங்க தாலாட்டுப்பாட (மறவன்)
40. வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவில் (இருவர்)
41. வெண்ணிலாவின் தேரிலேறி காதல் தெய்வம் (டூயட்)
42. ஆகாய வெண்ணிலாவே தரைமீது (அரங்கேற்ற வேளை)
43. வானிலே தேனிலா ஆடுதே பாடுதே(காக்கிச்சட்டை)
44. கல்யாணத் தேன் நிலா (மௌனம் சம்மதம்)
45. நந்தா என் நிலா (நந்தா என் நிலா)
46. வான் நிலாவே வான்நிலவே வாழ்வில் வந்தது (மன்னவரு சின்னவரு)
47. நிலவே நிலவே நிலவே கொஞ்சம் நில்லு (நிலாவே வா)
48. நிலவை நிலவை இப்ப நான் புடிக்கும் ( காத்திருந்த கண்கள்)
49. மஞ்சள் நிலாவின் அழகில் (திருமூர்த்தி)
50. வாராயோ வான்மதி ( பகல்நிலவு)
51. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா( ஆனந்தக்கும்மி)
52. வெண்ணிலா ஜோதியை வீசுதே ( மணமகன் தேவை)
53. ஓ வெண்ணிலாவே ( பிரேம பாசம்)
54. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா ( மஞ்சள் மகிமை)
55. வெண்ணிலவு தரையில் உதித்தாள் (துப்பாக்கி)
56. வெண்ணிலவைத் திருடிக் கொள் உயிரே (ஆசையில் ஓர் கடிதம்)
57. முழுமதி அவளது முகமாகும் (ஜோதா அக்பர்)
58. வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் (கண்ணன் வருவான்)
59. நிலவே வா அழைக்குது அழைக்குது வானம் (எங்கிருந்தோ வந்தான்)
60. நிலாவில் வீடு செய்வோமா (குபேரன்)
61. சந்திர மண்டலத்தில் புத்தம் புது (நிலாவே வா)
62. வெண்ணிலா வெளியே வருவாளா (உனக்காக எல்லாம் உனக்காக)
63. மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே)
64. நிலவொண்ணு பத்திக்கிச்சு என்னவாச்சு (எதிரும் புதிரும்)
65. நிலாவிலே நிலாவிலே நான் உன்னை (ஆகா எத்தனை பொருத்தம்)
போன்ற பல பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்றிருப்பினும் நிலவை ஆண்பாலாக்கி சித்திரித்தவையாக கவிஞர் வாலியினதும் கவிஞர் வைரமுத்துவினதும் மேற்கூறிய இரண்டு பாடல்களுமே எனக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்றன
சின்னராஜ விமலன்

2 comments:

வர்மா said...

இந்தக்கட்டுரை ந‌ண்பர் சின்னராஜ விமலன் எழுதியது. பெயர் குறிபிடாமைக்க்கு வருந்துகிறேன்.

ஜோல்னா ஜவஹர் said...

பிள்ளைநிலா இரண்டும் வெள்ளைநிலா
வெள்ளிநிலா முற்றத்திலே
அந்த நிலாவத்தான் நான் ...