Thursday, October 11, 2018

நக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்


தமிழக ஆளுநராக பன்வரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்து பல வேறு பிரச்சிகளில் சிக்கிவருகிறார். மத்திய அரசின் எல்லையை மீறாமல் மாநில அரசைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதையே பெரும்பாலான ஆளுநர்கள் செய்கிறார்கள். ஆனால், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், ஆய்வு செய்கிறேன் என்ற போர்வையில்  தமிழக அரசை வெளிப்படையாகக் கண்காணிக்கிறார். எதிர்க் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. தமிழகத்தை ஆட்சி செய்யும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுநரின் செயற்பாட்டை வர வேற்கிறது.
ஆளுநரின் ஆய்வை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியது. கறுப்புக்கொடி காட்டிய கழகத்  தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

 ஆய்வு செய்யச்சென்ற ஆளுநர்  குளியலறையை எட்டிப்பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இளம் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை வருடி  பின்னர் மன்னிப்புக் கேட்டார். தமிழக அரசின் ஊழல் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஆளுநரிடம் கையளித்தன. அதற்கு எந்த விதமான  நடவடிக்கையும்  இதுவரை எடுக்கப்படவில்லை. இலஞ்சம் வாங்கிக்கொண்டு உதவிப் பேராசிரியர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நான் நியமித்த ஒன்பது புதவிப் பேராசிரியர்களும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழக ஆளுநர் வெளிப்படையாகத்  தெரிவித்துள்ளார்.


ஊழல் இலஞ்சம் என்பன தமிழகத்தில் மலிந்து விட்டதாகத் தெரிவிக்கும் ஆளுநர் தமிழக அரசின் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காது மெளனமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இந்த நிலையில் ஆளுநர் அலுவலகத்தின் முறைப்பாட்டின் பிரகாரம் காலையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை  மாலையில் விடுதலை செய்த   செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு மிரட்டல் விடுத்தது, பணி செய்யவிடாமல் தடுத்தது எனத் தேசத்துரோக குற்றச்சாட்டில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா இருக்கும் வரை நக்கீரன் மீது ஏதாவது ஒரு  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்படும். தமிழகத்தில் ஒரே நாளில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட இடங்களில் நக்கீரன் கோபல் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை எல்லாம் சட்ட ரீதியாக எதிர்கொண்டு பதிலளித்தார் கோபால்.

நக்கீரனையும் கோபாலையும் முடக்கும் நோக்கோடு சட்டப்பிரிவு 124 இன் கீழ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநரையும் ஜனாதிபதியையும்  மிரட்டுபவர்கள்மீதும் அவர்களைப் பணி செய்யவ் இடாமல் தடுப்பவர்கள் மீது இந்தச்சட்டம் பாயும்.  அவர்களை உஅட்னடியாகக் கைது செய்யலாம். நீதிமன்ற உத்தரவில்லாமல் விசாரனை செய்ய முடியாது. பிணை வழங்கப்பட மாட்டாது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துடன் எழு வருட சிறைத்தண்டனை. இதிலிருந்து நக்கீரன் வெளியே வரமாட்டார் என நினைத்துத்தார் இந்தச் சட்டப் பிரிவின் பிரகாரம் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப்பேராசிரியை நிர்மலாவைப் பற்றிய பரபரப்பான ஒலிப்பதிவை நக்கீரன் வெளியிட்டது. அந்த ஒலிப்பதிவு ஆளுநர் மாளிகையை அதிரவைத்தது. மாணவிகளைத் தவறான நடத்தைக்கு அழைத்த நிர்மலாதேவி ஆளுநரை நான்கு முறை சந்தித்தேனொன்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை ஆளுநர் மாளிகையால் ஜீரணிக்க முடியவில்லை. நிர்மலாவைப்ய  தகவல்களை நக்கீரன் அடிக்கடி வெளியிட்டு வருவதால் ஆளுநர் மாளிகை நெருக்கடியை எதிர் நோக்கியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.இதம் மூலம் ஏனைய ஊடகங்களையும் அச்சுறுத்தும் நோக்கம் இருந்தது.

ஆளுநருக்கு அச்சுறுத்தல் விடுத்து பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரிய ராம்  நீதிமன்றத்தில் ஆஜராகி தவறான ஒரு குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நீதித் துறையி முன்மாதிரியாக இருக்க வேண்டாம் என்று தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ஏற்க மறுத்து கோபாலை விடுதலை செய்தார்.

பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதும் தமிழகத்துக்கு புதியதல்ல.
1987 ஏப்,இ 4: எம்.எல்..இக்கள் பற்றி,இ 'கார்ட்டூன்' வெளியிட்டதற்காக 'ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கைது

1989: தமிழக சட்டசபை பற்றி எழுதிய கட்டுரைக்காக  'இல்லஸ்டிரேடட் வீக்லி' பத்திரிகையின் சென்னை செய்தியாளர்  கே.பி.சுனிலை, கைது செய்யும்படி  சபாநாயகர் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றம்  அதற்கு தடை விதித்தது
2003: சட்டசபை மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்  செய்தி வெளியிட்டதாக  'தி இந்து' ஆசிரியர்  என்.ராமை கைது செய்ய  அப்போதைய சபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார். அதற்கும்  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2003 ஏப் . 11: கொலை வழக்கு  தனி தமிழ்நாடு கோரிக்கை  'லைசென்ஸ்' இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 'பொடா' சட்டத்தில்இ 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் கைது. செப்., 19ல், பிணையில்வெளிவந்தார்

2009 அக்.  7: நடிகையர் குறித்து அவதுாறு செய்தி வெளியிட்டதாக  'தினமலர்' நாளிதழ் செய்தி ஆசிரியர் லெனின் கைது. அக்.  9ல்  பிணையில் விடுதலை

2018 அக்  9: கவர்னர் மீது அவதுாறு செய்தி வெளியிட்டதாகஇ 'நக்கீரன்' கோபால், பிரிவு, 124ன் கீழ் கைது. 'இது செல்லாது' என நீதிபதி தீர்ப்பு அளிக்க விடுதலையானார்.
கோபாலைச் சந்திக்கச்சென்ற வைகோ தடுக்கப்பட்டார். அதை எதிர்த்துப் போராடியதால் அவர் கைது செய்யப்பட்டார்.  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வைத்தியசாலையில் சந்தித்தார். கோபாலுக்கு எந்த உதவியும் கிடைக்கக்கூடாது என்பதில் யாரோ அக்கறை காட்டினார்கள்.
கருத்துச் சுதந்திரத்தை காவல் துறையின் உதவியுடன் அடக்கிவிட முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


No comments: