கார்டிஃப்
சிட்டி ஸ்டேடியத்தில் உக்ரைனை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த 1958 க்குப் பிறகு
வேல்ஸ் தனது முதல் உலகக் கிண்ணப் போட்டிக்கு
தகுதி பெற்றது.
வேல்ஸ் தலைநகரில் மழையில் நடந்த பரபரப்பான போட்டியில் கப்டன் ஆண்ட்ரி யர்மோலென்கோ, 34-வது நிமிடத்தில் கரேத் பேலின் ப்ரீ-கிக்கைத் தடுக்க முயன்றபோது, தனது சொந்த வலைக்குள் தலையால் முட்டி மோதியதால் கோலானது. அதுதான் வெற்றிக்கோல் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்..
ஒன்பது கோல்களைத் தடுத்து அனைவரின் பாராட்டுகளையும்
பெற்றார். உக்ரைன் வீரர்களும் சளைக்காது எதிர்த்தாக்குதல்
நடத்தினர். வெல்ஸின் நட்சத்திர வீரரான கரத்
பேல் முதுகுவலியையும் பொருட்படுத்தாது தனது நாட்டை உககக்கிண்ணப் போட்டிக்கு
அழைத்துச் சென்றார்.
இங்கிலாந்து,
அமெரிக்கா , ஈரானுடன் நவம்பர் மாதம் கட்டாரில் தொடங்கும் போட்டியி வேல்ஸ் குழு ப் யில் இடம் பெற்றுள்ளது.
ரஷ்யாவிற்கு
எதிரான போர் தொடரும் உக்ரேனிய ரசிகர்களுக்கு இது ஒரு உணர்ச்சிகரமான சந்தர்ப்பமாக இருந்தது,
அவர்கள் தங்கள் அணியை வீட்டிலிருந்து வெகு தொலைவில் பார்த்தார்கள்.
அவர்கள் தங்கள் தேசத்தின் கொடியில் தங்களை போர்த்திக்கொண்டு, இருண்ட காலங்களில் நம்பிக்கையைத் தேடினர்.
No comments:
Post a Comment