Friday, September 2, 2022

பங்களாதேஷை வெளியேற்றிய இலங்கை

ஐக்கிய அரபு எமரேட்ஸில் நடைபெற்ற பரபரப்பான ஆசியக்கிண்ணப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய இலங்கை  வெற்ரி பெற்று சூப்பர் 4  சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.

 15-வது ஆசிய கிண்ண  கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு நடைபெறுகிறது. துபாயில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-பங்களாதேஷ்  அணிகள் (பி பிரிவு) மல்லுகட்டின. இரண்டு அணிகளும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்ததால வெற்றி பெற  வேண்டும் என்ற  இலக்குடன் விளையாடின.

'நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கப்டன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார்.  முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷின்  சபிர் ரகுமான் (5  ) ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் சில சிக்சர்களை தெறிக்கவிட்டு அதிரடியான தொடக்கம் தந்தார். 'பவர்-பிளே'யில் அந்த அணி 55 ஓட்டங்கள் சேர்த்தது. ஹசன் மிராஸ்  38  ஓட்டங்கள் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 

 முஷ்பிகுர் ரஹிம் 4 ஓட்டங்களுடனும், கப்டன் ஷகிப் அல்-ஹசன் 24 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

 5-வது விக்கெட்டுக்கு அபிப் ஹூசைனும், மக்முதுல்லாவும் கைகோர்த்து ரன்ரேட்டை கணிசமாக உயர்த்தி சவாலான நிலையை நோக்கி பயணிக்க உதவினர். ஓட்ட எண்ணிக்கை 144-ஐ எட்டிய போது அபிப் ஹூசைன் 39 ஓட்டங்களிலும் (22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மக்முதுல்லா 27 ஓட்டங்லும் ஆட்டமிழந்தனர்.

 கடைசி கட்டத்தில் மொசாடெக் ஹூசைன் (9 பந்தில் 4 பவுண்டரியுடன் 24 ஓட்டங்கள்), தஸ்கின் அகமது (6 பந்துகள், 11 ஓட்டங்கள்) அணி 180 ஓட்டங்கள் அடிக்க வித்திட்டனர்.  20 ஓவர் முடிவில் வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 183 ஓட்டங்கள் அடித்தது.  கடைசி 5 ஓவர்களில் மட்டும் அந்த அணி வீரர்கள் 60 ஓட்டங்கள்  அடித்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 184 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் குசல் மென்டிஸ் நிலைத்து நின்று விளையாட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. ஒரு கட்டத்தில்  4 விக்கெட்டுகளை பறிகொடுத்து77 ஓட்டங்கள் எடுத்து    தடுமாறியது. இந்த சூழலில் குசல் மென்டிசுடன், கப்டன் தசுன் ஷனகா இணைந்து அணியை தூக்கி நிறுத்தினார். நான்கு முறை தப்பிப் பிழைத்த  மென்டிஸ் 60 ஓட்டங்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஷனகா 45 ஓட்டங்களிலும் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற கடைசி கட்டத்தில் பரபரப்பு தொற்றியது

  இறுதி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 8 ஓட்டங் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் வீசினார். இதில் முதல் பந்தில் ஒரு ஓட்டம். 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அசிதா பெர்னாண்டோ (10 ஓட்டங்கள், நாட்-அவுட்) 3-வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184  ஓட்டங்கள் அடித்து  2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

இந்த மைதானத்தில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இது தான். முக்கியமான கட்டத்தில் 4 நோ-பால் மற்றும் 8 வைடுகள் வீசியது பங்களாதேஷுக்கு  பின்னடைவாக அமைந்தது. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான் (2 வெற்றி), இலங்கை (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டின. 2 ஆட்டத்திலும் தோற்ற  பங்காதேஷ் வெளியேறியது.

No comments: