Saturday, May 17, 2008

சினிமா தழுவிய அரசியல் அரசியல் ந‌ழுவிய சினிமா

பிரிக்கமுடியாதது எது எனக்கேட்டால் தமிழக அரசியலும்,தமிழ்சினிமாவும் எனப்பதில்கூறுவதற்கு ஏற்றவாறு இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளன.அறிஞர் அண்ணா சினிமாவை அரசியல் பிரசாரத்துக்காகப்பயன் படுத்தினார்.எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பாடல்கள் அனைத்தும் அவர் முதலமைச்சராவதற்கு உதவின.அரசியலில் பிரவேசிக்கவிரும்பாத ரஜினி சொல்வதை தமக்குச்சாதகமாக மாற்றிச்சொல்வதில் பல்வேறு அரசியல் தலைவர்களும்முனைப்புக்காட்டுகின்றனர்.



அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்,செல்விஜெயலலிதா என 1967ஆம் ஆண்டுக்குப்பின்னர் வந்த முதலமைச்சர்கள் அனைவரும் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்களே.

திராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு எம்.ஜி.ஆரும்,காங்கிரஸ் கட்சிக்கு சிவாஜியும் பிரதமபேச்சாளராக விளங்கினார்கள்.திராவிடமுன்னேற்றக்கழகத்திலிருந்து எம்.ஜி,ஆர் வெளியேறி அண்ணா திராவிடமுன்னாற்றக்கழகத்தை ஆரம்பித்தபோதுதமிழக திரைப்படக் கலைஞர்கள், திராவிடமுன்னேற்றக்கழகம்,காங்கிரஸ்,அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகம் ஆகியமூன்று கட்சிகளிலும் சேர்ந்துபிரசாரம் செய்தனர்.

ஊழலற்ற அரசியலை உருவாக்கப்போவதாக அவர்கள் மேடைகளிலும்,சினிமாவிலும் பிரசாரம் செய்தார்களேதவிர அதனை நடைமுறைப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அரசியல்பிரசாரங்களுடன் எதிரணிஅரசியல் வாதிகளை மட்டம் தட்டும்நோக்கிலும் சினிமா பயன்படுத்தப்படுகிறது.சினிமாக்கலைஞர் பிரசாரம் செய்வதுடன் மட்டும் நில்லாது ஆட்சியையும் பிடிக்கமுடியும் என்பதை எம். ஜி.ஆர் தமிழகத்தில் நிரூபித்தார். எம்.ஜி.ஆரைத்தொடர்ந்து என்.டி .ராமராவ் ஆந்திராவில் ஆட்சியைப்பிடித்தார்.

1958ஆம் ஆண்டுவெளியான "நாடோடிமன்னன்"படத்தில் மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்த்து மகக்ளாட்சிமலரவேண்டும் என்பதற்காகப்போராடும் நாடோடி எம்.ஜி.ஆர் சிறையில் அடைக்கப்படுகிறார்.தன்னைச்சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையில் இருந்துவிடுபடவிரும்பும் மன்னன் எம்.ஜி.ஆர் உருவ ஒற்றுமையைப்பயன்படுத்தி நாடோடியை மன்னனாக்கி மக்களாட்சி மலர வழிவிடுகிறார்.

1969ஆம் ஆண்டு வெளிவந்த "நம்நாடு" திரைப்படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த பொதுநலவாதியான எம்.ஜி.ஆர் நகராட்சித்தேர்தலில் வென்று தலைவராகிறார்.எஸ்.வி.ரங்கராவ்,அசோகன், கே.ஏ.தங்கவேலு ஆகிய மூண்று பணக்காரர்களும் எம்.ஜி.ஆரைப்பணீசெய்யவிடாது சதி செய்கின்றனர்."நம்நாடு" படத்தில் சமூக விரோதியாகவரும் எஸ்.வி. ரங்கராவ் பேசும் வசனங்கள் இனறும் அரசியலுக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது.

"ஆண்டவனே மனிதனாகப் பிறந்து தேர்தலில் நின்று ஜெயித்தாலும் அவன் இலஞ்சம் வாங்காமல் இருக்கமுடியாது."

"ஏழைகளீடமிருந்து காப்பாற்றுகிறேன் எனககூறி பணக்காரர்களீடம் காசு வாங்கவேண்டும்.பணக்காரர்களீடம் இருந்து காப்பாற்றுகிறேன் எனக்கூறி ஏழைகளிடம் காசு வாங்கவேண்டும்."

" ஒருவன் ஐந்து ரூபா தந்தாலே வருவான். ஒருவன் நூறு ரூபாய்க்குதலை வணங்குவான்.ஒருவன் லட்ச ரூபாய்க்கு காலில் விழுவான்.இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரேட் இருக்கிறது"

"ஒரு கெட்டகாரியத்தை செய்து கொள்ளையடிக்கவேண்டுமென்றால் எப்போதும் ஒரு நல்லவனை முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும்."
அவை "நம்நாடு" படத்தின் வசனங்கள்.

"எல்லாம் உனக்காக" என்ற படம் 1961 ஆம் ஆண்டு வெளியானது. இப் படத்தில் பொது நலமனப்பான்மை கொண்டவராக நடித்த சிவாஜி, ஊருக்கு நல்லது செய்ய எண்ணி பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று தலைவராகி.நகரசபைத்தலைவர்,மாநகரசபை மேயர் போன்ற பதவிகளை வகித்து அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என உபதேசம் செய்கிறார்.
வர்க்கப் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "சவாலே சமாளி"என்ற படம் பெருவெற்றி பெற்றது.கிராமத்து பஞ்சாயத்துத் தேர்தலில் பண்ணையார் தோல்வியுற்றதால் வெற்றிபெற்ற ஏழை விவசாயிக்கு பண்ணையரின் மகள் வாழ்க்கைப் படுவதாககதை அமைக்கப்பட்டிருந்த்து.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதி போய்வந்ததால் "திருப்பதி கணேசா" என தி.மு.க வின் உடன் பிறப்புகள் கேலி செய்ததால் தி. மு.கவில் இருந்து வெளியேறிய சிவாஜிகணேசன் காங்கிரஸில் இணைந்தார்.



காங்கிரஸின் தலமையினால் அவமானத்துக்கும்,எரிச்சலுக்கும் ஆளான சிவாஜிகணேசன் கங்கிரஸில் இருந்து வெளீயேறி தனது ரசிகர்களை நம்பி"தமிழகமுன்னேற்ற முன்னணீ" என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தார்.தனது கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காக "என் தமிழ் என் மக்கள்" என்ற பெயரில் சினிமாப் படம் ஒன்றைத்தயாரித்து வெளியிட்டார். முழுக்கமுழுக்க அரசியல் மயமான அப்படம் வெற்றிபெறவில்லை.அதே போல் சிவஜியின் அரசியல் வாழ்வும் வெற்றிபெறவில்லை.

ஜெய்சங்கர்,ஜெயசித்ரா நடித்த "பணக்காரப்பெண்" என்ற படம் ஏழை பணக்காரன் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டது. தி.மு.க அபிமானியாகக் கருதப்பட்ட ஜெய்சங்கர் "ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,நீ நாடள வரவேண்டும் ராமச்சந்திரா" எனப்பாடி நடித்தார்.

ஜெய்சங்கர்,கே.ஆர்.விஜயா நடித்த "மேயர்மீனாட்சி" எஅற படத்தில் குப்பதுமீனாட்சியாக நடித்த கே.ஆர்.விஜயா, மேயர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் படம் வெற்றி பெறவில்லை.

"இன்று நீ நாளை நான்" என்ற படத்தில் தேர்தலில் தோல்வியுற்றதால் அவமானமடைந்த ஜெய்சங்கர் தற்கொலை செய்கிறார்.

"அச்சமில்லை அச்சமில்லை" என்ற படம் அரசியல்வாதிகளை வெளீச்சம் போட்டுக்காட்டியது.அரசியல்வாதியான தனது கணவன் ராஜேஷ் அயோக்கியனாக இருப்பதைப் பொறுக்கமாட்டாத மனைவி சரிதா தேர்தல் பிரசார மேடையில் கணவனைக் கொலை செய்கிறாள். திரை உலக ஜாம்பவானான கே.பாலசந்தரைமே லும் பிரபல மாக்க இப்படம் உதவியது.

"தாய்மாமன்" படத்தில் நேர்மையான முறயில் தேர்தலில் வெற்றிபெறும் சத்யராஜ்,"அமைதிப்படை" என்ற படத்தில் தேர்தலில் வெற்றிபெற தில்லு முல்லு களில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகைகளையும் கடைப்பிடித்து தேர்தலில் வெற்றிபெறுகிறார்.

"நட்பு" படத்தில் கார்த்திக் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் .ஸ்டாலின் நடித்த "மகக்ள் அணையிட்டால்"படமும் அரசியல் பேசியது.

அரசியல்வாதி தான் வெற்றிபெறுவதற்காக ஒரு தொண்டனை எப்படி எல்லாம் வஞ்சிக்கிறான் என்பதை "என் உயிர் தோழன்" மூலம் பாரதிராஜா மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.

எதிரும் புதிருமான இரு அரசியல் வாதிகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்துப் புனையப்பட்ட "இருவர்" மணிரத்தினத்தின் தோல்விப்படங்களில் ஒன்றானது.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வைவெளிப்படுத்தும் "அரசியல்","மக்களாட்சி" என்பன வரவேற்பைபெற்றன.

"எஜமான்"படத்தில் ரஜினிகாந்தை தோல்வியடையச்செய்ய நெப்போலியன் கடைப்பிடிக்கும் உத்திகள் அனைத்தையும் முறியடிக்கும் ரஜினி தேர்தலில் வெற்றிபெறுகிறார்.
"மகராசன்" ,"வீரபாண்டிக் கோட்டையிலே","உழைக்கும் கரங்கள்",ஏழைஜாதி" எனப்பல படங்கள் தேர்தல்சாயத்துடன் வெளிவந்தன.

திரைப்படங்களில் வருவதுபோல தேர்தல் வெற்றி சுலபமானது அல்ல என்பதை பல திரை உலகப்பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததன் மூலம் உணர்ந்துள்ளனர்.


ரமணி
தினக்குரல் 12/12/ 1999

2 comments:

Unknown said...

Hello sir,
welcome. i want to give information about your legistative(aayiram vilaku). In division N0.116 Nandhanam sathyamoorthy nagar opposite to appollo hospital(cancer) we are using the 20 feet road from mount road to housing board more than 50 years.Now the Zeebros company will occupy the road then company told "Mr.M.K.Stalin gave permission to occupy the road and got bribe from me and also got a bribe from some local parties". So that company and local parties also misuse your name.so kindly take neccessary action immediately as soon as possible.If you permit to occupy the road that will affect more than 500 families. thanking you.

Anonymous said...

Hello Sir,
I am glad to contact you, i saw your remarkable service as a mayar of chennai.Now you are continuing your valuable noticeble service as a Home minister.may god bless you keep you helthier.