Friday, July 18, 2008

சென்னையைநெருங்கும் ஆப‌த்து



தமிழக அரசியல் கட்சிகளினதும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களினதும் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியில் அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க போர்க்கப்பலான "யு.எஸ்.எஸ்.
நிமிட்ஸ்' சென்னையில் நங்கூரமிட்டது.

"நிமிட்ஸ்' என்னும் இப்போர்க் கப்பல் அணுசக்தி மூலம் இயங்குவதால் அக்கப்பலி
னுள் இரண்டு அணு உலைகள் உள்ளன. இக்கப்பலில் அணுக்கசிவு ஏதாவது ஏற்பட்டால்
அது தமிழ் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை தமிழகக் கட்சிகளும்,
சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இதுதவிர இக்கப்பலில் அணுஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.



ஈராக் போரில் பெரும் பங்கு வகித்த இக்கப்பலை மிதக்கும் குட்டித்தீவு ஓல்ட்சால்ட்
(பழைய உப்பு) என்று வர்ணிக்கிறார்கள். 4.5ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கப்பல்
1092 அடி நீளமும், 252 அடி அகலமும் கொண்டது. 23 மாடிகளைக் கொண்ட இக்கப்பலில் 65 போர் விமானங்கள் உள்ளன. முப்பது விநாடிக்கு ஒரு போர் விமானம் புறப்
பட்டு எதிரியின் இலக்கைத் தாக்கும் வகையில் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்போர்க் கப்பலில் போர் விமானங்கள் தவிர ஆபத்து வேளையில் உதவி செய்
யக் கூடிய விமானங்களும், ஹெலிகொப்டர்களும் உள்ளன. 53 படுக்கை அறைகளைக்
கொண்ட சிறு வைத்தியசாலை உள்ளது.அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
வைத்தியர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த முகம்மது கமிஸ் என்பவர்.
450 உயர் அதிகாரிகளும் 6000 வீரர்களும் இதில் பெண் அதிகாரிகளும் பெண் வீராங்கனை
களும் உள்ளனர். கடல் நீரை பிரிப்பதற்கு தனிப் பிரிவு உள்ளது. தினமும் சுமார் 4
இலட்சம் நல்ல தண்ணீர் இக்கப்பலில் உள்ள பிரிவின் மூலம் உற்பத்தியாகிறது.
இக்கப்பலில் உள்ள உணவு வகைகளை 70 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் வசதி
உள்ளது.இக்கப்பலில் உள்ள தபால் நிலையத்தில் வருடம் 10 இலட்சம் கடிதங்கள்
கையாளப்படுகின்றன. விமானம், ஹெலிகொப்டர், கப்பல் ஆகியவற்றின் மூலம் இக்க
ப்பலுக்கான தபால் விநியோகம் நடைபெறுகிறது.

தேவைக்கு அதிகமாக 50 சதவீத ஆயுதங்களும், தேவைக்கு அதிகமான இரண்டு
மடங்கு எரிபொருளும் சேமித்து வைக்கக்கூடிய வசதி இக்கப்பலில் உள்ளது. மூன்று
வழிபாட்டுத் தலங்கள், மாநாட்டு அறை,பொழுதுபோக்கு கூடம் என்பன இக்கப்பலில் உள்ளன.

1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதிஇக்கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இரண்டாவது உலகப் போரில் பசுபிக் கடல்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு வெற்றிø
யப் பெற்றுக் கொடுத்த இராணுவ கொமாண்டர் ஜெஸ்டர் நிமிட்ஸ்ஸின் சேவைø
ய கௌரவிப்பதற்காக இக்கப்பலுக்குநிமிட்ஸ் என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது
உலக மகா யுத்தத்தின்போது ஃப்ளீட் என்னும் போர்க்கப்பலின் கப்டனாக இருந்தவ
ர் நிமிட்ஸ். இக் கப்பலில் இருந்து புறப்பட்ட விமானங்கள்தான் ஹீரோஷிமாவிலும்
நாகசாகியிலும் அணுகுண்டுகளை வீசின.

32 வருடங்கள் கடலில் மிதக்கும் நிமிட்ஸ் என்ற இக்கப்பலினால் இதுவரை எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உலகைச் சுற்றும் இந்த போர்க்கப்பல் இந்தியாவுக்கு செல்லும் என முதலில் அறிவிக்கப்படவில்லை. பருவ மழையின் காரணமாகவே இது இந்தியாவில் நங்கூரமிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது பணத்தில் 1.6
இலட்சம் இந்திய ரூபாவை செலவிட உள்ளனர்.

ஜூலை 4 ஆம் திகதியாகிய அமெரிக்கசுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினர். சென்னை மரீனா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் வீரர்கள்
ஈடுபட்டனர்.

நிமிட்ஸ் என்னும் இந்த பிரமாண்டமான போர்க் கப்பல் இயங்குவதற்கு இரண்டு
அணு உலைகள் உள்ளன. இவற்றிலி இருந்து 3035 மெகாவாட்ஸ் சக்தி உற்பத்தியாகிற
து. இந்தக் கப்பல் இரண்டு கடல் மைல் தூரத்தில் நங்கூரமிட்டுள்ளது. (தரையில்
இதன் தூரம் 3.7 கி.மீற்றர்) தமிழகத்தின் கால்பாகம் அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட்ஸ் சக்தியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து 1000 மெகாவாட்ஸ் சக்தியும் உற்பத்தியாகின்றன.

கூடங்குளத்தின் அணுமின் நிலையத்தில் இருந்து ஒன்றரை மைல் தூரத்தில் மக்கள்
குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிமிட்ஸ் கப்பலினால் தமிழகத்துக்கு அணு
பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நிமிட்ஸ் நங்கூரமிட்டு நிற்கும் இடத்தில் இருந்து 200 மீற்றர் சுற்றளவு தூரத்தில் வேறு கப்பல்களோ படகுகளோ செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. போர்க் கப்பலின் பாதுகாப்புக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிமிட்ஸ் போர்க் கப்பலில் இருந்து அணுக்கசிவு ஏற்படுகிறதா என்பதை இந்திய விஞ்ஞா
னிகள் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். நிமிட்ஸுக்கு
அருகே இந்திய போர்க் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் 24 மணி நேரமும் இந்திய விஞ்ஞானிகள் அணுக்கசிவை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை துறைமுகத்திலும் கரையில் நடமாடும் வாகனங்களிலும் அணுக்கசிவு ஏற்படுகிறதா என்பதை இந்திய விஞ்ஞானிகள் அவதானித்தனர்.இதேவேளை அமெரிக்காவின் நிமிட்ஸ் சென்னைக்கு
அருகே வருவதற்கு முன்னரும், அக்கப்பல் கடலில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கை
யிலும், சென்னையை விட்டு சென்ற பின்னும் மண், காற்று, உணவு ஆகியவற்றில்
அணுகசிவு இருந்ததா என விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.

இந்தியாவுக்கு இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்த 10 அணு ஆயுத போர்க் கப்பல்கள்
வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் இல் லாத எதிர்ப்பு இப்போது எழுந்துள்ளது. நிமிட்ஸி
னுள் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அணு ஆயுதம் இருக்கா
இல்லையா என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு கொமாண்டர் ரியர் அட்மிரல்
ஜான் டெரன்ஸ் பிளேக், கமாண்டர் கப்டன் மைக்கல் சி மனாசிர் ஆகியோர் மறுத்து விட்டனர்.

இராணுவ இரகசியங்களை எந்த இராணுவத்தினரும் இலகுவில் வெளியிட மாட்டார்
கள். ஆகையினால் அது பற்றிய உண்மயை அறிய முடியாது. போர் நடவடிக்கைக்
காக இக்கப்பல் இப்பிராந்தியத்தினுள் வரவில்லை என்றாலும் அமெரிக்கா தனது
இராணுவ வல்லாண்மையை வெளிப்படுத்தவே இக்கப்பலை இந்தியாவுக்கு அனுப்பி
யுள்ளது என்ற எண்ணம் ஒரு சில இந்தியரிடம் உள்ளது.

57 வருட அணு ஆயுத திட்டத்தில் ஒருமுறை கூட விபத்து ஏற்படவில்லை. ஆகை
யினால் அணுக் கசிவு, அணுக்கதிர் வீச்சு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
இக்கப்பலின் பணியாளர்களின் குழந்தைகள் கூட வந்து போவார்கள். இதுமுழுக்க முழுக்க பாது
காப்பான கப்பல் என்றுகொமாண்டர் ஜான்டெரின் பிளக் கூறியுள்ளார். அணுசக்தியால் இயங்
கும் அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்' சிறிய அளவில் விபத்துக்குள்ளானால் அது வெளியில் தெரியாது. இராணுவ இரகசியமாக அது மறைக்கப்பட்டு விடும் வாய்ப்பு
உள்ளது.

கரைப்பகுதியில் உள்ள மக்களுக்கு அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்தும் அளவுக்கு பெரிய விபத்து ஏற்பட்டால் அதை மறைக்கமுடியாது. ஆனால் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டால்
அது வெளியுலகத்துக்கு தெரியாது. இவ்வகை கப்பல்களில் சிறிய விபத்துக்கூட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதால்தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது
சென்னை வந்த போர்க் கப்பல் நிமிட்ஸ் 1975 ஆம் ஆண்டு முதல் இயங்குகிறது.
இதுவரை இக்கப்பலில் ஒரு விபத்து கூட ஏற்பட்டது இல்லை. இவ்வகைக் கப்பல்களில்
கப்பலை இயக்குவதற்கு தேவையான சக்திøய வழங்க அணு உலைகள் இருக்கும்.
இதேபோன்ற அணு உலைகள் மூலம்தான் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றன. என்றாலும் மின் அணு உலைகளை விட, கற்பனை செய்துவிட முடியாத அளவுக்கு மிக ஆபத்தான
அணு உலை கப்பலுக்குள் உள்ளது.

அதற்கு காரணம், போர்ச் சூழ்நிலையில் திடீöரன ஒரு நிமிடத்துக்குள் குறிப்பிட்ட இடத்திலிருந்து வேகமாக கிளம்ப வேண்டியிருக்கும். அதற்கு தேவையான சக்தியை வழங்குவ
தற்காகத்தான் இந்த போர்க் கப்பல்களில் சக்திவாய்ந்த அணு உலைகள் அமைக்கப்
பட்டுள்ளன. ஆயிரம் அடி நீளத்தில் 4.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தக் கப்பல், ஏறத்தாழ ஆறாயிரம் பேருடனும், 80 விமானங்களுடனும் ஒரு இலட்சம் தொன் சுமையை சுமந்து கொண்டு மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இது செல்ல அணு உலை வெளியிடும்
சக்தி மிக அவசியம். அணு உலைகளுக்கு எரிபொருளாக யுரேனியம் என்ற கனிமம்
பயன்படுகிறது. சாதாரண மின் அணு உலைகளில் இந்த யுரேனியம் செறிவூட்டப்பட்டு
பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும். இதில், பெரிய அளவிலான விபத்துகளுக்கு
வாய்ப்பு குறைவு. ஆனால் அணு குண்டுக்குள் இருக்கும் யுரேனியம் மிக அதி
கமாக செறிவூட்டப்பட்டிருக்கும். சேதம் அதிகமாக விளைவிக்க வேண்டும் என்பதற்காக
அந்த ஏற்பாடு. இதேபோல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் நிமிட்ஸ் கப்ப
லின் என்ஜின் பகுதியில் உள்ளது.

இந்தக் கப்பலே ஒரு பெரிய அணு உலைக்கு சமமானதுதான். அத்துடன் அக்கப்பலுக்குள் அணு குண்டுகள் இருக்கும் பட்சத்தில் சாதாரண விபத்து கூட பெரிய விபத்தாக
மாறிவிடும் அபாயம் இருக்கிறது. பொது மக்களுக்கு கப்பல் தொடர்பான பயம் ஏற்
பட்டு விடக் கூடாது, அது கொண்டிருக்கும் அபாய அளவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு
ஆர்வலர்கள் மதிப்பிட்டு விடக் கூடாது. மற்றும் இராணுவ இரகசியம் உள்ளிட்ட காரணங்களினால் அதில் அணு குண்டுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை கப்பல்
இராணுவ அதிகாரிகள் உறுதி செய்யமறுக்கின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் இந்
தக் கப்பலில் பொதுவாக அணு ஆயுதங்கள் கொண்டு செல்வது இல்லை என்றும் நம்பப்படுகிறது. அணு சக்தியால் இயங்கும் கப்பலில் ஏற்படும் எல்லா விபத்துகளையும் "விபத்து' பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். பெரிய அளவில் விபத்து நடந்தால்தான் "விபத்து' என்று குறிப்பிடுவார்கள். நிமிட்ஸ் கப்பலில் விபத்துகள் ஏற்படாவிட்டாலும் இதுபோன்ற அணுசக்தி கப்பல்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதுபோன்ற சிறு விபத்துகளால் கப்பலில் உள்ளவர்களுக்கும், அந்தப் பகுதியின் காற்று மண்டலத்திலும் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டிருக்கிறது என்று இதற்கு முந்தைய ஆய்வுகள்
குறிப்பிடுகின்றன. கடந்த 1978 ஆம் ஆண்டில் யு.எஸ்.எஸ். பபர் எனும் அணுசக்தி கப்ப
லில், அணுக்கதிர் வீச்சுடன் கூடிய நீர் கப்பலிலிருந்து வெளியேறியது. ஆனால் இது தொடர்பாக பத்திரிகைகளுக்குக்கூட தகவல் தரப்படவில்லை. கடந்த 50 ஆண்டு காலத்தில் 150 முறை பயணங்களில் 13 கோடியே 50 இலட்சம் மைல்களில் 50 நாடுகளை அணுசக்தி கப்பல்கள் உலகை சுற்றி வந்திருக்கின்றன. இக்கப்பல்களில் எந்த அணு உலையும் வெடித்து விபத்து ஏற்படவில்லை. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 83 போர்க் கப்பல்கள், 72 நீர்
மூழ்கி கப்பல்கள், 10 விமானத்தாங்கி கப்பல்கள் மற்றும் ஓர் ஆராய்ச்சி கப்பல் அணு சக்தி
மூலம் இன்றும் கடலில் இயங்கி வருகின்றன. ஒருவேளை 10 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படுத்தும் அழிவை இந்தக் கப்பல் சந்தித்தால் கூட அணு உலைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிவு அகற்றும், அவசர கால நடவடிக்கை ஆகிய அனைத்தும் சர்வதேச விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றித்தான்நடக்கின்றன. அணு உலையை குளிர்விக்கும் நீரில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்கம் கலக்காதவாறும் வடிவøமக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசின்
செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நிமிட்ஸ் கப்பலில் இதுவரை விபத்து ஏற்படாததாலும்
விபத்து தடுப்பு பாதுகாப்பு தொழில்நுட்பம் முன்பை விட தற்போது முன்னேறியிருப்பதாலும்தான் இந்தக் கப்பலால் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்று அமெரிக்கா அடித்துச் சொல்கிறது. இந்திய துறைமுகத்தில் அணுசக்தி கப்பலை அனுமதிப்பது இதுதான் முதன்முறை அல்ல. ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சாகரா எனும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டு இந்தியத் துறைமுகங்களில் வலம் வந்தது. பிரான்ஸ் நாட்டின் அணுசக்தி கப்பல்கள் நான்கு முறை இந்தியத்துறை முகங்களில் நங்கூரமிட்டிருந்தன. இங்கிலாந்தின் அணுசக்திக் கப்பல் ஒருமுறை இந்தியா வந்துள்ளது. அமெரிக்காவின் அணுசக்தி கப்பல்கள் ஏற்கனவே ஐந்து முறை இந்தியாவுக்கு வந்து போயுள்ளன.

ரமணி
மெட்ரோநியூஸ்
07 07 2007

No comments: