Thursday, February 18, 2010

உலகக்கிண்ணம்2010


இத்தாலி
ஐரோப்பாவின் பலம் வாய்ந்த உதைபந்தாட்ட அணியும் உலக உதைபந்தாட்ட சாம்பியனுமான இத்தாலி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. குழு எட்டில் இத்தாலி, அயர்லாந்துக் குடியரசு, பல்கேரியா, சைப்பிரஸ், மொன்ட
னெக்ரோ, கிரீஸ் ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக மோதின.
10 போட்டிகளில் விளையாடிய இத்தாலி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலைப்படுத்தியது. 18 கோல்கள் அடித்த இத்தாலிக்கு எதிராக ஏழு கோல்கள் அடிக்கப்பட்டன. 24 புள்ளிகளுடன் குழு 8 இல் முதலிடம் பிடித்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது இத்தாலி. இத்தாலிக்கு எதிராக 19 தடவைகள் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒரு முறை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
சைப்பிரஸுக்கு எதிராக 3 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது இத்தாலி. இத்தாலிக்கு எதிராக அயர்லாந்தும் சைப்பிரஸும் தலா இரண்டு கோல்கள் அடித்தன. இத்தாலிக்கு எதிராக ஒரு நாடு அடித்த அதிக கோல்கள் இதுவாகும். ஆறு போட்டிகளில் இத்தாலிக்கு எதிராக கோல்கள் அடிக்கப்படவில்லை. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளும் முறையே 1 1, 2 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன.
இத்தாலிய கோல் கீப்பரான கியான் லுகி பவ்பனிடம் கோல் அடிப்பது மிகவும் சிரமமான காரியம். அணித் தலைவரான பபியோ கவைரோ, மத்திய கள வீரரான கன்னரோ கத்துசோ அல்படோகிளாடினே ஆகியோர் உலகக் கிண்ணத்தை தக்க வைக்கும் நம்பிக்கையில் உள்ளனர். அல்பட்டோ கிளாடினோ நான்கு கோல்கள் அடித்துள்ளார். அனுபவமும் ஆற்றலுமிக்க மர்கிலோவிட்டி இத்தாலிய உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார். நியூஸிலாந்து, பரகுவே,சுலோவேனியா ஆகியவற்றுடன் எஃப் பிரிவில் இத்தாலி உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ்

No comments: