Monday, January 31, 2011

இரகசியமாகக் கூட்டணிப் பேச்சு

தமிழக சட்டசபைக்கான தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணிக் கனவில் மிதக்க தமிழக முதல்வர் கருணாநிதி தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சூசகமாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவர் விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரது ஓய்வை தள்ளிப் போகச் செய்கிறது. தலைவர் கருணாநிதியா? முதல்வர் கருணாநிதியா? என்று கேட்டால் முதல்வர் கருணாநிதி என்றுதான் அதிகமானவர் கூறுவார்கள் என்று அண்மையில் நடைபெற்ற திருமண வைபவத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
பெரியார், அண்ணா காலத்தில் அரசியலில் நுழைந்தவர்களில் இன்றும் அதீத செல்வாக்குடன் விளங்குபவர் கருணாநிதி. தொண்டனாக கட்சியில் இணைந்து போராட்டங்களின் மூலம் கட்சியின் மதிப்பைப் பெற்று தொண்டர்களின் ஆதரவுடன் தலைவராகியவர். ஓய்வு வெறும் வயதையும் கடந்து ஓய்வில்லாமல் பணியாற்றும் தனக்கு ஓய்வு வேண்டும் என்று பல தடவை அவர் சூசகமாக அறிவித்தும் அவர் விரும்பும் ஓய்வு அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழக அரசியலில் மிகவும் நெருக்கடியான காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கைகோர்ப்பதற்குத் தயாராக உள்ளனர். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தால் மிகப் பெரிய சவாலை கருணாநிதி எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எதிர்க்கட்சிகள் பலமடையும். இவ்வேளையில் தனது ஓய்வு பற்றி கருணாநிதி அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பலமடைந்த வேளையில் தமிழகம் எங்கும் சூறாவளிப் பிரசாரம் செய்ய வேண்டும். ஆகையால் தேர்தலில் போட்டியிடுவதை முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் ஒரு சேரக் கவனிப்பதற்கு விரும்புகிறார் கருணாநிதி. இதேவேளை கட்சியின் பொறுப்பை தன் வசம் வைத்துக் கொண்டு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மகன் ஸ்டாலினிடம் கொடுக்கும் திட்டமும் அவரிடம் உள்ளது. தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதை திரõவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். தமிழகத்துக்கு அதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கான களமாக தமிழக சட்ட சபைத் தேர்தல் களத்தைத் தேர்வு செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாது கட்சியைத் தலைமையேற்று வழி நடத்த விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தொண்டர்களும் இதற்கு உடன்பட மாட்டார்கள். கருணாநிதி தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும். வெற்றி பெற வேண்டும். மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகும். இறுதியில் கட்சித் தலைவர்களினதும் தொண்டர்களினதும் விருப்பத்துக்கு இசைய வேண்டிய நிலைமை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமது கூட்டணி பற்றிய விபரத்தை உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணையப் போகும் கட்சிகள் எவை? இவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை போன்ற விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, இடதுசாரிகள் உட்பட 18 கட்சிகள் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட இலக்கம் ஒன்பது. ஆகையினால் 18 கட்சிகள் என்ற கூட்டணி இலக்கம் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.
ஜெயலலிதாவுடன் விஜயகாந்தும் தனித் தனியாகப் போட்டியிட்டால் கருணாநிதியை வீழ்த்த முடியாது என்பதே காலம் கடந்து இருவரும் உணர்ந்துள்ளனர். 70 முதல் 80 தொகுதிகள் வரை விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். அவ்வளவு அதிகமான தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா தயாராக இல்லை. கடந்த நாடாளுமன்ற, தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவின் படுதோல்விக்கு விஜயகாந்தான் காரணம். ஆகையினால் அதிக தொகுதிகளை விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். தமிழக சட்ட சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜெயலலிதா முதல்வராவார். ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றால் அந்தத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்க்கிறார்.
ஜெயலலிதா, விஜயகாந்த் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது. பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இருவரும் தயாராகி விட்டனர். தேர்தல் காலத்தில் கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா உதாசீனம் செய்ததும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அவமானப்படுத்தியதும் கடந்த கால வரலாறு. அந்த வரலாறுகளை கூட்டணிக்கு எதிரானவர்கள் அவ்வப் போது நினைவுபடுத்துகின்றனர்.
ஜெயலலிதா கேட்காமலே அவருக்காக பிரசாரம் செய்ய விஜய் ரசிகர்கள் தயாராகி விட்டனர். விஜய் நடித்த காவலன் படம் வெற்றி பெறுவதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே தவிர அதனைக் களைவதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. சினிமாக் கலைஞர்களுக்கு உதவி செய்யும் தமிழக முதல்வர் கருணாநிதி, விஜய் படும்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். விஜயின் அரசியல் பிரவேசத்தில் முதல்வர் கருணாநிதி வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. சுமார் 600 மீனவர்கள் கடலில் கொல்லப்பட்டனர். இலங்கைக் கடற்படை மீது ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படும் போது கண்டன அறிக்கைகளையும், கடிதங்களையும் எழுதுவதுடன் தன் பணி முடிந்து விட்டதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி நினைக்கிறார். கொல்லப்பட்ட மீனவரின் வீட்டுக்கு சென்ற, ஜெயலலிதா ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகையைக் கொடுத்து பிள்ளைகளின் படிப்புச் செலவையும் கழகம் பொறுப்பேற்கும் என்று அறிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் இலங்கை அரசு வெற்றி பெறுவதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் அளப்பரிய உதவிகளைச் செய்துள்ளன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் மீனவர் பிரச்சினையை பெரிதாக்குவதற்கு ஜெயலலிதா முன்வந்துள்ளார். நான் ஆட்சியில் இருந்தால் மீனவர்கள் இப்படிப்பட்ட அவல நிலையைச் சந்திக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா. பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது திரõவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பாரிய சவாலைக் கொடுக்க உள்ளது.
வர்மாசூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு 30/01/11

3 comments:

Unknown said...

எதுவும் வித்தியாசமா நடக்காது. 1000 ரூபாய், குவாட்டர் , கால் பிளேட் பிரியாணி போதும் நம்ம கோவாணாண்டிகளுக்கு கண்ணை மூடிகிட்டு அய்யாவுக்கும் அம்மாவுக்கும் குத்திட்டு சோடை போயிடுவான் நம்ம தமிழன். அப்போதான் நாம் சொல்லலாம் தமிழன் என்று சொல்லடா செரு...

வர்மா said...

அதுதான் நடக்கும்
அன்புடன்
வர்மா

மதுரை சரவணன் said...

பொறுத்து இருந்து பார்ப்போம். வாழ்த்துக்கள்.