Tuesday, May 17, 2011

முதல்வராகிறார் ஜெயலலிதா

தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றி யுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி படுதோல்விய டைந்துள்ளது. தமிழக சட்டசபைத்தேர்தல் கடந்த மாதம் 13ஆம் திகதி நடைபெற்றது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 160 தேசிய முற்போக்கு, திராவிட முன்னணி 41, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10, மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12, மனிதநேய மக்கள் கட்சி மூன்று, புதிய தமிழகம் இரண்டு, சமத்துவ கட்சி, இரண்டு, தொகுதிகளிலும் குடியரசுக் கட்சி சேதுராமனின் கட்சி பாவேட்பிளாக், கொ.இ.பே. ஆகியன தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன.
திராவிட முன்னேற்றக் கழகம் 119, காங் கிரஸ் கட்சி 63, பாட்டாளி மக்கள் கட்சி 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கெ.மு.க ஏழு, இந்திய முஸ்லிம் லீக் மூன்று தொகுதிகளிலும் வாண்டர் பெருந்தலைவர் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
பாரதீய ஜனதாக்கட்சி, ஜனதாத்தளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாகப் போட்டி யிட்டன.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் மூன்று கூட்டணிகள் போட்டியிட்டாலும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய கூட்டணியி டையே தான் கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்பு களும், தேர்தலுக்குப் பின்னைய கருத்துக் கணிப்புகளும் இரண்டு கூட்டணிகளுக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் வெளியாகின. சாதகமான கருத்துக்கணிப்புகளை ஏற்றுக் கொள்வ தாகக் கூறிய அரசியல் தலைவர்கள் தமக்குப் பாதகமாக வெளியான கருத்துக்கணிப்புகளை நம்பமறுத்தனர்.
தமிழகத் தேர்தல் முடிவு எதிர்பார்த்ததை விட அதிகளவு தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற் றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல் வியடைந்தன. தமிழக ஆட்சியில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற விருப்பத்தை மக்கள் அமைதியான முறையில் நிறைவேற்றியுள்ள னர்.
தமிழக அரசியல் வெற்றி,தோல்வியைத் தீர் மானிக்கும் சத்தியாக விளங்கிய விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தபோதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட் டணி வெற்றி பெறுவது உறுதியாகியது. கடைசி நேரத்தில் உரிய மதிப்புக் கொடுக்காத படியால் அண்ணாதிராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து வைகோவெளியேறி யது. ஜெயலலிதாவுக்கு பின்னடைவை
ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தஎதிர்பார்ப்புக்களை எல்லாம் ஓரங்கட்டிய வாக்காளர்கள் கருணாநிதி மீண் டும் ஆட்சிபீடம் ஏறக் கூடாது என்பதில் மிக வும் உறுதியாக இருந்தார்கள்.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள், கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா மதிக்க மாட்டார். கட்சி முக்கியஸ்தர்களுடன் நெருக்கமாகப் பழகமாட்டார் போனற குற்றச் சாட்டுகள் ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட் டன. அந்தக் குற்றச்சாட்டுக்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை எற்படுத்தவில்லை.
திராவிட முன்னேற்றச் கழகத்தின் கோட்டை யான சென்னை அண்ணா திராவிடகழக வசமானது. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். விஜயகாந்த் எதிர்பார்த்தது போன்றே கருணா நிதியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு விட்டது. விஜயகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதே தமிழக அரசியல் ஆய்வாளர் களின் கேள்வியாகும் ஆட்சி அமைக்கப் போகும் ஜெலலிதாவின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் தவறுகளை மன்னிப்பதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை. தவறுகளைத் தொடர்ச்சி யாகச் செய்துவிட்டு கடைசி நேரத்தில் மத்திய அரசின் தலையில் சுமத்திவிட்டு தப்புவதற் காக கருணாநிதி மேற்கொண்ட முயற்சி போன்றவற்றை எல்லாம் மனதில்வைத்து உரியநேரத்தில் தாம்விரும்பிய முடிவை தமிழக மக்கள் எடுத்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல் விக்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும். அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளுக்கு இணங்கிப்போகவேண்டிய கட்டாயம் திரா விட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந் தாலும் தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை காணப் படவில்லை இதேவேளை காங்கிரஸ் தலை வர்களிடம் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.
கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் கடந்த ஐந்து வருடங்களாக செய்த சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குப் பயன்தந்தன என்றாலும் வாரிசு அரசியல், ஊழல், ஸ்பெக்ரம் என்பன திரா விட முன்னேற்றக் கழகத்துக்குப் பாதக மாக அமைந்தன.
காங்கிரஸ் கட்சி 63 இடங்களை அடம்பிடித் துக் கேட்டுவாங்கியது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் அதிகமானவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அத்தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது.
ஜெயலலிதாயுடன் கூட்டுச் சேர்ந்த விஜய காந்த் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள் ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் ஒன்றான மதுரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைகளில் தஞ்ச மடைந்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த மக் கள் தமது கடமையை கச்சிதமாக முடித்துள் ளனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்த பின்னர் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கு களின் நிலைபற்றிய கேள்வி முன்னிலைவகிக் கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கள் மீதான ஊழல் வழக்குகள் , அரங்கேறுமா என்ற எதிப்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.

வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு15/05//11

No comments: