Friday, July 14, 2017

இந்திய சீன எல்லையில் யுத்த மேகம்

மிகப்பெரிய நிலப்பரப்பு, அதிகளவு சனத்தொகை, பலமான இராணுவக்கட்டமைப்பு, பொருளாதரத்தில் உச்சநிலை,தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சீனா அண்டை நாடுகளை மிரட்டுவதில் குறியாக இருக்கிறது. சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய நிலப்பரப்பு அதிகளவு சனத்தொகை சீனாவுக்கு போட்டியாக தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ பலம், பொருளாதார உச்சநிலையில் இருக்கும் நாடு இந்தியா. எல்லைப் பிரச்சினையால் இந்தியாவும்  சீனாவும் அடிக்கடி முட்டுப்படுகின்றன. சிக்கிம் மாநில எல்லையில் சீன இராணுவம் சாலை பூட முயன்ற போது இந்திய இராணுவம் தடுத்தது. இரண்டு நாடுகளும் அப்பகுதியில் இராணுவத்தைக் குவித்து பலப்படுத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இந்தியா, பூட்டான், சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் ஒரு  நிலைப்பகுதி உள்ளது. அது ஒரு பீடபூமியாகும்  அந்தப் பீடபூமியை "டோகாலாம்" என பூட்டான் அழைக்கிறது. 'டோங்லாங்" என சீனா அதற்குப் பெயர் சூட்டி உள்ளது.  பூட்டானுடன் இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி அந்த பீடபூமியின் பெரும்பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. திபெத்தை தனது கட்டுப்பாட்டில்  வைத்திக்கும் சீனாவால் அந்தப் பீடபூமியில்    கால் பதிக்க முடிந்தது திட்டமிட்டபடி சாலை  அமைக்கப்பட்டால் சீனா மிக எளிதாக இந்தியாவுக்குள் நுழைந்துவிடும். 20 கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட அப்பகுதியை "கோழியின் கழுத்து" என்பார்கள். அந்தப் பகுதியில் சீனா இராணுவம் பதித்தால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம்,மிசோராம்,நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர், அருணாசலம், திரிபுரா ஆகிய ஏழு மாநிலங்களையும் இந்தியாவில் இருந்து பிரித்துவிட முடியும். இதனை உணர்ந்தே இந்தியா தடுத்து நிறுத்தியது.

பூட்டானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சாலை அமைப்பதை இந்தியாவல் தடுக்க முடியாது என சீனா சொல்கிறது. சீனா இராணுவத்துடன் முட்டி மோத பலம் இல்லாத பூட்டான் தனது எதிர்ப்பை அறிக்கை மூலம் தெரிவித்தது. சீனாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட இந்தியா துணிச்சலுடன் எதிர்ப்புக் காட்டியது. எல்லை மீறிய சீனா இராணுவம் இந்தியாவின் பதுங்கு குழிகளை அழித்தது. இந்திய இராணுவத்தின் பலமான எதிர்ப்பினால் சாலை போடும் பணியை  சீனா கைவிட்டது. 1962 ஆம் ஆண்டு யுத்தத்தில் இந்தியாவின் சிலபகுதிகளை சீனா, கைப்பற்றியது. அதனை நினைவுபடுத்தி 1962 ஆம் ஆண்டை மறக்க வேண்டாம் என சீனா ஞாபகப்படுத்தியது. 1962 ஆண்டை விட நாம்  முன்னேறிவிட்டோம் என  இந்தியா பதிலளித்துள்ளது.


இந்தியாவின் கிழக்குப் பக்கத்தில் சீனாவும் மேற்குப்பக்கத்தில் பாகிஸ்தானும் எல்லையில்  தொல்லை கொடுக்கின்றன. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் பாகிஸ்தான்  உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பிரச்சினைகளால் துவண்டிருக்கும் பாகிஸ்தானால் இந்தியாவுடன் நேரடியாக மோதமுடியதுள்ளது. ஆனால், சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்தியாவை சீனா சீண்டிப்பார்க்கிறது  உலக வரை படத்தில் நேபாளம்,சிக்கிம் பூட்டான் ஆகியன ஒரு நேர்கோட்டில் சீனாவிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கின்றன.   இம்மூன்றுடனும்  இந்தியா அதிக நட்புறவு பாராட்டி வருகிறது .1975 ஆம் ஆண்டு சிக்கிம்  நாட்டை தனது மாநிலமாக இந்தியா அறிவித்தது. இதனை சீனாவால் ஜீரணிக்க முடியவில்லை தனது எல்லையில் உள்ள நாடுகள் இந்தியாவுடன் நட்புறவு பாராட்டுவதால் சீனா எரிச்சலடைந்துள்ளது.
 ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது இந்திய எல்லையைப் பற்றி சீனா அக்கறை காட்டவில்லை. ஆங்கிலேய அரசு 12  தடவை குழுக்களை அமைத்து இந்திய சீன எல்லையை வரையறுத்தது. நிரந்தரமான எல்லை வரையறுக்கப்படவில்லை.  இந்தியா சுதந்திரமடைந்தபோது எல்லைப் பிரச்சினையை சீனா  கிளறவில்லை.1949 ஆம் ஆண்டு  மாவோவின் தலைமையில் சீனா அசுர வளர்ச்சி பெற்றது. சீனாவின் மண் ஆசையால் அண்டை நாடுகள் தமது நிலத்தை இழந்தன. 1951  ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. 1955  ஆம் ஆண்டு  சீனா வெளியிட்ட வரை படத்தில்  இந்திய மாநிலங்களான சிக்கிம்,அசாம், காஷ்மீர்  ஆகியவற்றின் சில பகுதிகளை தனக்குரியதென அடையாளப்படுத்தியது. அன்று முதல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எல்லைப்பிரச்சினை ஆரம்பமானது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே  1962 ஆம் ஆண்டு  யுத்தம் நடந்தபோது இந்தியாவுக்குள் புகுந்த சீனா பல ஆயிரம்கிலோ மீற்றர் பரப்பளவை கைப்பற்றியது. இன்றுவரை அதனை சீனாவிடம் இருந்து மீட்கவில்லை. தற்போது சீனா  வெளியிட்டுள்ள  வரைபடத்தில்  காஷ்மீரின் ஒருபகுதி, இமாசலப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் தனது பூர்வீக பகுதி என்றும், அருணாசலப் இரதேசத்தின் ஒரு பகுதியை தனது மாகாணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் தான் சிக்கிம் பகுதியில் சீனா கால் வைத்துள்ளது. எல்லையை விட்டு இந்திய இராணுவம்  உடனடியாக வெளியேற வேண்டும் இல்லையேல் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தால் காஷ்மீருக்குள் சீன இராணுவம் நுழையும் என சீனாவின் அதிகார பூர்வ நாளிதழ் எச்சரித்துள்ளது.

ரஷ்ய,கொரியா, மங்கோலியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ,தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ,பூட்டான்,மியான்மார், லாவோஸ், மியன்மார் ஆகிய 13 நாடுகள் சீனாவுடன் தமது எல்லையைப் பகிர்ந்துள்ளன. இது தவிர  பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியின் எல்லையையும் சீனா பயன் படுத்த பாகிஸ்தான் விட்டுக்கொடுத்துள்ளதால் அங்கும் சீனா தனது காலைப் பதித்துள்ளது. 14நாடுகளுடன்   22 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை சீனா பகிர்ந்துள்ளது.
ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் கிழக்கு சீன கடல் பகுதியையும்,பிலிப்பைன்ஸ்,வியட்ன,ஆகிய நாடுகளுடன் தென் சீன கடல் எல்லையையும் சீனா பகிர்ந்துள்ளது.இந்தக் கடல் எல்லைகளில் சீனாவுக்கும் ஏனைய நான்கு நாடுகளுக்கும் முறுகல் வராத நாளே இல்லை. பிலிப்பைன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளின் கடல் பகுதியின் 90  சத வீதத்தை சீனாவின் கடற்படை ஆக்கிரமித்துள்ளது.

இந்தியாவும் சீனாவும் பொருளாதரத்தில் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன.உலக  நாடுகள் இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கின்றன. இந்தியாவுடன் விடுபட்ட நட்பை ரஷ்யா பலப்படுத்தி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக பென்டகன் அமெரிக்க  அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இராணுவ ரீதியிலும் விண்வெளி ஆய்விலும் இந்திய வெகுதுரம் முன்னேறி உள்ளது.  யுத்தம் மூண்டால்பொருளாதார ரீதியில் சீனா பாதிப்படையும். இந்தியாவும் சீனாவும் பகை நாடுகளாக இருந்தாலும் கடந்த 10 வருடங்களில் இரு தரப்பு வர்த்தகமும் பொருளாதார உறவும் மிக அதிகமாக உடர்ந்துள்ளது.  இரு நாடுகளுக்கும் இடையே  71  பில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெறுகிறது.   58.33   பில்லியன் டொலர் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது.  11.76  பில்லியன்  டொலர் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது.
முனையும் தொழில் பாதைக்கு பதிப்பு ஏற்படும். சீனாவில் ஆரம்பித்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வழியாக ஈரானின் அல்லியை ஒட்டி பாகிஸ்தானின் கவ்தர் துறைமுகம் வரை சாலை அமைக்கும் பணியை சீனா ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு இந்திய தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.


இருநாட்டு அரசியல் தலைவர்களும் தமது போலி  கெளரவத்தைக் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலனைக் கருத்தில்கொண்டு பேச்சு வரத்தை மூலம் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
வர்மா    

No comments: