Saturday, January 19, 2019

ஆதரவை எதிர்பார்த்து கூட்டணிக் கதவைத் திறந்த மோடி


வாஜ்பாஜிடம் இருந்து பாரதீஜ ஜனதாக் கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பெற்ற மோடி கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்றார். வாஜ்பாய்க்கு அடுத்த தலைவராக மிளிர்ந்த அத்வானியைப் புறந்தள்ளிய மோடி, தன்னுடன் அமித்ஷாவை இணைத்துக்கொண்டார். மோடி அமித்ஷா கூட்டணி எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தது. அரசியல் தில்லு முல்லுகள்மூலம் உச்சத்துக்குச் சென்ற இவர்கள் மாநிலக் கட்சிகளைத் துச்சமாக மதித்தனர். இந்தியாவின் தேர்தல் ஆண்டான 2019, மோடியை கிலிகொள்ள வைத்துள்ளது. அதனால் 20 வருடங்களுக்கு முந்தைய கூட்டணிக்குத் தயார் என அறிவித்துள்ளார்.

இந்துயாவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி செய்யும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற 19 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை ஆட்டம்காணச் செய்தது. கூட்டணிக் கட்சிகளையும் மாநிலக் கட்சிகளையும் துச்சமாகக் கருதிய பாரதீய ஜனதாக் கட்சி அச்சமடைந்துள்ளது. கடந்த வருடக் கடைசியில் நடைபெற்ற ஐந்து மநிலத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி படுதோல்வியடைந்தது. மூன்று மாநிலங்களை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி  பெற முடியுமா எனும் சந்தேகம் மோடிக்கு எழுந்துள்ளது.

மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் தொடர் வெற்றிகளால் மக்ழ்ந்திருந்த அமித்ஷா, அடுத்த பொதுத் தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனச் சூழுரைத்தார். பாரதீய ஜனதாவுக்கு எதிரான மக்களின் மனநிலை, கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை என்பன ஆட்சியை ஆட்டம்காணச் செய்துள்ளன. அதனால், 20 வருடங்களுக்கு முந்தைய வாஜ்பாய் காலத்துக் கட்சிகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  

கருணாநிதியும் ஜெயலலிதாவும் 20 வருடங்களுக்கு முன்னர் வாஜ்பாயுடன் கைகோர்த்தனர். காங்கிரஸ் கட்சியையும் ராகுலையும் கடுமையாக விமர்சிக்கும் மோடி, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஸ்டாலினையும் எதிர்கிறார். ஆகையால் மோடியுடன் ஸ்டாலின் இணையமாட்டார். திருமாவளவன்,வைகோ, ராமதாஸ் ஆகிய தமிழகத் தலைவர்கள் வாஜ்பாயுடன் இணைந்து செயற்பட்டார்கள். வைகோவும் திருமாவளவனும்  மோடியை மூர்க்கமாக எதிர்க்கின்றனர். அவர்களும் இந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்.  திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனச் சபதம் செய்த ராமதாஸ்,  பாரதீய ஜனதாவின் பக்கம் சாயலாம் என்ற கருத்து நிலவுகிறது.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்துபவர்கள் மோடியிடம் சரணடைந்துள்ளனர். மோடிக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருப்பதால் அவருடன் இணைவதில் தயக்கம் காட்டப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழக சட்டசபை உறுப்பினர்கள் பாரதீய ஜனதாவை எதிர்த்து கருத்துச் சொல்வதில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரதீஜ ஜனதா அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர்.  ஆனால் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான தீர்மானங்களின் போது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்கின்றனர்.


அண்ணா  திரவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரான தம்பித்துரையின்  பேட்டி பாரதீய ஜனதாக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியை முதுகிலே சுமக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன பாவம் செய்துள்ளது? என்ற அவரின் கேள்வியை பரதீய ஜனதாவுக்கு எதிரானவர்கள் 
      விரும்புகிறார்கள்.  நாடாளுமன்றப் ஒதுத் தேர்தல் அரிவிக்கப்பட்டபின்னர் கூட்டணிபற்றி யோசிக்கலாம் என மற்றைய தலைவர்கள் சொல்கிறார்கள்.
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி


வைக்கலாம் என பாரதீய ஜனதாத் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் கட்சி ஆரம்பிக்கப்படும் என்ற அறிவுப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. கமலை வளைக்க முடியாது. ராமதாஸையும் விஜயகாந்தையும் தம் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயல்கிறது. பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலை தமிழகத்தில் கடுமையாக இருப்பதால் வெளிப்படையாக எதுவும் பேச முடியாத நிலையில் ராமதாஸும் விஜயகாந்தும் இருக்கிறார்கள்.

பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேராமல் தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் கூட்டணி சேரலாம் என்ற மன ஓட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. கூட்டணி சேர்ந்தாலும் சேராவிட்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது என்பது நிச்சயம்.

சூரன்.ஏ.ரவிவர்மா.

No comments: