Saturday, July 31, 2021

இரண்டாவது ஒலிம்பிக்கில் இரண்டு தங்கங்கள்

  உலக வரைபடத்தில்  2008 ஆம் அண்டு  உருவான கொசோவா  எனும் நாடு டோக்கியோ ஒலிம்பிக்கி இரண்டு தங்கப்  பதக்கங்களைப் பெற்று தன்  திறமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் ஆரம்பவிழாவில் கொசோவா கொடியுடன் எட்டு வீரர்கள்  அணிவகுத்துச் சென்றபோது  அவர்கள் மீது எந்த விதமான எதிர்பார்ப்பும் எழவில்லை. பதக்கம்  பெறாத  நாடுகளின் பட்டியலில் இடம் பெறும் நாடு என்ற  எண்ணமே அனைவருக்கும் ஏற்பட்டது.

ஜூடோ போட்டியின்  மகளிர் 48 கிலோ எடை பிரிவில் க்ராஸ்ரிக் எனும்  வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்றதும் உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது. அந்த ஆச்சரியத்தில் இருந்து மீள்வதற்கிடையில் , 57 கிலோ எடை பிரிவில் க்ஜவாகோ எனும் இன்னொரு வீராங்கனை தங்கம் வென்று தாய் நாட்டைப் பெருமைப்படுத்தினார்.

  அல்பேனியர்களை அதிகம் கொண்ட கொசாவோ,  1913‍ஆம் ஆண்டு செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. செர்பியர்கள் கிறித்த மதத்தவர் அல்பேனிய மொழி பேசும் மக்களோ இஸ்லாமியர்கள். இருதரப்புக்கும் மோதல்கள் வெடித்தன. இது மத மோதல்களாக இல்லாமல் அல்பேனிய தேசிய இனத்தின் போராட்டமாகவே தொடர்ந்தது. செர்பியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக நேட்டோ படைகள் களமிறங்கின. இதன் விளைவாக 2008-ம் ஆண்டு கொசாவோ ஒருதலைப் படமாக தனிநாடாக   பிரகடனம் செய்யப்பட்டது. ஐநா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் அங்கீகரித்தன. முதல் முறையாக  2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கொசோவா பங்குபற்றியது.

No comments: