உலக உதைபந்தாட்டத்தில் வல்லமைமிக்க நாடாகப் புகழ்பெற்ற இத்தாலி , தற்போது
அதன் உச்ச நிலையிலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு
அது எந்தவொரு உலகக் கிண்ணப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அந்த ஆண்டு, குழுநிலை வெளியேற்றத்திற்காகவும்,
ஜார்ஜியோ கியேலினியின் தோளில் லூயிஸ் சுவாரெஸ் கடித்ததற்காகவும் மட்டுமே நினைவுகூரப்படுகிறது. உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இத்தாலி கடைசியாக நாக்-அவுட் சுற்றில் விளையாடி
இருபது ஆண்டுகள் ஆகின்றன; அப்போது அது பெனால்டி முறையில் நான்காவது முறையாக சம்பியனானது.
இடையில் 2011 ஆம் ஆண்டு யூரோ கிண்ண சம்பியனாகி நம்பிக்கையளித்தது. பின்னர் இத்தாலி எழுந்திருக்கவே இல்லை.
2018-ல்,
தகுதிச் சுற்றில் அசைக்க முடியாத ஸ்பெயினுடன் இத்தாலி இடம்பெற்றது; பின்னர் பிளேஆஃப்
சுற்றில் சுவீடனிடம் தோல்வியடைந்தது. 2022-ல், முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து, வடக்கு
அயர்லாந்து பல்கேரியாவை வெல்லத் தவறியது. பிளேஆஃப்
அரையிறுதியில் வடக்கு மாசிடோனியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
இந்த
வருடம் ஓஸ்லோவில் நோர்வேயிடம் அது அவமானப்படுத்தப்பட்டது
. லூசியானோ ஸ்பாலெட்டி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து , தனக்குப் பழகிப்போன ஒரு பாதையாக
நிரூபிக்கப்பட்டதைச் சரிசெய்வதற்காக, தகுதிச் சுற்றின் நடுவில் கடுமையான இத்தாலிய அடையாளமான ஜெனாரோ கட்டூசோ களமிறக்கப்பட்டார். ஆனால், சான்
சிரோவில் எர்லிங் ஹாலண்ட் , அவரது அணியினரிடம் இத்தாலி அணி படுதோல்வி அடைந்தது.
சொந்த
மண்ணில் நோர்வேயிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்ற பிறகு, தகுதிச் சுற்றின் முதல் சுற்றில்
இத்தாலி ஏழு போட்டிகளில் மேலும் ஒன்பது கோல்களை விட்டுக்கொடுத்தது — இஸ்ரேலுக்கு எதிராக
சொந்த மண்ணில் நான்கு கோல்களும், நோர்வேக்கு எதிராக சொந்த மண்ணில் நான்கு கோல்களும்
விட்டுக்கொடுத்தது. 1955-ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நான்கு அல்லது அதற்கு
மேற்பட்ட கோல்களை விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.
போஸ்னியாவுக்கு
எதிரான போட்டியின் முதல் பாதியின் நடுவில், இத்தாலி தடுப்பாட்ட வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்டோனி சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார், இது போட்டியின்
போக்கையே மாற்றியது.
தற்போதைய
நடுக்கள வீரர்கள், கட்டூசோ எதிர்பார்த்த அளவிலான கட்டுப்பாட்டைப் போட்டிகளில் ஏற்படுத்துவதில்லை.
அலெஸாண்ட்ரோ டெல் பியரோ அல்லது ஃபிரான்செஸ்கோ டோட்டியைப் போல, ஒன்றுமில்லாததிலிருந்து
மாயாஜாலத் தருணங்களை உருவாக்கக்கூடிய சிறந்த இத்தாலிய முன்கள வீரர்கள் யாரும் இல்லை.
தற்போது 36 வயதாகும் இம்மொபிலே, 2022-ல் வென்றதிலிருந்து, எந்த இத்தாலிய வீரரும் சீரி
ஏ கோல்டன் பூட் விருதை வென்றதில்லை. .
கிளப்
கால்பந்தில் கண்ட அளவிலான போட்டிகளில் இத்தாலியின் நிலை, அதன் வெற்றி வீழ்ச்சிக்கு
ஒரு நேரடிப் பிரதிபலிப்பாகும். 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பாவின் உயர்மட்ட கிளப்
போட்டியான சாம்பியன்ஸ் லீக்கை எந்த இத்தாலிய கிளப்பும் வென்றதில்லை. யுவென்டஸ்
(2015 மற்றும் 2017) மற்றும் இன்டர் மிலன் (2023 மற்றும் 2025) ஆகிய இரண்டு அணிகள்
மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. கடந்த சீசனின் இறுதிப் போட்டியில்,
பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியிடம் இன்டர் அணி 0-5 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.
இந்த
சமீபத்திய பின்னடைவை 'ஏற்றுக்கொள்ள முடியாத அவமானம்' என்று வர்ணித்ததைத் தொடர்ந்து,
2018 முதல் அப்பதவியில் இருந்துவரும் இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கேப்ரியல்
கிரவினா பதவி விலக வேண்டும் என நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இருப்பினும்,
கிரவினா அவற்றைக் கண்டுகொள்ளாமல், தற்போதைய தேவை ஒரு ஆழமான சுயபரிசோதனைதான் என்று கூறியுள்ளார்.
“இத்தாலிய கால்பந்து முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“லீக்குகள் உள்ளன, கிளப்புகள் உள்ளன.
ரமணி

No comments:
Post a Comment